Tag: கோட்டா
கற்கை நெறியில் அதிரடி மாற்றம் – கோட்டா உத்தரவு
பல்கலைக்கழக பாடவிதானம் தொழிற்சந்தையை நோக்கமாகக்கொள்ள வேண்டும்.
• தொழிநுட்ப விஞ்ஞானம் மற்றும் தகவல் தொழிநுட்ப பாடங்களுக்கு கூடிய அவதானம்.
எதிர்கால உலகிற்கு ஏற்ற பொருளாதார மற்றும் அபிவிருத்திக்கு பங்களிக்கக்கூடிய பிரஜையை உருவாக்குகின்ற கல்வி மறுசீரமைப்பின் அவசியத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெளிவுபடுத்தினார்.
பல்கலைக்கழகங்கள், பட்டங்களை வழங்கக்கூடிய நிறுவனங்களாக மட்டும் இல்லாமல் நாட்டுக்கும் பொருளாதாரத்திற்கும் அதேபோல் பட்டம் பெறுவோரும்
அதன்மூலம் பயனை பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்க வேண்டுமென ஜனாதிபதி சுட்டிக் காட்டினார். நடைமுறை
தேவைகளுக்கு முன்னுரிமை வழங்கி, புதிய பாடவிதானங்களை உடனடியாக அறிமுகப்படுத்துமாறு அவர் கல்வி அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
கல்வி மறுசீரமைப்பு, திறந்த பல்கலைக்கழகம் மற்றும் தொலைக்கல்வி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் எதிர்கால
திட்டங்கள் தொடர்பாக நேற்று (24) பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.
பல வருடங்களாக நாட்டுக்குப் பொருத்தமான கல்வி மறுசீரமைப்பொன்று இடம்பெறாமை தற்போதைய தொழில் சந்தையில் காணப்படும் பிரச்சினைகளுக்கு காரணமாக உள்ளதாக
ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார். உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பல்வேறு துறைகளில் தொழில் வாய்ப்புகள்
அதிக எண்ணிக்கையில் காணப்படுகின்றன. ஆனாலும் அதற்கு அவசியமான மனித வளத்தை கல்வி முறைமை மூலம் உருவாக்க வில்லை.
‘நாட்டின் எதிர்கால சமூகம் பயனுள்ள பிரஜைகளாக உருவாகுவதற்கு அவர்கள் புதிய அறிவு திறமைகள் மற்றும் திறன்களை விருத்தி செய்வது அவசியமாகும். இளைஞர், யுவதிகள்
கல்வித்துறையில் கைவிடப்படாமல் இருப்பதற்கு முன்பள்ளி கல்வி முதல் உயர் கல்வியை நிறைவு செய்யும் வரை தெளிவான வழிகாட்டல்களை திட்டமிட வேண்டும். அதன் மூலம் தொழிநுட்ப
கல்வி வாய்ப்புகளை அதிகரிக்கவும் கல்வி பொறிமுறையில் தொழிநுட்ப பாவனையை விரிவுப்படுத்தவும் முடியும். கல்விசார்
அனைத்து நிறுவனங்களையும் ஒரே அமைச்சின் கீழ் கொண்டு வந்ததன் காரணம் இந்நோக்கத்தை நிறைவேற்றுவதற்கேயாகுமென ஜனாதிபதி தெரிவித்தார்.
சாதி, மத பேதங்களின்றி அனைத்து மாணவர்களுக்கும் சமமான கல்வி வாய்ப்பை வழங்குவது கட்டாயமாகும் என்றும் நாட்டுக்குப்
பொருத்தமான பயனுள்ள பிரஜையை உருவாக்குவது அரசாங்கத்தின் கடமையாகுமென்றும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.
கல்வியை தொடர முடியாத பிள்ளைகளுக்கு வயதெல்லைகள் இன்றி மீண்டும் எதிர்பார்க்கும் கல்வி இலக்கை அடைந்து கொள்வதற்கு புதிய மறுசீரமைப்பின் மூலம் அதற்கான பின்புலம்
தயாரிக்கப்பட வேண்டும். பரீட்சையை மையப்படுத்திய கல்விக்கு மாற்றமாக மாணவர் மையக் கல்வி முறையொன்றை நடைமுறை
ரீதியாக செயற்படுத்த வேண்டும் என்றும் ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார்.
பல்கலைக்கழக பிரவேசத்திற்கு தகுதிபெறும் அனைத்து மாணவர்களும் பட்டம் பெறும் வரை செல்வதற்கு அவசியமான நடவடிக்கையுடன் பட்டதாரிகள் தொழில் கேட்டு வீதிக்கு இறங்காத,
தொழிற்சந்தை பட்டதாரிகளை தேடிச் செல்லக்கூடிய கல்வி முறைமையொன்றின் உடனடி அவசியம் பற்றியும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.
எதிர்வரும் வருடத்தில் பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கும் எண்ணிக்கை 31,000 த்திலிருந்து 41,000 வரை அதிகரிக்கப்படும். திறந்த பல்கலைக்கழகத்திற்கு மேலதிகமாக 10,000 பேர்
உள்வாங்கப்படுவர். தகவல் தொழிநுட்ப பட்டத்தை பயிலுவதற்காக 10.000 பேரை இணைத்துக்கொள்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை தெரிவுசெய்யும்போது
அபிவிருத்தி அடைந்த நாடுகள் பின்பற்றும் பல்கலைக்கழகங்களுக்கே உரிய முறைமையை தயாரித்தல் தொடர்பாகவும் கலந்துரையாடலில் அவதானம் செலுத்தப்பட்டது.
ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ள தேசிய கல்விக் கொள்கையை உடனடியாக கருத்தாடலுக்கு உட்படுத்தி செயற்படுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார்.
அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த பொருளாதார புத்தெழுச்சி தொடர்பான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பெசில் ராஜபக்ஷ, ஜனாதிபதியின் செயலாளர்
பீ.பி.ஜயசுந்தர ஆகியோருடன் அமைச்சு மற்றும் இராஜாங்க அமைச்சுக்களின் செயலாளர்கள், துறைசார் நிறுவனங்களின் தலைவர்கள் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.
தள்ளாடும் கோட்டா அரசு – தகருமா 20 ..?
தள்ளாடும் கோட்டா அரசு – தகருமா 20 ..?
