நுவரெலியா – ஹட்டன் வீதியில் மண்சரிவு
நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில் நானுஓயா பங்களாஹாத்த பகுதியில் சனிக்கிழமை (18) ஏற்பட்ட மண்சரிவால் அவ்வீதியூடாக ஒருவழிப் போக்குவரத்தே இடம்பெற்று வருகின்றது.
இம் மண்சரிவு காரணமாக நுவரெலியா, தலவாக்கலை , ஹட்டன் மற்றும் மெராயா வழியூடாக டயகமைக்கான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து நானுஓயா பொலிஸார் , நுவரெலியா வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் மற்றும் இராணுவத்தினர் இணைந்து மண்மேட்டை அகற்றி இவ்வீதியின் போக்குவரத்தை வழமைக்குக் கொண்டு வருவதற்கு ஏற்பாடுகள் செய்துள்ளனர்.
நுவரெலியா – ஹட்டன் வீதியில் மண்சரிவு
மேலும் தொடர்ந்து மத்திய மாகாணத்தில் விடாது பெய்யும் அடைமழை காரணமாகவே நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில் பல இடங்களில் மண்சரிவு ஏற்படும் அபாயகரமான வெடிப்புகள் ஏற்பட்டுள்ளதால் இவ்வீதியில்
பயணிக்கும் வாகனங்கள் மற்றும் பாதசாரிகள் விழிப்பாகவே இருக்க வேண்டும் என்றும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
- புத்தாண்டு காலத்தில் இலங்கை 1 பில்லியன் வருவாய்
- புத்தாண்டில் இருவர் படுகொலை
- புத்தாண்டு திரும்பும் பயணச் சேவைகள் இன்று தொடங்குகின்றன
- புட்டால சாலை விபத்தில் முச்சக்கர வண்டி ஓட்டுநர் பலி
- கடந்த காலத் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டோம் நாமல்
- 200க்கும் மேற்பட்ட ஈரானிய கடற்படை வீரர்கள் இலங்கையிலிருந்து புறப்பட்டனர்
- யாழில் சடலம் மீட்பு
- இன்று வரையறுக்கப்பட்ட பேருந்து மற்றும் தொடர்வண்டி சேவைகள்
- புலிகள் ஆயுதக் கிடங்கில் வீழ்ந்த அனுரா
- பண்டிகைக் காலத்தில் சாலை விபத்து மரணங்கள்
















