Tag: பணம்
பொலிஸாருக்கு தகவல் கொடுத்தால் பொதுமக்களுக்கு பணம் பரிசு
பொலிஸாருக்கு தகவல் கொடுத்தால் பொதுமக்களுக்கு பணம் பரிசு
திட்டமிட்ட குற்றச் செயல்கள் மற்றும் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபடும் நபர்கள் பயன்படுத்திய துப்பாக்கிகள் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு
ரொக்கப் பரிசு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார்.
ரி56 துப்பாக்கியுடன் சந்தேக நபர் ஒருவரை கைது செய்வதற்கு தேவையான தகவல்களை வழங்கும் எவருக்கும், 5 இலட்சம் ரூபா ரொக்கப் பரிசாக வழங்குவதுடன் மேலும் பல பரிசுகளையும் வழங்குமாறு பொலிஸ் மா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
இது தொடர்பில் பொலிஸ் ஊடக பிரிவு விசேட அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வட்டியில்லா கல்விக்கடனை தொடர்ந்தும் வழங்க தீர்மானம்
வட்டியில்லா கல்விக்கடனை தொடர்ந்தும் வழங்க தீர்மானம்
கே. ஐ. யு மற்றும் ஹொரைஸன் தனியார் பல்கலைக்கழகங்களில் கல்வி பயிலும் பிள்ளைகளுக்கு அரச வங்கிகளினால் வழங்கப்படும் வட்டியில்லாக் கடன் வசதிகளை தொடர்ந்தும் வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் சுசில் பிரேம்ஜயந்த இன்று (08) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச முன்வைத்த வாய் மொழி மூலமான கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அதற்காக அமைச்சரவை தற்போது தயாராகி வருவதாகவும், அதற்கான வேலைகள் எதிர்வரும் இரண்டு மூன்று வாரங்களுக்குள் பூர்த்தி செய்யப்பட்டு ஒப்புதல் பெற்றுக்கொள்வதுடன் தற்போது அந்த நிறுவனங்களில் கல்வி பயிலும் மாணவர்கள் தொடர்ந்தும் கல்விச் செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு சந்தர்ப்பத்தை வழங்குமாறு சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர்; தற்போதைய ஜனாதிபதி 2017ஆம் ஆண்டில் இக்கடன் யோசனை முறையை ஆரம்பித்தார். ஏழாவது குழுவினர் இம்முறை உள்ளெடுக்கப்படுவர்.
வட்டியில்லா கல்விக்கடனை தொடர்ந்தும் வழங்க தீர்மானம்
தற்போது வரை 6 குழுக்கள் நிறைவு செய்துள்ளன. அண்ணளவாக 5000 பேரளவில் தனியார் பல்கலைக்கழகங்களில் வட்டியில்லாக் கடன் வசதிகளை இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கிகளின் ஊடாக பிள்ளைகளுக்கு பட்டம் பெறுவதற்கு வழங்கப்பட்டது.
இந்தப் பிரச்சினையை இதற்கு முன்னரும் எதிர்கட்சித் தலைவர் முன்வைத்தாலும் அதன் பின்னர் ஜனாதிபதி செயலகத்தில் கலந்துரையாடல் ஒன்று இடமெபெற்றது.
ஜனாதிபதியின் செயலாளரும், இலங்கை வங்கியின் பிரதி பிரதம முகாமையாளர் உட்பட பலரும், திறைசேரி அதிகாரிகளும், இணைந்து இதற்கான தீர்வைப் பெற்றுத் தந்தார்கள். இந்நிறுவனங்களுக்கு புதிதாக உள்ளெடுக்கப்பட்ட குழுவிற்கு கடன் வழங்காமை தாமதமாவதற்கு பிரதான காரணம் முதலாவது மற்றும் இரண்டாவது குழுவில் 200 பேரளவில் கடனை மீளச் செலுத்தாதிருப்பதாகும்.
முதலாவது மற்றும் இரண்டாவது குழுக்கள் பட்டம் முடியும் போது கொரோனாத் தொற்றுப் பிரச்சினை ஏற்பட்டதாக நான் இக்கலந்துரையாடலில் தெளிவுபடுத்தினேன்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக அவர்களுக்கு பல்வேறு சிக்கல்கள் காணப்பட்டன. 200 என்றால் சராசரியாக பெரிய எண்ணிக்கை அல்ல. வங்கியின் மீளப்பெற்றுக்கொள்ளும் திணைக்களத்தினால் இது தொடர்பாக அறவீட்டைப் பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புதிதாக பிணையாளிகள் இருவர் வங்கியினால் கோரி கடன் பணத்தை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இக்கடன் நிதி தொடர்பாக பூர்த்தி செய்து கடந்த வாரத்தில் தகவல் அனுப்பப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சில் தனியார் பல்கலைக்கழகங்களின் மேலதிக செயலாளருக்கு ஊடக இது தொடர்பாக சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களுக்குத் தெரியப்படுத்துவதாக அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.
கோடி மோசடி பணம் திருடிய 500 கோடி தம்பதிகள் கைது
கோடி மோசடி பணம் திருடிய 500 கோடி தம்பதிகள் கைது
கோடி மோசடி பணம் திருட்டு அம்பலம் ,500 கோடி கொள்ளையடித்த தம்பதிகள் கைதுசெய்ய பட்டுள்ளனர் .
பிரமிட் திட்டத்தின் கீழ் இந்த மோசடியில் தம்பதிகள் ஈடுபட்டனர் என குற்றம் சாட்ட பட்டுள்ளது .
மோசடி பணம் கொள்ளையில் ஈடுபட்ட தம்பதிகள் மறைந்திருந்த நிலையில் இவர் கைது செய்ய பட்டுள்ளனர் .
இந்த மோசடி தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்க பட்ட நிலையில் மேலும் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என எதிர் பார்க்க படுகிறது .
