இந்தியாவின் தூய்மையான நகரில் ரணில்
Posted in இலங்கை செய்திகள்

இந்தியாவின் தூய்மையான நகரில் ரணில்

இந்தியாவின் தூய்மையான நகரில் ரணில்

இந்தியாவின் தூய்மையான நகரில் ரணில் தற்போதைய அரசாங்கம் இந்தியாவுடனான உறவை வலுப்படுத்த வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இத்தினங்களில் இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ள முன்னாள் ஜனாதிபதி, இந்திய ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள இந்தூர் நகருக்கு விஜயம் செய்துள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அந்நகரில் அமைந்துள்ள பழைய கோட்டை உட்பட பல அரச மாளிகைகளுக்கு விஜயம் செய்துள்ளார்.

இந்தியாவின் தூய்மையான நகரங்களின் தரவரிசைப்படி இந்தூர் இந்தியாவின் தூய்மையான நகரமாக கருதப்படுகிறது

ரணில் விக்கிரமசிங்க 16 சமையல்காரர்கள்
Posted in இலங்கை செய்திகள்

ரணில் விக்கிரமசிங்க 16 சமையல்காரர்கள்

ரணில் விக்கிரமசிங்க 16 சமையல்காரர்கள்

ரணில் விக்கிரமசிங்க 16 சமையல்காரர்கள் ,முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 16 சமையல்காரர்கள், 163 பாதுகாப்புப் பணியாளர்கள், 30

குடைகள் மற்றும் 20க்கும் மேற்பட்ட வாகனங்கள் அடங்கிய விரிவான சலுகைகள் கோரியதை தாம் நிராகரித்துள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசாங்க விதிமுறைகளுக்கு இணங்க விக்ரமசிங்கவிற்கு மூன்று வாகனங்கள் மாத்திரமே

வழங்கப்படும் என ஜனாதிபதி பொது பேரணியில் தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு பொது நிதி மூலம் ஆதரவளிக்கப்படுவதை தடுக்க அரசாங்கம் புதிய சட்டத்தை அறிமுகப்படுத்தும் என மேலும் கூறினார்.

மேலும், விக்ரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரின் இல்லங்களில் முன்னர் வைக்கப்பட்டிருந்த இரண்டு நோயாளர்

காவு வண்டிகளை மீளப்பெற்றுக்கொண்ட திஸாநாயக்க, இந்த வசதிகளை தனிப்பட்ட சொத்தாகக் கருதக் கூடாது எனவும் வலியுறுத்தினார்.

ரணில் பாராளுமன்றத்திற்கு அனுப்புங்கள்
Posted in இலங்கை செய்திகள்

ரணில் பாராளுமன்றத்திற்கு அனுப்புங்கள்

ரணில் பாராளுமன்றத்திற்கு அனுப்புங்கள்

ரணில் பாராளுமன்றத்திற்கு அனுப்புங்கள் ,அனுபவம் வாய்ந்த உறுப்பினர்களை பாராளுமன்றத்திற்கு அனுப்புமாறு இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் பொதுத் தேர்தலில் அனுபவமிக்க உறுப்பினர்களை மீண்டும் பாராளுமன்றத்திற்கு அனுப்புமாறு

வாக்காளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார், தன்னுடன் பணியாற்றியவர்கள் தேவையான நிபுணத்துவம் பெற்றவர்கள் எனக் கூறியுள்ளார்.

“அனுபவம் இல்லாமல், உங்களால் நாடாளுமன்றத்தை நடத்த முடியாது, நாங்கள் நிர்ணயித்த இலக்குகளை அடைய முடியாது. என்னுடன்

பணியாற்றியவர்கள் பொருளாதார சவால்களை தீர்க்கும் நிபுணத்துவம் பெற்றவர்கள்,” என்று விக்ரமசிங்க வியாழன் அன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

எனவே அவர்கள் அரசாங்கத்திலோ அல்லது எதிர்க்கட்சியிலோ பாராளுமன்றத்தில் இருக்க வேண்டும்.

பாராளுமன்றத்தை நடத்துவதிலும், பொருளாதார இலக்குகளை அடைவதிலும் அனுபவம் இருப்பது முக்கியம் என்று கூறிய விக்கிரமசிங்க, பொருளாதார

நெருக்கடிக்கு தீர்வு காண ஜனாதிபதியாக தம்முடன் இணைந்து பணியாற்றியவர்களுக்கு வாக்களிக்குமாறு இலங்கை மக்களை வலியுறுத்தினார்.

நாடு கடனைத் திருப்பிச் செலுத்தாதபோது அவர் ஜனாதிபதி பதவியை ஏற்றுக்கொண்டார், மேலும் கடன் நிலைத்தன்மையை அடைவதும் திவால்நிலையை சமாளிப்பதும் அவரது குறிக்கோள் என்று அவர் கூறினார்.

“ஐஎம்எஃப், எங்களுக்கு கடன் வழங்கிய 18 நாடுகள் மற்றும் தனியார் பத்திரதாரர்களுடன் நாங்கள் உடன்பாட்டை எட்ட முடிந்தது.”

கடந்த பாராளுமன்றத்தில் இருந்தவர்களுடன் இணைந்து பணியாற்ற முடிந்ததால் இது சாத்தியமானது என அவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

அடுத்ததாக செய்ய வேண்டியது என்னவெனில், ஒப்பந்தங்களை நடைமுறைப்படுத்துவதும் கடனை நிலைநிறுத்தும் தன்மையை அடைவதும்

ஆகும். இதன் மூலம் இலங்கைக்கு வங்கிகள் அல்லது நன்கொடையாளர் முகவர்களிடம் இருந்து வெளிநாட்டு நிதியுதவி கிடைக்கும்.

“ஆனால் ஜனாதிபதி அனுர திஸாநாயக்க இந்த உடன்படிக்கைகளில் மாற்றங்களைச் செய்ய விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

“நாட்டைப் பற்றிய நிதி முடிவுகளை எடுக்கும் அதிகாரம் நாடாளுமன்றத்திடம் உள்ளது.எனவே இது புதிய பாராளுமன்றத்தின் பொறுப்பாகும்.

மக்கள் மீண்டும் ரணிலைக் கேட்பார்கள்
Posted in இலங்கை செய்திகள்

மக்கள் மீண்டும் ரணிலைக் கேட்பார்கள்

மக்கள் மீண்டும் ரணிலைக் கேட்பார்கள்

மக்கள் மீண்டும் ரணிலைக் கேட்பார்கள் ,ஏற்கெனவே ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தேசிய மக்கள் சக்தி போன்றவற்றில் பல்வேறு நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

“ஐக்கிய மக்கள் சக்தி கட்சித் தலைமை கடும் அதிருப்தியில் உள்ளது. திசைகாட்டியிலும் நெருக்கடிகள் உள்ளன. வரும் ஏப்ரல் மாதத்திற்குள், இந்த நெருக்கடி முடிவுக்கு வரும். இந்த அரசாங்கத்தால் சலிப்படைந்த மக்கள் மீண்டும் ரணிலைக் கேட்பார்கள்” என்றார்.

நேற்று (13) இடம்பெற்ற புதிய ஜனநாயக முன்னணியின் கட்சி உறுப்பினர்களின் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே ராஜித சேனாரத்ன மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான புதிய கூட்டணிக்கு தலைவர் ரணில்
Posted in இலங்கை செய்திகள்

ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான புதிய கூட்டணிக்கு தலைவர் ரணில்

ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான புதிய கூட்டணிக்கு தலைவர் ரணில்


ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான புதிய கூட்டணிக்கு தலைவர் ரணில் ,ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான புதிய கூட்டணிக்கு ரணில் விக்கிரமசிங்க தலைமை தாங்குவார் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சமன் ரத்னபிரிய தெரிவித்துள்ளார்.

