தென் மாகாணம் பயணிகளுக்காக SP பஸ்
Posted in இலங்கை செய்திகள்

தென் மாகாணம் பயணிகளுக்காக SP பஸ்

தென் மாகாணம் பயணிகளுக்காக SP பஸ்

தென் மாகாணம் பயணிகளுக்காக SP பஸ் மொபைல் செயலியை அறிமுகப்படுத்துகிறது.

தென் மாகாண சாலை பயணிகள் போக்குவரத்து

தென் மாகாண சாலை பயணிகள் போக்குவரத்து ஆணையம், தென் மாகாணம் முழுவதும் உள்ள பேருந்து நிறுத்தங்களில் வருகை நேரம் உட்பட

பேருந்து சேவைகள் குறித்த நிகழ்நேர தகவல்களை பயணிகளுக்கு வழங்குவதற்காக ஒரு புதிய மொபைல் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.

‘SP பஸ்’ என்று பெயரிடப்பட்ட இந்த செயலியின் அதிகாரப்பூர்வ வெளியீடு, மாத்தறை பிரதான பேருந்து நிலையத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் அஜந்த கம்மடகே தலைமையில் நடைபெற்றது.

மதிப்பிடப்பட்ட பேருந்து வருகை நேரம் மற்றும் சேவை கிடைக்கும் தன்மை போன்ற முக்கிய விவரங்களை வழங்குவதன் மூலம் பொது போக்குவரத்தை

மிகவும் வசதியாக மாற்றுவதற்காக இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளதாக அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, பேருந்துகளில் GPS சாதனங்களை நிறுவுதல் இன்று தொடங்கியது.

புதிய அமைப்பு பயணிகள் பேருந்து

புதிய அமைப்பு பயணிகள் பேருந்துகளின் நிகழ்நேர இருப்பிடத்தைக் கண்காணிக்கவும், ஒரு குறிப்பிட்ட சேவை இயங்குகிறதா என்பதை சரிபார்க்கவும் உதவும்.

பேருந்து வேகத்தைக் கண்காணிக்கவும், பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று போட்டியிடும் நிகழ்வுகளைக் கண்டறியவும், தாமதங்கள் அல்லது கால

அட்டவணையில் சேவைகளைத் தொடங்குவதில் தோல்விகளை அடையாளம் காணவும் அனுமதிக்கும் என்பதால், அதிகாரிகள் இந்த தொழில்நுட்பத்திலிருந்து பயனடைவார்கள்.

தென் மாகாணத்திற்குள் இயங்கும் அனைத்து இலங்கை போக்குவரத்து வாரிய (SLTB) பேருந்துகளும் அதன் மேற்பார்வையின் கீழ் அவற்றின் பயணங்கள் முழுவதும் கண்காணிக்கப்படும் என்று அதிகாரசபை மேலும் கூறியது.

பஸ்மீது கிளேமோர் தாக்குதல் நடத்ததிட்டம்
Posted in இலங்கை செய்திகள்

பஸ்மீது கிளேமோர் தாக்குதல் நடத்ததிட்டம்

பஸ்மீது கிளேமோர் தாக்குதல் நடத்ததிட்டம்

பஸ்மீது கிளேமோர் தாக்குதல் நடத்ததிட்டம் ,சிறைச்சாலை பஸ்ஸை குறிவைத்து கிளேமோர் குண்டுத் தாக்குதலை நடத்த திட்டமிட்டிருந்தமை தொடர்பிலான தகவல் அம்பலமாகியுள்ளது.

பாதாள உலகத் தலைவர் ஹரக் கட்டாவை நீதிமன்றத்திற்கு அழைத்து வரும்போது சிறைச்சாலை பஸ்ஸை குறிவைத்து கிளேமோர் குண்டுத்

தாக்குதலை நடத்தி கொல்லத் திட்டமிட்டிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கெஹல்பத்தர பத்மே கமாண்டோ சாலிந்தா உள்ளிட்ட பாதாள உலகக் கும்பலே இந்த திட்டத்தை தீட்டியிருந்துள்ளது.

பாதாள உலக கும்பலுக்கு மிகவும் சக்திவாய்ந்த ஆயுதங்களை விற்பனை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இராணுவ லெப்டினன்ட் கேணலிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது இது தெரியவந்தது.

