Tag: இந்தியா
இந்தியா றோவின் இரகசிய படுகொலை |சிக்கிய ஆதாரங்கள் |India Canada issu|India vs Canada Latest New
இந்தியா றோவின் இரகசிய படுகொலை |சிக்கிய ஆதாரங்கள் |India Canada issu|India vs Canada Latest News
இந்தியா றோவின் இரகசிய படுகொலை ,சிக்கிய ஆதாரங்கள்,
வசமாக மாட்டிய மோடி அரசு ,புலிகள் தடை நீக்க நடவடிக்கை ,
சிக்கலில் மாட்டிய இந்தியா ,
India Canada issu,
Sikh murder row, India-Canada ties ,India expels Canada diplomat as Sikh murder row,
Murder of Sikh Leader in Canada Highlights Modi’s ,Khalistan Row,
Indian Diplomats Tied to Trudeau’s Claims ,
India-Canada Khalistan Row,khalistan row canada,India Canada News,
Khalistani Row In Canada ,Exclusive Interview,canada pm Trudeau,
India involved in killing of Sikh leader say Canada,
India killed a Sikh activist in Canada,
கனடாவிற்கு தடைவிதித்த INDIA,India VS Canada ,india vs canada issue,
india vs canada issue tamil,India 🇮🇳 vs Canada 🇨🇦 Latest News,
- அமெரிக்க3 F-35 ரக விமானங்கள் அழித்த ஈரான்by நிருபர் காவலன்
- சுகீஸ்வர பண்டார மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்by நிருபர் காவலன்
- அர்ஜென்டினா மீது ஃபிஃபா ஒழுங்கு நடவடிக்கைகளைத் தொடங்குகிறதுby நிருபர் காவலன்
- சுவா செரியா மோட்டார் சைக்கிள் அவசர மருத்துவ சேவையைத் தொடங்குகிறதுby நிருபர் காவலன்
- நீதிபதிகளின் ஓய்வு வயதை நீட்டிக்க நடவடிக்கைby நிருபர் காவலன்
கனடா இந்தியா தூதர் வெளியேற்றம்
கனடா இந்தியா தூதர் வெளியேற்றம்
கனடாவில் காலிஸ்தான் போராளிகள் அமைப்பை சேர்ந்த
முக்கிய தலைவர் ஒருவர் கனடாவில் கொலை செய்யப்பட்டார் .
இவரது கொலையை இந்தியா உளவுத்துறையான
றோ புரிந்துள்ளது என கனடா குற்றம் சுமத்தியுள்ளது .
இதனை அடுத்து தற்போது கனடாவுக்கான
இந்தியா தூதராக அதிகாரி கனடாவில் இருந்து வெளியேற்ற பட்டார் .
மேலும் கனடாவுக்கு தமது மக்களை பயணிக்க வேண்டாம் என இந்தியா தெரிவித்துள்ளது .
கனடா இந்தியா தூதர் வெளியேற்றம்
இஸ்ரேல் உளவுத்துறையான மொஸாட் வெளிநாடுகளில் தமது எதிரிகளை கொன்று குவித்து வருகிறது ,அவ்விதம் இந்திய றோவும் தற்போது உருவெடுத்துள்ளது என கனடா உளவுத்துறை தெரிவித்துள்ளது .
இந்தியா புரிந்த ஒரு படுகொலை காரணமாக மிக பெரும் தவறை இந்தியா புரிந்துள்ளதுடன் ,தனது எதிர்கால ,நடவடிக்கை பாதிக்கும் நிலைக்கு இந்தியா சென்றுள்ளது .
இந்தியா மிக பெரும் பேரழிவை சந்திக்க போவதை ,
எதிர்காலம் கட்டியமிட போவதை இந்த விடயங்கள் எடுத்து காட்டுகின்றன .
- அமெரிக்க3 F-35 ரக விமானங்கள் அழித்த ஈரான்
by நிருபர் காவலன் - சுகீஸ்வர பண்டார மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்
by நிருபர் காவலன் - அர்ஜென்டினா மீது ஃபிஃபா ஒழுங்கு நடவடிக்கைகளைத் தொடங்குகிறது
by நிருபர் காவலன் - சுவா செரியா மோட்டார் சைக்கிள் அவசர மருத்துவ சேவையைத் தொடங்குகிறது
by நிருபர் காவலன் - நீதிபதிகளின் ஓய்வு வயதை நீட்டிக்க நடவடிக்கை
by நிருபர் காவலன்
அமெரிக்கா சீனா மோதல் |போர் வெடிக்குமா |இந்தியா இராணுவம் மாயம்|ethiri news
அமெரிக்கா சீனா மோதல் |போர் வெடிக்குமா |இந்தியா இராணுவம் மாயம்|ethiri news
அமெரிக்கா சீனாவுக்கு இடையில் வெடித்த பெரும் மோதல் ,
