Tag: இலங்கை
திட்டமிட்டபடி எமது பேரணி தலவாக்கலையில் நாளை நடைபெறும்-மனோ கணேசன்
திட்டமிட்டபடி எமது பேரணி தலவாக்கலையில் நாளை நடைபெறும்
- தமுகூ தலைவர் மனோ கணேசன்
தலவாக்கலையில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பேரணி நாளை ஞாயிறன்று பிற்பகல் ஒரு மணிக்கு ஆரம்பமாகி நடைபெறும். கூட்டணி தலைவர்களுடன் சிறப்பு அதிதிகளாக எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, எம்பி ராஜித சேனாரத்ன
ஆகியோரும் கலந்து கொள்ள உள்ளனர். இதில் அணி திரண்டு கலந்து கொள்ளும்படி அனைவரையும் தமிழ் முற்போக்கு கூட்டணி அழைக்கிறது.
“கூட்டம் கூடும்” உரிமையும், “கருத்து கூறும்” உரிமையும் எங்களுக்கு உண்டு. அதில் கைவைக்க முயல வேண்டாம் என அரசுக்கு நாம் கூறி வைக்க விரும்புகிறோம் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் கூறியுள்ளார்.
இதுபற்றி மனோ கணேசன் மேலும் கூறியுள்ளதாவது,
“கூட்டம் கூடும்” உரிமை, “கருத்து கூறும்” உரிமை, ஆகிய உரிமைகளை, “பொது ஒழுங்குக்கு குந்தகம் விளைவிக்காத” முறையில், அனுபவிக்க, பயன்படுத்த, ஒவ்வொரு பிரஜைக்கும் உள்ள உரிமையை அரசியலமைப்பு உறுதி செய்துள்ளது. அந்த
உரிமைகளை பாதுகாக்க, முன்னெடுக்க, மக்களால் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு “கடமையும், உரிமையும்” இருக்கின்றன என்பதை அரசாங்கமும்,பொலிஸ் மா-அதிபரும் ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டும்.
நாடு முழுக்க சுயேட்சை குழுக்களால் நாளை நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ள எதிர்ப்பு நிகழ்வுகளுக்கும் தமிழ் முற்போக்கு கூட்டணிக்கும், ஐக்கிய மக்கள் சக்திக்கும்
தொடர்பில்லை. அவை கட்சி கட்சி சார்பற்ற முறையில் பொதுமக்கள் குழுக்களால் நடத்தப்படும் நிகழ்வுகள். அவை சிறப்பாக நடைபெற நாம் வாழ்த்துகிறோம்.
எமது பேரணி இரண்டு வாரங்களுக்கு முன்னரே தீர்மானிக்கப்பட்டதாகும். அது நாளை ஞாயிற்றுகிழமை 3ம் திகதி ஒரு மணி முதல் தலவாக்கலையில்
திட்டமிட்டபடி நடக்கும். பொதுமக்கள் பாதுகாப்பு விதிகளை பயன்படுத்தி ஜனநாயக உரிமைகளை முடக்க அரசாங்கம் முயலக்கூடாது. சட்டம்,
ஒழுங்குக்கு முரணற்ற முறையில் எமது அரச எதிர்ப்பு பேரணி நடைபெறும். ஜனநாயகத்துடன் விளையாட வேண்டாம் என அரசுக்கும், பொலிசுக்கும் கூறி வைக்க விரும்புகிறோம்.