சந்தேகத்திற்குரிய லெப்டினன்ட் கேணலிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது, ​​ பல சந்தர்ப்பங்களில் தன்னை தொலைபேசியில்

அழைத்த கமாண்டோ சாலிந்தா, இரண்டு கிளேமோர் குண்டுகளைக் கேட்டு வற்புறுத்தியதாகக் கூறியுள்ளார்.

இருப்பினும், சந்தேகத்திற்குரிய லெப்டினன்ட் கேணல், இரண்டு கிளேமோர் குண்டுகளை கமாண்டோ சாலிந்தாவிடம் கொடுத்திருக்கலாம் என்று விசாரணை அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

பத்திரிகையாளராக மாறுவேடமிட்டு ஹரக் கட்டாவைக் கொல்லும் திட்டம் தோல்வியடைந்தால், அடுத்த தாக்குதல் திட்டமாக கெஹல்பத்தர பத்மே

மற்றும் கமாண்டோ சாலிந்தா இந்த கிளேமோர் குண்டுத் தாக்குதலை நடத்தத் தயாராகி இருந்துள்ளனர்.

ஹரக் கட்டாவை ஏற்றிச் சென்ற சிறைச்சாலை பஸ் புதுக்கடை நீதிமன்றத்தை நெருங்கும் போது, ​​நீதிமன்றத்திற்கு அருகிலுள்ள சாலையில் ஒரு மோட்டார்

சைக்கிளில் கிளேமோர் குண்டை மறைத்து ரிமோட் கண்ட்ரோலைப் பயன்படுத்தி வெடிக்க வைப்பதே பாதாள உலகக் கும்பலின் திட்டமாக இருந்ததாக தெரிவிக்கின்றனர்.

இருப்பினும், இந்த பாதாள உலகக் கும்பல் கைது செய்யப்பட்டதால் ஒரு பெரிய பேரழிவு தவிர்க்கப்பட்டதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பத்திரிகையாளராக மாறுவேடமிட்டு கேமராவில் துப்பாக்கியை பொருத்தி அதை செயல்படுத்துவதன் மூலம் ஹரக் கட்டாவைக் கொல்லும் திட்டம் முன்பே தெரியவந்தது.

தாக்குதலில் ஈடுபடவிருந்த நபர் கைது செய்யப்பட்டார். தாக்குதலில் பயன்படுத்தத் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியும் முன்னர் கைப்பற்றப்பட்டது.

பத்மே மற்றும் பாதாள உலகக் கும்பல் கைது செய்யப்பட்டவுடன், அந்த திட்டம் நிறுத்தப்பட்டது, மேலும் திட்டத்தை தயாரித்தவர் அதற்குப் பயன்படுத்தப்பட்ட கேமராவையும் தீயிட்டு அழித்தார்.

கமாண்டோ சாலிந்தவுக்கு ஆயுதங்களை விற்றதாகக் கூறப்படும் லெப்டினன்ட் கர்ணல், பேலிகொட குற்றப்பிரிவால் கைது செய்யப்பட்டு, தற்போது குற்றப் புலனாய்வுத் துறையில் விசாரிக்கப்பட்டு வருகிறார்.

பஸ் விபத்து கதிர்காமத்தில்
Posted in இலங்கை செய்திகள்

பஸ் விபத்து கதிர்காமத்தில்

பஸ் விபத்து கதிர்காமத்தில்

பஸ் விபத்து கதிர்காமத்தில் ,கதிர்காமம் சென்று திரும்பிய யாத்திரிகர்ளை மட்டக்களப்பு ஆரையம்பதியில் இறக்கிவிட்டு திரும்பிய பேருந்து கிரான்குளத்தில் விபத்தி சிக்கிய நிலையில் 3 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவு

இன்று காலை (30) மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரான்குளம் பகுதியில் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி மரமொன்றுடன் மோதி இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

கதிர்காமம் புனித யாத்திரையை நிறைவு செய்த யாத்திரிகர்களை ஆரையம்பதியில் இறக்கி விட்டு

மட்டக்களப்பு- கல்முனை பிரதான வீதி வழியே தேற்றாத்தீவு நோக்கி திரும்பிக்கொண்டிருந்த பேருந்து கிரான்குளம்

சரஸ்வதி வித்தியாயலயத்திற்கு அருகாமையில் பயணிக்கும் போது வீதியை விட்டு விலகி வீதியோரமிருந்த வம்மி மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.

