Posted in Uncategorized

கூடுதலான கட்டணங்களை அறவிடும் பஸ்கள்: எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை

கூடுதலான கட்டணங்களை அறவிடும் பஸ்கள்: எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை

பண்டிகைக் காலத்தில் கூடுதலான கட்டணங்களை அறவிடும் பஸ்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படவிருக்கிறது.

இந்த பஸ்களின் போக்குவரத்து அனுமதிப் பத்திரங்களும் ரத்து செய்ய்பபடவிருக்கின்றன. உரிய கட்டணத்தை விட கூடுதலான கட்டணங்களை அறவிடும் பஸ்கள் பற்றி தொலைபேசி மூலம்

முறைப்பாடு செய்யவும் பயணிகளுக்கு தொலைபேசி இலக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் இலக்கம் 0112 860 860 என்பதாகும்.

புறக்கோட்டை – பஸ்தியன் மாவத்தை, கம்பஹா, கடவத்த, பியஹம, கட்டுநாயக்க, கடுவெல, நிட்டம்புவ, களுத்துறை, அளுத்கம, மத்துகம, ஹொரணை, பாணந்துறை, ஹோமாகம, நாவின்ன,

பிலியந்தல ஆகிய பஸ்தரிப்பு நிலையங்களிலிருந்து தூர இடங்களுக்கான பஸ் சேவைகள் இடம்பெறவிருக்கின்றன. உரிய முறையில் பஸ் போக்குவரத்து இல்லாத பகுதிகள் பற்றி

தொலைபேசி மூலம் முறைப்பாடுகளை மேற்கொள்ளலாம். தொலைபேசி இலக்கம் 0112 860 860 என்பதாகும்

Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் கொரனோ மரணம் 600 ஆகி அதிகரிப்பு

இலங்கையில் கொரனோ மரணம் 600 ஆகி அதிகரிப்பு

இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி இதுவரை அறுநூறு பேர்

பலியாகியுள்ளனர் ,தற்போது நால்வர் பலியான எண்ணிகையுடன் இந்த உச்சத்தை தொட்டுள்ளது

மேலும் மேற்படி நோயானது பரவாமல் இருக்க பல தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள பட்டு

வருகின்ற பொழுதும் மக்கள் அதனை செவிமடுக்காது அலட்சியம் செய்து வருகின்றமை குறிப்பிட தக்கது

    Posted in இலங்கை செய்திகள்

    காவல்துறை அதிகாரி மீது தாக்குதல் – முற்றுகையில் குற்றவாளி

    காவல்துறை அதிகாரி மீது தாக்குதல் – முற்றுகையில் குற்றவாளி

    இலங்கை பாசறை பகுதியில் நடைபாதை வியாபாரி மீது லஞ்சம் பெறும் நோக்கில் கடும் வார்த்தை பிரயோகத்தில்

    ஈடுபட்டு அவரது வாழ்வாதாரத்தை முடக்கும்நிலையில் செயல் பட்ட கான்ஸடபிள் தர அதிகாரி மீது ஆத்திரமுற்ற

    வர்த்தகர் தாக்குதலை நடத்தினார்
    இதனால் பலத்த காயமடைந்த அவர் மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டுள்ளார்

    அடாவடி மன்னன் நாட்டை ஆளும் பொழுது ,அவர் அதிகார காவல்துறையும் அடவாடியில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிட தக்கது

      Posted in இலங்கை செய்திகள்

      விசேட பொலிஸ் சோதனை நடவடிக்கையில் 925 பேர் கைது

      விசேட பொலிஸ் சோதனை நடவடிக்கையில் 925 பேர் கைது

      மேல் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட பொலிஸ் சோதனை நடவடிக்கையில் 925 பேர்

      கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

      இவர்களில் பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் 40 பேரும், பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 306

      பேரும் மற்றும் பிற குற்றச் செயல்கள் தொடர்பில் 518 பேரும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

        Posted in Uncategorized

        நயாழில் நள்ளிரவு வீடு புகுந்து கொள்ளை

        நள்ளிரவில் வீடு புகுந்த கொள்ளைக் கும்பல் வயோதிபத் தம்பதியை துன்புறுத்தியதில் வயோதிபர் உயிரிழந்துள்ளார்.

        இந்தச் சம்பவம் தென்மராட்சி அல்லாரையில் நேற்று (12) நள்ளிரவு இடம்பெற்றுள்ளது.

        சம்பவத்தில் சிவராசா (வயது-72) என்ற வயோதிபரே கொலை செய்யப்பட்டுள்ளார்.