தற்போது புதிய கூட்டணியை உருவாக்கும் நோக்கில் எதிர்க்கட்சிகள் பலவும் கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருகின்றன.

எனினும், பொதுத் தேர்தலில் எரிவாயு சிலிண்டர் சின்னத்தில் போட்டியிட ஐக்கிய தேசியக் கட்சி ஏற்கனவே தீர்மானித்துள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைவது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சி கலந்துரையாடிய போதிலும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச முன்வைத்த நிபந்தனைகளால் பேச்சுவார்த்தை முறிவடைந்தது.

ரணில் ஆதரவு குழு யானை சின்னத்தில் போட்டியிட தீர்மானம்
Posted in இலங்கை செய்திகள்

ரணில் ஆதரவு குழு யானை சின்னத்தில் போட்டியிட தீர்மானம்

ரணில் ஆதரவு குழு யானை சின்னத்தில் போட்டியிட தீர்மானம்

ரணில் ஆதரவு குழு யானை சின்னத்தில் போட்டியிட தீர்மானம் , ,ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் அடுத்த பொதுத் தேர்தலில் யானைச்

சின்னத்திலோ அல்லது வேறு பொதுச் சின்னத்திலோ போட்டியிடத் தயாராக உள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எரிவாயு சிலிண்டர் சின்னத்தை பெறுவது தொடர்பில் தேர்தல் ஆணைக் குழுவிடம் வினவியுள்ளதாகவும், அதன் முடிவு கிடைத்ததும் இறுதி தீர்மானம் எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர் மற்றும் கூட்டணி தொடர்பில் இறுதி இணக்கப்பாட்டுக்கு வருவதற்காக குறித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று (02) பிற்பகல் கொழும்பு ப்ளவர் வீதியிலுள்ள தேர்தல் செயற்பாட்டு அலுவலகத்தில் கூடியிருந்தனர்.

எரிவாயு சிலிண்டர் சின்னத்தைப் பெற முடியாவிட்டால், அவர்கள் பெரும்பாலும் யானை அல்லது வேறு சின்னத்தின் கீழ் போட்டியிடலாம் என தெரிவிக்கப்படுகிறது.

நாட்டை சீரழிக்கின்ற ரணில் அநுர கூட்டணிக்கு வாக்களிப்பதா
Posted in இலங்கை செய்திகள்

நாட்டை சீரழிக்கின்ற ரணில் அநுர கூட்டணிக்கு வாக்களிப்பதா

நாட்டை சீரழிக்கின்ற ரணில் அநுர கூட்டணிக்கு வாக்களிப்பதா

நாட்டை சீரழிக்கின்ற ரணில் அநுர கூட்டணிக்கு வாக்களிப்பதா ,இன்று மக்கள் தெளிவான முறையில் தீர்மானம் எடுக்கும் நிலையில் இருக்கின்றார்கள்.

நாட்டை அழிவின் பக்கம் இட்டுச்செல்லும் ரணில் அநுர கூட்டமைப்புக்கு ஆதரவு வழங்குவதா? இல்லாவிட்டால் 220 இலட்சம் மக்களையும் ஆட்சி பீடமேற்றும் பொது மக்களின் யுகத்திற்கு மக்கள் வரத்தை வழங்குவதா? என்று மக்கள் தீர்மானிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் பிரேமதாச தெரிவித்தார்.

இந்நாடு மீண்டும் அபிவிருத்தியை நோக்கிய யுகத்திற்கு செல்வதற்கும் தொழிற்சாலைகள் உருவாகி, தொழில் வாய்ப்புகள் கிடைக்கப்பெற்று மக்களின் வறுமை நீங்கி மூலை முடுக்கு, கிராமங்கள், நகரங்கள், விருத்தியடைந்து நாடு அபிவிருத்தி அடைகின்ற வேலைத்திட்டத்திற்கு ரணில் அநுர கூட்டமைப்பு எதிர்ப்பு தெரிவிக்கின்றார்கள்.

ரணில்-அநுர கும்பல் இரவு பகல் பாராது ஐக்கிய மக்கள் சக்தியை தோல்வியடைய செய்ய வேண்டும் என்று சூழ்ச்சியில் ஈடுபட்டிருக்கின்றார்கள்.

இந்த சூழ்ச்சிக்குள் நாட்டு மக்கள் சிக்கிக் கொள்ள மாட்டார்கள் என்பதை தாம் அறிந்திருக்கிறோம் என எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு ஐக்கிய மக்கள் கூட்டணி ஏற்பாடு செய்த 52 ஆவது மக்கள் வெற்றிப்பேரணி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் நேற்று (14) திகதி இரத்தினபுரியில் மிக வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது.

பெருந்திரளான மக்கள் மத்தியில் உரையாற்றும் போது எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு தெரிவித்தார்.

கட்டுக்கட்டாக பைல்களை தூக்கிச் சென்ற ஒரு குழுவினர் திருடர்களை பிடிப்போம் என்று கூறினாலும், ஐக்கிய சட்டத்தரணிகள் சக்தி உயர்நீதிமன்றத்தை நாடி நாட்டை வங்குரோத்தடையச் செய்த

ராஜபக்ஷக்களுக்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்து தீர்வைப் பெற்று, அவர்கள் நீதிமன்றத்தின் முன் குற்றவாளிகள் என

வெளிக்கொணர்ந்தது. செப்டம்பர் 21 ஆம் திகதிக்கு பின்னர் இந்தத் தீர்வின் ஊடாக நட்ட ஈட்டை பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை எடுப்போம் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இரத்தினக்கல் அகழ்வு தொழிலில் ஈடுபடுகின்ற வேலையாட்கள், முதல் இரத்தினக்கல் மற்றும் ஆபரண தொழில்துறை ஏற்றுமதியாளர்கள், தொழிற்சாலை உரிமையாளர்கள், பயிற்றுவிப்பாளர்கள், வர்த்தக

இடைத்தரகர்கள், தொழிலாளர்கள் உள்ளிட்ட அர்ப்பணிப்புடன் செயற்படுகின்ற அனைத்து தரப்பினர்களுக்காகவும் இரத்தினக் கல் மற்றும் ஆபரணங்கள் தேசிய கொள்கை திட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.

அத்தோடு 50 கிலோ உரம் ஒரு மூடையை 5000 ரூபாவுக்கு வழங்கி, விவசாயிகளை வலுப்படுத்துவதற்கு அர்ப்பணிப்புடன் செயல்படுவோம் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

கோட்டாபய ராஜபக்ச அரசாங்கம் இரத்தினபுரி உள்ளிட்ட இலங்கையில் இரத்தினக் கல் காணப்படுகின்ற இடங்களை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்ய முயற்சி செய்ததது.

அதற்கு ஐக்கிய மக்கள் சக்தியும் ஐக்கிய மக்கள் கூட்டணியும் பாராளுமன்றத்தில் குரல் எழுப்பி அதனை நிறுத்தினோம்.