பேருந்தில் பஸ் சாரதியும் உதவியாளர்கள்

இந்த விபத்து இடம்பெறும் போது பேருந்தில் பஸ் சாரதியும் உதவியாளர்கள் இருவர் இருந்துள்ள நிலையில் மூவரும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்தில் காயமடைந்தோர் பாண்டிருப்பு களுதாவளை பகுதியை சேர்ந்தவர்களாகும். விபத்தில் பேருந்து பாரிய சேதத்துக்குள்ளான நிலையில் வம்மி மரமும் முறிந்து வீதியில் விழுந்துள்ளது.

விபத்து தொடர்பான விசாரணைகளை காத்தான்குடி போக்குவரத்து பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

இலங்கையில் பஸ் க்கு AI தொழினுட்பம்
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் பஸ் க்கு AI தொழினுட்பம்

இலங்கையில் பஸ் க்கு AI தொழினுட்பம்

பஸ் விபத்துக்களை தடுக்கும் நோக்கில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்ய உள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

பஸ்களை கண்காணிக்க செயற்கை நுண்ணறிவுத் தொழிநுட்ப (AI) சாதனங்களை பயன்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக

போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க இன்று (05) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

“இந்த சாதனங்கள் எதிர்வரும் இரண்டு மாதங்களில் சுமார் 40 பேரூந்துகளில் இந்த செயற்கை நுண்ணறிவு கருவிகள் பொருத்தப்பட உள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்தக் கருவிகள் மூலம் சாரதிகளுக்கு ஏற்படக்கூடிய நித்திரைக் கலக்கம் கண்காணிக்கப்பட்டு அதற்கான தீர்வுகள் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

பஸ் லொறி விபத்து 15பேர் காயம்
Posted in இலங்கை செய்திகள்

பஸ் லொறி விபத்து 15பேர் காயம்

பஸ் லொறி விபத்து 15பேர் காயம்

பஸ் லொறி விபத்து 15பேர் காயம் ,ஹொரணை – ரத்னபுர வீதியில், இங்கிரிய மாவட்ட வைத்தியசாலைக்கு அருகில் தனியார் பஸ் மற்றும் சிறிய ரக லொறி என்பன நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகி உள்ளது.

இந்த விபத்தில், மாணவர்கள் உட்பட சுமார் 15 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இங்கிரிய பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்தவர்களில் லொறி சாரதி மற்றும் உதவியாளரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பஸ் விபத்தில் பலர் காயம்
Posted in இலங்கை செய்திகள்

பஸ் விபத்தில் பலர் காயம்

பஸ் விபத்தில் பலர் காயம்

பஸ் விபத்தில் பலர் காயம்கொழும்பு-புத்தளம் வீதியில் பட்டுலுஓயா பகுதியில் திங்கட்கிழமை (17) காலை இடம்பெற்ற பேருந்து விபத்தில் பலர் காயமடைந்த நிலையில், சிலாபம் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஆராச்சிகட்டுவ பொலிஸார் தெரிவித்தனர்.

நிக்கவெரட்டியவிலிருந்து அதிகம மற்றும் கீரியன்கல்லிய வழியாக கொழும்புக்கு தினமும் இயக்கப்படும் இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்து ஒன்று, பாதையை விட்டு விலகி ஒரு மரத்தில் மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

இந்த விபத்தில் பேருந்து ஓட்டுநர், நடத்துநர் உட்பட பலர் காயமடைந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

பஸ்ஸில் பதற்றத்தை ஏற்படுத்திய பாம்பு
Posted in இலங்கை செய்திகள்

பஸ்ஸில் பதற்றத்தை ஏற்படுத்திய பாம்பு

பஸ்ஸில் பதற்றத்தை ஏற்படுத்திய பாம்பு

பஸ்ஸில் பதற்றத்தை ஏற்படுத்திய பாம்பு ,குருநாகலில் இருந்து நேற்று காலை மாவத்தகம மதிபொக்க நோக்கி பயணித்த தனியார் பஸ்ஸில் பாம்பு இருந்தமையால் மிகவும் பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று காலை 8 மணியளவில் குருநாகல் பிரதான பஸ் நிலையத்தில் இருந்து பஸ் புறப்பட்டுச் சென்றதுடன், சில நிமிடங்களின் பின்னர் பஸ்ஸின் பின் கதவுக்கு அருகில் உள்ள இருக்கைக்கு அடியில் பாம்பு ஒன்று இருந்துள்ளது.

