Posted in இலங்கை செய்திகள்

உலக நீதி அரங்கில், தமிழர்களின் முதல் சாட்சி இராயப்பு ஜோசப் ஆண்டகை-மனோ கணேசன்

உலக நீதி அரங்கில், தமிழர்களின் முதல் சாட்சி இராயப்பு ஜோசப் ஆண்டகை

தமுகூ தலைவர் மனோ கணேசன்

உலக நீதிமன்றத்தில், இலங்கை வாழ் தமிழர்களின் முதல் வழக்கு தொடருனரும், முதல் சாட்சியும் ஓய்வுநிலை ஆயர் இராயப்பு ஜோசப் அவர்கள்தான். ஆனால், அவர் தொடர்ந்த வழக்கு இன்னமும் முடிவுறவில்லை. அதற்குள் ஏன் போனார் என்றும் தெரியவில்லை.

2005 முதல் 2009 வரையிலான மிக நெருக்கடியான மனித உரிமை பாழ்பட்டு போன கால கட்டத்தில் அவர் எனக்கும், எமது சிவில் மக்கள் கண்காணிப்பு குழுவுக்கும் தந்த உபதேசங்கள் என் மனதுள்

இன்றுவரை ஆளப்பதிந்துள்ளன. தமிழ் முற்போக்கு கூட்டணி, ஜனநாயக மக்கள் முன்னணி, மக்கள் கண்காணிப்பு குழு ஆகிய அமைப்புகளின் சார்பில் எங்கள் அஞ்சலிகளை தெரிவித்துக்கொள்கிறேன் என தமுகூ தலைவர் மனோ கணேசன் விடுத்துள்ள அனுதாப செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

மனோ எம்பி மேலும் கூறியுள்ளதாவது,

ஓய்வுநிலை ஆயர் இராயப்பு ஜோசப் அவர்களது நேர்மையும், ஆளுமையும், துணிச்சலும் பல சந்தர்ப்பங்களில் வெளிப்பட்டுள்ளன. போரின் இறுதி கட்டங்களில் கொல்லப்பட்டோர், காணாமல் போனோர், காயமடைந்தோர் பற்றிய கணக்கீடுகள் தொடர்பில் சர்வதேச சமூகமும், குறிப்பாக

ஐநா அமைப்புகளும், ஏனைய சிவில் அமைப்புகளும், இலங்கை அரசும் இழுபறிபட்டுக்கொண்டு இருந்த வேளையில், ஆயரின் குரல் உறுதியாகவும், தர்க்கரீதியாகவும் ஒலித்தது.

அவரது குரலுக்கும், தர்க்கரீதியான ஆவணங்களுக்கும் இறுதிவரை இலங்கை அரசும், ஐநாவும் பதில் கூறவில்லை என்பதை இங்கே கூறியே ஆகவேண்டும். அது மட்டுமல்ல, போரின் இறுதி காலகட்டங்களில் ஐநா சபை அப்பாவி மக்களை பாதுகாக்க தவறி விட்டது என்ற மனக்கிலேசதத்தையும் அவர் கொண்டிருந்தார்.

நியாயம், நீதி, உண்மை, அமைதி, சமத்துவம், சமாதனம் ஆகியவற்றின் பேரில் ஆயர் இராயப்பு ஜோசப் அவர்கள் நடத்தி வந்த போராட்டம் இன்னமும் நிறைவடையவில்லை. உலகின்

மனசாட்சியை தட்டி எழுப்பி அவர் தொடுத்த வழக்கு இன்னமும் முடிவுறவில்லை. அங்கே அவர் நேர்பட அளித்த சாட்சியத்துக்கு பதிலுரை வழங்கப்படவில்லை. அதற்குள் ஆயர் ஐயா, ஏன் போனார் எனவும் தெரியவில்லை.

ஆனால், அவரது சிவில் தலைமைத்துவத்தை முன்மாதிரியாக கொண்டு இன்று வடக்கு கிழக்கிலேயே சிவில் சமூகம் கட்டமைக்கப்பட்டு செயற்பட ஆரம்பித்துள்ளமை நம்பிக்கை ஒளியை தருகிறது. இதுவே அவருக்கான அர்த்தமுள்ள அஞ்சலி என நான் நினைக்கின்றேன்.