தோட்டத் தொழிலாளர்களுக்காக செய்ய முடியுமான அனைத்து நடவடிக்கைகளையும் மிகப் பெருமளவில் செய்து, தொழில் வாய்ப்பில்லாத

இளைஞர்களை சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்களாக மாற்றி சமூகத்தில் அபிமானத்துடன் வாழக்கூடிய சூழ்நிலையை உருவாக்கிக் கொடுப்போம் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

வீடில்லாதவர்களுக்கு வீடுகளை பெற்றுக் கொடுப்பதோடு இல்லத்தரசிகளை மையமாகக் கொண்ட வறுமை ஒழிப்பு வேலை திட்டத்தை செயற்படுத்தி, 24

மாதங்களுக்கு 20 ஆயிரம் ரூபா வழங்கி வறுமையை ஒழிக்க நடவடிக்கை எடுப்போம் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்தார்

ரணிலுக்கும் அநுரவுக்கும் அரசியல் திருமணம்! இன்று தேனிலவு
Posted in இலங்கை செய்திகள்

ரணிலுக்கும் அநுரவுக்கும் அரசியல் திருமணம்! இன்று தேனிலவு

ரணிலுக்கும் அநுரவுக்கும் அரசியல் திருமணம்! இன்று தேனிலவு

ரணிலுக்கும் அநுரவுக்கும் அரசியல் திருமணம்! இன்று தேனிலவு ,நாட்டில் தற்பொழுது வன்முறையும் மிலேச்சத்தனமும் பயங்கரவாதமும் தலை தூக்கிக் கொண்டிருக்கின்றது. ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற வன்முறை காரணமாக பல்கலைக்கழகம் மூடப்பட்டிருக்கின்றது.

பல சமூக அமைப்புக்களின் கலந்துரையாடல்கள் இடம் பெற்றுக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் இந்த மிலேட்சத்தனமான தாக்குதல் இடம் பெற்றிருக்கின்றது என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இந்த நாட்டில் கருத்துச் சுதந்திரமும், தாம் விரும்பிய முறையில் அரசியல் செய்யவும் சுதந்திரம் இருக்கின்றது. இங்கு உருவெடுக்கின்ற கொடிய பாசிச வாதத்திற்கும், வன்முறைக்கும், மிலேட்சத்தனத்திற்கும் மக்கள் ஆதரவு

அளிக்கின்றார்களா என்று கேள்வி எழுப்புகின்றோம். பொது மக்களின் யுகத்திற்காக எந்த சந்தேகமும் இன்றி ஐக்கிய மக்கள் சக்திக்கு உந்து சக்தியைப் பெற்று தருமாறு வேண்டுகோள் விடுக்கின்றோம் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு ஐக்கிய மக்கள் கூட்டணி ஏற்பாடு செய்த 49 ஆவது மக்கள் வெற்றி பேரணி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் செப்டம்பர் 13 ஆம் திகதி தெபரவெவ நகரில் மிக

வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு தெரிவித்தார்.

தற்பொழுது நாட்டை தீ மூட்டிய குழுவும், வங்குரோத்தடையைச் செய்த குழுவுக்கு பாதுகாப்பு வழங்குகின்றவர்களும் ஒன்றாக இணைந்துள்ளார்கள்.

ரணிலும் அநுரவும் அரசியல் திருமணம் செய்து கொண்டு இன்று தேனிலவை கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். இந்த தேனிலவுக் கொண்டாட்டத்தை நிறுத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தி விவசாய கடனை இரத்து செய்வதால் அநுரவும் ரணிலும் அதற்கு எதிராக ஒன்றிணைந்து இருக்கின்றார்கள்.

குறைந்த விலையில் உரம் வழங்குவதற்கும், வீடுகளை அமைத்துக் கொடுப்பதற்கும், எரிபொருள் நிவாரணம் வழங்கப்படுவதற்கும், இவர்கள்

எதிராக இருக்கின்றனமையாலே தற்பொழுது ஒன்றாக இணைந்து கொண்டிருக்கின்றார்கள் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

அத்தோடு நாட்டை கட்டியெழுப்புவதற்கு எதிராக ரணிலும் அநுரவும் தற்பொழுது ஒன்றாக இணைந்து கொண்டிருக்கின்றார்கள்.

மக்கள் தொடர்ந்து அசௌகரியத்துடன் இருப்பதை அவர்கள் விரும்புகின்றார்கள்.

வேளாண்மை விவசாயிகளையும், பால் பண்ணையாளர்களையும் பாதுகாப்பதற்கு இவர்கள் எதிராக இருக்கின்றார்கள் என
எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

எனவே இந்த ரணில் அநுர ஆகியோரின் தந்திரக் கூட்டைத் தோல்வி அடையச் செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களுக்காக அர்ப்பணிப்புடன் செயல்படுகின்ற, ஐக்கிய மக்கள் கூட்டணியின் பொதுமக்களுடைய

யுகத்திற்கு பலத்தைப் பெற்றுத் தருமாறு கோரிக்கை விடுக்கின்றோம். இன, மத, குல, பேதங்களை மறந்து ஐக்கிய மக்கள் சக்தியை வெற்றி பெற அனைவரையும் ஒன்றிணையுமாறு எதிர்க்கட்சித் தலைவர் அழைப்பு விடுத்தார்.

ரணில் நாட்டை புதிய பிரச்சினையில் சிக்க வைத்துள்ளார்
Posted in இலங்கை செய்திகள்

ரணில் நாட்டை புதிய பிரச்சினையில் சிக்க வைத்துள்ளார்

ரணில் நாட்டை புதிய பிரச்சினையில் சிக்க வைத்துள்ளார்

ரணில் நாட்டை புதிய பிரச்சினையில் சிக்க வைத்துள்ளார் ,உயிர்த்த ஞாயிறு தாக்குதல், கொரோனா கோவிட் தொற்று பரவல், நாட்டின் வங்குரோத்து நிலைமை என்னவற்றினால் 220 இலட்சம் மக்கள் பாதிக்கப்பட்டார்கள். நாடு விழுந்திருக்கின்ற இந்த பாதாளத்திலிருந்து மீட்டெடுக்க வேண்டும்.

தற்போது அரசாங்கம் மக்களுடைய வாழ்க்கையை சுருக்கி, பொருளாதாரத்தை சுருக்கி, தொழிலாளர் வர்க்கத்தின் மேல் சுமையை அதிகரித்து மீட்சி பெற முடியும் என்று கூறினாலும், அது பிழையான கருத்து. பொருளாதார விருத்தியின் ஊடாகவே மீட்சி பெற முடியும் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

IMF க்கு 2033 ஆம் ஆண்டிலிருந்து கடனை மீளச் செலுத்த வேண்டும். ஆனால் ரணில் விக்ரமசிங்க அரசாங்கம் 2028 ஆம் ஆண்டிலிருந்து கடனை மீள செலுத்த தீர்மானித்து இருக்கிறது.

பொருளாதாரம் சுருக்கப்படுகின்ற போது மக்களின் வாழ்க்கை தரத்தில் வீழ்ச்சி ஏற்பட்டு ஏற்றுமதி விருத்தி காண்பதில்லை.

அந்த சந்தர்ப்பத்தில் டொலர் வருமானம் கிடைப்பதில்லை. கடனை மீள செலுத்துகின்ற காலத்தை குறைத்திருக்கின்ற ரணில் விக்கிரமசிங்க மீண்டும் நாட்டை பாரிய சிக்கலுக்கு உள்ளாக்கியிருக்கின்றார் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

கொழும்பு நுகேகொடையில் நடைபெற்ற ஐக்கிய குடியரசு முன்னணியின் விசேட மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகங்களும் தொழிற்சாலைகளும் வீழ்ச்சி அடைந்திருக்கின்றன.

