Tag: மரணம்
கார் குண்டு தாக்குதல் பலர் காயம் மரணம்
கார் குண்டு தாக்குதல் பலர் காயம் மரணம்
திடீரென வெடித்த கார் குண்டு ,இந்த கார் குண்டு தாக்குதலில் பலர் காயம் பலர் மரணம் ,
- ஈரானின் ஐந்து மாகாணங்கள் மீது அமெரிக்கா நடத்திய புதிய தாக்குதல்களில் 14 பேர் பலி 78 பேர் காயம்

- போர் நிறுத்தம் புட்டின் ட்ரம்ப் இன்று பேச்சு

- தங்கம் யாருக்கு பிறந்தவர் |உண்மையை உடைத்த அர்ச்சுனா

- ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க முடியாது

- 6 வது மலசல கூடம் | நுவரெலியாவில் அசத்திய அக்கா |வன்னி மைந்தன் உதவி

வவுனியா கிணற்றில் தவறி விழுந்து இளம் யுவதி மரணம்
வவுனியா கிணற்றில் தவறி விழுந்து இளம் யுவதி மரணம்
வவுனியா, சமனங்குளம் பகுதியில் தோட்ட கிணற்றில் தவறி விழுந்து இளம் யுவதி ஒருவர் மரணமடைந்துள்ளதாக சிதம்பரபுரம் பொலிசார் தெரிவித்தனர்.
வவுனியா, சமனங்குளம் பகுதியில் வசித்து வரும் இளம் யுவதி ஒருவர் நேற்று முன்தினம் (17) மாலை கிணற்று மோட்டார் சுவிச்சை போட்ட போது அதன் குழாய் கழன்றமையால் அதனை பூட்ட முயற்சித்த போது கிணற்றுக்குள் தவறி விழுந்துள்ளார்.
தொடர்ந்து மோட்டார் இயங்கிக் கொண்டிருப்பதை அவதானித்த அயல் வீட்டார் கிணற்றடிக்கு சென்று பார்த்த போது குறித்த இளம் யுவதி கிணற்றில் விழுந்து இருந்ததை அவதானித்துள்ளனர். இதனையடுத்து அயலவர்களின் உதவியுடன் யுவதியை மீட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதித்த போது அவர் மரணமடைந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் வவுனியா, சமனங்குளம் பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய தவரூபன் லக்சிகா என்ற யுவதியே மரணமடைந்தவராவார். சம்பவம் தொடர்பில் சிதம்பரபுரம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
ஏறாவூர் பற்று பிரதேச யானை தாக்கி இருவர் மரணம்
ஏறாவூர் பற்று பிரதேச யானை தாக்கி இருவர் மரணம்
ஏறாவூர் பற்று பிரதேச செயலகப் பிரிவு ஈரளக்குளத்தில் சனிக்கிழமை(16) இரவும், கிரான் பிரதேச செயலக பிரிவு திகிலி வெட்டையில் ஞாயிற்றுக்கிழமை (17) அதிகாலை யானை தாக்கி இருவர் மரணமடைந்துள்ளனர்.
இரு வெவ்வேறு பிரதேச செயலகப் பிரிவுகளிலும் நடைபெற்ற மரணத்திற்கான மரண விசாரணைகளை, திடீர் மரண விசாரணை அதிகாரிகளான எம்.எஸ்.எம்.நஸீர், கே. பவளகேசன் ஆகியோர் கரடியனாறு மற்றும் சந்திவெளி பொலிஸாருடன் சம்பவ இடத்திற்கு நேரடியாக சென்று மேற்கொண்டுள்ளனர் .
ஆவெட்டியாவெளியில் மாடு வளர்ப்பில் ஈடுபட்ட, சித்தாண்டியை சேர்ந்த இரு பிள்ளைகளின் தந்தையான பத்மநாதன் மோகனதாஸ் (வயது 45)
ஏறாவூர் பற்று பிரதேச யானை தாக்கி இருவர் மரணம்
என்பவர்சனிக்கிழமை (16), மாலை உறவினர் ஒருவரின் வீட்டுக்கு சென்று, பண்ணையை நோக்கி இரவு 09 மணியளவில் நடந்து செல்லும்போது ஈரளக்குளத்தில் வீதியோரமாக நின்ற யானையொன்றின் தாக்குதலுக்குள்ளாகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
அத்துடன், திகிலிவெட்டை, குளத்துவெட்டையை சேர்ந்த நாகராசா முரளிதரன் (வயது 31) என்ற ஒரு பிள்ளையின் தந்தையான நபர், நண்பர் ஒருவருடன் நள்ளிரவில் , வலைவீசி மீன் பிடிக்கச் சென்று அதிகாலை குளத்தின் ஓரமாக
இருந்த மதுரை மரத்தின் கீழ் படுத்துறங்கிய போது யானையின் தாக்குதலுக்குள்ளாகி சம்பவ இடத்திலேயே மரணித்துள்ளார்.
