Posted in இலங்கை செய்திகள்

சீமெந்து அதிக விலைக்கு விற்றவ கைது

சீமெந்து அதிக விலைக்கு விற்றவ கைது

இலங்கை கட்டுவதை பகுதியில் சீமெந்தினை அதிக விலைக்கு விற்ற முதியவர் ஒருவர் கைது செய்ய பட்டுளளார்
போலீசாருக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலை அடுத்தே மேற்படி கைது இடம்பெற்றுள்ளது

    கொத்து குண்டு தாக்குதலில் 12 சிறுவர்கள் மரணம் - சவூதி அட்டூழியம்
    Posted in இலங்கை செய்திகள்

    அம்புலன்ஸ் மீது துப்பாக்கி சூடு

    அம்புலன்ஸ் மீது துப்பாக்கி சூடு

    இலங்கை பாணந்துறை பகுதியில் பயணித்து கொண்டிருந்த அம்புலன்ஸ் ஒன்றின் சாரதியை இலக்கு வைத்து துப்பாக்கி சூடு நடத்த பட்டுள்ளது

    எனினும் அதில் இருந்து சாரதி தப்பித்துள்ளார்

    இந்த சூட்டு சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன

      Posted in இலங்கை செய்திகள்

      காணாமற்போனோர் தொடர்பான மக்களின் முறைப்பாடுகள் குறித்த விசாரணைகள் – வடக்கில் ஆரம்பம்

      காணாமற்போனோர் தொடர்பான மக்களின் முறைப்பாடுகள் குறித்த விசாரணைகள் – வடக்கில் ஆரம்பம்

      2016 ஆம் ஆண்டு இலக்கம் 17 கீழான காணாமற்போனோர் தொடர்பான சட்டத்திற்கு அமைவாக பொது மக்களின் முறைப்பாடுகள் குறித்த விசாரணைகள் தற்போது இடம்பெறுகிறது.

      பயங்கரவாதம் முடிவுக்கு கொண்டுரப்பட்ட பின்னர் 2009 ஆண்டுக்குப்பின்னர் காணாமற்போனோர் தொடர்பாக கண்டறியும் ஆணைக்குழுவுக்கு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

      கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் எந்தவொரு முறைப்பாடு பற்றியும் விசாரணை மேற்கொள்ளப்படவில்லை. எனினும், தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன் இந்த முறைப்பாடுகளை ஆராய்வதற்குத் தீர்மானித்தது.

      இதற்கமைவாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவின் ஆலோசனைக்கமைவாக, நீதி அமைச்சர் அலி சப்ரியின் பங்கேற்பில் வடமாகாணத்தில் நடமாடும் சேவை முன்னெடுக்கப்படுகிறது.

      நீதிக்கான அணுகல் என்ற தொனிப்பொருளில் வடமாகாணத்தில் தொடர்ச்சியாக நான்கு நாட்களுக்கு நடைபெறும்,; நடமாடும் சேவைகள் மூலம் மக்களைத் தெளிவூட்டுவதற்கு இதன் மூலம் எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

      நீதியமைச்சினால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் மக்கள் மயப்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் முதல் கட்டமாக வடமாகாணத்தை தெரிவு செய்து தீர்வு வழங்க முன்வந்திருப்பதாக நீதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

      இதன் மூலம் வடக்கு, கிழக்கில் வாழும் மக்களின் சொந்த இடங்களுக்குச் சென்று தீர்வு வழங்க நடவடிக்கை எடுத்திருக்கிறோம். தேசிய பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான பொறிமுறை நாட்டில் ஏற்படுத்தப்பட்டிருப்பதாகவும்; குறிப்பிட்ட அவர் காணாமல் போனோர் உட்பட ஏனைய பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு சாத்தியமான திட்டங்களை தற்போதைய அரசாங்கம் முன்னெடுத்திருப்பதாகவும் தெரிவித்தார்.

      நீதியமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படும் நீதிக்கான அணுகல் என்ற தொனிப்பொருளில் கிராமத்திற்கு கிராமம் வீட்டுக்கு வீடு என்ற இந்த நடமாடும் சேவை கிளிநொச்சி மத்திய மகாவித்தியாலத்தில் இன்று 27 ஆரம்பமாகவுள்ளது.

      நடமாடும் சேவை நாளை வரை இங்கு நடைபெறும். காலை 9.00 மணி தொடக்கம் மாலை 5.00 மணி வரை பொதுமக்கள் தனது பிரச்சினைகளை இங்கு முன்வைக்க முடியும்.

      இதனைத் தொடர்ந்து 29 மற்றும் 30 ஆம் திகதிகளில் யாழ் மத்திய மகா வித்தியாலத்திலும் நடமாடும் சேவை நடைபெறவுள்ளது.