    Posted in Uncategorized

    வெடித்த குண்டு ஒருவர் மரணம் -மூவர் காயம்

    வெடித்த குண்டு ஒருவர் மரணம் -மூவர் காயம்

    இலங்கை அவிசாவளை பகுதியில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவம் ஒன்றில் சம்பவ இடத்தில ஒருவர்

    பலியானார் மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளனர்

    மேற்படி வெடிப்பு சம்பவம் தொடர்பில் போலீசார் தீவிர விசாரணைகளை மேற்கொண்ட வண்ணம் உள்ளனர்


    வெடிப்பு இடம்பெற்ற பகுதி பலத்த சேதமடைந்துள்ளதாக தெரிவிக்க படுகிறது

      Posted in இலங்கை செய்திகள்

      பிறவுண் சீனி விலை 115 ஆக அதிகரிக்கும் கோட்டா அரசு

      பிறவுண் சீனி விலை 115 ஆக அதிகரிக்கும் கோட்டா அரசு

      எதிர் வரும் திங்கட்கிழமை முதல் இலங்கையில் பிறவுண் சீனியின் விலை கிலோ ஒன்றுக்கு 115 ரூபாயாக விலை நிர்ணையிக்க படுகிறது

      ஆளும் ஜனாதிபதி கோட்டபாய சீனி வியாபாரத்தில் ஈடுபட்டு வருகிறார் ,அதனால் இந்த விலை இவ்வாறு நிர்ணயிக்க படுகிறது

      நாள் ஒன்றுக்கு சுமார் 30 மில்லியன் ரூபாய்களை சினி வியாபாரம் மூலம் கோட்டா பெற்று

      கொள்கின்றார் என்ற தகவல் பரவி வருகின்றமை இங்கே குறிப்பிட தக்கது

        Posted in Uncategorized

        தெற்கு வீதி விபத்தில் சிக்கி 20 பேர் காயம்

        தெற்கு வீதி விபத்தில் சிக்கி 20 பேர் காயம்

        இலங்கை தெற்கு அதிவேகசாலை ஊடாக மாத்தறை நோக்கி பயணித்த பேரூந்து ஒன்று லொறி ஒன்றுடன் மோதி சிதறியதில் அதில் பயணித்த இருபது பேர் படுகாயமடைந்துள்ளனர்

        பாதிக்க பட்டவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர்

        மேற்படி விபத்து தொடர்பான தீவிர விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

          Posted in Uncategorized

          அமெரிக்காவில் துப்பாக்கி சூடு 4 பேர் மரண – பலர் காயம்

          அமெரிக்காவில் துப்பாக்கி சூடு 4 பேர் மரண – பலர் காயம்

          அமெரிக்கா கலிபோனியா பகுதியில் நபர் ஒருவர் மக்கள் மீது திடீர் துப்பக்கி சூட்டு தாக்குதலை மேற்கொண்டார்

          இதில் சம்பவ இடத்தில நான்கு பேர் பலியாகினர் .,மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர் ,

          இது திட்டமிடப்பட்ட தீவிரவாத தாக்குதலா என்பது தொடர்பில் உடனடியாக தெரியவரவில்லை

          ,மேற்படி சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

            Posted in Uncategorized

            சீனாவுக்கு பறக்கும் கோட்டா – பேச போவது என்ன

            சீனாவுக்கு பறக்கும் கோட்டா – பேச போவது என்ன

            இலங்கை ஆளும் இனவாத அதிபர் கோட்டபாய சீனாவுக்கு அரசமுறை பயணத்தை மேற்கொண்டு

            செல்லவுள்ளார் ,அங்குச செல்லும் இவர் இருநாடுகளும் இடையினாலான பாதுகாப்பு மற்றும்

            ,பொருளாதாரம் ,அபிவிருத்தி போன்ற விடயங்களில் பேசுவார் என எதிர்பார்க்க படுகிறது

            இவரது இந்த திடீர் பயணம் இந்தியாவை கொதிப்பில் உறைய வைத்துள்ளது

              Posted in Uncategorized

              கிளிநொச்சியில் மனைவியை கொன்று தானும் தற்கொலை செய்த கணவன்

              கிளிநொச்சியில் மனைவியை கொன்று தானும் தற்கொலை செய்த கணவன்

              கிளிநொச்சி சிவபுரம் பகுதியில் கணவன் தனது மனைவியை அடித்து ,வெட்டி கொன்ற பின்னர் தானும் நஞ்சருந்தி தற்கொலை செய்துளளர்

              குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த் சம்பவம் இடம் பெற்றுள்ளது ,ஒருவர்

              மேற்கொண்ட தவறான முடிவினால் மூன்று பிள்ளைகள் தற்பொழுது அனாதையாகியுள்ளன

              ,மேற்படி விடயம் தொடர்பில் தீவிர விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