சிக்கிய முக்கிய ஆயுத நிறுவனங்கள் ,இந்தியா இராணுவத்தை காணவில்லை ,
வெடித்த போர் ,
- அமெரிக்க3 F-35 ரக விமானங்கள் அழித்த ஈரான்by நிருபர் காவலன்
- அர்ஜென்டினா மீது ஃபிஃபா ஒழுங்கு நடவடிக்கைகளைத் தொடங்குகிறதுby நிருபர் காவலன்
- ஜெர்மனியில் வெப்பத்தால் 10 000 பேர் பலிby நிருபர் காவலன்
- பாகிஸ்தான் காவல் நிலையம் மீதான தாக்குதலில் 11 அதிகாரிகள் மற்றும் 15 தாக்குதல் நடத்தியவர்கள் பலிby நிருபர் காவலன்
- சவுதி ஆளில்லா விமானம் சுட்டு வீழ்த்தல்by நிருபர் காவலன்
இந்தியாவின் 77 வது சுதந்திர தினம் யாழில் கொடியேற்றம்
இந்தியாவின் 77 வது சுதந்திர தினம் யாழில் கொடியேற்றம்
இந்தியாவின் 77 வது சுதந்திர தினம், யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் கொடியேற்றப்பட்டு கொண்டாடப்பட்டது.
யாழ்ப்பாணம் மருதடி வீதியில் அமைந்துள்ள இந்தியத் துணைத் தூதரகத்தில் இன்று (15) காலை 9 மணி அளவில் இந்தியாவின் தேசியக் கொடியை துணைத் தூதர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் ஏற்றி வைத்தார்.
இந்தியாவின் 77 வது சுதந்திர தினம் யாழில் கொடியேற்றம்
இந்தியாவின் சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வெளியிட்ட வாழ்த்துச் செய்தியை துணைத் தூதர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் வாசித்தார்.
இந்த நிகழ்வில் இந்தியத் துணைத் தூதரக அதிகாரிகள், குடும்ப உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
இந்தியா 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் திகதி பிரித்தானியாவின்
ஆதிக்கத்தில் இருந்து சுதந்திரமடைந்தமை குறிப்பிடத்தக்கது.
- சுகீஸ்வர பண்டார மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்
by நிருபர் காவலன் - சுவா செரியா மோட்டார் சைக்கிள் அவசர மருத்துவ சேவையைத் தொடங்குகிறது
by நிருபர் காவலன் - நீதிபதிகளின் ஓய்வு வயதை நீட்டிக்க நடவடிக்கை
by நிருபர் காவலன் - தலைக்கவசங்கள் விற்பனைக்கு கடும் நடவடிக்கை
by நிருபர் காவலன் - ஆட்கடத்தல் மற்றும் இணையவழி சுரண்டலுக்கு எதிராக வலுவான போராட்டத்திற்கு பாதுகாப்பு செயலாளர் அழைப்பு
by நிருபர் காவலன்
மதுரை யாழ்ப்பாணத்திற்கு விமான சேவை
மதுரை யாழ்ப்பாணத்திற்கு விமான சேவை
மதுரை – யாழ்ப்பாணம் இடையில் விரைவில் விமான சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
இதற்காக இந்தியாவிலுள்ள தனியார் விமான சேவை நிறுவனங்களுடன் இலங்கையின் விமான சேவைகள் அமைச்சு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக ‘த ஹிந்து’ செய்தி வௌியிட்டுள்ளது.
மதுரை யாழ்ப்பாணத்திற்கு விமான சேவை
குறித்த விமான சேவையை வாரத்திற்கு 7 நாட்களும் முன்னெடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மதுரை – கொழும்பு இடையேயான முதலாவது சர்வதேச விமான சேவை 2012 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ஆரம்பிக்கப்பட்டது.
தற்போது மதுரையிலிருந்து நாளாந்தம் கொழும்பிற்கான நேரடி விமான சேவையை ஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸ் நிறுவனம் வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது
- சுகீஸ்வர பண்டார மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்
by நிருபர் காவலன் - சுவா செரியா மோட்டார் சைக்கிள் அவசர மருத்துவ சேவையைத் தொடங்குகிறது