இரு சடலங்களும் உடற்கூற்று பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை மற்றும் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டு பிரேத பரிசோதனையின் பின்னர் சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மர்மமான முறையில் இருவர் மரணம்
மர்மமான முறையில் இருவர் மரணம்
நொச்சியாகம – பன்வெவ பிரதேசத்தில் வயல் ஒன்றில் உள்ள குழியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த நிலையில், நொச்சியாகம பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று (02) விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மரகஹவெவ – நொச்சியாகம பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.
இறந்தவர் நேற்று முன்தினம் மாலை வயலுக்கு செல்வதாக கூறி வீட்டை விட்டு சென்றுள்ளார்.
மர்மமான முறையில் இருவர் மரணம்
அவர் மீண்டும் வீடு திரும்பாததால் அவரது மனைவி நொச்சியாகம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
மரணத்திற்கான காரணம் இதுவரையில் அறியவராத நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நொச்சியாகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, நீர்கொழும்பு – காமச்சோதயா சந்தையில் இனந்தெரியாத ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படாத நிலையில், அவர் 60 முதல் 70 வயதுக்கு இடைப்பட்ட, சுமார் 05 அடி 06 அங்குல உயரம், ஒல்லியான சாதாரண உடலமைப்பு கொண்டவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நீர்கொழும்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சாந்தன் திடீர் மரணம்
ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சாந்தன் திடீர் மரணம்
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்ட சாந்தன் மரணமடைந்துவிட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ராஜீவ் காந்தி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளித்து வந்த போதும் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை.
கோமா நிலைக்கு சென்ற சாந்தனின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்து இருந்தனர்.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை சாந்தன் மரணம் அடைந்தார்.
ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் இவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அவருக்கான தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. இதன் பின்னர், கடந்த 2022 ஆம் ஆண்டு,
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்த நளினி, முருகன், பேரறிவாளன், சாந்தன் உட்பட அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.
ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சாந்தன் திடீர் மரணம்
சாந்தன் இலங்கை தமிழர் என்பதால், திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள வெளிநாட்டவருக்கான சிறப்பு முகாமில் முருகன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோருடன் தங்க வைக்கப்பட்டார்.
தன்னை இலங்கைக்கு அனுப்ப வேண்டும் எனக் கோரி வந்தார் சாந்தன். சாந்தனை இலங்கை அனுப்பி வைக்க மத்திய அரசும் அனுமதி வழங்கியது.
எனினும், சாந்தனுக்கு கடந்த ஜனவரி மாதம் 24-ம் திகதி உடல் நிலை பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் உயர் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வந்த நிலையில் இன்று உயிரிழந்தார்
சனத் நிஷாந்தவின் மரணத்திற்கான காரணம்
சனத் நிஷாந்தவின் மரணத்திற்கான காரணம்
முன்னாள் நீர்வழங்கல் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மரணத்திற்கான காரணத்தை இந்த சந்தர்ப்பத்தில் அறிவிக்க வாய்ப்பில்லை என வெலிசர நீதவான் துசித தம்மிக்க உடுவவிதான தெரிவித்துள்ளார்.
சனத் நிஷாந்தவின் பிரேத பரிசோதனை அறிக்கை சட்ட வைத்திய அதிகாரியினால் நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்படவில்லை என வலியுறுத்தி நீதவான் இதனை தெரிவித்ததாக அத தெரண நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.
