Tag: நிதி
திருடிய நிதி பாட்டியிடம் இருந்தால் அவரும் விசாரிக்கப்படுவார்
திருடிய நிதி பாட்டியிடம் இருந்தால் அவரும் விசாரிக்கப்படுவார்
திருடிய நிதி பாட்டியிடம் இருந்தால் அவரும் விசாரிக்கப்படுவார் ,பொது மோசடி வழக்கில் தொடர்புடையதாகக் கூறப்படும் வயதான பெண்மணி தொடர்பான விசாரணைகள் குறித்த விமர்சனங்களுக்கு பதிலளித்த
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, பொது நிதி ஆபத்தில் இருந்தால், வயது யாரையும் சட்டப் பரிசோதனையிலிருந்து பாதுகாக்காது என்று கூறினார்.
காலியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி, திருடப்பட்ட பொதுப் பணத்தை யார் வைத்திருந்தாலும் அதைக்
கண்டுபிடிப்பதில் அதிகாரிகள் கவனம் செலுத்தி வருவதாகத் தெளிவுபடுத்தினார்.
“அந்த நபர் இளைஞரா அல்லது வயதானவரா என்பது எங்களுக்கு கவலையில்லை. ஆனால், மோசடி செய்த பேரக்குழந்தைகளால் தான் அவர் இந்த சூழ்நிலையில் உள்ளார்.
திருடப்பட்ட நிதி அவர்களின் பாட்டியிடம் இருந்தால், அவரும் விசாரிக்கப்படுவார். முழு குடும்பமும் இதில் ஈடுபட்டிருந்தால், அவர்கள்
அனைவரும் விளைவுகளை எதிர்கொள்ள வேண்டும்,” என்று அவர் மேலும் கூறினார்.
- ஈரான் மீதான புதிய வியூகம்

