Tag: கைது
பொலிஸ் உத்தியோகத்தரின் கொலை தொடர்பாக சந்தேகத்தின் பேரில் 15 பேர் கைது
பொலிஸ் உத்தியோகத்தரின் கொலை தொடர்பாக சந்தேகத்தின் பேரில் 15 பேர் கைது
காட்டு யானை தாக்குதலுக்கு உள்ளாகி கிராமவாசி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில், கெப்பட்டிகொல்லாவ, ரம்பகெப்புவாவ கிராம மக்கள் கடந்த 31 ஆம் திகதி இரவு அமைதியின்மையை ஏற்படுத்தி
கெப்பட்டிகொல்லாவ பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை காயப்படுத்தி கொலை செய்த சம்பவம் தொடர்பாக தேரர் ஒருவர் உட்பட 15 கிராமவாசிகளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இவர்களில் 2 பெண்களும் அடங்குவர் , இந்த கொலையுடன் தொடர்புடைய மேலும் சிலரை கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
மக்களை தூண்டிவிட்டு, பொலிஸாருடன் மோதச் செய்ததாக கூறப்படும் கெப்பட்டிகொல்லாவ, ரம்பகெப்புவவ பிரதேசத்தின் போதிருக்காராம விகாரையின் 29 வயதுடைய தேரர் உட்பட 9 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த விகாரையில் இந்த தேரர் மாத்திரமே தங்கியுள்ளார்.
பொலிஸ் உத்தியோகத்தரின் கொலை தொடர்பாக சந்தேகத்தின் பேரில் 15 பேர் கைது
இவர் சில காலம் இராணுவத்தில் கடமையாற்றி அதிலிருந்து விலகியதன் பின்னர் பிக்குவாக மாறியுள்ளார் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த தேரர் மற்றும் குறித்த விகாரையில் உள்ள உதவியாளர் உட்பட நால்வர் கடந்த 31 ஆம் திகதி கைது செய்யப்பட்டுள்ளனர். ஏனைய சந்தேகநபர்கள் நேற்று (01) கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன், இலக்கம் 43/A, டயஸ் வத்த, மல்வான, வாரியபொல என்ற முகவரியில் வசித்து வந்த பொலிஸ் உத்தியோகத்தரான ஏ.பி. சுனில் (12601) என்ற 54 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு
தாக்குதலுக்குள்ளாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த அதிகாரியின் தலையில் தடியால் தாக்கப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
- எதிர்க்கட்சித் தலைவர் ஐக்கிய அரபு அமீரகத் தூதரைச் சந்தித்தார்

- சவூதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்கொள்ளும் இலங்கையருக்கு மன்னிப்புக் கோரி ஹட்டன் இளைஞர்கள் மௌனப் போராட்டம்

- மகாவலி ஆற்றங்கரையோரம் மக்களுக்கு வெள்ளப்பெருக்கு எச்சரிக்கை

- 2026-ஆம் ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் சுற்றுலா வருவாய் சரிவு

- கனமழைக்கு மத்தியில் ஹட்டன்–போகவந்தலாவ சாலையில் நிலச்சரிவு

ஈராக்கில் ஐ எஸ் தீவிரவாத தலைவர் கைது
ஈராக்கில் ஐ எஸ் தீவிரவாத தலைவர் கைது
ஈராக் கிக்கிருத் பகுதியில் ஈராக்கிய அரச இராணுவத்தினர் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் பொழுது ,ஐ எஸ் அமைப்பை சேர்த்த முக்கிய குழு தலைவர் கைது செய்யப் பட்டுள்ளனர் .
இராணுவத்தினருக்கு கிடைக்க பெற்ற ,இரகசிய தகவலை அடுத்து ,குறித்த தளபதி கைது செய்யப் பட்டுள்ள்ளார் .
ஈராக்கிய இராணுவத்தினர் மீது தொடர்ச்சியான குண்டு தாக்குதல்களை ,ஐ எஸ் தீவிரவாத அமைப்பினர் நடத்திய வண்ணம் உள்ளனர் .
இவ்வாறன கால பகுதியில் ,அந்த குழுவை தலைமை ஏற்று வழி நடாத்தி தாக்குதலில் ஈடுபட்ட, முக்கிய தளபதியே கைது செய்யப்பட்டுள்ளதாக ,ஈராக்கிய இராணுவம் அறிவித்துள்ளது .
- ஹோர்முஸ் நீர்வழிப்பாதை திறக்கப்படாது ஈரான்

