Posted in Uncategorized

தொடரும் போராட்டம் – தள்ளாடும் அரசு

தொடரும் போராட்டம் – தள்ளாடும் அரசு

ஜனாதிபதி மற்றும் தற்போதைய அரசாங்கத்தைப் பதவி விலகுமாறு கோரி கொழும்பு காலி முகத்திடல் மற்றும் நாடாளவிய ரீதியில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு

வருகின்ற நிலையில், குறித்த போராட்டத்திற்கு ஒருமைபாட்டை தெரிவிக்கவும், வலுசேர்க்கவும் இரண்டாவது நாளாக இன்றும் ஹட்டன் மல்லியப்பு சந்தியில் போராட்டம் தொடர்கின்றது.

ஜனநாயகத்துக்கான மக்கள் குரல் எனும் தொனிப்பொருளின் கீழ் சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் இளைஞர்கள் இணைந்து நேற்று இந்த போராட்டத்தை ஆரம்பித்தனர்.

இந்த நிலையில், இன்றைய போராட்டத்தில் கோ கோட்டா ஹோம், மலையக மக்களுக்கு விடிவு கிடைக்க வேண்டும், தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ஆளுமை உள்ள அரசாங்கம் உருவாக வேண்டும், பாராளுமன்ற

உறுப்பினர்கள் மனசாட்சியோடு நடந்துக் கொள்ள வேண்டும், விலை குறை அடுத்த தலைமுறை வாழ வேண்டும் போன்ற வாசகங்கள் எழுதிய சுலோக அட்டைகளை காட்சிப்படுத்தினர்.

அத்தோடு, கறுப்பு கொடிகளை ஏந்தியிருந்ததோடு, கோஷங்களையும் எழுப்பியிருந்தனர். பொலிஸாரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

இந்த போராட்டத்தின் போது ஹட்டன் மல்லியப்பு சந்தியில் கோ கோட்டா கம கிராமத்தின்
கிளை அங்குராப்பணம் செய்து வைக்கப்பட்டமை குறிப்பிடதக்கது.

    Posted in இலங்கை செய்திகள்

    பதவி விலக மறுக்கும் கோட்டா – தொடரும் போராட்டம்

    பதவி விலக மறுக்கும் கோட்டா – தொடரும் போராட்டம்

    இலங்கையில் ஆளும் ஜனாதிபதி கோட்டா பிரதமர் மகிந்தா உள்ளிட்டவர்கள் பதவி

    விலக கோரி மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட வண்ணம் உள்ளனர்

    இந்த மக்களின் கோரிக்கையை ஏற்று ஆட்சியாளர்கள் பதவி திறக்க மறுத்து வருவதால் போராட்டம் அதி உச்சம் பெற்றுள்ளது

    மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்காது செல்லும் ராஜபக்ஸ்ச குடும்பங்களுக்கு எதிராக
    மக்கள் மேலும் கொதிப்படைந்து போராட்டம் உக்கிரம் பெற்று வருகிறது

      Posted in இலங்கை செய்திகள்

      நாடு தழுவிய நிலையில் மக்கள் போரராட்டம் – திணறும் கோட்டா அரசு

      நாடு தழுவிய நிலையில் மக்கள் போரராட்டம் – திணறும் கோட்டா அரசு

      இலங்கையில் ஆளும் அரசுக்கு எதிராக மக்கள் நாடளாவிய ரீதியில் பலத்த எதிர்ப்பு போராட்டங்களை தொடராக நடத்திய வண்ணம் உள்ளனர்

      கோட்டாவே வீட்டுக்கு போ என்ற வாசகங்கள் தொடர்ந்து ஒலித்த வண்ணம் உள்ளது

      எனினும் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காது கோட்டா அதிகாரத்தை விட்டு செல்ல மறுத்து வருகிறார்