                Posted in இலங்கை செய்திகள்

                தேடிவந்த மாரணம் 3 பெண்கள் மரணம்- லொறி சாரதி தப்பி ஓட்டம்

                தேடிவந்த மாரணம் 3 பெண்கள் மரணம்- லொறி சாரதி தப்பி ஓட்டம்

                இலங்கை நுவரெலியா பகுதியில் பயணித்து கொண்டிருந்த ஆட்டோ ஒன்றின் மீது லொறி வண்டி

                மோதியதில் ஆட்டோவில் பயணித்த மூன்று பெண்கள்

                பலியாகினர் ,லொறி சாரதி தப்பி ஓடியுள்ளார் ,நாள் தோறும் இலங்கை வீதி விபத்தில் சிக்கி நான்கிற்கு

                மேற்பட்டவர்கள் பலியாகி வருகின்றமை இங்கே குறிப்பிட தக்கது

                  Posted in Uncategorized

                  யாழில் கொரனோ அதிகரிப்பு – மக்கள் வீடுகளுக்குள் முடக்க படும் அபாயம்

                  யாழில் கொரனோ அதிகரிப்பு – மக்கள் வீடுகளுக்குள் முடக்க படும் அபாயம்

                  யாழில் தொடர்ந்து அதைகரித்து செல்லும் கொரனோ நோயின் தொற்றினை அடுத்து அந்த பகுதி விரைவில் முடக்க படும் நிலைக்கு செல்ல கூடும் என எதிர் பார்க்க படுகிறது

                  இதுவரை 264 பேர் இந்த நோயினால் பாதிக்க பட்டுள்ளனர் ,சீனாவிற்கு மூன்று தீவுகளை வழங்கிய நிலையில்

                  அங்கு பெரும் நகர்வு ஒன்றினை நடத்திட சீனா முயல்கிறது ,அதற்கு ஒத்திசைவாக கொரனோ என

                  காரணம் காட்டி மக்களை வீடுகளுக்குள் முடக்கும் நிகழ்வில் சிங்கள படைகள் ஈடுபடுகிறது என்ற சந்தேகம் வலுத்துள்ளது

                    Posted in Uncategorized

                    15 மில்லியன் மோசடியில் ஈடுபட்ட ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 8 பேர் பிணையில் விடுதலை

                    15 மில்லியன் மோசடியில் ஈடுபட்ட ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 8 பேர் பிணையில் விடுதலை

                    இலங்கையின் முன்னாள் நிதி அமைச்சராக விளங்கிய ரவி கருணாநாயக்க 2016 ஆம் ஆண்டு பாரிய நிதி

                    மோசடியில் ஈடுபடடர் என்ற குற்ற சாட்டில் கைது செய்ய பட்டு சிறையில் அடைக்க பட்டார் .,இதனை அடுத்து தற்பொழுது அவர் நீதிமன்றினால் பிணையில் விடுதலை செய்ய பட்டுள்ளார்

                    ஆளும் கோட்டபாய அரசு பழிவாங்கும் வங்குரோத்து அரசியலில் ஈடுபட்டுள்ளது

                    இதனால் ஐக்கிய தேசிய கட்சியின் முக்கிய நபர்களை இலக்கு வைத்து இவ்விதமான தாக்குதல்களை நடத்தி வருகின்றமை குறிப்பிட தக்கது

                    Posted in இலங்கை செய்திகள்

                    தந்தை செல்வா பிறந்தநாள் : பொதுவாக்கெடுப்புக்கான மக்கள் இயக்கத்தின் கருத்தரங்கு !!

                    தந்தை செல்வா பிறந்தநாள் : பொதுவாக்கெடுப்புக்கான மக்கள் இயக்கத்தின் கருத்தரங்கு !!

                    ஈழத்தமிழர் அரசியலில் பொதுவாக்கெடுப்பினை ஆயுதமாக முதலில் கையேந்தி தலைவராகிய தந்தை செல்வாவின் பிறந்தநாளான இன்று புதன்கிழமை , பொதுவாக்கெடுப்புக்கான மக்கள் இயக்கத்தின் கருத்தரங்கொன்று கனடாவில் இடம்பெறுகின்றது.

                    தமிழர் தலைவிதி தமிழர் கையில் என்ற முழக்கத்துடன், ஈழத்தமிழ் மக்கள் தாம் எந்த அரசியல் ஏற்பாட்டுக்குள் வாழ வேண்டும் என்பதனை அவர்களே தீர்மானிக்கும் வகையில்,

                    பொதுவாக்கெடுப்பொன்று நடத்தப்பட வேண்டும் என்ற இலக்குடன் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் இந்த இயக்கம் தோற்றுவிக்கப்பட்டிருந்தது.

