Posted in சினிமா

நயன்தாராவுக்கு இணையாக சம்பளத்தை உயர்த்திய பூஜா

நயன்தாராவுக்கு இணையாக சம்பளத்தை உயர்த்திய பூஜா

தமிழில் ஜீவா ஜோடியாக முகமூடி படத்தின் மூலம் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார் பூஜா ஹெக்டே. அந்த படத்துக்கு அவர் ரூ.30 லட்சம் சம்பளம் வாங்கியதாகக் கூறப்படுகிறது.

தற்போது தென்னிந்திய மொழிகளில், நடிகை பூஜா ஹெக்டேவுக்கு மார்க்கெட் உயர்ந்துள்ளது. இதுவரை அவர் தெலுங்கு, இந்தியில் நடித்த படங்கள் நல்ல வசூல் ஈட்டி உள்ளன.

சமீபத்தில் அல்லு அர்ஜுடன் நடித்த தெலுங்கு படமும் மாபெரும் வெற்றி பெற்றது. எனவே சம்பளத்தை ரூ.5 கோடியாக உயர்த்தி இருக்கிறாராம் பூஜா ஹெக்டே.

பூஜா ஹெக்டே, நயன்தாரா

இது நயன்தாரா வாங்கும் சம்பளத்துக்கு இணையானது என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே தெலுங்கில் மகேஷ்பாவுடன் நடித்தபோது ரூ.2 கோடி சம்பளம் வாங்கினாராம்.

தற்போது இந்தியில் 2 படங்கள், தமிழில் விஜய்க்கு ஜோடியாக ‘தளபதி 65’ படம், தெலுங்கில் 2

படங்கள் என்று 5 படங்களில் நடித்து வருகிறார் பூஜா ஹெக்டே. அவர் நடித்த எல்லா படங்களும் வெற்றி பெறுவதால் சம்பளத்தை உயர்த்தி இருப்பதாக கூறப்படுகிறது.

    Posted in சினிமா

    முதல் அமைச்சர் மகளாக நடிக்கும் நயன்தாரா

    முதல் அமைச்சர் மகளாக நடிக்கும் நயன்தாரா

    தமிழில் முன்னணி நடிகையாக வலம்வரும் நயன்தாரா, அடுத்ததாக பிரபல நடிகரின் படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

    முதல் அமைச்சர் மகளாக நடிக்கும் நயன்தாரா
    நயன்தாரா


    மலையாளத்தில் மோகன்லால் நடித்து பிளாக்பஸ்டர் ஹிட்டான திரைப்படம் ‘லூசிபர்’. இந்தியாவையே மிரள‌ வைத்த இந்த படத்தில் மோகன்லால் அரசியல்வாதியாகவும்,

    அண்டர்கிரவுண்ட் கேங்ஸ்டராகவும் நடித்திருந்தார். இதைத்தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் தயாரிக்கும் பணிகளை துவங்கிவிட்டார் பிருத்விராஜ்.

    தற்போது லூசிபர் படம் தெலுங்கில் ரீமேக் ஆகிறது. இதில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிக்க இருக்கிறார். பிரபல இயக்குனர் மோகன் ராஜா இந்த படத்தை இயக்கவிருக்கிறார். சுமார் 200

    கோடி ரூபாய் செலவில் தயாரிக்கவுள்ள இப்படத்தின் பணிகள் நடைபெற்று வருகிறது. கடந்த ஜனவரி மாதமே தொடங்கவிருந்த இந்த படத்தின் ஷூட்டிங் கொரோனா காரணமாக இன்னும் தொடங்கப்படவில்லை.

    மோகன்ராஜா, மோகன்லால், சிரஞ்சீவி

    இந்தப் படத்தில் மலையாளத்தில் மஞ்சு வாரியர் நடித்திருந்த முதலமைச்சர் மகள் கதாபாத்திரத்திற்கு, நயன்தாராவை நடிக்க வைக்க முதலில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

    னால் கால்ஷீட் பிரச்சினையால் நயன்தாரா மறுத்துவிட்டார். அதன்பிறகு சில நடிகைகளை பரிசீலித்து வந்தனர்.

