ஈரான் மீது தாக்குதல் இரு அதிகாரிகள் படுகொலை
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

ஈரான் மீது தாக்குதல் இரு அதிகாரிகள் படுகொலை


ஈரான் மீது தாக்குதல் இரு அதிகாரிகள் படுகொலை

ஈரான்இராணுவ முகாம் மீது தாக்குதல் ,இரண்டு அதிகாரிகள் படுகொலை
இஸ்ரேல் ஆதரவு குழு வெறியாட்டம் ,

full vieo

https://www.youtube.com/watch?v=lXrG0cS4AKI
கமாஸ் தலைவர்களை படுகொலை செய்வோம் இஸ்ரேல்
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

கமாஸ் தலைவர்களை படுகொலை செய்வோம் இஸ்ரேல்


கமாஸ் தலைவர்களை படுகொலை செய்வோம் இஸ்ரேல்

கமாஸ் தலைவர் தளபதிகளை படுகொலை செய்வோம் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு முழங்கினார் ,


அவர்களை தொட்டுப்பார் இஸ்ரேல் காணாமல் போகும் என ஹிஸ்புல்லா பதிலடியாக அறிவித்துள்ளது ,
இதனால் போர் பதட்டம் ஏற்பட்டுள்ளது .

full video

இஸ்ரேல் இராணுவம் வெறியாட்டம் ஒருவர் படுகொலை பலர் காயம்
Posted in உலக செய்திகள்

இஸ்ரேல் இராணுவம் வெறியாட்டம் ஒருவர் படுகொலை பலர் காயம்

இஸ்ரேல் இராணுவம் வெறியாட்டம் ஒருவர் படுகொலை பலர் காயம்

ஆக்கிரமிக்க பட்ட பாலஸ்தீனம் மேற்கு கரை பகுதியில் உள்ள ,
துல்கரேம் அகதிகள் முகாம் மீது ,இஸ்ரேலிய படைகள் தாக்குதல் நடத்தினர்

இந்த தாக்குதலில் 23 வயதான மஹ்மூத் ஜராத் மார்பில் சுடப்பட்ட நிலையில் பலியானார்
மேலும் எட்டு பேர் காயமடைந்தனர் .

இஸ்ரேல் இராணுவம் வெறியாட்டம் ஒருவர் படுகொலை பலர் காயம்

காயமடைந்தவர்கள் ஒருவர் மிக ஆபத்தான நிலையில் உள்ளதாக,
வைத்திய சாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன .

. இஸ்ரேலிய இராணுவம் மக்கள் மீது மற்றும் கண்ணீர் புகை குண்டுகளை வீசி,
தாக்குதலை நடத்தினர் .

முகாமில் வசிப்பவர்களின் கூரைகளில் துப்பாக்கி சூடு நடத்த பட்டதில் ,
மக்களுக்கு பெரும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன .

அப்பாவி மக்கள் மீது இஸ்ரல் இராணுவம் தாக்குதல் நடத்தி வருகின்ற பொழுதும் இதுவரை ,
ஐநா சபை எவ்வித நடவடிக்கையும் ,மேற்கொள்ளவில்லை என்பது குறிப்பிட தக்கது .

Posted in இலங்கை செய்திகள்

தமிழர் பகுதியில் மதுபோதையில் நண்பரை மண்வெட்டியால் தாக்கி படுகொலை

தமிழர் பகுதியில் மதுபோதையில் நண்பரை மண்வெட்டியால் தாக்கி படுகொலை

வவுனியா, கல்மடு, ஈஸ்வரபுரம் பகுதியில் தனது நண்பரை மண்வெட்டியால் தாக்கி படுகொலை செய்த சம்பவம் தொடர்பில் ஒருவர் இன்று (10) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா, ஈச்சங்குளம் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நண்பர்கள் இருவர் நேற்றைய தினம் (09.07) மதுபானம் அருந்திய போது ஏற்பட்ட வாய்த்தர்க்கம் காரணமாகவே இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வவுனியா கல்மடு ஈஸ்வரிபுரத்தைச் சேர்ந்த வேலுசாமி நிஷாந்தன் என்ற 32 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். போதையின் உச்சத்தில் பழைய தகராறு தொடர்பில் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக சந்தேக நபர் மண்வெட்டியால் உயிரிழந்த நபரை தாக்கியதாகவும், பலத்த காயமடைந்த நபர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

தமிழர் பகுதியில் மதுபோதையில் நண்பரை மண்வெட்டியால் தாக்கி படுகொலை

தாக்குதல் நடந்த இடத்தை சோதனை செய்ததில், மதுப் போத்தல்கள், தாக்குதலுக்கு பயன்படுத்திய மண்வெட்டி மற்றும் இறந்தவரின் சில பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.

கொலையின் பின்னர் சந்தேகநபர் அப்பகுதியிலிருந்து தலைமறைவானவர் அதிகாலை ஈச்சங்குளம் பொலிஸில் சரணடைந்துள்ளார்.

பிரிட்டனை அதிரவைத்த படுகொலை
Posted in உலக செய்திகள்

பிரிட்டனை அதிரவைத்த படுகொலை

பிரிட்டனை அதிரவைத்த படுகொலை

பிரிட்டன் மத்திய நகரமான நாட்டிங்ஹாமில் மூன்று பேர் இறந்த நிலையில் சடலங்களாக மீட்க பட்டனர் .