by நிருபர் காவலன் - நீதிபதிகளின் ஓய்வு வயதை நீட்டிக்க நடவடிக்கை
by நிருபர் காவலன் - தலைக்கவசங்கள் விற்பனைக்கு கடும் நடவடிக்கை
by நிருபர் காவலன் - ஆட்கடத்தல் மற்றும் இணையவழி சுரண்டலுக்கு எதிராக வலுவான போராட்டத்திற்கு பாதுகாப்பு செயலாளர் அழைப்பு
by நிருபர் காவலன்
அதிக வெப்பம் காரணமாக இந்தியாவில் 100 பேர் மரணம்
அதிக வெப்பம் காரணமாக இந்தியாவில் 100 பேர் மரணம்
இந்தியாவின் பல பகுதிகளில் ஏற்பட்ட கடும் வெப்பம் காரணமாக,
இதுவரை 100 பேர் பலியாகியுள்ளனர் .
மேலும் நூற்றுக்கணக்கான மக்கள் மூச்சு திணறலுக்கு,
உள்ளன நிலையில் சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளனர் .
வழமைக்கு மாறாக அதிக வெப்பம் காணப்படுவதால் இந்த
உயிர் பலிகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
இந்தியாவின் 1 பில்லியன் டொலர் கடன் வசதி 2024 மார்ச் வரை நீடிப்பு
இந்தியாவின் 1 பில்லியன் டொலர் கடன் வசதி 2024 மார்ச் வரை நீடிப்பு
அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்காக 2022 மார்ச்சில் இலங்கை அரசாங்கத்துக்கு வழங்கப்பட்ட 01 பில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவியின் காலம், இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கைக்கு அமைவாக இந்திய ஸ்டேட் வங்கியால் நீடிக்கப்பட்டுள்ளது
. இந்நிலையில் இந்த கால நீடிப்புக்கான திருத்த உடன்படிக்கையானது நிதி இராஜாங்க அமைச்சர் கௌரவ செஹான் சேமசிங்கே, இலங்கை நிதி அமைச்சின் சிரேஸ்ட அதிகாரிகள் மற்றும் இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் அதிகாரிகள் முன்னிலையில் 30 மே 2023 இல் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இதேவேளை இந்திய ஸ்டேட் வங்கியின் அதிகாரிகள் இந்நிகழ்வில் மெய்நிகர் மார்க்கமூடாக இணைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த உடன்படிக்கை கைச்சத்திடப்பட்டமையின் பிரகாரம் 2024 மார்ச் வரையிலான மற்றொரு வருட காலப்பகுதிக்கு இந்த கடன் வசதியினை இலங்கை அரசாங்கம் பயன்படுத்துவதற்கு இடமளிக்கப்பட்டுள்ளது.
கடந்தவருடம் முதல் எரிபொருள், மருந்துப்பொருட்கள், உணவுப்பொருட்கள், மற்றும் உற்பத்தி மூலப்பொருட்கள் உள்ளிட்ட பலவிதமான பொருட்களை இலங்கை அரசாங்கத்தின் தேவைக்கு அமைவாகவும் முன்னுரிமை அடிப்படையிலும் அவசரமாக இறக்குமதி செய்வதற்கு இந்த கடனுதவி திட்டம் பயன்படுத்தப்பட்டிருந்தமை நினைவில் கொள்ளத்தக்கதாகும். .
இந்தியாவின் அயலுறவுக்கு முதலிடம் கொள்கையின் கீழ் பல்வேறு கடனுதவி திட்டங்கள் மற்றும் நாணய உதவிகள் ஊடாக 4 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பல்நோக்கு உதவி கடந்த வருடம் இந்திய அரசாங்கத்தால் இலங்கைக்கு வழங்கப்பட்டிருந்தது.
இலங்கையின் துரித பொருளாதார மீட்சி மற்றும் ஸ்திரத்தன்மைக்காக இலங்கை மக்களுடனும் அரசாங்கத்துடனும் துணை நிற்கும் எமது நிலையான அர்ப்பணிப்புக்கான ஓர் சாட்சியமே இலங்கைக்கான இந்திய ஆதரவு என்பது குறிப்பிடத்தக்கது
இலங்கைக்கு இந்தியாவின் ஆதரவு தொடர்ந்தும்
இலங்கைக்கு இந்தியாவின் ஆதரவு தொடர்ந்தும்
இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளது.