மக்களின் பணத்தில் எம்.பிக்களுக்கு இலவச சவாரி
மக்களின் பணத்தில் எம்.பிக்களுக்கு இலவச சவாரி
இலங்கை துறைமுக அதிகார சபையினால் இரண்டு அகழ்வாராய்ச்சிக் கப்பல்களில் வரி செலுத்துவோரின் செலவில் ஆளும்கட்சி பாராளுமன்ற
உறுப்பினர்களுக்கு கடந்த செவ்வாய்க்கிழமை இலவசமாக சுற்றுப்பயணம் வழங்கப்பட்டுள்ளது.
25க்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் இந்த இலவச களிப்பு சவாரியில் இணைந்துள்ளனர், இது
இலங்கை துறைமுக அதிகாரசபைக்கு (SLPA) கிட்டத்தட்ட ரூ. 5 மில்லியன் செலவாகும் என அகில இலங்கை பொது துறைமுக ஊழியர் சங்கத்தின் பிரதம செயலாளர் நிரோஷன் கோரகனகே தெரிவித்தார்.
மக்களின் பணத்தில் எம்.பிக்களுக்கு இலவச சவாரி
இருப்பினும், இரண்டு கப்பல்களுக்கான எரிபொருளுக்கான மொத்த செலவு சுமார் ரூ. 300, 000 எனவும் இந்த கப்பல்கள் வெளியில் இல்லாமல் துறைமுகப்
பகுதிக்குள் மட்டும் சவாரி சென்றதால் எரிபொருளுக்கான கட்டணத்தை மட்டுமே SLPA செலுத்தியது. எனவே செலவு குறைவாக இருந்தது, நம்பகமான SLPA வட்டாரங்கள் தெரிவித்தன.
வெளிநாடுகளில் இருந்து இலங்கையர்கள் அனுப்பிய பணம்
வெளிநாடுகளில் இருந்து இலங்கையர்கள் அனுப்பிய பணம்
2023 ஆம் ஆண்டில் வெளிநாடுகளில் உள்ள இலங்கை ஊழியர்களால் டிசம்பர் மாதம் இலங்கைக்கு அனுப்பப்பட்ட பணம் 569.7 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
2023 இல் வெளிநாடுகளில் உள்ள இலங்கை ஊழியர்களால் இலங்கைக்கு அனுப்பப்பட்ட மொத்த பணம் 5,969.6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 57.5% அதிகரிப்பு என இலங்கை மத்திய வங்கியின் தரவுகள் தெரிவிக்கின்றன
18 வயதிற்கு மேற்பட்டவர்கள் வரி இலக்கத்தை பெறும் விதம்
18 வயதிற்கு மேற்பட்டவர்கள் வரி இலக்கத்தை பெறும் விதம்
18 வயதிற்கு மேற்பட்டவர்கள் வரி இலக்கத்தை பெறும் விதம் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் பதிவுசெய்தல் மற்றும் வரி இலக்கம் (TIN) பெறுதல் போன்றவற்றை ஒன்லைனிலும், உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்கு பிரவேசிப்பதன் மூலமும் மேற்கொள்ளலாம் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த வரி இலக்கத்தை பெறுவதற்கான விண்ணப்பத்தை உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் இணையத்தளத்திலிருந்தும் பதிவிறக்கம் செய்து அதன் நகலை அச்சிடலாம். எனவே,
விண்ணப்பத்தைப் பெறுவதற்கு உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை என்பதுடன் திணைக்களத்தின் இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ள முடியும்.
வரி இலக்கத்திற்கான விண்ணப்பத்தை உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் www.ird.gov.lk என்ற இணையத்தளத்திற்குச் சென்று வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவதன் மூலம் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்கு சமர்ப்பிக்க முடியும். கோரிக்கையை பரிசீலித்த பிறகு,
18 வயதிற்கு மேற்பட்டவர்கள் வரி இலக்கத்தை பெறும் விதம்
வரி செலுத்துவோரின் அடையாள எண் (TIN) மற்றும் ஒரு முறை கடவுச்சொல் (PIN) ஆகியவற்றைக் குறிப்பிடும் சான்றிதழ் சம்பந்தப்பட்ட நபர் வழங்கிய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும் என்று உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்குச் சென்று வரி இலக்கத்தை பெறும்போது, அதற்கான பதிவு விண்ணப்பத்தை பூர்த்தி செய்து உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் பிரதான அலுவலகத்தின் 2வது மாடியில் உள்ள முதன்மைப் பதிவுப் பிரிவில் அல்லது அருகில் உள்ள உள்நாட்டு இறைவரித்
திணைக்களத்தின் அலுவலகத்தில் சமர்ப்பிக்கலாம். வரி இலக்கத்தை ஒன்லைனில் பெறுவதற்கு அதாவது இ-சேவை மூலம் பெறுவதற்கு தேசிய அடையாள அட்டையின் இருபுறமும் ஸ்கேன் செய்து PDF நகலை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
தேசிய அடையாள அட்டையில் உள்ள முகவரிக்கும் தற்போதைய வசிப்பிட முகவரிக்கும் வித்தியாசம் இருப்பின் அதனை நிரூபிக்கும் வகையில் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஆவணத்தின் நகலை பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றும் உள்நாட்டு இறைவரி திணைக்களம் அறிவித்துள்ளது. 2024 ஜனவரி
01ஆம் முதல், 18 வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொரு நபரும் வரி இலக்கத்தை பெறுவதை அரசாங்கம் கட்டாயமாக்கியுள்ளது.
இந்த இலக்கத்தை எடுத்துக் கொண்டால், ஒருவர் வரி செலுத்த வேண்டும் என்ற கட்டாயம் இல்லை எனவும், ஆண்டுக்கு 12 லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்டினால் மாத்திரமே வரி செலுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
50 000 ரூபா தண்டப்பணம் எப்போது அறவிடப்படும்
50 000 ரூபா தண்டப்பணம் எப்போது அறவிடப்படும்
வரி இலக்கத்தை பெற்றுக்கொள்ளும் நடைமுறையை பின்பற்றாதவர்களிடம் இருந்து 50,000 ரூபா தண்டப்பணம் அறவிடுவதற்கு சட்ட ஏற்பாடு உள்ள
போதிலும், அது தற்போதைக்கு நடைமுறைப்படுத்தப்படாது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
மேலும், 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் வரி எண் பெறுவதை கட்டாயமாக்க அரசு நடவடிக்கை எடுத்திருந்தது.