- சீனா தலைமையிலான டிஜிட்டல் நாணயத் தளத்திலிருந்து சவூதி அரேபியா விலகுகிறது

- அமெரிக்காவுடனான போர் நீடிப்பதால் ஈரான் ‘போரிட்டுப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்’

- அமைச்சர்கள் உட்பட ஆயிரக்கணக்கான இஸ்ரேலியர்களுடன் நெதன்யாகு மேற்குச் சுவர் சதுக்கத்திற்குள் நுழைந்தார்

- லெபனானில் இஸ்ரேலியப் படைகள் இடிப்பு நடவடிக்கை

வீட்டில் பதுக்கி வைக்க பட்ட ஆயுதங்களுடன் ஆறு பேர் கைது
வீட்டில் பதுக்கி வைக்க பட்ட ஆயுதங்களுடன் ஆறு பேர் கைது
இலங்கை வெல்லாம் பிட்டிய பகுதியில் வீடொன்றில் சட்டவிரோதமாக பதுக்கி வைக்க பட்ட வாள்கள் ,கத்திகள் மற்றும் ஆயுதங்களுடன் ஆறு பேர் கைது செய்ய பட்டுள்ளனர் .
இவர்களினால் பதுக்கி வைக்க பட்ட ,கொடிய கூரிய ஆயுதங்கள் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
காவல்துறையினருக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலை அடுத்து ,குறித்த வீடு சுற்றிவளைக்க பட்டு ஆயுதங்கள் மீட்க பட்டுள்ளன .
குறித்த குழுவினர் ,கொள்ளை மற்றும் ,சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு இருக்கலாம் என சந்தேகிக்க படுவதால் ,உரிய முறை கவனிப்புடன் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
- எதிர்க்கட்சித் தலைவர் ஐக்கிய அரபு அமீரகத் தூதரைச் சந்தித்தார்

- சவூதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்கொள்ளும் இலங்கையருக்கு மன்னிப்புக் கோரி ஹட்டன் இளைஞர்கள் மௌனப் போராட்டம்

- மகாவலி ஆற்றங்கரையோரம் மக்களுக்கு வெள்ளப்பெருக்கு எச்சரிக்கை

- 2026-ஆம் ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் சுற்றுலா வருவாய் சரிவு

- கனமழைக்கு மத்தியில் ஹட்டன்–போகவந்தலாவ சாலையில் நிலச்சரிவு

தங்க நகை கொள்ளையில் ஈடுபட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவர் கைது
தங்க நகை கொள்ளையில் ஈடுபட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவர் கைது
இலங்கை பேராதனை பகுதியில் வாடகைக்கு வீடு அமர்த்தி செல்லும் போர்வையில் சென்ற நபர்கள் ,பெண்ணை கட்டி வைத்து தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர் .
இந்த கொள்ளையில் ஈடுபட்டவர்களில் ,17 வயது முதல் ஐம்பது வயதானவர்கள் என கண்டறிய பட்டுள்ளது
கொள்ளையடிக்க பட்ட நகைகள் அரைவாசி விற்றும் ,அரைவாசி அடகு வைத்துள்ளது தெரிய வந்துள்ளது .
கைதானவர்கள் யாவரும் காவல்துறை விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் பாரப்படுத்த பட்டுள்ளனர் .
நாள்தோறும் தொடரும் கொள்ளைகள் மக்கள் மத்தியில் அச்ச நிலை ஏற்பட்டுள்ளது .
- எதிர்க்கட்சித் தலைவர் ஐக்கிய அரபு அமீரகத் தூதரைச் சந்தித்தார்

- சவூதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்கொள்ளும் இலங்கையருக்கு மன்னிப்புக் கோரி ஹட்டன் இளைஞர்கள் மௌனப் போராட்டம்