                    கனேடிய நேரம் மாலை 6 மணிக்கு இணையவழியே இடம்பெற இருக்கின்ற இக்கருத்தரங்கில், மலேசியாவின் பினாங்கு மாநில முன்னாள் துணை முதல்வர் பேராசிரியர் இராமசாமி,

                    தமிழ்நாட்டில் இருந்து மத்ராஸ் பல்கலைக்கழக பொருளியில் பேராசிரியர் கலாநிதி நாகநாதன், மற்றும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் ஆகியோர் கருத்துரைகளை முன்வைக்க இருக்கின்றனர்.

                    ZOOM செயலி மூலம் ( Meeting ID: 875 9167 2409 ) இடம்பெறுகின்ற இக்கருத்தரங்கில் அனைத்த தமிழ்உறவுகளையும் பங்கெடுத்துக் கொள்ளுமாறு பொதுவாக்கெடுப்புக்கான மக்கள் இயக்கம் அழைப்பு விடுத்துள்ளது.

                      Posted in இலங்கை செய்திகள்

                      ஹரித” தொலைக்காட்சியை ஆரம்பித்து வைத்த கோட்டா

                      ஹரித” தொலைக்காட்சியை ஆரம்பித்து வைத்த கோட்டா

                      ஹரித” தொலைக்காட்சி அலைவரிசையின் முதலாவது சேவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் இன்று (31) முற்பகல் கொழும்பு ஹூனுபிட்டிய கங்காராம விகாரையில் ஆரம்பமானது.

                      விவசாய துறையினால் போஷிக்கப்பட்ட இந்நாட்டின் கடந்தகால சுபீட்சத்தை மீண்டும் ஏற்படுத்தும் நோக்குடன் சமய பின்புலத்துடன் சிறந்ததோர் விவசாய பொருளாதாரத்திற்கு வழிகாட்டுவது இந்த அலைவரிசையின் பிரதான நோக்கமாகும்.

                      விவசாய கைத்தொழிலின் மூலம் வாழ்ந்து வரும் மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துதல், புதிய விவசாய தொழிநுட்ப முறைமைகள், பண்டைய காலத்தில் இருந்துவந்த உயர் விவசாய

                      தொழிநுட்ப முறைமைகளை மீண்டும் ஏற்படுத்துதல், சுற்றாடல் பாதுகாப்பு, நீர்ப்பாசன மற்றும் கடற்றொழில் உள்ளிட்ட அனைத்து துறைகள் தொடர்பாகவும் மக்களை அறிவூட்டுவது “ஹரித” தொலைக்காட்சியின் அடிப்படை எண்ணக்கருவாகும்.

                      இந்த “ஹரித” தொலைக்காட்சி அலைவரிசை கங்காராம விகாரையுடன் இணைந்த ஸ்ரீ ஜினரத்ன கல்வி பரிபாலன சபையினால் வடிவமைக்கப்பட்டுள்ளது.

                      பிரித் பாராயணத்திற்கு மத்தியில் ஜனாதிபதி அவர்களின் தலைமையில் தொலைக்காட்சி அலைவரிசை ஆரம்பித்து வைக்கப்பட்டது.

                      ஜனாதிபதி அவர்களினால் “ஹரித” இணையத்தளமும் (www.harithatv.com) கருப்பொருள் பாடலும் வெளியீட்டு வைக்கப்பட்டது.

                      மரக் கன்றுகளை விநியோகிக்கும் திட்டத்தை ஆரம்பித்து வைக்கும் வகையில் சங்கைக்குரிய கிரிந்தே அஸ்ஸஜி தேரர் ஜனாதிபதி அவர்களுக்கு மரக்கன்று ஒன்றை வழங்கி வைத்தார்.

                      டயலொக் அலைவரிசை என் 16 மற்றும் பியோ டிவி அலைவரிசையின் 09 ஊடாக ஹரித தொலைக்காட்சி அலைவரிசையை மக்கள் பார்வையிட முடியும்.

                      மகாநாயக்க, அனுநாயக்க தேரர்கள் உள்ளிட்ட மகா சங்கத்தினர், ஏனைய சமயத் தலைவர்கள் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல

                      , மேல் மாகாண ஆளுநர் மாசல் எப் த எயாபோஸ் ரொஷான் குணதிலக்க ஆகியோரும் அமைச்சர்கள் தூதுவர்கள்,

                      ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க மற்றும் அரசாங்க அதிகாரிகள், பாதுகாப்புத்துறை முக்கியஸ்தர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

                        Posted in Uncategorized

                        ஜேர்மன் சுவிசில் இருந்து 24 பேர் இலங்கைக்கு நாடு கடத்தல்

                        ஜேர்மன் சுவிசில் இருந்து 24 பேர் இலங்கைக்கு நாடு கடத்தல்

                        இலங்கையில் இருந்து முகவர்கள் ஊடக ஜெர்மனி மற்றும் சுவிஸ் நாட்டுக்கு அகதிகளாக

                        சென்றடைந்த 24 தமிழர்கள் இன்று இலங்கைக்கு நாடு கடத்த பட்டுள்ளனர்

                        இருபது பேர் ஜெர்மனியில் இருந்தும் நான்கு பேர் சுவிட்சார்லாந்தில் இருந்தும் நாடு கடத்த பட்டுள்ளனர்