வரிக் கோப்பைத் திறந்து எண்ணைப் பெறுவது கட்டாயம் என்றாலும், அந்த மக்கள் அனைவரும் வரி செலுத்த வேண்டும் என்று அர்த்தமல்ல, தற்போது, மாதத்திற்கு 100,000 ரூபாய்க்கு மேல் நிகர வருமானம் உள்ளவர்கள் மட்டுமே வரி செலுத்த வேண்டும் என்றார்.
80 பில்லியன் கடனை செலுத்தாத உயர்மட்ட வர்த்தகர்கள்
80 பில்லியன் கடனை செலுத்தாத உயர்மட்ட வர்த்தகர்கள் இலங்கையில் உள்ள இரண்டு பிரதான அரச வங்கிகளில் கடன் பெற்ற பத்து உயர்மட்ட வர்த்தக வாடிக்கையாளர்கள் 80 பில்லியன் ரூபா கடனை செலுத்தத் தவறியுள்ளதாக தெரிவிப்பு .
இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரஞ்சன் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.
80 பில்லியன் கடனை செலுத்தாத உயர்மட்ட வர்த்தகர்கள்
அரசியல் பாதுகாப்பு பெறும் அந்த பத்து வாடிக்கையாளர்களை நாட்டிற்கு வெளிப்படுத்த பாராளுமன்றம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்
என கொழும்பு விஹார மகாதேவி பூங்காவில் நேற்று (02) நடைபெற்ற மாநாட்டில் அவர் குறிப்பிட்டார்.
மேலும் கருத்துத் தெரிவித்த இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர், “இந்த வங்கிகள் நாட்டின் மறுமுனையில் உள்ள விவசாயிகள் முதல் கொழும்பில் உள்ள பெரிய வியாபாரிகள் வரை கடன் கொடுத்துள்ளன.
கடனை செலுத்துவது கடன் வாங்கியவரின் பொறுப்பு.
ஆனால் சிறப்பாக வர்த்தகம் செய்து அரசியல் பாதுகாப்பு பெற்று 10 பேர் தாம் ஈட்டிய பணத்தை வெளிநாடுகளில் வைப்பு செய்து இந்த இரண்டு வங்கிகளையும் புறக்கணித்து வருகின்றனர்.
இந்த வங்கிகளில் இலங்கை வங்கிக்கு மட்டும் அவர்கள் செலுத்த வேண்டிய தொகை 50 பில்லியன் என்பதோடு, மக்கள் வங்கிக்கு 30 பில்லியன் கடன் செலுத்த வேண்டும்.
வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளை கொண்டு வரும் பெருமக்களே இந்த பணத்தை வசூலியுங்கள்.
இது மக்களின் பணம். முடிந்தால் அந்த 10 பேரின் பெயர்களை பாராளுமன்றத்தில் வெளிப்படுத்துங்கள்.
இல்லையென்றால் இந்த நாட்டின், பொது நலனுக்காக நாம் அதனை வெளிப்படுத்துவோம். அதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்”என்றார்.
- ரஷ்ய சுகாதார அமைச்சரின் இலங்கை விஜயம் நிறைவு
- உரம் கொள்வனவில் அனுரா அரசு மோசடி
- நடிகர் ஜீவா தந்தை சவுத்திரி மரணம்
- 200 000 இலஞ்சம் பெற்ற காவலர் கைது
- மாகாண சபை தேர்தல் நடக்கும் அனுரா
- விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த நாமல்
- இலங்கை மின்சார சபை முக்கிய அறிவிப்பு
- ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேனவுக்குப் பிணை
- தேர்தல் தோல்வி கண்ணீருடன் சீமான் வெளியிட்ட வீடியோ | Seeman Video about Election results 2026
- எரிபொருள் விலை உயர்வு பேரூந்துகள் திண்டாட்டம்
குடு சலிந்துவின் போதைப்பொருள் பணம் சிக்கிய விதம்
குடு சலிந்துவின் போதைப்பொருள் பணம் சிக்கிய விதம்
போதைப்பொருள் கடத்தல் மூலம் ஈட்டிய 5 கோடி ரூபாவுக்கும் அதிகமான பணத்துடன் சந்தேக நபர் ஒருவரையும் பிரதான போதைப்பொருள் வியாபாரி
ஒருவரின் தாயையும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
பண்டாரகம மற்றும் அலுபோமுல்ல பிரதேசங்களில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பண்டாரகம பிரதேசத்தில் உள்ள தனியார் வங்கிக் கணக்கில் வழமைக்கு மாறாக பணம் வரவு வைக்கப்பட்டுள்ளதையும் ஏடிஎம் இயந்திரங்களில் இருந்து அந்த பணம் விரைவாக எடுக்கப்படுவதை அவதானித்த விசாரணை
அதிகாரிகளால் ஆரம்பிக்கப்பட்ட விசாரணைக்கு அமைய 34 வயதான சந்தேக நபர் மற்றும் பிரதான கடத்தல்காரரின் 67 வயதான தாயாரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குடு சலிந்துவின் போதைப்பொருள் பணம் சிக்கிய விதம்
குடு சலிந்துவின் பண முகாமையாளர் என கருதப்படும் “லோகு முதலாலி” என அழைக்கப்படும் பிரதீப் நிஷாந்த என்ற சந்தேகபரே கைதாகியுள்ளார்.
முதற்கட்ட விசாரணையில் இவர், போதைப்பொருள் விற்பனை மூலம் ஈட்டிய பணத்தை வங்கி கணக்கில் வரவு வைப்பதாக தெரியவந்துள்ளது.
சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் தெரியவந்த தகவலின்படி, பொலிஸாரினால் கைப்பற்றப்பட்ட 5 கோடி ரூபாவிற்கும் அதிகமான பணத்தில் 3 கோடி ரூபாயானது, கட்டுமானத்தில் உள்ள வீட்டின் நீர் இறைக்கும் இயந்திரத்திற்கு அடியில் கொங்கிரீட் போட்டு சீல் வைக்கப்பட்டிருந்த இரகசிய அறையில் இருந்துள்ளது.