ஆடை தொழிற்சாலைகள் மூடப்பட்டு ஏற்றுமதியை ஊக்குவிக்கின்ற வேலைத்திட்டங்கள் இல்லாத நிலையில், 2028 ஆம் ஆண்டு முதல் கடனை மீள செலுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது என எதிர்க்கட்சித்தலைவர் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஊடாக 220 இலட்சம் மக்களையும் ஒன்றாக இணைத்துக் கொண்டு, உற்பத்தியும் ஏற்றுமதியையும் அதிகரித்து, பொருளாதார அபிவிருத்தியை மேம்படுத்தி, அனைவரையும் ஒன்றிணைத்த பொருளாதார அபிவிருத்தி ஒன்றையும் சுபீட்சத்தையும் உருவாக்கி வறுமையை ஒழிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

நாட்டின் வறுமை நிலை 30 இலட்சத்திலிருந்து 70 இலட்சம் வரை அதிகரித்திருக்கின்றது என்பது ஜனாதிபதிக்கு தெரியாது.

வறுமையை போக்குகின்ற வேலைத்திட்டங்கள் எதுவும் அவரிடம் இல்லை என்றாலும் ஐக்கிய மக்கள் சக்தியிடம் நகர, கிராமிய, தோட்டப்புறங்களில் வறுமையை ஒழிப்பதற்கான வேலைத்திட்டங்கள் காணப்படுகின்றன.

அது ஜனசவியவுக்கு சமனான நிலையில் 24 மாதங்களுக்கு மாதம் ஒன்றுக்கு தலா 20,000 ரூபா வீதம் வழங்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகர்களின் சொத்துக்கள் பராட்டே சட்டத்தின் மூலம் ஏலத்தில் விடப்படுவதை நிறுத்தியது ஐக்கிய மக்கள் சக்தியே.

பராட்டே சட்டத்தை தற்காலிகமாக இடைநிறுத்தியதோடு இந்த நிறுவனங்கள் மீண்டும் துளிர் விடுவதற்கு மூலதனத்தை பெற்றுக் கொடுக்கவும் வேண்டும்.

ஆனால் அவை இன்னும் பெற்றுக் கொடுக்கப்படவில்லை. ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஊடாக டிசம்பர் 15 ஆம் திகதி முதல் வரையறுக்கப்பட்ட காலத்திற்கு பராட்டே சட்டமூலத்தை இடை நிறுத்துவோம்.

அதன் போது வர்த்தகங்களுக்கான மூலதனத்தையும் பெற்றுக் கொடுப்போம் என எதிர்க்கட்சித் தலைவர் மேலும் குறிப்பிட்டார்.

அத்தோடு பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக புதிய தொழில் முனைவர்கள் ஒரு மில்லியனை உருவாக்குவோம்.

அதற்கு மூலதனத்தையும் பெற்றுக் கொடுப்போம். திறமையும் ஆளுமையுமுள்ள பணியாளர் படையணியொன்றும் உருவாக்கப்பட வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் இதன் போது தெரிவித்தார்.

பகுப்பாய்வுகளையும், தரவுகளையும் மையப்படுத்திய அரசாட்சிக்கு செல்ல வேண்டும். மக்களை மையப்படுத்திய ஆட்சிக்குச் செல்ல வேண்டும். அனைத்து கொடுக்கல் வாங்கலும் முறையாக இடம்பெற வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் இங்கு சுட்டிக்காட்டினார்.

ரணில் பொருளாதாரப் பிரச்சினை தீர்க்கப்படும்
Posted in இலங்கை செய்திகள்

ரணில் பொருளாதாரப் பிரச்சினை தீர்க்கப்படும்

ரணில் பொருளாதாரப் பிரச்சினை தீர்க்கப்படும்

ரணில் பொருளாதாரப் பிரச்சினை தீர்க்கப்படும் ,இன்னும் 20 வருடங்களில் சிறந்த நாட்டில் வாழ முடியும் என்ற நம்பிக்கையை இந்நாட்டு இளைஞர்களுக்கு வழங்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

செப்டெம்பர் 21ஆம் திகதி நாட்டை உருவாக்க எரிவாயு சிலிண்டருக்கு வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்திய ஜனாதிபதி, சஜித்துக்கும் அநுரவுக்கும் நாட்டைக் கட்டியெழுப்ப எந்த திட்டமும் இல்லை எனவும் அவர்களிடம் நாட்டை ஒப்படைத்தால் நாட்டின் பொருளாதாரம் மீண்டும் வீழ்ச்சியடையும் எனவும் தெரிவித்தார்.

நாட்டின் பொருளாதாரம் மீண்டும் சீர்குலைந்தால் நாட்டின் எதிர்காலம் தொடர்பில் எவராலும் நம்பிக்கை வைக்க முடியாது என ஜனாதிபதி வலியுறுத்தினார்.

திருக்கோவில் பிரதேசத்தில் நேற்று (11) இடம்பெற்ற ‘ரணிலால் இயலும்’ வெற்றிப் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த பேரணியில் பெருமளவான மக்கள் கலந்துகொண்டனர்.

இந்த மக்கள் பேரணியில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, கடந்த இரண்டு வருடங்களில் இந்த நாட்டின் வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை மீட்டெடுத்து அனைவரும் வாழக்கூடிய நாட்டை உருவாக்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.

அடுத்த 05 வருடங்களில் இந்த வேலைத் திட்டத்தை வலுவாக அமுல்படுத்தி நாட்டின் பொருளாதார பிரச்சினைக்குத் தீர்வுகாண நடவடிக்கை எடுப்பேன் என தெரிவித்த ஜனாதிபதி, மக்கள் தமது பிள்ளைகளின் மற்றும் நாட்டின் எதிர்காலத்திற்கான வேலைத்திட்டத்திற்கு ஆதரவளிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,

“2004 ஆம் ஆண்டு சுனாமிக்கு பின்னர் நான் இங்கு வந்தேன். கோவில் பகுதிக்கு சென்றிருக்கிறேன். நாட்டை பொருளாதாரத்தை கட்டியெழுப்பும்போது திருக்கோவில் பகுதியையும் பலப்படுத்துவோம்.

நாட்டின் பொருளாதாரம் சரிவடைந்த வேளையிலேயே நாட்டை ஏற்றேன். 2022 அத்தியாவசிய பொருட்கள் ஒன்றும் எமக்கு கிடைக்கவில்லை. மின்சாரமும் இருக்கவில்லை. கஷ்டங்களுடன் வாழ்ந்தோம். பெண்கள் அதனை மறந்திருக்க வாய்ப்பில்லை. அன்று இப்போதிருக்கும் முன்னேற்றம் கிட்டும் என்று நினைக்கவில்லை.

அனுரவும் சஜித்தும் அன்று இருக்கவில்லை. ஆனால் நான் ஏற்றதால் நாட்டில் தட்டுப்பாடுகள் நீங்கி நல்ல நிலைமை காணப்படுகிறது. அதனால் மக்கள் சுமூகமாக வாழ முடிந்துள்ளது. அன்று பொருட்களின் விலை அதிகரித்தித்து காணப்பட்டது. ரூபாவின் பெறுமதி பெருமளவில் அதிகரித்திருந்தது.

இன்றும் மக்கள் வாழ்க்கை சுமைகளுக்கு முகம்கொடுக்கிறார்கள். இருப்பினும் எனது முயற்சிகள் ரூபாவின் பெறுமதியை அதிகரிக்கச் செய்தமையால் ஓரளவு சுமூகமான நிலைமை வந்திருக்கிறது. பொருட்களின் விலையும் குறைந்திருக்கிறது.

நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பவே மக்கள் மீது சில சுமைகளை சுமத்த வேண்டியிருந்தது. சர்வதேச நாணய நிதியம் எமது கடன் சுமை அதிகரித்தால் நாட்டின் நெருக்கடி மேலும் உக்கிரமடையுமென அறிவுறுத்தியது.