புலிகளை நினைவு கூறாதீர்கள் -யாழில் புது பத்திரிக்கை கூக்குரல்
புலிகளை நினைவு கூறாதீர்கள் -யாழில் புது பத்திரிக்கை கூக்குரல்
இலங்கையில் தமிழ் தேசிய விடுதலைக்கு போராடிய வீரம் செறிந்த போராட்ட இயக்கமாகவும் ,தமிழர்கள்
அங்கீகாரம் பெற்று நல்லாட்சி நிறுவிய அரசாகவும் விடுதலை புலிகளின் நிர்வாகம்
,அவர்களின் ஒழுங்கு விதிகள் தமிழீழ மண்ணில் நிறுவ பட்டு செவ்வனே ஆட்சி புரிந்தன
அவ்வாறான விடுதலை இயக்கத்தை ,அவர்கள் கூட இருந்து விலைபோனவர்கள் காட்டி கொடுத்து முற்றாக அழித்தனர்
மீளவும் இலங்கையில் புலிகள் அமைப்பு தோற்றம் பெறாது என்ற வகையில் காவடிகள் ஆடிய வண்ணம் உள்ளன
இவ்வாறான காலப் பகுதியில் யாழ்ப்பாணத்தில் முளைத்த புதிய பத்திரிகை ஒன்று
புலிகளை நினைவு கூறாது அரசியல் நடத்தும் படி சுமந்திரனுக்கு வக்காலத்து வாங்கியுள்ளது
இதே பத்திரிகையின் பிதாமகனும் நிறுவனரும் புலிகள் அருகில் இருந்து ,புலிகள்
தலைவருடன் உண்டு கழித்து அவர் தம் பிரச்சார பீரங்கிகளாக விளங்கியவர்கள்,
அவர்கள் பெயரில் கட்சியும் ஆரம்பித்தவர்கள்
வெளிப்படையாக சொல்ல போனால் இவர்களே தேச புதல்வர்களான அன்று பார்க்க பட்டது ,அவ்விதமான அந்த பத்திரிகையில் நமது பார்வை என்ற பக்கத்தில் புலிகளின்
பின்னால் ஒளிந்திருந்து அரசியல் நடந்தும் குழுக்கள் என பலரை சாடியுள்ளதுடன் ,அதன் உட்கருத்து புலிகளை நினைவுகூறாது சுமந்திரனை போல வாழுங்கள் என்கிறது
புலிகளை நினைவு கூறாதீர்கள் -யாழில் புது பத்திரிக்கை கூக்குரல்
சுமந்திரனிடம் வாங்கிய பணத்திற்கு இவ்விதம் விளம்பர பார்வை புரிவதை நிறுத்தி
,வரலாறுகளை படித்து முதிர்ச்சி பெற்ற நீங்கள் தமிழனத்தைச செவ்வனே வழிநடத்துங்கள்
துப்பாக்கி முனையில் நீங்கள் முன்னர் வகித்த ஊடகத்தில் பல ஊடக நபர்கள் உங்களுக்காக படுகொலை செய்ய பட்டனர் ,அவ்விதமான சிங்கள ஆட்சிக்கும்
அடிகழுவி பிழைக்கும் சூத்து மாத்து சுமந்திரன் போன்ற காவடிகளுக்கு வால்
பிடிப்பதனை நிறுத்தி, சமூகம் அதன் செழிப்பு ,விடுதலை தொடர்பாக உரத்து பேசுங்கள்
இறந்த பின்னரும் மக்கள் நெஞ்சங்களில் வாழும் இடத்தை பிடித்து மடியுங்கள்
,அதுதான் இரத்தம் சிந்திய விடுதலைக்கு நீங்கள் செய்திடும் பங்களிப்பும் நன்றி கடனுமாகும் .
உங்களை விமர்சிப்பது அல்ல எமது நோக்கம் ,வழிமாறி பயணிக்கிண்றீர்கள் என்ற வேதனையுடன் இதனை பதிகிறோம்.