நேற்று அலுவலக நாள் என்பதால், பஸ்ஸில் ஏராளமானோர் பயணம் செய்துள்ளனர்.

இதன்போது, இருக்கைக்கு அடியில் இருந்து பாம்பு வெளிப்பட்டதை பார்த்த பெண் ஒருவர், மிகவும் பயந்து, ‘பாம்பு..பாம்பு..’ என சத்தம் போட்டார்.

இதையடுத்து குறித்த பாம்பு பஸ்ஸின் முன்பகுதிக்கு ஊர்ந்து சென்றுள்ளது.

பாம்பு முன்னால் வருவதைக் கண்ட சாரதி, குருநாகல் அட்கந்த ஆலயத்திற்கு அருகில் பஸ்ஸை நிறுத்தினார்.

பஸ்சை நிறுத்தியதால் பயந்துபோன பயணிகள் அனைவரும் பஸ்சை விட்டு இறங்கினர்.

சிறிது நேரத்தின் பின் பஸ்ஸில் இருந்த பாம்பை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. எனினும் பஸ் மீண்டும் பயணத்தை ஆரம்பித்தாலும் அதில் பயணிக்க பயந்த சிலர் வேறு பஸ்ஸில் செல்ல முடிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அர்ச்சுனா அறிவிப்பு பெண்களுக்கு 200 000 சம்பளம் அர்ச்சுனா அறிவிப்பு,அர்ச்சுனா இராமநாதன் பெண்களுக்கு இரண்டு லட்சம் ரூபாய் சம்பளம் வழங்குவதாக தெரிவித்துள்ளார் .
Posted in இலங்கை செய்திகள்

பஸ் ஆற்றில் கவிழ்ந்ததில் 14 பேர் பலி

பஸ் ஆற்றில் கவிழ்ந்ததில் 14 பேர் பலி

பஸ் ஆற்றில் கவிழ்ந்ததில் 14 பேர் பலி ,நேபாளத்தில் இந்திய சுற்றுலாப் பயணிகள் சென்ற பஸ் ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 14 பேர் பலியாகினர்.

நேபாளத்தில் பொக்காராவில் இருந்து கத்மண்டு நோக்கி 40 இந்தியர்கள் பஸ்சில் சென்று கொண்டிருந்தனர். தனா ஹூன் மாவட்டத்தில் உள்ள மார்ஸ்யாங்டி ஆற்றின் அருகேயுள்ள பாதையில் சென்றபோது பஸ் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.

பயணிகள் தண்ணீரில் மூழ்கிய நிலையில், மீட்புப்பணிகளை உள்ளூர் மாவட்ட நிர்வாகம் முடுக்கி விட்டுள்ளது. உள்ளூர் நீச்சல் வீரர்கள் உதவியுடன் ஆற்றில் விழுந்த 16 பேர் மீட்கப்பட்டனர்.

மேலும் 14 பேர் உயிரிழந்த நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டனர். மற்றவர்களை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.

நெடுஞ்சாலையில், பஸ் வந்து கொண்டிருந்த போது திடீரென நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால், பஸ் மீது பாறைகள், மண் கொட்ட, சாலையில் இருந்து பஸ் அப்படியே ஆற்றில் விழுந்துள்ளது.

காலநிலை மாற்றம், இயற்கை சீற்றத்தால் ஏற்பட்ட இதுபோன்ற விபத்துகளினால் கடந்த ஜூலை மாதம் வரை 62 பேர் பலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

நடுக்காட்டில் ஆசிரியரை இறக்கிவிட்டுச் சென்ற பஸ்
Posted in இலங்கை செய்திகள்

நடுக்காட்டில் ஆசிரியரை இறக்கிவிட்டுச் சென்ற பஸ்

நடுக்காட்டில் ஆசிரியரை இறக்கிவிட்டுச் சென்ற பஸ்

நடுக்காட்டில் ஆசிரியரை இறக்கிவிட்டுச் சென்ற பஸ் ,ஆசிரியர் ஒருவரை நடுக்காட்டில் இறக்கி விட்டுச் சென்ற பஸ் மீது குறித்த ஆசிரியர் வாழைச்சேனை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