இந்திய முதலீட்டாளர்களை இலங்கைக்கு ஈர்த்தல், இருதரப்பு வர்த்தகத்தை மேம்படுத்துதல், இந்திய சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிப்பது போன்றவற்றில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் மிலிந்த் மொரகொடவுக்கும், இந்திய நிதி மற்றும் கூட்டுத்தாபன விவகார அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும் இடையில் நேற்று (21) பிற்பகல் இடம்பெற்ற சந்திப்பில் இது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.
அத்துடன், இந்திய ரூபாவில் இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகம் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கைக்கு 75 பேரூந்துகள் வழங்கிய இந்தியா
இலங்கைக்கு 75 பேரூந்துகள் வழங்கிய இந்தியா
இலங்கைக்கு இந்தியா அரசினால் 75 பேரூந்துகள் வழங்கி வைக்க பட்டுள்ளன .
இந்திய மத்திய அரசின் உதவி திட்டத்தின் கீழ் ,இந்த பேரூந்துகள் ஒரு தொகுதி வழங்கி வைக்க பட்டுள்ளது .
500 பேரூந்துகள் இலங்கைக்கு வழங்கிட இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது .அவை கட்டம் கட்டமாக வழங்க உத்தேசிக்க பட்டுள்ளது .
புலிகளை மீள உருவாக்க பாகிஸ்தான் முயற்சி இந்தியா அலறல்
புலிகளை மீள உருவாக்க பாகிஸ்தான் முயற்சி இந்தியா அலறல்
தமிழீழ விடுதலை புலிகளை மீளவும் உருவாக்கிட பாகிஸ்தான் உளவுத்துறையினர் ,முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக இந்தியா மத்திய புலனாய்வு அமைப்பான ரா குற்றம் சுமத்தியுள்ளது .
தமிழகத்தை மையப்படுத்தி புலிகளை உருவாக்கி, அவர்களை இந்தியாவுக்கு எதிராக திசை திருப்பும்நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர் என, இந்தியா ரோ தனது கறபனையை கட்டவிழ்த்து விட்டுள்ளது .
புலிகளை மீள உருவாக்க பாகிஸ்தான் முயற்சி இந்தியா அலறல்
போதைவஸ்து கடத்தலுடன் தொடர்புடைய பலர் கைது செய்யப்பட்டனர் .
அவ்வாறு கடத்தியவர்கள் புலிகளை சேர்ந்த உறுப்பினர்கள் என இந்தியா ரா உளறியுள்ளது .
புலம் பெயர் மக்கள் பணத்தினை புலிகளுக்கு அள்ளி வழங்கி வந்தனர் ,அவ்வாறான நிலையில் தற்போது மீளவும் மக்கள் வழங்குவார்கள்
நிலவரம் இவ்வாறு இருக்கும் பொழுது, புலிகள் மீது தனது வன்ம வசை பாடலை நடத்திட இந்தியா ரா இப்படி உளறி வருகிறது .
இலங்கைக்கு இந்தியா உதவும் இந்தியா அரசு அறிவிப்பு
இலங்கைக்கு இந்தியா உதவும் இந்தியா அரசு அறிவிப்பு
இலங்கைக்கு இந்தியா தொடர்ந்து தனது ஆதரவு வழங்கி வரும் என இந்தியா வெளியுறவு மந்திரி தெரிவித்துள்ளார் .
அயல் நாடான இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் பொழுது ,அதனை அவ்விதமே விட்டு வேடிக்கை பார்க்க முடியாது .
தமது ஆதரவை மேலும் வழங்கி வருவோம் என வெளியுறவு மந்திரி தெரிவித்துள்ளார் .
இவரது கூற்று சீனாவை சீண்டும் நோக்கம் கொண்டது என நோக்கர்கள் தெரிவிக்கின்றனர் .
இந்தியாவில் இருந்து 11000 அகதிகள் இலங்கை திரும்பினர்
இந்தியாவில் இருந்து 11000 அகதிகள் இலங்கை திரும்பினர்
இந்தியாவில் இருந்து இலங்கைக்கு 11000 தமிழ் அகதிகள் மீள தாயகம் திரும்பியுள்ளதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது .
இலங்கையில் இடம்பெற்ற உள் நாட்டு போர் காணமாக ,புலம்பெயர்ந்த தமிழர்களே தற்போது 26 வருடங்கள்,கழித்து இலங்கை திரும்பியுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
இவ்வாறு இலங்கை திரும்பும் தமிழர்களுக்கு, இலவச டிக்கட் வழங்கி இலங்கை அழைத்து வந்துள்ளமை ,இங்கே குறிப்பிட தக்கது .
- சுகீஸ்வர பண்டார மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்