இருபதாவது அரசமைப்புத் திருத்தத்துக்கு 2/3 பெரும்பான்மை ஒருபோதும் கிடைக்காதெனவும், அந்த திருத்தத்துக்கு எதிரான சகல
நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம் என்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
இருவதாவது அரசமைப்பை பயன்படுத்திக்கொண்டு, அமெரிக்க பிரஜையான ஒருவர் அமெரிக்க கொடியின் முன்பாக
சத்தியப்பிரமாணம் செய்துகொண்ட ஒருவர், இலங்கையிலுள்ள
சொத்துக்களை சூறையாடிக்கொண்டு அமெரிக்காவுக்கு ஓடிவிட முடியுமெனவும் சாடினார்.
இந்த திருத்தத்துக்கு ஒருபோதும் 2/3 பெரும்பான்மை ஆதரவு கிடைக்காதன தெரிவித்த அவர், அரசாங்கத்துக்குள் உள்ள
குழுவினரே 20 க்கு எதிராக வாக்களிக்க தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
அதனால் பிரதான எதிர்க்கட்சி என்ற வகையில் ஐக்கிய மக்கள் சக்தி 20
ஆவது திருத்தச் சட்டமூலம் கொண்டுவரப்பட்ட நாள் தொடக்கம் அதற்கு
எதிரான போராட்டத்தை ஆரம்பித்திருந்ததெனவும், இனிவரும் காலங்களில்
நாடாளுமன்றத்துக்கு வெளியிலும் அந்த போராட்டம் தொடருமெனவம் தெரிவித்தார்
அரிசி தட்டுப்பாட்டை ஏற்படுத்த இடமளிக்க வேண்டாமென கோட்டாவிடம் மக்கள் கோரிக்கை
அரிசி தட்டுப்பாட்டை ஏற்படுத்த இடமளிக்க வேண்டாமென கோட்டாவிடம் மக்கள் கோரிக்கை
அரிச தட்டுப்பாடை ஏற்படுத்த இடைத்தரகர்களுக்கு இடமளிக்க வேண்டாமென பொலன்னறுவை விவசாயிகள் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்தனர். கடந்த போகங்களின்போது அதிக
அறுவடை கிடைக்கப்பெற்றுள்ளது. எனவே அரிசி தட்டுப்பாட்டை ஏற்படுத்துவதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிக்கு இடமளிக்கக்கூடாதென விவசாயிகள் தெரிவித்தனர்.
பொதுஜன முன்னணியில் இம்முறை பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வெற்றியை
உறுதிப்படுத்துவதற்காக நேற்று(05) முற்பகல் பொலன்னறுவை சிறிபுர பிரதேச சபை விளையாட்டரங்கில் இடம்பெற்ற மக்கள்
சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களிடம் விவசாயிகள் இந்த கோரிக்கையை முன்வைத்தனர்.
அழிவுக்குள்ளாகியிருந்த அரிசி களஞ்சியங்களை இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் புனர்நிர்மாணம் செய்வதற்கும் நெல்லை முறையாக கொள்வனவு செய்வதற்கும்
முறைமையொன்றை தயாரித்ததாகவும் ஜனாதிபதி அவர்கள் விவசாயிகளிடம் தெரிவித்தார். எதிர்வரும் காலங்களில் நெற் பயிர்ச் செய்கையில் ஈடுபடும் விவசாயிகளை பாதுகாத்து
பிரச்சினைகள் ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.
மத்திய வங்கி மோசடிக்கு வகைக்கூற வேண்டியவர்களை சட்டத்தின் முன் நிறுத்துமாறும் பொலன்னறுவை பிரதேசவாசிகள் ஜனாதிபதி அவர்களிடம் கோரிக்கை விடுத்தனர். தொழில்
பிரச்சினை, காட்டு யானைகளின் அச்சுறுத்தல் என்பன பொலன்னறுவை மாவட்டத்தில் அநேக பிரதேசங்களில் மக்கள்
முகங்கொடுக்கும் பிரச்சினைகளாகும். அதற்கு தீர்வை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்குமாறும் பிரதேசவாசிகள் ஜனாதிபதியிடம் கேட்டுக்கொண்டனர்.
பொதுஜன முன்னணியில் தேர்தலில் போட்டியிடும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க, முன்னாள் பிரதி
அமைச்சர் சிறிபால கம்லத் மற்றும் வேட்பாளர் ஜகத் சமர விக்கிரம ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். பொதுஜன
முன்னணியின் அபேட்சகர் ஜயசிங்க பண்டா மஹியங்கனை பொலன்னறுவை வீதியில் கலுகெலே பிரதேசத்தில் ஏற்பாடு
செய்திருந்த மக்கள் சந்திப்பிலும் ஜனாதிபதி அவர்கள் கலந்துகொண்டார்.
மன்னம்பிட்டிய பிரதிபா மண்டபத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்ட ஜனாதிபதி அவர்களுக்கு பிரதேசத்தின் மகாசங்கத்தினர் முன்மொழிவொன்றை சமர்ப்பித்தனர்.
ஜனாதிபதி அவர்களுக்கு ஆசிவேண்டி பிரித் பாராயணம் இடம்பெற்றது. பிரதிபா மண்டபத்தின் முன்னால் ஒன்றுகூடியிருந்த சில ஆசிரியர்கள் ஜனாதிபதி அவர்களைச் சந்தித்து
முன்மொழிவொன்றை சமர்ப்பித்தனர். முன்னாள் இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்கவும் இச்சந்திப்பில் கலந்துகொண்டார்.
முன்னாள் முதலமைச்சர் பேசல ஜயரட்ன, கதுருவல பிரதேசத்தில் ஏற்பாடு செய்திருந்த மக்கள் சந்திப்பிலும் ஜனாதிபதி அவர்கள் பங்குபற்றினார். பிரதேசத்தில் உள்ள குளங்களை புனரமைத்து
தருமாறு அங்கு கூடியிருந்த மக்கள் ஜனாதிபதி அவர்களிடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்தனர். விதை நெல் மற்றும் உரப்
பிரச்சினை குறித்தும் அவர்கள் ஜனாதிபதி அவர்களின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.
தம்பாலை கல்வல சந்தியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மக்கள் சந்திப்பில் கலந்துகொண்ட மக்களுடனும் ஜனாதிபதி அவர்கள் சுமூகமாக கலந்துரையாடினார். முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால
சிறிசேன அவர்கள் ஏற்பாடு செய்திருந்த மக்கள் சந்திப்பொன்று பொலன்னறுவை தீப உயனவுக்கு முன்னால் இன்று இடம்பெற்றது.