கல்முனை – யாழ் சேவையில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்துச்சபை மட்டக்களப்பு சாலைக்குச் சொந்தமான BN NC 1554 இலக்கமுடைய பஸ் வண்டியில் பயணித்த கஷ்டப்பிரதேச பாடசாலையில் கற்பிக்கின்ற ஆசிரியர் ஒருவருக்கே இத்துயரச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட குறித்த ஆசிரியர் தெரிவிக்கையில்,

நேற்றைய தினம் (12) மட்டக்களப்பு எல்லைக் கிரமமப்புற பாடசாலையான ஜெயந்தியாய அஹமட் ஹிராஸ் வித்தியாலயத்திலிருந்து ஓட்டமாவடிக்கு வருவதற்காக மேற்படி இலக்கமுடைய பஸ் வண்டியில் பயணித்த சமயம் இடைநடுவே என்னுடைய பிரயாணப்பை பேரூந்திலிருந்து தவறி விழுந்து விட்டது.

அதை நன்கு அவதானித்த சாரதி பேரூந்தை நிறுத்தி என்னுடைய பையை எடுத்து வரும் வரையில் காத்து நிற்பதாகச்சொன்னார். நான் அந்தப்பையை எடுக்கச்சென்றதும் யானைகள் நடமாட்டமுள்ள காட்டுக்குள் என்னை தன்னந்தனியே விட்டுச்சென்று விட்டார்.

உயிருக்கு உத்தரவாதமில்லாத அந்த நடுக்காட்டில் கொழுத்தும் வெயிலில் சுமார் ஒன்றரை மணித்தியாலங்கள் அச்சத்தோடு காத்திருந்து ஓட்டமாவடி வந்தடையும் துப்பார்க்கிய நிலை ஏற்பட்டது

அதிக பஸ் வண்டிகள் பயணத்தில் ஈடுபடாத இப்பாதையில் அரச பேருந்துகளை நம்பி பயணித்து கஷ்டப்பிரதேச பாடசாலைகளுக்கு கற்பிக்கச் செல்கின்ற ஆசிரியரான எனக்கே இவ்வாறான நிலை என்றால், சாதாரண மக்களின் நிலை என்னவாக இருக்கும்?.

இவ்வாறான மோசமான செயல்களில் ஈடுபடும் ஒரு சில சாரதி, நடத்துனர்களால் ஒட்டுமொத்த நிறுவனத்திற்கும் அவப்பெயர் ஏற்படுவதுடன், அரச பேரூந்துகளை நம்பி பயணிக்கும் அரச ஊழியர்கள், பொது மக்களுக்கும் அசெளகரியங்கள், நம்பிக்கையீனங்களும் ஏற்படுகின்றது எனத்தெரிவித்தார்.

இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் போக்குவரத்து அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லவுள்ளதாக பாதிக்கப்பட்ட ஆசிரியர் தெரிவித்தார்.

இந்தவிடயம் தொடர்பில் இ.போ.சபையின் கிழக்கு மாகாணப் பணிப்பாளர் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதுடன், வாழைச்சேனை பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

தீப்பிடித்து எரிந்த பயணிகள் பஸ்
Posted in இலங்கை செய்திகள்

தீப்பிடித்து எரிந்த பயணிகள் பஸ்

தீப்பிடித்து எரிந்த பயணிகள் பஸ்

குருநாகல் மல்கடுவாவ பிரதேசத்தில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்து விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

மாதம்பேயில் இருந்து கம்பளை நோக்கிச் சென்று கொண்டிருந்த பஸ்ஸிலேயே தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தீயினால் பஸ் சேதமடைந்துள்ளதுடன், பிரதேசவாசிகள் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

அதனையடுத்து, குருநாகல் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து தீயை அணைத்தன

யானை மீது பஸ் மோதி 6 பேர் படுகாயம்
Posted in இலங்கை செய்திகள்

யானை மீது பஸ் மோதி 6 பேர் படுகாயம்

யானை மீது பஸ் மோதி 6 பேர் படுகாயம்

அநுராதபுரம் இப்பலோகம மஹாலுப்பள்ளம் பகுதியில் இன்று (24) காலை யானை மீது பயணிகள் பஸ் மோதியதில் 06 பயணிகள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இப்பலோகம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கெக்கிராவயிலிருந்து அனுராதபுரம் நோக்கி தலாவ வீதியில் பயணித்த தனியார் பேருந்து ஒன்று காட்டு யானையுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

