Tag: மனைவி
மகிந்த மனைவி சிக்கினார் ஊழல் விசாரணைகள் ஆரம்பம்
மகிந்த மனைவி சிக்கினார் ஊழல் விசாரணைகள் ஆரம்பம்
மகிந்த மனைவி சிக்கினார் ஊழல் விசாரணைகள் ஆரம்பம் ,ஷிரந்தியின் இரண்டு நில பரிவர்த்தனைகள் குறித்து விசாரணை நடத்த சிஐடி உத்தரவிட்டுள்ளது
கம்பஹாவில் முன்னாள் முதல் பெண்மணி ஷிரந்தி ராஜபக்ஷ சம்பந்தப்பட்ட நில பரிவர்த்தனைகள் குறித்து சிஐடி விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக துணை தொழிலாளர் அமைச்சர் மஹிந்த ஜெயசிங்க நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
இது தொடர்பாக பதில் ஐஜிபி கோரிக்கை விடுத்துள்ளதாக ஜெயசிங்க கூறினார்.
இம்புல்கொட மற்றும் மாகோலவில் உள்ள நிலங்கள் 2012 இல் வாங்கப்பட்டு 2023 இல் விற்கப்பட்டதாக துணை அமைச்சர் கூறினார்.
மகிந்த ராஜபக்ச ஆன்மீக அறக்கட்டளையின் கீழ் 2012 இல் இஹல இம்புல்கொடவில் ரூ. 500,000 க்கு வாங்கப்பட்ட ஒரு நிலம் ரூ. 10 மில்லியனுக்கு
விற்கப்பட்டுள்ளதாகவும், அந்த நிலத்தின் உரிமையாளர் தங்காலை, கார்ல்டன் ஹவுஸைச் சேர்ந்த ஷிரந்தி விக்ரமசிங்க ராஜபக்ஷ என்றும் அவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
மாகோலவில் ரூ. 01 மில்லியனுக்கு வாங்கப்பட்ட மற்றொரு நிலம் ரூ. 12 மில்லியனுக்கு விற்கப்பட்டுள்ளதாகவும், அதன் உரிமையாளர் தங்காலை, கார்ல்டன் ஹவுஸைச் சேர்ந்த ஷிரந்தி விக்ரமசிங்க ராஜபக்ஷ என்றும்
ஜெயசிங்க கூறினார். நில பரிவர்த்தனைகள் தொடர்பான விசாரணைகளில், இந்தப் பத்திரங்கள் அலரி மாளிகையில் வரையப்பட்டு கையொப்பமிடப்பட்டு,
2023 ஆம் ஆண்டு நுகேகொடையில் வசிக்கும் ஒருவருக்கு மாற்றப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
- செம்மணியில் 19 எலும்பு கூடுகள் மீட்பு

- ஐ நா அறிக்கை காசாவில் 80 சதவீத மக்கள் மோசமான நிலையில்

- ஹோர்முஸ் நீர்வழித்தடத்தைத் தவிர்க்க தற்காலிக கடல்வழிப் பாதையை ஓமான் அறிவித்துள்ளது

- ஐநா அறிக்கை காசாவில் குழந்தைகளை வேண்டுமென்றே குறிவைத்து இஸ்ரேல் இனப்படுகொலை செய்கிறது

- அமெரிக்காவுடனான கருத்து வேறுபாட்டில் ஈரானுக்கு எதிராக இஸ்ரேல்

மனைவியை வெட்டி கொன்ற கணவன்
மனைவியை வெட்டி கொன்ற கணவன்
மனைவியை வெட்டி கொன்ற கணவன் .மாத்தளைப்பகுதியில் மருத்துவ மனையில் வேலை பார்க்கும் கணவன் மனைவிக்கு இடையில் இடம்பெற்று வந்த வாய் தர்க்கம் முற்றியதில் கணவன் தனது மனைவியை வெட்டி படுகொலை செய்துள்ளார் .
இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளன .,மகள் 11 மகன் 13 வயதில் உள்ளதாகவும் இந்த இழி செயலினால் இப்பொழுது இரு பிள்ளைகளும் அனாதையாக கைவிட பட்டுள்ளனர் .
சிந்திக்க மறந்த்து செயல் படும் இவ்வாறான சம்பவங்கள் ஊடக பிள்ளைகள் மன நிலை பாதிக்க பட்ட நிலையில் வளரும் நிலை காணப்படுகிறது .
கணவன் மனைவியை வெட்டி படுகொலை செய்த்த சம்பவம் கிராம மக்கள் மத்தியில் பதட்டத்தை .ஏற்படுத்தியுள்ளது.
- செம்மணியில் 19 எலும்பு கூடுகள் மீட்பு

- ஐ நா அறிக்கை காசாவில் 80 சதவீத மக்கள் மோசமான நிலையில்

- ஹோர்முஸ் நீர்வழித்தடத்தைத் தவிர்க்க தற்காலிக கடல்வழிப் பாதையை ஓமான் அறிவித்துள்ளது

- ஐநா அறிக்கை காசாவில் குழந்தைகளை வேண்டுமென்றே குறிவைத்து இஸ்ரேல் இனப்படுகொலை செய்கிறது