- வன்னி மைந்தன் –
- பெர்லின் பிரைட் தாக்குதலில் இஸ்லாமியவாதி சந்தேக நபராக அடையாளம் காணப்பட்டுள்ளார்
- காஸ்பியன் கடலில் கப்பல் மீது தாக்குதல்
- இலங்கை முழுவதும் தனித்தனி சாலை விபத்துகளில் 4 வயது குழந்தை உட்பட நால்வர் பலி
- நௌல் புயல் கரையைக் கடந்ததால் தெற்கு சீனா முழுவதும் கனமழை
- இலங்கையில் டெங்கு பாதிப்புகள் 81500 ஐத் தாண்டியது உயிரிழப்பு எண்ணிக்கை 61
- ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பது குறித்த ஈரான் ஓமான் பேச்சுவார்த்தை
- இந்த பிக்கு இப்படி சொல்கிறார்
- பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) 64 அரிய வகை புறாக்களுடன் இரண்டு இலங்கை பயணிகள் கைது
- அமெரிக்காவுக்கு பிரிட்டன் சவால்
- இரண்டு பெண்களைக் காயப்படுத்திய பிரதம ஆய்வாளர் கைது
- ஹம்பாந்தோட்டா துறைமுகத்தில் 1000-க்கும் மேற்பட்ட இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்கள் உரிமை கோரப்படாமல் உள்ளன
- கார்மூஸ் கடலில் இந்திய கப்பல் மீது தாக்குதல்
இலங்கையில் சமூக வலைத்தளங்கள் முடக்க படும் அபாயம்
இலங்கையில் சமூக வலைத்தளங்கள் முடக்க படும் அபாயம்
இலங்கையில் பரவி வரும் அரசுக்கு எதிரான போராட்டங்கள் சமுக வலைத்தளங்கள்
ஊடாக ஏற்படுத்த பட்டு வருவதால் இலங்கையில் ,வாட்சாப்,பேஸ்புக்,வைபர் என்பன முடக்கப்படலாம் என எதிர் பார்க்க படுகிறது
நாட்டின் சில பகுதிகளில் இவை செயல் முடக்க பட்டுள்ளதாக பாவனையாளர்கள் சிலர் தெரிவித்து வருகின்றனர்
நாட்டில் அவசரகால பிரகடனம் அமூல் – கோட்டாவின் திட்டம் என்ன ..?
நாட்டில் அவசரகால பிரகடனம் அமூல் – கோட்டாவின் திட்டம் என்ன ..?
இலங்கையில் ஆளும் ஆட்சியாளர்களுக்கு எதிராக மக்கள் நாடெங்கும் போராட்டம் நடத்தி வரும் நிலையில்
அதனை அடக்கும் நோக்குடன் தற்போது அவசர அவசரமாக வர்த்தமானி அறிவித்தல்
மூலம் அவசரகால பிரகடனம் அமூல் படுத்த பட்டுள்ளது
போர்க்காலத்தில் இடம்பெறுவது போன்ற இந்த அவசர அறிவிப்பு மக்களை மேலும்
கொதிப்பில் உறைய வைத்துள்ளது
கோட்டா அதிகம் வென்ற காலிப் பகுதியில் வெடித்த போராட்டம்
கோட்டா அதிகம் வென்ற காலிப் பகுதியில் வெடித்த போராட்டம்
ஆளும் கோட்டாவின் மொட்டுக்கு வாக்களித்து அதிக வெற்றியை பெற்று கொண்ட காலி நகரம்
முடங்கியுள்ளது
இந்த போராட்டம் காரணமாக அங்கு இயழ்பு வாழ்வு பாதிக்க பட்டுள்ளது
தொழிலாளர்கள் தமது தொழில் பாதிப்பு அடைந்துள்ளதாக கூறி இந்த மாபெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்
இதனால் காலி பிரதான வீதி போக்குவரத்து தடை பட்டுள்ளது
மொரட்டுவ மேயர் இல்லம் முற்றுகை – கல் வீச்சு தாக்குதல்
மொரட்டுவ மேயர் வீடு முன்பாக மக்கள் ஒன்று கூடி பெரும் ஆர்ப்பாட்டம் நடத்திய வண்ணம் உள்ளனர்
இவரது இல்லம் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்த பட்டுள்ளது
போலீசார் இராணுவம் குவிக்க பட்டு பாதுகாப்பு பலப்படுத்த பட்டுள்ளது
நாடு எங்கும் போர்க்களமாக மாறியுள்ளது
தனி பெரும்பான்மை ஆட்சியில் வெல்ல வைத்த மக்கள் கோட்டாவை துரத்தும் போர் வெடித்தது
தனி பெரும்பான்மை ஆட்சியில் வெல்ல வைத்த மக்கள் கோட்டாவை துரத்தும் போர் வெடித்தது
