Tag: மண்சரிவு
நாடு முழுவதும் மண்சரிவு எச்சரிக்கை
நாடு முழுவதும் மண்சரிவு எச்சரிக்கை
நாடு முழுவதும் நிலவிவரும் சீரற்ற வானிலை காரணமாக 13 மாவட்டங்களில் 20,480 குடும்பங்களைச் சேர்ந்த 75, 734 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
வெள்ளத்தினால் 33,488 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மோசமான வானிலை காரணமாக 13 வீடுகள் முழுமையாகவும் 1,125 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன. பாதிக்கப்பட்ட 555 குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
நாடு முழுவதும் மண்சரிவு எச்சரிக்கை
இதேவேளை, தெற்கு மற்றும் மேல் மாகாணங்களில் பல பகுதிகளில் விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கையை மூன்றாம் கட்டத்துக்கு உயர்த்தியுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் அறிவித்துள்ளது.
இதன்படி காலி மாவட்டத்தில் எல்பிட்டிய, இமதுவ, நாகொட, யக்கலமுல்ல, களுத்துறை மாவட்டத்தில் இங்கிரிய, வலலவிட்ட, மத்துகம, மாத்தறை
மாவட்டத்தில் பிடபெத்தர, அக்குரஸ்ஸ, ஹக்மன ஆகிய பகுதிகளும் எச்சரிக்கைக்குரிய பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன், மாத்தறையின் பிரதேசங்கள் மக்கள் வெளியேற்றப்பட வேண்டிய பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
- புத்தாண்டு காலத்தில் இலங்கை 1 பில்லியன் வருவாய்
- புத்தாண்டில் இருவர் படுகொலை
- புத்தாண்டு திரும்பும் பயணச் சேவைகள் இன்று தொடங்குகின்றன
- புட்டால சாலை விபத்தில் முச்சக்கர வண்டி ஓட்டுநர் பலி
- கடந்த காலத் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டோம் நாமல்
- 200க்கும் மேற்பட்ட ஈரானிய கடற்படை வீரர்கள் இலங்கையிலிருந்து புறப்பட்டனர்
- யாழில் சடலம் மீட்பு
- இன்று வரையறுக்கப்பட்ட பேருந்து மற்றும் தொடர்வண்டி சேவைகள்
- புலிகள் ஆயுதக் கிடங்கில் வீழ்ந்த அனுரா
- பண்டிகைக் காலத்தில் சாலை விபத்து மரணங்கள்
7 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை
7 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை
சீரற்ற வானிலை காரணமாக 7 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை தெரிவித்துள்ளது.
கண்டி, காலி, ஹம்பாந்தோட்டை , களுத்துறை , கேகாலை , மாத்தறை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- லெபனானில் இஸ்ரேலிய இராணுவ நிலையைத் தாக்க ஹிஸ்புல்லா முயற்சிby நிருபர் காவலன்
- தென் கொரியா 270 மில்லியன் பீப்பாய் எண்ணெயைப் பெற்றுள்ளதுby நிருபர் காவலன்
- புத்தாண்டு காலத்தில் இலங்கை 1 பில்லியன் வருவாய்by நிருபர் காவலன்
- புத்தாண்டில் இருவர் படுகொலைby நிருபர் காவலன்
- புத்தாண்டு திரும்பும் பயணச் சேவைகள் இன்று தொடங்குகின்றனby நிருபர் காவலன்
மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு
மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் நாளை (09) அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதேபோல், ஐந்து மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்பு மேலும் நீடிக்கப்படுவதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், சில நாட்களாக நாட்டின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
கடந்த 24 மணித்தியாலங்களில் கேகாலை, மொரலிய ஒய பிரதேசத்தில் 114.3 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.
மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு
மழையுடன் புளத்சிங்கள சிறிய ஆறு பெருக்கெடுத்து ஓடுவதால் பரகொட, நாலியத்த, தம்பல போன்ற பிரதேசங்களில் தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் காரணமாக புளத்சிங்கள மோல்காவ பிரதான வீதியின் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
வெள்ளம் மற்றும் மண்சரிவு அபாயம் காரணமாக புளத்சிங்கள ஹல்வதுர தமிழ் வித்தியாலயம் , பரகொட கிதுலேகொட கனிஷ்ட வித்தியாலயம் மற்றும் இஹலவெல்கம கனிஷ்ட வித்தியாலயம் இன்றும் மூடப்பட்டுள்ளன
- லெபனானில் இஸ்ரேலிய இராணுவ நிலையைத் தாக்க ஹிஸ்புல்லா முயற்சிby நிருபர் காவலன்
- தென் கொரியா 270 மில்லியன் பீப்பாய் எண்ணெயைப் பெற்றுள்ளதுby நிருபர் காவலன்
- புத்தாண்டு காலத்தில் இலங்கை 1 பில்லியன் வருவாய்by நிருபர் காவலன்
- புத்தாண்டில் இருவர் படுகொலைby நிருபர் காவலன்
- புத்தாண்டு திரும்பும் பயணச் சேவைகள் இன்று தொடங்குகின்றனby நிருபர் காவலன்
தியகல நோட்டன் வீதியில் மண்சரிவு
தியகல நோட்டன் வீதியில் மண்சரிவு
மத்திய மலை நாட்டில் கடந்த சில தினங்களாக சீரற்ற வானிலை நிலவி வருகிறது. தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக பல இடங்களில் மண்சர்வு அபாயம் ஏற்பட்டுள்ளது.
நேற்று (27) காலை முதல் நோட்டன் பகுதிக்கு பெய்து வரும் தொடர் மழை காரணமாக நோட்டன் தியகல பிரதான வீதியில் தியகல பகுதியில் இருந்து சுமார் ஒன்றரை கிலோமீற்றர் தொலைவில் மண்சரிவு ஏற்பட்டு பொது போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளது.
வீதியில் வீழ்ந்துள்ள மண் மற்றும் கற்களை அகற்றுவதற்கு வீதி போக்குவரத்து அதிகார சபையின் ஊழியர்களால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன.
காலை முதல் தொடச்சியாக மழை பெய்து வருவதானால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளாகியுள்ளன. தொடர் மழை காரணமாக நடை பாதை வரத்தகமும் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக நடை பாதை வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
மழையுடன் ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் கலுகல, பிட்டவல, நானுஓயா, கினிகத்தேனை, கடவல, வட்டவளை தியகல, ஹட்டன் உள்ளிட்ட பிரதேசங்களிலும் ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியில் குடாஓயா
கொட்டகலை, தலவாக்கலை, சென்கிளையார், நானுஓயா, ரதல்ல ஆகிய பகுதிகளில் மழையுடன் அடிக்கடி பனி மூட்டம் நிகழ்வதனால் இந்த வீதிகளை
பயன்படுத்தும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என போக்குவரத்து பொலிஸார் சாரதிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.
தொடர்ந்து நுவரெலியா மாவட்டத்தில் பல பிரதேசங்களுக்கு மழை பெய்து வருவதனால் பல இடங்களில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளன.
இதனால் மண் மேடுகளுக்கு மலைகளுக்கும் சமீபமாக வாழும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு இடர் முகாமைத்து மத்திய நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது.
மண்சரிவு அபாய எச்சரிக்கை
இலங்கையில் பதுளை, காலி மற்றும் களுத்துறை ஆகிய பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது .
சீரரற்ற காலநிலை காரணமாக இந்த எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது .குறித்த பகுதியில் வசிக்கும் மக்களுக்கு அறிவுறுத்தல் விடுக்க பட்ட நிலையில் ,பலர் அங்கிருந்து அகன்று ,பிற பகுதிகளுக்கு சென்றுள்ளனர் என தெரிவிக்க படுகிறது .
மண்சரிவு அபாய எச்சரிக்கை
மண்சரிவு அபாய எச்சரிக்கை
பதுளை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் விடுத்துள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, பதுளை மாவட்டத்தின் ஹல்துமுல்ல பிரதேச செயலாளர் பிரிவுக்கும், இரத்தினபுரி மாவட்டத்தின் எலபாத, இரத்தினபுரி மற்றும் நிவித்திகல ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் இன்று (09) மாலை 5.30 வரை இந்த மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த மாவட்டங்களில் மண்சரிவு அபாயம் ஏற்படக்கூடிய பகுதிகளில் வசிப்போர் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்
மண் சரிந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் மரணம்
மண் சரிந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் மரணம்
கண்டி பகுதியில் வீடொன்று மண்சரிவில் சிக்கியதால் அவ்வேளை அதற்குள் இருந்த இருவர் பலியாகியுள்ளனர் .
சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 18 மற்றும் 19 வயதை சேந்த இருவர் பலியாகியுள்ளனர் .
மேலும் ஒருவர் காயமடைந்துள்ளனர் .
4 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை
4 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை
இலங்கையின் நான்கு மாவாட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது .
இவ்வாறு அபாய எச்சரிக்கை கண்டி, நுவரெலியா குருநாகல், மாத்தளை, ஆகிய பகுதிகளுக்கு விடுக்க பட்டுள்ளது .