மேலும் மூன்று பேர் மீது வான் ஒன்றால் அடித்து படுகொலை செய்ய முற்பட்ட வேளை ,அந்த நபர் மடக்கி பிடிக்க பட்டுளளார் .

தப்பி ஓட முயன்றதைத் தொடர்ந்து கொலையாளி என்ற சந்தேகத்தின் பேரில் ,ஒருவர் கைது செய்யப்பட்டதாக பிரித்தானியப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்

நகரின் மையத்தில் அதிகாலை 4 மணிக்குப் பிறகு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது ,இது திட்டஇடப்பட்ட
படுகொலை எனபடுகிறது ,தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

களுத்துறை சிறுமி படுகொலை: விசாரணையில் திடீர் திருப்பம்
Posted in இலங்கை செய்திகள்

களுத்துறை சிறுமி படுகொலை: விசாரணையில் திடீர் திருப்பம்

களுத்துறை சிறுமி படுகொலை: விசாரணையில் திடீர் திருப்பம்

களுத்துறை நகரிலுள்ள ஐந்து மாடிகளைக் கொண்ட ஹோட்டலில், மூன்றாவது மாடியில் இருந்து நிர்வாணமாக கீழே தள்ளி 16 வயதான சிறுமி படுகொலைச் செய்யப்பட்ட சம்பவம் ​தொடர்பிலான விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பிரதான சந்தேகநபர் உள்ளிட்ட சந்தேநகபர்கள் நால்வரிடமும் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள், களுத்துறை சிறைச்சாலைக்குச் சென்று விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளனர் என அறியமுடிகின்றது.

களுத்துறை சிறுமி படுகொலை: விசாரணையில் திடீர் திருப்பம்

இதற்கான விசேட அனுமதியை, களுத்துறை நீதவான் ஹேமாலி ஹால்பந்தெனிய வழங்கியுள்ளார் என்று குற்றப்புலனாய்வு திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.

சந்தேகநபர்கள் நால்வரிடம் மட்டுமன்றி தற்போது பிணையில் விடுக்கப்பட்டுள்ளன ஹோட்டலின் வரவேற்பாளராக கடமையாற்றும் பெண்ணிடமும் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இராணுவம் வெறியாட்டம் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் படுகொலை
Posted in உலக செய்திகள்

இராணுவம் வெறியாட்டம் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் படுகொலை

இராணுவம் வெறியாட்டம் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் படுகொலை

மியன்மாரில் ஆளும் மியன்மார் இராணுவ ஆட்சியாளர்களினால் மக்கள் குடியிருப்பு பகுதியை இலக்கு வைத்து வான்வழி குண்டு தாக்குதல் நடத்த பட்டுள்ளது .

இந்த குண்டு தாக்குதலில் நூற்றுக்கு மேற்பட்ட மக்கள் பலியாகியுள்ளனர் .
மேலும் பல டசின் மக்கள் கை ,கால்கள் ,இழந்த நிலையில் காயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டுள்ள காட்சிகள் வெளியாகி பார்ப்பவர்களை கதற வைத்துள்ளது .

மக்களின் அழு குரல்கள் எங்கும் ஒலித்த வண்ணம் காண படுகிறது ,
மியன்மார் இராணுவ ஆட்சியாளர்களுக்கு ,
உலக நாடுகள் பல கடும் கண்டத்தை தெரிவித்துள்ளன .

உயிரிழப்பு மேலும் அதிகரிக்க படலாம் என அஞ்ச படுகிறது .

Error: View 1833908z1f may not exist
ரஷ்ய இராணுவ ஊடக நபர் படுகொலை
Posted in உலக செய்திகள்

ரஷ்ய இராணுவ ஊடக நபர் படுகொலை

ரஷ்ய இராணுவ ஊடக நபர் படுகொலை

ரஷ்யா நாட்டின் வாடகை இராணுவத்தின் மிக முக்கிய ஊடக நபர் ஒருவர் ,
மத்திய செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் உள்ள ஓட்டலில் குண்டு வெடிப்பு
மூலம் படு கொலை செய்யப்பட்டுள்ளார் .

ரஷ்ய ராணுவ செய்தியாளர் விளாட்லன் டாடர்ஸ்கி கொல்லப் பட்டார்
என உக்ரைன் அறிவித்துள்ளது .

வாடகை இராணுவத்தினருக்கு உரிய கொட்டல் ஒன்றில் வைத்தே,
இவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என்கிறது உக்ரைன் தரப்பினர் .
இது ரஷ்ய மற்றும் ரஷ்ய வடக்கை இராணுவத்தினருக்குள் மோதல்
உள்ளதான தோற்ற பாட்டை காண்பிக்கிறது .

சமீப காலங்களாக புதின் மற்றும் ரஷ்ய முக்கிய நபர்கள் ,
இவ்விதமான குண்டு வெடிப்பின் மூலம்,
கொலை செய்ய பட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது .

இரும்பு கம்பியால் வாலிபர் அடித்து கொலை
Posted in இலங்கை செய்திகள்

கொஸ்கம கம்பஹாவில் இரண்டு பேர் படுகொலை

கொஸ்கம கம்பஹாவில் இரண்டு பேர் படுகொலை

கொஸ்கம மற்றும் கம்பஹாவில் இரண்டு கொலைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கம்பஹா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாகெவிட்ட பகுதியில் அமைந்துள்ள வீடொன்றிற்குள் நபரொருவர் பெண் ஒருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளார்.