      இதில் சட்ட உதவி ஆணைக்குழு, தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு, இழப்பீட்டுக்கான அலுவலகம், பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சியங்களை பாதுகாக்கும் தேசிய அதிகார சபை, கடன் சபைகள் திணைக்களம், சமுதாய சார் சீர் திருத்த திணைக்களம் ,புனர்வாழ்வளிப்பு ஆணையாளர் நாயக பணியகம், மத்தியஸ்த சபைகள் ஆணைக்குழு, சிறைச்சாலை திணைக்களம் காணாமல் போன ஆட்கள் பற்றிய திணைக்களம், ஆட்பதிவு திணைக்களம், பதிவாளர் திணைக்களம், மாகாண காணிகள் திணைக்களம், பனை அபிவிருத்தி சபை, தொழில் முயற்சிகள் அபிவிருத்தி பிரிவு, தொழிற்பயிற்சி அதிகார சபை ஆகிய நிறுவகங்களின் உயர் அதிகாரிகள் இதில் கலந்து கொள்ளவுள்ளனர்.

        Posted in இலங்கை செய்திகள்

        சிறைச்சாலைககளில் இடம்பெறும் ஊழல்

        சிறைச்சாலைககளில் இடம்பெறும் ஊழல்

        சிறைச்சாலைகளில் ஊழல் மற்றும் முறைகேடுகளை முறியடிப்பதற்கும், இவற்றுடன் தொடர்புடைய பிரச்சினைகளை மிகவும் வெளிப்படையான அணுகுமுறையில் கட்டுப்படுத்துவதற்கும் ‘இலங்கை சிறைச்சாலைகள் அவசர நடவடிக்கை மற்றும்

        தந்திரோபாயப் படை’ அறிமுகப்படுத்தப்பட்டதாக பாதுகாப்புச் செயலாளரும், ஒழுக்கமான, நல்லொழுக்கமுள்ள மற்றும் சட்டங்களை மதித்து நடக்கும் பிரஜைகள் தொடர்பான ஜனாதிபதி செயலணியின் தலைவருமான ஜெனரல் கமல் குணரத்ன நேற்று (ஜனவரி 26) தெரிவித்தார்.

        ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவின் வழிகாட்டுதலின் கீழ் சிறைச்சாலை நடைமுறையில் மறுசீரமைப்பை அறிமுகப்படுத்தும் வேலைத் திட்டத்தின் ஓர் அங்கமாக ‘இலங்கை சிறைச்சாலைகள் அவசர நடவடிக்கை மற்றும் தந்திரோபாயப் படை’ என்ற கருத்தாக்கம் சிறைச்சாலைகள் திணைக்களத்திற்கு கொண்டு வரப்பட்டது. மேலும், ‘சுபீட்சத்தின் நோக்கு’ கொள்கை பிரகடனத்தில் உறுதியளிக்கப்பட்டவாறு பாதுகாப்பான நாடு, ஒழுக்கம், மற்றும் சட்டத்தை மதித்து நடக்கும் சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

        இலங்கை சிறைச்சாலைகள் அவசர நடவடிக்கை மற்றும் தந்திரோபாயப் படை வீரர்கள் 194 பேர் சிறைச்சாலை சேவையில் இணைவு

        பயிற்சிகளை முடித்துக் கொண்டு வெளியேறுவோரின் மரியாதை அணிவகுப்பில் பாதுகாப்பு செயலாளர் பிரதம அதிதியாக கலந்து சிறப்பிப்பு

        அங்குனகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் உள்ள திருத்தங்கள் தொடர்பான ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையத்தில் இன்று நடைபெற்ற ‘இலங்கை சிறைச்சாலைகள் அவசர நடவடிக்கை மற்றும் தந்திரோபாயப் படை’யில் பயிற்சிகளை முடித்து கொண்டு வெளியேறும் வீரர்களின் அணிவகுப்பு நிகழ்வில் ஜெனரல் குணரத்ன பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

        குறித்த நிகழ்விற்கு வருகை தந்த பிரதம அதிதியான ஜெனரல் கமல் குணரத்னவை சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய வரவேற்றார்.

        ‘இலங்கை சிறைச்சாலைகள் அவசர நடவடிக்கை மற்றும் தந்திரோபாயப் படையில் பயிற்சியினை பூர்த்தி செய்து வெளியேறும் 194 பேரினால் பாதுகாப்புச் செயலாளருக்கு மரியாதை அணிவகுப்பு வழங்கப்பட்டது.

        பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட பாதுகாப்புச் செயலாளர் அங்கு மேலும் உரையாற்றுகையில் “இலங்கை சிறைச்சாலைகள் அவசர நடவடிக்கை மற்றும் தந்திரோபாயப் படையில் 500 வீரர்களை இணைத்துக் கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் முதற்கட்டமாக இன்றைய தினம் 194 படைவீரர்கள் தமது பயிற்சியினை பூர்த்தி செய்து வெளியேறுகின்றனர் எனக் குறிப்பிட்டார்.

        “ஊழல் மற்றும் தவறான நடத்தைகளை முறியடிக்கவும், மேலும் வெளிப்படையான அணுகுமுறையில் பிரச்சினைகளை கட்டுப்படுத்தவும் இவர்கள் துணை நிற்பார்கள் என இந்த நடவடிக்கையின் நோக்கத்தை அவர் விளக்கினார்.

