Posted in Uncategorized

நாட்டை முடக்கினால் நாளாந்தம் 15 பில்லியன் ரூபா நட்டம்

நாட்டை முடக்கினால் நாளாந்தம் 15 பில்லியன் ரூபா நட்டம்

நாட்டை முற்றாக முடக்கி அதன் மூலம் நாளாந்தம் 15 பில்லியன் ரூபா நட்டம் ஏற்படுவதாக இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் அறிவித்துள்ளார்.

கொவிட்-19 வைரஸ் வேலைகளுக்கு மத்தியில் நாட்டின் பொருளாதாரம் சீர் குலைவதற்கு இடமளிக்க முடியாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் யுத்த தளபாடங்களை பெற்றுக்கொள்ள பாரிய அளவிலான நிதி தேவைப்பட்டது.

அதேபோன்று தற்சமயம் கொவிட் வைரஸ் பரவும் இந்த சந்தர்ப்பத்திலும் சுகாதார உபகரணங்களை கொள்வனவு செய்யவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம்

வழங்குவதற்காக பாரியளவிலான பொருளாதார வெல்லமே அரசாங்கத்திற்கு அவசியம் என்றும் அவர் கூறினார்.

நாட்டின் சனத்தொகையில் 60 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் அன்றாடம் வருமானம் வெட்டுபவர்கள் ஆவர். நாட்டை முற்றாக அடக்குவதன் மூலம் இவர்களின் வருமானம் முழுமையாக தடைப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

கொழும்பு துறைமுக நகர வேலைத்திட்டத்தின் ஊடாக இலங்கைக்கு வருடாந்தம் மூன்று பில்லியன் அமெரிக்க டொலர்களாக கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இதன்மூலம் ஒவ்வொரு வருடமும் 4 லட்சம் பேர் நாட்டின் தொழில் படையில் இணைந்து கொள்வார்கள் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார். துறைமுக நகர சட்டமூலத்தின் ஊடாக

அரசாங்கத்தின் பொருளாதார இலக்கை அடைந்து கொள்வதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்தார்

    Posted in இலங்கை செய்திகள்

    26 மில்லியனை கடத்தி செல்ல முற்பட்டவர் கைது

    26 மில்லியனை கடத்தி செல்ல முற்பட்டவர் கைது

    இலங்கை கட்டுநாயக்க வான்தளம் ஊடாக 26 மில்லியன் ரூபாய்களை அமெரிக்காவில் இருந்து

    பெற்று அதனை அரேபிய நாடு ஒன்றுக்கு கடத்தி செல்ல முற்பட்ட கிண்ணியாவை சேர்ந்த

    ஒருவரை குற்ற புலனாய்வு துறையினரால் கைது செய்ய பட்டுளளார்

    இவர்களுக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலை அடுத்து இந்த கைது இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்க படுகிறது

      Posted in இலங்கை செய்திகள்

      5,000 ரூபா பெற்றுக்கொள்ளாதவர்களுக்கு வழங்க திட்டம்

      5,000 ரூபா கொடுப்பனவு : இதுவரை பெற்றுக்கொள்ளாதவர்களுக்கு வழங்க திட்டம்

      5000 ரூபா சமூகப் பாதுகாப்பு கொடுப்பனைப் பெற தகுதி பெற்றும் இதுவரை அதனைப் பெற்றுக் கொள்ளாதவர்களுக்கு

      முறைப்பாட்டின் அடிப்படையில் எதிர்வரும் தினங்களில் வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக சமுர்த்தி பணிப்பாளர் நாயகம் பந்துல திலகசிறி தெரிவித்துள்ளார்.

      ஐயாயிரம் ரூபா சமூகப் பாதுகாப்பு கொடுப்பனவு 25 இலட்சத்து 50 ஆயிரம் பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.

      சமுர்த்தி பயனாளிகள், குறைந்த வருமானம் பெறுவோர், வயோதிபர்கள், ஊனமுற்றவர்கள் மற்றும் சிறுநீரக நோயாளர்கள்

      உள்ள குடும்பங்களுக்கு பிரதேச செயலாளர்களின் அனுமதியுடன் இந்தக் கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளதாகவும் சமுர்த்தி பணிப்பாளர் நாயகம் மேலும் குறிப்பிட்டார்.