- மகாவலி ஆற்றங்கரையோரம் மக்களுக்கு வெள்ளப்பெருக்கு எச்சரிக்கை

- 2026-ஆம் ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் சுற்றுலா வருவாய் சரிவு

- கனமழைக்கு மத்தியில் ஹட்டன்–போகவந்தலாவ சாலையில் நிலச்சரிவு

- தித்வா புயலால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு ரூ. 2.27 பில்லியனுக்கும் அதிகமான சேதம்

- விசா மோசடி குற்றச்சாட்டின் பேரில் 48 கடவுச்சீட்டுகளுடன் முன்னாள் குடிவரவுத் திணைக்கள ஊழியர் கைது

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடலுக்காக ஆரஞ்சு எச்சரிக்கை

- ரியாத் மீது ஹூதிகள் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து மத்திய கிழக்கில் பதற்றம்

- கண்டி, கேகாலை மற்றும் நுவரெலியாவில் உள்ள பல பகுதிகளுக்கு சிவப்பு நிலச்சரிவு எச்சரிக்கை

223 லடசம் கொள்ளை முறியடிப்பு கோட்டா கட்சி உறுப்பினர் கைது
223 லடசம் கொள்ளை முறியடிப்பு கோட்டா கட்சி உறுப்பினர் கைது
இலங்கை தம்புதேமாவில் 223 லட்சம் ரூபாவை வங்கியில் வைப்பிலிட பயணித்த வர்த்தகர் ஒருவரை பின்தொடர்ந்த இரு கொள்ளையர்கள், அவர் மீது தாக்குதல் நடத்தி விட்டு, பணத்தை கொள்ளையடித்து தப்பி சென்றுள்ளனர் .
அவ்விடத்தில் காணப்பட்ட காவல்துறை சார்யன்ட் ஒருவர் ,கொள்ளையர்களை விரட்டி பிடித்துள்ளார்
இந்த காவல் துறை அதிகாரியின் செயல் மக்களினால் பாராட்ட பெறுவதுடன் ,மூத்த காவல்துறை அதிகாரிகள் அவருக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர் .
இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்டவர்கள் ,கோத்தபாயாவின் மொட்டு கட்சியை சேர்ந்தவர்கள் என கணடறிய பட்டுள்ளது .
துணிகர கொள்ளையை நடத்திய திருடர்கள் கைது செய்ய பட்டுள்ளனர்
- எதிர்க்கட்சித் தலைவர் ஐக்கிய அரபு அமீரகத் தூதரைச் சந்தித்தார்

- சவூதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்கொள்ளும் இலங்கையருக்கு மன்னிப்புக் கோரி ஹட்டன் இளைஞர்கள் மௌனப் போராட்டம்

- மகாவலி ஆற்றங்கரையோரம் மக்களுக்கு வெள்ளப்பெருக்கு எச்சரிக்கை

- 2026-ஆம் ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் சுற்றுலா வருவாய் சரிவு

- கனமழைக்கு மத்தியில் ஹட்டன்–போகவந்தலாவ சாலையில் நிலச்சரிவு

போதைக்கு அடிமையாகி 10 பேர் மரணம் 320 பேர் கைது
போதைக்கு அடிமையாகி 10 பேர் மரணம் 320 பேர் கைது
யாழ்ப்பாணத்தில் போதைக்கு அடிமையாகி 10 பேர் பலியாகியும் , 320 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் .
கைதானவர்கள் யாவரும் போதைவஸ்துடன் கைது செய்ய பட்டுள்ளனர் .
1995 ஆண்டு இலங்கை இராணுவத்திடம் யாழ்ப்பாணம் வீழ்ந்த பின்னர் ,.யாழ்ப்பாணம் முற்றாக போதையின் தலை நகராக மாற்றம் பெற்றுள்ளது .
சமூக சீர்கேடுகள் மற்றும் போதைக்கு அடிமையான வாலிபர்கள் உருவாக்க பட்டுள்ளனர் .
இதுவே இந்த மரணத்திற்கு காரணமாகவும் அமைந்துள்ளது .
- ஹோர்முஸ் நீர்வழிப்பாதை திறக்கப்படாது ஈரான்