இலங்கை வரலாற்றில் தனிப்பெரும்பான்மை வாக்குகளுடன் ஆட்சியில் அமர்ந்து வந்த கோட்டா
ஆட்சிக்கு எதிராக மக்கள் வீதி இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர்
பட்டினை சாவை எதிர்கொள்ள நேரிடும் நிலையை கோட்டா உருவாக்கிய நிலையில்
வேறு வழியின்றி ஆட்சி யாளர்களுக்கு எதிராக சுமார் மூன்று வருடத்தில் மக்கள் எதிராக போர் நடத்தி வருகின்றனர்
சமூக வலைத்தளங்களில் வைரலான கோட்டா எதிர்ப்பு தற்போது மிக வேகமாக பரவி நாடெங்கும் போர்க்களமாக மாற்றம் பெற்றுள்ளது
கோட்டா ,மகிந்த கூட்டாக ஆட்சியை இழந்து வீடு செல்லும் நிலை ஏற்பட போகிறது
மக்கள் கோபாத்தை தணிக்க பதவியை இழக்க வேண்டிய நிலைக்கு இவர்கள் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது
கோட்டா வீட்டுக்கு பறந்த த மகிந்தா – அச்சத்தில் ராஜபக்ச குடும்பம்
கோட்டா வீட்டுக்கு பறந்த த மகிந்தா – அச்சத்தில் ராஜபக்ச குடும்பம்
இலங்கையில் ஆளும் ராஜபக்சயா குடும்பத்தின் ஆட்சிக்கு எதிராக மக்கள் வீதி இரங்கி போராட்டம் நடத்தி வரும் நிலையில் பெரும் பீதியில் உறைந்துள்ளனர்
கோட்டாவின் வீடு அருகே மக்கள் வாகனங்களை எரியூட்டிய நிலையில் பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது
நாடெங்கும் தற்போது பெரும் போர் பற்றி வெடித்துள்ளது ,இதனால் ஆளும் ஆட்சியார்கள் பெரும் பீதியில்
உறைந்துள்ளனர்
கோட்டா வீட்டுக்கு மகிந்த குடும்ப சகிதம் விரைந்து மந்திராலோசனை நடத்தி வருகிறார்
நாடெங்கும் போராட்டம் – பீதியில் கோட்டா குடும்பம்
நாட்டின் பல இடங்களிலும் பல்வேறானா போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. இதனால், சில இடங்களில் பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது.
1) பொருட்களின் விலையேற்றத்தை கண்டித்து தச்சர்கள் ஆர்ப்பாட்டம். செய்கின்றனர். மொரட்டுவை நகர சபையை சுற்றிவளைத்துள்ளனர். இதனால் அங்கு பதற்றமான
நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது. மொரட்டுவ குருசா சந்தியிலிருந்து காலி வீதிக்கான போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
2) புத்தளம்- சிலாபம் வீதியை மறித்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. இதனால், அவ்வீதியின் ஊடான போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.
3) குடும்பநல சுகாதார ஊழியர்கள், மருதானை டீன்ஸ் வீதியை மறித்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், கொழும்பு நகர சபை மற்றும்
அதனை அண்மித்த பகுதிகளில் கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது
நுவரெலியா பஸ் நிலையத்திற்கு முன்பாக மக்கள் போராட்டம்
டீசல் தட்டுப்பாடு மற்றும் மக்களின் வாழ்க்கைச் செலவு தாங்க முடியாத அளவுக்கு
அதிகரித்து வருவதை கண்டித்து நுவரெலியாவில் பெருந்திரளான மக்கள் இன்று (01) பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நுவரெலியா பஸ் நிலையத்திற்கு முன்பாக பெருமளவான மக்கள் திரண்டதால் பஸ் நிலையத்தில் இருந்து பஸ் சேவைகள் பல மணித்தியாலங்கள் தடைப்பட்டன.