        வயோதிபத் தம்பதி வசிக்கும் வீட்டுக்குள் நள்ளிரவு வேளை வீடு புகுந்த மூவர் கொண்ட கொள்ளைக்

        கும்பல் அவர்கள் இருவரையும் கட்டிவைத்து துன்புறுத்தியுள்ளது. அதில் வயோதிபரின் கழுத்தை நெரித்ததில் அவரது உயிர் பிரிந்துள்ளது.

        அத்துடன், வீட்டிலிருந்த ஒன்றரை லட்சம் ரூபாய் பணம் மற்றும் நகைகளைக் கொள்ளையிட்டு கும்பல் தப்பித்துள்ளது.

        சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

          Posted in இலங்கை செய்திகள்

          1,000 நிவாரணப் பொதியை அவமதித்தவர்களிடமிருந்து இழப்பீடு

          1,000 நிவாரணப் பொதியை அவமதித்தவர்களிடமிருந்து இழப்பீடு

          சதொச ஊடாக பெற்றுக் கொடுக்கப்படும் ரூ .1,000 நிவாரணப் பொதியை அவமதித்தவர்களிடமிருந்து இழப்பீடு கோரவுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

          அதன்படி, சம்பந்தப்பட்ட தரப்பினரிடமிருந்து ரூ .500 மில்லியன் இழப்பீடு கோரப்படும் என்று வர்த்தக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

          இதற்கிடையில், புற்றுநோய் பதார்த்தம் அடங்கியுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்ட 105 மெட்ரிக் தொன் தேங்காய் எண்ணெயைக் கொண்டு செல்வதற்காக ´பாபரா´ என்ற கப்பல் நாளை (13) கொழும்பு துறைமுகத்திற்கு வருகை தரவுள்ளதாக சுங்க ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.

          இதற்கிடையில், நுகர்வோர் விவகாக அதிகார சபையினால் சந்தையில் இருந்து பெறப்பட்ட 125 தேங்காய் எண்ணெய் மாதிரிகள் தெங்கு அபிவிருத்தி அதிகார சபையின் ஆய்வகத்தில் சமீபத்தில் சோதனை செய்யப்பட்டன.

          இவற்றில் 109 மாதிரிகளில் அஃப்லாடொக்சின் இல்லாதது கண்டறியப்பட்டது.

          மேலும் 10 மாதிரிகளில் அதிகபட்ச சாத்தியமான அளவை விட குறைவான அஃப்லாடொக்சின் கொண்டிருப்பது கண்டறியப்பட்டது, மேலும் 06 மாதிரிகளில் அஃப்லாடொக்சின் அதிகபட்ச அளவை விட அதிகமாக உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

          எவ்வாறாயினும், உணவுச் சட்டத்தில் உள்ள கட்டுப்பாடுகளின்படி மாதிரிகள் எதுவும் மனித நுகர்வுக்கு தகுதியற்றவை என கூறப்படாததால் பொதுமக்கள் தேவையற்ற முறையில் கவலையடையத் தேவையில்லை என தெங்கு அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

          புற்றுநோய் பதார்த்தம் அடங்கிய தேங்காய் எண்ணெய் பிரச்சினை தொடர்பாக இலங்கை பொலிஸ் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

            Posted in Uncategorized

            திருமண வீட்டுக்கு சென்றவர்களுக்கு நடந்த துயரம் – வயலுக்குள் கவிழ்ந்த வான்

            திருமண வீட்டுக்கு சென்றவர்களுக்கு நடந்த துயரம் – வயலுக்குள் கவிழ்ந்த வான்

            கொழும்பில் இருந்து சம்மாந்துறையில் உள்ள திருமண நிகழ்வு ஒன்றுக்கு கலந்து கொள்ளும்

            முகமாக வான் ஒன்றில் பயணித்த இருவருக்கு எதிர்பாராத விடயம் இடம்பெற்றுள்ளது

            கொழும்பு பிரதான வீதி வழியாக பயணித்து கொண்டிருந்த பொழுது கடவத்த பகுதியில் வானின் டயர் வெடித்து சிதறியுள்ளது

            இவ்வேளை சாரதியின் கட்டு பாட்டை இழந்த வான் வயல் ஒன்றுக்குள் கவிழ்ந்தது ,இதில் ஒருவர்

            பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ள்ளார் ,வான் பலத்த சேதமடைந்துள்ளது