                        இலங்கையில் ஆளும் தமிழ் இனக் கொலையாளிகளினால் பெரும் அச்சறுத்தல் ஏற்பட்டுள்ள நிலையில் மேற்படி தமிழர்கள் நாடு கடத்த பட்டுள்ளமை குறிப்பிட தக்கது

                          Posted in இலங்கை செய்திகள்

                          புலிகள் தங்கம் தோண்டிய ஐவர் கைதாம் – புலி பீதியை கிளப்பும் சிங்களம்

                          புலிகள் தங்கம் தோண்டிய ஐவர் கைதாம் – புலி பீதியை கிளப்பும் சிங்களம்

                          இலங்கை வட்டகச்சி மாயவனூர் பகுதியில் புலிகளினால் மறைத்து வைக்க பட்ட தங்கத்தை தேடி குழிகள் வெட்டிய ஐந்து நபர்கள் கைது செய்ய பட்டுள்ளனர்

                          புதையல் தோண்டுகிறார்கள் என கிடைக்க பெற்ற தகவலின் அடிப்படையில் இந்த கைது இடம்பெற்றுள்ளது

                          ஐநாவில் இலங்கை அரச இனப்படுகொலை இறுக்கம் பெற்று வரும் நிலையில் இவ்விதமான புலி

                          பீதியை ஆளும் அசிங்கள பவுத்த இனவாதம் கட்டவிழ்த்து வருகின்றமை இங்கே குறிப்பிட தக்கது

                            Posted in Uncategorized

                            வெளிநாட்டு ஆசையுடன் வந்த தமிழ் வாலிபன் – இடையில் குளிரில் இறந்த பரிதாபம்

                            வெளிநாட்டு ஆசையுடன் வந்த தமிழ் வாலிபன் – இடையில் குளிரில் இறந்த பரிதாபம்

                            இலங்கை யாழ்பாணத்தில் இருந்து ஐரோப்பிய நாடு ஒன்றுக்குள் நுழையும் முகமாக ஏயன்ஷி

                            மூலம் பணம் கட்டி வருகை தந்த தமிழ், வாலிபர் ஒருவர் ஆப்பிரிக்காவில் இருந்து வரும் வழியில் குளிரில் சிக்கி இறந்துள்ளார்

                            பல கனவுகளை சுமந்து பயணித்த வாலிபர் சடலமாக தனது நாட்டுக்கு சென்ற சம்பவம் அந்த கிராம மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள்து

                            வெளி நாட்டு வாழ்வு இவ்வாறு உள்ளதும் ,அங்கு மக்கள் எவ்வாறு வாழ்கின்றனர் ,கொடிய குளிர் என்பதை எல்லாம்

                            தெரிந்து கொளளது உள்ள பெற்றோர்கள் முட்டாள் தனமான சிந்தனையால் இவ்விதம் தமது பிள்ளைகளை பறிகொடுத்து வருவது வேதனை தருகிறது

                            இலங்கையில் யுத்தம் இல்லை என வெளி நாடுகளில் அகதி தஞ்சம் கோரியவர்களை அனுப்புகின்ற

                            செய்திகள் வெளிவருகின்ற பொழுது அவற்றை கண்டு கொளளது நடந்தேறியதன் விளைவு ஒரு அப்பாவி உயிர் பலியாக காரணமாக அமைந்துள்ளது குறிப்பிட தக்கது

                              Posted in Uncategorized

                              யாழில் வெளிநாட்டவர் காணிகளை பிடிக்கும் சிங்கள கூலிகள்

                              யாழில் வெளிநாட்டவர் காணிகளை பிடிக்கும் சிங்கள கூலிகள்

                              யாழ்ப்பாணம் மற்றும் வன்னி பகுதிகளில் உள்ள வெளி நாடுகளில்,.வசிக்கும் தமிழர்களின் காணிகளை விதானையின் ஆதரவுடன் கண்டறிந்து

                              மக்கள் அற்று ,அநாதரவாக உள்ள காணிகளை தாமதாக்கி அங்கு சிங்களவர்களை குடியேற்றும் நகர்வில் சிங்கள பவுத்த பேரினவாதிகள் ஈடுபட்டுள்ளனர் .