- அமெரிக்காவுடனான கருத்து வேறுபாட்டில் ஈரானுக்கு எதிராக இஸ்ரேல்

கணவனுக்கு ஐஸ் மனைவி கைது
கணவனுக்கு ஐஸ் மனைவி கைது
கணவனுக்கு ஐஸ் மனைவி கைது ,சிறையிலிருக்கும் தனது கணவனுக்கு கொடுப்பதற்காக உணவுடன் ஒரு கிராம் ஜஸ் போதைப் பொருளை சூட்சுமமாக மறைத்து கொண்டு சென்ற குறித்த சந்தேக நபரின் மனைவியை
செவ்வாய்க்கிழமை மாலை (18) சிறைச்சாலை அதிகாரிகள் கைது செய்துள்ளதாக மட்டு தலைமையக பொலிஸ் நிலைய குற்ற தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ஜி.கஜநாயக்க தெரிவித்தார்.
வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள ஓட்டமாவடி பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரை கடந்த ஒரு மாதத்துக்கு முன்னர் ஜஸ் போதைப் பொருளுடன் கைது
செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதை அடுத்து அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவுக்கு அமைய மட்டு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள கணவனை பார்ப்பதற்காக உணவு மற்றும் புகையிலைகளை மனைவி எடுத்துச் சென்றுள்ளார். அவைகளை சிறைச்சாலை அதிகாரிகள் சோதனையிட்ட போது
புகையிலைக்குள் சூட்சகமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு கிராம் ஜஸ் போதைப் பொருளை மீட்டதுடன் குறித்த பெண்ணை சிறைச்சாலை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
ஓட்டமாவடி 3ஆம் பிரிவு உசேனியா வீதியைச் சேர்ந்த 27 வயதுடைய பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டதாகவும் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
கணவனை குத்தி கொன்ற மனைவி
கணவனை குத்தி கொன்ற மனைவி
கணவனை குத்தி கொன்ற மனைவி ,வெல்லவாய பொலிஸ் பிரிவின் வீரசேகரகம பகுதியில் இளம் பெண் ஒருவர் நடத்திய கத்திக்குத்து தாக்குதலில் திருமணமான இளைஞன் ஒருவர் உயிரிழந்தார்.
இந்தத் தாக்குதலை 19 வயது இளம் பெண்ணொருவர் நடத்தியுள்ளதுடன், 31 வயதான இளைஞரே சம்பவத்தில் உயிரிழந்தார்.
இருவரும் சட்டப்படி திருமணம் செய்து கொள்ளாத நிலையில், வீரசேகரகம பகுதியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அங்கு கணவன் மனைவியாக வாழ்ந்து வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், நேற்றிரவு ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி தாக்குதலாக மாறியதாகவும், உயிரிழந்தவர் நாவலப்பிட்டி பகுதியைச் சேர்ந்த இளைஞர் என்றும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
தாக்குதலை நடத்திய இளம் பெண், ஹல்தமுல்லவில் உள்ள சொரகுனே பகுதியைச் சேர்ந்தவர் என்பதுடன், வெல்லவாய பொலிஸாரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கத்திக்குத்துக்குப் பிறகு, அந்த இளைஞர் வெல்லவாய ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு அவர் இறந்தார்.
கைது செய்யப்பட்ட இளம் பெண் வெல்லவாய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், வெல்லவாய பொலிஸார் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
- செம்மணியில் 19 எலும்பு கூடுகள் மீட்பு

- ஐ நா அறிக்கை காசாவில் 80 சதவீத மக்கள் மோசமான நிலையில்

- ஹோர்முஸ் நீர்வழித்தடத்தைத் தவிர்க்க தற்காலிக கடல்வழிப் பாதையை ஓமான் அறிவித்துள்ளது

- ஐநா அறிக்கை காசாவில் குழந்தைகளை வேண்டுமென்றே குறிவைத்து இஸ்ரேல் இனப்படுகொலை செய்கிறது