பின்னர் நுவரெலியாவில் இருந்து கிரகரி லேக் பார்க் அருகே ஆர்ப்பாட்டக்காரர்கள்
பேரணியாக சென்று நுவரெலியா – பதுளை பிரதான வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
கோட்டா வீடு அருகே மக்கள் ,இராணுவம்,போலீசார் மோதல் – 37 பேர் காயம்
கோட்டா வீடு அருகே மக்கள் ,இராணுவம்,போலீசார் மோதல் – 37 பேர் காயம்
இலங்கை ஆளும் ஜனாதிபதி கோத்தபாயவின் வீடு அருகே மக்கள் பாரிய ஆர்ப்பாட்டம் நடத்தினர்
கோபத்தில் கூடிய மக்கள் அங்கு பாதுகாப்பில் ஈடுபட்ட இராணுவத்தினரை கடுமையாக தாக்கினர்
இதில் இருபது இராணுவத்தினர் உள்ளிட்ட 37 பேர் படுகாயமடைந்த நிலையில்
கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர்
கோட்டா வீடு முன் பேரூந்துக்கு தீ வைத்தவர் இவர்தானாம்
மிரிஹானையில் ஜனாதிபதியின் தனிப்பட்ட வாசஸ்தலத்துக்கு முன்பாக, நேற்றிரவு (31) முன்னெடுக்கப்பட்ட போராட்டம் உக்கிரமடைந்தபோது, படைகளை ஏற்றிக்கொண்டு பஸ்ஸொன்று வந்தது.
போராட்டத்தின் உச்சத்தில், அந்த பஸ் தீப்பற்றி எரிந்தது. அதன்பின்னர், சில வாகனங்களும் சேதமாக்கப்பட்டன.
போராட்டகாரர்களில் ஒருவரே பஸ்ஸூக்கு தீ வைத்தார் என்றும் கூறப்பட்டது. எனினும், போராட்டத்தை குழப்பி திசைதிருப்பவே பஸ்ஸூக்கு தீ வைக்கப்பட்டது என்றும்
சூழ்ச்சிகாரர்களே இவ்வாறு செய்தனர் என்றும் சொல்லப்படுகின்றது.
எனினும், பஸ்ஸின் பின் டயருக்கு தீ மூட்டும் ஒருவர் தொடர்பில் புகைப்படம் வெளியாகியுள்ளது..
பசில் மகள் கணவன் – இந்திய றோ உளவாளி
பசில் மகள் கணவன் – இந்திய றோ உளவாளி
இலங்கையில் இந்தியாவின் தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதற்கே, இலங்கைக் கேட்கும்போதெல்லாம் இந்தியா கடன் வழங்குவதாக தெரிவித்த முன்னாள் அமைச்சர்
விமல் வீரவன்ச, லிற்றோ நிறுவனத்தை இந்தியாவுக்கு வழங்குவதற்கு முயற்சிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தொடர்பில் எமக்கு தெரிந்த விடயங்களை நாம் அம்பலப்படுத்தினால் நாடு பற்றி எரியும் எனவும் தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், இந்தியாவுக்கு சென்றுவிட்டு நாடு திரும்பிய நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவிடம் ஊடகவியலாளர்கள் எதிர்காலத்தில் என்ன நடக்குமென வினவினார்கள். இதற்கு சிரித்தப்படியே அதிகமாக சிந்திக்க
வேண்டாமென பசில் கூறினார். அதாவது அதிகமாக நாட்டு மக்கள் சிந்திக்க ஆரம்பித்தால் பசிலை இங்கிருக்கவிடமாட்டார்கள் என்பதாலேயே பசில் அவ்வாறு கூறினார் என்றார்.