வீடியோ

பஸ் கட்டணத்தை குறைக்க முடியாது
Posted in இலங்கை செய்திகள்

பஸ் கட்டணத்தை குறைக்க முடியாது

பஸ் கட்டணத்தை குறைக்க முடியாது

டீசல் விலை குறைக்கப்பட்டாலும் பஸ் கட்டணத்தை குறைக்க முடியாது என தனியார் பஸ் சங்கங்கள் தெரிவிக்கின்றன.

பஸ் கட்டணங்கள் தொடர்பான தேசிய கொள்கையின் பிரகாரம் பஸ் கட்டணத்தை அதிகரிப்பதற்கு டீசல் விலை 4 வீதத்திற்கு மேல் குறைக்கப்பட

வேண்டும் எனவும், இதற்கு முன்னர் இரண்டு தடவைகள் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்ட போதும் பஸ் கட்டணம் அதிகரிக்கப்படவில்லை எனவும் பஸ்

சங்கங்கள் தெரிவித்துள்ளன. இம்முறை பஸ் கட்டணத்தில் மாற்றம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பஸ் வண்டி தீவைத்து எரிப்பு
Posted in இலங்கை செய்திகள்

பஸ் வண்டி தீவைத்து எரிப்பு

பஸ் வண்டி தீவைத்து எரிப்பு

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆரையம்பதி பிரதேசத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனியார் பஸ் வண்டி இனம்

தெரியாத நபர்களினால் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ஏ ம் எஸ் ஏ. ரஹீம் தெரிவித்தார்

காத்தான்குடி ஆரையம்பதியில் கல்முனை மட்டக்களப்பு வீதியில் ஆரையம்பதி பிரதான வீதியில் குறித்த பஸ் வண்டி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

மட்டக்களப்பு -பொத்துவில் வீதியில் சேவையில் ஈடுபடுத்தப்படும் பஸ் வண்டி புதன்கிழமை (08) மாலை 7 மணியளவில் நிறுத்தி வைத்துவிட்டு, உரிமையாளர் தனது சொந்த இடமான கொக்கட்டிச்சோலைக்குச் சென்று விட்டார்.

வியாழக்கிழமை (09) அதிகாலை 3:30 மணியளவில் குறித்த பஸ் வண்டி தீப்பற்றி எரிவதாக கிடைத்த தகவலை அடுத்து பொலிஸாருக்கு வழங்கிய

பஸ் வண்டி தீவைத்து எரிப்பு

தகவலையடுத்து காத்தான்குடி பொலிஸார் ஸ்தலத்திற்கு விஜயம் செய்து பார்வையிட்டபோது பஸ் வண்டி முற்றாக எரிந்து சாம்பலாகி உள்ளது.

மட்டக்களப்பு மாநகர சபையின் தீயணைப்பு பிரிவு படையினர் குறித்த தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த போதிலும் பஸ் வண்டி முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பஸ் வண்டி ஒரு கோடி ரூபாய் பெறுமதியானது என காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது இது தொடர்பாக சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படாத நிலையில் காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

வீடியோ

பஸ் புரண்டதில் பயணி பலி 18 பேர் காயம்
Posted in இலங்கை செய்திகள்

பஸ் புரண்டதில் பயணி பலி 18 பேர் காயம்

பஸ் புரண்டதில் பயணி பலி 18 பேர் காயம்

நாரம்மல தம்பலஸ்ஸ பகுதியில் பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகிய சம்பவமொன்று வியாழக்கிழமை (19) பதிவாகியுள்ளது.

விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 18 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பஸ் புரண்டதில் பயணி பலி 18 பேர் காயம்

அலவ்வயில் இருந்து நாரம்மலை நோக்கி பயணித்த பேருந்து ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியதாகவும் காயமடைந்த 7 பேர் குருநாகல் வைத்தியசாலையிலும் , 11 பேர் நாரம்மல வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்தில் உயிரிழந்ததவர் நாரம்மல பிரதேசத்தை சேர்ந்த கிவுலேகேதர சுவர்ணலதா முனதுங்க (51 வயதுடைய )என தெரியவந்துள்ளது.

