மீனவர்களுக்கு இலவச மண்ணெண்ணெய்
Posted in இலங்கை செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

12 இந்திய மீனவர்கள் கைது

12 இந்திய மீனவர்கள் கைது

நாட்டின் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 12 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் காரைநகர் கோவிலான் கலங்கரை விளக்கத்திற்கு அப்பால் வடக்கடலில் நேற்று (13) பிற்பகல் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் 03 மீன்பிடி படகுகளில் இருந்த இந்த இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

12 இந்திய மீனவர்கள் கைது

கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் மற்றும் படகுகள் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டு மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மயிலிட்டி கடற்றொழில் அலுவலகத்தில் ஒப்படைக்கப்படவுள்ளனர்.

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட இந்திய மீன்பிடி படகுகள் பலவற்றை அவதானித்த

வடக்கு கடற்படையினர், அந்த மீன்பிடி படகுகளை இலங்கை கடற்பரப்பிற்கு அப்பால் வெளியேற்ற நடவடிக்கை எடுத்துள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது

வீடியோ

மீனவர்கள் லொறி வலைகளை பறித்த இராணுவம் தொடரும் இராணுவ அடாவடி
Posted in இலங்கை செய்திகள்

இந்திய மீனவர்கள் எமக்கு எதிரி 25 பேர் கைது

இந்திய மீனவர்கள் எமக்கு எதிரி 25 பேர் கைது

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 25 இந்திய மீனவர்கள் எதிரி என தெரிவித்து கைது செய்யப்பட்டுள்ளதுடன், இரண்டு படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை கடற்பரப்பில் கடற்படையினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போதே இன்று (10) அதிகாலை மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்திய மீனவர்கள் எமக்கு எதிரி 25 பேர் கைது

கைது செய்யப்பட்டுள்ள இந்திய மீனவர்களை காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்று விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

அதனையடுத்து, இந்திய மீனவர்களை மயிலிட்டி துறைமுகத்தில் கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்க

கடற்படையினர் நடவடிக்கை எடுத்துள்ளதோடு, இந்திய மீனவர்கள், பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

வீடியோ

இந்தியா மீனவர்கள் 7 பேர் சிங்கள கடற்படையால் கைது
Posted in இலங்கை செய்திகள்

இந்திய மீனவர்களின் அத்துமீறல் அதிகரிப்பு

இந்திய மீனவர்களின் அத்துமீறல் அதிகரிப்பு

யாழ்ப்பாண கடற்பரப்பில் இந்திய மீனவர்களுடைய அத்துமீறல் மீண்டும் அதிகரித்துள்ளதாக யாழ், மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சங்கத் தலைவர் ஸ்ரீகந்தவேள் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திலுள்ள சங்க அலுவலகத்தில் நேற்று (06) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், நெடுந்தீவு தொடக்கம் நைனா தீவு, எழுவைதீவு, அனலதீவு, மாதகல், பருத்தித்துறை, வடமராட்சி வரை இந்திய மீனவருடைய ஆதிக்கம் மீண்டும் அதிகரித்துள்ளது.

இழுவை மடி ஊடாக எமது தொழிலாளர்களுடைய சொத்துக்கள் அழிக்கப்பட்டுள்ளன. கடந்த வாரம் 100 தொடக்கம் 150 வரையிலான படகுகள் கரை அளவுக்கு வந்து தொழிலாளர்களுடைய சொத்துக்களை நாசம் செய்துள்ளன.

கோவளம் கடற்கரை பகுதியில் மீனவர்கள் உடைய வலைகள் அறுக்கப்பட்டு சொத்துக்கள் நாசம் செய்யப்பட்டுள்ளன.

இதனை கட்டுப்படுத்துவதற்கு அமைச்சரும் அரசாங்கமும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

No posts found.
Posted in இலங்கை செய்திகள்

தமிழக மீனவர்கள் ஆறு பேர் கைது

தமிழக மீனவர்கள் ஆறு பேர் கைது

இலங்கை தலைமன்னார் கடல்பரப்பில், அத்து மீறி மீன் பிடியில் ஈடுபட்டனர் என்ற ,குற்ற சாட்டில் தமிழக மீனவர்கள் ,ஆறு பேர் கைது செய்ய பட்டுள்ளனர்.

இலங்கை கடற்படையால் கைது செய்ய பட்ட தமிழக மீனவர்கள் யாவரும் ,விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முன்னிலை படுத்த பட்டுள்ளனர்.