- சுவா செரியா மோட்டார் சைக்கிள் அவசர மருத்துவ சேவையைத் தொடங்குகிறது

- நீதிபதிகளின் ஓய்வு வயதை நீட்டிக்க நடவடிக்கை

- தலைக்கவசங்கள் விற்பனைக்கு கடும் நடவடிக்கை

- ஆட்கடத்தல் மற்றும் இணையவழி சுரண்டலுக்கு எதிராக வலுவான போராட்டத்திற்கு பாதுகாப்பு செயலாளர் அழைப்பு

இந்தியாவில் 40 கோடியை கொள்ளையடித்த புலிகள் இந்திய அரசு பரப்புரை
இந்தியாவில் 40 கோடியை கொள்ளையடித்த புலிகள் இந்திய அரசு பரப்புரை
இந்தியாவில் பெண் ஒருவரின் பெயரில் உள்ள நாற்பது கோடி ரூபாவை ,ஐரோப்பாவில் இருந்து இயங்கி வரும் ,புலிகள் குழுவை சேர்ந்தவர்களினாலே கொள்ளையடிக்க பட்டுள்ளது என இந்தியா உளவுத்துறை தகவலை வெளியிட்டுள்ளது .
ஐரோப்பாவில் உள்ள புலிகளின் தலைமையினால், அனுப்பி வைக்க பட்டவர்கள் ,இந்தியா சென்று ,இந்தியர்கள் போலவே வேடமிட்டு , குழுவாக இணைந்து ,போலி ஆவணங்களை தயாரித்து நாற்பது கோடிரூபா இந்திய பணத்தை ஆட்டையை போட்டுள்ளதாக தெரிவித்துள்ளது .
இல்லாத புலிகள் மீது தற்போதும், சேறடிக்கும் நகர்வில் இந்தியா உளவுத்துறை ,மற்றும் இந்திய பார்ப்பனிய குழுக்கள் செயல் பட்டு வருகின்றன .
ஆனால் ,மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ள புலிகள் தலைவர் பிரபாகரனும் ,அந்த அமைப்பின் சிவில் நிர்வாகத்தையும் இன்றுவரை மானமுள்ள ஒவ்வொரு தமிழனும் ,எதிர்ப்பார்த்த வண்னமே பயணிக்கின்றனர் .
சீனாவை இலங்கையில் நுழையவைத்து , இந்திய இறையாண்மைக்கு , ஆபத்தை உருவாக்கி வரும் இலங்கையை இந்திய, இனவாதம் இன்றும் நம்புவது வேடிக்கை தான் .,
தமிழர்கள் அழிந்தது போல இந்தியர்கள் அழிக்க படும் நிலை, விரைவில் உள்ளது, என்பதை இந்தியா உணர்ந்து கொள்ளும் என்பதே கள நிலவரமாக உள்ளது .
- சுகீஸ்வர பண்டார மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்

- சுவா செரியா மோட்டார் சைக்கிள் அவசர மருத்துவ சேவையைத் தொடங்குகிறது

- நீதிபதிகளின் ஓய்வு வயதை நீட்டிக்க நடவடிக்கை

- தலைக்கவசங்கள் விற்பனைக்கு கடும் நடவடிக்கை

- ஆட்கடத்தல் மற்றும் இணையவழி சுரண்டலுக்கு எதிராக வலுவான போராட்டத்திற்கு பாதுகாப்பு செயலாளர் அழைப்பு

- பீர் உற்பத்தி மனு மீதான விசாரணை அக்டோபர்

- நெதன்யாகுவை கைது செய் அமெரிக்காவில் போர்க்கொடி

- கொழும்பு கப்பல் காட்டும் நிறுவனம் அதிக இலாபம் ஈட்டியது

- 1 8 டிரில்லியன் அமெரிக்க டாலர் உலகளாவிய சந்தையை இலங்கை மருந்துத் துறை குறிவைக்கிறது