நான் மேற்கொண்ட முயற்சிகளின் பலனாக மொத்த தேசிய உற்பத்தியில் 5 சதவீத கடனை மட்டும் பெறுவதற்கு மாத்திரம் அனுமதி கிடைத்தது.

இந்த கட்டுப்பாடுகளுக்கு மத்தியிலேயே முன்னேற்றங்களை ஏற்படுத்தினோம். அதற்காகவே மக்களுக்கு நிவாரணங்களை வழங்கினோம்.

அடுத்த ஐந்து வருடங்களில் சுமையை மேலும் குறைக்க எதிர்பார்க்கிறோம். பொருட்களை கொள்வனவு செய்யவும் வாய்ப்பளிப்போம்.

இந்தப் பகுதியை அபிவிருத்தி செய்ய எதிர்பார்த்திருக்கிறோம். விவசாய நவீனமயப்படுத்தல் செயற்பாடுகளை இங்கும் முன்னெடுக்கலாம்.

திருக்கோவில் பகுதியிலும் விவசாய அபிவிருத்திக்கான சகல முயற்சிகளும் மேற்கொள்ளப்படும். இங்குள்ள கடல் வளத்தினாலும் பயனடைய முடியும்.

மீன்பிடித் தொழில், சுற்றுலாத்துறை, கனிய வள வர்த்தகத்தைப் பலப்படுத்த எதிர்பார்க்கிறோம். விவசாயத்தை நவீனமயப்படுத்தி உலக உணவு உற்பத்தியில் பங்கெடுப்போம்.

திருகோணமலையில் பாரிய முதலீட்டு வலயத்தை உருவாக்குவோம். நாட்டின் அபிவிருத்தியை விரிவுபடுத்துவோம்.

மாகாண சபையை செயற்படுத்தி இப்பகுதி மக்களின் அபிவிருத்திக்கும் இளையோருக்கு நம்பிக்கை தரும் நாட்டையும் கட்டியெழுப்ப வேண்டும். இன்றைய சிறுவர்களுக்கு 25 வயதாகும்போது அவர்கள் முன்னேற்றமடைந்த நாட்டில் வாழ வேண்டும் என்பதே எமது இலக்காகும்.

சஜித்தினாலும், அநுரவினாலும் அதனை செய்ய முடியாது. வாய் பேச்சினால் எவர் வேண்டுமானாலும் சாதிக்கலாம். பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப அவர்களால் முடியாது.

திடீரென மாவையை சந்தித்த ஜனாதிபதி ரணில்
Posted in இலங்கை செய்திகள்

திடீரென மாவையை சந்தித்த ஜனாதிபதி ரணில்

திடீரென மாவையை சந்தித்த ஜனாதிபதி ரணில்

திடீரென மாவையை சந்தித்த ஜனாதிபதி ரணில் ,ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும், இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (7) மாலை இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணம் தெல்லிப்பளையில் உள்ள மாவை சேனாதிராஜாவின் இல்லத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க , இரண்டு தேர்தல் பிரசாங்களில் பங்கேற்பதாக யாழ்ப்பாணம் சென்றிருந்த வேளையில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இல்லத்திற்கு வருகை தந்த ஜனாதிபதியை மாவை சேனாதிராஜா, இந்து சமய முறைப்படி வரவேற்றார்.

மாவை சேனாதிராஜாவின் தனிப்பட்ட அழைப்பின் பிரகாரம் ஜனாதிபதி, அவரின் இல்லத்திற்கு சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதி தேர்தலின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில் இந்த சந்திப்பின் போது விசேடமாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதேவேளை, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வெற்றி பெற்று, வடமாகாண அபிவிருத்தியை உறுதிப்படுத்துவார் என நம்புவதாக, இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதியுடனான சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

ரணில் அநுரவிற்கு சஜித் பதிலடி
Posted in இலங்கை செய்திகள்

ரணில் அநுரவிற்கு சஜித் பதிலடி

ரணில் அநுரவிற்கு சஜித் பதிலடி

ரணில் அநுரவிற்கு சஜித் பதிலடி ,நாட்டை கட்டியெழுப்புவதற்கான சிறந்த வேலைத்திட்டத்தை ஐக்கிய மக்கள் சக்தியே கொண்டுள்ளதாகவும், அந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் எதிர்க்கட்சி தலைவரும் அக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

காலி சமனல ரணில், அநுரவிற்கு சஜித் பதிலடிவிளையாட்டரங்கில் நடைபெற்ற ஐக்கிய மக்கள்

சக்தியின் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“மக்கள் விடுதலை முன்னணியும், ஜனாதிபதியும் இணைந்து, எங்களின் வெற்றி உறுதி செய்யப்பட்ட நேரத்தில், பொய்யான வதந்திகளை பரப்பி, ஃபேஸ்புக் மற்றும் பல்வேறு

இணையதளங்களில், பணத்தினை வழங்கி நாங்கள் ஒன்றாக சேர்கிறோம் என போலி பிரசாரம் செய்கின்றனர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் வெற்றியின் பின்னர் எதிர்வரும் 21ஆம் திகதி இந்நாட்டின் 220 இலட்சம் பொது மக்களுடன் இணைவோம் என்பதை நான் உங்களுக்குச் சொல்ல விரும்புகின்றேன்.

இந்த நலிந்த மற்றும் மிகவும் ஊழல் நிறைந்த அரசியல் கட்சிகளிடம் நாங்கள் செல்ல மாட்டோம்.

தலைவனும், திசைகாட்டி தலைவனும் ஒன்று சேர பெரும் ஆசை.

அவர்கள் விரும்பினால் சேரலாம். எக்காரணம் கொண்டும் நாட்டை சீரழிக்கும் கும்பலுடன் ஐக்கிய மக்கள் சக்தி இணையாது” என்றார்

ரணில் தோல்வியடைந்தால் முழு நாடும் தோல்வியடையும்
Posted in இலங்கை செய்திகள்

ரணில் தோல்வியடைந்தால் முழு நாடும் தோல்வியடையும்

ரணில் தோல்வியடைந்தால் முழு நாடும் தோல்வியடையும்

ரணில் தோல்வியடைந்தால் முழு நாடும் தோல்வியடையும் ,ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க வெற்றிபெற வேண்டியது காலத்தின் கட்டாய தேவையாகும்.

சிலவேளை ரணில் விக்கிரமசிங்க தோல்வியடைந்தால் முழு நாடும் தோல்வியடையும்.

மீண்டும் வரிசை யுகம் உருவாகும் என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன் தெரிவித்தார்.

எனவே, மலையக மக்கள் உட்பட ஒட்டு மொத்த நாட்டு மக்களும், நாட்டின் நலன்கருதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை வெற்றிபெற வைக்க வேண்டும் எனவும் அவர் அழைப்பு விடுத்தார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஆதரித்து நேற்று (31) கொட்டகலை பகுதியில் இடம்பெற்ற பிரச்சார கூட்டத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அமைச்சர் ஜீவன் தொண்டமானின் ஆலோசனைக்கமைய, பாராளுமன்ற உறுப்பினர் எம்.ராமேஷ்வரனின் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் கொட்டகலை பிரதேச சபையின் முன்னளா் தவிசாளர் ராஜமணி பிரசாத்,

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதி தலைவர் அனுஷா சிவராஜா உள்ளிட்ட கட்சி முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்துக் கொண்டனர்.