            கவிழ்ந்த வான்
            கவிழ்ந்த வான்
              Posted in இலங்கை செய்திகள்

              கோட்டா ஆட்சியில் வீதிகளில் மிதக்கும் மனித சடலங்கள் – பீதியில் தமிழர்கள்

              கோட்டா ஆட்சியில் வீதிகளில் மிதக்கும் மனித சடலங்கள் – பீதியில் தமிழர்கள்

              இலங்கை அம்பாறை மாவடிப்பள்ளி பகுதியில் உள்ள கால்வாய் ஒன்றுக்குள் இருந்து ஆண் ஒருவரது சடலம் அழுகிய நிலையில் கண்டு பிடிக்க பட்டுள்ளது

              அவ்வழியால் சென்றவர்கள் தூர் நாற்றம் வீசுவதை கண்டு பொலிசாருக்கு தெரிவித்த நிலையில் சடலம்
              மீட்க பட்டுள்ளது

              இவ்வாறு சடலமாக மீட்க பட்டவரை அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்

              ,கோட்டா ஆட்சியில் தொடராக மர்ம கொலைகள் இடம்பெற்று வருகின்றமை இங்கே குறிப்பிட தக்கது

                Posted in Uncategorized

                மகிந்தா மைத்திரி திடீர் சந்திப்பு – பேசியது என்ன ..?

                மகிந்தா மைத்திரி திடீர் சந்திப்பு – பேசியது என்ன ..?

                முன்னாள் ஜனாதிபதி மைத்திரி மகிந்தாவுக்கு இடையில் அலரிமாளிகையில் திடீர் சந்திப்பு ஒன்று

                இடம்பெற்றுள்ளது ,இதன் போது இன்றைய சமகால நிகழ்வுகள் மற்றும் முக்கிய விடயங்கள்

                தொடர்பாக பேச பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

                காட்டி கொடுத்து ஆட்சியை பிடித்து அதிகாரத்தில் சுற்றி திரிந்த இவர் இன்று இவ்விதம்

                கூட்டிணைந்து செயல்படுவது மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது

                  Posted in Uncategorized

                  காரில் இருந்து சடலம் மீட்பு – விசாரணையில் பொலிஸ்

                  காரில் இருந்து சடலம் மீட்பு – விசாரணையில் பொலிஸ்

                  வாதுவ பிரதேச பகுதியில் கார் ஒன்றுக்குள் இருந்து ஆண் ஒருவர் சடலமாக மீட்க பட்டுளளார்

                  .இவ்வாறு சடலமாக மீட்க பட்டவர் 57 வயதுடைய நபர் எனவும் ,இவரது மரணம் எவ்வாறு நிகழ்ந்தது

                  என்பது தொடர்பில் போலீசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்

                    Posted in இலங்கை செய்திகள்

                    பாக்கு நீரிணையை நீந்தி கடந்து சாதனை படைத்த இலங்கை வீரர்

                    பாக்கு நீரிணையை நீந்தி கடந்து சாதனை படைத்த இலங்கை வீரர்

                    இலங்கை விமானப்படையை சேர்ந்த ரோசன் அபேசுந்தர என்பவர் பாக்கு நீரிணையி நீந்தி கடந்து சென்று சாதனை படைத்துள்ளார் .


                    பாக்குநீரிணையை நீந்தி கடந்து செல்ல சுமார் 28 மணிநேரமும் 19 நிமிடங்கள் பிடித்து சாதனை

                    தலைமன்னாரில் இருந்து பயணத்தை ஆரம்பித்த அவர் அங்கே மீண்டும் திரும்பி வந்து

                    சாதனையை படைத்துள்ளமை குறிப்பிட தக்கது

                    பாக்கு நீரிணையை
                    பாக்கு நீரிணையை
                      Posted in Uncategorized

                      மனைவியை கொன்று சாக்கில் கட்டி சென்ற கணவன் – இலங்கையில் நடந்த பயங்கரம்

                      மனைவியை கொன்று சாக்கில் கட்டி சென்ற கணவன் – இலங்கையில் நடந்த பயங்கரம்

                      மனைவியை அடித்து கொன்று கட்டிலுக்குள் மறைத்து வைத்திருந்த கணவன் கைது செய்யப் பட்டுளளார் ,

                      இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்கு வாதத்தை அடுத்து கணவன் மனைவியை அடித்து

                      கொன்று தாம் உறங்கிய கட்டிலுக்கு கீழே மறைத்து வைத்திருந்துள்ளார்

                      அதன் பின்னர் சாக்கு ஒன்றில் உடலை கட்டி புறநகர் பகுதியில் வீசி விட்டு வருவதற்கு தயாராகி

                      கொண்டிருந்த வேளையில் அவர் காவல் துறையினரால் கைது செய்ய பட்டுள்ளார்

                      இவ்வாறு கொலை செய்ய பட்ட மனைவி 29 வயதுடையவர் எனவும் கணவனுக்கு 35 வயது எனவும் தெரிவிக்க பட்டுள்ளது ,மேற்படி விடயம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