கொழும்பு-கட்டுநாயக்க அதிவேக வீதியின் கெரவலபிட்டிய பிரதேசத்தில் சனத் நிஷாந்தவின் மரணத்திற்கு காரணமான வீதி விபத்து தொடர்பில் தாம் அதிருப்தியடைந்துள்ளதாக சனத் நிஷாந்தவின் மனைவி சார்பில் ஆஜரான
தனராஜ் சமரக்கோன் தெரிவித்துள்ளார். இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் மரணத்திற்கான காரணத்தை அறிவிக்குமாறு சனத் நிஷாந்தவின் மனைவியின் உரிமைகள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி நீதிமன்றில் கோரிக்கை விடுத்திருந்தார்.
சனத் நிஷாந்தவின் மரணத்திற்கான காரணம்
இதன்போது, விபத்தில் உயிரிழந்த சனத் நிஷாந்தவின் பிரேத பரிசோதனை அறிக்கை சட்ட வைத்திய அதிகாரியினால் இதுவரை நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்படாததால் மரணத்திற்கான காரணத்தை வெளியிட முடியாது என நீதவான் தெரிவித்தார்.
விபத்து இடம்பெற்ற போது அந்த இடத்தை பார்வையிட வேண்டிய அவசியமில்லை என்ற போதும், விபத்து இடம்பெற்ற ஜனவரி 24 ஆம் திகதி தான் குறித்த இடத்திற்கு சென்று பார்வையிட்டதாக நீதவான் துசித தம்மிக்க உடுவவிதான தெரிவித்ததாக அததெரண செய்தியாளர் தெரிவித்தார்.
இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் பிரேத பரிசோதனை அறிக்கைகளை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு சட்ட வைத்திய அதிகாரியிடம் கோரிக்கை விடுக்குமாறு கந்தானை பொலிஸ் அதிகாரிகளுக்கு அறிவித்த நீதவான், இந்த முறைப்பாட்டை எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி மீண்டும் அழைக்க உத்தரவிட்டுள்ளார்.
மன்னார் சிறுமியின் மரணத்திற்கான காரணம் வெளியானது
மன்னார் சிறுமியின் மரணத்திற்கான காரணம் வெளியானது
தலைமன்னார் – வடக்கு பகுதியில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட 10 வயது சிறுமியின் சடலம் மீதான பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகி உள்ளது.
இதில் குறித்த சிறுமி கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பிரேத பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் அவர் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளானமைக்கான அறிகுறிகள் காணப்படுவதாகவும் பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அவரது சடலம் மீதான பிரேத பரிசோதனை, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி எஸ்.பிரணவன் முன்னிலையில் இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மன்னார் சிறுமியின் மரணத்திற்கான காரணம் வெளியானது
இதேவேளை, சம்பவம் தொடர்பில் சிறுமி சடலமாக மீட்கப்பட்ட தென்னந்தோப்பில் பணியாற்றி வந்த திருகோணமலை – குச்சவெளி பகுதியைச் சேர்ந்த நபரொருவர் கைது செய்யப்பட்டிருந்தார்
அவர் மன்னார் நீதவான் முன்னிலையில் இன்று பிரசன்னப்படுத்தப்பட்டார்.
இந்தநிலையில், சந்தேகநபரை 48 மணித்தியாலத்துக்கு தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்துவதற்கு மன்னார் நீதவான் அனுமதியளித்துள்ளார்
நேற்று முன்தினம் இரவு முதல் குறித்த சிறுமி காணாமல் போயிருந்ததாக அவரது பாட்டி காவல்துறையினரிடம் முறைப்பாடளித்திருந்தார்.
இதற்கமைய முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் குறித்த சிறுமியின் சடலம் நேற்று மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது
சோமாலியா சந்தையில் வெடித்த குண்டு 10 பேர் மரணம் 20 பேர் காயம்
சோமாலியா சந்தையில் வெடித்த குண்டு 10 பேர் மரணம் 20 பேர் காயம்
சோமாலியா தலைநகர் Mogadishu சந்தையில் குண்டு வெடித்ததில் 10 பேர் மரணமாகியும் 20 பேர் காயமடைந்துள்ளனர் .
இந்த சோமாலிய சந்தை பகுதியில் அடுத்தடுத்து பல குண்டுகள் வெடித்ததில் இந்த இழப்பு ஏற்பட்டுள்ளது .