        புதிதாக வெளியேறிய இலங்கை சிறைச்சாலைகள் அவசர நடவடிக்கை மற்றும் தந்திரோபாயப் படை’ வீரர்கள் மத்தியில் உரையாற்றிய அவர், “உங்கள் உள்ளார்ந்த ஒழுக்கம், தைரியம் மற்றும் அர்ப்பணிப்பு காரணமாக நீங்கள் அனைவரும் பணியமர்த்தப்பட்டு பயிற்சி பெற்றுள்ளீர்கள், எனவே சிறைக் கைதிகளைக் கையாளும் போது சுய ஒழுக்கத்துடன் மனிதாபிமான அணுகுமுறையுடன் உங்கள் பணியினை திறம்பட மேற்கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கினார்.

        “இந்தக் கைதிகள், அவர்களின் சிறைக் காலத்தை முடித்து மீண்டும் சமூகத்தில் ஒன்றிணைக்கப்படுவதற்கு முன்னராக பயனுள்ள நபர்களாக மாற்றுவதில் உங்கள் முயற்சிகளும் முக்கிய பங்கு வகிக்கிறது” என அவர் வலியுறுத்தினார்.

        வெகு விமர்சையாக இடம்பெற்ற இந்த நிகழ்வில் பாதுகாப்பு செயலாளருக்கு ‘இலங்கை சிறைச்சாலைகள் அவசர நடவடிக்கை மற்றும் தந்திரோபாயப் படை’ படையின் உத்தியோகபூர்வ சின்னம் வழங்கப்பட்டதுடன், பயிற்சி மற்றும் கலவரத்தை கட்டுப்படுத்தும் காட்சிகள், அணிவகுப்பு மற்றும் நான்கு மாத பயிற்சியின் போது சிறந்து விளங்கியவர்களுக்கு விருதுகள் வழங்கி வைக்கப்பட்டன.

        தேசிய புலனாய்வு பிரதானி மேஜர் ஜெனரல் ருவன் குலதுங்க, இந்நிகழ்வில், சிறைச்சாலைகள் மேலதிக ஆணையாளர் நாயகம் துசித உடுவர, சிறைச்சாலைகள் ஆணையாளர் (நிர்வாகம், புனர்வாழ்வு மற்றும் திறன் அபிவிருத்தி) மற்றும் ஊடகப் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க, சிறைச்சாலைகள் ஆணையாளர் (விநியோகம் மற்றும் சேவைகள்) சுனில் கொடித்துவக்கு, சிறைச்சாலைகள் ஆணையாளர் (தொழில்துறை மற்றும் அபிவிருத்தி) மாலின் லியனகே, சிறைச்சாலைகள் பயிற்சி பணிப்பாளர் சேனக பல்லேதன்ன, SPEAT படையின் கட்டளை அதிகாரி சிறைச்சாலைகள் உதவி அத்தியட்சகர் பிரசாத் பிரேமதிலக்க, சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் மற்றும் அதிதிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

        Posted in இலங்கை செய்திகள்

        தனிமையில் இருந்து மூதாட்டி கொலை

        தனிமையில் இருந்து மூதாட்டி கொலை
        சாய்ந்தமருது பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றில் தனியாக வசித்துவரும் 85 வயது மூதாட்டியை கொலை செய்துவிட்டு அவர் அணிந்திருந்த தங்க ஆபரணங்களை கொள்ளையர்கள் கொள்ளையடிச் சென்றுள்ள சம்பவம் இன்று (27) அதிகாலையில் இடம்பெற்றுள்ளதாக சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் எஸ்.எல். சம்சுதீன் தெரிவித்தார்.

        சாய்ந்தமருது-15 பிரிவு புதுப்பள்ளி வீதியைச் சேர்ந்த ஆறு பிள்ளைகளின் தாயாரான 85 வயதை உடைய ´சுலைமான் செய்யது புஹாரி´ என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார்.

        குறித்த மூதாட்டி குறித்த வீட்டில் தனியாக வசித்து வருகின்ற நிலையில் சம்பவ தினமான இன்று காலையில் அவரது நான்காவது மகன் வழமைபோல காலை உணவை தாயாருக்கு கொண்டு சென்ற போது தாயார் உயிரிழந்த நிலையில் காணப்பட்டதையடுத்து பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டது.

        இதனையடுத்து பொலிசார் சம்பவ இடத்துக்கு சென்று மேற்கொண்ட விசாரணையில் குறித்த மூதாட்டி தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதுடன் அவரிடம் இருந்த தங்க ஆபரணங்களை கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

        இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சாய்ந்தமருது பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

        Posted in இலங்கை செய்திகள்

        விபத்துக்களில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் உட்பட நால்வர் உயிரிழப்பு

        விபத்துக்களில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் உட்பட நால்வர் உயிரிழப்பு

        நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் உட்பட நால்வர் உயிரிழந்துள்ளனர்.

        தலங்கம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொஸ்வத்தை டென்சில் கொப்பேகடுவ மாவத்தையில் மத்திய சுற்றாடல் அதிகார சபைக்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் 27 வயதான பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

        இந்த விபத்து நேற்று (25) இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

        மோட்டார் சைக்கிளில் பயணித்த குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி கவிழ்ந்து விபத்துக்கு உள்ளாகி உள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

        உயிரிழந்தவர் கரந்தகொல்ல பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும், மேல் மாகாண தெற்கு போக்குவரத்துப் பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

        இதேவேளை, மீகொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவலமுல்ல – லெனகல வீதியின் நாவலமுல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் 48 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

        லெனகல நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்கு உள்ளாகி உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

        இதேவேளை, திம்புலபத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மவுண்ட்வர்நாத்தின் மேல் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 37 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

        இந்த விபத்து நேற்று (25) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

        இதேவேளை, வெலிகேபொல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கபுகல ரஜவக வீதியில் டிப்பர் வாகனம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி மரத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

        விபத்தில் பலாங்கொடை, மகுனமலை பகுதியைச் சேர்ந்த 50 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார்.