      சிங்களவர்கள் அதிகம் வசிக்கும் காலி ,கொழும்பு,அம்பன்தோட்டை என விரிந்து

      கொழும்பின் பல பகுதிகளும் இந்த போராட்டம் முன்னெடுத்து செல்ல படுகிறது

      மக்களின் தொடர் போராட்டங்கள் அதிகாரித்து செல்லும் நிலையில் பலத்த நெருக்கடியில் ஆளும் அரசு சிக்கியுள்ளது

        Posted in இலங்கை செய்திகள்

        மகிந்தா அலுவலகம் முற்றுகை – உக்கிரமாகும் மக்கள் போராட்டம்

        மகிந்தா அலுவலகம் முற்றுகை – உக்கிரமாகும் மக்கள் போராட்டம்

        மகிந்தா அலுவகம் தற்போது போராட்ட காரர்களினால் சுற்றிவளைக்க பட்டு

        ,உடனே பதவி விலகும் படி மக்கள் கோரிக்கை விடுத்தது கோசம் எழுப்பி வருகின்றனர்

        எங்களை வாழ விடுங்கள் சுடு காட்டுக்கு அனுப்பாதீர்கள் என்ற கோசமும் அங்கே முழங்க படுகிறது

        அழகான இலங்கையை சுரண்டி கொள்ளையடித்து ஏப்பம் விட்ட மகிந்தா

        குடும்பத்தினால் இன்று இலங்கை இந்த சீரழிவை சந்தித்துள்ளது என்பது மக்கள் பேச்சாக உள்ளது

        மக்கள் போராட்டங்களுக்கு தலை வணங்கி பதவி திறப்பதை ஆளும் இனவாத கொலைகாரர்கள் மறுத்து வருகின்றதால் ,


        மக்கள் ஆத்திரம் உற்ற நிலையில், இந்த போர் உக்கிரம் பெற்றுள்ளது

          Posted in இலங்கை செய்திகள்

          மக்கள் மீது தாக்குதல் நடத்த கூடாது – இலங்கைக்கு ஐநா கண்டணம்

          மக்கள் மீது தாக்குதல் நடத்த கூடாது – இலங்கைக்கு ஐநா கண்டணம்

          இலங்கையில் ஆளும் சகோத ஆட்சிக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்

          இந்த போராட்டம் காரணமாக நாடு பதட்டத்தில் உள்ளது

          சீற்றமடைந்துள்ள ஆட்சியாளர்களும் படை தரப்பும் மக்கள் மீது

          கண்மூடித்தனமான தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது

          இவ்வாறானவர்கள் மீது தாக்குதல் நடத்திட கூடாது எனவும் ,ஆத்திரமுற்றுள்ள


          மக்களை மேலும் தூண்டிவிட எதிர்க்கட்சிகள் கூடாது எனவும் அறிவுறுத்தல் விடுக்க பட்டுள்ளதுடன் ,


          பிரச்சனைக்கு தீர்வு காணுமாறு ஐநா எடுத்துரைத்துள்ளது

            மின்சார பணம் செலுத்தாத மக்கள்
            Posted in இலங்கை செய்திகள்

            இலங்கை மின்சார சபை ஊழியர்கள் போராட்டம்

            இலங்கை மின்சார சபை ஊழியர்கள் போராட்டம்

            இலங்கை மின்சார சபை ஊழியர்கள் திட்டமிட்ட படி இன்று சுகவீன விடுப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்

            சம்பள உயர்வு கோரி வந்த போராட்டம் இடம்பெறுவதாக தெரிவிக்க படுகிறது

            நாட்டில் அத்தியாவசிய பொருட்கள் விலை அதிகரித்து செல்லும் நிலையில் இவ்வாறான

            போராட்டங்களும் தொடராக
            இடம்பெற்ற வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது

            Posted in Uncategorized

            அப்பாவி மக்களை குண்டு வைத்து கொல்லும் இலங்கை இனவாத அரசு photo

            அப்பாவி மக்களை குண்டு வைத்து கொல்லும் இலங்கை இனவாத அரசு photo

            இன்று பிரித்தானியாவில் உள்ள இலங்கை தூதரகத்துக்கு முன்னால், மதியம் 12 :30 மணியளவில்

            ,தமிழருக்கான சுதந்திர வேட்டைகாரர்களால் போராட்டம் ஒன்று நடத்த பட்டது

            இவை நிகழ்கால கொரனோ விதிகளுக்கமையவும் , பிரித்தானிய சட்ட திட்டங்களை பின்பற்றியும் அமைதியான முறையில் அர்ப்பாட்டம் நடைபெற்றது .