இதில் பலத்த காயமடைந்த பெண் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

மாகெவிட்ட பிரதேசத்தில் வசிக்கும் 57 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நீண்ட நாட்களாக நிலவி வந்த காணித் தகராறு காரணமாக சந்தேக நபர் கொலை செய்யப்பட்ட பெண்ணின் வீட்டுக்குச் சென்று தகராறு செய்துள்ளார்.

இதன்போது கூரிய ஆயுதத்தால் பெண் தாக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொஸ்கம கம்பஹாவில் இரண்டு பேர் படுகொலை

கொலைச் சம்பவம் தொடர்பில் 45 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, கொஸ்கம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முனமலேவத்த பகுதியில் தகராறு நீண்டதில் நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவர் களுஹக்கல பிரதேசத்தை சேர்ந்த 35 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

கொலையை செய்த சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவரை கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No posts found.
எகிப்துக்கு பறந்தார் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா
Posted in இலங்கை செய்திகள்

ஜனாதிபதியை படுகொலை செய்ய சூழ்ச்சி பொலிஸ் விளக்கம்| இலங்கை செய்திகள்

ஜனாதிபதியை படுகொலை செய்ய சூழ்ச்சி பொலிஸ் விளக்கம்| இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள் |ஜனாதிபதியை படுகொலை செய்ய சூழ்ச்சி: குற்றப்புலனாய்வு பிரிவு விசாரணைகளை ஆரம்பித்தது எனும் தலைப்பில், தனியார் ஊடகமொன்றின் இணையத்தளத்தில் வெளியான செய்தி தொடர்பில் ​பொலிஸ் தலைமையகம் விளக்கமளித்துள்ளது.

அந்த இணையளத்தள செய்தியில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை படுகொலைச் செய்வதற்கான சூழ்ச்சி தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது,

இந்த நாட்டின் அரசியல் கட்சியுடன் தொடர்புடையவர்கள் வெளிநாடொன்றில் இன்றைக்கு சில நாட்களுக்கு முன்னர் ஜனாதிபதியை படுகொலைச் செய்வதற்கான சூழ்ச்சிகள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளனர் என்றும் இணையத்தள செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது என பொலிஸ் தலைமையக செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியை படுகொலை செய்ய சூழ்ச்சி பொலிஸ் விளக்கம்| இலங்கை செய்திகள்

அத்துடன், இரண்டு வாரங்களுக்குள் ஜனாதிபதியை படுகொலைச் செய்வதற்காக அந்த குழு சூழ்ச்சிகளை செய்துள்ளது என்பது தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு தகவல் கிடைத்துள்ளது என்றும் ஊடகச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊடகச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதைப் ​போல, படுகொலைச் செய்வதற்கான சூழ்ச்சி தொடர்பில் எந்தவொரு தகவலும் குற்றப்புலனாய்வு பிரிவுக்கு கிடைக்கவில்லை. அதேபோல, செய்தியில் கூறப்பட்டுள்ளதைப் போல விசாரணைகளும் குற்றப்புலனாய்வு பிரிவினரால் ஆரம்பிக்கப்படவில்லை.

ஆகையால் அந்த இணையளத்தள செய்தியானது முழுமையாக பொய்யாக சித்திரிக்கப்பட்ட செய்தியாகும்
என்று பொலிஸ் தலைமையக ஊடகப் பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No posts found.
வவுனியா காட்டுக்குள் ஆண் சடலம் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

ஒரே நாளில் மூவர் படுகொலை

ஒரே நாளில் மூவர் படுகொலை

நாட்டில் நேற்றைய தினம் மூன்று கொலைகள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சி, மூதூர் மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பொலிஸ் பிரிவுகளில் இந்த கொலைகள் பதிவாகியுள்ளன.

மூதூர் புளியடிச்சோலை கங்குவேலியில் இருவருக்கு இடையில் ஏற்பட்ட தனிப்பட்ட தகராறு நீண்டதில் அதில் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த தாக்குதலில் காயமடைந்த 47 வயதுடைய நபர் கிளிவெட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உருத்திரபுரம் பகுதியில் உள்ள வீடொன்றிற்குள் நுழைந்த சிலர், வீட்டில் இருந்த மூவரை கூரிய ஆயுதங்களால் தாக்கியுள்ளனர்.