          Posted in இலங்கை செய்திகள்

          உருகுலைந்த நிலையில் சடலம் மீட்பு

          உருகுலைந்த நிலையில் சடலம் மீட்பு

          மூன்று மாடி கட்டிடத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த இனந்தெரியாத நபரின் சடலம் உருகுலைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக ஆராச்சிக்கட்டுவ பொலிஸார் தெரிவித்தனர்.

          சிலாபம் பிரதான நீதவான் மற்றும் மாவட்ட நீதிபதி நவீன் இந்திரஜித் புத்ததாச சம்பவம் தொடர்பில் ஆரம்பகட்ட விசாரணைகளை மேற்கொண்டார்.

          மாவட்ட நீதிபதியின் உத்தரவுக்கமைய மேலதிக விசாரணைகளுக்காக சடலம் சிலாபம் பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

          குறித்த கட்டிடத்தில் இருந்து பல நாட்களாக துர்நாற்றம் வீசியதால் நேற்று (25) பிற்பகல் குறித்த சடலம் பிரதேசவாசிகளால் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

          கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் உள்ள ஒரு அறையின் படுக்கையில் இரண்டு தனித்தனி துண்டுகளாக்கப்பட்ட நிலையில் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

          ஆராச்சிக்கட்டுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

            தமிழக மீனவர்கள்
            Posted in இலங்கை செய்திகள்

            தமிழக மீனவர்கள் 55 பேர் விடுதலை

            தமிழக மீனவர்கள் 55 பேர் விடுதலை

            இலங்கை கடற்பரப்பில் கைதான 55 இந்திய மீனவர்கள் நிபந்தனையுடன் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தால் நேற்று விடுதலை செய்யப்பட்டனர்.

            நெடுந்தீவு மற்றும் எழுவைதீவு அருகே கடந்த மாதம் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்டிருந்த இந்திய மீனவர்கள் 55 பேருக்கான ஆறு மாதகால சாதாரண சிறை ஐந்து ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்டது.

            இவர்களது கைவிரல் அடையாளங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், ஐந்தாண்டு காலத்தில் மீண்டும் இலங்கை பகுதிக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டால் அவர்களை உடனடியாக கைது செய்வதற்கும் நீதவான் கஜநிதிபாலன் உத்தரவிட்டார். 

            ஊர்காவற்றுறை நீதிமன்றில் இந்த வழக்கு எடுக்கப்பட்ட நிலையில் இந்திய மீனவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில் இலங்கை குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் ஊடாக இந்தியாவுக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கவும் நீதவான் உத்தரவிட்டார்.

            விடுவிக்கப்பட்ட 55 மீனவர்கள்

            எஸ். நிதர்ஷன்

            இலங்கை கடற்பரப்பில் கைதான 55 இந்திய மீனவர்கள் நிபந்தனையுடன் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தால் நேற்று விடுதலை செய்யப்பட்டனர்.

            நெடுந்தீவு மற்றும் எழுவைதீவு அருகே கடந்த மாதம் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்டிருந்த இந்திய மீனவர்கள் 55 பேருக்கான ஆறு மாதகால சாதாரண சிறை ஐந்து ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்டது.

            இவர்களது கைவிரல் அடையாளங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், ஐந்தாண்டு காலத்தில் மீண்டும் இலங்கை பகுதிக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டால் அவர்களை உடனடியாக கைது செய்வதற்கும் நீதவான் கஜநிதிபாலன் உத்தரவிட்டார். 

            ஊர்காவற்றுறை நீதிமன்றில் இந்த வழக்கு எடுக்கப்பட்ட நிலையில் இந்திய மீனவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில் இலங்கை குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் ஊடாக இந்தியாவுக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கவும் நீதவான் உத்தரவிட்டார்.

            பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம்
            Posted in இலங்கை செய்திகள்

            மட்டக்களப்பில் 2147 பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம்

            மட்டக்களப்பில் 2147 பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம்

            மட்டக்களப்பு மாவட்டத்தில் நாட்டைக் கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு கொள்கை பிரகடனத்திற்கு அமைவாக 2,147 பட்டதாரி பயிலுனர்களுக்கு நிரந்தர நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

            இதற்கமைவாக அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் கீழ் இணைத்துக்கொள்ளப்பட்ட பட்டதாரிகளுள் 287 பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வு, பின்தங்கிய கிராமங்கள் அபிவிருத்தி

            , உள்நாட்டு கால்நடை பராமரிப்பு மற்றும் சிறு பொருளாதார பயிர் ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் எஸ். வியாழேந்திரன்; மற்றும் மட்டக்களப்பு மாவட்ட

            பாராளுமன்ற உறுப்பினரும் அபிவிருத்திக் குழுத் தலைவருமாகிய சிவனேசதுரை சந்திரகாந்தன் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் நேற்று (25) இடம்பெற்றது.

            மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை கருணாகரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வு இடம்பெற்றது

            இதனடிப்படையில் மாவட்ட செயலகத்திற்கு 13 பேரும், ஏறாவூர் பற்று பிரதேச செயலகத்திற்கு 19 பேரும், ஏறாவூர் நகர் பிரதேச செயலகத்திற்கு 14 பேரும், காத்தான்குடி பிரதேச செயலகத்திற்கு 12 பேரும், கோறளைப்பற்று பிரதேச

            செயலகத்திற்கு 7 பேரும், கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்திற்கு 8 பேரும், வாகரை மற்றும் கிரான் பிரதேச செயலகங்களுக்கு தலா 26 பேரும் இணைத்துக்கொள்ளப்பட்டனர்.
            கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலகத்திற்கு 8 பேரும், மண்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு 23 பேரும், மண்முனைப் பற்று பிரதேச செயலகத்திற்கு 15 பேரும், களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகத்திற்கு 48 பேரும், பட்டிப்பளை பிரதேச

            செயலகத்திற்கு 21 பேரும், வவுணதீவு பிரதேச செயலகத்திற்கு 18 பேரும் வெல்லாவெளி பிரதேச செயலகத்திற்கு 23 பேருமாக 281 பேர் நிரந்தர நியமனக் கடிதங்களை பெற்றுள்ளனர்.
            பயிற்சிக் காலத்தினைப் பூர்த்தி செய்யாதவர்களுக்கும் இதன்போது நிரந்தர நிலையத்திற்கான இணைப்புக் கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளதுடன் அவர்களது

            பயிற்சிக் காலம் நிறைவுற்றதும் அந்த நிலையத்திலேயே அவர்ளுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

              பைசர்
              Posted in இலங்கை செய்திகள்

              16 – 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு இன்று முதல் பைசர் இரண்டாவது டோஸ்

              16 – 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு இன்று முதல் பைசர் இரண்டாவது டோஸ்

              பைசர் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் இன்று முதல் 16 – 19 வயதுக்குட்பட்டவர்களுக்கு வழங்கப்படும் என மருந்து உற்பத்தி, வழங்கல் மற்றும் ஒழுங்குமுறை இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார்.

              இதுதொடர்பாக இன்று (25) தெரிவிக்கையில் ,

              பைசர் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் பொதுவாக முதல் டோஸைப் பெற்று 4 வாரங்களுக்குள் வழங்கப்படுகின்றது. ஆனால் இலங்கையில் தடுப்பூசி நிபுணர்

              குழுவின் பரிந்துரையின்படி, 16 – 19 வயதுக்குட்பட்டவர்களுக்கு முதல் டோஸ் வழங்கப்பட்டு 3 மாதங்களுக்கு பின்னரே இரண்டாவது டோஸை வழங்கப்படுகின்றது என்று அமைச்சர் தெரிவித்தார்.

              இந்த வயதிற்கு உடபட்டவர்களுக்கு, முதல் டோஸை பெற்றுக் கொண்டவர்களின் இரண்டாவது டோஸைப் பெற்றுக் கொள்ளும் காலம் இன்றுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. எனவே, அவர்கள் இன்று முதல் இரண்டாவது டோஸ் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள

              முடியும். 20 வயதுக்கு மேற்பட்டவர்கள் எந்த வகை இரண்டாவது டோஸ் தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டிருந்தபோதிலும், மூன்று மாதம் நிறைவடைந்திருந்தால் அவர்கள்

              பூஸ்டர் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள முடியும். இதற்கு போதுமான பைஸர் தடுப்பூசிகள் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் கூறினார்.

              உலகெங்கிலும் ஓமிக்ரோன் திரிபு காரணமாக கொவிட் 19 இன் புதிய அலை உருவாகி வருவதால், அடுத்த இரண்டு அல்லது மூன்று வாரங்களில் இலங்கையும்

              பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் காணப்படுகின்றன. எனவே உடனடியாக பூஸ்டர் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளுமாறு அவர் அனைவரையும் வலியுறுத்தினார்.

              அத்துடன், சிலர் இரண்டாவது டோஸ் தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டு 6 – 7 மாதங்கள் நிறைவடைந்துள்ளதால், முதல் மற்றும் இரண்டாவது டோஸ்களின் செயல்திறன் மற்றும்

              பாதுகாப்பு கணிசமாகக் குறைந்துள்ளது. அவர்கள் கண்டிப்பாக மூன்றாவது டோஸ் பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் மேலும் கூறினார்

              Posted in இலங்கை செய்திகள்

              நோயாளிகளால் நிரம்பி வழிகிறது நோயியல் வைத்தியசாலை

              நோயாளிகளால் நிரம்பி வழிகிறது நோயியல் வைத்தியசாலை

              இலங்கையில் ஒமிக்ரோன் பரவலால், தேசிய தொற்று நோயியல் வைத்தியசாலையில்

              (IDH) நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் ஹசித்த அத்தநாயக்க தெரிவித்தார்.

              தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை

              அதிகரிப்பதுடன், அவர்களுக்கான ஒக்சிஜனின் தேவையும் அதிகரித்து வருகிறதாகவும் அவர் குறிப்பிட்டார்.