                              இவர்களின் இந்த செயல் பாட்டுக்கு அஞ்சி சில மக்கள் சென்றுள்ளதும் ,இந்த விடயத்தினை அறியாது பல மக்கள் உள்ளதாக அங்கிருந்து வரும் இரகசிய தகவல்கள் நமக்கு தெரிவித்தன

                              எனவே இவ்வாறான வெறும் காணிகளை அடைத்து உங்கள் காணிகளை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மக்களே பாதுகாத்து கொள்ளுங்கள்

                              தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும் உங்களுக்கு ஆபத்து ,தமிழர்களே உசார்

                                Posted in Uncategorized

                                கனடாவுக்கு அனுப்புவதாக கூறி பண மோசடி செய்த நபர் சிக்கினார்

                                கனடாவுக்கு அனுப்புவதாக கூறி பண மோசடி செய்த நபர் சிக்கினார்

                                இலங்கையில் இருந்து கனடாவுக்கு அனுப்புவதாக ஆசை வார்த்தை கூறிய நபர் ஒருவரிடம் முப்பது லட்சம் ரூபாயினை மோசடி புரிந்த நபர் ஒருவர் சிக்கினார்

                                பணத்தை பெற்றதும் இவர் திடீரென தலை மறைவாகியுள்ளார் ,பாதிக்க பட்டவர் பொலிசாருக்கு வழங்கிய தகவலை

                                அடுத்து இருபத்தி ஒன்பது வயதுடைய அந்த நபர் கைது செய்ய பட்டுள்ளார் ,இவ்வாறு பலர் போலி

                                எய்னச்சிகளாக உருவாகி பல லட்சம் கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது

                                Posted in Uncategorized

                                எம்.பி ஆ.ராசாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

                                எம்.பி ஆ.ராசாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

                                முதலமைச்சர் பழனிசாமி குறித்து அவதூறாகப் பேசியது தொடர்பாக தி.மு.க. எம்.பி. ஆ.ராசாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

                                திமுக எம்.பி ஆ.ராசாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

                                நீலகிரி எம்.பி. ஆ.ராசா தேர்தல் பிரசாரத்தின் போது முதலமைச்சர் பழனிசாமி தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக புகாா்கள் தெரிவிக்கப்பட்டன. இந்தப் புகாா்கள் தொடா்பாக அறிக்கை தர தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டது.

                                அதன்படி, மாவட்டத் தோதல் அதிகாரி, காவல் கண்காணிப்பாளா் ஆகியோரிடம் இருந்து அறிக்கை பெறப்பட்டன. இதையடுத்து அந்த அறிக்கை தேர்தல் ஆணையத்துக்கு நேற்று அனுப்பி வைக்கப்பட்டது.

                                இந்நிலையில், இந்த விவகாரத்தில் தி.மு.க. எம்.பி. ஆ.ராசாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில் 31-ம் தேதி (இன்று) மாலை 6 மணிக்குள் விளக்கமளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.

                                  Posted in Uncategorized

                                  ஐ.நா தீர்மானம் சிறிலங்காவுக்கு தோல்வி

                                  ஐ.நா தீர்மானம் சிறிலங்காவுக்கு தோல்வி

                                  அனைத்துலக அரங்கில் சிறிலங்காவுக்கு ஏற்பட்ட தோல்வியாக, ஐ.நா மனித உரிமைச்சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் அமைந்துள்ளதென தெரிவித்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், இந்த தோல்வி தமிழர்களுக்கு நீதியாக மாறவில்லை என்பதோடு பொறுப்புக்கூறலை சிறிலங்கா அரசிடமே கொடுக்கின்ற ஓர் வலுவற்ற தீர்மானம் என தெரிவித்துள்ளது.

                                  ஐ.நா மனித உரிமைச்சபையில் பிரித்தானியா தலைமையிலான கூட்டுநாடுகளால் முன்வைக்கப்பட்ட சிறிலங்கா தொடர்பிலான தீர்மானத்துக்கு A/HRC/46/L.1 ஆதரவாக 22 நாடுகளும், எதிராக 11 நாடுகளும் வாக்களித்திருந்தன. வாக்கெடுப்பில் 14 பங்கேற்கவில்லை.

                                  அண்மைக்காலத்தில் அனைத்துலக அரங்கொன்றில் சிறிலங்காவுக்கு ஏற்பட்ட தோல்வியாக இது இருந்தாலும், முன்னைய தீர்மானங்களை விட, வலுவற்ற நீர்த்துப்போன ஓர் தீர்மானமாக இது உள்ளதெனவும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.

                                  கடந்த காலத்தில் சிறிலங்கா சாமார்த்தியமாக ‘பயங்கரவாதத்தின் மீதான போர்’ என்று பூச்சாண்டி காட்டி உத்திகளைக் கையாண்டது. 2015ல் ஏமாற்று அரசியலைக் கையாண்டு ஐ.நா மனித

                                  உரிமை;சபையின் 30/1 தீர்மானத்தைப் பிற நாடுகளுடன் கூட்டாக முன்மொழிந்து விட்டு, அதனைச் செயலாக்காமல் அனைத்துலக சமூகத்தினை சமாளித்ததென நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.