குண்டு வெடித்த பொழுது அங்கு தரித்து நின்ற பல வாகனங்கள் எரிந்து அழிந்துள்ளன ,இந்த தாக்குதலுக்கு அல் சபா போராட்ட காரர்களே காரணம் என சோமாலிய அரசு அறிவித்துள்ளது
யாழ் பல்கலை மாணவி மரணம் தொடர்பில் அறிக்கை கோரல்
யாழ் பல்கலை மாணவி மரணம் தொடர்பில் அறிக்கை கோரல்
யாழ்ப்பாண பல்கலை மாணவியின் மரணம் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் அசேல குணவர்தன யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பல்கலைக்கழக மாணவி, மருந்தின் ஒவ்வாமை காரணமாக உயிரிழந்துள்ள நிலையில் மரணத்தில் சந்தேகம் நிலவுவதாக உயிரிழந்த மாணவியின் உறவினர்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.
யாழ் பல்கலை மாணவி மரணம் தொடர்பில் அறிக்கை கோரல்
உயிரிழந்த பெண்ணுக்கு எவ்விதமான ஒவ்வாமையும் இல்லை எனவும் செலுத்தப்பட்ட ஊசி மருந்து என்னவென்பது தமக்கு தெரிவிக்கப்படவில்லை என பொலிஸாருக்கான முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்தில் இறுதியாண்டில் கல்வி கற்ற குணரத்தினம் சுபீனா என்ற 25 வயதான மாணவி கடந்த 23ம் திகதி உயிரிழந்தார்.
காய்ச்சல் காரணமாக தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட மாணவி, மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றியனுப்பப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இதன்போது டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குறித்த மாணவிக்கு செலுத்தப்பட்ட மருந்தின் ஒவ்வாமை காரணமாகவே உயிரிழப்பு இடம்பெற்றது என மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த மாணவியின் உடற்கூறு பகுதி மேலதிக பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.
இந்நிலையில் மாணவியின் மரணம் தொடர்பில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையிடம் அறிக்கை கோரியுள்ளார்.
விடுதிக்கு பெண்ணுடன் சென்றவர் மர்ம மரணம்
விடுதிக்கு பெண்ணுடன் சென்றவர் மர்ம மரணம்
பெண் ஒருவருடன் விடுதி ஒன்றிற்கு சென்ற நபரொருவர் திடீரென உயிரிழந்த சம்பவம் பொரலஸ்கமுவிலிருந்து பதிவாகியுள்ளது.
சம்பவத்தின் பின்னர் குறித்த பெண் தப்பிச் சென்றுள்ளதாக பொரலஸ்கமுவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பொரலஸ்கமுவ தெஹிவளை வீதியில் உள்ள சமூபகார மாவத்தையில் உள்ள விடுதிக்கு பெண் ஒருவருடன் சென்ற நபரே திடீரென உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர், பொரலஸ்கமுவ வெரஹெர போதிராஜபுர பகுதியைச் சேர்ந்த 55 வயதுடையவர் என தெரிவயந்துள்ளது.
விடுதிக்கு பெண்ணுடன் சென்றவர் மர்ம மரணம்
உயிரிழந்த நபர் நேற்று (25) மதியம் குறித்த பெண்ணுடன் விடுதிக்கு வந்துள்ளார், சில மணித்தியாலங்களின் பின்னர் குறித்த பெண் அறையிலிருந்து அலறியடித்தவாறு வெளியே வந்துள்ளார்.
பின்னர், அந்த நபர் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாக விடுதி முகாமையாளரிடம் தெரிவித்தார்.
முகாமையாளர் அறைக்குச் சென்று பார்த்தபோது, அவரது வாயிலிருந்து சளி வெளியேறியதைக் கண்ட அவர், உடனடியாக நடவடிக்கை எடுத்து முச்சக்கரவண்டியைக் கொண்டு வந்து அந்த நபரை வைத்தியசாலையில் அனுமதித்தார்.
அப்போது அந்த பெண் அங்கிருந்த தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது.