அத்துடன், அலுபோமுல்லையில் உள்ள கடத்தல்காரருக்குச் சொந்தமான வீடு ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, தற்போது குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் தடுப்பில் உள்ள ஒழுங்கமைக்கப்பட்ட
குற்றவாளியான குடு சலிந்துவின் பெயரில் வெளியிடப்பட்ட 21 வவுசார் ஆவணங்களையும் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த மோசடியில் ஈடுபட்ட முக்கிய சந்தேக நபரை கண்டுபிடிப்பதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்
- ரஷ்ய சுகாதார அமைச்சரின் இலங்கை விஜயம் நிறைவு
- உரம் கொள்வனவில் அனுரா அரசு மோசடி
- நான் ராஜினாமா செய்ய மாட்டேன் மம்தா பானர்ஜி
- நடிகர் ஜீவா தந்தை சவுத்திரி மரணம்
- பிரேசிலின் இராணுவப் போக்குவரத்து விமானங்களை வாங்கும் முதல் பிராந்திய நாடாக ஐக்கிய அரபு அமீரகம்
- ஐக்கிய அரபு அமீரக எண்ணெய் துறைமுகத் தாக்குதலை ‘ஏற்றுக்கொள்ள முடியாதது’ என இந்தியா கண்டனம்
- ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து 15000 பாகிஸ்தானியர்கள் கைது
- லெபனானில் மக்களை வெளியேற இஸ்ரேலிய இராணுவம் உத்தரவு
- 200 000 இலஞ்சம் பெற்ற காவலர் கைது
- மாகாண சபை தேர்தல் நடக்கும் அனுரா
யாழில் இடம்பெறும் பாரிய பண மோசடி
யாழில் இடம்பெறும் பாரிய பண மோசடி
வெளிநாடுகளுக்குச் செல்வதற்காகப் பணம் கொடுத்து ஏமாறும் சம்பவங்கள் யாழ்ப்பாணத்தில் அண்மைய நாள்களில் வெகுவாக அதிகரித்துள்ளன.
இது தொடர்பில் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று யாழ்ப்பாண மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியாட்சகர் ஜெகத் விஷாந்த தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கடந்த இரு தினங்களில் மட்டும் இவ்வாறான பண மோசடி தொடர்பான 7 முறைப்பாடுகள் யாழ்ப்பாண மாவட்ட விசேட குற்ற விசாரணைப் பிரிவில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
யாழில் இடம்பெறும் பாரிய பண மோசடி
அந்த முறைப்பாடுகளின் அடிப்படையில், வெளிநாடுகளுக்கு அனுப்புவதாகத் தெரிவித்து இரண்டரைக் கோடி ரூபா மோசடி செய்யப்பட்டுள்ளது.
வெளிநாடுகளுக்கு ஆட்களை அனுப்பும் முகவர்கள் என்று அறிமுகப்படுத்திக் கொள்பவர்களே மோசடியில் ஈடுபடுகின்றனர்.
சமூக வலைத்தளங்கள் மற்றும் வட்ஸ் அப் குழுக்களில் காணப்படும் விளம்பரங்களை நம்பியே பெரும்பாலானவர்கள் மோசடியாளர்களிடம் சிக்கியுள்ளனர்.
மோசடியாளர்கள் போலியான விசா ஆவணங்களைக் காட்டி நம்ப வைத்து ஏமாற்றியுள்ளனர்.
வெளிநாடுகளில் உள்ளவர்கள் இங்குள்ள உறவினர்களை அழைக்க முடியும் என்ற நடைமுறையைக் காட்டியும் பல மோசடிகள் நடந்துள்ளன.
முகவர்கள் என்று அறிமுகப்படுத்திக் கொள்பவர்கள் பல்வேறு காரணங்களைத் தெரிவித்து ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் பணம் கோரியுள்ளனர்.
இதற்கான பணம் பல தடவைகள் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்பட்டுள்ளது.
யாழில் இடம்பெறும் பாரிய பண மோசடி
ஒரு கட்டத்தில் முகவர்கள் என்று தங்களை அறிமுகப்படுத்திக் கொள்பவர்களின் தொடர்புகள் துண்டிக்கப்பட்டிருக்கின்றன.
யாழ்ப்பாண மாவட்டத்தில் இந்த மாதம் மட்டும் இவ்வாறான 10 முறைப்பாடுகள் யாழ்ப்பாண மாவட்ட விசேட குற்ற விசாரணைப் பிரிவில் பதிவாகியுள்ளன.
சுமார் 6 கோடி ரூபா வரையில் மோசடி செய்யப்பட்டுள்ளமை இந்த முறைப்பாடுகளின் அடிப்படையில் கண்டறியப்பட்டுள்ளது.
ஒவ்வொரு முறைப்பாட்டாளர்களும் பல லட்சங்களை மோசடியாளர்களிடம் இழந்துள்ளனர்.
சமூக வலைத்தளங்களிலும், குழுக்களிலும் பகிரப்படும் விளம்பரங்கள் தொடர்பாகப் பொதுமக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டும் என்றும்,
பயண முகவர்கள் என்று அறிமுகப்படுத்திக் கொள்பவர்கள் சட்டரீதியாகப் பதிவு செய்யப்பட்டவர்களா என்பதைப் பொதுமக்கள் உறுதிப்படுத்திக்
கொள்வது அவசியம் என்றும் யாழ்ப்பாண மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியாட்சகர் ஜெகத் விஷாந்த தெரிவித்துள்ளார்.