- அமெரிக்காவுடனான கருத்து வேறுபாட்டில் ஈரானுக்கு எதிராக இஸ்ரேல்

8 மணி நேரம் செலவிட்டால் மனைவி ஓடிவிடுவார்
8 மணி நேரம் செலவிட்டால் மனைவி ஓடிவிடுவார்
8 மணி நேரம் செலவிட்டால் மனைவி ஓடிவிடுவார் ,குடும்பத்தினருடன் நீங்கள் 8 மணி நேரத்தை செலவிட்டால் உங்களது மனைவி வீட்டை விட்டே ஓடிவிடுவார்.
என வேலை-வாழ்க்கை சமநிலை குறித்தான கேள்விக்கு அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி நகைச்சுவையாக கருத்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் மேலும் கூறும்போது: வேலை மற்றும் வாழ்கை சமநிலை பற்றிய உங்களது யோசனையை என்னிடம் திணிக்க கூடாது.
அதேபோன்று, என்னுடைய யோசனை உங்கள் மீது திணிக்கப்பட கூடாது. சிலருக்கு குடும்பத்துடன் 4 மணி நேரம் செலவிட்டாலே அவர்களுக்கு தேவையான மகிழ்ச்சி கிடைத்துவிடும்.
இன்னும் சிலருக்கு 8 மணி நேரம் குடும்பத்துடன் இருந்தால்தான் முழு திருப்தி கிடைக்கும்.
இதுதான் அவரவர் உடைய வேலை-வாழ்க்கை சமநிலை.
இருப்பினும், 8 மணி நேரம் நீங்கள் குடும்பத்துடன் இருந்தால் உங்களது மனைவி வீட்டை விட்டே ஓடிவிடுவார்.
நாம் விரும்பும் விஷயங்களை செய்யும்போது நம்முடைய வேலையும் வாழ்க்கையும் சமநிலையில் இருக்கும்.
நமக்கு குடும்பம், வேலையை தவிர வேறு உலகம் இல்லை. தனிப்பட்ட குணம் மற்றும் பணிவுதான் மனிதருக்கான மிக முக்கியமான விஷயங்கள்.
மற்றவையெல்லாம் என்னைப் பொருத்தவரை செல்வம் உட்பட அனைத்துமே செயற்கையானவை.
நீங்கள் சாப்பிடுவதைத்தான் நானும் சாப்பிடுகிறேன். யாருக்கும் இந்த உலகம் நிரந்தரம் கிடையாது.
இதைப் புரிந்து கொண்டாலே வாழ்க்கை என்பது எளிதாகிவிடும். இவ்வாறு அதானி கூறியுள்ளார்.
யாழில் படுகொலை செய்யப்பட்ட கணவன் மனைவி
யாழில் படுகொலை செய்யப்பட்ட கணவன் மனைவி
யாழில் படுகொலை செய்யப்பட்ட கணவன் மனைவி ,யாழ்ப்பாணம் – பருத்தித்தித்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கற்கோவளம் – புனிதநகர் பகுதியில் கணவன், மனைவி ஆகியோர் படுகொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
மாணிக்கம் சுப்பிரமணியம், சுப்பிரமணியம் மேரி ரீட்டா ஆகியோரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
வீட்டிற்கு இன்று (30) புதன்கிழமை காலை சென்று பார்த்த போது கணவன், மனைவி இருவரும் உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளனர்.
50 மற்றும் 51 வயதான 2 பிள்ளைகளின் பெற்றோரே மிகவும் கொரூரமான நிலையில் கற்களால் தலையில் குற்றிக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன் பருத்தித்துறை நீதிவானுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
குறித்த இருவரும் கொங்கிறீட் கல்லினால் தலையில் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
பருத்தித்துறை நீதவானின் பிரசன்னத்திற்கு பின்னரே சடலங்களை மீட்டு மேற்கொண்டு விசாரணைகளை மேற்கொள்ளப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.
மனைவியை கொலை செய்த கணவர் கைது
மனைவியை கொலை செய்த கணவர் கைது
மனைவியை கொலை செய்த கணவர் கைது தனிப்பட்ட தகராறு காரணமாக கணவன் தனது மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளார்.
நேற்று (14) மாலை வாத்துவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொதுப்பிட்டிய பிரதேசத்தில் இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கோரகஹவத்த, பொதுப்பிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் 23 வயதுடைய யுவதியே உயிரிழந்துள்ளார்.
பெண் ஒருவர் தனது கணவரால் தாக்கப்படுவதாக 119 தகவல் நிலையத்தின் மூலம் வாத்துவ பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதன்படி சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் பெண் ஒருவர் உயிரிழந்தததை அவதானித்ததுடன், மற்றுமொரு பெண் காயமடைந்து களுத்துறை நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பொலிசார் நடத்திய விசாரணையில் காயமடைந்தவர் உயிரிழந்தவரின் சகோதரி என்பது தெரியவந்துள்ளது.
கொலையை செய்த 34 வயதுடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், வாத்துவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, காணி தகராறு காரணமாக நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.
பதுரலிய, ஹீன்பல்வில பிரதேசத்தில் இந்த கொலை சம்பவம் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அத்வெல்தொட்ட, மொரபிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் 70 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மனைவியை கொன்று உயிரை மாய்த்துக்கொண்ட கணவர்
மனைவியை கொன்று உயிரை மாய்த்துக்கொண்ட கணவர்
மனைவியை கொன்று உயிரை மாய்த்துக்கொண்ட கணவர் ,கணவன், மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்ததுடன் தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
நேற்று (07) இச்சம்பவம் மிஹிந்தலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குஞ்சிக்குளம் பகுதியில் பதிவாகியுள்ளது.
குஞ்சிக்குளம் பகுதியைச் சேர்ந்த 61 வயதுடைய ஆணும் 56 வயதுடைய பெண்ணுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இவர்கள் இருவருக்கும் இடையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் இதேபோன்று கடந்த 06 ஆம் திகதி இரவு ஏற்பட்ட தகராறின் பின்னரே கணவன், மனைவியை கொலை செய்து பின்னர் தானும் தற்கொலை செய்துகொண்டுள்ளமை பொலிஸார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.
கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கோடாரி, குற்றம் நடந்த இடத்தில் இருந்து பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மிஹிந்தலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மனைவியை கோடரியால் தாக்கி கொலை செய்த கணவன்
மனைவியை கோடரியால் தாக்கி கொலை செய்த கணவன்
மனைவியை கோடரியால் தாக்கி கொலை செய்த கணவன் ,கணவன் தனது மனைவியை கோடரியால் தாக்கி கொலை செய்துள்ள சம்பவமொன்று அவிசாவளை, கெடஹெத்த பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
இக்கொலைச் சம்பவம் நேற்று (02) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
திவுரும்பிட்டிய, கெடஹெத்த பிரதேசத்தில் வசித்து வந்த 43 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவருக்கும் சந்தேகநபருக்கும் இடையிலான குடும்பத் தகராறு காரணமாக இந்தக் கொலை இடம்பெற்றுள்ளமை தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபரின் கணவரை பொலிஸார் கைது செய்துள்ளதுடன், அவிசாவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மனைவியை கொலை செய்த கணவன்
மனைவியை கொலை செய்த கணவன்
மனைவியை கொலை செய்த கணவன் ,அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகருக்கு அருகில் உள்ள சென்டிஹர்ஸ்ட் என்ற இடத்தில் தனது விவாகரத்து பெற்ற மனைவியை வெட்டிக் கொன்ற இலங்கையர் ஒருவர் அந்நாட்டு நீதிமன்றத்தினால் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளார்.
47 வயதான தினேஷ் குரேரா தனது பாதுகாப்பிற்காகவே இவ்வாறு செயற்பட்டதாக நீதிமன்றில் தெரிவித்திருந்தார்.
ஆனால் அந்த கோரிக்கையை நடுவர் மன்றம் ஏற்கவில்லை.
விக்டோரியாவின் உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (30) இந்த உத்தரவை பிறப்பித்தது.
2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 03 ஆம் திகதி, நிலோமி பெரேரா, வீட்டிற்குள் தாக்கப்பட்டதுடன், குரேரா அந்த கொலையை செய்ததாக ஒப்புக்கொண்டார்.
ஆனால் அவர் தனது உயிரைப் பாதுகாப்பதற்காக இதைச் செய்ததாகக் கூறினார்.
விவாகரத்து பெற்ற மனைவி தன்னை கத்தியைக் காட்டி மிரட்டி விரலை வெட்டிவிட்டதாக விசாரணையில் அவர் கூறியுள்ளார்.
அவர் தன்னைத் தாக்கிவிடுவாரோ என்று பயந்ததால், கோடரியால் பலமுறை தாக்கியதாக குரேரா நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
அந்த பெண்ணின் உடலில் 35 காயங்கள் இருந்ததாக அரச சட்டத்தரணி நீதிமன்றில் தெரிவித்தார்.
எனினும் தாயும் தந்தையும் சண்டையிடுவதை மகளும் மகனும் பார்த்ததாகவும், மகன் உதவி கேட்டு அலறிய போது, குரேரா அவரையும் தாக்க முயன்றதாகவும் நீதிமன்றத்தில் தெரியவந்துள்ளது.
16 வயது மகளும் 17 வயது மகனும் நீதிமன்றத்தில் சாட்சியமளித்து, அப்பா, அம்மாவை தாக்கிய விதத்தை விவரித்திருந்தார்கள்.
மனைவிக்கு தீ மூட்டிய கணவர்
மனைவிக்கு தீ மூட்டிய கணவர்
மனைவிக்கு தீ மூட்டிய கணவர் ,குடும்பத் தகராறில் கணவனால் மனைவிக்கு தீ வைத்து எரித்ததில் படுகாயமடைந்த மனைவி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரியவந்துள்ளது .
இந்தச் சம்பவம் அச்சுவேலியில் பிரதேசத்தில் , ஞாயிற்றுக்கிழமை (25) இரவு 11 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இதில், இரு பிள்ளைகளின் தாயான பாலகிருஷ்ணன் நிருத்திகா (வயது 28) என்பவரே படுகாயமடைந்துள்ளார் .
குறித்த பெண்ணுக்கும் அவரது கணவனுக்கும் இடையே முரண்பாடு இருந்து வந்துள்ள நிலையில், மது போதையில் வந்த கணவன் அவருடன் முரண்
பட்டுள்ளார். இந் நிலையில் பெண்ணின் அபயக்குரல் சத்தம் கேட்டதும் அவர்களின் வீட்டின் அருகே வசித்து வந்த பெண்ணின் சகோதரன் உதவிக்கு ஓடி பார்த்த போதுஅவரது சகோதரி தீயில் எரிந்துகொண்டிருந்துள்ளார் .
உடனடியாக அயலவர்களின் உதவியுடன் பெண் மீட்கப்பட்டு அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்
இதனிடையே, அங்கிருந்தவர்களால் தாக்கப்பட்ட பெண்ணின் கணவரும் யாழ். போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது .
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ள நிலையில் சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது .
மனைவிக்கு ஆப்பு சுகுணன் வைத்தியர்
மனைவிக்கு ஆப்பு சுகுணன் வைத்தியர்
மனைவிக்கு ஆப்பு சுகுணன் வைத்தியர் ,வவுனியா வைத்தியசாலைப் பணிப்பாளர் தங்கலான் ஆராய்ச்சியாளர் சுகுணன் குணசிங்கம் எப்படியான ஆள்? என்ன செய்யிறவர்?? என்று கேட்டுத் தெரிஞ்சு கொள்ளச் சொன்ன காரணத்தினால் திருமதி.பிரசாந்தி சுகுணனுக்கு அப்போது தற்காலிக இடமாற்றம் வழங்கப்பட்டு விசாரணை ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
மாணவன் ,அவரது தாய் ஆகியோரை டீச்சர் கொலை மிரட்டல் விடுத்த நிலையில் இந்த வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுதியது .
அதனை அடுத்து தற்போது கல்வி அமைச்சினால் மாற்றம் செய்ய பட்டுள்ளார் .மக்கள் மத்தியில் மிக பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது .
இதனை அடுத்து தற்போது அவசரமாக மாற்றம் எய்யப்பட்டுள்ளதுடன் ,கொலை மிரட்டல் விடுத்த நிலையில் அது தொடர்பாக விசாரணைக்கு உட்படுத்தியுயுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
அரசியல் கட்சி ஒன்றின் பின்புலத்தில் இருந்து மக்களை மிரட்டி அடக்கும் நோக்கில் இவர் ஈடுபட்டு வருகிறார் என்ற விடயம் , தற்போது அம்பலமாகியுள்ள நிலையில் இந்த இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் என அறிவிக்க பட்டுள்ளது .