- தேனிசை செல்பாவுக்கு அழகான பனைமரம் பாடி கலங்கிய பேரறிவாளன்

- ரசியா டிரம்ப் பேச்சு

- பனை எண்ணெய் இறக்குமதிக்காக இலங்கை140 022 மில்லியன் செலவிடுகிறது

- மாலத்தீவு ஜனாதிபதி மே 4 அன்று இலங்கைக்கு பயணம் மேற்கொள்கிறார்

- நாளை 21 மே தினப் பேரணிகளை நடத்தவுள்ளது NPP

- லஞ்ச ஊழல் வழக்கில் முன்னாள் அமைச்சர் சிக்கினார்

- அமெரிக்க டாலருக்கு எதிராக ரூபாயின் மதிப்பு மேலும் சரிந்தது

- வீர தலைவனின் தேனிசை குரலே |711|செல்லப்பா பாடல் |தேனிசை செல்லப்பா பாடல்

- தேசத்தின் குரலப்பா தேனிசை செல்லப்பா|710|தேனிசை செல்லப்பா ||Thenisai Chellappa

நிதியை பயன்படுத்தும் வேலைத்திட்டம் தயார்
நிதியை பயன்படுத்தும் வேலைத்திட்டம் தயார்
நிதியை பயன்படுத்தும் வேலைத்திட்டம் தயார் ,ஜனாதிபதியினால் அண்மையில் பாராளுமன்றத்துக்கு முன்வைக்கப்பட்ட வரவு-செலவுத் திட்ட உரையில் காணப்பட்ட நிதி ஒதுக்கீடு மற்றும் வரவு-செலவுத் திட்ட
முன்மொழிவுகளில் ஒதுக்கப்பட்ட நிதியை வினைத் திறனாகப் பயன்படுத்துவதற்கு தனது அமைச்சின் கீழ் உள்ள நிறுவங்களின் அதிகாரிகள், முன்னுரிமை ஆவணத்தை அடிப்படியாகக் கொண்டு வேலைத் திட்டங்களை
திட்டமிடல் மற்றும் செயற்படுத்துதல் தொடர்பில் ஏற்கெனவே கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளதாக நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு கௌரவ அமைச்சர் அனுர கருணாதிலக்க தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட நிதியாண்டில் இந்த ஒதுக்கீடுகளை அதிக வினைத்திறனுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் பயன்படுத்துவதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார்.
பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடருக்கான நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் முதலாவது கூட்டம் அமைச்சரின்
தலைமையில் கடந்த 27.02.2025 அன்று பாராளுமன்றத்தில் கூடிய போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.
நகர அபிவிருத்தித் திட்டங்களை குறிப்பிட்ட காலவரையறைக்குள் நிறைவு செய்வது, பொதுமக்களுக்கு நலனை ஏற்படுத்தும் திட்டங்களை முன்னுரிமை அடிப்படையில் செயற்படுத்துதல் என்பவற்றை உறுதிப்படுத்த முறையான
கட்டமைப்பு இல்லாமை குறித்து பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவின் கவனத்துக்குக் கொண்டுவந்தனர். அபிவிருத்தித் திட்டங்களை தயாரிக்கும் போது நகர அபிவிருத்தித் அதிகாரசபை, உட்கட்டமைப்பு வசதிகளை வழங்கும்
ஏனைய அனைத்து அரச நிறுவங்களினதும் கருத்துக்களை, முன்மொழிவுகளை பெறவேண்டும் எனவும் அதற்கமைய தயாரிக்கப்படும் திட்டங்களை செயற்படுத்தும் போது அந்தப் பொறுப்புகளை கொண்டுள்ள
அனைத்து நிறுவனங்களும் அனுமதி வழங்கப்படும் அபிவிருத்தித் திட்டங்களுக்கு அமைய செயற்பட வேண்டும் என அமைச்சர் வலியுறுத்தினார்.
கடந்த காலங்களில் அவ்வாறான ஒருங்கிணைப்பு இடம்பெறவில்லை என்பது புலப்படுவதாகவும், அது திட்டங்களை செயற்படுத்துவதில் தாமதம் ஏற்படவும் மற்றும் வினைத்திறனின்மைக்கு காரணம் என்றும் அமைச்சர்