- ரஷ்ய சுகாதார அமைச்சரின் இலங்கை விஜயம் நிறைவு
- உரம் கொள்வனவில் அனுரா அரசு மோசடி
- நடிகர் ஜீவா தந்தை சவுத்திரி மரணம்
- 200 000 இலஞ்சம் பெற்ற காவலர் கைது
- மாகாண சபை தேர்தல் நடக்கும் அனுரா
- விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த நாமல்
- இலங்கை மின்சார சபை முக்கிய அறிவிப்பு
- ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேனவுக்குப் பிணை
- தேர்தல் தோல்வி கண்ணீருடன் சீமான் வெளியிட்ட வீடியோ | Seeman Video about Election results 2026
- எரிபொருள் விலை உயர்வு பேரூந்துகள் திண்டாட்டம்
பேரூந்து விபத்தில் பலியானவர்களுக்கு ஐந்து லட்சம் வழங்கும் ரணில்
பேரூந்து விபத்தில் பலியானவர்களுக்கு ஐந்து லட்சம் வழங்கும் ரணில்
இலங்கை கொள்ளுப்பிட்டி பகுதியில் பேரூந்து ஒன்றின் மீது மரம் முறிந்து வீழ்ந்தது ஐந்து பேர் பலியாகியுள்ளனர் .
இந்த பேரூந்து விபத்தில் பலியான ஒவ்வொருவருக்கும் ஐந்து லட்சம் வழங்கும் படி இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா பணித்துள்ளார் .
தேர்தலை மைய படுத்தி மக்களை தம்பக்கம் திசை திருப்ப ரணில் விக்கிரமசிங்க இந்த கண்துடைப்பு நாடகத்தை ஆடி வருகிறார் .
ஜெர்மன் ஊடகத்தில் சிக்கி திணறிய ரணில் விக்கிரமசிங்கா ,அடுத்து தமக்கு என்ன நடக்கும் என்பது நன்குணர்ந்துளளர் .
அதை மனதில் வைத்து இந்த கண்துடைப்பு நாடகத்தை அரங்கேற்றியுள்ளளார் ,என்பதை அவதானிக்க முடிகிறது .
- ரஷ்ய சுகாதார அமைச்சரின் இலங்கை விஜயம் நிறைவு
- உரம் கொள்வனவில் அனுரா அரசு மோசடி
- நடிகர் ஜீவா தந்தை சவுத்திரி மரணம்
- 200 000 இலஞ்சம் பெற்ற காவலர் கைது
- மாகாண சபை தேர்தல் நடக்கும் அனுரா
- விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த நாமல்
- இலங்கை மின்சார சபை முக்கிய அறிவிப்பு
- ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேனவுக்குப் பிணை
- தேர்தல் தோல்வி கண்ணீருடன் சீமான் வெளியிட்ட வீடியோ | Seeman Video about Election results 2026
- எரிபொருள் விலை உயர்வு பேரூந்துகள் திண்டாட்டம்
238.5 மில்லியன் பணத்தாள்கள் முற்றாக அழிக்கப்பட்டன
238.5 மில்லியன் பணத்தாள்கள் முற்றாக அழிக்கப்பட்டன
ரூபாய் 207.3 பில்லியன் பெறுமதியான 238.5 மில்லியன் சிதைக்கப்பட்ட அல்லது சேதமடைந்த பணத்தாள்கள் கடந்த வருடம் முற்றாக அழிக்கப்பட்டதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
தரமான மற்றும் சுத்தமான பணத்தாள்கள் நாட்டில் புழங்கப்படுவதை உறுதிப்படுத்துவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
அதேபோல் ரூ. 44.3 பில்லியன் பெறுமதியான 108.2 மில்லியன் சேதமடைந்த பணத்தாள்கள் 2021 இலும் அழிக்கப்பட்டதாக மத்திய வங்கியின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
- ரஷ்ய சுகாதார அமைச்சரின் இலங்கை விஜயம் நிறைவுby நிருபர் காவலன்
- உரம் கொள்வனவில் அனுரா அரசு மோசடிby நிருபர் காவலன்
- நடிகர் ஜீவா தந்தை சவுத்திரி மரணம்by நிருபர் காவலன்
- 200 000 இலஞ்சம் பெற்ற காவலர் கைதுby நிருபர் காவலன்
- மாகாண சபை தேர்தல் நடக்கும் அனுராby நிருபர் காவலன்
இறந்த பிச்சைக்காரர் பையில் 135.000 பணம்
இறந்த பிச்சைக்காரர் பையில் 135.000 பண
கடந்த வார இறுதியில் புத்தளம் – சிலாபம் வீதியில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த பிச்சைக்காரர் ஒருவரிடம் 1இலடசத்து 35 ஆயிரம் ரூபா பணம்
மற்றும் அவரது பெயரில் ஐந்து வங்கிக் கணக்கு புத்தகங்கள் இருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
புத்தளம் – சிலாபம் வீதியில் உள்ள அனவிலுந்தவ பகுதியில் கடந்த சனிக்கிழமை (05) மோட்டார் சைக்கிளில் மோதியதில் உடப்புவ பிரதேசத்தைச் சேர்ந்தவரே (வயது 49) உயிரிழந்துள்ளார்.
இறந்த பிச்சைக்காரர் பையில் 135.000 பணம்
அனவிலுந்தாவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக சிலாபம் பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை (6) உயிரிழந்துள்ளார்.
அவரது பையை சோதனை செய்ததில் 1இலடசத்து,35ஆயிரம் பணம் மற்றும் அவரது வங்கி கணக்கில் 47 ஆயிரம் பணமும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
விசாரணைகளில் அவர் பல வருடங்களாக பிச்சைக்காரராக வாழ்ந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது..
விபத்து தொடர்பான விசாரணைகளை ஆராச்சிக்கட்டுவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி என்.
கிர்த்திபால மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை கர்ப்பிணிகளுக்கு 2500 .ரூபா – தள்ளாடும் இலங்கையில் சாத்தியமா
இலங்கை கர்ப்பிணிகளுக்கு 2500 .ரூபா – தள்ளாடும் இலங்கையில் சாத்தியமா
இலங்கையில் புதிய இடைக்கால வரவு செலவு அறிக்கையின் பொழுது ,இலங்கையில் உள்ள கர்ப்பிணிகளுக்கு ,மாதம் தோறும் 2,500 ரூபா வழங்க படும் என, ஆளும் அரணில் அரசு அறிவித்துள்ளது .