              பேருந்துகளில் நின்று பயணித்தால்
              Posted in இலங்கை செய்திகள்

              பேருந்துகளில் நின்று பயணித்தால் என்ன நடக்கும் தெரியுமா .? – புதிய சட்டம்

              பேருந்துகளில் நின்று பயணித்தால் என்ன நடக்கும் தெரியுமா .? – புதிய சட்டம்

              பஸ்களில் இருக்கைகளை விட அதிகமான பயணிகளை ஏற்றிச் சென்றால் இரண்டு வகையான

              பஸ் கட்டணங்கள் அறிமுகப்படுத்தப்படும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

              அமர்ந்திருக்கும் பயணிகளுக்கு ஒரு கட்டணமும் நின்று கொண்டு செல்லும் பயணிகளுக்கு ஒரு கட்டணமும் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

              இருக்கைகளுக்கு ஏற்ப பயணிகளை ஏற்றிச் செல்லும் விதிமுறைகளை மீறும் அனைத்து

              பஸ்களையும் பறிமுதல் செய்யுமாறு கடந்த வாரம் பொலிஸ்மா அதிபருக்கு எழுத்து மூலம் அறிவித்திருந்தது.

              பெரும்பாலான பகுதிகளில் இந்த உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளதாகவும், எனினும்

              கிராமப்புறங்களில் இந்த விதிமுறை மீறப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

              இந்த நடவடிக்கை நிறுத்தப்படாவிட்டால், பஸ்களில் நின்று பயணிக்கும் பயணிகளுக்கு தனியான கட்டணம் அறிமுகப்படுத்தப்படும் குறிப்பிட்டார்.

                தயா மாஸ்டர்
                Posted in இலங்கை செய்திகள்

                தயா மாஸ்டருக்கு சிறைத்தண்டனை

                தயா மாஸ்டருக்கு சிறைத்தண்டனை

                தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடக இணைப்பாளராக செயற்பட்ட தயாமாஸ்டர் என அழைக்கப்படும் வேலாயுதம் தயாநிதி மீது தொடரப்பட்ட வழக்கிலிருந்து

                விடுவிக்கப்பட்டுள்ளதுடன், அவருக்கு ஐந்து வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட இரண்டு வருட சிறைத்தண்டனை வழங்கி வவுனியா மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

                தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடகப் பேச்சாளராக இருந்த தயா மாஸ்டர் போரின் இறுதிக்கட்டத்தில் படையினரிடம் சரணடைந்தார்.

                இந்த நிலையில் தயா மாஸ்டருக்கு எதிராக பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் சட்டமா அதிபரால் வவுனியா மேல் நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட்டது.

                குறிப்பாக கடந்த 2009ஆம் ஆண்டு பெப்ரவரி முதலாம் திகதி தொடக்கம் 2009 மே 18ஆம் திகதிக்கு உட்பட்ட காலப்பகுதிக்குள் தடை செய்யப்பட்ட இயக்கமான தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர்களுடன் இணைந்து செயற்பட்டமை தொடர்பாக குறித்த வழக்கு தொடரப்பட்டது.

                2006ஆம் ஆண்டின் 7ஆம் இலக்க பயங்கரவாதம் மற்றும் குறித்துரைக்கப்பட்ட பயங்கரவாதச் செயற்பாடுகளைத் தடுத்தல் விதிகளின் கீழ் தண்டனை விதிக்கப்படக் கூடிய குற்றத்தைப்

                புரிந்துள்ளதாக வவுனியா மேல் நீதிமன்றில் சட்டமா அதிபரால் 2018ஆம் ஆண்டு ஒக்டோபர் 19ஆம் திகதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

                வழக்கு செயற்பாடுகள் தொடர்ந்து இடம்பெற்றுவந்த நிலையில், இன்றைய தினம் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் முன்னிலையில் விசாரணைக்கு அழைக்கப்பட்டது.

                வழக்கில் தயாமாஸ்டர் மற்றும் அவர் சார்பாக சட்டத்தரணி எம்.எ. சுமந்திரன் ஆஜராகியிருந்தார்.

                குறித்த வழக்கில் தயாமாஸ்டருக்கு கட்டாய சிறைத்தண்டனை வழங்கவேண்டிய பிரிவுகளின் அடிப்படையில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டது.

                அந்த குற்றப்பத்திரிகை திருத்தப்பட்டு குறைந்த குற்றச்சாட்டுக்கள் மாத்திரம் அவர் மீது முன்வைக்கப்பட்டிருந்தது.