பசிலின் பதவியைப் பறிப்பதால் மாத்திரம் நாட்டை நெருக்கடி நிலைமைகளில் இருந்து மீட்க முடியாது. பசில் என்கிற பல்லை பிடுங்குவதால் மாத்திரம் வாய் சுத்தமாகாது எனவும் தெரிவித்தார்.
இதேவேளை பசில் ராஜபக்ஷவின் இரு மகளில் ஒருவர் இந்தியா பிரஜையையும், மற்றொருவர் பிரித்தானிய பிரஜையையும் திருமணம் முடித்துள்ளனர். இந்தியாவில்
திருமணம் முடித்துள்ள பசிலின் மகளின் மாமனார் றோ உளவு அமைப்பின் பிரதானியின் மகன் எனவும் தெரிவித்தார்.
இலங்கைக் கேட்கும்போதெல்லாம் கடன்களை இலங்கைக்கு வாரி வழங்குவதற்கு இந்தியாவுக்குப் பைத்தியமா? இலங்கையில் நிறைவேற்றிக்கொள்ள வேண்டிய
தேவைகள் இந்தியாவக்கு இருக்காதா? லிற்றோ நிறுவனத்தை
இந்தியாவுக்கு வழங்குவதற்கு அரசாங்கம் தயாராக இருக்கிறது எனவும் தெரிவித்தார்.
பிளேட்டினால் கைகளை வெட்டும் மாணவர்கள்
பிளேட்டினால் கைகளை வெட்டும் மாணவர்கள்
கிளிநொச்சி நகரில் அமைந்துள்ள பிரபல பாடசாலை ஒன்றில் சுமார் 20 மாணவர்கள்
பிளேட்டினால் தங்களது கைகளை தாங்களே வெட்டிக்கொண்டுள்ளார்கள் என சக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில நாள்களுக்கு முன் தரம் ஒன்பதில் கல்வி பயிலும் மாணவர்கள் பலர் பிளேட்டினால் தங்களது கைகளை தாங்களே வெட்டியுள்ளனர்.
பின்னர் குருதியை கடதாசி மூலம் துடைத்துவிட்டு, கிருமிதொற்று நீக்கி (sanitizer) காயத்தின் மேல் வீசிறிக்கொண்டதாக நேரில் பார்த்த சக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனை குறித்த மாணவர்கள் சாதரணமாக செய்து கொள்வதாகவும், ஒருவரை ஒருவர் பார்த்து வெட்டிக்கொண்டதன் மூலமே வெட்டியவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததாகவும் சக மாணவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறான செயற்பாடுகள் ஒருவித உளவியல் பிரச்சினையாக கூட இருக்கலாம் என தெரிவிக்கும் வைத்தியர்கள், மாணவர்களுடன்
உரையாடி அவர்களுக்கு ஆலோசனைகள் வழங்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.
மனைவியை குத்தி கொன்ற கணவன் – சோகத்தில் கிராமம்
மனைவியை குத்தி கொன்ற கணவன் – சோகத்தில் கிராமம்
மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள சவுக்கடி கிராமத்தில் மூன்று பிள்ளைகளின் தாயொருவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று (30) மாலை இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில், சவுக்கடி முருகன் கோவில் வீதியை அண்டி வசிக்கும் 38 வயதுடைய பெரியான் சிவரஞ்சனா என்பவரே மார்புப் பகுதியில் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
கத்தியால் குத்தப்பட்டு, இரத்தம் வழிந்தோடிய நிலையில் அவர் வீட்டு வாசலில் வீழ்ந்து கிடந்துள்ளார்.