                                  ஏற்கெனவே தங்களிடம் சான்று இருப்பதாக ஐ.நா மனிதவுரிமைச் சபையின் துணை ஆணையாளர் மெர் கான் வில்லியம்ஸ் கூறியுள்ள போதிலும், புதிய தீர்மானத்தில் ஒரு கூறு ‘ஐ.நா ஆணையாளர் அலுவலகம் தகவலும்

                                  சான்றும் திரட்டவும் ஒருங்கமைக்கவும் பகுத்தாராயவும் பாதுகாக்கவும் வேண்டும்’ என்று கேட்டுக் கொள்வதாக’ உள்ளது. இது பாதிக்கப்பட்ட தமிழர்களை ஆற்றுப்படுத்துவதற்காக சேர்க்கப்பட்ட வெற்றுக்கூடான உள்ளடக்கமாக இது தோன்றுகிறது எனவும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.

                                  மேலும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
                                  ஐ.நா மனிதவுரிமைப் சபையில் சிறிலங்காவுக்கு ஏற்பட்டுள்ள இந்த தோல்லி, அனைத்துலக இராஜதந்திர தளத்தில் சிறிலங்கா ஒதுக்கி வைக்கப்பட்ட அரசாகிக் கொண்டிருப்பதை வெளிக்காட்டுகின்றது.

                                  இந்தத் தீர்மானம் சிறிலங்கா விவகாரத்தில் பின்னோக்கி சென்றுள்ளது. பொதுநலவாய நாடுகளைச் சேர்ந்த நீதிபதிகளும் அயல்நாட்டு நீதிபதிகளும் பங்கேற்கக வேண்டுமென 2015ம் ஆண்டு தீர்மானம் முன்மொழிந்;திருந்தது.

                                  ஆனால் இன்றைய தீர்மானமோ பொறுப்புக்கூறலை முழுக்க முழுக்க ஓர் உள்நாட்டுப் (சிறிலங்கா) பொறிமுறையிடமே விட்டுவிடுகிறது. நாகரீக நாடுகளின் சட்டப்புத்தகங்களில் அசிங்கமான

                                  கறையாக வர்ணிக்கப்படும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தைப் பொறுத்த வரை, 2015 தீர்மானத்தில் இடம்பெற்ற ‘நீக்கம்’ என்ற சொல் இன்றைய தீர்மானத்தில் காணப்படவில்லை.

                                  சிறிலங்கா அரசாங்கத்தின் உயர்நிலையில் இருப்பவர்கள் போர்க்குற்றங்கள் புரிந்திருப்பதைத் தெளிவாகக சுட்டிகாட்டும் வகையில் ஐ.நாவின் மூன்று அறிக்கைகள் உள்ளன. (ஐநா வல்லுநர் குழு அறிக்கை, உள்ளக ஆய்வறிக்கை (பெட்ரி அறிக்கை எனப்படுவது), சிறிலங்கா தொடர்பான மனிதவுரிமை ஆணையாளர் அலுவலக OISL அறிக்கை)

                                  சிறிலங்காவை அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்தவும், உலகளாவிய மேலுரிமையினை சிறிலங்கா தொடர்பில் அனைத்துலக சமூகம் செலுத்த வேண்டும் என ஐநா உயராணையர் மிசேல் பசலே ஏற்கெனவே விடுத்த அழைப்பில் தெரிவித்துள்ளார்.

                                  ஐ.நா மனித உரிமைச்சபையின் 4 முன்னாள் ஆணையாளர்களும், சிறிலங்காவுக்குச் சென்றுவந்த 13 முன்னாள் ஐநா சிறப்பு அறிக்கையாளர்களும், சிறிலங்கா தொடர்பான ஐநா பொதுச் செயலரின் வல்லுநர் குழுவில் இடம்பெற்ற 3 உறுப்பினர்களும் சிறிலங்காவை அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தின் பார்வைக்கு அனுப்பக் கோரியிருந்தார்கள்.

                                  நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் 2011ம் ஆண்டில் இருந்து கோரிவருகின்றது.

                                  தற்போதைய ஐ.நா கூட்டத் தொடரிமை மையப்படுத்தி தாயக தமிழர் அரசியல் தரப்புக்களும், தமிழ் சிவில் சமூகமும், தமிழ் சமயத் தலைவர்களும், புலம்பெயர் தமிழர் அமைப்புக்களும், தமிழுலகமும், உட்பட பலரும தமது முதன்மைக் கோரிக்கையாக இதனை முன்வைத்திருந்தனர்.