அந்நிகழ்விலும் ஜனாதிபதி அவர்கள் வருகை தந்திருந்த மக்களுடன் சுமூகமாக கலந்துரையாடி விபரங்களை கேட்டறிந்தார்.
கிராமங்களை கட்டியெழுப்ப, வங்கிகளை கிராமத்திற்கு கொண்டு செல்லுங்கள்- கோட்டா உத்தரவு
கிராமங்களை கட்டியெழுப்ப, வங்கிகளை கிராமத்திற்கு கொண்டு செல்லுங்கள்- கோட்டா உத்தரவு
கிராமங்களை கட்டியெழுப்ப வேண்டுமாயின் கிராமங்களின் பொருளாதாரம் மற்றும் மக்களின் தேவைகளை
அடையாளம்கண்டு வங்கிச் சேவைகளை செயற்படுத்த வேண்டுமென்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.
வெளிநாடுகளிலிருந்து வருகை தந்து தொழிற்சாலைகளை ஆரம்பிக்கும் வரை இருக்காமல் ஏற்றுமதி விவசாயத்தை அபிவிருத்தி செய்வது காலத்தின் தேவையாகுமென்று ஜனாதிபதி
அவர்கள் குறிப்பிட்டார். கைத்தொழில்கள் உருவாவது மட்டும் அபிவிருத்தி ஆகாதென சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அவர்கள்,
விவசாயத்தை மையப்படுத்தி கிராமிய தொழில்முயற்சிகளை அபிவிருத்தி செய்ய வேண்டுமென்றும் குறிப்பிட்டார்.
பிரதேச அபிவிருத்தி வங்கியின் தற்போதைய செயற்பாடுகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் தொடர்பாக இன்று (02) பிற்பகல்
ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டார்.
தேவையை மிகச் சரியாக அடையாளம் கண்டு விவசாயத்தை முன்னேற்றுவதன் மூலம் பொருளாதார அபிவிருத்தியை அடைவது அரசாங்கத்தின் நோக்கமாகும். அதற்காக பொருளாதாரத்தை
கட்டியெழுப்பும் வழிமுறை குறித்து கீழ் மட்டத்திலிருந்து கவனம் செலுத்துவதன் முக்கியத்துவத்தை ஜனாதிபதி அவர்கள் சுட்டிக்காட்டினார்.
வணிக வங்கிகள் கடன்களை வழங்கும்போது உற்பத்தித்துறையை விடவும் வணிக பிரிவுக்கு அதிக கவனம் செலுத்துகின்றனர்.
பாராம்பரியங்களுக்குள் மட்டுப்பட்டிருக்காது விவசாயிகளை உற்பத்திக்கு ஊக்குவிப்பது பிரதேச அபிவிருத்தி வங்கியின் பொறுப்பாகுமென்று ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.
விவசாய உற்பத்திகளை இறக்குமதி செய்வதற்கு இடமளிக்காது உழுந்து, குரக்கன், பயறு உட்பட தானிய வகைகளை பயிரிடுவதற்கு ஊக்குவிப்பதன் அவசியத்தையும் ஜனாதிபதி அவர்கள்
சுட்டிக்காட்டினார். அந்தந்த பிரதேசங்களுக்கு இலக்குகளை வழங்கி விவசாயிகளை ஊக்குவிப்பதற்கு அவசியமான
ஒத்துழைப்பை வழங்குவதே வங்கியை கிராமத்திற்கு கொண்டு செல்வதன் மூலம் தான் எதிர்பார்க்கும் இலக்காகும் என ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.
நீண்டகாலமாக தவணைக்கொடுப்பனவின் அடிப்படையில் பாரியளவு கடன்களைப் பெற்றுக்கொண்டு திருப்பிச்
செலுத்தாதவர்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், அரச வங்கிகள்
வசூலிக்க வேண்டிய கடன்களை பெற்றுக்கொள்வதற்கான பொறிமுறையொன்றை உருவாக்குவதன் முக்கியத்துவத்தையும் தெளிவுபடுத்தினார்.
ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி.ஜயசுந்தர, நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல மத்திய வங்கி ஆளுநர் பேராசிரியர்
டப்ளியு.டி.லக்ஷ்மன், பிரதேச அபிவிருத்தி வங்கியின் தலைவர் மஹிந்த சாலிய, பொது முகாமையாளர் டி.குகன் உள்ளிட்ட
பணிப்பளார் சபையின் அங்கத்தவர்கள் இக்கலந்துரையாடலில் பங்குபற்றினர்.
கோட்டாவை கிழித்து தொங்க விட்ட சஜித்
கோட்டாவை கிழித்து தொங்க விட்ட சஜித்
நடைமுறை அரசாங்கம் வேலை செய்ய திராணியற்ற அரசாங்கம்
என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
களுத்துறையில் நேற்று (26) இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றிலேயே அவர் இதனை கூறினார்.
உலக சந்தையில் எரிபொருளின் விலை குறைவடைந்துள்ள போதிலும்
அதன் நன்மைகளை நாட்டு மக்களுக்கு பெற்றுக் கொடுக்கவில்லை எனவும் அவர் குற்றம் சுமத்தினார்.
எதிர்வரும் தேர்தலில் வெற்றிப் பெற்றவுடன் நடுதர குடும்பங்களுக்கும்
அதற்கு கீழ் மட்டத்தில் உள்ள குடும்பங்களுக்கும் 20,000 ரூபா
நிவாரணமாக வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் கூறியுள்ளார்
இறக்குமதியை மட்டுப்படுத்தி உற்பத்தியை ஆரம்பியுங்கள்- கோட்டா
இறக்குமதியை மட்டுப்படுத்தி உற்பத்தியை ஆரம்பியுங்கள்- கோட்டா
நீண்டகாலமாக மேற்கொள்ளப்பட்டுவரும் அத்தியாவசியமற்ற பொருட்கள் இறக்குமதியை மட்டுப்படுத்தியுள்ளதால் பல
துறைகளில் உற்பத்திகளை ஆரம்பிப்பதற்கு சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளதென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.