தப்பியோடிய பெண்ணை தேடி விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம் தற்போது பிரேத பரிசோதனைக்காக களுபோவில வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
கடலில் மூழ்கி பொலிஸ் கான்ஸ்டபிள் மரணம்
கடலில் மூழ்கி பொலிஸ் கான்ஸ்டபிள் மரணம்
கடற்கரையில் தனது நண்பர்கள் குழுவுடன் நீராடச் சென்ற பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
களுத்துறை, நாகொட பிரதேசத்தில் வசித்து வந்த 22 வயதான தெஷாஞ்சன தரிந்த என்ற கான்ஸ்டபிளே நேற்று இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை களுத்துறை தெற்கு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
பெண் மர்மமான முறையில் மரணம் சடலம் மீட்பு
பெண் மர்மமான முறையில் மரணம் சடலம் மீட்பு
கொழும்பு 07, விஜேராம வீதியில் உள்ள வீடொன்றில் தனியாக வசித்து வந்த பெண் ஒருவர் மர்மமான முறையில் சனிக்கிழமை (16) உயிரிழந்துள்ளதாக குருந்துவத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மித்ராணி பெர்னான்டோ ஸ்மின் என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கம் 119க்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், உயிரிழந்த
பெண்ணின் சடலம் தரையில் கிடந்ததாகவும், வாய் மற்றும் மார்புப் பகுதியில் இரத்தக் கறைகள் காணப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.
இது கொலையா அல்லது இயற்கை மரணமா என்பது தொடர்பில் குருந்துவத்தை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
- இலங்கையில் டெங்கு பாதிப்புகள் 70000ஐ நெருங்குகின்றன
- பொதுமக்களுக்கு பொலிஸ் எச்சரிக்கை
- பள்ளிகளுக்கான இரண்டாம் பருவத் தேர்வு தேதி
- பொலிஸ் அதிகாரி போல வேடமிட்டு மோசடி செய்த மூவர் கைது
- ஏர்பஸ் கையூட்டு விசாரணை அறிக்கையைச் சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவு
- நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் 31பேர் பலி
- பலத்த காற்றுக்கான வானிலை எச்சரிக்கை
- ஐ நா அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்திய விமல் வீரவன்ச மீதான வழக்கு
- வட சீனாவில் ஏற்பட்ட கடும் வெள்ளம்
- இலங்கையின் மிக வயதான பெண்மணி 114 வயதில் காலமானார்
இஸ்ரேல் கொமாண்டர் மரணம் |இஸ்ரேல் போர் |isreal Gaza war| palestine isreal war
இஸ்ரேல் கொமாண்டர் மரணம் |இஸ்ரேல் போர் |isreal Gaza war| palestine isreal war
இஸ்ரேல் டாங்கிகள் படை கட்டளை கொமாண்டர் மரணம் ,
இஸ்ரேல் கவச படையை முடக்கிய ஹமாஸ் கொமாண்டோ படை
ஹமாஸ் சுரங்கத்தில் நீர் திறக்க நடவடிக்கை
மத்திய தரை கடல் நீரை பீச்சி அடிக்க பெரும் குழாய்கள் மூலம் நீரை இறைக்கும் இஸ்ரேல்
- ஈரானின் ஐந்து மாகாணங்கள் மீது அமெரிக்கா நடத்திய புதிய தாக்குதல்களில் 14 பேர் பலி 78 பேர் காயம்
- போர் நிறுத்தம் புட்டின் ட்ரம்ப் இன்று பேச்சு
- தங்கம் யாருக்கு பிறந்தவர் |உண்மையை உடைத்த அர்ச்சுனா
- ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க முடியாது
- 6 வது மலசல கூடம் | நுவரெலியாவில் அசத்திய அக்கா |வன்னி மைந்தன் உதவி
- தரமற்ற மலசல கூடம் |ஆவேசமான மக்கள் |சிக்கிய வன்னி மைந்தன் tIKtOK தளம்
- மாணவர்களுக்கு அள்ளி கொடுத்த தம்பதிகள் |பிரான்ஸ் உறவுகள் செய்த பெரும் உதவி
- சீதனம் வாங்கிய ஆண்கள் படும் பாடு |கண்ணீர் கதறல்
- பழிவாங்கும் அர்ச்சுனா |மிரளும் எதிரிகள்
- வன்னி மைந்தன் உதவி திட்டத்தை குழப்ப சதி
போதையில் மோதல் ஒருவர் மரணம்
போதையில் மோதல் ஒருவர் மரணம்
ஜா எல உதம்விட்ட பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் இரு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் 34 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஜா எல பொலிஸார் தெரிவித்தனர்.