இங்கு வசிக்கும் மக்கள் மிக எச்சரிக்கையாக இருக்கும்படி வேண்ட பட்டுள்ளது ..
மண் சரிவு அபாய எச்சரிக்கை – மக்களை எச்சரிக்கையாக இருக்கும்படி வேண்டுதல்
மண் சரிவு அபாய எச்சரிக்கை – மக்களை எச்சரிக்கையாக இருக்கும்படி வேண்டுதல்
இலங்கையில் மக்களுக்கு மண் சரிவு அபாயம், தொடர்பிலான அவசரகால எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது .
சீரற்ற காலநிலை காரணமாக ,பொழிந்து வரும் மழையால் ,இந்த மண் சரிவு அபாய எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது .
இந்த மண்சரிவு அபாயங்கள் நிறைந்த பகுதியாக, மாத்தளை ,இரத்தினபுரி கேகாலை, கண்டி, என்பன அறிவிக்க பட்டுள்ளன .
இவ்வேளை இந்த மக்களை மிகவும் ,எச்சரிக்கியாக இருக்கும், படி மீளவும் வேண்டுதல் விடுக்க பட்டுள்ளது.
மக்களுக்கு அவசர எச்சரிக்கை
மக்களுக்கு அவசர எச்சரிக்கை
வெள்ளம் மற்றும் மண்சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்கள் தொடர்பில் விடுக்கப்படும் ஆலோசனைகளை முறையாக கடைப்பிடிக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
அனர்த்தங்கள் நிகழுமாயின் அதுபற்றி துரித தொலை பேசி இலக்கத்தின் ஊடாக நிலையத்திற்கு அறிவிக்குமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
துரித தொலைபேசி இலக்கம் 117 என்பதாகும்.
10 மாவட்டங்களைச் சேரந்;த 65 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்டுள்ளதாக .
அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.
எட்டு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை
நாட்டின் எட்டு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பு, காலி, களுத்துறை, நுவரெலியா, மாத்தறை மாவட்டங்களில் வசிக்கும் மக்கள் இதுபற்றி எச்சரிக்கையாக இருப்பது அவசியமாகும்.
கேகாலை மாவட்டத்தின் தெஹியோவிட்ட, புளத்கொஹுபிட்டிய, வரக்காபொல ஆகிய நகரங்களுக்கும், மாத்தறை மாவட்டத்தின் கொட்டபொல, பிட்டபெத்தர ஆகிய பகுதிகளுக்கும் இரண்டாம் கட்ட மண்சரிவு எச்சரிக்கை அறிவித்தல்
விடுக்கப்பட்டுள்ளது. இரத்தினபுரி மாவட்டத்தின் கிரி-அல்ல, பெல்மடுல்ல, அயகம, நிவித்திகல ஆகிய பிரதேசங்களிலும் மண்சரிவு அபாயம் காணப்படுகிறது.
இரத்தினபுரி மாவட்டத்தின் அலபாத்த, கலவான, குருவிட்ட, எஹலியகொட ஆகிய நகரங்களுக்கு மண்சரிவு தொடர்பான சிவப்பு எச்சரிக்கை அறிவித்தல்
விடுக்கப்பட்டுள்ளது. மண்சரிவு பற்றிய அறிகுறிகள் தென்படுமாயின் அங்குள்ளவர்கள் உடனடியாக பாதுகாப்பான பகுதிகளுக்குச் செல்வது அவசியமாகும். இதுபற்றிய
மேலதிக தகவல்களை 117 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ள முடியும்.
நாட்டின் பல்வேறு ஆறுகளினதும் நீர்மட்டம் அதிகரித்திருக்கிறது. மாதுலுஓயா, குடாகங்கை என்பனவற்றின் நீர்மட்டம் அதிகரித்துள்ளமையால் பத்தேகம, வெலிவிட்ட
, நியாமகம, நெலுவ, அக்மீமன, நாகொட, அல்பிட்டிய, போபே, போத்தல ஆகிய இடங்களின் தாழ்நிலப் பிரதேசங்களில் சிறு வெள்ளம் ஏற்படலாம். நில்வளா கங்கை – அளுத்கம – கல்ஹாகொட ஆகிய பகுதிகளில் பெருக்கெடுக்கலாம்.