- வீட்டு முதலீட்டு மோசடி வழக்கில் நிறுவன இயக்குநர் கைது

இலங்கையில் வசிக்கும் இந்தியர்களுக்கு இந்தியா எச்சரிக்கை
இலங்கையில் வசிக்கும் இந்தியர்களுக்கு இந்தியா எச்சரிக்கை
இலங்கையில் வசிக்கும் இந்தியா மக்களை மிக விழிப்பாக இருக்கும் படி கடும் எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது.
இலங்கையில் கோட்டபாய மீள நாடு செல்ல உள்ள ,நிலையில் அங்கு போராட்டம் வெடிக்கும் என எதிர் பார்க்கும் ,இந்திய இவ்வேளை இந்தியர்கள் குறிவைத்து தாக்க பாடலாம் என எதிர் பார்க்கிறது.
அதனால் இலங்கை வாழ் இந்தியா மக்கள் மிக எச்சரிக்கையாக இருக்கும் படி எச்சரிக்கை பட்டுள்ளனர் .
இந்தியாவின் இந்த அதிரடி அறிவிப்பின் பின்னால் ஏதோ இலங்கையில் நடக்க போவதை காண்பிக்கிறது .
இலங்கையில் சீனா கப்பல் தமிழக கடற்கரையோரங்கள் பாதுகாப்பு இறுக்கம்
இலங்கையில் சீனா கப்பல் தமிழக கடற்கரையோரங்கள் பாதுகாப்பு இறுக்கம்
சீனா ஆய்வு கப்பல் இலங்கை துறைமுகத்தில் தரித்துள்ளது.
சீனாவின் இந்த கப்பல் வருகையை அடுத்து ,தமிழகத்தின் கடல் கரையோரங்கள் பாதுகாப்பு அதிகரிக்க பட்டுள்ளது.
ஆறு போர் கப்பல்கள், மற்றும் உலங்குவானூர்திகள் , விமானங்கள் என்பன ரோந்து கண்காணிப்பில் ஈடுபடுத்த பட்டுள்ளன.
சீனாவின் இந்த ஆய்வு கப்பல் ,இலங்கை வந்தடைந்துள்ளது .அமெரிக்கா மற்றும் இந்தியாவுக்கு இடையில் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிட தக்கது .
இலங்கைக்கு உதவுவோம் இந்தியா உறுதி
இலங்கைக்கு உதவுவோம் இந்தியா உறுதி
இலங்கைக்கு இந்தியா தொடர்ந்து உதவும் என இந்தியா வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார் .
கம்போடியாவில் இரு நாடுகளும் இடையில் இடம்பெற்ற சந்தின்பொழுது இந்த விடயம் உறுதிப்படுத்த பட்டு தெரிவிக்க பட்டுள்ளது.
இலங்கை தமது நண்பன் என இந்தியா தெரிவித்துள்ளது .பலத்த நெருக்கடியில் இலங்கை சிக்கி தவித்த பொழுது உணவு மற்றும் எரிபொருள்
மருத்துவ உதவிகளை இந்தியா முன்னின்று வழங்கி இருந்தமை இங்கே குறிப்பிட தக்கது .
இலங்கை இந்தியா உறவில் பாதிப்பில்லை இந்தியா அறிவிப்பு
இலங்கை இந்தியா உறவில் பாதிப்பில்லை இந்தியா அறிவிப்பு
இந்தியா, டில்லி ; இலங்கையில் புதிய ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் இலங்கை தொடர்பாக இந்தியா கருத்துரைத்துள்ளது .
இலங்கை இந்தியாவுக்கு இடையில் வர்த்தக முதலீட்டு உறவுகள் சிறந்த முறையில் உள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார்.
இந்தியா முந்திக்கொண்டு இந்த விடயத்தை அறிவித்துள்ள முக்கிய விடயமாக பார்க்க படுகிறது.
இலங்கையில் புதிய ஜனாதிபதியை நியமிப்பதில் இந்தியா அமெரிக்கா கடும் போட்டிகளைமேற்கொண்டது .இதில் அமெரிக்காவே வெற்றி பெற்றுள்ளது எனப்படுகிறது.
அவ்வாறான வேளையில் இந்தியா இவ்விதம் இலங்கை தொடர்பாக தனது கருத்தை வெளியிட்டுள்ளமை முக்கியத்துவம் பெறுகிறது .
டாட்டா ஞாபகார்த்த மருத்துவமனை இலங்கைக்கு அவசரமாகத் தேவைப்படும் புற்றுநோய் மருந்துகளை நன்கொடை