ஜாஎல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட துன்பலிய குருசாவல வீதியைச் சேர்ந்த தனுக சம்பத் சில்வா (வயது 34) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச் சம்பவத்துடன் தொடர்புடைய இரு குழுவினரும் விடுதி ஒன்றில் மது அருந்திக் கொண்டிருந்த போது ஏற்பட்ட தகராறில் குறித்த நபர் கடுமையான
போதையில் மோதல் ஒருவர் மரணம்
தாக்குதலுக்குள்ளாகி ராகம போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக ராகம போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம்
தொடர்பில் ஜா எல பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
- இந்தியா ஈரான் மோதல் உச்சம்
- இலங்கையில் டெங்கு பாதிப்புகள் 70000ஐ நெருங்குகின்றன
- ஈராக்கில் தீவிர ஊழல் ஒழிப்பு நடவடிக்கையில் 375 கிலோ தங்கம் பறிமுதல்
- பொதுமக்களுக்கு பொலிஸ் எச்சரிக்கை
- மொஜ்தபா கமெனி 90% அழிந்துவிட்டார் டிரம்ப்
- 20% என்பது மிக அதிகம், ஈரான் நியாயமாக நடந்துகொள்ளும்
- பள்ளிகளுக்கான இரண்டாம் பருவத் தேர்வு தேதி
- பொலிஸ் அதிகாரி போல வேடமிட்டு மோசடி செய்த மூவர் கைது
- ஏர்பஸ் கையூட்டு விசாரணை அறிக்கையைச் சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவு
- நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் 31பேர் பலி
- புரிந்துணர்வு ஒப்பந்தக் கடமைகளை அமெரிக்கா நிறைவேற்றாவிட்டால், ஒப்பந்தத்தை ஏற்க மாட்டோம் ஈரான்
- மத்திய ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதலில் குறைந்தது ஒருவர் பலி, ஏழு பேர் காயம்
கைதி சிறையில் மர்மமான முறையில் மரணம்
கைதி சிறையில் மர்மமான முறையில் மரணம்
மட்டக்களப்பு சிறைச்சாலையில் இருந்த 47 வயதுடைய ஆண் கைதி ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், குறித்த கைதியின் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் பீற்றர் போல் நேற்று (29) உத்தரவிட்டார்.
கொக்கட்டிச்சோலை முனைக்காடு பிரதேசத்தைச் சோந்த 47 வயதுடைய சோமசுந்தரம் துரைராஜா என்பவரே உயிரிழந்துள்ளார்.
கைதி சிறையில் மர்மமான முறையில் மரணம்
குறித்த நபர் நீதிமன்ற வழக்கு ஒன்றில் ஆஜராகாத நிலையில் நீதிமன்ற பிடிவிறாந்து கட்டளைக்கமைய கடந்த 22 ம் திகதி கொக்கட்டிச்சோலை
பொலிஸார் கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்ட நிலையில் அவரை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில் குறித்த நபர் சிறைச்சாலையில் செவ்வாய்க்கிழமை (28) மயங்கி வீழ்ததையடுத்து வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்த நிலையில் சடலம் பிரேத அறையில் வைக்கப்பட்டது.
இந்த நிலையில் சம்பவம் இடம்பெற்ற இடமான சிறைச்சாலைக்கு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் பீற்றர் போல் நேற்று புதன்கிழமை
(29) சென்று பார்வையிட்டு விசாரணைகளை மேற்கொண்டு சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துமாறு உத்தரவிட்டார்.
இது தொடர்பான மேலதிக விசாணைகளை மட்டு தலைமையக பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்
- இந்தியா ஈரான் மோதல் உச்சம்
- இலங்கையில் டெங்கு பாதிப்புகள் 70000ஐ நெருங்குகின்றன
- ஈராக்கில் தீவிர ஊழல் ஒழிப்பு நடவடிக்கையில் 375 கிலோ தங்கம் பறிமுதல்
- பொதுமக்களுக்கு பொலிஸ் எச்சரிக்கை
- மொஜ்தபா கமெனி 90% அழிந்துவிட்டார் டிரம்ப்
- 20% என்பது மிக அதிகம், ஈரான் நியாயமாக நடந்துகொள்ளும்
- பள்ளிகளுக்கான இரண்டாம் பருவத் தேர்வு தேதி
- பொலிஸ் அதிகாரி போல வேடமிட்டு மோசடி செய்த மூவர் கைது
- ஏர்பஸ் கையூட்டு விசாரணை அறிக்கையைச் சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவு
- நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் 31பேர் பலி
வட்டுக்கோட்டை இளைஞன் மரணம் சாட்சியங்கள் பதிவு
வட்டுக்கோட்டை இளைஞன் மரணம் சாட்சியங்கள் பதிவு
வட்டுக்கோட்டை இளைஞர் மரணம் தொடர்பில் குறித்த இளைஞரின் சகோதரர், தந்தை, அவருடன் கைதான இளைஞர் உள்ளிட்ட ஐந்து பேர், நேற்று
யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகி சாட்சியங்களை பதிவு செய்துள்ளனர்.