மனைவியை பெற்றோல் ஊற்றிக் கொளுத்திய கணவன்
மனைவியை பெற்றோல் ஊற்றிக் கொளுத்திய கணவன்
மனைவியை பெற்றோல் ஊற்றிக் கொளுத்திய கணவன் ,புத்தளம் – வென்னப்புவ பகுதியில் தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குடும்ப பெண்ணொருவர் சிகிச்சை பலனின்றி நேற்று (17) உயிரிழந்துள்ளார் என வென்னப்புவ பொலிஸார் தெரிவித்தனர்.
வாய்க்கால் – சிந்தார்த்திரி பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த குறித்த பெண் கடந்த ஒன்பது வருடங்களாக தொழில் நிமித்தம் வெளிநாட்டில்
வசித்து வந்துள்ள நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் இலங்கைக்கு வந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு இலங்கை திரும்பிய குறித்த பெண் தனது வீட்டிற்கு வருகை தந்து மூன்று நாட்கள் மாத்திரம் கணவன் மற்றும் பிள்ளைகளுடன் தாங்கிய நிலையில், கணவனுடன் ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாக வீட்டை
விட்டு வெளியேறி கொச்சிக்கடை பகுதியில் வாடகை வீடொன்றில் தங்கியுள்ளார் என விசாரணையின் தெரியவந்துள்ளது என பொலிஸார் குறிப்பிட்டனர்.
இதனையடுத்து, 11 ஆம் திகதி தனது பிள்ளையின் பிறந்த நாளை கொண்டாடுவதற்காக கடந்த 7 ஆம் திகதி குறித்த பெண் மீண்டும் வீட்டுக்கு வருகை தந்துள்ளார்.
வீட்டிற்கு வருகை தந்த நாள் முதல் கணவனுக்கும் – மனைவிக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், கடந்த 13 ஆம் திகதி மாலை நபர் ஒருவருடன்
தொடர்புகொண்ட குறித்த பெண் தன்னை வந்து அழைத்துச் செல்லுமாறு தொலைபேசியில் கூறியுள்ளார் என்றும் கணவன் பொலிஸ் விசாரணையில் கூறியுள்ளார்.
தனது மனைவி கொச்சிக்கடை பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவருடன் நீண்ட காலமாக கள்ளத் தொடர்பில் இருந்ததாகவும், தன்னுடனான உறவைத் துண்டித்து வாழ்ந்து வந்ததாகவும் கணவன் தெரிவித்துள்ளார்.
மனைவி வெளிநாட்டில் வசித்த வந்த போது தனது நான்கு பிள்ளைகளையும் தானே பராமறித்து வந்ததாகவும், வெளிநாட்டில் இருந்து இலங்கை திரும்பியதும், கள்ளத் தொடர்பில் இருந்த நபருடன் வாழ விருப்பம் என்றால்
நான்கு பிள்ளைகளையும் பராமறித்துக் கொண்டு அந்த நபருடனேயே இருக்குமாறும் மனைவியிடம் கூறியதாகவும், பிள்ளைகளை தனது பராமறிப்பில் வைத்துக் கொள்ள மனைவி ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் கணவன் தெரிவித்துள்ளார்.
கடந்த 14 ஆம் திகதி அதிகாலை 4 மணியளவில் தனது மனைவி வீட்டை விட்டு வெளியேறிச் செல்ல தயாரான போது, பிள்ளைகளின் எதிர்காலத்தை கவனத்தில் கொண்டு இங்கேயே தங்கியிருக்குமாறு கணவன் தனது மனைவியிடம் கேட்டுக்கொண்டேன்.
தனது பேச்சை நிராகரித்த மனைவி தன்னுடன் வாக்குவாதப்பட்டதாகவும், இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிய நிலையில்,
ஆத்திரமடைந்த தான் சமயலறையில் இருந்த பெற்றோலை எடுத்து மனைவியின் உடல்மீது ஊற்றி தீவைத்ததாகவும் கணவன் பொலிஸாருக்கு வழங்கிய வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளார்.
கடும் தீக்காயங்களுக்கு உள்ளான குறித்த பெண் வீட்டை விட்டு வெளியேறி அயலவர்களின் உதவியை நாடிய நிலையில், அங்கிருந்தவர்கள் அந்தப்
பெண்ணை உடனடியாக நீர்கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்ததாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
இதனையடுத்து, அந்த பெண்ணின் கணவன் சந்தேகத்தின் பெயரில் வென்னப்புவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
தனது நான்கு பிள்ளைகளையும் தானே பராமறிக்க வேண்டிய பொறுப்பில் இருப்பதாகவும் தனக்கு பிணை வழங்குமாறும் சந்தேக நபர் சார்பில்
கோரிக்கை முன்வைக்கப்பட்டது. சந்தேக நபர் சார்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை பரீசிலனை செய்த நீதிமன்றம் அவரை பிணையில் செல்ல அனுமதி வழங்கியிருந்தது.
எனினும் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்றுவந்த குறித்த பெண் மூன்று நாட்களின் பின்னர் நேற்று (17)
காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என வென்னப்புவ பொலிஸ் நிலையத்தின் குற்ற விசாரணை பிரிவு பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் பி.டி.பி.ஸ்ரீவர்தன தெரிவித்தார்.
மேலும், இந்த சம்பவத்துடன் தொடர்புடைய உயிரிழந்த பெண்ணின் கணவரான 43 வயதுடைய நபர் சந்தேகத்தின் பெயரில் நேற்று (17) மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது அவரை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் வென்னப்புவ பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் மேற்பார்வையில் குற்ற விசாரணை பிரிவு
பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் பி.டி.பி.ஸ்ரீவர்தன தலைமையிலான பொலிஸ் குழுவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
- செம்மணியில் 19 எலும்பு கூடுகள் மீட்பு