    இந்நிலையில், தற்போது நயன்தாராவையே நடிக்க வைக்க மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. விரைவில் இந்த படத்தில் நயன்தாரா இணைவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

      Posted in Uncategorized

      தனி விமானத்தில் விக்னேஷ் சிவனுடன் கேரளா சென்ற நயன்தாரா

      தனி விமானத்தில் விக்னேஷ் சிவனுடன் கேரளா சென்ற நயன்தாரா

      விமான பயணத்தின் போது எடுத்த புகைப்படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

      தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம்வரும் நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார்.

      இவர்களது திருமணம் விரைவில் நடக்க இருப்பதாக கூறப்படுகிறது. இவர்கள் சமூகவலைதள பக்கத்தில் தாங்கள் சென்ற பயணம், விடுமுறைக் கொண்டாட்டம் ஆகியவற்றின் போது எடுத்த புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றனர்.

      அந்தவகையில், தனது காதலர் விக்னேஷ் சிவனுடன், நடிகை நயன்தாரா, கேரளாவிற்கு தனி விமானத்தில் சென்றுள்ளார்.

      விமான பயணத்தின் போது எடுத்த வீடியோவையும், புகைப்படத்தையும் இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

      நயன்தாரா, விக்னேஷ் சிவன்

      கேரளாவில் வருகிற ஏப்ரல் 14ம் தேதி மலையாளப் புத்தாண்டான விஷு பண்டிகை கொண்டாடப்படுகிறது.

      அதற்காக தான் அவர்கள் அங்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது. கடந்தாண்டு ஓணம் பண்டிகையை கொண்டாட இருவரும், இதேபோல் தனி விமானத்தில் கேரளா சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

      நடிகை நயன்தாரா, தற்போது ரஜினி – சிவா கூட்டணியில் உருவாகும் அண்ணாத்த படத்தில் நடிக்கிறார்.

      இதுதவிர விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகும் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்திலும் நடித்து வருகிறார்.

      நயன்தாரா, விக்னேஷ் சிவன்
      நயன்தாரா, விக்னேஷ் சிவன்
      Posted in சினிமா

      விக்னேஷ் சிவன் – நயன்தாராவின் புதிய பட தலைப்பு அறிவிப்பு

      விக்னேஷ் சிவன் – நயன்தாராவின் புதிய பட தலைப்பு அறிவிப்பு

      நடிகை நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் என்ற பட நிறுவனத்தை தொடங்கி சில திரைப்படங்களை தயாரித்தும், வெளியிட்டும் வருகிறார்.

      இந்நிலையில், அவர்கள் தயாரிக்கும் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி அறிமுக இயக்குனர் விநாயக் இயக்கும் ‘ஸ்ட்ராபெரி ஐஸ்கிரீம்’ என்கிற படத்தை தயாரிக்க உள்ளதாக அறிவித்துள்ளனர்.

      ஸ்ட்ராபெரி ஐஸ்கிரீம் பட போஸ்டர்

      விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் இணைந்து ஏற்கனவே நெற்றிக்கண், கூழாங்கல் போன்ற படங்களை தயாரித்து

      விமான தளம் மீது ஏவுகணை தாக்குதல்

      செக்ஸ் தொல்லையால் அவதிப்படும் இவர்கள்

      வருகின்றனர். இப்படங்கள் விரைவில் ரிலீசாக உள்ளன. அதேபோல் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தை செவன் ஸ்கிரீன்

      நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

      Posted in Uncategorized

      திரைப்பட விழாவில் கலந்துக் கொண்ட விக்னேஷ் சிவன், நயன்தாரா

      திரைப்பட விழாவில் கலந்துக் கொண்ட விக்னேஷ் சிவ… வைரலாகும் புகைப்படம்

      திரைப்பட விழாவில் இயக்குனர் விக்னேஷ் சிவனும், நடிகை நயன்தாராவும் இணைந்து கலந்துக் கொண்ட புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.

      திரைப்பட விழாவில் கலந்துக் கொண்ட விக்னேஷ் சிவன்,
      இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகை நயன்தாரா இருவரும்

      கடந்த சில வருடங்களாக காதலித்து வருகின்றனர். இவர்களது திருமணம்

      விரைவில் நடக்க இருப்பதாக கூறப்படுகிறது. இவர்கள் இருவரும் இணைந்து

      ரவுடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி, சில திரைப்படங்களை தயாரித்தும் வெளியிட்டும் வருகிறார்கள்.