சுட்டிக்காட்டினார். அத்துடன், மாவட்ட அபிவிருத்திக் குழுக்கள் மற்றும் பிரதேச அபிவிருத்திக் குழுக்கள் ஊடாக நிறுவனங்களுக்கிடையிலான ஒருங்கிணைப்பை அதிகரிப்பதற்கான முறைமையொன்றை அறிமுகப்படுத்துவதன் அவசியத்தை அமைச்சர் இதன்போது வலியுறுத்தினார்.
அத்துடன், பாராளுமன்ற உறுப்பினர்களினால் முன்வைக்கப்பட்ட பல்வேறு முன்மொழிவுகள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பில் குழுவில்
கலந்துரையாடப்பட்டதுடன், அவற்றைக் கருத்திற்கொள்ளுமாறும் குழுவின் தலைவர் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
இந்தக் கூட்டத்தில் கௌரவ வீடமைப்பு பிரதி அமைச்சர் ரீ.பீ.சரத்,குழுவின் உறுப்பினர்களான கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் நகர அபிவிருத்தி,
நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சின் கீழுள்ள நிறுவங்களின் தலைவர்களும் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
ராமநாதன் 2மகன்களின் நிதி வேட்டை
ராமநாதன் 2மகன்களின் நிதி வேட்டை
ராமநாதன் 2மகன்களின் நிதி வேட்டை ,அண்ணன் (ரகுரமன் ஒரு தளத்திற்குள் வருவார். அந்த தளத்திற்குள் உள்ளவர்களுக்கு தனது தம்பியைப் பற்றி புகழ்பாடி மூளைச்சலவை செய்வார்.
அந்த தளத்தை நடத்துபவருடன் இணைந்து டீல் பேசி சிறிது காலம் பயணிப்பார்.
முட்டாள் மக்கள் ஒன்றின் பின் ஒன்றாக வந்து இவர்கள் வலையில் விழுவார்கள். சில அன்ரிமார்கள் (அர்ச்சுனாவின் விசிறிகள்) வந்து கண்ணீர் சிந்துவர்.
பென்சன் எடுக்கும் அங்கிள்மார் இந்த தளத்துக்குள் நுழைந்து அர்ச்சுனாவிற்கு பணம் கொடுக்க தயாராவார்கள்.
சிறிது காலம் சென்றதும் ரகுரமன் தன் தம்பி விசாரித்ததாகவும் தளத்தில் நடைபெறுவதை தான் சொன்னதாகவும் சொல்வார்.
இந்த மூளைசலவை செய்யப்பட்டு வசியப்பட்டிருக்கும் பைத்தியங்கள் அர்ச்சுனாவை தளத்திற்கு அழைத்துவருமாறு கெஞ்சிக் கதறுவார்கள்.
ஒருசில நாட்களில் அர்ச்சுனா அந்தத் தளத்திற்கு வருவான். வந்த அன்றே தன்னை பெருமையாக கதைக்கத் துவங்குவான் அத்துடன் பணம் பணம் என்று கதைக்கத் துவங்குவான்.
இவ்வளவு பணமிருந்தால் நான் இதைச் செய்வேன் அதைச் செய்வேன் என்று சொல்லத்துவங்குவான்.
ரகுராமன் மற்றும் தளத்தினை நடத்துபவர் கையாள்கள் தாங்கள் இவ்வளவு தருகிறோம் என்று முன்வருவார்கள்.
இதை உண்மையென நம்பும் முட்டாள்கள் உண்மையிலேயே குளிரில் பனியில் வேலை செய்து உழைத்த பணத்தை கொடுக்கத் துவங்கும்.
சிறிது காலம் இந்த திரள்நிதி சேகரிப்பு நடக்கும். கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் அர்ச்சு கௌசியுடன் சேரும் பணத்தில் கூத்தடிக்கும்.
கணக்கு கேட்க மக்கள் துவங்கியதும் உடன் அர்ச்சு துரோகி பட்டம் பலருக்கும் படபடவென வழங்கும். தூஷணங்களால் திட்டும்! பைட்ஸ் கொத்து போடுவேன் என்றும் மிரட்டும்.
அத்துடன் அண்ணனும் தம்பியும் அந்த தளத்திற்கு வருவதை நிறுத்துவார்கள். அண்ணன் புதிய தளம் தேடி கண்டுபிடித்ததும் மீண்டும் முதலில் இருந்து துவங்குவார்கள்!
இதுதான் ராமநாதன் மகன்களின் நூதன திரள்நிதி வேட்டை! இவ்வாறு சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவுகிறது .அதனை இங்கே பிரசுரிகிர்றோம் .
- ஈரான் மீதான புதிய வியூகம்