தாக்குதலுக்கு உள்ளாகி படுகாயமடைந்தவர்கள் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உருத்திரபுரம் பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஒரே நாளில் மூவர் படுகொலை

இதேவேளை யாழ்ப்பாணம் அத்தியடி பிரதேசத்தில் வசிக்கும் 52 வயதுடைய பெண்ணொருவர் பொல்லு ஒன்றினால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண்ணின் வீட்டில் பணிபுரிந்த நபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் வந்து இக்கொலையை செய்துவிட்டு வீட்டின் கேட்டை பூட்டிவிட்டு அப்பகுதியில் இருந்து தப்பிச் சென்றுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No posts found.
இரும்பு கம்பியால் வாலிபர் அடித்து கொலை
Posted in இலங்கை செய்திகள்

தொழிலதிபர் படுகொலைக்கு காரணமான ஓரின சேர்க்கை

தொழிலதிபர் படுகொலைக்கு காரணமான ஓரின சேர்க்கை

தலங்கம பெலவத்தை பகுதியில் உள்ள மூன்று மாடி வீடொன்றின் நீச்சல் தடாகத்தில் காணப்பட்ட ஆடை விற்பனை கூடத்தின் உரிமையாளரான கோடீஸ்வர வர்த்தகர், பலத்த அடிகளால் தலை மழுங்கடிக்கப்பட்டதால் உயிரிழந்துள்ளார் என பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பு சட்ட வைத்தியத்துறை பேராசிரியர் அசேல மெண்டிஸ் பிரேத பரிசோதனையை நேற்று (06) மேற்கொண்டார்.

சடலத்தை அவரது உறவினர்கள் அடையாளம் காணாததால், சம்பவம் மற்றும் உயிரிழந்த வர்த்தகர் மற்றும் அவரது தாயாரின் டி.என்.ஏ தொடர்பான பரிசோதனைகளை முன்னெடுக்க அனுமதியளிக்குமாறு கடுவெல நீதவான் நீதிமன்றுக்கு பொலிஸார், நேற்று (06) கேட்டுக்கொண்டனர்.

பரிசோதனைகளை மேற்கொள்ள அனுமதி கிடைத்துள்ளதுடன், டி.என்.ஏ. பரிசோதனை அறிக்கை கிடைக்கும் வரை பிரேதப் பரிசோதனை நடத்த அனுமதி வழங்கப்பட்டதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தொழிலதிபர் படுகொலைக்கு காரணமான ஓரின சேர்க்கை

இதேவேளை, கோடீஸ்வரர் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை 24 மணிநேரம் தடுத்து வைத்து விசாரிக்க நீதிமன்றம் நேற்று (06) அனுமதி வழங்கியது.

வெல்லம்பிட்டிய, கிட்டம்பஹு பகுதியைச் சேர்ந்த ரொஷான் வன்னிநாயக்க (வயது 49) என்பவரே இவ்வாறு அடித்துக் கொல்லப்பட்டுள்ளதாகவும், அவர் கொட்டிகாவத்தை, ராஜகிரிய, பெலவத்தை முதலான பல இடங்களில் உள்ள ஆடை விற்பனை நிலையங்களின் உரிமையாளர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபரும் வர்த்தகரும் ஓரினச்சேர்க்கையாளர்களின் நண்பர்கள் சங்கம் ஒன்றின் அங்கத்தவர்கள் எனவும், இந்த நண்பர் சங்கத்தின் ஊடாக பணத்திற்காக பல்வேறு நபர்களுடன் நெருங்கிய தொடர்புகளை சந்தேக நபர் பேணி வருவதாகவும் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சந்தேக நபர் ​தொழில் இல்லாதவர் என்றும், இந்த குழுவின் மூலம் பல்வேறு நபர்களுடன் சென்று பணம் சம்பாதிப்பதாகவும், திருமணத்திற்கு பிறகு அந்த பழக்கத்தை விட்டுவிட்டதாகவும் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

திருமணமாகி வேலை இல்லாத காரணத்தால் குடும்பத்தில் பல பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. எனினும், மீண்டும் பழையபடி பணம் சம்பாதிப்பதற்காக மேற்படி தொழிலதிபருடன் சந்தேகநபர் நண்பர்கள் சங்கம் தொடர்பினை ஏற்படுத்தியுள்ளார் என விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது என்றும் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இருவருக்கும் இடையிலான முதலாவது சந்திப்பு கடந்த 30ஆம் திகதி இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

உறவுகொள்வதற்கு அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றிற்குச் வருமாறு சந்தேகநபர் பரிந்துரைத்த போதிலும், வர்த்தகர் அதனை விரும்பாததால் தனது பெலவத்தையை வீட்டிற்கு அழைத்து வந்ததாகவும் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இருவருக்குமிடையில் நெருங்கிய தொடர்பு ஏற்பட்டதன் பின்னர், ஓரினச் சேர்க்கையில் இவ்விருவரும் ஈடுபட்டுள்ளனர். அதற்காக ஒரு இலட்சம் ரூபாவை சந்தேகநபர் தொழிலதிபரிடம் கோரியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொழிலதிபர் பணத்தை தர மறுத்ததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அதன் பின்னர், தொழிலதிபரை கீழே தள்ளிவிட்ட சந்தேக நபர், தொழிலதிபர் தரையில் விழுந்ததையடுத்து அவரது தலையில் தடியால் தாக்கியதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தாக்குதலால் தொழிலதிபரின் கழுத்து உடைந்துள்ளதாகவும், அவர் இறந்துவிட்டதாக பயந்து சடலத்தை நீச்சல் குளத்தில் தள்ளிவிட்டு ஓடியதாகவும் சந்தேக நபர் வாக்குமூலமளித்துள்ளார். தெரிவித்ததாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

திருமணமாகாத இந்த கோடீஸ்வர வர்த்தகர், பெலவத்தை பிரதேசத்தில் மூன்று மாடி வீடு ஒன்றை வாங்கி, புனரமைப்புப் பணிகளை மேற்கொண்டு வந்த நிலையில், மர்மமான முறையில் உயிரிழந்தார். அவரது சடலம், பொலிஸாரால் பின்னர் கண்டறியப்பட்டு மீட்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், கந்தானை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கிடைத்த தகவல்களின் பிரகாரம் இளைஞனும்,
யுவதியொருவரும் கைது செய்யப்பட்டனர். இவ்விருவரும் திருமணமான ஜோடி என்பது கண்டறியப்பட்டது.