“சுபீட்சத்தின் நோக்கு” கொள்கைப் பிரகடனத்தில் குறிப்பிடப்பட்ட வகையில் மக்கள்மயப்பட்ட பொருளாதாரத்திற்கான பாதை திறக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தையை
வெற்றிகொள்வது தொழிலதிபர்களுக்குள்ள தற்போதைய சவாலாகுமென்று ஜனாதிபதி குறிப்பிட்டார்.
கைத்தொழில் மற்றும் வர்த்தக முயற்சிகளின் அபிவிருத்திக்கான அனைத்து அமைச்சுக்களையும் ஒன்றிணைத்த வகையில் உருவாக்கப்பட்டுள்ள செயலணி மற்றும் பல்துறைசார்
தொழிலதிபர்களுடன் நேற்று (22) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி மேற்கண்வாறு தெரிவித்தார்.
மக்களின் நுகர்வுத் தேவையை பூரணப்படுத்தல், புதிய தொழில் முயற்சிகளை உருவாக்குவதுடன், நாட்டிற்கு புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தல் போன்ற
வர்த்தகர்களினால் முன்னெடுக்கப்பட வேண்டிய பல்வேறு விடயங்கள் காணப்படுகின்றன. உள்நாட்டில் உற்பத்தி
செய்யப்படும் அனைத்து பொருட்களினதும் மற்றும் வழங்கப்படும் அனைத்து சேவைகளினதும் தரத்தை உயர் மட்டத்தில்
பேணுவதற்கும் சர்வதேச தரத்திற்கு உயர்த்துவதற்கும் முயற்சி எடுக்கப்பட வேண்டுமென ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
கைத்தொழிலாளர்களுக்கு ஒத்துழைப்பு வழங்க அனைத்து அரச நிறுவனங்களும் ஒன்றுபட்டுள்ளன. தனி இலக்க வட்டி வீதத்திற்கு வங்கி கடன் வழங்குதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஒருசில
மாதங்களுக்குள் இந்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் தும்புத்தடி, ஈர்க்கில்மாறு தொடக்கம் மருந்து வில்லை வரை உள்நாட்டு
உற்பத்திகளை அதிகரிக்கச் செய்து பெறுபேற்றைக் காண்பிப்பது தொழிலதிபர்களிடம் இருந்து நான் எதிர்பார்க்கும் விடயம் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ குறிப்பிட்டார்.
விவசாயிகளுக்கு பயிர்ச் செய்கைக்கான ஆலோசனைகளை வழங்கி, விவசாய பொருட்களை இறக்குமதி செய்வது
அரசாங்கத்தின் கொள்கையாகாது. உறுதியான கொள்கையுடன் இருந்து அரசாங்கத்தின் செயற்பாடுகளை முன்கொண்டு
செல்வதால் தொழிலதிபர்களைப் போன்று விவசாயிகளுக்கும் பொருட்களுக்கான கேள்வியை அடையாளம் கண்டு
செயற்படுவதற்கு சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
மோட்டார் வாகன உற்பத்திகளை ஒன்றிணைக்கும் கைத்தொழிலாளர்கள், மோட்டார் வாகன உதிரிப்பாக உற்பத்தியாளர்களின் சங்கம், பொதியிடல் உற்பத்தியாளர் சங்கம்,
மின் கம்பி உற்பத்தியாளர்கள், படகு உற்பத்தியாளர்கள் சங்கம், இரும்பு தொழிற்சாலையாளர்கள், தோல் பொருள்
உற்பத்தியாளர்களின் ஆலோசனைக்குழு, இறப்பர் தயாரிப்பு உற்பத்தியாளர்களின் சங்கம், மின்சாரம் மற்றும் மின்னியல் உபகரண ஆலோசனைக் குழு, பலகை மற்றும் பலகை சார்ந்த
தயாரிப்பு உற்பத்தியாளர்களின் சங்கம், ஒன்றிணைந்த ஆடை தொழிலாளர்களின் சங்கம், ஆடை தொழிற்சாலையாளர்கள், அழகு சாதனப் பொருட்கள் உற்பத்தியாளர்களின் சங்கம், ஔடத உற்பத்தி
ஆலோசனை சபை உள்ளிட்ட பல துறைசார் பிரதிநிதிகள் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.
கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவங்ச, ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி.ஜயசுந்தர, அமைச்சுக்களின் செயலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
இன்று -கோட்டாவுக்கு 71 ஆவது பிறந்தநாள்
இன்று -கோட்டாவுக்கு 71 ஆவது பிறந்தநாள்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் 71 ஆவது பிறந்தநாள் இன்றாகும்.
1949 ஆண்டு ஜூன் மாதம் 20 ஆம் திகதி பிறந்த கோட்டாபய ராஜபக்ஷ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரராவார்.
இராணுவ அதிகாரியாக சேவையாற்றிய அவர் பின்னர் பாதுகாப்பு செயலாளராக
செயற்பட்டு 30 வருட கொடிய யுத்தத்தை நிறைவு செய்வதற்கு பிரதான பங்களிப்பை வழங்கியிருந்தார்.
பின்னர் பாதுகாப்பு செயலாளர் பதவிக்கு மேலதிகமாக நகரபுற அபிவிருத்தி
செயலாளர் பதவியை வகித்து யுத்தத்தின் பின்னர் நகர அலங்கார மற்றும்
நகர்புற அபிவிருத்திக்கு பாரிய பங்களிப்பை பெற்றுக் கொடுத்து சிறந்த சேவையை பெற்றுக் கொடுத்திருந்தார்.
கடந்த வருடத்தில் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் பாரிய வெற்றியை
பெற்ற கோட்டாபய ராஜபக்ஷ இந்நாட்டின் 8 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார்.
கோட்டா பெயரில் மோசடி செய்த நபர் கைது
கோட்டா பெயரில் மோசடி செய்த நபர் கைது
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் கையொப்பத்தையும் கடிதத் தலைப்பையும் மோசடியாக பயன்படுத்திய ஒருவர் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
அவர் இலக்கம் 531, சுந்தராபொல வீதி, யத்தன்பலாவ, குருணாகலை முகவரியில் வதியும் ஈ.எம்.பீ.ஏ குமார என்பவராகும்.