      அந்த வகையில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் கூழாங்கல் என்ற

      திரைப்படத்தின் உரிமையை சமீபத்தில் கைப்பற்றினர். இந்த படத்தின்

      வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்த

      நிலையில் ரோட்டர்டாம் என்ற நகரில் டைகர் காம்படிஷன் இன்டர்

      நேஷனல் திரைப்பட விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் கூழாங்கல் படம் திரையிடப்படுகிறது.

      கூழாங்கல் படக்குழுவினர்

      இதற்காக விக்னேஷ் சிவன், நயன்தாரா இருவரும் இந்த விழாவில் கலந்து கொண்டனர்

      . இது குறித்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. பிஎஸ்.

      வினோத் ராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்திர்கு யுவன்ஷங்கர்

      ராஜா இசையமைத்திருக்கிறார். இந்த திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

      Posted in Uncategorized

      சிம்பு, நயன்தாராவை மீள இணைத்து வைக்க முயற்சி – முறியுமா அந்த காதல் ..?

      சிம்பு, நயன்தாராவை மீள இணைத்து வைக்க முயற்சி – முறியுமா அந்த காதல் ..?

      நடிகர் சிம்பு மற்றும் நடிகை நயன்தாராவை இணைத்து வைக்க பிரபல இயக்குனர் ஒருவர் முயற்சி செய்து வருகிறார்.

      சிம்பு, நயன்தாராவை இணைத்து வைக்க முயற்சி செய்யும் பிரபல இயக்குனர்
      நயன்தாரா – சிம்பு


      சிம்பு நடிப்பில் கவுதம் மேனன் இயக்கத்தில் கடந்த 2010ஆம் ஆண்டு ’விண்ணை

      தாண்டி வருவாயா’ என்ற சூப்பர்ஹிட் படம் உருவாகியது. அதன் பின் 2016ஆம்

      ஆண்டு இதே கூட்டணியில் ‘அச்சம் என்பது மடமையடா என்ற திரைப்படம் வெளியானது.

      இந்த நிலையில் ஐசரி கணேஷ் தயாரிப்பில் சிம்பு நடிக்க கவுதம் மேனன்

      இயக்க இருக்கிறார். இந்த படத்தில் சிம்பு ஜோடியாக நடிக்க நயன்தாராவிடம்

      கவுதம் மேனன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் விரைவில் இதுகுறித்த

      அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

      சிம்பு – கவுதம் மேனன்

      சிம்பு மற்றும் நயன்தாரா ஆகிய இருவரும் இணைந்து ’வல்லவன்’ மற்றும் ’

      இது நம்ம ஆளு’ ஆகிய இரண்டு படங்களில் இதற்கு முன்பு நடித்திருக்கிறார்கள்.

      Posted in சினிமா

      நயன்தாராவை பார்க்க பொதுமக்கள் குவிந்ததால் பரபரப்பு,

      நயன்தாராவை பார்க்க பொதுமக்கள் குவிந்ததால் பரபரப்பு,

      படப்பிடிப்பில் நயன்தாராவை பார்க்க பொது மக்கள் குவிந்ததால் அந்த இடத்தில் பரபரப்பும் வாக்குவாதமும் ஏற்பட்டுள்ளது.

      ‘நானும் ரவுடிதான்’ படத்துக்கு பிறகு இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‘காத்துவாக்குல 2 காதல்’ என்ற படத்தில் மீண்டும்

      நடிகர் விஜய்சேதுபதியும், நடிகை நயன்தாராவும் இணைந்து நடிக்கிறார்கள். நடிகை சமந்தாவும் மற்றொரு கதாநாயகியாக நடிக்கிறார்.

      சென்னையை அடுத்த தாம்பரம் சானடோரியம் ஜி.எஸ்.டி. சாலை அருகே உள்ள வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியில் நேற்று இந்த

      படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. இதில் நடிகை நயன்தாரா சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டது.

      படப்பிடிப்பில் கலந்து கொண்ட நடிகை நயன்தாராவை நேரில் பார்க்க அப்பகுதியில் ஏராளமான வாலிபர்கள் உள்பட பொதுமக்கள்

      குவியத் தொடங்கினர். இதனால் அப்பகுதி முழுவதும் பரபரப்பாக காணப்பட்டது.