- சீனா தலைமையிலான டிஜிட்டல் நாணயத் தளத்திலிருந்து சவூதி அரேபியா விலகுகிறது

- அமெரிக்காவுடனான போர் நீடிப்பதால் ஈரான் ‘போரிட்டுப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்’

- அமைச்சர்கள் உட்பட ஆயிரக்கணக்கான இஸ்ரேலியர்களுடன் நெதன்யாகு மேற்குச் சுவர் சதுக்கத்திற்குள் நுழைந்தார்

- எதிர்க்கட்சித் தலைவர் ஐக்கிய அரபு அமீரகத் தூதரைச் சந்தித்தார்

இந்தியா செல்ல முயன்ற எட்டு பேர் கைது
இந்தியா செல்ல முயன்ற எட்டு பேர்கைது
இந்தியா செல்ல முயன்ற எட்டு பேர் கடல் படையல் கைது செய்யப்பட்டு .காவல்துறையிடம் ஒப்படைக்க பட்டுள்ளனர் .
தலை மன்னர் கடல் வழியாக இந்தியாவுக்கு படகில் செல்ல முயன்ற பொழுது ,கடல் படையால் கைது செய்ய பட்டனர் .
இவ்வாறு கைதானவர்கள் தற்போது நீதி மன்றில் பார படுத்த பட்டுள்ளனர் .
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதர நெருக்கடி காரணமாக, இலங்கையில் இருந்து ,இந்தியாவுக்கு மக்கள் அகதிகளாக சென்ற வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது .
கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்க சஜித் சொல்லிட்டாரு விடுதலை சாத்தியமா
கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்க சஜித் சொல்லிட்டாரு விடுதலை சாத்தியமா
இலங்கையில் ஆளும் அரசுகளுக்கு எதிராக போராட்டத்த்தில் ஈடுபட்ட மக்கள் கைது செய்யப்பட்ட வண்ணம் உள்ளனர் .
இவ்வாறு காரணமின்றி கைது செய்யப்பட்டவர்களை ,உடனடியாக விடுதலை செய்திடும் படி ,எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா வேண்டுதல் விடுத்துள்ளார் .
சஜித் பிரேமதசா கோரிக்கையை அடுத்து ,கைது செய்யப்பட்டவர்கள் விடுதலை செய்ய ,போடுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது
மக்கள் போராட்டங்களை அடக்கிட ,மக்களை மிரட்டும் கைதுகள் தொடர்ச்சியாக இடம்பெற்ற வண்ணம் உள்ளமை இங்கே குறிப்பிட தக்கது .
ஆயுத கடத்தல் மன்னர்கள் கைது – இலவசமாக கிடைத்த ஆயுதம்
ஆயுத கடத்தல் மன்னர்கள் கைது – இலவசமாக கிடைத்த ஆயுதம்
ஈரான் எல்லைவழியாக ஆயுதம் கடத்தி வந்த ,கடத்தல் மன்னர்கள் ஈரான் இராணுவத்தால் சிறை பிடிக்க பட்டுள்ளனர் .
இவ்வாறு சிறை பிடிக்க ஆயுத கடத்தல் மன்னர்களில் சிலர் ,நேரடியாக தீவிர வாத குழுவினருடன் தொடர்பில் இருந்துள்ளனர் .
அவர்களுக்கே இவர்கள் ஆயுதங்களை கடத்தி ,விற்று வந்துள்ளது அம்பலமாகியுள்ளது .
கைது செய்யப்பட்டவர்களிடம், தீவிர விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .
இவர்களது தொடர்பில் இருந்த ,தீவிரவாத குழுக்களை சேர்ந்த சிலரும் அதிரடியாக கைது செய்ய பட்டுள்ளனர் .
ஈரானில் இவ்வாறான கடத்தலில் ஈடுபட்டவர்கள் ,கைது செய்ய பட்டால் ,அவர்களுக்கு மக்கள் பார்க்க தூக்கு தண்டனை வழங்க படுகிறது .
இவர்கள் கடத்தி வந்த ஆயுதங்கள் யாவும் ,ஈரானுக்கு இலவசமாக தற்போது சென்றடைந்துள்ளது குறிப்பிட தக்கது .
பல்கலைக்கழக மாணவர்கள் மீது தாக்குதல் 25 பேர் கைது
பல்கலைக்கழக மாணவர்கள் மீது தாக்குதல் 25 பேர் கைது
இலங்கை ; அனைத்துலக பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய, ஆர்ப்பாட்டத்தின் பொழுது ,அந்த மாணவர்களை இலங்கை காவல்துறையினர் தாக்குதலை நடத்தினர் .
எதிரிகளை போன்று மாணவர்களை காவல்துறையினர், சரமாரியாக தாக்கிய காட்சிகள் ,சமூக வலைத்தளங்களில் பரவிய வண்ணம் உள்ளது.