வீதியில் சென்றவர்கள் கைகளில் தடி விபத்தில் சிக்கிய பஸ்
Posted in இலங்கை செய்திகள்

வீதியில் சென்றவர்கள் கைகளில் தடி விபத்தில் சிக்கிய பஸ்

வீதியில் சென்றவர்கள் கைகளில் தடி விபத்தில் சிக்கிய பஸ்

மொலகொட பிரதேசத்தில் தனியார் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.

மாவனல்லையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்று இன்று (26) காலை விபத்துக்குள்ளானதுடன், மொலகொட பிரதேசத்தில் பஸ் விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்தின் போது பேருந்தில் பயணிகள் இருந்ததாகவும், எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு தனியார் பேருந்துகளுக்கிடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

வீதியில் சென்றவர்கள் கைகளில் தடி விபத்தில் சிக்கிய பஸ்

கண்டியில் இருந்து பாணந்துறை நோக்கி அதிகாலை 05.35 மணியளவில் புறப்பட்ட தனியார் பேருந்து மாவனெல்ல பிரதேசத்தில் விபத்துக்குள்ளான பேருந்துடன் வேகமாக முன்னோக்கி செல்ல முற்பட்ட வேளையில் தகராறு ஏற்பட்டுள்ளது.

அதன்படி, பாணந்துறை பேரூந்து முன்னோக்கிச் சென்றதுடன், சிறிது தூரம் சென்ற பின், வீதியில் சென்றவர்கள் கைகளில் தடிகளுடன் பஸ் சாரதி மற்றும் நடத்துனரை தாக்க முற்பட்டுள்ளனர்.

எவ்வாறாயினும், விபத்துக்குள்ளான பேருந்தில் இருந்த எவரும் பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்காததால், விபத்து தொடர்பில் மற்றைய பஸ் மீது சட்ட நடவடிக்கை எடுக்க முடியாது என பொலிஸார் தெரிவித்தன

50 மின்சார பஸ்களை இறக்குமதி செய்ய அனுமதி
Posted in இலங்கை செய்திகள்

50 மின்சார பஸ்களை இறக்குமதி செய்ய அனுமதி

50 மின்சார பஸ்களை இறக்குமதி செய்ய அனுமதி

50 மின்சார பஸ்களை இறக்குமதி செய்வதற்கு போக்குவரத்து அமைச்சு அனுமதி வழங்கியுள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் அமைப்பின் உதவியுடன் இந்த பஸ்கள் இறக்குமதி செய்யப்படவுள்ளதாக அதன் தலைவர் கெமுனு விஜேரத்ன குறிப்பிட்டுள்ளார்.

மின்சார பஸ்கள் இறக்குமதி செய்யப்படும் வரை 50 சொகுசு பஸ்கள் இறக்குமதி செய்யப்படும் என கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்

சேவையில் இருந்து அகற்றப்பட்ட 800 பஸ்கள் மீண்டும் சேவையில்
Posted in இலங்கை செய்திகள்

இலவச பஸ் பருவகால சீட்டுகள் வழங்கப்படும்

இலவச பஸ் பருவகால சீட்டுகள் வழங்கப்படும்

ஏழை மாணவர்களுக்கு எதுவித கட்டணமும் இன்றி பஸ் பருவகால சீட்டுக்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து மற்றும் ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

நேற்றைய பாராளுமன்ற அமர்வின் போது பாராளுமன்ற உறுப்பினர் கிங்ஸ் நெல்சன் எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதில் அளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

‘சிசு செரிய’ பாடசாலை பஸ் சேவையை முன்னெடுத்துச் செல்வதற்கு வருடாந்தம் இரண்டு பில்லியன் ரூபாவை அரசாங்கம் செலவிடுகிறது.

இலவச பஸ் பருவகால சீட்டுகள் வழங்கப்படும்

எனினும் நாட்டில் நிலவும் நிதி நெருக்கடி காரணமாக அதனை முழுமையாக வழங்குவதற்கு திறைசேரியில் பணம் கிடையாது.

அதனால் சிசு செரிய பஸ் சேவையை முன்னெடுத்துச் செல்வதில் இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பஸ் துறையினருக்கும் பிரச்சினையாக உள்ளது.