குக்குலே கங்கை, தெதுறுஓயா ஆகிய நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளமையால் பிரதேச வாசிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென்று திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. இதேவேளை,
நாட்டில் தற்சமயம் நிலவும் மழையினால் கடல் பிரதேசம் கொந்தழிப்பாக இருக்கும் எனவும் இதனால் கடலுக்குச் செல்வோர் எச்சரிக்கையாக
இருக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
மண்சரிவு அபாயம் ஆறு மாவாட்டங்களுக்கு எச்சரிக்கை
மண்சரிவு அபாயம் ஆறு மாவாட்டங்களுக்கு எச்சரிக்கை
இலங்கையில் நிகழ்கால கலாநிலை காரணமாக ஆறு மாவாட்டங்களுக்கு மண்சரிவு
அபாயம் ஏற்படுத்தியுள்ளதாக அறிவிக்க பட்டுள்ளது
இதன் பிரகாரம் Ratnapura, Kalutara, Kandy, Kegalle, Matara and Nuwara Eliya. பகுதியில் இந்த
அசம்பாவிதங்கள் இடம்பெறலாம் என்பதாக தெரிவிக்க பட்டுள்ளது
மலையகத்தில் மண்சரிவு – வீடுகள் சேதம்
மத்திய மைல நாட்டின் ஹட்டன், நோட்டன், நோர்வூட், பொகவந்தலாவை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில தினங்களாக கனத்த மழை பெய்து வருகிறது.
நோட்டன் பகுதியில் நேற்று இரவு பெய்த கடும் மழை காரணமாக இன்று (11) அதிகாலை மூன்று மணியளவில் நோட்டன் எண்ணை நிரப்பு நிலையம் ஒன்றுக்கு மேலிருந்து பாரிய கட்டடம் ஒன்று சரிந்து வீழ்ந்து எண்ணை நிரப்பு நிலையத்தின் அமைக்கப்பட்டிருந்த கட்டடம் ஒன்று பகுதியளவில் சேதமாகியுள்ளது.
குறித்த கட்டத்தினுள் நிறுத்தப்பட்டிருந்து இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஒரு முச்சக்கரவண்டி, ஒரு வேன் ஆகியன சேதமடைந்துள்ளன.
மண்சரிவு ஏற்படும் போது அதில் எவரும் இல்லாது இருந்ததன் காரணமாக உயர்ச்சேதம் ஏற்படவில்லை.
இதே நேரம் நோட்டன் தியகல பிரதான வீதியில் மண் சரிவுகள் ஏற்பட்டதன் காரணமாக அவ்வீதியூடான போக்குவரத்து பல மணித்தியாலங்கள் துண்டிக்கப்பட்டன.
இன்று காலை வீதி போக்குவரத்து அதிகார சபையினால் வீதியில் கொட்டிக்கிடந்த பாரிய கற்கள் மற்றும் மண்ணை அகற்றியதன் காரணமாக போக்குவரத்து வழமைக்கு திரும்பியுள்ளது.
குறித்த வீதியில் மேலும் பல இடங்களில் மண்சரிவு
ஏற்பட்டுள்ளதனால் அவ்விடங்களில் ஒரு வழி போக்குவரத்தே இடம்பெற்று வருகின்றன.
மண்சரிவு அனர்த்த எச்சரிக்கை
மண்சரிவு அனர்த்த எச்சரிக்கை
நாட்டில் 8 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.
கண்டி, நுவரெலியா. மாத்தளை, பதுளை, இரத்தினபுரி, களுத்துறைஇ காலி மாவட்டங்களில் வசிக்கும் மக்கள் இததொடர்பில் அவதானத்துடன் செயல்பட வேண்டுமென்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைம் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
தற்சமயம் நிலவும் சீரற்ற காலநிலையினால் மலையக பகுதிகளில் மண்சரிவு, மண்மேடுகள் சரிவு போன்ற அனர்த்தங்கள் இடம்பெறுவதற்கான அறிகுறிகள் பற்றி எச்சரிக்கையாக இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
இவ்வாறான அறிகுறிகள் தென்பட்டால் உரிய பகுதியை விட்டு பாதுகாப்பான பகுதிகளுக்குச் செல்வது அவசியமாகும் என்றும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
பொலிசாரும் முப்படையினரும் மாவட்ட பிரதேச செயலகங்களும் அனர்த்த நிலையை எதிர்கொள்ள தயார் நிலையிலுள்ளன
7 மாவட்டங்களில் மண்சரிவு எச்சரிக்கை
7 மாவட்டங்களில் மண்சரிவு எச்சரிக்கை
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் கொழும்பு ,காலி ,களுத்துறை ,கேகாலை , மாத்தறை ,நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய 7 மாவட்டங்களில் மண்சரிவு அனர்த்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
கொழும்பு மாவட்டத்தின் பாதுக்க, காலி மாவட்டத்தில் எல்பிட்டிய மற்றும் நெலுவ போன்ற பிரதேசங்கள் இதில் அடங்குகின்றன.