பல்கலைக்கழக மாணவர்கள் பெண்கள் ,ஆண்களை தரையில் இழுத்து செல்லும் காட்சிகள் ,இலங்கை காவல்துறையின் கீழ்த்தரமான செயலை கண்டித்து மக்கள் ,கருத்துக்கள் பகிர்ந்த வண்ணம் உள்ளனர்.
இலங்கை காவல்துறையினர் பல்கலைக்கழக மாணவர்கள் ,மீது நடத்திய தாக்குதலை அடுத்து ,
மக்கள் போராட்டம் மீளவு வெடிக்கலாம் என எதிர் பார்க்க படுகிறது.
மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தும் காட்சிகள் பார்க்க இதில் அழுத்துங்கள்
பாடசாலை மாணவிகளை துஸ்பிரயோகம் செய்தமை: சங்கீத ஆசிரியர் கைது
பாடசாலை மாணவிகளை துஸ்பிரயோகம் செய்தமை: சங்கீத ஆசிரியர் கைது
தரம் 10ல் கல்வி கற்கும் மூன்று பாடசாலை மாணவிகளை துன்புறுத்திய குற்றச்சாட்டில் டிக்வெல்ல பாடசாலை சங்கீத பாட ஆசிரியர் ஒருவரை சந்தேகத்தின் பேரில் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சங்கீத வகுப்புக்கு சென்ற மூன்று சிறுமிகளிடம் தகாத முறையில் நடந்துகொண்டதின் பெயரில் கிடைத்த முறைப்பாடுகளின் விசாரணைகளின்
அடிப்படையில், குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாடசாலை மாணவிகளை துஸ்பிரயோகம் செய்தமை: சங்கீத ஆசிரியர் கைது
குறித்த சிறுமிகளின் பெற்றோர்கள் குழந்தை பராமரிப்பு அதிகாரிகளிடம் புகார் அளித்ததையடுத்து, பொலிசார் விசாரணைகளை தொடங்கி
உள்ளத்துடன், இதனுடன் தொடர்புடைய 14 மற்றும் 15 வயதுடைய மூன்று பள்ளி மாணவிகளையும் மருத்துவப் பரிசோதனைக்காக ஜே.எம்.ஓ.வுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர் 38 வயதான நபர் எனவும், அவரை மாத்தறை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பெண் எம்பி வீட்டுக்குள் நுழைய முயன்ற நபர் கைது
பெண் எம்பி வீட்டுக்குள் நுழைய முயன்ற நபர் கைது
இலங்கையின் MP Kokila Harshani Gunawardena’s எம்பியின் வீட்டுக்குள் நுழைய முயன்ற வாலிபர் கைது செய்ய பட்டுள்ளார் .
இருபத்தி ஐந்து வயதுடைய, வாலிபர் ஒருவர் ,இந்த எம்பியின் வீட்டுக்குள், நுழைய முன்றபோது ,காவல்துறையால் கைது செய்ய பட்டுள்ளார்.
இந்த வாலிபர் ஏன் .இந்த எம்பியின் வீட்டுக்குள். நுழைய முயன்றார் என்பது தொடர்பில் ,விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன.
வாலிபர் கைது செய்யப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்க பட்டு வருகின்றது .
வெளிநாடு செல்ல முயன்ற10 பேர் கைது
வெளிநாடு செல்ல முயன்ற10 பேர் கைது
இலங்கையில் இருந்து காடல் வழியாக வெளிநாடு செல்ல தயராகி கொண்டிருந்த 10 பேர் கைது செய்ய பட்டுள்ளனர்.
ஆபத்தான கடல் வழியாக , வெளிநாட்டுக்கு இலங்கையர்கள் சென்ற வண்ணம் உள்ளனர்.
அவ்வாறு , தலைமன்னார் கடல் பகுதியில் இருந்து ,படகு மூலம் ,வெளிநாடு ,செல்ல தயாராகி கொண்டிருந்த வேளை இவர்கள் கைது செய்ய பட்டுள்ளனர் .
கைதானவர்கள் ,கடற்படை விசாரணைகளின் பின்னர் .,காவல்துறையிடம் பார்ப்படுத்த பட்டுள்ளனர்.
கொக்கைனுடன் போலந்து நாட்டவர கைது இதன் பெறுமதி 24.5 கோடி
கொக்கைனுடன் போலந்து நாட்டவர கைது இதன் பெறுமதி 24.5 கோடி