No posts found.
சித்திரவதை செய்து 1057 பேர் படுகொலை
Posted in உலக செய்திகள்

சித்திரவதை செய்து 1057 பேர் படுகொலை

சித்திரவதை செய்து 1057 பேர் படுகொலை

சிரியாவில் 1057 அப்பாவி மக்கள் மிக கொடுரமாக,
சித்திரவத்தை செய்யப்பட்டு படு கொலை செய்ய பட்டுள்ளனர் .

இவ்வாறு கொலை செய்யப் பட்டவர்களில்,
251 சிறுவர்கள் மற்றும் 94 பெண்கள் உள்ளடங்களும் என ,
மன்னிப்பு சபை தெரிவித்துள்ளது .

சித்திரவதை செய்து 1057 பேர் படுகொலை

சிரியாவில் பத்து ஆண்டுகள் கடந்து தொடரும்,
உள்நாட்டு போரில் சிக்கியே ,
இந்த அப்பாவி மக்கள் கொலை செய்ய பட்டுள்ளனர் .

அமெரிக்கா இராணுவத்தின் தலைமையில் களமிறங்கிய கூட்டு படைகள் ,
சிரியாவை ஆக்கிரமிக்கும் நோக்குடன் தாக்குதல்களை நடத்திய வண்ணம் உள்ளன .

சிரியா இராணுவத்தினருக்கு ஆதரவாக ரசியா களத்தில் உள்ளது .

இவ்வாறான சூழ் நிலையில் இந்த மக்கள்,
சிரியா அரசுக்கு எதிராகவும் ,அமெரிக்கா சார்பு கிளர்ச்சை படைகள் ,
மற்றும் துருக்கிய ஆதரவு படைகளு சார்பாக ,
செயல் பட்டார்கள் என்கின்ற குற்ற சாட்டில் கொலை செய்ய பட்டுள்ளனர் .

இங்கு அதிகம் சகோதர படுகொலைகள் இடம்பெற்று வருகின்றன .

தீவிரவாதிகள் வெறியாட்டம் 131 பேர் படுகொலை
Posted in உலக செய்திகள்

தீவிரவாதிகள் வெறியாட்டம் 131 பேர் படுகொலை

தீவிரவாதிகள் வெறியாட்டம் 131 பேர் படுகொலை

கொங்கோ North Kivu மாகாணத்தில் உள்ள Kishishe கிராமத்தில் 131 அப்பாவி மக்களை தீவிரவாதிகள் படுகொலை செய்துள்ளனர் .

இவ்வாறு படுகொலை செய்யப்பட்ட நபர்களில் சிறுவர் பெண்கள் உள்ளடங்கும் என்கிறது அரசு .

தொடர்ந்து எம் 23 தீவிரவாத குழுவுக்குள் ,அரச இராணுவத்தினருக்கும் இடையில் கடும் மோதல்கள் வெடித்த வண்ணம் உள்ளது குறிப்பிட தக்கது .

இலங்கைக்கு ஆப்பு வைத்த தமிழர்கள் கொதிப்பில் சிங்கள அரசு
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் இனப்படுகொலை நடக்கவிலை இலங்கை அறிவிப்பு

இலங்கையில் இனப்படுகொலை நடக்கவிலை இலங்கை அறிவிப்பு

இலங்கையில் இனப்படுகொலை நடந்தது என்பதை ,இலங்கை ஒருபோதும் ஏற்காது என ,இலங்கை தெரிவித்துள்ளது .

தமிழீழ விடுதலை புலிகளுடன் இடம்பெற்ற போரின் பொழுது ,அங்கு தமிழர்கள் இலங்கை இராணுவத்தால் கொலை செய்யப்பட்டனர் , என்ற குற்றச்சாட்டையும் ,அதற்கான ஆதாரங்களையும் நாம் ஏற்க மாட்டோம் என இலங்கை தெரிவித்துள்ளது .

அப்பவி தமிழ் மக்கள், இலங்கை இராணுவத்தால் கொலை செய்யப்பட்டார்கள் என்பதை ஏற்க முடியாது என ,தற்போதைய இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துளளார் .

இலங்கையில் இனப்படுகொலை நடக்கவிலை இலங்கை அறிவிப்பு


இவர் தமிழ் பேசும் முஸ்லீம் என்பது குறிப்பிட தக்கது .

தமிழரை வெளிவிவகார அமைச்சராக நியமித்து ,தமிழர் கொலைகளை உலகில் மறைக்கும் நரி விளையாட்டை இலங்கை தொடுத்துள்ளது .

ஆனால் ,புலம் பெயர் அமைப்பு மற்றும் ,தனி நபர்களிடம் ,இலங்கை அரசு புரிந்த போர் குற்ற ஆதாரங்கள் ,மற்றும் இலங்கை இராணுவத்தின் படுகொலை ,காட்சிகள் என்பன ஐக்கிய நாடுகள் மனித உரிமை அவைக்கு வழங்க பட்டுள்ளது .