இலங்கை பொருளாதார நெருக்கடியில் உள்ள காலத்தில், இந்தியா உதவி புரிந்து வரும் நிலையிலும் ,தமிழக மீனவர்களை
இலங்கை தொடராக கைது செய்து வருகின்றமை தொடர்கின்றமை குறிப்பிட தக்கது .

    Posted in இலங்கை செய்திகள்

    ஆறு இலங்கை மீனவர்கள் இந்தியா இராணுவத்தால் கைது

    ஆறு இலங்கை மீனவர்கள் இந்தியா இராணுவத்தால் கைது

    இந்திய கடல் பகுதிக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டனர் என்ற குற்ற சாட்டில் ,இந்திய கடலோரா படையினால் ஆறு இலங்கை மீனவர்கள் கைது செய்ய பட்டுள்ளனர்.

    கைதானவர்கள் விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் பரப்படுத்து சிறையில் அடைக்க பட்டுள்ளனர் .

    இரு நாடுகளின் இராணுவத்தால் அப்பாவி மீனவர்கள் சிறை பிடிக்க பட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது.

      Posted in இலங்கை செய்திகள்

      எட்டு தமிழக மீனவர்கள் சிங்கள கடற்படையால் கைது

      எட்டு தமிழக மீனவர்கள் சிங்கள கடற்படையால் கைது

      இலங்கை தலை மன்னார் கடல்பகுதியில் அத்துமீறி மீன்படியில் ஈடுபட்டனர் என்ற

      குற்ற சாட்டில் தமிழகத்தை சேர்ந்த


      எட்டு மீனவர்களை சிங்கள கடற்படை கைது செய்துள்ளது

      இவர்கள் வைத்திருந்த மீன்களையும் இராணுவம் சுருட்டி சென்றுள்ளது

        Posted in இலங்கை செய்திகள்

        இலங்கை மீனவர்கள் நல்லவர் சிங்கள படையால் கைது

        இலங்கை மீனவர்கள் நல்லவர் சிங்கள படையால் கைது

        அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 6 இந்திய மீனவர்கள் ஒரு படகுடன் நேற்றைய தினம் இரவு இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

        நேற்று இரவு காரைநகர், கோவளம் கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் இந்திய படகையும் அதில் இருந்த 6 மீனவர்களையும் கைது செய்தனர்.

        கைது செய்யப்பட்டவர்களையும் படகினையும் கடற்படையினர் மயிலிட்டி மீன் பிடி துறைமுகத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

          Posted in இலங்கை செய்திகள்

          12 இந்திய மீனவர்கள் – கைது

          12 இந்திய மீனவர்கள் – கைது

          இலங்கை தலைமன்னார் கடல் பகுதியில் அத்துமீறி மீன் பிடியில் ஈடுபட்டனர் என்ற

          குற்ற சாட்டில் தமிழக மீனவர்கள் 12 பேர் கைது செய்ய பட்டுள்ளனர்

          கைதானவர்கள் நீதிமன்ற காவலில் வைக்க பட்டுள்ளனர்

            Posted in இலங்கை செய்திகள்

            இலங்கை மீனவர்களுக்கு எச்சரிக்கை

            இலங்கை மீனவர்களுக்கு எச்சரிக்கை

            இலங்கைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது.

            அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு

            2021 டிசம்பர்13ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.

            மழை நிலைமை:

            காங்கேசந்துறையிலிருந்துதிருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் பொத்துவில் ஊடாகஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

            நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் பலஇடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

            காற்று :

            நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு திசையிலிருந்து வீசக்கூடுவதுடன், காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20-30 கிலோ மீற்றர் வரை காணப்படும்.

            திருகோணமலையிலிருந்து காங்கேசந்துறை மற்றும் மன்னார் ஊடாக புத்தளம் வரையான கடற்பரப்புகளிலும் மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாகபொத்துவில் வரையான கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 40-45 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

            கடல் நிலை:

            திருகோணமலையிலிருந்து காங்கேசந்துறை மற்றும் மன்னார் ஊடாக புத்தளம் வரையான கடற்பரப்புகளும் மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாகபொத்துவில் வரையான கடற்பரப்புகளும் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.

            நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள் சாதாரண அலையுடன் காணப்படும்.

            இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன் அக்கடற்பிரதேசங்கள்மிகவும் கொந்தளிப்பாகவும்காணப்படும்.

            Posted in இலங்கை செய்திகள்

            மீனவர்களுக்கு அவசர எச்சரிக்கை

            மீனவர்களுக்கு அவசர எச்சரிக்கை

            இலங்கைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது.

            அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு

            2021 நவம்பர்24ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது

            இலங்கைக்கு தென்கிழக்காக தற்போது நிலை கொண்டுள்ள கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை அடுத்த சில மணித்தியாலங்களில் ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசமாக விருத்தியடையக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இது மேற்கு வடமேற்கு திசையில் நகரக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

            கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்.

            மழை நிலைமை:

            நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

            புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான ஆழம் கூடிய கடற்பரப்புகளில் சில இடங்களில் பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

            காற்று :

            நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடமேற்கு அல்லது வடகிழக்கு திசையிலிருந்து வீசக்கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 35-40 கிலோ மீற்றர் வரை காணப்படும்.

            காங்கேசந்துறையிலிருந்து மன்னார், புத்தளம், கொழும்பு மற்றும் காலி ஊடாகஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 45-50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

            கடல் நிலை:

            காங்கேசந்துறையிலிருந்து மன்னார், புத்தளம், கொழும்பு மற்றும் காலி ஊடாகஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும். நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள் அவ்வப்போது ஓளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.

            இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன் அக்கடற்பிரதேசங்கள்மிகவும் கொந்தளிப்பாகவும்காணப்படும்.

              Posted in இலங்கை செய்திகள்

              மீனவர்களுக்கு எச்சரிக்கை

              மீனவர்களுக்கு எச்சரிக்கை

              இலங்கைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது.

              அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு

              2021 நவம்பர்17ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.

              வட அந்தமான் கடற்பரப்புகளுக்கு மேலாக நிலை கொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் மேற்கு திசையை அண்டி நகரக்கூடிய சாத்தியம் காணப்படுவதுடன், நவம்பர் 18ஆம் திகதியளவில்

              தென் ஆந்திரப் பிரதேசத்தையும் அண்மையாகவுள்ள வட தமிழ்நாடு கரையையும் கடக்கக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

              நாட்டிற்கு கிழக்காக உள்ள ஆழம் கூடிய கடற்பரப்புகளில் நடவடிக்கைகளில் ஈடுபடும் கடலில்

              பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாகவும் எதிர்கால முன்னறிவிப்புகள் தொடர்பாகவும் அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்.

              மழை நிலைமை:

              கொழும்பிலிருந்து காலி, மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாகபொத்துவில் வரையான கடற்பரப்புகளில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய

              சாத்தியம் காணப்படுகின்றது. மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான ஆழம் கூடிய கடற்பரப்புகளில் பலத்த மழைவீழ்ச்சிஎதிர்பார்க்கப்படுகின்றது.

              நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

              காற்று :

              நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது மேற்கு திசையிலிருந்து வீசக்கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 25-40 கிலோ மீற்றர் வரை காணப்படும்.

              காலியிலிருந்து மாத்தறை ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் காற்றின்

              வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-55 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

              கடல் நிலை:

              காலியிலிருந்து மாத்தறை ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகள் அவ்வப்போது

              கொந்தளிப்பாகக் காணப்படுவதுடன், நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.

              இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன் அக்கடற்பிரதேசங்கள்மிகவும் கொந்தளிப்பாகவும்காணப்படும்.

                Posted in இலங்கை செய்திகள்

                மீனவர்களுக்கு அவசர எச்சரிக்கை


                மீனவர்களுக்கு அவசர எச்சரிக்கை

                இலங்னைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை

                தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது.

                அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு

                2021 நவம்பர்15ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.

                தென் அந்தமான் கடற்பரப்புகளுக்கு மேலாக உருவாகியுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் தற்போது மத்திய அந்தமான் கடற்பரப்புகளுக்கு மேலாக நிலை கொண்டுள்ளது. இது மேற்கு – வடமேற்கு திசையில் நகரக்கூடிய சாத்தியம் காணப்படுவதுடன், நவம்பர் 17ஆம் திகதியளவில் மேற்கு – மத்திய வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக ஒரு தாழமுக்கமாக வலுவடையக் கூடிய சாத்தியம்காணப்படுகின்றது. அதன்பின் அது தொடர்ந்தும் மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து நவம்பர் 18ஆம் திகதியளவில் ஆந்திரப் பிரதேசத்திற்கு அண்மையான கரையைக் கடக்கக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

                நாட்டிற்கு கிழக்காக உள்ள ஆழம் கூடிய கடற்பரப்புகளில் நடவடிக்கைகளில் ஈடுபடும் கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாகவும் எதிர்கால முன்னறிவிப்புகள் தொடர்பாகவும் அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்.