பணித் தடைக்கு உள்ளாகியுள்ள அவர் சம்பளம், கொடுப்பனவுகள் மற்றும் பதவியுயர்வுகளுடன் மீண்டும் சேவையில் அமர்த்துமாறு
குறிப்பிட்டு ஜனாதிபதி அவர்களின் கடிதத் தலைப்பையும், ஜனாதிபதி அவர்களின் கையொப்பத்துடன் எழுதப்பட்டுள்ள
கடிதமொன்றையும் இலங்கை வங்கி தலைவருக்கு அனுப்பி வைத்துள்ளார்.
அது போலியானது என்பது உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து குமார என்பவரை வங்கி தலைமையகத்திற்கு அழைத்ததன்
பின்னர் நேற்று (03) கைது செய்யப்பட்டார். ஆவணத்தை தயார் செய்வதற்கு பயன்படுத்திய மடிக் கணினி மற்றும் ஏனைய
உபகரணங்களும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.
அவரை நீதிமன்றத்திற்கு முன்னிலைப்படுத்தியதன் பின்னர் எதிர்வரும் 08 திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
தமிழர்கள் வந்தேறிகள்- சிங்கள அரசு
தமிழர்கள் வந்தேறிகள்- சிங்கள அரசு
இலங்கையின் பூர்வி குடிகளான தமிழர்கள் வந்தேறிகள் என வந்து குடியேறிய சிங்களவர்கள் பேசி வருகின்றமையும் ,
பிக்குகளை கொண்டு தமிழர்கள் மீது வன்முறையை தூவி வருவதையும் நடப் பாண்டு ஆட்சியில் மக்கள் அவதானிக்க முடிகிறது
நல்லிணக்கத்தை சிதைத்து ,ஒன்று பட்ட இலங்கையர்களாக மக்கள் ஒன்றித்து வாழ்வதை ஆளும் இனவாத அரசு விரும்பவில்லை .
தனி பெரும் பான்மை வாக்குகள் பெற்று எம்மை அதிகாரத்தில் சிங்களவர்களே வைத்தனர் .
அதனால் தமிழர் பகுதியில் அவர் தம் பிரச்சனைக்கு தீர்வு இல்லை ,என்பதையும் பேச்சளவில் மட்டும் அபிவிருத்தியை பேசி வருகிறது ஆளும் வர்க்கம் ,
நால்லாட்சி தத்துவம் பிடுங்கி ஏறிய பட்டு வன்மம் தேய்ந்த இனவாத ஆட்சி நாட்டில் பரவி கிடக்கிறது .
கொடூரமாக பழிவாங்க பட்டு வஞ்சிக்க பட்ட தமிழர் இனம் இதுவரை போர் வடுவை தாங்கியபடி நடை பயில்கிறது .
வீடு இன்றி ,உயிர் வாழ தகுந்த வீடின்றி ,இந்த குடும்பம் அல்லல் படுகிறது
குடும்ப உறவுகளை கொன்று வீசிய அதிகாரம் ,அதை மன்னித்து எமக்கு வாழ்வு கொடுங்கள் ,உங்கள் வாக்கை தாருங்கள் என்றால் வலி தாங்கிய சமூகம் என்ன செய்யும் ..?
ஒற்றை புரிதல் கூட இல்லாத இனவாத ஆளும் அரசு ,எதிர்காலத்தில் தமிழரால் எமக்கு ஒருபொழுதும் வாக்கு தாராமாட்டார்கள்
என்பதை உணர்ந்த நிலையில் ,அந்த தமிழ் பேசும் மக்களை பழிவாங்கும் அரசியல் வலையை விரிந்துள்ளது .
அதற்குள் சிக்கி தவிக்கும் அப்பாவி தமிழர்களை காப்பாற்ற யார் வருவார் என தமிழர் சமூகம் கண்ணீருடன் தவிக்கிறது .
தமிழ் தேசியம் பேசும் தமிழ் அரசியல் கட்சிகள் ,அவர் தம் தனி நலனை முன் நிறுத்தி ,தமது குடும்ப உறவுகளுக்கு
சொத்து சேர்க்கும் சுய அரசியல் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளனர்
வெள்ளாதல் பாதிக்க பட்ட தமிழர் பகுதி புறக்கணிக்க பட்டதில் இருந்து நாம் இந்த விடயங்களை மிக துல்லியமாக அவதானிக்க முடிகிறது
வஞ்சிக்க பட்ட தமிழர் இனம் என்று எழுந்து நிமிரும் ..?இனவாத சிங்களத்தை என்று வேரோடு பிரட்டும் ..?
- வன்னி மைந்தன்-
பிக்குகளை ஆசிரிய ராக்கும் மகிந்தா
பிக்குகளை ஆசிரிய ராக்கும் மகிந்தா
இலங்கையில் ஆளும் பவுத்த வெறிபிடித்த மகிந்தா ,கோட்டாபய ஆட்சியில் படித்த பட்டதாரி பிக்குகளை
நாட்டின் முக்கிய சிங்கள பாடசாலைகளில் ஆசிரியராக பணியில் அமர்த்த ஆளும் இலங்கை பிரதமர் கட்டளை பிறப்பித்துள்ளார் ,
இவர்கள் மூலம் பவுத்த மத வழிப்பாட்டை மேலும் விஸ்தரிக்கவும் ,அடிப்படையில் சிங்கள மக்கள் மத்தியில்
,பவுத்த ,இன வரலாற்றை இடித்து இனவெறியை தூண்டவும் இந்த நகர்வை மகிந்தா மேற் கொண்டுள்ளார் .
இலங்கை ஒரு பவுத்த நாடு என்பதும் ,சிங்களவர்களே அதில் முதன்மை குடிகள் என்பதையும் ஆளும் இந்த வெறி பிடித்த
அரசு அதிகாரங்கள் தெரிவித்து வருகின்றமை குறிப்பிட தக்கது
ந
தலதா மாளிகைக்கு புறப்பட கோட்டபாய
தலதா மாளிகைக்கு புறப்பட கோட்டபாய
இலங்கையில் ஏழாவது நிறைவேற்று ஜனாதிபதி கோட்டபாய இன்று சிங்களவர்களின் புனித தளமாக போற்ற படும் தலதா மாளிகைக்கு பயணம் செய்துள்ளார் .