கேகாலை மாவட்டத்தின் தெஹியோவிற்ற, மாத்தறை மாவட்டத்தின் பிட்டபெத்த, நுவரெலியா மாவட்டத்தில் அம்பகமுவ, இரத்தினபுரி மாவட்டத்தில் கொலன்ன, எலபாத்த, எஹெலியகொட
,கஹவத்த, குருவிற்ற, நிவித்திகல, கலவான போன்ற பிரதேசங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, சீரற்ற காலநிலையினால் சில பிரதேசங்களில் ஓரளவு வெள்ளம் ஏற்பட்டிருக்கின்றது.
கொழும்பு, கண்டி, நுவரெலியா, இரத்தினபுரி, காலி, கிளிநொச்சி போன்ற மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் இதனால் பாதிக்கப்பட்ட்டுள்ளனர்.
5 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை
5 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை
காலி, களுத்துறை, கேகாலை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் உள்ள பல பிரதேச செயலக பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட மாவட்டங்களில் உள்ள 10 பிரதேச செயலக பிரிவுகளுக்கு முதல் கட்ட அபாய எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பு தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், களனி, களு, ஜின் மற்றும் நில்வளா கங்கைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதாகவும் பல பகுதிகளில் ஆறுகள் பெருக்கெடுத்துள்ளதாகவும் நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக, ஆற்றின் இருபுறமும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் வெள்ள நிலைமை குறித்து மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
களனி கங்கையின் மேல் மற்றும் மத்திய பகுதிகளில் இதுவரை 150 மி.மீ க்கும் அதிகமான மழை பெய்துள்ளது.
இதன் காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில் தெஹியோவிட, ருவான்வெல்லை, சீதாவத, தொம்பே, கடுவலை, பியகம, கொலன்னாவை மற்றும் வத்தளை பிரதேச செயலகங்களில் உள்ள களனி கங்கையின் தாழ்வான பகுதிகளில் சிறிய வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மண்சரிவு – மூவரைக்காணவில்லை
மண்சரிவு – மூவரைக்காணவில்லை
மண்சரிவு மற்றும் மண்மேடு சரிந்து வீழ்ந்த்தினால் இரத்தினபுரி மாவட்டத்தில் மூவர் காணமற் போயிருப்பதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இன்று அதிகாலை 4.00 மணிக்கு இதுதொடர்பான தகவல் பதிவானதாக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இரத்தினபுரி எல்லே விகாரைக்கு அருகாமையில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது. மழை தொடர்ந்து பெய்யக்கூடும் என்பதினால் இவ்வாறான அனர்த்தங்கள் தொடர்பில் பொது மக்கள்
அவதானத்துடன் செயல்பட வேணடும் என்று இடர்முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதி பணிப்பாளர் பிரதிப் கொடிப்பிலி பொது மக்களுக்கு அறிவித்துள்ளார்.
மண்சரிவு அபாயம் – மக்களுக்கு எச்சரிக்கை
மண்சரிவு அபாயம் – மக்களுக்கு எச்சரிக்கை
இலங்கையின் ஏழு மாவட்டங்களில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக மண் சரிவு
ஏற்படலாம் என்பதால் மக்களுக்களு எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது
நுவரெலியா இரத்தினரபுரி உள்ளிட்ட பகுதிகள் அதிகம் பாதிக்க படலாம் என தெரிவிக்க படுகிறது
மண்சரிவு அபாயம் மக்களுக்கு எச்சரிக்கை
மண்சரிவு அபாயம் மக்களுக்கு எச்சரிக்கை
நாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காணமாக மண் சாய்வு அபாயம் ஏற்பட்டுள்ளது
கேகல ,களுத்துறை ,காலி,இரத்தினபுரி பகுதியில் உள்ள மக்களுக்கு இந்த பாய எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது
மண்சரிவு அபாயம் – மக்களுக்கு எச்சரிக்கை
மண்சரிவு அபாயம் – மக்களுக்கு எச்சரிக்கை
இலங்கையில் கேகாலை மாவட்டத்தில் மண் சரிவு அபாயம் உள்ளதாக மக்களுக்கு எச்சரிக்கை
விடுக்க பட்டுள்ளது ,மலை பகுதிகளை அண்மித்த வீடுகளுக்கு இதனால் பெரும் சேதங்கள்
ஏற்படலாம் என எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது
மேற்படி அறிவிப்பால் அங்கு பதட்டம் நிலவுகிறது







