- தேனிசை செல்பாவுக்கு அழகான பனைமரம் பாடி கலங்கிய பேரறிவாளன்

- ரசியா டிரம்ப் பேச்சு

- பனை எண்ணெய் இறக்குமதிக்காக இலங்கை140 022 மில்லியன் செலவிடுகிறது

- மாலத்தீவு ஜனாதிபதி மே 4 அன்று இலங்கைக்கு பயணம் மேற்கொள்கிறார்

- நாளை 21 மே தினப் பேரணிகளை நடத்தவுள்ளது NPP

- லஞ்ச ஊழல் வழக்கில் முன்னாள் அமைச்சர் சிக்கினார்

- அமெரிக்க டாலருக்கு எதிராக ரூபாயின் மதிப்பு மேலும் சரிந்தது

- வீர தலைவனின் தேனிசை குரலே |711|செல்லப்பா பாடல் |தேனிசை செல்லப்பா பாடல்

- தேசத்தின் குரலப்பா தேனிசை செல்லப்பா|710|தேனிசை செல்லப்பா ||Thenisai Chellappa

பிரான்ஸ் செல்ல அமைச்சின் நிதியை செலவு செய்த அதிகாரி
பிரான்ஸ் செல்ல அமைச்சின் நிதியை செலவு செய்த அதிகாரி
பிரான்ஸ் செல்ல அமைச்சின் நிதியை செலவு செய்த அதிகாரி ,பனை அபிவிருத்தி சபையின் முன்னாள் தலைவர், பிரான்ஸ் செல்வதற்காக அமைச்சுக்கு சொந்தமான நிதியிலிருந்து 19 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான தொகையை செலவிட்டமை தொடர்பில் உடனடி விசாரணை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அந்த சபையின் தலைவர் தனது இராஜினாமா கடிதத்தை அமைச்சின் செயலாளரிடம் நேற்று (01) கையளித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
முன்னாள் தலைவர் கடந்த 2020 ஆம் ஆண்டு பனை அபிவிருத்தி சபையின் தலைவராக நியமிக்கப்பட்டார், மேலும் அவர் நாட்டின் பனை உற்பத்திகளை
பிரபலப்படுத்துவது தொடர்பாக 2021 செப்டம்பர் 4 முதல் 27 ஆம் திகதி வரை பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுக்கு விஜயம் செய்தார்.
இந்த 23 நாள் பயணத்திற்காக, பனை அபிவிருத்திச் சபை செலவிட்ட தொகை 1,949,450 ரூபாய்.
இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் பனை தொடர்பான பொருட்களை பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் விற்பனை செய்வதை ஊக்குவித்தல், களஞ்சியசாலைகளை மேம்படுத்துதல், உள்ளுர் பனை
உற்பத்திகள் விற்பனை வலையமைப்பை முறையாகப் பேணுவதற்கு பிரதிநிதி ஒருவரை நியமித்தல் ஆகியனவே தலைவரின் பிரான்ஸ் விஜயத்தின் நோக்கமாக இருந்ததாகக் கூறப்படுகிறது.
எனினும், 2021ஆம் ஆண்டு மற்றும் ஏப்ரல் 2022ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் ஐரோப்பிய நாடுகளுக்கு பனைப் பொருட்களை ஏற்றுமதி செய்வதன் மூலம் கிடைத்த வருமானம் பூஜ்ஜியமே எனத் தெரியவந்துள்ளது.
இந்த நாட்டிலுள்ள பனை உற்பத்திகளை இத்தாலி, பிரான்ஸ், அவுஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு பணிப்பாளர் சபையின் அனுமதியின்றி
விளம்பரப்படுத்துவதற்கு தலைவர் பிரதிநிதிகளை நியமித்துள்ள போதிலும், அந்த நாடுகளின் பனை உற்பத்திகளின் ஏற்றுமதி வருமானம் பூஜ்ஜியமே என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முகவர்கள் மூலம் இலங்கையில் பனை உற்பத்திகளுக்கான ஆர்டர்கள் கிடைக்காததால், ஏற்றுமதி வருமானம் பூஜ்ஜியமாக குறைந்துள்ளது.
பிரான்ஸ் சுற்றுப்பயணத்திற்கு செலவழித்த தொகையை அவரிடமிருந்து திரும்ப பெற விசாரணை குழு பரிந்துரை செய்துள்ளது.
விமானங்கள் வாங்குவதற்கு 60 மில்லியன்
விமானம் வாங்குவதற்கு 60 மில்லியன்
விமானங்கள் வாங்குவதற்கு 60 மில்லியன் ,உக்ரைன் இராணுவத்தினர் டிரோன் ரக விமானங்கள் வாங்குவதற்கு 60 மில்லியன் யூரவை வழங்க உள்ளதாக நெதர்லாந்து அறிவித்துள்ளது .
உக்ரைன் ரஷ்யாவுக்கு இடையில் கடும் யுத்தம் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .
பாரிய படை நடவடிக்கை
ரசியா பாரிய படை நடவடிக்கைகளை மேற்கொண்டு ,உக்ரைனுடைய ஏனைய பகுதிகளையும் மீட்கும் அபகரிக்கும் நோக்கடன் ஈடுபட்டுள்ளது .
இந்த இராணுவ நடவடிக்கையை மேற்கொண்ட வண்ணம் உள்ளது ,எனவே ராசியாவின் இந்த நடவடிக்கையை தடுத்து நிறுத்த வேண்டிய தேவை உக்ரைனுக்கு ஏற்பட்டுள்ளது .
அதனை அடுத்து நெதர்லாந்து நாடானது யுக்ரேனுக்கு, ட்ரோன் ரக வெடிகுண்டு விமானங்கள் கொள்வனவு செய்வதற்காக ,60 மில்லியன் யூரோக்களை வழங்குகின்றது .
இந்த நிதியானது கட்டம் கட்டமாக,உக்ரேன் இராணுவத்தினருக்கு வழங்கப்பட உள்ளது .
நேட்டோ படைகள் பாரிய தடுப்பு நடவடிக்கை
ரசியாவின் ஆக்கிரமிப்பின் கீழ் உக்ரைன் வீழ்ந்து விடுவதை தடுக்கும் நகர்வில் ,ஐரோப்பிய நேட்டோ படைகள் பாரிய தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட வண்ணம் உள்ளன .
ரஸ்யாவினால் தமக்கு மிக பெரும் ஆபத்து உள்ளதை, நன்கறிந்த ,நேட்டோ கூட்டமைப்பு உக்ரேனை, காப்பாற்றும் நகர்வில் ஈடுபடுவது ,தமது பாதுகாப்பு கருதி என்பது இதன் ஊடக அம்பல பட்டுள்ளது .
- காசாவுக்குச் சென்றுகொண்டிருந்த 400 ஆர்வலர்களை ஏற்றிச் சென்ற 50 படகுகளை இஸ்ரேலிய கடற்படை கைப்பற்றியது