தமது ,அரசியல் அதிகாரத்தில் ஏறியதன் பின்னர் இவரது பயணம் இடம்பெற்றுள்ளது குறிப்பிட தக்கது
இலங்கையில் சொத்து வாங்க அஞ்சும் -வெளிநாட்டு தமிழர்
இலங்கையில் சொத்து வாங்க அஞ்சும் -வெளிநாட்டு தமிழர்
இலங்கையில் ஆளும் இனவாத அதிபர் கோத்தபாயா அரசு நாள்தோறும் அதிரடி அறிவிப்புக்களை ,புதிய
நடைமுறைகளையும் புதிதாக அமூல் படுத்தி வரும் நிலையில் மக்கள் மத்தியில் ஒருவித அச்ச உணர்வு மேலோங்கியுள்ளது .
இதன் அடிப்படையில் சமீப நாட்களில் இலங்கையில் சொத்துக்கள் வாங்குபவர்கள் அதனை ஐந்து வருடத்திற்கு
முன்னர் விற்பனை புரிந்தால் ,ஐம்பது வீதம் வரிசெலுத்த வேண்டும் என
கோட்டா அரசு அறிவித்துள்ள நிலையில் புலம் பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் இலங்கையில் அசையா
சொத்துக்களை வாங்கி குவிப்பதில் பின் நகரத்து செல்கின்றனர் .
இங்கிருந்து வந்து இலங்கையில் பல வணிக வளாகங்கள் ,மற்றும் கல்யாண மண்டபங்கள் ,விவசாய காணிகள்
இலங்கையில் சொத்து வாங்க அஞ்சும் -வெளிநாட்டு தமிழர்
,பண்ணைகள் என பல் துறை சார் விடயங்களை மேற்கொண்ட தமிழர்கள்
அச்சத்தின் பிரதி காரணமாக பின்வாங்கி செல்வதுடன் ,அவர் தாம் வாழும் வெளிநாடுகளில் அசையாத
சொத்துக்களை வாங்கி குவிப்பதில் தீவிர கவனம் செலுத்து வருகின்றனர் .
கோட்டபாய அரசில் அங்கம் வகிக்கும் தமிழர்கள் ,மற்றும் கட்சிகளுக்கு பேரம்பேசி லஞ்சம் வாங்கி கொடுக்கும் முகவர்கள்,தரகர்கள் ,ஐடியா மணிக்கல் கூட இந்த
விடயத்தை அவருக்கு எடுத்து விளக்கி அதனை மாற்றம் செய்திட முனைய வில்லை என்பது கவனிக்க தக்கது .
இலங்கையின் வடக்கு ப்குதியில் அசையாத சொத்துக்கள் வாங்கிய தமிழர்களில் சிலர் நம்முடன் உரையாடும் பொழுதே மேற்படி விடயத்தினை தெரிவித்தனர் .
செல்வந்தர்களாக விளங்கும் இவர்களது எண்ணங்களில் இந்த மாற்றத்தை ஏற்படுத்த காரணமாக அமைந்துள்ளவர் , ஆளும் இலங்கை ஜனாதிபதி கோட்டபாய மாற்றம் பிடித்துள்ளார்
புலம் பெயர் நாடுகளில் உள்ள தமிழர்களை இலங்கையில் முதலீடு புரியுமாறு அழைப்பு விடுத்துள்ள கோட்டா அரசு ,இவ்விதம் திடீர் சட்ட மாற்றங்களை ஏற்படுத்துவதால் இவர்கள் மத்தியில் அச்ச நிலை மேலோங்கியுள்ளது .
தொலை நோக்கு சிந்தனை அற்ற நிலையிலும் ,தமிழர் ,அல்லது இலங்கையர் மன நிலைகளை அறிந்து கொள்ள மறந்து இயல் படும் கொள்கை அற்ற
இனவாத சிந்தனை செயல் திட்டத்தின் செயல் வழி கதாநாயகனாக ஆளும் அதிபர் கோட்டபாய விளங்கி வருவதை, இவர்கள் என்ன மாற்றத்தின் புரிதல் ஊடாக அவதானிக்க முடிகிறது
- வன்னி மைந்தன் –
சரத் பொன்சேகா கைது செய்யப் படும் அபாயம்
சரத் பொன்சேகா கைது செய்யப் படும் அபாயம்
இலங்கையின் முன்னாள் இராணுவ தளபதியும் தமிழர்களை கோரமாக கொன்று குவித்தவரும் ,இன்றைய
மகிந்த கோட்டபாய அரசுகளின் நேரடி எதிரியுமாக விளங்கும்,விளங்கி வரும் சரத் பொன்சேகா கைது செய்ய படும் அபாயம் எழுந்துள்ளது .
கோட்டா ,மகிந்த சிந்தையின் நேரடி கைது வேட்டை பட்டியலில் இவரும் ஒருவராக இடம் பிடித்துள்ளாராம் .
விரைவில் இவரும் கைது செய்யப் படலாம் என கொழும்பு உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன .
பழி வாங்கும் அரசியலை நடத்தி செல்லும் ஆளும் இனவாத அதிபர் கோத்தபாயவின் கழுகு
பார்வை இவர் மீதும் வீழ்ந்துள்ளதாகவே அந்த உள்ளக வட்டாரங்கள் அலசுகின்றன.
இவ்வாறான தொடர் கைதுகள் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் எதிர்மறை விளைவுகளை ஆளும் அதிபர் கோத்தபாயாவுக்கு ஏற்படுததலாம் என நோக்கர்கள் தெரிவிக்கின்றனர் .
அவர் அதனையும் தாண்டி சிங்கள பவுத்த மக்கள் தனக்கு தகுந்த வாக்கினை வழங்கி தனி பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியில் அமர வைப்பார் என நம்புகிறார்
இது சாத்தியமா என்பதை எதிர்வரும் பங்குனி மாதம் தெரியவரும் .
சிங்கப்பூர் அரசுடன் கோட்டா பேச்சு
மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்திருக்கும் சிங்கப்பூர் சட்டம்
மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் காசி விஸ்வநாதன் சண்முகம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களை
சந்தித்தார். ஜனாதிபதி அவர்களும் அமைச்சர் சண்முகமும் இருநாடுகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு விடயங்கள் குறித்து விரிவாக கலந்துரையாடினர்.
ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற இக்கலந்துரையாடல் முக்கியமாக வர்த்தகம் மற்றும்
முதலீட்டு துறைகளில் இருதரப்பு உறவை மேம்படுத்துவதை மையமாகக் கொண்டிருந்தது. பயங்கரவாதத்தை எதிர்கொள்வது, இணையப் பாதுகாப்பு, தீவிரவாதத்தை
கட்டுப்படுத்துதல், வெளிநாட்டு அழுத்தங்கள் மற்றும் தலையீடுகளின் அச்சுறுத்தல்கள் மற்றும்
புலனாய்வுத்துறையை மேம்படுத்துதல் உள்ளிட்ட பிராந்திய முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
வெறுப்புப் பேச்சு, இணைய வழியாக தவறான தகவல்களை பரப்புதல் ஆகியவற்றிற்கு தீர்வு காணுதல் மற்றும் சமய நல்லிணக்கத்தை பேணுதல் தொடர்பாக சிங்கப்பூர்
அறிமுகப்படுத்தியுள்ள புதிய சட்டங்கள் குறித்தும் அவர்கள் கலந்துரையாடினர். வர்த்தக அபிவிருத்தி, செயற்பாடு மற்றும் ஊக்குவிப்புக்கு முக்கியத்துவம் வாய்ந்த தரவு
முகாமைத்துவத்தை வர்த்தகத் துறைகள் அதிகளவில் நம்பியிருக்கும் சமூக ஊடக புலனாய்வு மாதிரிகள் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.
டிஜிட்டல் மற்றும் ஆளடையாளத் தரவுகள் (பயோமெட்ரிக்) ஆகிய இரு துறைகளையும் இணைக்கும் மறுக்கமுடியாத
அடையாளமாக சிங்கப்பூர் தற்போது ஆராய்ந்து வரும் புதிய தொழில்நுட்பங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டன.
இந்த சுமுகமான கலந்துரையாடலைத் தொடர்ந்து, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் அமைச்சர்
சண்முகத்திற்கு ஜனாதிபதி அலுவலகத்தில் பகற் போசன விருந்தளித்தார். அதன் பின்னர் அமைச்சர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு புறப்பட்டுச் சென்றார்.
சிங்கப்பூர் அரசுடன் கோட்டா பேச்சு

கோட்டா ஆட்டத்தை ஆரம்பித்தார் – சிங்களவருக்கு வீழ்ந்தது ஆப்பு
இலங்கையில் கோட்டா ஆட்டத்தை ஆரம்பித்தார் – வீழ்ந்தது ஆப்பு
இலங்கையின் ஏழாவது நிறைவேற்று ஜனாதிபதியாக பபதவியேற்றுள்ள இலங்கை ஹிட்லர் கோட்டபாய
ராஜபக்சயா நாள் தோறும் புதிய அதிரடி மாற்றங்களை அறிவித்து வருகிறார் . .
இலங்கை லஞ்சம் ,ஊழல் அற்ற நாடாக மலரவேண்டும் என்ற கோட் பாட்டை அவர் முன்வைத்துள்ளார் .
அதற்கு அமைவாக இன்றில் இருந்து இலங்கையில் ஆட்டோக்கள் இறக்குமதி செய்திட தடை விதிக்க படுகிறது ,
மேலும் சாரதி அனுமதி பத்திரங்கள் பெறுபவர்கள் மருத்துவ சான்றிதழ் கண்ணபிக்க படவேண்டும்
தொடர்ந்து ஜனாதிபதியாக போட்டியிடும் நபர் ஒருவித வாக்குகள் பெற்றால் அவர் ஒரு கோடி அபராதம் செலுத்த வேண்டும் ,
மேலும் பகிடி வதைகள் இடம்பெற்றால் எட்டு வரும் கல்வி பயிலத்தடை ,வீதி போக்குவரத்து காவல்துறையினரை புதிதாக நியமிக்க பட்ட இரகசிய காவல்துறையினர் கண் காணிப்பார்கள்
இவர்கள் லஞ்சம் வாங்குவதாக குற்ற சாட்டு உள்ளது .எனவே இவர்களுக்கு லஞ்சம் வழங்கும் நபர்களாக இந்த இரகசிய போலீசாரே செயல் .படலாம்
, அவ்வாறு லஞ்ச பெற்றால் போலீசாரை இரு நாட்களில் பணி நீக்கம் செய்ய படுவார் இதே போலவே
கோட்டா ஆட்டத்தை ஆரம்பிதர் – சிங்களவருக்கு வீழ்ந்தது ஆப்பு
பாட சாலைகளிலும் ஆசிரியர்கள் லஞ்சம் பெற்றால் அவர்களுக்கும் இதே நிலை
என மக்களை ஒழுங்கு படுத்தும் ,வெள்ளையர்கள் நாடுகளில் உள்ள சட்ட திட்டங்கள் போல கோட்டபாய கொண்டு வந்துள்ளார் .
இது நாம் தமிழர் சீமானை காப்பி அடித்து கோட்டா வெளியிடுவதாக தெரிகிறது ,எனினும் இது வரவேற்க பட கூடிய ஒன்றாக உள்ளது .
லஞ்சத்தில் ஊதி பெருத்த சிங்களவர்கள் கோட்டபாய போடும் இந்த அதிரடி உத்தரவுகளிற்கு அடிபணிந்து செல்வார்களா …?
அல்லது இவரது ஆட்சியை கலைக்க முறைப்படுவார்களா ….?
லிபியாவின் கடாபி போல இலங்கையை மேலும் இருபது ஆண்டுகள் ஆண்டுவிட மகிந்த தரப்பு முனைவதை இந்த செயல் பாடுகள் எடுத்து காட்டுகின்றன .
எனினும் இந்த சர்வாதிகார போக்கு நாப்பது ஆண்டுகள் நோக்கி பயணிக்கும் எனின் உலக சண்டியர் அமெரிக்கா
தென் ஆசியாவிற்குள் ஊடுருவும் நாளை எதிர்பார்த்து கொண்டுள்ளது .
இந்த வேளையில் தமிழர்கள் பிரச்னை மீளவும் ஊந்தி தள்ள பட்டு இலங்கை ஒரு சுடுகாடாக மாற்றம் பெறும் நிலை உருவாகலாம் என்றே எதிர்பார்க்க படுகிறது .
நகர்ந்து செல்லும் காலங்கள் பல எதிர்மறை மாற்றங்களை இலங்கை,மற்றும் இலங்கை பிராந்தியத்தை சுற்றி வளைக்க போகிறது .
சீனாவின் ஆதிக்கம் இலங்கையில் அகல கால் ஊன்றிய நிலையில் அமெரிக்கா சீனா ,போர் இலங்கையில் இருந்து வெடிக்கும் சூழல் உள்ளது .