அவ்வாறு இருந்தும் 13 வருடங்கள் கழியும் நிலையிலும் ,இலங்கை ராஜபக்ச
அரசு புரிந்த இனப்படுகொலைக்கு தீர்வு வழங்க படவில்லை என்பது குறிப்பிட தக்கது.

    தலிபான் முக்கிய தளபதி மனித வெடிகுண்டு தாக்குதலில் படுகொலை
    Posted in உலக செய்திகள்

    தலிபான் முக்கிய தளபதி மனித வெடிகுண்டு தாக்குதலில் படுகொலை

    தலிபான் முக்கிய தளபதி மனித வெடிகுண்டு தாக்குதலில் படுகொலை

    ஆப்கனிஸ்தான் தலைநகர் காபூலில் இரண்டாவது பாதுகாப்பு நிறைந்த நகரமாக வர்ணிக்க படும் பகுதியில் வைத்து தலிபான்களின் முக்கிய தளபதி Rahimullah Haqqani அவர்கள் மனித வெடிகுண்டு தாக்குதலில் படுகொலை செய்ய பட்டுளளார் .

    இவரது மதவாத பள்ளிக்குள் உடலில் வெடிகுண்டு நிரப்பிய படி சென்ற நபர் நடத்திய மனித வெடிக்கு தாக்குதலின் போதே இந்த தளபதி பலியாகியுளளார்.

    இவருடன் மேலும் பத்து பேர் இந்த தாக்குதலில் பாடுகொலை செய்ய பட்டுள்ளனர்.

    தலிபான் முக்கிய தளபதி மனித வெடிகுண்டு தாக்குதலில் படுகொலை

    இவர் மீது தாக்குதல் நடத்தியது யார் என்பது இதுவரை எந்த அமைப்பும் உரிமை கோரவில்லை .

    தலிபான்கள் வசம் ஆப்கானிஸ்தான் வீழ்ந்த பின்னர் தலிபான்கள் மேற்கொண்ட தாக்குதல் உத்தியை பயன் படுத்தி அவர்கள் மீது இவ்வாறான தாக்குதல்கள் தொடர்ந்து நடத்த பட்டு வருகிறது .

    இவ்வாறன தாக்குதல் தாலிபான்களுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

      Posted in உலக செய்திகள்

      மியன்மாரில் நான்கு போராட்ட காரர்கள் இராணுவத்தால் தூக்கிலிட்டு படுகொலை

      மியன்மாரில் நான்கு போராட்ட காரர்கள் இராணுவத்தால் தூக்கிலிட்டு படுகொலை

      மியன்மார் நாட்டில் இராணுவ ஆட்சி இடம்பெற்று வருகிறது .இந்த இராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் போரட்டம் நடத்திய நால்வரை அந்த நாட்டு இராணுவம் தூக்கில் மாட்டி படுகொலை செய்துள்ளது .

      இந்த அப்பாவி ஜனநாயக போராட்ட வாதிகள் நால்வர் படுகொலை மியான்மாரில் மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

      இந்த நால்வர் படுகொலையை கண்டித்து ஆளும் இராணுவதத்திற்கு எதிராக போராட்டங்களை வெடித்துள்ளன .

      விரைவில் மியன்மாரும் இலங்கையை போல மக்கள் புரட்சி வெடித்து இராணுவ தலைமைகள் விரட்டியடிக்க படலாம் என எதிர் பார்க்க படுகிறது.

        Posted in உலக செய்திகள்

        உக்கிரேனில் 32 500 ரசியா இராணுவம் படுகொலை

        உக்கிரேனில் ரசியா இராணுவம் படுகொலை

        உக்கிரேன் நாட்டின் மீது ரசியா இராணுவம் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது .
        தமது நாட்டுக்குள் வைத்து 32 500 ரசியா இராணுவம் படுகொலை செய்ய பட்டுள்ளதாக உக்கிரேன் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது

        நூற்றி எட்டாவது நாளாக தொடர்ந்து இடம்பெற்று வரும் தாக்குதல்களில் பெரும் தொகை இராணுவத்தை ரசியா இராணுவம் இழந்துள்ளது ,

        இதே போல ரசியா இராணுவம் தாக்குதல்களில் சிக்கி உக்கிரேன் இராணுவத்தில் நாள் தோறும் ஐம்பதுக்கு மேற்பட்டவர்கள் பலியாகிய வண்ணம் உள்ளனர்

        முடிவில்லா தொடரும் இந்த போரில் இரு தரப்பும் பலத்த இழப்புக்களை சந்தித்த வண்ணம் உள்ளனர் ,ஆனாலும் ரசியா இராணுவம் தாக்குதல்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளது

        நாள் ஒன்றுக்கு ஆறாயிரம் ஆட்டிலறி குண்டுகளை மட்டும் ரசியா இராணுவம் மீது உக்கிரேன் படைகள் ஏவிய வண்ணம் உள்ளது

        அப்படி என்றால் நூற்று எட்டாவது நாளாக தொடரும் தாக்குதல்களில் உக்கிரேன் இராணுவம் இதுவரை ஆறு லட்சம் ஆட்டிலறி குண்டுகளை ரசியா இராணுவம் மீது ஏவி முடித்துள்ளது