உறவினர்களால் சடலம் மீட்கப்பட்டு, உடற்கூராய்வுப் பரிசோதனைகளுக்காக ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் சந்தேக நபரான பெண்ணின் கணவன் சிவரஞ்சன் தயாளகுமார் (வயது 40) தலைமறைவாகியுள்ள நிலையில், அவரைத் தேடும் பணியில் பொலிஸார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
சிவரஞ்சான அவரது கணவனால் ஏற்கெனவேயும் பலமுறை தாக்கப்பட்டுள்ளார் எனவும் கொலை செய்யப்படுவதற்கு சில நாள்களுக்கு முன்னர் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் சிவரஞ்சனாவுக்கு தலையில் ஏற்பட்ட காயத்துக்கு 13 தையல் கட்டுக்கள் இடப்பட்டு, குணமடைந்துள்ளார் எனவும் உறவினர்கள் தெரிவித்தனர்.
குடும்ப வறுமை காரணமாக சிவரஞ்சனா 16 வருடங்களுக்கும் மேலாக அவ்வப்போது மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்றே தனது குடும்பத்தையும் பிள்ளைகளையும் பராமரித்து வந்தவர் என்றும் உறவினர்கள் தெரிவித்தனர்.
இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பாக ஏறாவூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.
யாழில் வாலிபன் கைகள் கட்ட பட நிலையில் மீட்பு
யாழில் வாலிபன் கைகள் கட்ட பட நிலையில் மீட்பு
புத்தூர் மேற்கு, நவக்கிரியில் கடத்தப்பட்ட இளைஞன் இரண்டு நாள்களின் பின்னர் கைகள் கட்டடப்பட்ட நிலையில் நேற்று (30) மாலை மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நவக்கிரி சனசமூக நிலையத்தடியில் மீட்கப்பட்ட அவர் சிகிச்சைக்காக அச்சுவேலி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
புத்தூர் மேற்கு, நவக்கிரிக்கிரியைச் சேர்ந்த அருந்தவராசா சயந்தன் என்ற 30 வயது இளைஞனை கடந்த சனிக்கிழமை இரவு இனந்தெரியாதவர்களால் கடத்தப்பட்டுள்ளார் என்று அவரது உறவினர்கள் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.
சனிக்கிழமை இரவு 9.30 மணியளவில் மின்சாரம் தடைப்பட்டிருந்த நேரத்தில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வீட்டு வளாகத்தில் இருந்து எவரோ பாய்ந்து வெளியே செல்வதை அவதானித்த இளைஞன் வீட்டுக்கு வெளியே சென்று பார்த்தார் என்றும், வெளியே சென்ற இளைஞனை வீட்டின் முன்புறம் உள்ள தோட்ட வெளியில் நின்றிருந்த மூவர் துரத்திச் சென்றனர் என்றும் உறவினர்கள் பொலிஸாரிடம் தெரிவித்தனர்.
அதன்பின்னர் இளைஞன் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் தேடியபோது அவரது கைபேசி வீட்டிலிருந்து சுமார் 400 மீற்றர் தூரத்தில் கண்டெடுக்கப்பட்டது.
அதேநேரம், கடந்த 12ஆம் திகதி இளைஞரின் வீட்டுக்கு வந்து இனந்தெரியாதவர்கள் தாக்குதல் நடத்தியிருந்தனர். அதில் வெட்டுக்காயத்துக்கு உள்ளான இளைஞரின் தந்தை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
அந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட இருவர் நீதிமன்றினால் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
சம்பவம் தொடர்பாக அச்சுவேலிப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர்.
