Tag: தவிக்கிறேன்
உன்னால் தவிக்கிறேன் ஏற்று விடு
உன்னால் தவிக்கிறேன் ஏற்று விடு
கொஞ்ச நாளாய் உன்னை தேடி
கொஞ்சுதடி மனசு – உன்
கொண்டையில ஆடும் பூவா
குதிக்குதடி வயசு
கண்ணுக்குள்ள நீ இருக்க
காட்சிகளாய் கொட்டுதடி
என்னை கொல்லும் உன் நினைப்பை
எடுத்து போக வந்திடடி
ஆடியில ஆடும் காற்றாய்
ஆடிடலாம் வந்திடடி
ஆகாய வெண்ணிலவே
அடைக்கலம் தந்திடடி
உன்னை சுமக்கும் என் நெஞ்சை
உயிரே சுமக்க வந்திடடி – நான்
உயிராய் இருப்பேன்
உயிரே ஏற்றிடடி .
வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 04-02-2024
- மீள வருவாயா
- ஒரு நாள் வெல்வேன்
- எப்படி நான் பேசிடுவேன்
- என்னை விடு
- நேரில் வந்து விடு
- என் உயிரே நான் வெல்வேன்
- என்னை ஏற்று விடு
- என்னை அழைப்பாயா
- அடைத்து வைக்க வாவேண்டி
- கவலைப் படுகிறேன்
- யார் மேல் குற்றம்
- காதலே சோகமா
- கண்டதெல்லாம் கனவு
- ஏமார்ந்த காதல்
- அர்ச்சுனா ஆவி பேசிறது
- எனக்கு என்ன ஆச்சு
- எனக்கொரு பதில் சொல்லாயோ
- உன்னால் தவிக்கிறேன்
- மன்னித்து விடு
- அர்ச்சுனா எங்கள் அவதாரம்
உன்னை எண்ணி தவிக்கிறேன் ..!
உன்னை எண்ணி தவிக்கிறேன் ..!
என்ன செய் தாயோ
என்னை ஏங்க வைத்தாயோ
என்னை ஏங்க வைத்தேனோ
என் இதயம் பறித்தாயோ
முன் பனியாய் பின்னிரவில்
முன்னே வாராயோ – நான்
முழு நிலவில் குளித்திட
முழு உலா வாராயோ
எதுகை மோனை எனதாகும் – என்
ஏக்கம் வாங்கு உனதாகும்
படித்து பாரு புதிராகும்
படைக்க முனை விழிப்பாகும்
சந்தம் இல்லா பாட்டுக்குள்ளே
சங்கதி இருக்காதே
அந்தி சாயும் வேளையிலே
ஆள் மனம் தூங்காதே
முத்தம் தரவா முன்னே வரவா
முழு நிலவே பதில் தர வா
நித்தம் வரவா நீளும் இரவா
நினைவில் வைத்திட வா
உன்னை எண்ணி தவிக்கிறேன்
உருகி மெழுகாய் அழுகிறேன்
வின் விட்டு வாராயோ
விழுந்து உடல் தழுவாயோ ..?
வன்னி மைந்தன்
ஆக்கம் 03-01-2022
- காசாவில் இன அழிப்பு திட்டம் தொடர்கிறது என்கிறார் நெதன்யாகு
- லெபனானில் இஸ்ரேல் நடத்தும் போரினால் பத்து லட்சம் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்
- பாகிஸ்தான் பயிற்சி மையத்தில் கூரை இடிந்து விழுந்ததில் 14 குழந்தைகள் பலி
- வில்பட்டு தேசியப் பூங்காவில் கரை ஒதுங்கிய இறந்த டால்பின்
- தானசாலை வாக்குவாதம் ஐவர் கைது
- நெல்லை வாங்க மறுக்கும் அரசு விவசாயிகள் குமுறல்
- வேலைக்கு ஆள் இல்ல வெளிநாட்டவர்களை இறக்க தயாராகும் அரசு
- பக்தர்களுக்கு வெற்றிலை புகையிலை வழங்கியவரை தூக்கிய அனுரா அரசு
- அமெரிக்கத் தூதர்களைச் சந்திக்கப் போவதில்லை என ஈரான் தெரிவித்துள்ளது
- முன்னாள் எரிசக்தி அமைச்சர் குமார ஜயகோடியிடம் ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை நடத்தியது
- tiktok கொக்கி குமார் மரணம் நடந்தது என்ன
- காசா தாக்குதலுக்குப் பிறகு சர்வதேச மௌனத்தைக் கண்டிக்கிறது ஹமாஸ்
- அரேபிய தேசத்தில் அமெரிக்கா கதை முடிந்தது ஈரான் அறிவிப்பு
- பெட்ரோல் டீசல் விலைகள் குறைப்பு
- வாட்ஸ்அப் இப்போது பயனர்பெயர்களை முன்பதிவு செய்ய அனுமதிக்கிறது
- ஜெர்மனியில் ஆறு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்
உன்னால் தவிக்கிறேன் …!
உன்னால் தவிக்கிறேன் …!
பச்சை வன தோப்புக்குள்ள
பாவி புள்ள நீ நடக்க …
சேலை நுனி தேயுதடி
சேர்ந்து மனம் கரையுதடி …
வீடுடைத்த காற்று போல
வீதியில சுத்துறியே …
காயம் பட்ட என் மனதை
காணமலே நிக்கிறியே …
சேதி சொல்லும் வானொலியே – என்
சேதங்களை காணலையோ ..?
ஆடி புயல் ஆனவளே -என்
ஆள் மனது புரியலையோ .. ..?
விதி செய்த விளையாட்டில்
விளையாடுது வாலிபமே …
முடிவெடுக்க முடியாது
முன் நிலா தடுமாறுது ….
கதிரவன் பார்வையிலே
காயுது புடைவைகளே …
கண்ணே உன் காலடியில்
காத்திருக்கேன் நான் மயிலே ….
வன்னி மைந்தன் – ( ஜெகன் )
ஆக்கம் -22/02/2019












