        ஆயிர கணக்கில் ஆட்டிலறி குண்டுகள் மடடும் வீசப்படுகிறது எனின் ரசியா இராணுவம் மேற்கொள்ளும் தாக்குதல் உக்கிரம் எவ்வாறு அமைந்துள்ளது என்பதை இதன் மூலம் இரு தரப்பிற்கும் ஏற்பட்டுள்ள இராணுவ படுகொலை சம்பவங்கள் ஊடாக கணக்கிட முடியும்

        உலக முதலாவது வல்லரசாக விளங்கிய ரசியா இராணுவம் உக்கிரேனை இலகுவாக வெல்ல முடியாது திணறி வருகிறது ,

        மேற்குலக நாடுகள் வழங்கி வரும் ஆயுதங்களே ரசியா இராணுவம் பலத்த இழப்புக்களை சந்திக்க காரணமாக அமைந்துள்ளது

        உக்கிரேனில் 32 500 ரசியா இராணுவம் படுகொலை

        கடந்த தினம் ரசியா இராணுவம் மேற்கொண்ட பாரிய முன்னேற்ற நகர்வுகளில் அதிகம் ஏவுகணை தாக்குதல்கள் மேற்கொள்ள பட்டன.

        இந்த தாக்குதலில் உக்கிரேன் தரப்பிலும் பாரிய இராணுவ இழப்புக்கள் ஏற்பட்டிருந்தது

        உக்கிரேனில் 32 500 ரசியா இராணுவம் படுகொலை செய்ய பட்டுள்ளதாக தெரிவிக்கும் உக்கிரேன் தமது தரப்பில் உயிரிழப்பு மூவாயிரம் மட்டும் என்கிறது

        அது தவிர ஆயுதங்கள் இல்லை மேலதிகமாக தாருங்கள் என அமெரிக்கா,பிரிட்டனிடம் பிச்சை கேட்டு வாங்குகிறது

        நாம் முதலே சொன்னோம் அல்லவா உக்கிரேனில் போரை நடத்துவது அமெரிக்கா,பிரிட்டன் என்பது இப்போது புரிந்துள்ளதா நியம அது தான்

        உக்கிரேன் களத்தில் பலத்த தோல்விகளையும் ஆள் ஆயுத இழப்பை சந்தித்துள்ள உக்கிரேன் இராணுவம் அமெரிக்கா பிரிட்டன் ஆயுதங்கள் ஊடாக தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது

        தற்போது ஆயுத வளங்களை மட்டு படுத்தி உக்கிரேனுக்கு சாக் கொடுத்துள்ள அமெரிக்கா பிரிட்டன் விரைவில் உக்கிரேனுக்கு இராணுவம் பெற்றுக்கொள்ளும் ஆயுத உதவியை நிறுத்தி கொள்ளும்

        அப்போது உக்கிரேனை விட்டு அதன் அதிபர் தப்பி ஓடும் நிலைக்கு உக்கிரேன் அதிபர் செல்ல கூடும்

        உக்கிரேனில் ரசியா இராணுவம் படுகொலைக்கு ரசியா சும்மா விடுமா என்ன..?

        உக்கிரேன் அதிபர் அவமானத்துடன் தப்பி ஓடுவதை நிறுத்தி இப்பொழுதே சரண் அடைதல் உசிதமானது என்பதே சமாதான விரும்பிகள் பார்வையாக உள்ளது

        • வன்னி மைந்தன்
          Posted in இலங்கை செய்திகள் குற்ற செய்திகள்

          கத்தியால் குத்தி ஒருவர் படுகொலை

          கத்தியால் குத்தி ஒருவர் படுகொலை

          இலங்கையில் கடந்த தினம் கெந்தலியத்தபாலுவ பிரதேசத்தில் நபர் ஒருவர் கோரமாக கத்தியால் குத்தி படுகொலை செய்ய பட்டுள்ளார் ,

          இவ்வாறு கத்தி குத்துக்கு உள்ளானவர் பலத்த காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்க பட்ட பொழுதும் சிகிச்சை பலனின்றி பலியாகியுள்ளார்

          கத்தியால் குத்திய நபர் படுகொலை செய்ய பட்ட நபராது கைபேசியை திருடிய

          நிலையில் அது தொடர்பாக அவரது இரு மகனுடன் சென்று விசாரிக்க சென்ற பொழுது அவரது வீட்டில் வைத்து கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளார்

          கத்தியால் கோரமாக குத்தி படுகொலையை புரிந்து விட்டு கொலை குற்றவாளி தப்பி

          ஓடியுள்ளார் ,இவ்வாறு தப்பி ஓடிய கொலையாளியை கைது செய்யும் நோக்குடன் விசேட காவல்துறையினர் செயலாற்றி வருகின்றனர்

          இலங்கையில் நாள் தோறும் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்படுபவர்கள் எண்ணிக்கை இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருட்களின் விலைவாசி போல எகிறிய வண்ணம் உள்ளது

          மக்கள் மத்தியில் இவ்விதமான கொடூர குற்றவியல் மனோ நிலையை இவ்வாறான படுகொலை சம்பவங்களுக்கு காரணமாக அமைய பெறுகிறது