      இந்த படப்பிடிப்பிற்கு முறையான அனுமதி பெறவில்லை என போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. எனினும் நயன்தாராவை காண

      திரண்டிருந்த பொது மக்களை கட்டுப்படுத்த போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

      நயன்தாரா

      படக்குழு சார்பில் அங்கு தனியார் பாதுகாவலர்களும் நியமிக்கப்பட்டு இருந்தனர். அவர்கள் பொதுமக்களை தடுத்ததால் அவர்களுக்கும் பொது மக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

      Posted in சினிமா

      நயன்தாரா வழியை பின்பற்றும் பார்வதி நாயர்

      நயன்தாரா வழியை பின்பற்றும் பார்வதி நாயர்

      தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா வழியை பார்வதி நாயர் பின்பற்றி ஒரு படத்தில் நடிக்கிறார்.

      நயன்தாரா வழியை பின்பற்றும் பார்வதி நாயர்
      நயன்தாரா – பார்வதி நாயர்
      விருமாண்டி இயக்கத்தில் விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ்

      உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘க/பெ ரணசிங்கம்’. கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் ஓடிடி தளத்தில்

      வெளியான இப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து ‘டாக்டர்’, ‘அயலான்’, ‘டிக்கிலோனா’ உள்ளிட்ட பல்வேறு படங்களைத் தயாரித்து வருகிறது.

      இந்த படங்களின் வரிசையில் தங்களுடைய புதிய படத்தை கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் அறிவித்துள்ளது. அறிமுக இயக்குநர் தாமரை செல்வன் இயக்கத்தில் பார்வதி நாயர் முதன்மை

      கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ‘ரூபம்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது.

      2021-ம் ஆண்டு ஜனவரியில் படப்பிடிப்பு தொடங்கி, சென்னையிலேயே முழுப் படத்தையும் படமாக்கப் படக்குழு முடிவு

      செய்துள்ளது. சூப்பர் நேச்சுரல் திரில்லர் பாணியில் ‘ரூபம்’ படம் தயாராகவுள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது. பார்வதி நாயர் இந்த படத்தில் போலீசாக நடிக்க உள்ளார்.

      ரூபம்

      நயன்தாரா உள்ளிட்ட பல நடிகைகள் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வரும் நிலையில், பார்வதி

      நாயரும் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள ரூபம் படத்தில் நடிக்கிறார்.

      Posted in சினிமா

      நயன்தாராவுக்காக மகேஷ் பாபு செய்யும் உதவி

      நயன்தாராவுக்காக மகேஷ் பாபு செய்யும் உதவி

      தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் மகேஷ் பாபு, நயன்தாராவின் படத்துக்காக உதவி செய்ய உள்ளாராம்.

      நயன்தாராவுக்காக மகேஷ் பாபு செய்யும் உதவி
      மகேஷ் பாபு, நயன்தாரா


      நடிகை நயன்தாரா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘மூக்குத்தி

      அம்மன்’. இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ள ஆர்.ஜே.பாலாஜி, இயக்குனர் என்.ஜே.சரவணனுடன்

      இணைந்து இயக்கி உள்ளார். வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் சார்பில்

      ஐசரி கே.கணேஷ் தயாரித்து இருக்கும் இப்படம் வருகிற தீபாவளி பண்டிகையன்று ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

      நயன்தாரா, ஆர்.ஜே.பாலாஜி

      இப்படத்தின் டிரெய்லர் தமிழ் மற்றும் தெலுங்கில் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,

      இப்படத்தின் தெலுங்கு டிரெய்லரை வெளியிடப்போவது யார் என்ற தகவலை ஆர்.ஜே.பாலாஜி வெளியிட்டுள்ளார்.

      அதன்படி பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு டிரெய்லரை வெளியிட உள்ளார்.

      இதன் தமிழ் டிரெய்லர் நாளை நடைபெறும் ஐபிஎல் போட்டியின் இடையில் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது

      Posted in சினிமா

      ஊரடங்கு நேரத்திலும் நடித்த நயன்தாரா

      ஊரடங்கு நேரத்திலும் நடித்த நயன்தாரா

      முன்னணி நடிகையான நயன்தாரா ஊரடங்கு நேரத்திலும் வீட்டிலிருந்தபடியே நடித்திருக்கிறார்.