டாட்டா ஞாபகார்த்த மருத்துவமனை இலங்கைக்கு அவசரமாகத் தேவைப்படும் புற்றுநோய் மருந்துகளை நன்கொடை
மும்பையில் உள்ள டாட்டா ஞாபகார்த்த மருத்துவமனை இலங்கை ரூபாய் 20 மில்லியன் பெறுமதியான புற்றுநோய் மருந்துகளை 2022 ஜூலை 15ஆந் திகதி இலங்கைக்கு வழங்கியது.
இந்த நன்கொடையில் மஹரகமவில் உள்ள அபேக்ஷா புற்றுநோய் மருத்துவமனைக்குத் தேவையான வெப்பநிலை கட்டுப்படுத்தப்பட்ட புற்றுநோய் சிகிச்சை மருந்துகளும் இடம்பெற்றுள்ளன.
இலங்கைக்கு மருத்துவப் பொருட்களை விமானத்தில் கொண்டு செல்வதற்குத் தேவையான ஒப்புதல்கள் மற்றும் அனுமதிகளை எளிதாக்குவதற்காக
மும்பையில் உள்ள இலங்கையின் துணைத் தூதரகம் நன்கொடையாளர் மற்றும் தொடர்புடைய இலங்கை மற்றும் இந்திய அதிகாரிகளுடன் 2022 ஜூலை 16ஆந் திகதி ஒருங்கிணைத்தது.
இந்த கையளிப்பு விழாவில், நன்கொடையை ஏற்பாடு செய்த டாட்டா ஞாபகார்த்த மருத்துவமனையின் பின்வரும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்: டாட்டா ஞாபகார்த்த மருத்துவமனையின் பணிப்பாளர் வைத்தியர் சி.எஸ்.
பிரமேஷ், டாட்டா ஞாபகார்த்த மருத்துவமனையின் பீடியாட்ரிக் என்கொலஜி பிரிவின் பேராசிரியர் மற்றும் தலைவர் பேராசிரியர் வைத்தியர் கிரிஷ் சின்னசாமி, டாட்டா ஞாபகார்த்த மருத்துவமனையின் உதவி மருத்துவக்
டாட்டா ஞாபகார்த்த மருத்துவமனை இலங்கைக்கு அவசரமாகத் தேவைப்படும் புற்றுநோய் மருந்துகளை நன்கொடை
கண்காணிப்பாளர் வைத்தியர் வினித் சமந்த், டாட்டா ஞாபகார்த்த மருத்துவமனையின் புற்றுநோயியல் உதவிப் பேராசிரியர் வைத்தியர்
வெங்கட ராம மோகன் கொல்லமுடி, டாட்டா ஞாபகார்த்த மருத்துவமனையின் பொது முகாமையாளர் (சி.எஸ்.ஆர்.) சுனிதா ராவ் மற்றும் டாட்டா ஞாபகார்த்த மருத்துவமனையின் மருந்தாளர் வோனோத் நாயர்.
இந்த நன்கொடையை வழங்கும் நிகழ்வில் மும்பையில் உள்ள இலங்கையின் தூதரகத் தூதுவர் கலாநிதி. வல்சன் வேத்தோடி மற்றும் துணைத் தூதுவர் (வணிகம்) சந்துன் சமீர ஆகியோர் கலந்துகொண்டனர். இலங்கைக்கு
தேவைப்படும் இந்த நேரத்தில் டாட்டா ஞாபகார்த்த மருத்துவமனையின் வழங்கிய விலைமதிப்பற்ற நன்கொடையைப் பாராட்டிய துணைத் தூதுவர், டாட்டா ஞாபகார்த்த நிலையம் மற்றும் இலங்கையில் உள்ள புற்றுநோய்
சிகிச்சை நிறுவனங்களுக்கு இடையே புற்றுநோய் சிகிச்சை அறிவு மற்றும் நிபுணத்துவத்தை பரிமாறிக்கொள்வதற்கு மேலும் ஒத்துழைப்பைக் கோரினார்.
உலகின் மிகப் பழமையான மற்றும் மிகப்பெரிய புற்றுநோய் மையங்களில் ஒன்றான டாட்டா ஞாபகார்த்த மருத்துவமனை, 75 ஆண்டுகளுக்கும் மேலான
விதிவிலக்கான நோயாளர் பராமரிப்பு, உயர்தரப் பயிற்சி மற்றும் புதுமையான புற்றுநோய் ஆராய்ச்சி மற்றும் தேசிய மற்றும் உலகளாவிய புற்றுநோய்
கட்டுப்பாட்டு முயற்சிகளில் முன்னணியில் உள்ளது. இது இந்தியாவில் புற்றுநோய்க்கான தடுப்பு, சிகிச்சை மற்றும் ஆராய்ச்சிக்கான விரிவான தேசிய புற்றுநோய் மையமாகும்.
டாட்டா ஞாபகார்த்த நிலையம் அடிப்படை, மொழிபெயர்ப்பு, தொற்றுநோயியல் மற்றும் மருத்துவ புற்றுநோய் ஆராய்ச்சியில் உலக அளவில் முன்னணியில் உள்ளது. டாட்டா ஞாபகார்த்த நிலையத்தில் உள்ள