சுமார் 24.5 மில்லியன் ரூபா பெறுமதியான கொக்கைன் போதைப்பொருளுடன் போலந்து நாட்டைச் சேர்ந்த பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலைய சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் கொலம்பியாவில் இருந்து கட்டார் ஊடாக கட்டுநாயக்கவிற்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சந்தேகநபரின் பயணப் பையில் இருந்து 5 கிலோவுக்கும் அதிகமான கொக்கைன் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், குறித்த சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்
துப்பாக்கி வைத்திருந்த பொலிஸ் அதிகாரி கைது
துப்பாக்கி வைத்திருந்த பொலிஸ் அதிகாரி கைது
இலங்கையில் பொலிஸ் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற முன்னாள் பொலிஸ் அதிகாரி ஒருவர் கைதுப்பாக்கியுடன் கைது செய்ய பட்டுள்ளார்.
இந்த பொலிஸ் அதிகாரியிடம் இருந்து சிறியரக துப்பாககி மற்றும் தோட்டாக்கள் என்பன மீட்க பட்டுள்ளன .
கைதானவர் பொலிஸ் அதிகாரி விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முன்னிலை படுத்த பட்டுள்ளார்.
துப்பாக்கி வைத்திருந்த குற்ற சாட்டில் பொலிஸ் அதிகாரி கைது செய்ய பட்டுள்ள செயல் மக்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த பொலிஸ் அதிகாரி சட்டவிரோதமாக துப்பாக்கியை பயன் படுத்தி குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்திருக்கலாம் என எதிர் பார்க்க படுகிறது .
மிரட்ட படும் போராட்ட காரர்கள் தொடரும் கைது
மிரட்ட படும் போராட்ட காரர்கள் தொடரும் கைது
அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டமை மற்றும் பொதுமக்கள் போராட்டத்தின் போது ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திற்குள் பலவந்தமாக பிரவேசித்த குற்றச்சாட்டின் பேரில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த மே மாதம் 28 ஆம் திகதி இடம்பெற்ற போராட்டத்தின் போது, கோட்டை இலங்கை வங்கிக்கு அருகில் சட்டவிரோதமாக ஒன்று கூடி பொதுச் சொத்துக்களுக்கு சேதம்
விளைவித்தமை மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தமை ஆகிய குற்றச்சாட்டில் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் ஜுலை 09 ஆம் திகதி முன்னெடுக்கப்பட்ட மக்கள் போராட்டத்தின் போது கோட்டையிலுள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திற்குள் பலவந்தமாக பிரவேசித்ததாகவும் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
மிரட்ட படும் போராட்ட காரர்கள் தொடரும் கைது
குறித்த சந்தேக நபர் கொஸ்வத்த பிரதேசத்தை சேர்ந்த 32 வயதுடைய நபர் எனவும், அவர் (08) பொலிஸில் சரணடைந்த பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை,இன்னுமொரு நபர் பொதுமக்கள் போராட்டத்தின் போது கொழும்பில் உள்ள பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லமான அலரிமாளிகைக்குள் பலவந்தமாக நுழைந்த குற்றச்சாட்டுக்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் ஜூலை 09ஆம் திகதி அலரிமாளிகையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் மற்றும் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை தொடர்பில் பொலிஸாரால்
மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து குறித்த சந்தேகநபர்
கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாழில் நாயை அடித்து கொன்ற இருவர் கைது
யாழில் நாயை அடித்து கொன்ற இருவர் கைது
யாழ்ப்பாணத்தில் நாய் ஒன்றினை மிக கொடூரமான முறையில் படுகொலை செய்து அதனை காணொளி எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட
குற்றத்தில் பொலிஸாரினால் தேடப்பட்டு வந்தவர்களில் இருவர் கைது நேற்று (04) ஊர்காவற்துறை பொலிஸாரினால் செய்யப்பட்டுள்ளனர்.
புங்குடுதீவு 09 ஆம் வட்டாரத்தை சேர்ந்த நான்கு இளைஞர்கள், கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் நாய் ஒன்றின் நாலு கால்களையும் கைக்கோடாரி
ஒன்றினால் துண்டித்து, நாயின் முகத்தினை மரக்கட்டை ஒன்றின் மீது வைத்து கைக்கோடாரியால் கொத்தி முகத்தை சிதைத்து படுகொலை செய்துள்ளனர்.
தமது கொடூரமான செயலினை காணொளியாக பதிவு செய்து அதனை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தும் உள்ளனர்.
யாழில் நாயை அடித்து கொன்ற இருவர் கைது
இந்த சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.
அதன் அடிப்படையில் சம்பவத்தை காணொளி எடுத்தவர் அதனை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டவர் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்தவர்கள் எனும் குற்றத்தில் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அதேவேளை, சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் தலைமறைவாகியுள்ளதாகவும் ,
அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாழில் வாள்களுடன் திருடர்கள் மடக்கி பிடிப்பு
யாழில் வாள்களுடன் திருடர்கள் மடக்கி பிடிப்பு
இலங்கை .யாழ்ப்பாணம் ; வட்டுக்கோட்டை பகுதியில் வாள்களுடன் நடமாடிய திருடர்கள் மக்களினால் பிடிக்க பட்டனர் .
வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டு வந்த கும்பலை சேர்ந்த மூவர் மோட்டார் சைக்கிளில் பயணித்த பொழுது அவர்களை கண்ணுற்ற மக்கள் அவர்களை துரத்தினர்.
இதன் பொழுதே ,அவர்கள் தப்பிக்க முற்பட்ட வேளையில் மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கியது .
அவ்வேளை வாள்களை போட்டு இருவர் தப்பித்து ஓடியுள்ளனர் .
ஒருவர் மக்களினால் பிடிக்க பட்டு காவல்துறையினரிடம் ஒப்படைக்க பட்டுள்ளார்.
காவல்துறையால் அப்பாவி மக்கள் 13 பேர் கைது
காவல்துறையால் அப்பாவி மக்கள் 13 பேர் கைது
இலங்கை ; இலங்கையில் எரிபொருள் பெற்றிட எரிபொருள் நிலையங்களுக்கு அருகில் நின்ற 13 பேர் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் வன்முறையில் ஈடுபட்டார்கள் என்ற குற்ற சாட்டில் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மக்கள் மத்தியில் மோதல் நிலை ஏற்படுத்தி அமைதியின்மை விளைவித்தனர் என்கின்ற குற்ற சாட்டில் இந்த அப்பாவி மக்கள் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் விசாரணையின் பின்னர் நீதிமன்றில் பாரப்படுத்த உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கள்ள மணல் ஏற்றிய கும்பல் யாழில் கைது
கள்ள மணல் ஏற்றிய கும்பல் யாழில் கைது
இலங்கை ,யாழ்ப்பாணம், – கொடிகாமம் கெற்பேலி பகுதியில் உளவு இயந்திரம் மூலம் மணலை ஏற்றியவர்கள் இராணுவத்தால் கைது செய்யப் பட்டுள்ளனர் .
கொடி காமம் பகுதியியில் கள்ள மணல் ஏற்றுவதாக இராணுவத்தினருக்கு கிடைக்க பெற்ற தகவலை அடுத்து விரைந்து வந்த இராணுவத்தினர் மணல்
ஏற்றியவர் இருவரை கைது செய்ததுடன் உளவு இயந்திரமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மேலும் இதுகுறித்த விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளது .






