          கடந்த சில காலங்களாக நீர் நிலைகளில் படுகொலை செய்யப்பட்டு வீச பட்ட

          நிலையில் மனித சடலங்கள் மீட்க பட்டு வருகின்றன ,அதுபோலவே இவ்வாறான கத்தி குத்து படுகொலைகளும் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

          இலங்கையில் அதிகரித்து செல்லும் இவ்வாறான கத்தி குத்து படுகொலைகளை

          தடுக்க போலீசார் தவறி வருகின்றனர் ,மேலும் இந்த படுகொலை குற்ற செயல்களில் இருந்து தம்மை பாதுகாத்து கொள்ளவும் மக்கள் தவறி வருகின்றனர்

          திருட பட்ட ஒரு கைபேசியை திருடன் என்கின்ற முறையில் வன்முறையோடு திருடியவர் வீடு சென்று விசாரிக்க சென்ற போதே

          வாக்குவாதம் முற்றிய நிலையில் குறித்த திருட்டு பழிக்குற்றத்தில் இருந்து தப்பிக்க திடீர் கத்தி குத்து படுகொலை தாக்குதலை நடத்தியுள்ளார்

          வாய் தர்க்கம் முற்றிய நிலையில் அதனை சமாதான முறையில் அணுகிட தவறியதன் விளைவே அப்பாவி உயிர் ஒன்று படு கோரமாக கத்தியால் குத்தி படுகொலை செய்யப்படும் நிலைக்கு சென்றுள்ளது


          அறிவார்ந்த நிலையில் பிரச்சனைகளை கையாள மறுத்ததன் விளைவே இந்த கத்தி குத்து படுகொலைக்கு காரணமாக அமைந்துள்ளது.

          • வன்னி மைந்தன் –
            Posted in உலக செய்திகள்

            டாங்கிகளுடன் 100 ரசிய படைகள் கொலை

            டாங்கிகளுடன் 100 ரசிய படைகள் படுகொலை

            உக்கிரேன் மீது பாரிய இராணுவ படையெடுப்பை மேற்கொண்டு வரும் எதிரி படைகள் மீது உக்கிரேன் அரச இராணுவம் கடந்த இருபத்தி நான்கு மணித்தியால மேற்கொண்ட தாக்குதல்களில் மட்டும்

            ஐந்து டாங்கிகள் 13 armoured combat vehicles, 8 UAVs, and 23 pieces of automotive equipment

            மற்றும் எரிபொருள் பவுசர்கள் இவற்றுடன் 100 ரசியா இராணுவத்தினரும் படு கொலை செய்ய பட்டுள்ளதாக உக்கிரேன் பாதுகாப்பு அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது

            நூற்றி ஒரு நாட்களை கடந்து பயணிக்கும் இந்த கொடிய போரில் தாம் வெற்றியை தம தாக்கி வருவதாக உக்கிரேன் அரச இராணுவத்தினர் மகிழ்ச்சியை தெரிவித்துள்ளனர்

            முன்னேறி வரும் ரசியா டாங்கிகள் பலமாக அழிக்க பட்டு வருகிறது ,அந்த போர் ஆயுத

            வண்டிகளில் பயணிக்கும் இளம் வயதுடைய ரசியா எதிரி படைகளும் பலியாகி சிதறி கிடக்கும் காட்சிகள் வெளியிட பட்டு வருகின்றன

            துருக்கிய இராணுவத்தின் உளவு விமானங்களின் துல்லியமான களமுனை காட்சிகள் ஊடாகவே உக்கிரேனிய அரச இராணுவத்தினர் ரசியா டாங்கிகள் மற்றும் அதன் இராணுவம் மீது துல்லியமான தாக்குதல்களை மேற்கொண்ட வண்ணம் உள்ளன

            உக்கிரேன் போர்க் களத்தில் ரசியா எதிரி படைகள் பலமான இழப்புக்களை சந்திக்க துருக்கிய தயாரிப்பான ஆள் இல்லாத உளவு விமானங்களின் பயன்பாடு அதிகமாக உள்ளது

            டாங்கிகளுடன் 100 ரசிய படைகள் படுகொலை

            இதனால் என்னவோ உக்கிரேனுக்கு குறித்த உளவு விமானங்களை வழங்க வேண்டாம் என துருக்கியை ரசியா அரசு வேண்டி நின்றது

            இதுவரை ஆயிரத்துக்கு மேற்பட்ட ரசியா டாங்கிகளை தாம் அழித்துள்ளதாக உக்கிரேன் பாதுகாப்பு அமைச்சு புள்ளி விபாரங்களுடன் அதன் வகைகளை குறிப்பிட்டுள்ளது

            இந்த டாங்கிகள் யாவும் அமெரிக்கா மற்றும் பிரிட்டன் டாங்கி எதிர்ப்பு ஆயுதங்கள் மூலம் அழிக்க பட்டுள்ளமையும் ,அதன் திறம்பட்ட தாக்கும் திறன் இந்த படைக்கல இழப்பின் ஊடாக உலகத்திற்கு காண்பிக்க பட்டுள்ளது

            உக்கிரேன் கள முனையில் ரசியாவின் டாங்கி படையின் முன்நகர்வு அளப்பரிய ஒன்றாக அமைந்துள்ளது குறிப்பிட தக்கது

            • வன்னி மைந்தன் –