ஆராய்ச்சியில் புற்றுநோய் உயிரியலைப் புரிந்துகொள்வதற்கான ஆய்வுகள், பொதுவான புற்றுநோய்களுக்கான பெரிய சமூக அடிப்படையிலான
ஸ்கிரீனிங் சோதனைகள் மற்றும் கூட்டு ஆய்வுகள், நியோட்ஜுவண்ட் மற்றும் துணை சிகிச்சைகள், பெரிய அறுவை சிகிச்சை தலையீடுகள், அறுவை
சிகிச்சை சோதனைகள், மறுபயன்பாட்டு மருந்துகள் மற்றும் நோயாளி பயணத்தைப் புரிந்துகொள்வதற்கான தரமான ஆராய்ச்சி ஆகியவை
அடங்கும். மேலும், பயிற்சி மற்றும் கல்வி ஆகியவை டாட்டா ஞாபகார்த்த நிலையத்திற்கு முக்கிய கவனம் செலுத்தும் பகுதியான இது, இந்தியாவில் புற்றுநோயியல் பயிற்சிக்காக மிகவும் விரும்பப்படும் நிறுவனமாக உள்ளது.
இலங்கையின் துணைத் தூதரகம்,
மும்பை
இளம்பெண்ணை மனைவியுடன் இனைந்து கற்பழித்த கணவன்
இளம்பெண்ணை மனைவியுடன் இனைந்து கற்பழித்த கணவன்
இந்திய டில்லி பகுதியில் செருப்பு தொழில் சாலையில் பணிபுரிந்த 15 வயது இளம் பெண்ணை அந்த நிறுவனத்தின் மேனேஜர் கற்பழித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தனது மனைவிக்கு உடல்நிலை சரியில்லை என அந்த சிறுமியை வீட்டுக்கு அழைத்து சென்ற கணவன் தனது மனைவியுடன் இணைந்து இளம் பெண்ணை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளார்.
மூன்று நாட்களாக கொடூரமாக கற்பழித்த அவர் பின்னர் பெண்ணின் வீட்டுக்கு அனுப்பி வைக்கும் பொழுது அவளது வாய்க்குள் அசிட்டை ஊற்றியுள்ளார் .
இளம்பெண்ணை மனைவியுடன் இனைந்து கற்பழித்த கணவன்
அதனை அருந்திய இளம் பெண் உடல் பகுதியில் பலமாக எரிந்த நிலையில் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளார்.
கொலை கற்பழிப்பு மற்றும் கடத்தல் வழக்கில் மேனேஜர் கைது செய்யப்பட்டு நீதிமனற விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளார் .
மேற்படி இளம் பெண் கற்பழிப்பு சம்பவம் அந்த பகுதியில் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெண்கள் அமைப்புக்கள் இந்த கற்பழிப்பை புரிந்த நபருக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என போராட்டங்களில் குதித்துள்ளனர்.
தனது மனைவியுடன் இணைந்து இளம் பெண்ணை கற்பழித்த கணவன் செயல் உலகளாவிய ரீதியில் மக்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கைக்கு இந்தியா இராணுவம் அனுப்ப படமாட்டாது
இந்தியா தனது படைகளை இலங்கைக்கு அனுப்புவதாக ஊகங்களின் அடிப்படையில் பல்வேறு ஊடகங்களிலும், சமூக ஊடகங்களிலும்
வெளியாகியிருக்கும் செய்திகளை உயர் ஸ்தானிகராலயம் முற்றுமுழுதாக மறுக்கின்றது.
இச்செய்திகளும் இவ்வாறான நோக்குகளும் இந்திய அரசாங்கத்தின் நிலைப்பாட்டினை அடிப்படையாகக் கொண்டவை அல்ல.
- ஜனநாயக பெறுமானங்கள் மற்றும் விழுமியங்கள், நிறுவனமயப்படுத்தப்பட்ட அமைப்புகள் மற்றும் அரசியலமைப்பு ரீதியான
- கட்டமைப்பு ஆகியவற்றின் ஊடாக செழுமை மற்றும் முன்னேற்றத்தினை நனவாக்க விரும்பும் இலங்கை மக்களுடன் இந்தியா துணை நிற்பதாக இந்திய வெளியுறவு
அமைச்சின் ஊடகப்பேச்சாளர் நேற்றையதினம் மிகவும் தெளிவாக கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.




