                அதன்படி அவர் தனது குற்றத்தினை ஒப்புக்கொண்டதையடுத்து அவருக்கு ஜந்து வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட இரண்டு வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

                  Posted in இலங்கை செய்திகள்

                  மருத்துவம மனை ஊழியர்கள் 23 பேருக்கு கொரனோ

                  மருத்துவம மனை ஊழியர்கள் 23 பேருக்கு கொரனோ

                  இலங்கை கோமகம ஆதார வைத்தியசாலையில் பணிபுரியும் 23 ஊழியர்களுக்கு பரவி வரும்


                  கொரனோ நோயானது தொற்றியுள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது

                  இதனால் அந்த வைத்தியசாலையில் பர பரப்பு ஏற்பட்டுள்ளதுடன் ,பணியாளர்களுக்கும் அச்சத்தில் உறைந்துள்ளனர்

                  தொடர்ந்து நோயின் தாக்குதல் அதிகரிப்பு வேகமாக பரவிய வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது

                    Posted in இலங்கை செய்திகள்

                    இலங்கையில் எலி காய்ச்சல் 476 பேர் மரணம்

                    இலங்கையில் எலி காய்ச்சல் 476 பேர் மரணம்

                    இலங்கையில் திடிரென எலி காய்ச்சலினால் மரணிப்போர் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது


                    கடந்த ஆண்டு காலி மாவட்டத்தில் மட்டும் 476 பேர் பலியாகியுள்ளதாக திடுக்கிடும் தகவல்

                    வெளியாகி மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது

                      கஞ்சா
                      Posted in இலங்கை செய்திகள்

                      சிக்கிய 300 மில்லியன் ரூபா கஞ்சா

                      சிக்கிய 300 மில்லியன் ரூபா கஞ்சா

                      இலங்கையின தென் ஆழ் கடல் பரப்பில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட ஹெரோயினின்

                      பெறுமதி 3 ஆயிரத்து 300 மில்லியன் ரூபாவுக்கும் அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

                      இந்த ஹெரோயினுடன் 11 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலதிக

                      விசாரணைகளை கடற்படையினரும், பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரும் மேற்கொண்டு வருகின்றனர்.

                      கடந்த 17 ஆம் திகதி தொடக்கம் 22 ஆம் திகதி வரையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

                      போதைப்பொருள் கடத்தல் தொடர்பான தகவல் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்திருந்த

                      நிலையில், பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரும் கடற்படையினரும் இணைந்து இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டனர்..

                        Posted in இலங்கை செய்திகள்

                        நெல் உற்பத்தி பாதிப்பு: இழப்பீடு வழங்க அமைச்சரவை அங்கீகாரம்

                        நெல் உற்பத்தி பாதிப்பு: இழப்பீடு வழங்க அமைச்சரவை அங்கீகாரம்

                        2021- 2022 பெரும்போக நெல் உற்பத்தி மூலமான அறுவடை குறைதிருந்தால் அதற்காக இழப்பீடு வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

                        இதற்கமைவாக விவசாயிகளுக்கு ஒரு கிலோ கிராம் நெல்லுக்கு 25 ரூபா வீதம் செலுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

                        இது தொடர்பாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவிக்கையில், 2020 பெரும்போகத்தில் 8 இலட்சம் ஹெக்டயர் நிலப்பரப்பில் நெல் உற்பத்தி செய்யப்பட்டது.

                        இவ்வாறு நெல் உற்பத்தியில் ஈடுபட்ட விவசாயிகளின் அறுவடையில் பாதிப்பு ஏற்பட்டிருக்குமாயின் இழப்பீடு வழங்குவதற்கு நேற்று (24) நடைபெற்ற அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டதாக அமைச்சர் தெரிவித்தார்.

                        இதற்காக 40 மில்லியனுக்கு மேற்பட்ட தொகை அரசாங்கத்தினால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர் நிதி அமைச்சினால் 229 மில்லியன் நிவாரண பொதி ஒன்றும் வழங்கப்பட்டதாக குறிப்பிட்டார்.

                        அரச ஊழியர்கள், சமுர்த்தி பயனாளிகள் உள்ளிட்ட பல்வேறு துறையை சேர்ந்தவர்களுக்கு இந்த நிவாரணம் வழங்கப்பட்டது. இதன்கீழ் விவசாயிகளுக்காக இந்த நிவாரணத்தை வழங்க தீர்மானிக்கப்பட்டது.

                        இதன் அடிப்படையில் கடந்த காலங்களில் விவசாயிகள் பாரிய ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.அரசாங்கத்தின் பசுமை விவசாய உற்பத்தியில் ஈடுபட்டதனாலேயே இந்த பாதிப்பு

                        ஏற்பட்டதாக விவசாயிகள் குறிப்பிட்டனர்.தமக்கு ஏற்பட்ட இழப்புக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் விவசாயிகள் அரசாங்கத்கத்திடம் கேட்டுக்கொண்டனர். விவசாய அமைச்சர் என்ற

                        ரீதியில் இழப்பீடு தொடர்பிலான வாக்குறுதியை விவசாயிகளுக்கு தாம் அப்பொழுது வழங்கியதாகவும் அமைச்சர் கூறினார்

                          Posted in இலங்கை செய்திகள்

                          மல்லாவியில் கிணற்றில் தூக்கில் தொங்கிய நிலையில் வாலிபன் சடலம் மீட்பு

                          மல்லாவியில் கிணற்றில் தூக்கில் தொங்கிய நிலையில் வாலிபன் சடலம் மீட்பு

                          முல்லைத்தீவு மாவட்டம் மல்லாவி தேறாங்கண்டல் பகுதியில் இளைஞர் ஒருவர் அவரின் வீட்டு

                          வளவினுள் உள்ள கிணற்றினுள் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

                          மல்லாவி தேறாங்கண்டல் பகுதியை சேர்ந்த கணேசன் புஸ்பராஜ் (23) என்ற இளைஞரே சடலமாக

                          மீட்கப்பட்டுள்ளார் என தெரியவந்துள்ளது.