                        Posted in இலங்கை செய்திகள்

                        புத்தாண்டுக்கு மக்களுக்கு 5000 பணம் வழங்கும் கோட்டா அரசு

                        புத்தாண்டுக்கு மக்களுக்கு 5000 பணம் வழங்கும் கோட்டா அரசு

                        இலங்கையில் தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு அரசினால் ஐந்தாயிரம் ரூபா வழங்க பட உள்ளது

                        சில எம்பிக்கள் விடுத்த கோரிக்கையை அடுத்து இந்த நிதி வழங்க படவுகள்ளதாக தெரிவிக்க

                        படுகிறது ,தமிழகத்தை போன்று பணத்தை வழங்கி வாக்கினை அள்ளி செல்லும் புதிய அரசியல்

                        கலாச்சாரத்தை ஆளும் சகோதரர்கள் ஆட்சியில் ஆரம்பித்து வைக்க படுகின்றமை இங்கே கவனிக்க தக்கது

                          Posted in இலங்கை செய்திகள்

                          கடலில் மிதந்து வந்த போத்தலில் உள்ளதை அருந்தியவர் மரணம்

                          கடலில் மிதந்து வந்த போத்தலில் உள்ளதை அருந்தியவர் மரணம்

                          யாழ்ப்பாணம் கடலில் மிதந்துந்து வந்த போத்தல் ஒன்றில் இருந்த திரவத்தை அருந்திய நபர்

                          ஒருவர் அவ்விடத்திலேயே சுருண்டுவீழ்ந்து மரணமாகியுள்ளார்

                          மரணமானவர் 47 வயதுடையவர் என தெரிவிக்க பட்டுள்ளது

                          குடிபானம் என நினைத்து அதனை அருந்திய நபரே இவ்விதம் மரணமாகியுள்ளார் ,சடலம் மரண பரிசோதனைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளது

                            Posted in Uncategorized

                            இன்டர்போல் வேட்டை – 500 பேரை கடத்திய 195 எய்னசிகள் கைது

                            இன்டர்போல் வேட்டை – 500 பேரை கடத்திய 195 எய்னசிகள் கைது

                            லண்டன்,மற்றும் ஐரோப்பாவுக்குள் சட்டவிரோதமாக ஆட்களை கடத்தி வந்த மிக பெரும் வலைய
                            மைப்பு ஒன்றை சர்வதேச போலீசார் மடக்கி பிடித்துள்ளனர்

                            பிரிட்டனை இலக்கு வைத்து மிக பெரும் மனித கடத்தலை மேற் கொண்டு வந்த முக்கிய சூத்திரதாரிகளே இவ்வாறு மடக்கி பிடிக்க பட்டுள்ளனர்

                            ஆப்ரிக்கா போலீசார் இணைந்து இந்த வேட்டையை நடத்தியுள்ளனர் ,ஐரோப்பாவுடன் இருந்து பிரிட்டன் விலகிய

                            நிலையில் கடல்வழியாக பிரிட்டனுக்கும் நாள் தோறும் பல நூறு அகதிகள் நுழைந்து வந்த நிலையில் இந்த

                            வேட்டையை பிரிட்டன் அரசு மேற்கொண்டது ,கொரனோவில் மக்களை வீடுகளுக்குள்

                            முடக்கி,சர்வதேச உளவுத்துறையுடன் இணைந்து இந்த எய்னசிகளுக்கு ஆப்படித்துள்ளது பிரிட்டன் என்பதே மேற்படி செய்திகள் இடித்துரைக்கின்றன

                              Posted in Uncategorized

                              புலிகளை உருவாக்கிய குற்ற சாட்டில் யாழ். முதல்வர் மணி கைது

                              புலிகளை உருவாக்கிய குற்ற சாட்டில் யாழ். முதல்வர் மணி கைது

                              தமிழீழ விடுதலைப் புலிகளை மீள் உருவாக்க முயன்ற குற்றச்சாட்டில், பயங்கரவாத தடுப்பு பிரிவினரால்

                              யாழ்ப்பாண மாநகர சபைத் தலைவர் சட்டத்தரணி வி. மணிவண்ணன் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைக்காக வவுனியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

                              மாநகர சபையின் காவல் படை விவகாரம் தொடர்பில் நேற்றிரவு எட்டு மணிக்கு மணிவண்ணன், சபை உறுப்பினர் பார்த்திபன் ஆகியோரை வாக்குமூலம் வழங்க வருமாறு யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்துக்கு பொலிஸார் அழைத்திருந்தனர்.