சாட்சி பதிவுகளையடுத்து வழக்கை எதிர்வரும் முதலாம் திகதிக்கு ஒத்திவைத்த நீதவான், அன்றைய தினம் அடையாள அணிவகுப்பை நடத்துவதற்கும் உத்தரவிட்டுள்ளார்.
இதேவேளை, இந்த சம்பவத்துடன் தொடர்புடைய விசாரணைகளை முன்னெடுத்து, மற்றுமொரு சந்தேகநபரையும் கைது செய்யுமாறு யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
- இந்தியா ஈரான் மோதல் உச்சம்
- இலங்கையில் டெங்கு பாதிப்புகள் 70000ஐ நெருங்குகின்றன
- ஈராக்கில் தீவிர ஊழல் ஒழிப்பு நடவடிக்கையில் 375 கிலோ தங்கம் பறிமுதல்
- பொதுமக்களுக்கு பொலிஸ் எச்சரிக்கை
- மொஜ்தபா கமெனி 90% அழிந்துவிட்டார் டிரம்ப்
- 20% என்பது மிக அதிகம், ஈரான் நியாயமாக நடந்துகொள்ளும்
- பள்ளிகளுக்கான இரண்டாம் பருவத் தேர்வு தேதி
- பொலிஸ் அதிகாரி போல வேடமிட்டு மோசடி செய்த மூவர் கைது
- ஏர்பஸ் கையூட்டு விசாரணை அறிக்கையைச் சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவு
- நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் 31பேர் பலி
பொலிஸாரின் கொடூர தாக்குதலில் யாழ் வாலிபன் மரணம்
பொலிஸாரின் கொடூர தாக்குதலில் யாழ் வாலிபன் மரணம்
வட்டுக்கோட்டை பொலிஸாரின் கொடூர தாக்குதலுக்கு உள்ளான நிலையில் சித்தங்கேணி பகுதியைச் சேர்ந்த அலெக்ஸ் என்ற இளைஞனின் மரணம் பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது.
இந்நிலையில், குறித்த இளைஞனின் சடலமானது பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் வீட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
பொலிஸார் 785 வழித்தட வீதியை முற்றாக வீதித்தடை மூலம் மூடி பயணிகளின் போக்குவரத்துக்கு மிகவும் இடையூறு விளைவித்தனர்.
பொலிஸாரின் கொடூர தாக்குதலில் யாழ் வாலிபன் மரணம்
இதனால் பயணிகள் சுற்றுப்பாதையை பயன்படுத்தி மிகவும் கடினத்தின் மத்தியில் பயணத்தை மேற்கொண்டுள்ளனர்.
ஐந்து பொலிஸ் நிலையங்களில் இருந்து நூற்றுக்கணக்கான பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் கடமையில் அமர்த்தப்பட்டு
பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்த நிலையிலும் வீதியால் செல்பவர்கள் வட்டுக்கோட்டை பொலிஸாரை கேவலமாக திட்டி விட்டு, எச்சில் உமிழ்ந்து விட்டு செல்வதை அங்கு அவதானிக்க முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இஸ்ரேலிய இராணுவத்தின் உளவுத்துறை அதிகார பெண் மரணம்
இஸ்ரேலிய இராணுவத்தின் உளவுத்துறை அதிகார பெண் மரணம்
இஸ்ரேலுக்குள் நுழைந்து சிறைபிடித்து செல்ல பட்ட இஸ்ரேல் இராணுவத்தின் உளவுத்துறையில் பணியாற்றிய பெண் அதிகாரி மரணம் என இஸ்ரேல் இராணுவம் அறிவிப்பு .
கடந்த ஐப்பசி மாதம் 7 ம் திகதி இஸ்ரேலுக்குள் நுழைந்து ,இஸ்ரேல் இராணுவ முகாமில் பணியாற்ற கொண்டிருந்த 19 வயதுடைய மார்சியானோ, இருந்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம் அறிவித்துள்ளது .