      ஊரடங்கு நேரத்திலும் நடித்த நயன்தாரா
      நயன்தாரா


      கொரோனா ஊரடங்கினால் நயன்தாரா வீட்டில் இருக்கிறார். அவர் படங்களில் நடித்து 3 மாதங்களுக்கு மேல் ஆகிறது. ஊரடங்குக்கு முன்பே ஆர்.ஜே.பாலாஜி இயக்கிய மூக்குத்தி அம்மன் படத்தில்

      நடித்து முடித்து விட்டார். இந்த படம் திரைக்கு வர தயாராக உள்ளது. ரஜினிகாந்தின் அண்ணாத்த படத்திலும் நடிக்கிறார். நெற்றிக்கண்,

      காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய மேலும் 2 படங்கள் கைவசம் வைத்துள்ளார்.

      ஊரடங்கில் அடிக்கடி தனது புகைபடங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்து வந்தார். கொரோனாவுடன் இணைத்து வெளியான

      வதந்திக்கும் காதலர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து பதிலடி கொடுத்தார்.

      நயன்தாரா

      தொடர்ந்து படப்பிடிப்பு இல்லாமல் வீட்டில் முடங்கிய நிலையில் தற்போது விளம்பர படமொன்றில் நடித்து இருக்கிறார். வீட்டிலேயே

      இதன் படப்பிடிப்பை முடித்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து மேலும் சில விளம்பர படங்களில் நடிக்க

      வைப்பதற்காக முன்னணி நிறுவனங்கள் அவரை அணுக தயாராகி வருகின்றன.

          Posted in சினிமா

          நயன்தாரா – விக்னேஷ் சிவனுக்கு கொரோனாவா?

          நயன்தாரா – விக்னேஷ் சிவனுக்கு கொரோனாவா?

          நடிகை நயன்தாராவுக்கும், இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் பரவி வரும் நிலையில், அதன் உண்மை நிலை குறித்து பார்ப்போம்.

          நயன்தாரா – விக்னேஷ் சிவனுக்கு கொரோனாவா?
          விக்னேஷ் சிவன், நயன்தாரா


          உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் அதன் கோர முகத்தை காட்டி வருகிறது. தமிழகத்தில் அதன்

          பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. நோய் பரவல் அதிகமாக உள்ள சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ஊரடங்கு கடுமையாக்கப்பட்டு உள்ளது.

          இதனிடையே சினிமா பிரபலங்கள் பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. நடிகை நயன்தாரா,

          இயக்குனர் விக்னேஷ் சிவன் உள்ளிட்டோருக்கு கொரோனா அறிகுறி இருப்பதாகவும், இதனால் அவர்கள் தனிமையில் இருப்பதாகவும் செய்திகள் பரவின.

          விக்னேஷ் சிவன், நயன்தாரா

          இந்நிலையில், இந்த செய்திகள் உண்மையில்லை என்று இயக்குனர் விக்னேஷ் சிவன் திட்டவட்டமாக மறுத்துள்ளார். தாங்கள் இருவரும்

          நலமாக இருப்பதாக கூறியுள்ள அவர், தான் படத்திற்கான கதை விவாதத்தில் ஈடுபட்டு உள்ளதாகவும், நயன்தாரா, உடற்பயிற்சி

          உள்ளிட்ட அன்றாட பணிகளை செய்து வருவதாகவும் கூறி வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

              Posted in சினிமா

              நயன்தாராவை வம்புக்கு இழுத்த ஸ்ரீ ரெட்டி

              நயன்தாராவை வம்புக்கு இழுத்த ஸ்ரீ ரெட்டி

              இயக்குநர்கள், நடிகர்கள் மீது பாலியல் புகார் கூறிய ஸ்ரீ ரெட்டி தற்போது நயன்தாராவை வம்புக்கு இழுத்திருக்கிறார்.

              நயன்தாராவை வம்புக்கு இழுத்த ஸ்ரீ ரெட்டி
              நடிகைகள் நயன்தாரா, ஸ்ரீ ரெட்டி


              சினிமா துறையில் தொடர்ந்து சர்ச்சையாக பல விஷயங்கள் செய்து வருபவர் ஸ்ரீரெட்டி. இவர் தனக்கு சினிமாவில் வாய்ப்பு தருவதாக கூறி பல சினிமா நட்சத்திரங்கள் ஏமாற்றி விட்டார்கள் என பகிரங்கமாக புகார் கூறினார்.

              மேலும் தெலுங்கு, தமிழ் என இரண்டு மொழி சினிமா நட்சத்திரங்கள் பலருடன் படுக்கையை பகிர்ந்ததாக பெயர்களை வெளிப்படையாக கூறினார்.