                மழை நிலைமை:

                காங்கேசந்துறையிலிருந்து மன்னார், புத்தளம் மற்றும் கொழும்பு ஊடாக காலி வரையான கடற்பரப்புகளில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

                நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

                காற்று :

                நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு அல்லது மேற்கு திசையிலிருந்து வீசக்கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரை காணப்படும்.

                காங்கேசந்துறையிலிருந்து மன்னார், கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 55-60 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

                கடல் நிலை:

                காங்கேசந்துறையிலிருந்து மன்னார், கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படுவதுடன், நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.

                இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன் அக்கடற்பிரதேசங்கள்மிகவும் கொந்தளிப்பாகவும்காணப்படும்.

                  Posted in இலங்கை செய்திகள்

                  அந்தமானில் சிக்கிய மீனவர்களை மீட்க நடவடிக்கை

                  அந்தமானில் சிக்கிய மீனவர்களை மீட்க நடவடிக்கை

                  அந்தமான் தீவுப் பகுதியில் தரித்து நிற்கின்ற வாழைச்சேனை மீனவர்கள் நால்வரும்


                  நாட்டிற்கு வந்து சேர்வதற்கு தேவையான நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு
                  கடற்றொழில் திணைக்கள பணிப்பாளர் நாயகத்திடம் கடற்றொழில் அமைச்சர்

                  டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

                  கடற்றொழில் அமைச்சின் செயற்பாடுகள் தொடர்பாக கடற்றொழில் திணைக்கள
                  பணிப்பாளர் மற்றும் அமைச்சின் செயலாளர் ஆகியோருடன் நேற்று கலந்துரையாடிய


                  கடற்றொழில் அமைச்சர், இயந்திரக் கோளாறு காரணமாக திசைமாறிச்
                  சென்ற நிலையில் சுமார் 600 கிலோமீற்றர் தொலைவில் இந்தியக் கடற்படையினரால்


                  கண்டுபிடிக்கப்பட்டு அந்தமான் தீவுப் பகுதியில் தரித்து நிற்கின்ற வாழைச்சேனை
                  கடற்றொழிலாளர்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நடவடிக்கைகள்
                  தொடர்பாக கருத்து தெரிவித்த போதே மேற்குறிப்பிடப்பட்டுள்ளவாறு தெரிவித்துள்ளார்.

                    Posted in இலங்கை செய்திகள்

                    மியன்மார் இராணுவம் சிறைபிடித்த 12 இலங்கை மீனவர்கள் விடுதலை

                    மியன்மார் இராணுவம் சிறைபிடித்த 12 இலங்கை மீனவர்கள் விடுதலை

                    மியன்மார் கடல் படையினரால் கைது செய்ய பட இலங்கையை சேர்ந்த 12 மீனவர்கள் அந்த கடல்

                    படையினரால் இப்பொழுது விடுதலை செய்ய பட்டுள்ளனர்

                    மாசி மாதம் அவர்கள் கடல் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்தனர் என்ற குற்ற சாட்டில் கைது செய்ய

                    பட்ட இவர்களை விடுதலை செய்துள்ளமை குறிப்பிட தக்கது

                      Posted in Uncategorized

                      தமிழக மீனவர்கள் 54 பேர் சிங்களப் படையால் கைது

                      சர்வதேச கடல் எல்லையை மீறி, இலங்கை கடல்பரப்புக்குள் அத்துமீறி பிரவேசித்து கடற்றொழிலில் ஈடுபட்டனர் என்றக் குற்றச்சாட்டின் கீழ் இந்திய மீனவர்கள் 54 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

                      இலங்கை கடற்படையினரால், இவர்கள் நேற்றுக்காலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
                      ‘கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களிடமிருந்து 05 படகுகளும் இதன்போது கைப்பற்றப்பட்டன. அதிலிருந்த மீன்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன’ என கடற்படையின் ஊடகப் பேச்சாளர் கெப்டன் இந்திக டி சில்வா தெரிவித்தார்.

                      இவர்கள் மன்னார், யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு கடற்பிராந்தியங்களில் வைத்தே செய்யப்பட்டனர் என்றார்.