ரணில் ஆட்சியில் ஏற்படுத்த ப்பட்ட இந்த ,இடைக்கல வாசிப்பின் ஊடான இந்த கர்ப்பணிகளுக்கான அறிவிப்பு ,அறிவிக்க பட்ட படியே ,கர்ப்பிணிகளுக்கு வழங்க படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது .
மகிந்தா அரசிலும் மலையக மக்களுக்கு பத்தாயிரம் சம்பளம் எனவும் ,மேலும் பல திட்டங்கள் அறிவிக்க பட்டன .
அவை அறிவிப்பில் மட்டுமே இருந்தனவே தவிர ,மக்கள் நடைமுறையில்
பெற்று கொள்வதில் இல்லை என்பதே நிலைப்பாடாகும் .
அது போன்றே ரணில் அரசின் ,இந்த கர்ப்பிணிகளுக்கான கவர்ச்சிகர அறிவிப்பு ,போராடும் மக்களை குஷி படுத்தவே என்பதை அடித்து கூறலாம் .
நரி தந்திர நரி விளையாட்டை ஆரம்பித்துள்ளார் என்பதை காணமுடிகிறது .
வெளிநாட்டு தமிழர்கள் இலங்கைக்கு பணம் அனுப்ப வேண்டும் நிதி அமைச்சு அறிவிப்பு
வெளிநாட்டு தமிழர்கள் இலங்கைக்கு பணம் அனுப்ப வேண்டும் நிதி அமைச்சு அறிவிப்பு
இலங்கையில் இருந்து வெளி நாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் ,இலங்கை வங்கிக்கு மாதம் தோறும் ,நூறுக்கு மேற்பட்ட டொலர்களை அனுப்பி வைக்க வேண்டும் என ,நிதி அமைச்சு வேண்டுதல் விடுத்துள்ளது.
வெளிநாடுகளில் வசிக்கும் பத்து லட்சத்திற்கு அதிகமான தமிழர்களில் அரைவாசி பேர் ,இலங்கைக்கு பணம் அனுப்புவதை நிறுத்தி விட்டனர் .
இதனால் இலங்கை பெற்றுக்கொண்ட அண்ணிய செலாவணி தீர்ந்துள்ளது .
இதனால் தமிழர்களுக்கு கட்டாய நெருக்கடியை ,வழங்கும் விதமாக இலங்கை அரசு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது .
தமிழர் தேசிய அரசியல் பிரச்சனைக்கு தீர்வு காண மறுக்கும் ,இலங்கை அரசு ,வெளி நாடுகளில் உள்ள தமிழர்களை குறிவைத்து, செயல் படுவது கேலிக்குரியது என தமிழர்கள் தெரிவிக்கின்றனர் .
இலவசமாக பணம் உழைக்க இதோ வழி 4200 இலங்கை ரூபா உங்களுக்கு வேண்டுமா
இலவசமாக பணம் உழைக்க இதோ வழி 4200 இலங்கை ரூபா உங்களுக்கு வேண்டுமா
வீட்டில் இருந்தபடியே பணம் உழைப்பது எப்படி என்றா எண்ணுகிண்றீர்கள், இதோ பேபால் உங்களுக்கு அதிரடி விலைகளில் சலுகைகள் வழங்குகிறது .
இந்த இணைப்பில் அழுத்தி இணைந்தால் ,உங்களுக்கு 10 பவுண்டுகள் இலவசமாக கிடைக்கும் ,பேபால் வழங்கும் அதிரடி சலுகை ,மேலும் நீங்கள் வாங்கும் பொருட்கள் பெற்றிட 1200 பவுண்டுகள் கடனாக வழங்க ப.டுகிறது .
முந்துங்கள் பயன் பெறுங்கள் .இதில் இணைந்து ஐந்து பவுண்டுக்கு பொருட்கள் வாங்கினால், உங்களுக்கு 10 பவுண்டு கிடைக்கும் ,தவிர நாங்கள் உங்களுக்கு 2 பவுண்டுகள் வழங்குவோம் .4200 இலங்கை ரூபா .( வாட்சாப் ,வைபர் ,00447536707793)
ஆக மொத்தம் நீங்கள் செலவு செய்வது ஐந்து ,மொத்தம் உங்களுக்கு 12 பவுண்டுகள் கிடைக்கும் .அவ்வாறு செய்தால் எங்களுக்கு அறியத்தாருங்கள் அந்த இரண்டு பவுண்டுகளை உங்களுக்கு செலுத்தி விடுகிறோம் .
Hi, we can both earn £10 when you accept my invite to PayPal and spend £5. Use my link
இதில் அழுத்தி பதிவு செய்து பணத்தை அள்ளுங்கள்
விசேட பொருட்கள் மலிவு விற்பனை
பேபால் ஊடாக நீங்கள் விரும்பும் பொருட்களை கொள்வனவு செய்கின்ற பொழுது ,உங்களுக்கு பத்து வீதம் முதல், ஐம்பது வீதம் வரை விலைக்கழிவுகள் உள்ளன .
இலவசமாக பணம் உழைக்க இதோ வழி 4200 இலங்கை ரூபா உங்களுக்கு வேண்டுமா
அங்கே குறிப்பிட படும் ,பிரபல நிறுவனம் ,கடைகளில் அந்த பொருட்களை வாங்கினால் இந்த சலுகை கிடைக்கிறது .
பேபால் ஊடக பணத்திற்கு பாதுகாப்பு உள்ளது எப்படி தெரியுமா ..?#
இந்த பேபால் ஊடக நீங்கள் விரும்பும் பொருட்களை கொள்வனவு செய்தால் , பேபால் மூலமே பணத்தினை செலுத்தினால் , பெற்று கொண்ட பொருட்களில் ஏதாவது தவற விட பட்ட நிலையில் ,
பொருட்கள் வந்தடைந்தாலோ, இவர்களிடம் முறையிட்டால் , நீங்கள் செலுத்திய முழு பணத்தினையும் 180 நாட்களுக்குள் மீள் பெற்று கொள்ள முடியும் .