            இந்த போராட்டத்தின் பொழுது மறைந்து இருந்து குண்டு வெடிப்பு தாக்குதல்களை

            மேற்கொள்ளும் இலங்கை இனவாத அரசின் முகதிரையை ஆர்ப்பாட்ட காரர்கள் கோஷமிட்டு கிழித்தெறிந்தனர்

            .அதனை உயர்ஸ்தாணிகத்திற்குள் உள்ளே இருந்த வண்ணம் சிங்கள கூலிகள் அவதானித்துக்கொண்டிருத்தனர் ,


            மறைந்திருந்து முழு ஆர்ப் பாட்ட நிகழ்வையும் காணொளி ,மற்றும் புகைப்படங்கள்
            பிடித்து கொண்டிருந்ததை பங்கு பற்றியவர்கள் கண்கொண்டு பார்க்க கூடியதாக இருந்தது .


            மேலும் இவ் ஆர்ப்பாட்ட பேரணியில்
            ஈஸ்டர் பண்டிகையின் போது தேவாலயங்களில் குண்டுவைத்து தீவிரவாத தாக்குதல் என்ற

            போர்வைக்குள் கொல்லப்பட்ட அப்பாவி மக்களின் கொலைக்கு இன்னும் ஏன் நீதி வழங்கப்படவில்லை என இலங்கை இனவாத அரசை பொங்கியெழுந்து கேட்டனர் .


            இந்த பேரணியில் கீழே வரும் கோஷங்கள் முழங்கின ,
            “போர்க்குற்றவாளி இலங்கஅதிபர்”
            “ஈஸ்ரர் குண்டு தாக்குதலுக்கு விசாரணை முடிவு என்ன”
            “அப்பாவி மக்களை மறந்து இருந்து குண்டு வைத்து கொல்லாதே”
            “இலங்கையை விட்டு ஏன் சிங்களவர் வெளியேறுகிறார்கள் “
            என்ற கேள்வி கோஷங்களை எழுப்பினர் …

            இணையில் தொடபாற் மனித உரிமை மீறல் மற்றும் தமிழர் அடக்குமுறை என்பன தலைவிரித்தாடி வரும் நிலையில், மர்ம படுகொலைகள் ,கடத்தல்கள் ,அச்சறுத்தல்கள் ,என்பன

            தொடர்ந்த வண்ணம் உள்ளது ஐநா மனித உரிமை மையம் சுட்டி காட்டி இருந்தமை இங்கே குறிப்பிட தக்கது

              Posted in இலங்கை செய்திகள்

              இந்தோனேசியாவில் தமிழர்கள் போராட்டம் – கண்ணீரில் உறவுகள் – வீடியோ

              இந்தோனேசியாவில் தமிழர்கள் போராட்டம் – கண்ணீரில் உறவுகள் – வீடியோ

              இலங்கையில் நடந்த தமிழ் இன படுகொலையை அடுத்து அச்சம் அடைந்த மக்கள்

              வெளிநாடுகளுக்கு உயிர் பாதுகாப்பு தேடி ஓடினர் ,அவ்விதம் இந்தோனேசிய சென்ற தமிழர்கள்

              அந்த நாட்டின் 28 முகாம்களில் தடுத்து வைக்க பட்டுள்ளனர்

              இதுவரை எவ்வித நாடும் அகதி தஞ்ச கோரிக்கையை ஏற்றுக்கொள்ளவில்லை என அந்த மக்கள் கண்ணீர் பட தெரிவிக்கின்றனர்