அதனால் அமைச்சரவை அனுமதியுடன் அது தொடர்பில் ஆராய குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. அதன் மூலமாக ஏழை மாணவர்களுக்கு எந்த கட்டணமும் அறவிடாமல் இலவசமாக பருவ கால சீட்டை பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

அவ்வாறு கொஞ்சம் பணத்தையாவது செலுத்த முடியுமானவர்களிடம் மூன்றில் ஒரு பகுதி கட்டணத்தை அறவிட்டு மேலும் இரண்டு பகுதியை நிவாரணமாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்

சீனாவினால் இலங்கைக்கு மருத்துவ ஆய்வுகூட பேரூந்துகள் கையளிப்பு
Posted in இலங்கை செய்திகள்

அரை சொகுசு பேருந்து தடை: பயணிகளுக்கு கிடைத்த வெற்றி

அரை சொகுசு பேருந்து தடை: பயணிகளுக்கு கிடைத்த வெற்றி

பயணிகளின் கடும் கண்டனத்துக்கு உள்ளான மாகாணங்களுக்கு இடையிலான பஸ் சேவையாக இயங்கி வந்த அரை சொகுசு பஸ் சேவையை அடுத்த மாதம் முதல் இரத்து செய்ய தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை பஸ் பயணிகள் சங்கம் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றது. .

2018 ஆம் ஆண்டு முதல் பயணிகளின் கோரிக்கைகளை கருத்திற் கொண்டு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அரை சொகுசு பஸ் சேவையை இரத்து செய்ய பல தடவைகள் முயற்சித்த போதிலும், போக்குவரத்து மாபியாக்களின் செல்வாக்கு காரணமாக அந்த தீர்மானங்களை இரத்து செய்ய வேண்டியிருந்தது.

ஆனால் இம்முறை போக்குவரத்து மாஃபியாவின் செல்வாக்கிற்கு அடிபணியாமல் எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவுக்காக போக்குவரத்து அமைச்சுக்கும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிற்கும் எமது நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம் என்றும் அகில இலங்கை பஸ் பயணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

Posted in இலங்கை செய்திகள்

இரு பஸ்கள் மோதி விபத்து- 23 பேர் காயம்

இரு பஸ்கள் மோதி விபத்து; 23 பேர் காயம்

ஹொரணை – கொழும்பு பிரதான வீதியில் ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் சென்ற தனியார் பஸ்ஸூம், இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பயணிகள் பஸ் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளாகி உள்ளது.

இதில் 23 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கஹதுடுவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

காயமடைந்த ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களில் ஆண்கள் மூவர் அடங்குவதாகவும் பொலிஸார் கூறுகின்றனர்.

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸில் பயணித்த யாருக்கும்
காயம் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் படுகாயமடைந்த இருவர் களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஏனையவர்கள் வேதர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கஹதுடுவ ஆடைத் தொழிற்சாலைக்கு ஊழியர்களை ஏற்றிச் சென்ற தனியார் பஸ்,
ஹொரணையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபை பஸ்ஸின், பின்புறம் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதில் ஆடைத் தொழிற்சாலை பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டதுடன், விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன

    Posted in Uncategorized

    பற்றி எரிந்த பஸ் – 45 பேர் உடல் கருகி மரணம்

    பற்றி எரிந்த பஸ் – 45 பேர் உடல் கருகி மரணம்

    பல்ஜீரியா நாட்டின் North Macedonia பகுதியில் உள்ள வேகசாலையில் பயணித்து கொண்டிருந்த

    உல்லாச பயணிகளின் ஆடம்பர பேரூந்து ஒன்று திடீரென விபத்தில் சிக்கி தீ பற்றி கொண்டது ,

    இதன் பொழுது அதில் பயணித்த 52 பேரில் 45 பேர் உடல்கருகி பலியாகியுள்ளனர்


    இவ்வாறு இறந்தவர்களில் 12 சிறுவர்களும் அடங்கும் என அங்கருந்த்து வரும் செய்திகள்

    தெரிவிக்கின்றன

    ஏழுபேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் உயிருக்கு போராடிய வண்னம் உள்ளனர்


    மேற்படி விபத்து தொடர்பிலான விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உளள்து