உன்னால் தவிக்கிறேன் ஏற்று விடு
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

உன்னால் தவிக்கிறேன் ஏற்று விடு

உன்னால் தவிக்கிறேன் ஏற்று விடு

கொஞ்ச நாளாய் உன்னை தேடி
கொஞ்சுதடி மனசு – உன்
கொண்டையில ஆடும் பூவா
குதிக்குதடி வயசு

கண்ணுக்குள்ள நீ இருக்க
காட்சிகளாய் கொட்டுதடி
என்னை கொல்லும் உன் நினைப்பை
எடுத்து போக வந்திடடி

ஆடியில ஆடும் காற்றாய்
ஆடிடலாம் வந்திடடி
ஆகாய வெண்ணிலவே
அடைக்கலம் தந்திடடி

உன்னை சுமக்கும் என் நெஞ்சை
உயிரே சுமக்க வந்திடடி – நான்
உயிராய் இருப்பேன்
உயிரே ஏற்றிடடி .

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 04-02-2024

தவிக்கிறேன்
Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

உன்னை எண்ணி தவிக்கிறேன் ..!

உன்னை எண்ணி தவிக்கிறேன் ..!

என்ன செய் தாயோ
என்னை ஏங்க வைத்தாயோ
என்னை ஏங்க வைத்தேனோ
என் இதயம் பறித்தாயோ

முன் பனியாய் பின்னிரவில்
முன்னே வாராயோ – நான்
முழு நிலவில் குளித்திட
முழு உலா வாராயோ

எதுகை மோனை எனதாகும் – என்
ஏக்கம் வாங்கு உனதாகும்
படித்து பாரு புதிராகும்
படைக்க முனை விழிப்பாகும்

சந்தம் இல்லா பாட்டுக்குள்ளே
சங்கதி இருக்காதே
அந்தி சாயும் வேளையிலே
ஆள் மனம் தூங்காதே

முத்தம் தரவா முன்னே வரவா
முழு நிலவே பதில் தர வா
நித்தம் வரவா நீளும் இரவா
நினைவில் வைத்திட வா

உன்னை எண்ணி தவிக்கிறேன்
உருகி மெழுகாய் அழுகிறேன்
வின் விட்டு வாராயோ
விழுந்து உடல் தழுவாயோ ..?

வன்னி மைந்தன்
ஆக்கம் 03-01-2022

Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

உன்னால் தவிக்கிறேன் …!

உன்னால் தவிக்கிறேன் …!

பச்சை வன தோப்புக்குள்ள
பாவி புள்ள நீ நடக்க …
சேலை நுனி தேயுதடி
சேர்ந்து மனம் கரையுதடி …

வீடுடைத்த காற்று போல
வீதியில சுத்துறியே …
காயம் பட்ட என் மனதை
காணமலே நிக்கிறியே …

சேதி சொல்லும் வானொலியே – என்
சேதங்களை காணலையோ ..?
ஆடி புயல் ஆனவளே -என்
ஆள் மனது புரியலையோ .. ..?

விதி செய்த விளையாட்டில்
விளையாடுது வாலிபமே …
முடிவெடுக்க முடியாது
முன் நிலா தடுமாறுது ….

கதிரவன் பார்வையிலே
காயுது புடைவைகளே …
கண்ணே உன் காலடியில்
காத்திருக்கேன் நான் மயிலே ….

வன்னி மைந்தன் – ( ஜெகன் )
ஆக்கம் -22/02/2019

Home » தவிக்கிறேன்