              மேலும் மூன்றாவது நாளாக தமது கோரிக்கை ஏற்று தமக்கு ஆவண செய்யும் படி கோரி ஐநா

              மற்றும் இந்தோனேசியா அரசு ,உலக நாடுகளுக்கு வேண்டுதலை வைத்து இந்த போராட்டம்

              இடம்பெற்று வருகிறது

              இந்த முகாம்களில் சுமார் பத்து வருடங்களுக்கு மேலாக மக்கள் தங்கி உள்ளமை குறிப்பிட தக்கது

                Posted in Uncategorized

                அதிபர், ஆசிரியர்கள் போராட்டம்

                அதிபர், ஆசிரியர்கள் போராட்டம்

                சர்வதேச ஆசிரியர் தினத்தையொட்டி, இன்று (06), அதிபர், ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டுக்கான தீர்வை வலியுறுத்தி நாடளாவிய ரீதியில் போராட்டங்கள் முன்னெடுக்கப்ட்டு

                வருகின்ற நிலையில், வடக்கில் உள்ள அதிபர், ஆசிரியர்கள், கல்விசாரா ஊழியர்களும் போராட்டங்களை முன்னெடுத்தனர்.

                இதற்கமைய, யாழ். – செம்மணியில் உள்ள வடக்கு மாகாண கல்வி அமைச்சு அலுவலத்துக்கு முன்னாள், காலை 10 மணியளவில், கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

                இதன்போது, ஆசிரியர்கள் கறுப்பு கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

                இதேவேளை, வவுனியா வடக்கு கல்வி வலயம் சார்பாக, காலை 9 மணிக்கு, புதுக்குளம் பகுதியில் உள்ள வவுனியா தெற்கு வலயத்துக்கு முன்னாள், ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

                மேலும், கிளிநொச்சி வலயக் கல்வித் திணைக்களத்துக்கு முன்பாகவும், கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

                Posted in முக்கிய செய்திகள்

                ஈரான் அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம் – video

                ஈரான் அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம் – video

                ஈரான் இராணுவத்தால் உக்கிரேன் பயணிகள் விமானம் ரசியாவின் ஏவுகணை கொண்டு சுட்டு வீழ்த்த பட்டது ,இந்த

                விமானத்தை நாமே சுட்டு வீழ்த்தினோம் என ஈரான் கூறிய நிலையில் மக்கள் மத்தியில் பெரும் கிளர்ச்சி ஏற்பட்டுள்ளது .

                ஈரானிய அரசு ,மற்றும் புரட்சி படைகளிற்குஎதிராக மக்கள் போராட்டம் நடத்திய வண்னம் உள்ளனர் .ஈரானில்

                பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி , தாமே தமக்கு புதை குழி வெட்டிய சம்பவமாகவும் ,பெரும் நெருக்கடியில் ஈரான் தற்போது சிக்கியுள்ளது .

                ஈரான் அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம் – video

                இந்த வேளையில் ஈரான் அமெரிக்கா உள்ளக ரீதியாக மிரட்டும் நிலையில் சென்றுள்ளது ,இந்த விடயத்தில் இருந்து ஈரானால் மீண்டு எழுந்திட முடியாத சூழல் ஏற்படும் எனவும்

                .அதற்குள்ளாக ஈரானின் இராணுவத்திற்குள் கலவரத்தை மூட்டி அந்த ஆட்சியை கவிழ்க்கும் நிலையில் அமெரிக்கா,மற்றும் இஸ்ரேல் சென்றுள்ளன .

                தமது இராணுவத்தை தாமே தமக்கு எதிராக திருப்பி விடும் நிலையில் ஈரான் சென்றுள்ளது ,சுலைமானி கட்டி காத்த இராணுவம் ,இப்பொழுது தர்ம சங்கடத்தில் சிக்கியுள்ளது .

                இதற்கு ரசியா எந்த ரூட்டை போட்டு கொடுக்க போகிறது ,என்பதை பொறுத்தே ஈரானின் உயிர் வாழ்தல் நிகழ போகிறது .full video