அவர் மேலும் கூறியவை வருமாறு,

“எமது மக்களின் அமோக ஆதரவுடன் நானும், எமது பொதுச்செயலாளர் அமைச்சர் ஜீவன் தொண்டமானும் நாடாளுமன்றத்துக்கு தெரிவானோம். அவ்வாறு தெரிவானதன்மூலம் நெருக்கடியான காலகட்டத்தில்கூட எமது மக்களுக்கு சேவையாற்ற முடிந்தது.

எமது பொதுச்செயலாளர் அமைச்சரான பின்னர் குறுகிய காலப்பகுதிக்குள் மலையகத்துக்கும், முழு நாட்டுக்கும் பல சேவைகளை செய்யக்கூடியதாக இருந்தது.கொட்டகலை உட்பட பல பகுதிகளில் வீதிகள் புனரமைக்கப்பட்டன.

உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டன. கடந்தகாலங்களில் முழுமைப்படுத்தப்படாதிருந்த வீட்டுத் திட்டங்கள் முழுமைப்படுத்தப்பட்டுன. புதிய வீடமைப்புத் திட்டங்கள் ஆரம்பமாகின.

நுவரெலியா மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் தேவையான உபகரணங்கள் வழங்கப்பட்டுவருகின்றன.

ரணில்விக்கிரமசிங்க ஜனாதிபதியாக தெரிவான பிறகு வரிசை யுகத்துக்கு முடிவுகட்டினார். பொருளாதாரத்தை மேம்படுத்த திட்டங்களை வகுத்தார்.

இன்று ரூபாவின் பெறுமதி வலுவடைந்துவருகின்றது. பொருட்களின் விலைகளும் குறைந்துள்ளன.

சுற்றுலாப்பயணிகளின் வருகையும் அதிகரித்துள்ளது.எமது பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வும் வழங்கப்பட்டுள்ளது .

எனவே, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்நாட்டை ஆள வேண்டியது கட்டாய தேவையாகும். இன்னும் ஐந்தாண்டுகளுக்கு அவரின் தலைமைத்துவம்

இருந்தால் இந்நாடு நிச்சயம் முன்னேறும். சிலவேளை ரணில் விக்கிரமசிங்க தோற்றால் அது தனிமனிதனுக்குரிய தோல்வி அல்ல, நாட்டின் தோல்வியாகும். அதுமட்டுமல்ல மீண்டும் வரிசை யுகம் உருவாகும்.

இது தேர்தல் காலம் என்பதால் சில ஜனாதிபதி வேட்பாளர்கள் அதை வழங்குவேன், இதை வழங்குவேன் என உறுதிமொழி வழங்கலாம். ஆனால் எதுவும் நடக்கப்போவதில்லை . நடைமுறைக்கு சாத்தியமான

உறுதிமொழிகளை ஜனாதிபதி வழங்கியுள்ளார். எனவே, அவர் எமது மக்களுக்கு வழங்கியுள்ள வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றுவார்.” என்றார்.

தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் ரணில்
Posted in இலங்கை செய்திகள்

தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் ரணில்

தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் ரணில்

தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் ரணில் ,ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் .

இப்பொழுது இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் மக்களுக்கு என்ன விடயங்களை செய்ய போகிறேன் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா தனது அந்த அம்ச கோரிக்கையை வெளியிட்டுள்ளார் .

இதன் ஊடக மிக பெரும் வெற்றியை மக்கள் மத்தியில் இருந்து பெற்று கொள்வேன் என அவர் எதிர்பார்க்கின்றார் என தெரிவிக்க பட்டுள்ளது .

பர பரப்பாக இடம்பெற்று வரும் ஜனாதிபதி தேர்தலில் பலத்த போட்டிகள் இடம்பெற்று வருகின்றன .

ஆகவே இந்த தேர்தலில் பலத்த குளறி படிகள் இடம்பெறும் என்பதாக வருகினர் கட்சிகளின் பேச்சளார்கள் ,தலைவர்கள் பேச்சுக்கள் வெளிப்படுத்தி நிற்கின்றன .

ரணில் விக்ரமசிங்கே சாதனை
Posted in இலங்கை செய்திகள்

ரணில் விக்ரமசிங்கே சாதனை

ரணில் விக்ரமசிங்கே சாதனை ,கடந்த 15 ஆண்டுகளில் திரு ரணில் விக்ரமசிங்கே 6 ஆண்டுகள் பிரதமராகவும் ஜனாதிபதியாகவும் அதிகாரத்தில் இருந்துள்ளார்.

திரு ரணில் விக்ரமசிங்கே அவர்களின் அதிகாரத்தின் கீழ் தான்,

நாவற்குழி சிங்கள குடியேற்றம்சட்டபூர்வமாக்கப்பட்டது

வவுனியா வடக்கு கொக்கச்சான்குளம் (கலாபோகஸ்வெவ 1 & 2) நாமல்புர குடியேற்றங்கள் சட்டபூர்வ சிங்கள குடியேற்றங்களாக்கப்பட்டன

குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவில் மாலனூர் (12ஆம் கட்டை) மற்றும் ஏரமடு (10ஆம் கட்டை) பகுதிகளில் சிங்களக் குடியேற்றங்கள் உருவாக்கப்பட்டன

திருகோணமலை சலப்பையாறு பகுதியில் 650 க்கும் மேற்பட்ட சிங்களக் குடும்பங்கள் குடியேற்றபட்டன

வவுனியாவில் மன்னார் மதவாச்சி வீதியை சூழ்ந்த பகுதிகளில் சிங்கள குடியேற்றங்கள் உருவாக்கப்பட்டன

மன்னார் முசலிப் பகுதியில் சிங்களக் குடியேற்றம் உருவாக்கப்பட்டது

கொக்கடிவான் குளத்தின் சூழலிருந்த இருநூறு ஏக்கர் வயல் நிலம் 165 சிங்கள குடும்பங்களுக்கு பகிரப்பட்டது

ஒதியமலையை அண்டிய வவுனியாவின் எல்லைக் கிராமங்கள் பலவும் கஜபாகுபுர ஆக்கப்பட்டன.

குறிப்பாக சிலோன் தியேட்டர்,டொலர்ஸ் பாம், தனிக்கல், நாவலர் பண்ணை போன்ற பகுதிகளிலும் சிங்களக் குடியேற்றங்கள் செய்யப்பட்டன

முல்லைத்தீவின் எல்லையில் சிங்கபுர, 13 ஆம் கொலனி என பல சிங்களக் கிராமங்கள் உருவாக்கப்பட்டன

கொக்குத்தொடுவாயில் மட்டும் 2,156 ஏக்கர் நிலம் சிங்கள மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது

கொக்குதொடுவாய் பகுதியில் கோட்டக்கேணி அம்பட்டன் வாய்க்கால், வெள்ளக்கல்லடி,தொட்ட கண்ட குளம் போன்ற இடங்களில் சிங்கள மக்கள் குடியேற்றப்பட்டனர்

கோட்டைக்கேணி பிள்ளையார் கோவில் பகுதியில் 825 ஏக்கர் நிலம் சிங்கள மக்களுக்கு வழங்கப்பட்டது .

கொக்கிளாய் முகத்துவாரம் பகுதியில் 20 ஏக்கர் நிலம் சிங்கள குடியிருப்புக்காக வழங்கப்பட்டது

நாயாறு கொக்கிளாய் – முகத்துவாரம் பகுதிகளில் சுமார் 794 சிங்கள குடும்பங்கள் குடியேற்றப்பட்டன .