                      மன்னார் – பேசாலை கடற்பகுதிக்குள் அத்துமீறி பிரவேசித்த 02 படகுகளுடன் 20 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

                      யாழ்ப்பாணம் – காரைநகரை அண்மித்த கடற்பகுதியில் பாரிய படகொன்றில் மீன்பிடியில் ஈடுபட்ட 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் கூறினார்.


                      மேலும்இ முல்லைத்தீவு – சாலைக் கடற்பகுதியில் 02 படகுகளுடன் 20 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

                      கைது செய்யப்பட்ட அனைத்து மீனவர்களும் தென்னிந்தியாவை சேர்ந்தவர்கள் எனத் தெரிவித்த கடற்படை பேச்சாளர், அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு, பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவர் என்றார்.

                        Posted in இலங்கை செய்திகள்

                        பத்தாயிரம் மீனவர்களுடன் இந்தியா செல்வேன் – டக்கிளஸ் கூவல்

                        இந்திய மீனவர்களின் பிரச்சனைக்கு தீர்வு காணாவிட்டால் இங்கிருந்து கதைப்பதை விட, பத்தாயிரம் வடமாகாண கடற்தொழிலாளர்களுடன் இந்தியாவுக்குப் படகில் சென்று, அந்த

                        பிரச்சனையை தீர்ப்பதற்கு யோசித்துக்கொண்டிருக்கின்றேன் என கடற்தொழில் நீரியல்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்

                        முல்லைத்தீவில் வைத்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

                        இதன்போது தொடர்ந்து உரையாற்றிய அவர், இந்திய மீனவர்களின் ஆக்கிரமிப்பு நிறுத்தப்படுமெனவும், இந்திய மீனவர்களின் பேச்சு

                        வார்த்தை வருவது போவதாக உள்ளது. தீர்வு என்று எதுவும் இல்லாவிட்டாலும் இந்திய மீனவர்களின் வருகை நிதந்தரமாக

                        காணப்படுவதாக கடற்தொழிலாளர்கள் என்னிடம் முறையிட்டுள்ளார்கள் என்றார்.

                        இதனை தீர்த்து தராவிட்டால் ஆர்ப்பாட்டம், தொழில்முடக்கம், அமைச்சரின் வடமாகாண நடமாட்டத்தினை முடக்குவோம் என்று

                        சொல்லிக்கொண்டு இருக்கின்றார்கள். நான் பொறுமை பொறுமை என்று சொல்லிக் கொண்டிருக்கின்றேன் இருந்தாலும் அது

                        நியாயமான கோரிக்கை இதனை நான் விரைவில் தீர்க்க முயற்சிப்பேன் எனவும் தெரிவித்தார்.

                        Posted in Uncategorized

                        கடலில் மூழ்கிய படகு 36 மணிநேரம் உயிருக்கு போராடிய நபர் – வீடியோ

                        36 மணி நேரம் மூழ்கிய படகில் தத்தளித்த மீனவர் – உயிர் தப்பிய மெய் சிலிர்க்க வைக்கும் சம்பவம் – உள்ளே காணொளி பாருங்கள்

                        மூழ்கிய படகு

                        அமெரிக்காவில் நபர் ஒருவர் கடலுக்கு மீன்பிடிக்க தனது படகில் சென்றுள்ளார் ,

                        இவர் சென்ற படகு திடீரென நீரில் மூழ்கியது ,இதன் போது மூழ்கிய கவிழந்த அந்த படகின் மேலே ஏறி நின்றுள்ளார் ,

                        சுமார் 36 மணித்தியாலங்கள் அவ்வாறே நின்றுள்ளார் ,கடும் குளிர்,உணவு இல்லை ,இவ்வாறு இருந்தும் அதில் இருந்து தெய்வாதீனமாக தப்பியுள்ளார் ,

                        மீட்ட மீனவர்கள்

                        அவ்வழியாக மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர்கள் இவரை மீட்டு கரை சேர்த்தனர் ,போலீசாருக்கு தகவல் வழங்க பட்ட நிலையில் அவர் தீவிர மருத்துவ சோதனைக்கு உள்ளாக்க பட்டார்

                        அதிசயம்

                        இவர் தப்பித்து வந்தது ,நியத்தில் மறு பிறவி எடுத்துள்ளதாக சமூக வலைத் தளங்களில் மக்கள் கருத்துக்களை பதிவு செய்து

                        வருகின்றனர் ,இவரை காப்பாற்றிய சக மீனவர்களுக்கு மக்கள் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்

                        உண்மையில் இதுகடவுளின் ஆசி என்று தான் கூறவேண்டும் இலையா உறவுகளே .