இந்த நிலையில் இரண்டு நாள்களின் பின்னர் இளைஞன் கைகள் கட்டப்பட்ட நிலையில் நேற்று மாலை நவக்கிரி சனசமூக நிலையத்துக்கு அண்மையில் மீட்கப்பட்டார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளைஞனிடம் சிகிச்சையின் பின்னர் வாக்குமூலம் பெறப்படும் என்று அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்
இந்த கோழிகளை சாப்பிட வேண்டாம் என எச்சரிக்கை
கோழி இறைச்சியின் விலை அதிகரிப்புடன், மாத்தளை மாவட்டத்தில் கோழி
பண்ணைகளில் உயிரிழக்கும் கோழிகளை குறைந்த விலைக்கும் விற்கும் செயற்பாடு முன்னெடுக்கப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனவே, மாத்தளை மாவட்டத்தில் குறைந்த விலைகளில் கோழி இறைச்சி விற்பனை
செய்யப்பட்டால், அவற்றை கொள்வனவு செய்ய வேண்டாம் என,கோழி இறைச்சி விற்பனையாளர்கள் நுகர்வோரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
பண்ணைகளில் வேலை செய்யும் பணியாளர்களைப் பயன்படுத்தி சில இடைத்தரகர்கள் இவ்வாறான செயல்களை செய்வதாகவும் குறிப்பாக பண்டிகைக்
காலங்களில் இவ்வாறு உயிரிழக்கும் கோழிகளை வர்த்தக நிலையங்களுக்கு அனுப்பாமல், நுகர்வோரின் வீடுகளுக்கே நேரடியாக
அனுப்பும் செயற்பாடும் முன்னெடுக்கப்படுவதாக தெரிவித்துள்ளனர்.
நண்பன் நீரில் மூழ்கி மரணிக்க – தப்பி ஓடிய நண்பர்கள்
பெல்மடுல்ல – கிரிதிஎல அணைக்கட்டில், நண்பர்களுடன் குளிக்கச்சென்ற 16 வயது மாணவனின் மரணம் தொடர்பில் மூன்று மாணவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த மாணவன் கடந்த 26 ஆம் திகதி லெல்லுப்பிட்டிய பகுதிக்கு செல்வதாக கூறி வீட்டை விட்டு சென்றுள்ளதுடன், அவர் வீடு திரும்பாதமை தொடர்பில் அவரது பெற்றோர் கடந்த 27 ஆம் திகதி இரத்தினபுரி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.
நேற்று (28) குறித்த மாணவனின் சடலம் மீட்கப்பட்டதை அடுத்து பொலிஸாரின் மேலதிக விசாரணைகளில் குறித்த மாணவன் மேலும் சில மாணவர்களுடன் நீர்த்தேக்கத்திற்கு நீராடச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
குறித்த மாணவன் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாகவும், அவருடன் குளித்துக் கொண்டிருந்த ஏனைய மாணவர்கள் யாரிடமும் கூறாமல் அங்கிருந்து சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மாணவன் காணாமல் போனது குறித்து யாரிடமும் கூறாமல் அங்கிருந்து சென்ற மூன்று மாணவர்களும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பெல்மடுல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
வருமானம் குறைந்த மக்களுக்கு 5000 கொடுப்பனவு
வருமானம் குறைந்த மக்களுக்கு 5000 கொடுப்பனவு
இலங்கையில் ஆளும் அரசினால் வருமானம் குறைந்த மக்களுக்கு ஐந்தாயிரம் ரூபா வாழுங்க படும் என அறிவிக்க பட்டுள்ளது
பணம் இன்றி பொருளாதாரத்தில் மக்கள் சிக்கி தவித்து வரும் நிலையில் தமது, ஆட்சியினை தக்க வைத்து கொள்ள
அரசு இவ்விதமான ஆசை ஊட்டும் நகர்வில் ஈடுபட்டு வருகிறது
யாழில் வாலிபன் மீது வாள்வெட்டு
யாழில் வாலிபன் மீது வாள்வெட்டு
யாழ்ப்பாணம் சுழிபுரம் பகுதியில் இளைஞன் மீது வாள் வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
மானிப்பாய் – சுதுமலை, தெற்கைச் சேர்ந்த சிவானந்தன் சஜிதரன் என்பவர் மீதே நேற்றைய தினம் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
குறித்த நபரின் வீட்டினுள், இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் கொண்ட குழு அத்துமீறி நுழைந்து
தாக்குதல் நடாத்தி விட்டு தப்பி சென்றுள்ளதாக மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.



