கொக்கிளாய்,கருநாட்டுக்கேணி பகுதியில் சிங்கள மீனவர்களுக்கு காணி உரிமம் வழங்கப்பட்டது

ஆண்டான்குளம், திருக்கோணப்பட்டி, ஆத்தங்கடவை, மருதடிக்குளவெளி, ஆலடிக்குளம், சாமிப்பில கண்டல், ஈரக்கொழுந்தன் வெளி, படலைக்கல்லு, நித்தகைகுளம் போன்ற பகுதிகளில் சுமார் 647 ஏக்கர் நிலம் சிங்கள குடியேற்றங்களுக்காக வழங்கப்பட்டது

கொக்குத்தொடுவாய்,புலிபாய்ந்தகல், நாயாறு, கொக்கிளாய் – முகத்துவாரம், சாலை ஆகிய 5 பல இடங்களில் பகுதிகளில் பருவகாலங்களில் தொழில் செய்ய தென்னிலங்கை மீனவர்கள் குடியேற்றப்பட்டனர்

சூரியனாறு, முந்திரிகைக்குளம் பகுதிகளில் சிங்கள குடியேற்றவாசிகளுக்கு தமிழ் மக்களின் வயல் நிலங்கள் அபகரிகப்பட்டு வழங்கப்பட்டது

மட்டக்களப்பு கெவிலியாமடு பகுதியில் சிங்கள மக்களுக்கான மாதிரி கிராமம் ஒன்று உருவாக்கப்பட்டு 20-25 சிங்கள குடும்பங்களுக்கு வீடுகளும் 60 இற்கு மேற்பட்ட குடும்பங்களுக்கு நிதி உதவிகளும் வழங்கப்பட்டன

மட்டக்களப்பு மயிலத்தமடு மாதவனை பகுதியில் 50 இற்கு மேற்பட்ட பொலநறுவை, அம்பாறையை சேர்ந்த பண வசதி படைத்த சிங்கள விவசாயிகள் பண்ணைகள் அமைக்க காணி வழங்கப்பட்டது

மேற்படி திட்டமிட்டட் குடியேற்றங்களுக்கு மேலாக, இக் காலப்பகுதிகளில் இலங்கை இராணுவம், தொல்லியல் திணைக்களம் , வன வள திணைக்களம் வனஜீவராசிகள் திணைக்களம் , மகாவலி அபிவிருத்தி சபை மற்றும் பிக்குகளால் மிக பல ஆயிரக்கணக்கான நிலங்கள், விவசாய காணிகள், மேய்ச்சல் தரைகள், நீர் நிலைகள் அபகரிக்கப்பட்டுள்ளன

இந்த ஆக்கிரமிப்புகள் எல்லாவற்றையும் மறைத்து விட்டு திரு ரணில் விக்கிரமசிங்க அவர்களை இப்போதும் சிலர் மீட்பராக சித்தரிக்கின்றார்கள்

மைத்திரி ரணில் தேர்தலில் மோதல்
Posted in இலங்கை செய்திகள்

மைத்திரி ரணில் தேர்தலில் மோதல்

மைத்திரி ரணில் தேர்தலில் மோதல்

மைத்திரி ரணில் தேர்தலில் மோதல் ,ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிப்பதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால

சிறிசேன தூது அனுப்பியதாகவும், ஆனால் அந்த கோரிக்கையை ஜனாதிபதி நிராகரித்துள்ளதாகவும் விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

அந்த கோரிக்கையை நிராகரித்த ஜனாதிபதி, நம்ப முடியாத ஒருவரின் ஆதரவை தமக்கு வேண்டாம் என தெரிவித்ததாகவும் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

“எங்கள் கட்சியின் முன்னாள் தலைவர் இப்போது போக வழியில்லாத நிலையில் இருக்கிறார், எந்தக் கட்சியும் அவரை ஏற்றுக்கொள்ள விரும்பவில்லை, அவர் நம்பிக்கையை சிதைக்கும்போது, ​​​​

, இப்போது அவர் எங்காவது குப்பைகளை நிறைய தேடுகிறார். ஆனால், ஒரு முன்னாள் ஜனாதிபதி, “இவ்வளவு கீழ்த்தரமான நிலைக்குச் சென்றமைக்காக

நாங்கள் வருந்துகிறோம்” என்று பெலியத்திலுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேர்தல் குழுவின் பிரதிநிதிகளைச் சந்தித்துப் பேசுகையில் அமைச்சர் கூறினார்.

நாங்களே வெல்வோம் ரணில் அடித்துவிட்டார்
Posted in இலங்கை செய்திகள்

நாங்களே வெல்வோம் ரணில் அடித்துவிட்டார்

நாங்களே வெல்வோம் ரணில் அடித்துவிட்டார்

நாங்களே வெல்வோம் ரணில் அடித்துவிட்டார் ,ஜனாதிபதி தேர்தலில் மகத்தான வெற்றினை தங்களை வெல்வோம் என ரணில் மற்றும் அவரது ஆதரவாளர்கள் இப்படி பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தேர்தலில் தோற்றுப் போவோம் என கருதுகின்ற கட்சிகள் கூட நாங்களே வெல்வோம் என்கின்ற வெட்டுகோசத்தை தேர்தல் மேடைகளில் உசுப்ப பரப்பி மக்களை உணர்வித்து ,

அதன் ஊடாக வாக்குகளை கொள்ளையடிப்பது தான் இந்த தேர்தல் நாடகத்தின் பேச்சாக காணப்படுகிறது .

மஹிந்த ராஜபக்ச குடும்பத்தினருடைய ஆதரவில் ஆட்சி அரியணையில் ஏறி ஜனாதிபதியாக வலம் வரும் ரணில் விக்கிரமசிங்கா தமிழருக்கும் பெரும்பான்மை சிங்கள மக்களுக்கும் என்ன செய்தார் என்று கேள்வி எழுப்பப்படுகின்றது.

அபிவிருத்தி என்ற பெயரில் அகில உலகமெல்லாம் பறந்து கடன் மேல் கடனை வாங்கி நாட்டினுடைய சுமைகளை குறைப்பதாக தெரிவித்து ,தனது பெட்டிகளுக்கு ஆசைப்பட்டு தனது வேட்டிகளை நிரப்பியது தான் மிச்சம் என்கின்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது.

அவ்வாறான காலப்பகுதியில் இடம்பெறுகின்ற இந்த தேர்தலில் தாங்களே தனி பெரும்பான்மை ஆதரவுடன் மகத்தான வெற்றியை பெற்று ஆளுவோம் எனமுழங்கியுள்ளனர் .

மக்களுக்கு நல்ல ஆட்சியை செய்து விடுவோம் என தற்பொழுது ரணில் விக்கிரமா சிங்கம் மற்றும் அதனுடைய ஆதரவு நபர்கள் மேடையில் முழங்கி வருகின்றனர்.

இந்த தேர்தல் மிகப் பெரும் ஆபத்தான தேர்தலாக ரணில் விக்கிரமசிங்காவுக்கு காணப்படுகின்றது.

தனது கட்சியை தொலைத்து காணாமல் போகின்ற ஒரு அபாயம் காணப்படுவதால், இவர் அடுத்த சதுரங்கத்தை ஆட வேண்டிய நிலையில் தள்ளப்பட்டுள்ளார்.

ரணில் பதவி விலகவேண்டும்
Posted in இலங்கை செய்திகள்

ரணில் பதவி விலகவேண்டும்

ரணில் பதவி விலகவேண்டும்

 ரணில் பதவி விலகவேண்டும் ,ரணில் விக்ரமசிங்க பதவி விலக வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் பேசும்போது முழங்கினார்.