                              இருவரிடமும் நீண்ட நேர விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், பயங்கரவாத தடுப்பு பிரிவினர், இன்று அதிகாலை 2.15 மணியளவில் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் மணியைக்

                              கைது செய்த பயங்கரவாத தடுப்புப் பிரிவினர், மேலதிக விசாரணைகளுக்காக என வவுனியாவுக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

                              அதேவேளை, பார்த்திபனிடம் சுமார் எட்டு மணி நேர விசாரணைகளை முன்னெடுத்த பின்னர் அவரிடம் வாக்கு மூலத்தை பெற்ற பின்னர் விடுவித்துள்ளனர்.

                                Posted in இலங்கை செய்திகள்

                                98 கடவுச்சீட்டுகளுடன் 3 பேர் கைது

                                98 கடவுச்சீட்டுகளுடன் 3 பேர் கைது

                                98 கடவுச்சீட்டுக்களை தன்னகத்தே வைத்திருந்த மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

                                கடவுச்சீட்டுக்கு உரிமையானவர் களை சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு அனுப்பி

                                வைப்பதற்கு குறித்த நபர்கள் முயன்று உள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.

                                மேலும் சந்தேக நபர்களிடமிருந்து இரண்டு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

                                  Posted in Uncategorized

                                  வவுனியாவில் ரவுடிகள் வாள்வெட்டு தாக்குதல் – இருவர் காயம்

                                  வவுனியாவில் ரவுடிகள் வாள்வெட்டு தாக்குதல் – இருவர் காயம்

                                  வவுனியா, திருநாவற்குளம் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவம் தொடர்பில் பொலிசாரால் இருவர் இன்று (08) கைது செய்யப்பட்டுள்ளனர்.

                                  வவுனியா, திருநாவற்குளம் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (04) வாள்வெட்டு சம்பவமொன்று இடம்பெற்றிருந்தது.

                                  மக்கள் பலர் பார்த்துக் கொண்டிருந்த நிலையில் இடம்பெற்ற இச் சம்பவத்தில் காயமடைந்த இருவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

                                  சம்பவ இடத்திற்கு வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவருமான கு.திலீபன்,

                                  பிரதி பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட பொலிஸ் அதிகாரிகள் சென்று விசாரணைகளை முன்னெடுத்த போதும் நேற்று (07) வரை எவரும் கைது செய்யப்படவில்லை.

                                  இந்நிலையில் நேற்று இரவு குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பிலான காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியதையடுத்து வவுனியா பொலிசாரால் குறித்த சம்பவம்

                                  தொடர்பில் இருவர் இன்று (08 ) காலை கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிசார் அவர்களை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்

                                  வாள்வெட்டு
                                  வாள்வெட்டு
                                    Posted in Uncategorized

                                    சூடானில் தொடரும் கலவர ம் -87 பேர் பலி

                                    சூடானில் தொடரும் கலவர ம் -87 பேர் பலி

                                    சூடான் Darfur பகுதியில் தொடர்ந்து இடம்பெற்று வரும் கலவரத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை சுமார் 87 ஆக அதிகரித்துள்ளது

                                    மேலும் காயமடைந்தவர்கள் எண்ணிக்கை 200 க்கு மேலாக அதிகரித்துள்ளது

                                    கட்டுக் கடங்காது பரவி வரும் இந்த வன்முறை சம்பவம் பெரும் கொலைக்களமாக மாறும்

                                    அபாயம் எழுந்துள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன

                                    உலக
                                    உலக
                                      Posted in இலங்கை செய்திகள் குற்ற செய்திகள்

                                      கழுத்து வெட்ட பட்ட நிலையில் வாலிபன் சடலம் மீட்பு

                                      கழுத்து வெட்ட பட்ட நிலையில் வாலிபன் சடலம் மீட்பு

                                      இலங்கை தலைநகர் கொலும்பை அண்மித்த கல்கிஸை காலி வீதியில் வீடொன்றுக்கு அருகில் இருபத்தி

                                      இரண்டு வயது வாலிபன் ஒருவர் கழுத்து வெட்ட பட்ட நிலையில் சடலமாக மீட்க பட்டுள்ளார் .இது படுகொலை

                                      என தெரிவிக்க படுகிறது ,இந்த கொலைக்கான உடனடி காரணம் தெரியவரவில்லை .விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளது

                                      கோட்டா ஆட்சியில் அமர்ந்ததன் பின்னர் இவ்வாறான மர்ம கொலைகள் அதிகரித்து செல்கின்றமை இங்கே கவனிக்க தக்கது