- காசா நோக்கிச் சென்ற கப்பல் குழுவில் 175 ஆர்வலர்கள் கைது

- ஈரானில் அமெரிக்கப் போருக்கு இதுவரை 25 பில்லியன் டாலர் செலவு

- தெற்கு லெபனான் நகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் இஸ்ரேலியத் தாக்குதலில் பலி

- இஸ்ரேல் பிரிட்டன் முறுகல் இஸ்ரேல் உறவு முறிந்தது

- அமெரிக்காவின் அரசு ஆதரவு கடற்கொள்ளை

- ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இரண்டு இஸ்ரேலிய வீரர்கள் காயம்

- ஈரான் போர் குறித்து பென்டகன் தலைவர் சாட்சியமளிக்கிறார்

- இஸ்ரேலுக்கு எதிராக கருது உரைத்தால் அமெரிக்கா கிரீன் கார்ட் இரத்து

- ஈரான் கடல் மூடல் உணவு தட்டு பாடு ஐநா

பத்தாயிரம் ரூபா உதவி தொகை
பத்தாயிரம் ரூபா உதவி தொகை
பத்தாயிரம் ரூபா உதவி தொகை ,வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பத்தாயிரம் ரூபாய் நிதி வழங்க படுகிறது .
இலங்கையில் நாடளாவிய ரீதியில் இடம்பெற்று வந்த சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட வெள்ள விபத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தலா பத்தாயிரம் ரூபாய் வழங்க உள்ளதாக ஆளும் அரசு தெரிவித்துள்ளது .
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை பார்வையிட்ட அரச அதிகாரிகள் அந்த வீடுகளை சுத்தம் செய்வதற்காக முதற்கட்டமாக 10,000 ரூபாய் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் ஆண்டுதோறும் இவ்வாறு வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு வருகின்ற மக்கள் பல இன்னல்களை சந்தித்து வருகின்றனர் .
அதிகம் மழை வீழ்ச்சி
அதிகம் மழை வீழ்ச்சி காரணமாக குளங்கள் நிரம்பி வழிந்ததால் வான் உடைத்து வெள்ளம் பாய்ந்ததில்,தாழ் நில பகுதியில் உள்ள பல ஆயிரக்கணக்கான வீடுகள் பாதிக்கப்பட்டன .
இந்த வெள்ளத்தினால் லட்சக்கணக்கான மக்களும் பாதிக்கப்பட்டனர் .
அதனை எடுத்து வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட வீடுகள் திருத்தம் செய்வதற்கும் அதனை சுத்தம் செய்வதற்குமாக இலங்கை ஆளும் அரசினால் தற்பொழுது இந்த 10,000 ரூபாய் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
தேர்தல் இடம் பெற உள்ள நிலையில் மக்களை குஷி படுத்த ,தற்பொழுது இவ்விதம் அரசு பத்தாயிரம் ரூபாய் நிதிகளை வழங்கிவருகிறது .
அந்த மக்களை குசி படுத்தி அவர்களது வாக்கு வங்கிகளை சுருட்டிக்கொள்ளவே , இவ்வாறு நடந்து கொள்வதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்துக்கொண்டனர்.
Featured
இந்தியாவிடமிருந்து 450 மில்லியன் ரூபா நிதி
இந்தியாவிடமிருந்து 450 மில்லியன் ரூபா நிதி
இலங்கைக்கு இந்தியாவிடமிருந்து 450 மில்லியன் இந்திய ரூபா நிதி மானியமாக கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே இந்த பணத்தொகையை கையளித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற கூட்டமொன்றின் போது, இந்திய உயர்ஸ்தானிகர் இலங்கைக்கான நிதி மானியத்தை வழங்கியுள்ளார்
- ஈரான் மீதான புதிய வியூகம்
by நிருபர் காவலன் - தேனிசை செல்பாவுக்கு அழகான பனைமரம் பாடி கலங்கிய பேரறிவாளன்
by நிருபர் காவலன் - ரசியா டிரம்ப் பேச்சு
by நிருபர் காவலன் - பனை எண்ணெய் இறக்குமதிக்காக இலங்கை140 022 மில்லியன் செலவிடுகிறது
by நிருபர் காவலன் - மாலத்தீவு ஜனாதிபதி மே 4 அன்று இலங்கைக்கு பயணம் மேற்கொள்கிறார்
by நிருபர் காவலன்
வௌிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி நிதி மோசடி
வௌிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி நிதி மோசடி
வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி நிதி மோசடி செய்த இரண்டு சந்தேகநபர்கள் பதுளை பொலிஸ் பிரிவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் 370,000 ரூபாவை மோசடி செய்துள்ளதாக நேற்று முன்தினம் (11) பதுளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
அதன்படி பதுளை பொலிஸ் நிலைய அதிகாரிகளினால் நேற்று (12) அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் லுனுகல பிரதேசத்தை சேர்ந்த 40 மற்றும் 42 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர்கள் இன்று பதுளை நீதவான் நீதிமன்றில்
ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், பதுளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நிதி அமைச்சராக ரணில் பதவி ஏற்பு
நிதி அமைச்சராக ரணில் பதவி ஏற்பு
இலங்கையில் பிரதமராக விளங்கி வரும் ரணில் விக்கிரமசிங்க புதிய நிதி அமைச்சராக பதவி ஏற்றுள்ளார்
ஜனாதிபதி கோட்டா முன்பாக இவர் இந்த பதவியினை ஏற்றுள்ளார்
எதிர் வரும் ஆறு வாரத்தில் புதிய வரவு செலவு அறிக்கையை இவர் சமர்ப்பிப்பார் என எதிர் பார்க்க படுகிறது
இலங்கைக்கு இந்தியா 23 ஆயிரம் கோடி நிதி உதவி
இலங்கைக்கு இந்தியா 23 ஆயிரம் கோடி நிதி உதவி
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கை உடனடி
கடன் உதவியாக 23 ஆயிரம் கோடியை இந்தியா வழங்கியுள்ளது
இந்த கடன் உதவியை விரைவில் மீள செலுத்தும் ஒப்பந்தம் எழுத பட்டுள்ளது
இதனை செலுத்திட முடியா நிலைக்கு இலங்கைக்கு செல்ல கூடும் என எதிர் பார்க்க படுகிறது
கோட்டா கபடி ஆட்டம் – நிதி அமைச்சர் – சட்ட அமைச்சர் ஆனார்
கோட்டா கபடி ஆட்டம் – நிதி அமைச்சர் – சட்ட அமைச்சர் ஆனார்
இலங்கையில் மூன்று வாரத்திற்குள் நிதி அமைச்சராக விளங்கிய அலிசப்ரி மீண்டும்
நீதி அமைச்சராக மாற்றம் பெற்றுள்ளார்
இவர்களின் இந்த அமைச்சு பதவி கபடி ஆட்டம் ,உலகில் சல சலபப்பை ஏற்படுத்தியுள்ளது
இலங்கைக்கு அமெரிக்கா 150 மில்லியன் நிதியுதவி
இலங்கைக்கு அமெரிக்கா 150 மில்லியன் நிதியுதவி
இலங்கை அரசின் வேண்டுதலுக்கு இணங்க அமெரிக்கா 50 மில்லியன் டொலர் கடன் உதவி
வழங்கியுள்ளது
நாட்டின் அபிவிருத்திக்கு இந்த நிதி பயன் படுத்த பட உள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது
ஆளும் கோட்டா ,மகிந்தா ஆட்சியில் பலத்த லஞ்சம் ,ஊழல் இடம்பெற்ற வண்ணம் உள்ளது
,இவ்வேளை
இந்த நிதி உதவிகள் செல்வதும் அதிலும் மோசடிகள் இடம்பெறுவதும் குறிப்பிட தக்கது
எக்ஸ்பிரஸ் பேர்ள் பாதிக்கப்பட்டுள்ள மீனவர்களுக்கு அடுத்தவாரம் இழப்பீடு : 420 மில்லியன் நிதி ஒதுக்கீடு
எக்ஸ்பிரஸ் பேர்ள் பாதிக்கப்பட்டுள்ள மீனவர்களுக்கு அடுத்தவாரம் இழப்பீடு : 420 மில்லியன் நிதி ஒதுக்கீடு
அனர்த்தத்திற்குள்ளான எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்திற்குள்ளானதால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு இழப்பீடு வழங்கும் நடவடிக்கைகள் அடுத்த வாரம்முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக
தெரிவித்துள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இதற்கான நடவடிக்கைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அனர்த்தத்திற்குள்ளான எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலினால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மீனவர்களுக்காக 420 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இடைக்கால இழப்பீட்டில் மீனவர்களுக்காக 200 மில்லியன் ரூபா பணத்தை கப்பல் நிறுவனம் வழங்கியுள்ளதாக நீதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
இந்த நிதிக்கு மேலதிகமாக மேலும் 220 மில்லியன் ரூபாவை பாதிக்கப்பட்டுள்ள மீனவர்களுக்காக அரசாங்கம் ஒதுக்கியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு இழப்பீடு வழங்கும் நடவடிக்கைகள் அடுத்த வாரம்முதல்
ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இதற்கான நடவடிக்கைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, கப்பலினால் ஏற்பட்ட பாதிப்பினால் உயிரிழந்த 200-க்கும் அதிகமான கடலாமைகளின் உடல்கள் இதுவரை கரையொதுங்கியுள்ளதாகவும் 20 க்கும் அதிகமான
டொல்பின்களும் 6 திமிங்கிலங்களும் உயிரிழந்துள்ளதாகவும் வனஜீவராசிகள் அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், கப்பலின் உள்நாட்டு நிறுவன நிர்வாகத்தினர் 7 பேர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடல் மாசுறல் தடுப்பு அதிகார சபையின் சட்டத்தின் கீழ், தண்டனை சட்டக்கோவையிலுள்ள
சரத்துக்களின் கீழ் சந்தேகநபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கைக்கு நிதியை அள்ளி வழங்கும் உலக வங்கி
இலங்கைக்கு நிதியை அள்ளி வழங்கும் உலக வங்கி
இதுவரையிலும் வழங்கப்பட்டிருந்த நிதி ஒதுக்கீடுகளினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்து ஆராய்வதற்காக இலங்கை வந்துள்ள உலக வங்கியின்
விசேட பிரதிநிதிகள் குழு மே மாதம் 17ஆம் திகதி முதல் ஜூன் மாதம் 17ஆம் திகதி வரை நாட்டில் பல பகுதிகளுக்குச் சென்று பார்வையிடுவதாக ஆரம்ப சுகாதார சேவைகள் அமைப்பின் செயற்திட்டப் பணிப்பாளர் வைத்தியர் ஜெயசுந்தர பண்டார தெரிவித்துள்ளார்.
மேலும், 2019ஆம் ஆண்டு இலங்கையில் 50 வைத்தியசாலைகளை மேம்படுத்துவதற்காக உலக வங்கியினால் செயற்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டது.
இத்திட்டத்தினூடாக, வெளிநோயாளர் பிரிவில் நோயாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்கும் நோய் வாய்படுவதற்கான காரணத்தை கண்டறிந்து, அதற்கான பாதிப்பை குறைப்பதற்காக தமது
வைத்தியசாலை பிரிவிலுள்ள பிரதேச மக்களை பதிவு செய்து, அவர்களுக்கான வழிகாட்டல்கள் மற்றும் நோய்களை தாமதமின்றி அடையாளம் காண்பதற்கான பரிசோதனைகள் உள்ளிட்ட சமூக அளவிலான சேவைகள் மக்கள் மத்தியில் செயல்படுத்தப்பட்டன.
அத்துடன், இச் செயற்திட்டமானது 2020 ஆம் ஆண்டு 150 வைத்தியசாலைகளில் நடைமுறைப்படுத்தப்பட்டன.
இந்த 150 வைத்தியசாலைகளில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் தொடர்பாக குறித்த கணிப்பீட்டின் படி கண்காணிக்கப்படும்.
இதன்படி உலக வங்கியும், இலங்கை அரசும் உடன்பட்டதற்கமைய உலக வங்கிக்கு அறிக்கை வழங்கிய பின்னர் 2021ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் அடுத்த நிதி ஒதுக்கீடு வழங்கப்படும்.
இவ்வாறு வழங்கப்படும் ஒதுக்கீடானது 2020ஆம் ஆண்டுக்குறியதாகும், என்று வைத்தியர் ஜெயசுந்தர பண்டார மேலும் தெரிவித்தார்.

