- ஐ நா அறிக்கை காசாவில் 80 சதவீத மக்கள் மோசமான நிலையில்

- ஹோர்முஸ் நீர்வழித்தடத்தைத் தவிர்க்க தற்காலிக கடல்வழிப் பாதையை ஓமான் அறிவித்துள்ளது

- பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கனடிய மாணவி கைது

- கைதுகளுக்குப் பிறகு ஸ்பா சிகிச்சையாளர்களின் அடையாளங்கள் வெளியாகின

- சிக்கிய அனுரா அரசு கடன் சுமை

- பள்ளி உணவகங்களுக்கு அபராதம்

- மே 25 அன்று நாடாளுமன்ற உறுப்பினர் மீதான போக்குவரத்து விதிமீறல் வழக்கு

- மதிப்புக்கூட்டு வரி (VAT) வரம்பை ரூ. 60 மில்லியனாக அரசு தக்கவைத்துக் கொண்டது

- ஈரான் அமெரிக்கா பேச்சு சிக்கலில்

கணவர் மனைவியால் வெட்டி கொலை
கணவர் மனைவியால் வெட்டி கொலை
கணவர் மனைவியால் வெட்டி கொலை ,யாழ்ப்பாணம் ஓடுதல் பகுதியில் பகுதியில் ஒருவர் தனது கணவனை கூலி குழுக்களை அமர்த்தி படுகொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோழி இறைச்சி விற்பனையில் ஈடுபட்டிருந்த கணவரை அவரது நண்பருடன் இணைந்து வெட்டி படுகொலை செய்துள்ளனர்.
இறைச்சி விற்பனையில் ஈடுபட்டிருந்த கணவன் அன்று அவருக்கு கோழி விநியோகம் செய்ய பட்டுள்ளது .
அதன் பின்னர் அவர் மீது சரமரியாக வாள்வெட்டு தாக்குதல் நடைபெற்ற பொழுது கணவரின்அலறிய சித்தம் கேட்டு ஓடிவந்த மனைவியின் தங்க நகைகளை கொள்ளையர்கள் அறுத்து சென்றனர்.
காயமடைந்த நிலையில் வைத்தியம் உயிரிழந்தார் இந்த கொலை தொடர்பான விசாரணையை போலீசார் மேற்கொண்டு வந்தனர் .
விசாரணையின் பொழுது மனைவி மற்றும் வாலிபன் இணைந்து இந்த குழுவின் பின்புலத்தில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது.
நகை கொள்ளையடிக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.
இதனை அடுத்து தற்பொழுது மனைவி மற்றும் வாலிபன் உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் .
யாழ்ப்பாணத்தில் கணவனை மனைவி கூலி குழுக்களை வைத்து வெட்டிக்கொண்ட செயல் பரபரப்பையும் கொதிப்பையும் ஏற்படுத்தி உள்ளது .
தாலி கட்டி வாழ்ந்த கணவருடன் அவருக்கு ஏற்பட்ட தொடர்பு காரணமாகவே இந்த கொலை இடம்பெற்று இருக்கலாம் என்ற விடயம் தற்பொழுது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது .
எங்கே செல்கிறது எங்களது யாழ்ப்பாணம் அந்த கேள்வி எல்லோருடைய மக்கள் மத்தியில் தற்போது கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
- செம்மணியில் 19 எலும்பு கூடுகள் மீட்பு