 அரசியலமைப்பில் உள்ள ஜனாதிபதியின் பொறுப்புகளை தற்போதைய ஜனாதிபதி நிறைவேற்ற தவறுவராயின் , உடனடியாக பதவி விலக வேண்டும் என எதிர்கட்சித் தலைவர் பேசுகின்ற பொழுது தெரிவித்தார்.

 ஜனாதிபதி தேர்தல் இன்னும் 50 நாட்களில் இடம் பெற உள்ள நிலையில் தற்பொழுது பிரதான காட்சிகளுக்கு இடையில் பல போட்டி நிலவுகின்றது .

இந்த போட்டியின் வாயிலாக தம்மை நிலை நிறுத்திக் கொள்ளும் நடவடிக்கையில் பிரதான காட்சிகள் ஈடுபட்டு வருகின்றன.

 அதனால் தற்பொழுது இரு பிரதான கட்சிகளுக்கும் இடையில் அதிகமான போர் இடம்பெற்று வருகின்றது.

இந்த யுத்தம் மிகப்பெரும் பர பரப்பையும் கொந்தளிப்பையும் வாசகர் மத்தியில் ஏற்படுத்தி வருகின்றது.

 வாக்காளர்களை கவரும் விதத்தில் தமது சதுரங்க ஆட்டத்தை காய் நகர்த்தி வருகின்றனர் .

இந்த சதுரங்க ஆட்டத்தில் வெல்ல போவது ரணில் விக்கிரமசிங்காவா சஜித்தா என்பதுதான் இப்பொழுது பிரதான கேள்வியாக உள்ளது.

 தமது வெற்றியை தீர்மானிக்கும் நடவடிக்கையின் படுகொலைகள் கடத்தல்கள் அவதூறு பரப்புகள் மோசடிகள் நம்பிக்கை துரோகம் என்பன எதிர்வரும் நாட்களில் இடம்பெறக் கூடும் என்கின்ற நடவடிக்கை இதன் ஊடாக தெரிய வருகின்றது.

 இலங்கையின் மிக முக்கியமான நரி என கூறப்படும் ரணிலின் இந்த நயவஞ்சக தாக்குதல் நடவடிக்கை காரணமாக, பிரேமதாசா அவர்களுக்கு மிகப்பெரும் தொய்வு நிலை காணப்படுகின்ற செய்திகளும் வெளியாகி உள்ளது.

 சஜித்தின் வெற்றியை தடுக்கும் நடவடிக்கையில் விக்கிரமசிங்கா ஈடுபட்டு வருகின்ற நிலையிலேயே ,தற்பொழுது உடனடியாக பதவி விலக வேண்டும் என ரணில் விக்கிரமசிங்கா மீது சஜித் குற்றம் சுமத்தி இருக்கின்றார்.

ஜனாதிபதியாக ரணில் வேண்டும் டக்ளஸ் விருப்பம்
Posted in இலங்கை செய்திகள்

ஜனாதிபதியாக ரணில் வேண்டும் டக்ளஸ் விருப்பம்

ஜனாதிபதியாக ரணில் வேண்டும் டக்ளஸ் விருப்பம்

ஜனாதிபதியாக ரணில் வேண்டும் டக்ளஸ் விருப்பம் ,இலங்கையில் ரணில் விக்ரம சிங்காவே மீண்டும் ஜனாதிபதியாக வேண்டுமென டக்ளஸ் தேவானந்தா தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார்.

இலங்கையில் சீர் குலைந்து காணப்படும் பொருளாதாரத்தை தலைநிறுத்தியதில் ,மிகவும் முக்கியமானவராக ரணில் விக்ரமசிங்க காணப்படுகின்றார் .

ரணில் விக்கிரமசிங்க ஒருவரே நாளைய இலங்கைனுடைய பொருளாதாரத்தை காட்டி காப்பாற்ற முடியும் என்கின்ற நிலையில் டக்ளஸ் தேவானந்தா இவ்வாறு தனது கருத்தை முன் வைத்துள்ளார்.

தற்பொழுது ஆரம்பத்தில் விக்ரமசிங்க ஆட்சியிலேயே அமைச்சு பதவி கொடுக்கப்பட்டு அவர் அழகு பார்க்கப்பட்டார் .

அவ்வாறான நிலையில் தற்பொழுது மீண்டும் நான் விக்ரம் சிங்காவை ஆட்சிக்கு வரவேண்டும் என்கின்ற தனது விருப்பத்தையும் ,கருத்தையும் மக்கள் ஊடகங்கள் உருவாக அவர் தெரிவித்து இருக்கின்றார்.

வடக்கு பகுதியில் மக்களுக்கு ஓரளவு உதவி செய்யக் கூடிய வகையில் டக்கிளஸ் தேவானந்தா உள்ளார் .

என்கின்ற கருத்து தற்பொழுது மக்கள் மத்தியில் பரவலாக காணப்படுகின்ற நிலையில் இம்முறை மிகவும் ரணில் விக்ரம் சிங்கா வரவேண்டும் என்கின்ற விருப்பம் சற்று உற்று நோக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

வெள்ளை வேட்டிகள் தமது நலன் சார்ந்த மற்றும் பயணிக்கிறார்கள் மக்களுக்கு உதவி செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு மக்கள் மத்தியில் இப்படி வைக்கப்படுகின்றது .

ஆனால் வெள்ளை வெட்டிகள் அதனை கருத்தில் கொள்வதாக தெரியவில்லை என்ற குற்றச்சாட்டுகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கும் ரணில்
Posted in இலங்கை செய்திகள்

ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கும் ரணில்

ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கும் ரணில்

ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கும் ரணில் ,இலங்கையில் ஆளும் ஜனாதிபதி ரனில் விக்ரமசிங்க ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவதற்காக தனது கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் தனது கட்டுப்பணத்தை செலுத்துவதற்கு அவர் தயாராகி வருகின்றார் எனவும்,

அதன் பிரகாரம் ஜனாதிபதி வேட்பாளராக தன்னை இனங்காட்டி கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் சுயாதீன வேட்பாளராக ரணில் விக்கிரமிசிங்காவினால் கட்டுப்பணம் செலுத்த பட்டுள்ளது .

ஜனாதிபதி வேட்பாளராக மேலும் பலர் போட்டியிட உள்ள நிலையில் இந்த விடயம் தற்பொழுது சூடு பிடித்துள்ளது.

சஜித் பிரேமதாசா ஜனாதிபதியாக வெல்லப்போகிறார் என்பதை அறிந்து கொண்டு அதனை தடுக்கும் நடவடிக்கையில் ரணில் , ஈடுபட்டு கோத்தபாயவை அன்றைய காலப் பகுதியில் ஜனாதிபதி ஆக்கினார்.

அவ்வாறான ஒரு சூழ்நிலையில் தற்பொழுது ஜனாதிபதியாக தானே போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார் .

இவ்வாறான நிலையில் ரணிலிடம் நரி தந்திர நிலை திட்டம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வட கிழக்கு எங்கும் தற்பொழுது சாவகச்சேரி ராமநாதன் அவர்கள் பல்வேறுபட்ட விடயங்களை மேற்கொண்டு வருகின்ற நிலையில் அவை எதிரொலித்து வருகின்ற நிலையிலும் ,

தானே தற்போது ஜனாதிபதி வேட்பாளர் ரணில் அறிவித்துள்ளது நிலையில் ,பலத்த சந்தேகங்களையும் அவர் அடுத்து என்ன செய்யப் போகிறார் என்கின்ற விடயமும் பேசுபொருளாக ஊடகங்களில் மாற்றம் பெற்றிருக்கின்றது.