                          குறித்த சம்பவம் கொலையா?தற்கொலையா என்ற கோணத்தில் மல்லாவி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

                            Posted in இலங்கை செய்திகள்

                            ஆசை காட்டி மோசம் செய்த பெண் -இப்படியும் கொள்ளை

                            ஆசை காட்டி மோசம் செய்த பெண் -இப்படியும் கொள்ளை

                            பாலியல் தேவைகளைப் பூர்த்தி செய்து தருவதாகக் கூறி, முதியவர் ஒருவரை தன் வலைக்குள் வீழ்த்திய கர்ப்பிணி பெண்ணொருவர், அந்த முதியவரிடம் இருந்த பணம் உள்ளிட்ட உடமைகளை அபகரித்துச் சென்றுள்ளார்.

                            பணம், கையடக்கதொலைபேசி, வங்கி அட்டை, உள்ளிட்டவற்றை அப்பெண் கொள்ளையிட்டு சென்றுள்ளார். அப்பெண்ணுக்கு உதவியதாகக் கூறப்படும், அப்பெண்ணின் முன்னாள் காதலன், கர்ப்பிணிப் பெண் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

                            இந்த சம்பவம், பேலியகொடை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. களனிப் பிரதேசத்தில் வைத்தே, அவ்விருவரையும் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

                            கைது செய்யப்படும் போது, அவ்விருவரிடமிருந்தும் 10 கிராம் 425 மில்லிகிராம் ஹெரோய்ன் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது.

                            பொருட்களை இழந்த முதியவர், பெலியகொடை பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டுக்கு அமைவாகவே இவ்விருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

                            பாலியல் தேவைகளைப் பூர்த்திச்செய்வதாக கூறிய கர்ப்பிணி பெண், அந்த முதியவரிடம்

                            விருப்பத்தைப் பெற்றுக்கொண்டுள்ளார். அதன்பிரகாரம், அம்முதியவருடன் செல்வதற்கு இன்றைக்கு இரண்டொரு நாட்களுக்கு முன்னர், அப்பெண் இணங்கியுள்ளார்.

                            தன்னுடைய கணவனுக்கு களவாக இந்த வேலையைச் செய்வதாக தெரிவித்துள்ள அந்த கர்ப்பிணி

                            பெண், தூர இடங்களுக்குச் செல்லமுடியாது. அருகிலேயே செல்வோமென முதியவரை அழைத்துக்கொண்டு பேலியகொட, மேவெல்ல, ஆற்றுக்கரையோரத்துக்கு சென்றுள்ளார்.

                            அப்போது அங்கு வந்திருந்த நபரொருவர் தன்னுடைய மனைவியுடன் இருந்ததாகக் கூறி,

                            முதியவரை அச்சுறுத்தி, அவர் மீது தாக்குதல் நடத்தி, மேலே குறிப்பிட்ட பொருட்களை எல்லாம் கொள்ளையடித்துக்கொண்டு சென்றுள்ளார். அவ்விளைஞனுடன் அப்பெண்ணும் சென்றுவிட்டார்.

                            பொலிஸ் விசாரணைகளில் அவ்விளைஞன், அப்பெண்ணின் முன்னாள் காதலன் என கண்டறியப்பட்டுள்ளது. இவிருவரும் போதைப்​பொருள் பாவனைக்கு அடிமையானவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

                            இளைஞனிடமிருந்து 5230 மில்லிகிராம் ஹெரோய்னும், கர்ப்பிணி பெண்ணிடமிருந்து 5195 மில்லிகிராம் ஹெரோய்னும் கைப்பற்றப்பட்டுள்ளது. அத்துடன் முதியவரிடமிருந்து

                            கொள்ளையடிக்கப்பட்ட கையடக்க தொலைபேசி மற்றும் வங்கி அட்டை ஆகியன பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.

                            பல்வேறான கொள்ளைகளுடன் தொடர்புடைய இவ்விருவருக்கு எதிராக, புதுக்கடை, மஹர ஆகிய நீதிமன்றங்களில் திறந்த

                            பிடிவிறாந்துகள் பிறக்கப்பட்டுள்ளன. ​கர்ப்பிணிப் பெண்ணுக்கு எதிராக ஐந்து பிடிவிறாந்துகளும், இளைஞனுக்கு எதிராக ஏழு பிடிவிறாந்துகளும் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

                              Posted in இலங்கை செய்திகள்

                              இலங்கையில் எகிறும் வாகன விபத்து – மூவர் மரணம்

                              இலங்கையில் எகிறும் வாகன விபத்து – மூவர் மரணம்

                              இலங்கையில் நாள்தோறும் வாகன விபத்து அதிகரித்து செல்கிறது ,நாடளாவிய ஈதியில் ஏற்பட்ட

                              இந்த விபத்துகளில் சிக்கி மூவர் பலியாகியுள்ளனர்

                              மேலும் பல டசின் பேர் படுகாயமடைந்துள்ளனர் .சாரதிகளின் அலட்சிய போக்கே இந்த

                              விபத்துக்கு கரணம் என தெரிவிக்க படுகிறது