இஸ்ரேலிய இராணுவத்தின் உளவுத்துறை அதிகார பெண் மரணம்
இவர் கம்பாட் இன்டலிஜென்ஸ் கலெக்ஷன் கார்ப்ஸ் 414 வது பிரிவைச் சேர்ந்த 19 வயதான மார்சியானோ, என தெரிவிக்க பட்டுள்ளது .
சிறை பிடித்து செல்ல பட்ட இவர் தங்கி இருந்த பகுதி மீது இஸ்ரேல் இராணுவம் நடத்திய வான்வெளி தாக்குதலில் இவர் பலியாகியுள்ளதாக ஹமாஸ் டெஹ்ரிவித்தது .
அவ்வாறான அறிவிப்பு வெளியான நிலையில் ,அதனை உறுதி படுத்தி இஸ்ரேல் இராணுவம் அறிவித்துள்ளது .
இவரே ஹமாஸ் போராட்ட காரர்களை கட்டி கொடுப்பதிலும் ,பல இன்னல்களை அவர்களுக்கு விளைவிப்பதில் அதிக பணியாற்றிய ஒருவராக காணப்பட்டுள்ளார் .
அவ்வாறான பெண் சிப்பாய் எதிர்பாராத விதமாக ஹமாஸ் அமைப்பின் முற்றுகையில் சிக்கினார் .
- இந்தியா ஈரான் மோதல் உச்சம்
- ஈராக்கில் தீவிர ஊழல் ஒழிப்பு நடவடிக்கையில் 375 கிலோ தங்கம் பறிமுதல்
- மொஜ்தபா கமெனி 90% அழிந்துவிட்டார் டிரம்ப்
- 20% என்பது மிக அதிகம், ஈரான் நியாயமாக நடந்துகொள்ளும்
- புரிந்துணர்வு ஒப்பந்தக் கடமைகளை அமெரிக்கா நிறைவேற்றாவிட்டால், ஒப்பந்தத்தை ஏற்க மாட்டோம் ஈரான்
- மத்திய ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதலில் குறைந்தது ஒருவர் பலி, ஏழு பேர் காயம்
- ஹோர்முஸ் ஜலசந்தி மீண்டும் திறக்கப்பட வேண்டும் ஐரோப்பிய ஒன்றியம்
- ஈரான் அமெரிக்காவுக்கு எச்சரிக்கை கடும் போர் மூண்டது
- ஈரானின் ஐந்து நகரங்கள் மீது தாக்குதல்
- வளைகுடா நாடுகள் முழுவதும் ஈரானின் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல்
வெடி விபத்தில் ஒருவர் மரணம்
கொஸ்கம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அஸ்வத்த வடக்கு பகுதியில் நேற்று (08) மாலை இடம்பெற்ற வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியில் துப்பாக்கிப் பொடி ஏற்றப்பட்ட போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அஸ்வத்த வடக்கு, புவக்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 59 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.
இவர் வீட்டில் தனியாக வசித்து வந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொஸ்கம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கணவர் வெளிநாட்டில் மனைவி மர்மமான முறையில் மரணம்
கணவர் வெளிநாட்டில் மனைவி மர்மமான முறையில் மரணம்
கிரிந்திவெல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மிவிதிகம்மன, ஊராபொல பிரதேசத்தில் வீடொன்றினுள் பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கிரிந்திவெல பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து இது தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
உயிரிழந்தவர் 35 வயதுடைய பெண் என தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்த பெண் தனது குழந்தை, கணவரின் தாய் மற்றும் தந்தையுடன் அந்த வீட்டில் வசித்து வந்துள்ளார்.
கணவர் வெளிநாட்டில் மனைவி மர்மமான முறையில் மரணம்
உயிரிழந்த பெண்ணின் கணவர் வெளிநாட்டில் வசிப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்த பெண் வீட்டில் தனியாக இருந்த போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொலைக்கான காரணம் அல்லது சந்தேக நபர் தொடர்பில் இதுவரை எவ்வித தகவலும் வெளியாகவில்லை என்பதுடன், கிரிந்திவெல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
















