இதற்கு தமிழர்கள் தள்ள பட போகின்றனர் ,ஆம் அமெரிக்கா இலங்கைக்குள் காலடி வைத்தால் அவனை அகற்ற முடியாது என்பதற்கு ஈராக் ஒரு எடுத்து காட்டாக உள்ளது .
தமிழர் பிரச்சனைக்கு தீர்வை கண்டு ஆளும் இலங்கை அரசு செல்ல வேண்டும் தவறின் அமெரிக்கா சார்பு மேற்குலக
நாடுகள் இலங்கையை ஆக்கிரமிப்பதும் ,சீனா இந்தியாவுக்கும் எதிராக அவர்கள் களம் திரும்புவதும் தடுத்துவிட முடியாது
இலங்கை கொள்கை வகுப்பாளர்கள் இதனை சிந்திப்பார்களா …? ஈராக்,ஈரான் எதிரி நாடுகள் இன்று இவ்வாறு ஒன்றிணைந்தன .? இதற்கு காரணம் என்ன ..?
பவுத்த மத வெறியை தகர்த்தி முரண்பாடுகளை தீர்த்து வெளியில் இருந்து பெருக்கெடுக்கும் ஆபத்தை தனித்து ,
இணைந்த இலங்கைக்குள் இரு இனங்களும் நின்மதியாக வாழ வழிவகுக்க வேண்டும் .
இல்லாது விடின் மீளவும் இலங்கையில் முஸ்லீம்கள் பெயரால் பெரும் அழிவுகள் நடத்த படும் .பயங்கரவாதம் என்ற
போர்வையில் மீளவும் இலங்கையில் போர்க்களம் ஆகும் .இதனை எதிர்வரும் காலங்கள் வரலாறாக பதிய பெற போகின்றன .
அதற்குரிய ஆடுகளம் இப்பொழுது மலர்கிறது ,உஷாராகுமா …? இந்தியா ,இலங்கை ..?
பிராந்திய நலனை பாதுகாக்குமா ..? video
- வன்னி மைந்தன் –
புலிகளை அழித்த என்னை வெல்ல வையுங்கள் கோட்டா முழக்கம்
புலிகளை அழித்த என்னை வெல்ல வையுங்கள் கோட்டா முழக்கம்
தமிழீழ விடுதலை புலிகள் இலங்கை நாட்டுக்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கினார்கள் அவர்களை அழித்து இலங்கை முழுவதும் சிங்களவருக்கு சொந்தம் என்பதை நிலை நிறுத்திய என்னை வெல்ல வையுங்கள் என பிரதான வேட்ப்பாளரும் இரத்தக்கறை படிந்தவருமான கோட்டபாய முழங்கியுள்ளார் ,.இனவாதத்தை கக்கி நல்லிணக்கத்தை சிதைக்கும் முயற்சியில் கோட்டா நகர்ந்து செல்வது இதன் ஊடாக அம்பலமாகியுள்ளது
கோட்டாவே ஜனாதிபதி ஆவர் – விமல் வீரவன்சா முழக்கம்
இலங்கையில் இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் கோட்டபாய மிக சிறந்த வெற்றியை பெறுவார் என விமல் வீரவன்ச முழங்கியுளளார் .இவருக்கு எதிராக பல சூழ்ச்சிகள் மேற்கொள்ள பாடுவதாகவும் அதனை முறையடித்து இவர் உரிய வெற்றியை தீர்க்க தரிசனமாக பெறுவார் என அடித்து விட்டுள்ளார் .இறுதி சுற்று பிரச்சாரங்கள் தீவிரம் பெற்று வரும் நிலையில் களம் சூடு பிடித்துள்ளது
நாட்டை பாதுகாக்க ஓடிவரும்படி மக்கள் கேட்கிறார்களாம் – அடித்துவிடும் கோட்டா
நாட்டை பாதுகாக்க ஓடிவரும்படி மக்கள் கேட்கிறார்களாம் – அடித்துவிடும் கோட்டா
இலங்கையில் ஆளும் அரசினால் நாட்டை பாதுகாக்க இயலவில்லை அதனால் தன்னை வந்து ஆட்சியில் மறந்து நாட்டையும் மக்களையும் காப்பாற்றும் படி மக்கள் கண்ணீர் மல்க வேண்டுதல் விடுப்பதாக கோத்தபாய தெரிவித்துள்ளார் ,
இனவாதத்தை கக்கி வரும் கோட்டாவை தமிழர்கள் புறக்கணித்து யானையுடன் இணைந்திருப்பது இவ்வாறன விஷம சொற்பொழிவுகளினால் என்பதாக கோட்டபாய மறந்துவிட்டார் என படுகிறது
நகர்ப்புற அபிவிருத்தியில் கவனம் செலுத்துவோம் – அடித்து விடும் கோட்டா
இலங்கையில் – தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பிரதான வேட்பாளர்களின் உச்ச கட்ட பரப்புரைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன ,இதில் தாம் ஏது பேசுகிறோம் என தெரியாது தமது வாக்குறுதிகளை அடித்து விடும் நிலையில் கோட்டபாய உள்ளார்
இதில் தாம் ஆட்சிக்கு வந்தால் நகர்ப்புற அபிவிருத்தியில் கவனம் செலுத்துவோம் என அவர் தெரிவித்துள்ளார்
கோட்டா வேண்டாம் வெள்ளைவான் வேண்டாம் ரணில்
கோட்டா வேண்டாம் வெள்ளைவான் வேண்டாம் ரணில்
இலங்கை தேர்தலில் அன்னத்துக்கு வாக்களித்தால்,கோட்டா இல்லை வெள்ளை வான் இல்லை என யாழில் இடம்பெற்ற பிரச்சார கூட்டத்தில் பிரதமர் ரணில் தமிழில் உரையாற்றினார்.
முன்னர் ஊருக்குள் வெள்ளை வான் தான் வந்தது ஆனால் இன்று எமது ஆட்சியில் தொலைபேசி அழைப்பு கொடுத்தவுடன் அவசர சேவை ஆம்புலன்ஸ் தான் வருகின்றது என உரையாற்றியுள்ளார் .
கோட்டா வேண்டாம் வெள்ளைவான் வேண்டாம் எனக்கு ஒட்டு போடுங்கள் என்கிறார் ரணில் விக்கிரமசிங்கே .