- ஐ நா அறிக்கை காசாவில் 80 சதவீத மக்கள் மோசமான நிலையில்

- ஹோர்முஸ் நீர்வழித்தடத்தைத் தவிர்க்க தற்காலிக கடல்வழிப் பாதையை ஓமான் அறிவித்துள்ளது

- பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கனடிய மாணவி கைது

- கைதுகளுக்குப் பிறகு ஸ்பா சிகிச்சையாளர்களின் அடையாளங்கள் வெளியாகின

- சிக்கிய அனுரா அரசு கடன் சுமை

- பள்ளி உணவகங்களுக்கு அபராதம்

- மே 25 அன்று நாடாளுமன்ற உறுப்பினர் மீதான போக்குவரத்து விதிமீறல் வழக்கு

- மதிப்புக்கூட்டு வரி (VAT) வரம்பை ரூ. 60 மில்லியனாக அரசு தக்கவைத்துக் கொண்டது

- ஈரான் அமெரிக்கா பேச்சு சிக்கலில்

கணவனால் மனைவி வெட்டி கொலை
கணவனால் மனைவி வெட்டி கொலை
கணவனால் மனைவி வெட்டி கொலை , யாழ்ப்பாணத்தில் இளம் மனைவியை கணவன் கருதிக் கொன்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
29 வயதுடைய புதுக்குடியிருப்பை சேர்ந்த மனைவிக்கும் 34 வயதுடைய கணவனுக்கு இடையில் ஏற்பட்ட வாய் தர்க்கத்தை அடுத்து சமையலறை கத்தியை எடுத்து மனைவியை சர மரியாக்க குத்தி அவரை படுகொலை செய்துள்ளார்.
இவ்வாறு படுகொலை செய்தவர் இரண்டாவது திருமணம் ஆக இந்த பெண்ணை திருமணம் செய்து இருந்ததாகவும் அதன் பொழுது ஏற்பட்ட வாய் தர்க்கத்தை அடுத்து அவர்மனைவியை கத்தியால் குத்தி படுகொலை செய்துள்ளார்.
கத்திக்குத்து தாக்குதலில் பலத்த காயங்களுக்கு உள்ளானவர் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்வதற்கு முன்னதாகவே மரணமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்பொழுது சடலம் மரண பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது .
கொலை குற்றச்சாட்டை மேற்கொண்ட கணவன் தற்பொழுது கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கையில் தற்பொழுது கணவன் மனைவிக்கு இடையில் இடம் பெற்று வருகின்ற வாக்குவாதங்கள் முற்றி தற்பொழுது படுகொலை முடிவுகள் சம்பவங்கள் அதிகரித்துள்ளது.
இலங்கையில் அதிகரித்து வரும் கத்தி குத்து தாக்குதல் வரிசையில் இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளது.
ஆரியாலையில் தற்கால வசிப்பிடமாக கொண்ட பெண் இவ்வாறு மிக கொடூரமாக படுகொலை செய்யப்பட்டுள்ளார் .
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பது வசிப்பிடமாகக் கொண்டு திருமணம் முடித்து அரியாலைக்கு சென்றிருந்த வேளையிலேயே, கணவனினால் மனைவி குத்தி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
இந்த கத்தி குத்து படுகொலை சம்பவமானது யாழ்ப்பாண மக்கள் மத்தியிலும் பெரும் அதிர்வலைகளையும் கொதிப்பையும் ஏற்படுத்தியுள்ளது .
குடும்பங்களுக்கு சர்ச்சைகள் வருவது இயல்பான ஒன்று ,ஆனால் அதனை மிக பொருளாதாரப் படுத்தி இவ்வாறான முறையில் அவர்கள் செல்வது ஒருவரை ஒருவர் இருந்து கொள்வது ஒருவரை ஒருவர் தவறாக,
மற்றவரிடம் பேசிக் கொள்கின்ற நடவடிக்கை காரணமாக அதுவே கோபத்தின் உச்சத்துக்கு சென்று இவ்வாறான படுகொலையில் முடிகொண்ட சம்பவங்கள் காணப்படுவதை இந்த கத்திக்குத்து சம்பவம் எடுத்து காட்டியுள்ளது.
- செம்மணியில் 19 எலும்பு கூடுகள் மீட்பு

- ஐ நா அறிக்கை காசாவில் 80 சதவீத மக்கள் மோசமான நிலையில்

- ஹோர்முஸ் நீர்வழித்தடத்தைத் தவிர்க்க தற்காலிக கடல்வழிப் பாதையை ஓமான் அறிவித்துள்ளது

- பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கனடிய மாணவி கைது

- கைதுகளுக்குப் பிறகு ஸ்பா சிகிச்சையாளர்களின் அடையாளங்கள் வெளியாகின

- சிக்கிய அனுரா அரசு கடன் சுமை

- பள்ளி உணவகங்களுக்கு அபராதம்

- மே 25 அன்று நாடாளுமன்ற உறுப்பினர் மீதான போக்குவரத்து விதிமீறல் வழக்கு

- மதிப்புக்கூட்டு வரி (VAT) வரம்பை ரூ. 60 மில்லியனாக அரசு தக்கவைத்துக் கொண்டது

- ஈரான் அமெரிக்கா பேச்சு சிக்கலில்

மனைவியால் தேட படும் கணவன்
மனைவியால் தேட படும் கணவன்
மனைவியால் தேட படும் கணவன் ,கணவனை காணவில்லை தேடும் மனைவி இலங்கை கொழும்பு கொழும்பெண்டலா பகுதியைச் சேர்ந்த 28 வயதான நபர் ஒருவர் காணாமல் போய் உள்ளார்.
தனது கணவன் கடந்த எட்டு மாதங்களாக காணாமல் போய்விடும் இவரை தேடி கண்டுபிடித்து தரும்படி அவரது மனைவி காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார் .
இவர் எவ்வாறு காணாமல் போனார் எப்படி காணாமல் போனார் என்பது தொடர்பாக தற்பொழுது போலீசார் விசாரணங்களை ஆரம்பித்து இருக்கிறது.
இலங்கையில் பல்வேறுபட்ட கடத்தல் மற்றும் தேடுதல் நடவடிக்கை வீதிகளில் சடலங்கள் மிதக்கின்ற காட்சிகள் காணப்படுகின்றது .
அவர்களில் கடந்த எட்டு மாதங்களுக்கு முன்னர் எனது கணவன் காணாமல் போய்ுள்ளதாகவும் அவர் காணாமல் போன கணவனை கண்டுபிடித்து தரும்படியும் மனைவி தற்பொழுது காவல்துறையே உதவிய நாடி இருக்கின்றார் .
இலங்கை ஒரு பாதுகாப்பு அற்ற நாடு என்பதையும் தொடராக இடம் பெற்று வரும் கடத்தல்கள் காணாமல் போதல் சம்பவங்கள் எடுத்துக்காட்டுகின்றன.
இது திட்டமிடப்பட்ட அரசியல் கட்சிகளின் பின்புலத்தில் இடம்பெறுகின்ற கடத்தல் சம்பவம் என்பது தொடர்பாக சந்தேகங்கள் எழுப்பப்பட்டு வருகின்றது.
கணவனை காணாது மனைவி மற்றும் அவரது பிள்ளைகள் தத்தளித்து வருகின்றனர் .
இவருக்கு என்ன ஆனது என்பது தொடர்பான விடயங்கள் தற்பொழுது பெரும் சந்தேகத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது .
காணாமல் போன பிறகு தற்போது சடலங்கள் மீட்கப்பட்டு வருகின்ற நிலையில் ,தற்போது குடும்பத்தினர் ஒரு வித பதட்டத்தில் உறைந்திருக்கின்றனர்.
அதிர்ச்சியில் மனைவி உயிரிழப்பு
அதிர்ச்சியில் மனைவி உயிரிழப்பு
கணவன் உயிரிழப்பு ,அதிர்ச்சியில் மனைவி உயிரிழப்பு ,உறவினர்கள் கண்ணீரில் தவிப்பு .
இந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரயில் கடை ஒன்றில் கணவர் உயிரிழந்த நிலையில் ,அவரது சடலத்தை வீட்டுக்கு எடுத்துச் சென்று வந்த பொழுது, அதனை ஏற்றுக்கொள்ள முடியாத மனைவி அதிர்ச்சிக்கு உள்ளாகி இருந்தார் .
அதனை அடுத்து உங்களுடனே வருகிறேன் என கதறி கதறி அழுதிருக்கின்றார்.
மனைவிக்கு திடீரென நெஞ்சுவலி
அவ்வேளை மனைவிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் .
அங்கு சிகிச்சை பலனின்றி அவர் மரணித்துவிட்டார் .
கணவன் மனைவி இருவரது சடலங்களும் ஒரே நேரத்தில் அடக்கம் செய்யப்பட்ட சம்பவம் அந்த கிராம மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .
கணவன் மீது அதீத பாசத்தைக் கொண்ட மனைவி நெஞ்சுவலி ஏற்பட்டு கணவனுடன் உடன் கட்டை ஏறிய சம்பவம் அந்த கிராம மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
இந்த சம்பவம் அந்த கிராம மக்களை கண்ணீரால் அவர்களை குளிர வைத்துள்ளது .
கணவருக்கும் மனைவிக்கு இடையில் இருந்த நல்லுறவு
கணவன் மனைவிக்கு இடையில் இருந்த நல்லுறவு இதன் ஊடாக வெளிப்பட்டு உள்ளதாகவும், இவர்கள் எப்பொழுதும் ஒற்றுமையாகவே வாழ்ந்து வந்ததாகவும் அந்த மக்கள் தற்பொழுது தெரிவித்து வருகின்றனர் .
கணவன் இறந்த நிலையில் மனைவி உடன்கட்டை ஏரியா சம்பவம் ,வாலிபர்களுக்கும் காதலர்களுக்கும் ஒருவிதா புத்துணர்வை ஏற்படுத்தியிருக்கின்றது.
- செம்மணியில் 19 எலும்பு கூடுகள் மீட்பு

- ஐ நா அறிக்கை காசாவில் 80 சதவீத மக்கள் மோசமான நிலையில்

- ஹோர்முஸ் நீர்வழித்தடத்தைத் தவிர்க்க தற்காலிக கடல்வழிப் பாதையை ஓமான் அறிவித்துள்ளது

- பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கனடிய மாணவி கைது

- கைதுகளுக்குப் பிறகு ஸ்பா சிகிச்சையாளர்களின் அடையாளங்கள் வெளியாகின

- சிக்கிய அனுரா அரசு கடன் சுமை

- பள்ளி உணவகங்களுக்கு அபராதம்

- மே 25 அன்று நாடாளுமன்ற உறுப்பினர் மீதான போக்குவரத்து விதிமீறல் வழக்கு

- மதிப்புக்கூட்டு வரி (VAT) வரம்பை ரூ. 60 மில்லியனாக அரசு தக்கவைத்துக் கொண்டது

- ஈரான் அமெரிக்கா பேச்சு சிக்கலில்

மனைவி வயிற்றை வெட்டிய கணவன்
கர்ப்பிணி மனைவி வயிற்றை வெட்டிய கணவன்
மனைவி வயிற்றை வெட்டிய கணவன் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
கர்ப்பிணியான மனைவியின் வயிற்றில் உள்ளது என்ன பிள்ளை, என்பதை பார்க்க இவ்வாறு அவர் வெட்டியுள்ளது தெரிய வந்துள்ளது .
இந்திய உத்தரபிரதேச பகுதியில் எட்டு மாத கர்ப்பிணியான மனைவியின் வயிற்றில் உள்ள குழந்தை ,ஆணா பெண்ணா என அறிய ,ஆசை பட்ட கணவன் மனைவியின் வயிற்றை வெட்டியுள்ளார் .
ஆண் குழந்தை வெட்டி கொலை
இவருக்கு முன்னதாக ஐந்து பெண் பிள்ளைகள் தொடராக பிறந்த நிலையில் ,ஆண் குழந்தை இல்லை என வீரக்தி உற்ற கணவன் ,ஆண் குழந்தை வேண்டும் என ஆசைப்பட்டு இப்பொழுது மனைவியை கர்ப்பம் ஆக்கியுள்ளார் .
அதனை அடுத்தே எட்டு மாத கர்ப்பிணியான மனைவியின் வயிற்றை வெட்டிய கணவன்,குழந்தையை பார்க்க முனைந்துள்ளார் .
அரிவாளை எடுத்து மனைவியின் வயிற்றை வெட்டியுள்ளார் ,கணவன் அரிவாள் வெட்டில் வயிற்றில் உள்ள சிசு ,இறந்துள்ளது
மனைவி ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டார் .
ஆபத்தான நிலையில் மனைவி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் ,பொலிஸாரினால் ,கணவன் கொலை குற்ற சாட்டில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்க பட்டுள்ளார் .
பிள்ளை வரம் என்பது கடவுள் கொடுக்கும் வரமாகும் ,அதனை யாரும் தட்டி கழிக்க முடியாது .
பெண் பிள்ளைகள் பெற்ற பல குடும்பங்கள் அதே பெண் பிள்ளைகளினால் , அந்த குடும்பம் கொண்டாட படும் நிலைக்கு உள்ளான சம்பவங்களும் ,இந்த உலகில் பதிவாகியுள்ளது .
அவ்வாறான நிலையில் இந்த கணவன் புரிந்த செயல் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .
இப்படியும் முரட்டு கணவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பதற்கு இவை ஒரு உதாரணமாக உள்ளது .
மாமி மனைவியை அடித்து கொன்ற கணவன்
மாமி மனைவியை அடித்து கொன்ற கணவன்
மாமி மனைவியை அடித்து கொன்ற கணவன் செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
மொனராகலை பகுதியில் மாமி மற்றும் மனைவி மீது கணவன் சரமாரி தாக்குதல் நடத்தியுள்ளார் .
கணவனின் தாக்குதலில் மாமியார் சம்பவ இடத்தில் .பலியானார் ,பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் சிகிச்சை பெற்று வந்த மனைவி ,சிகிச்சை பலனின்றி அவரும் இறந்துள்ளார் .
குடும்ப தகராறு
குடும்ப தகராறு காரணமாக கணவன் மனைவி மற்றும் மாமியாருக்கு இடையில் வாக்குவாதம் இடம்பெற்று வந்துள்ளது .
அவ்வேளை சீற்றம் அடைந்த கணவன் திடீர் தாக்குதலை நடத்தியுள்ளார் .
கணவன் நடத்திய தாக்குதலில் ,தாய் ,மகள் பலியான சம்பவம் பெரும் துயரை ஏற்படுத்தியுள்ளது .
கூட்டு குடும்பம்
கூட்டு குடும்பமாக வாழும் இக்காலத்தில் ,ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு விட்டு கொடுத்து செல்ல வேண்டும் .
அவை இல்லாத பட்சத்தில் இவ்விதமான சம்பவங்கள் இடம்பெறுவதை தடுக்க முடியாது என சமூக நல மனோவியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர் .
அதிகரித்த படுகொலைகள்
இலங்கையில் வழமைக்கு மாறாக தற்போது ,இவ்விதமான வன்முறைகள் அதிகரித்து காணப்படுகின்றன .
அவ்வாறான கொலைகளை விசாரிப்பதற்கே தனி விசாரணை படைகளை இலங்கை காவல்துறை அமைக்க வேண்டிய நிலைக்கு இலங்கை தள்ள பட்டுள்ளது .
மொனராகலை பகுதியில் இடம்பெற்ற மாமி மற்றும் மனைவி மீதான தாக்குதலும் நீண்ட நாள் வன்மத்தின் உச்சமே காரணம் என ஊர்வாசிகள் தெரிவிக்கின்றனர் .
நாடளாவிய ரீதியில் இடம்பெற்று வரும் இவ்வாறான கொலைகள் ,இந்த வருடத்தின் இதுவரையான கால பகுதியில் அதிகரித்து காணப்படுகிறது .
இலங்கையில் எற்பட்டடுள்ள பொருளாதார சீர்கேடு ,அதனால் ஏற்பட்ட உளவியல் அழுத்தங்கள் காரணமாகவும் ,இவ்விதமான கொலைகள் இடம்பெற காரணமாக அமைந்துள்ளது .
அரசும் அதன் நிர்வாகமமுமே ,மக்கள் வாழ்வியல் சுமைகளை குறைத்தால் இவ்விதமான விடயங்கள் நீர்த்து போகும் எனப்படுகிறது .
கோபத்தின் விளைவு இன்று தாய் ,மகள் மரணம் ,கொலை குற்றத்தில் கணவன் தற்பொழுது சிறை சென்றுள்ளார் .
இவர்களது பெற்ற பிள்ளைகள் அனாதைகளாக மாற்றம் பெற்றுள்ளனர் .
எதை எங்கு யாரிடம் சொல்லவேண்டும் ,எதை சொல்லக்கூடாது என்ற விடயம் இல்லாது ,தாங்களே புத்தியீவிகள் என்ற கணக்கில் ,கட்டவிழ்த்து விட படும் கதைகளும் .புனைவுகளும் இந்த கொலைகளுக்கு காரணமாக மற்றம் பெற்றுள்ளதை காணமுடிகிறது .
Featured
மனைவியை வெட்டி கொன்ற கணவன்
மனைவியை வெட்டி கொன்ற கணவன்
மனைவியை கணவன் வெட்டி கொன்ற சம்பவம் கந்தேநுவர, ஹுனுகல பகுதியில் இடம்பெற்றுள்ளது,மனைவியை கொன்ற கணவன் கைது செய்யப்பட்டார் .
கணவன் மனைவிக்கு இடையில் தகராறு ஏற்பட்டத்தை அடுத்து ஆத்திரம் கொண்ட கணவன் மனைவியை கத்தியால் பலமுறை குத்தியும் வெட்டி கொன்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது .
கொலைக்குற்ற சாட்டில் மனைவியை கொன்ற கணவன் கைது செய்யப்பட்டு தீவிர விசாரணைகளிற்கு உள்ளாக்க பட்டுள்ளார் .
இலங்கையில் இவ்வாறான படுகொலைகள் அதிகரித்து செல்கின்றமை மக்கள் மத்தியில் ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது .
குறித்த கொலை வழக்கு தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளது .
















