முந்துங்கள் பயன் பெறுங்கள் ,சொல்வது நாங்கள் தீர்மானிப்பது நீங்கள் .
பங்கு சந்தையில் பணம் உழைப்பது எப்படி
பங்கு சந்தையில் பணம் உழைப்பது எப்படி
வீட்டில் இருந்தவாறே பங்கு சந்தையில் பணம் உழைப்பது எப்படி என்ற கேள்வி எல்லோருக்கும் உள்ளது .அதனை எவ்வாறு செய்து கொள்வது என்பது தான் தெரியாத விடயமாக உள்ளதா ..?
அப்படி என்றால் இதனை முழுமையாக படியுங்கள் .புரிதலுடன் பயம் போக்கி உங்களை இந்த பங்கு சந்தையில் கொடி கட்டி பறக்க இது உதவும் . வாங்க விடயத்திற்குள் நுழையலாம் .
பங்கு சந்தை என்றால் என்ன ..?
பங்கு சந்தை என்பது பங்குகளை வெளிப்படையாக வாங்கி விற்பது பங்கு சந்தை எனப்படுகிறது .
நீங்கள் விரும்பும் நிறுவனம் ,மற்றும் தங்கம் ,வெள்ளி, வைரம் ,எரிபொருள் ,பித்தளை உள்ளிட்ட நாணய மாற்று விரும்பும் பொருட்களையும் இங்கே வாங்கி விற்கலாம் .
பங்கு சந்தை இலவச பயிற்சி
நீங்கள் பங்கு சந்தை வியாபாரத்தில் புதியவரா ..? அப்படி என்றால் கவலை விடுங்கள் இந்த பங்கு சந்தையில் தப்பு இன்றி பணத்தை அள்ளிட நாம் என்ன செய்ய வேண்டும் என்கின்ற இலவச பயிற்சிகளை வழங்குகிறோம்.
நாம் கூறும் பயிற்சிகளில் இந்த மூன்று விதிகளை கடை பிடிக்க வேண்டும் அவையாவன ,நில் ,கவனி ,முன்னேறு .
இந்த மூன்று விடயங்கள் அடிப்படை கொள்கை நிலைப்பாடாக நாம் கையாள வேண்டும் .
அவ்வாறு செய்திடின் நீங்கள் அச்சம் இன்றி பங்கு சந்தையில் உலக பணக்காரர்களில் ஒருவராக மாற முடியும் .
அவ்வாறு நாம் வழங்கும் பங்கு சந்தை இலச பயிற்சி ஊடாக உலகை சிறந்த ஒருவராக வடிகட்டி மாற்றி கொண்டு அபரா சாதனையை நிலை நாட்டலாம் .
உங்கள் சொந்த பணத்தில் ஆரம்பிக்கும் முன்னர் சந்தையை பற்றி டம்மியில் பழகி தெளிந்து பின்னர் உங்கள் பணத்தை வைப்பிலிட்டு பணத்தை அள்ளுங்கள் .
பங்கு சந்தை செய்திகள் நாள்தோறும் பார்க்க வேண்டுமா என்றால் நமது விளங்குதலின் அடிப்படையில் நாம் செய்திகளை பார்ப்பதில்லை .
அதற்கு மாறாக பங்கு சந்தையில் பணம் இலகுவாக உழைப்பது எப்படி என்றால்
சாட்டை தெளிவாக பார்த்து அதில் உங்களுக்குரிய விதிகளை கடைபிடித்தால் போதுமானது .
சாட்டில் எதையும் ஒளிக்க முடியாது .டெக்கினிக்கல் எல்லா டெக்கினிக்கையும் காட்டி கொடுத்து விடும். ஆதாலால் அதனை நாம் செய்து கொள்கிறோம் .
பங்கு சந்தை குறியீடு
பங்கு சந்தை குறியீடு என்பது பல வகைகள் இதில் கூற படுகிறது .பங்கு சந்தை குறியீடு என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டியது காண்டில் ஸ்டிக்.
இதில் மூன்றை தெரிவு செய்து அதனை மையப்படுத்தி ரேடிங் புரிந்தால் அதுவே உங்களுக்கு அமைதியான முறையில் பணத்தை அள்ளி வழங்கும் .
மேலும் பங்கு சந்தையில் நீங்கேள முதல்வனாக இந்த குறியீடுகள் கைபிடித்து வழிகாட்டி செல்லும் .
இதனை மறை குறியீடு எனவும் அழைக்க படுகிறது ,மறைந்து கிடக்கின்றதை தோண்டி எடுத்து அதனை மைய படுத்தி நகர்வது அதுவே மறைகுறி என்கின்றார்கள் .
மேலதிக தொடர்புகளுக்கு எம்மை தொடர்பு கொள்ளுங்கள் -நன்றி
–வன்னி –youtube
இலங்கையில் பணம் வீக்கம் அதிகரிப்பு
இலங்கையில் பணம் வீக்கம் அதிகரிப்பு
கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (கொநுவிசு, 2013=100) ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம், 2022
ஏப்பிறலின் 29.8 சதவீதத்திலிருந்து 2022 மேயில் 39.1 சதவீதத்திற்கு அதிகரித்தது. ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையிலான பணவீக்கத்தின் இவ்வதிகரிப்பானது உணவு
மற்றும் உணவல்லா வகைகள் இரண்டினதும் மாதாந்த அதிகரிப்புக்களினால் தூண்டப்பட்டிருந்தது.
அதனைத்தொடர்ந்து, உணவுப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு), 2022 ஏப்பிறலின் 46.6 சதவீதத்திலிருந்து 2022 மேயில் 57.4 சதவீதத்திற்கு அதிகரித்த அதேவேளை,
உணவல்லாப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு) 2022 ஏப்பிறலின் 22.0 சதவீதத்திலிருந்து 2022 மேயில் 30.6 சதவீதத்திற்கு அதிகரித்தது.
கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் மாதாந்த மாற்றம், 2022 மேயில் 8.34 சதவீதமாகப் பதிவாகியது. இதற்கு, முறையே 4.87 சதவீதமாகவும் 3.47 சதவீதமாகவும்
காணப்பட்ட உணவல்லா மற்றும் உணவு வகைகள் இரண்டினதும் பொருட்களில் அவதானிக்கப்பட்ட விலை அதிகரிப்புக்கள் காரணமாக அமைந்தது. அதற்கமைய,
போக்குவரத்து (பெற்றோல், டீசல் மற்றும் பேருந்துக் கட்டணம்), வீடமைப்பு, நீர், மின்வலு, எரிவாயு மற்றும் ஏனைய எரிபொருட்கள் (திரவப்பெற்றோலிய வாயு மற்றும்
இலங்கையில் பணம் வீக்கம் அதிகரிப்பு
பராமரித்தலுக்கான/ மீள்கட்டுமானத்திற்கான பொருட்கள்), உணவகம் மற்றும் விடுதிகள் அத்துடன் நானாவிதப் பொருட்கள் மற்றும் சேவைகள் (கார் காப்புறுதி)
ஆகிய துணை வகைகளில் அவதானிக்கப்பட்ட விலை அதிகரிப்புக்களைப் பிரதான காரணமாகக் கொண்டு உணவல்லா வகையினுள் உள்ள பொருட்களின் விலைகள் அதிகரிப்புக்களைப் பதிவுசெய்தன.
மேலும், உணவு வகையினுள் காய்கறிகள், உடன் மீன், அரிசி, பாண், கருவாடு, பருப்பு என்பவற்றின் விலைகளில் மாதகாலப்பகுதியில் அதிகரிப்புக்கள் அவதானிக்கப்பட்டன.
அதேவேளை, ஆண்டுச் சராசரி பணவீக்கம் 2022 ஏப்பிறலின் 11.3 சதவீதத்திலிருந்து 2022 மேயில் 14.2 சதவீதத்திற்கு அதிகரித்தது.
பொருளாதாரத்தின் அடிப்படை பணவீக்கத்தினைப் பிரதிபலிக்கின்ற மையப் பணவீக்கம், (ஆண்டிற்கு ஆண்டு) 2022 ஏப்பிறலின் 22.0 சதவீதத்திலிருந்து 2022 மேயில்
28.4 சதவீதத்திற்கு அதிகரித்த அதேவேளை, ஆண்டுச் சராசரி மையப் பணவீக்கம்,
2022 ஏப்பிறலின் 8.1 சதவீதத்திலிருந்து 2022 மேயில் 10.2 சதவீதத்திற்கு அதிகரித்தது.
32 கிலோ மார்பை குறைக்க பணம் திரட்டும் பெண்
32 கிலோ மார்பை குறைக்க பணம் திரட்டும் பெண்
பிரிட்டனில் இருபது வயது மாணவி ஒருவ தனது மார்பகங்களின் எடை அதிகரிப்பால் சொல்லென்னா துயரை சந்தித்த வண்ணம் உள்ளார்
இரு மார்புகளும் முப்பத்திரண்டு கிலோ எடையுள்ளவை ,இவற்றுடன் தான் பெரும்
சிரமங்களை எதிர் நோக்கி வருவதாகவும் ,இந்த மார்பகை சத்திர சிகிச்சை மேற்கொள்ள தற்போது மக்களிடம் பணம் திரட்டும் நகர்வில் ஈடுபட்டுள்ளார்
இவர் சத்திரசிகிச்சை மேற்கொண்டு நலமுடன் திரும்பிட மக்கள் பணம் வழங்கிட தயராகி வருகின்றனர் ,
இத்துடன் இரண்டாவது தடவையாக இந்த மார்பு சிகிச்சை மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்க படுகிறது
மார்பை குறைக்க பணம் திரட்டும் பெண்ணின் விடயம் வைரலாகி வருகிறது
ஆண்களிடம் பெண்குரலில் பேசி பணம் கொள்ளையடித்த நபர் – மாப்புள்ளை சிக்கினார்
கைபேசியில் பெண் குரலில் பேசி ஆண்களை ஏமாற்றி, அவர்களிடம் பணம் பறித்த
குற்றச்சாட்டில் வட்டுக்கோட்டையைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞர் ஒருவர் யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் வைத்து நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
சுன்னாகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு வந்த அழைப்பில் பெண் ஒருவர் உரையாடியுள்ளார். அதன் பின்னர் அவர்கள் தொடர்ச்சியாக உரையாடியுள்ளனர். பின்னர் அந்தரங்கப் படங்களையும் பரிமாறிக் கொண்டுள்ளனர்.
பின்னர் கைபேசியில் பேசிய குறித்த பெண், அந்த நபரை மிரட்டி ஒன்றரை லட்சம் ரூபாய் பணம் பறித்துள்ளார்.
தொடர்ந்து மிரட்டி ஒரு லட்சம் ரூபாய் கேட்டுள்ளார். அதில் சந்தேகமடைந்த அந்த நபர், இது தொடர்பில் யாழ்ப்பாணம் மாவட்ட புலனாய்வுப் பிரிவுப் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
கைபேசியில் பேசிய பெண்ணிடம், வங்கியில் பணம் வைப்புச் செய்ய முடியாது என்றும், நேரில் வந்து பெற்றுக்கொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் பணத்தைப் பெற்றுக்கொள்ள வந்த 26 வயது இளைஞர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
விசாரணையில் அந்த இளைஞரே பெண் குரலில் பேசி ஏமாற்றியமை தெரியவந்துள்ளது. இந்த இளைஞர் ஏற்கனவே நால்வரிடம் இவ்வாறு பேசி நான்கு
லட்சம் ரூபாவுக்கும் மேல் பறித்துள்ளமை தெரியவந்துள்ளது என்று பொலிஸார் கூறுகின்றனர்.
கைது செய்யப்பட்ட இளைஞரிடம் இருந்து நான்கு கைபேசிகளும், ஒரு லட்சம் ரூபா பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது.
விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படுவார் என்று பொலிஸார் தெரிவித்தனர்




