                                  சிறிலங்காவை அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தில் கொண்டுபோய் நிறுத்துவதற்குத் தேவைப்படுவது நாடுகளிடத்திடத்தில் அரசியல் மனத்திட்பம்தானே தவிர புதிய செயல்திட்டமன்று.

                                  அரசுகளின் கட்டுப்பாட்டிலுள்ள மன்றங்களில் நீதி பெறுவதில் அரசுகளற்ற தேசங்கள் சந்திக்கும் சவால்களை ஐநா மனிதவுரிமைச் சபையின் இன்றைய தீர்மானம் காட்டுகிறது.

                                  இரண்டாம் உலகப் போருக்குப் பிறகான காலத்தில் ஐக்கிய நாடுகள் அமைப்பும் உலகச் சமுதாயமும் சுயநிர்ணய உரிமையை ஓர் அடிப்படைக் கொள்கையாக ஏற்றுள்ள போதிலும், அதனை நீதிநோக்கில் பயன்படுத்தும் முயற்சியை இப்போதிருக்கும் அரசுகள் தமது நலன்களின் அடிப்படையில் வழிமறிப்பதே வாடிக்கையாக இருந்து வருகிறது.

                                  இந்தத் அரசுகள் தமது ‘இறைமையையும்’ ‘ஆட்சிப்புலக் கட்டுக்கோப்பையும்’ கட்டிக் காப்பதன் போர்வையில், நாசிக் கொடுமைகளை நினைவுபடுத்தும் இனஅழிப்புக்களையும்,

                                  மானிடக்குற்றங்களை நடத்தத் தயங்குவதில்லை. மனிதவுரிமைகள் பற்றியும் ஜனநாயகம் பற்றியும் நீட்டி முழக்கும் உலக அரசுகள் தம் புவிசார் அரசியல் நலன்களுக்காக இந்தக் குற்றங்களைக் கண்டுகொள்வதில்லை என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.

                                    Posted in Uncategorized

                                    இலங்கைக்கு ஐநா இட்ட கட்டளை

                                    இலங்கைக்கு ஐநா இட்ட கட்டளை

                                    ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் (unchr) இலங்கை தொடர்பில் மையப்படுத்தப்பட்ட அணியால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டது.

                                    இலங்கையின் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளைப் பாதுகாத்தல் தொடர்பான இந்த பிரேரணை, பிரித்தானியாவினால் சமர்ப்பிக்கப்பட்டது கனடா,. ஜேர்மனி, மலாவி, மொண்டினீக்ரோ மற்றும் வடக்கு மசிடோனியா ஆகிய நாடுகள் சார்பாகவே அந்தப் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டது.

                                    46/1 என அடையாளம் காணப்பட்ட அந்த வரைவு பிரேரணை, நேற்றையதினம் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, தனது தரப்பின் சார்பில் கருத்துகளை முன்வைத்த சீனா, பிரேரணை வாக்கெடுப்புக்கு விடுமாறு கோரிநின்றது.

                                    அதனடிப்படையில், பிரேரணைக்கு ஆதரவாக 22 நாடுகள் வாக்களித்தன, எதிராக 11 நாடுகள் வாக்களித்தன, இந்தியா, ஜப்பான உள்ளிட்ட 14 நாடுகள் வாக்களிப்பதை தவிர்த்துகொண்டன.

                                    அவர்களின் பிரேரணையில், 2012 ஆம் ஆண்டுமுதல் இலங்கையில் எடுக்கப்பட்ட நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமை நடவடிக்கைகள் குறித்து வெகுவாக கவனம் செலுத்தப்பட்டது.

                                    பொறுப்புக்கூறல், நீதி மற்றும் நல்லிணக்கத்தை ஊக்குவிக்க இலங்கை விரிவான நடவடிக்கை எடுக்க வேண்டுமென அந்த பிரேரணையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இலங்கையில் மனித உரிமை மீறல்களுக்கான ஆதாரங்களை சேகரித்து பகுப்பாய்வு செய்வதன் முக்கியத்துவம் குறித்தும் அந்தப் பிரேரணையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

                                    இலங்கையில் மாகாண சபைத் தேர்தல்களை நடத்துதல் மற்றும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண சபைகளில் மாகாண சபை முறையைத் தொடர்வது குறித்தும்,

                                    கொரோனா தொற்றை அடுத்து மத சுதந்திரத்துக்கு இடையூறுகள் விளைவிக்கப்பட்டமை தொடர்பிலும் அந்தப் பிரேரணையின் சுட்டிக்காட்டப்பட்டள்ளது.