              தற்போது சமூக வலைத்தளங்களில் தன்னை பற்றி விமர்சிப்பவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ள அவர் “இது என் உடல்..

              நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன். ஏன் இங்கு வந்து கமெண்ட் செய்கிறீர்கள்” என கேட்டுள்ளார்.

              “எனக்கு பிடிக்கவில்லை என்றால் நான் பாய்பிரென்ட்டை மாற்றி கொண்டு தான் இருப்பேன்.”

              “இதையே பெரிய ஹீரோயின்கள் பற்றி கமெண்ட் செய்வீர்களா? நயன்தாரா கூட தான் திருமணம் ஆன ஆண்கள், ஆகாதா ஆண்கள்

              என பலருடன் காதலில் இருந்தார். அவரை பற்றி கமெண்ட் செய்ய உங்களுக்கு தைரியம் இருக்கா?. ஒரு ஸ்டார் ஹீரோயினுக்கும்,

              வாய்ப்பு இல்லாமல் போராடும் நடிகைக்கும் இது தான் வித்தியாசம்,” என ஸ்ரீரெட்டி கூறியுள்ளார்.

              நயன்தாராவை இப்படி வெளிப்படையாக ஸ்ரீரெட்டி வம்புக்கு இழுத்திருப்பது அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

              நயன்தாராவை வம்புக்கு
              நயன்தாராவை வம்புக்கு
                  Posted in சினிமா

                  காதல் தோல்வி குறித்து மனம் திறந்த நயன்தாரா

                  காதல் தோல்வி குறித்து மனம் திறந்த நயன்தாரா

                  தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா, காதல் தோல்விகள் குறித்து சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார்.

                  காதல் தோல்வி குறித்து மனம் திறந்த நயன்தாரா
                  நயன்தாரா


                  நயன்தாரா கேரளாவில் இருந்து சினிமாவில் அறிமுகமாகி தமிழ், தெலுங்கு பட உலகில் நம்பர்-1 கதாநாயகியாக இருந்து வருகிறார்.

                  10 வருடங்களாக அவரது மார்க்கெட்டை சக நடிகைகளால் சரிக்க முடியவில்லை. அதிக சம்பளம் பெறும் தென்னிந்திய நடிகைகள் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார்.

                  ரஜினிகாந்த், விஜய், அஜித்குமார், சூர்யா, விக்ரம், விஷால், தனுஷ், சிம்பு என்று முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்த

                  பெருமையும் நயன்தாராவுக்கு உண்டு. இப்படி உச்ச நடிகையாக இருக்கும் அவரது சொந்த வாழ்க்கை சோகம் நிறைந்தது.

                  லைட்பாய் முதல் எல்லா தொழிலாளர்களுடனும் அன்பாக பழகுவார். படப்பிடிப்பு இறுதி நாளில் எல்லோருக்கும் பரிசு

                  பொருட்களை வாரி வழங்குவார், சக நடிகர்களுக்கு நட்சத்திர ஓட்டல்களில் பல லட்சம் செலவு செய்து விருந்து கொடுப்பார்

                  என்றெல்லாம் நயன்தாராவின் நல்ல குணங்களை பட உலகினர் பட்டியலிடுகின்றனர்.

                  ஆனால் இன்னொரு புறம் காதலில் அவர் தொடர்ந்து காயப்பட்டு வருகிறார். 2006-ல் வல்லவன் படத்தில் நடித்த போது சிம்புவுடன்

                  அவரது முதல் காதல் துளிர்த்தது. இருவரும் திருமணம் செய்து கொள்ளவும் தயாரானார்கள். ஆனால் சில மாதங்களிலேயே அந்த காதல் முறிந்து போனது.

                  நயன்தாரா

                  அதன்பிறகு 2009-ல் பிரபுதேவாவுடன் நயன்தாராவின் இரண்டாவது காதல் மலர்ந்தது. வில்லு படத்தை பிரபுதேவா இயக்கியபோது

                  அதில் கதாநாயகியாக நயன்தாரா நடித்தார். அப்போது இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டு ஜோடியாக சுற்றினார்கள்.

                  நயன்தாரா மதம் மாறி பிரபுதேவாவை மணந்து சினிமாவுக்கு முழுக்கு போடவும் தயாரானார். ஆனால் கடைசி நேரத்தில் அந்த காதலும் முறிந்து போனது.

                  தற்போது இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார். நானும் ரவுடி தான் படத்தில் இருவரும் இணைந்து

                  பணியாற்றினார். அப்போது இவர்கள் இருவருக்கும் காதல் மலர்ந்தது.

                  இந்நிலையில், நடிகை நயன்தாரா தனது காதல் முறிவு குறித்து சமீபத்திய பேட்டியில் பேசியுள்ளார். அவர் கூறியதாவது:

                  ”நம்பிக்கை இல்லாத காதல் நிலைக்காது. அதேபோல் நம்பிக்கை இல்லாத இடத்தில் சேர்ந்து வாழ்வதை விட தனியாக வாழ்வதே மேல்

                  என உணர்ந்து, பழைய காதல்களை கடந்துவிட்டேன்” என கூறியுள்ளார்.

                  காதல் தோல்வி குறித்து மனம் திறந்த
                  காதல் தோல்வி குறித்து மனம் திறந்த
                  Posted in சினிமா

                  அவரை பிரிந்ததற்காக ஒருமணிநேரம் அழுத – நயன்தாரா

                  அவரை பிரிந்ததற்காக ஒருமணிநேரம் அழுதேன் – நயன்தாரா

                  தமிழில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா, முக்கியமான நபர் ஒருவரை பிரிந்ததற்காக ஒருமணிநேரம் அழுததாக தெரிவித்துள்ளார்.

                  அவரை பிரிந்ததற்காக ஒருமணிநேரம் அழுதேன் –


                  சரத்குமாருக்கு ஜோடியாக ஐயா திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நயன்தாரா.

                  அதனை அடுத்து ரஜினி, விஜய், அஜித் என தமிழ் சினிமாவில் பல்வேறு முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து புகழின் உச்சிக்கு சென்ற இவர்,

                  அதே நேரம் பல்வேறு சர்ச்சைகளிலும் சிக்கினார். தற்போது இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வரும் இவர் கோவில் கோவிலாக, ஊர் ஊரக சுற்றி வருகிறார்.

                  இந்நிலையில், நயன்தாரா தனது வாழ்க்கையில் முக்கியமான நபர், அவரைபிரிந்ததற்காக ஒருமணிநேரம் கதறி கதறி அழுத சம்பவம் குறித்து பேசியுள்ளார்.

                  நயன்தாரா

                  தன்னுடைய வாழ்க்கையிலேயே மிகவும் சந்தோ‌ஷமான வி‌ஷயம் என்றால் தனது அண்ணன் மகள் பிறந்ததுதான்

                  எனவும், மேலும் ஏஞ்சலினா பிறந்த பிறகுதான் தனக்கு பட வாய்ப்புகள் கிடைத்து, சந்தோ‌ஷமான சம்பவங்கள் நடந்ததாகவும் கூறியுள்ளார்.

                  இந்நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது ஏஞ்சலினா தன்னுடன் இல்லாமல், துபாய்

                  சென்றுவிட்டதாகவும், அதை நினைத்து தான் அழுததாகவும் தெரிவித்துள்ளார் நயன்தாரா.

                  Posted in சினிமா

                  நயன்தாரா, டாப்சியை தொடர்ந்து சமந்தா

                  நயன்தாரா, டாப்சியை தொடர்ந்து சமந்தாதமிழ் திரையுலகை கடந்த சில வருடங்களாக பேய் படங்கள் ஆக்கிரமித்துள்ளன.

                  நயன்தாரா குற்ற பின்னணியிலான திகில் படங்களுக்கும் வரவேற்பு இருந்து வருகிறது.

                  புதுமுக டைரக்டர்கள் எல்லோரும் இதை புரிந்து கொண்டு திகில் படங்களை எடுத்து வருகிறார்கள்.

                  நயன்தாரா முன்னணி கதாநாயகர்கள் மற்றும் கதாநாயகிகளும் திகில் படங்களில் நடிப்பதில் ஆர்வமாக இருக்கிறார்கள்.

                  சமந்தா

                  இந்த நிலையில், ‘மாயா’ ‘இறவா காலம்’ ‘கேம் ஓவர்’ ஆகிய படங்களை இயக்கிய அஸ்வின் சரவணன் அடுத்ததாக ஒரு திகில் படத்தை இயக்க இருக்கிறார்.

                  அதில் கதாநாயகியாக சமந்தா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்துக்கு பிறகு சமந்தா தமிழில் நடிக்கும் படம், இது.

                  வருடைய கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்கிறது.