Tag: எச்சரிக்கை
பிரிட்டனில் வற்றிய நீர் நிலைகள் மக்களுக்கு எச்சரிக்கை
பிரிட்டனில் வற்றிய நீர் நிலைகள் மக்களுக்கு எச்சரிக்கை
பிரிட்டன் ; பிரிட்டன் நாட்டில் கடந்தவாரம் இடம்பெற்ற அகோர வெப்ப நிலை காரணாமாக நீர் நிலைகள் வற்றிய நிலையில் காட்சியளித்தன .
பிரிட்டனில் 1976 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெப்ப நிலையின் பின்னர் கடந்த வாரம் இடம் பெற்ற வெப்பத்தினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது .
பிரித்தானியாவில் இடம்பெற்ற அகோர வெப்ப நிலை காணமாக இரண்டு நாட்களில் 13 பேர் பலியாகி இருந்தனர் ,மேலும் பலர் அதிக வெப்ப நிலை
தாக்கத்தினால் பாதிக்க பட்டு இருந்தத்துடன் நீர் நிலகைகள் வற்றிய நிலையில் காட்சியளித்தன .
பிரிட்டனில் வற்றிய நீர் நிலைகள் மக்களுக்கு எச்சரிக்கை
இவ்விதமான சூழல் எதிர் காலத்தில் மேலும் அதிகரிக்க கூடும் என கூறப்படுகிறது .
வெப்பநிலை அதிகரித்தால் பூமியில் வாழும் உயிரினங்கள் அதிக வெப்பத்தை
ஏற்றுக்கொள்ள முடியா நிலையில் மரணிக்கும் வாய்ப்பு உள்ளதாகவும் நீர்
நிலைகள் வற்றிவிட்டால் உயிரினம் வாழமுடியா சூழல் ஏற்படும் என்கின்ற மிரட்டல் கணிப்புக்கள் மக்களை பீதியில் உறைய வைத்துள்ளன .
எட்டு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை
நாட்டின் எட்டு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பு, காலி, களுத்துறை, நுவரெலியா, மாத்தறை மாவட்டங்களில் வசிக்கும் மக்கள் இதுபற்றி எச்சரிக்கையாக இருப்பது அவசியமாகும்.
கேகாலை மாவட்டத்தின் தெஹியோவிட்ட, புளத்கொஹுபிட்டிய, வரக்காபொல ஆகிய நகரங்களுக்கும், மாத்தறை மாவட்டத்தின் கொட்டபொல, பிட்டபெத்தர ஆகிய பகுதிகளுக்கும் இரண்டாம் கட்ட மண்சரிவு எச்சரிக்கை அறிவித்தல்
விடுக்கப்பட்டுள்ளது. இரத்தினபுரி மாவட்டத்தின் கிரி-அல்ல, பெல்மடுல்ல, அயகம, நிவித்திகல ஆகிய பிரதேசங்களிலும் மண்சரிவு அபாயம் காணப்படுகிறது.
இரத்தினபுரி மாவட்டத்தின் அலபாத்த, கலவான, குருவிட்ட, எஹலியகொட ஆகிய நகரங்களுக்கு மண்சரிவு தொடர்பான சிவப்பு எச்சரிக்கை அறிவித்தல்
விடுக்கப்பட்டுள்ளது. மண்சரிவு பற்றிய அறிகுறிகள் தென்படுமாயின் அங்குள்ளவர்கள் உடனடியாக பாதுகாப்பான பகுதிகளுக்குச் செல்வது அவசியமாகும். இதுபற்றிய
மேலதிக தகவல்களை 117 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ள முடியும்.
நாட்டின் பல்வேறு ஆறுகளினதும் நீர்மட்டம் அதிகரித்திருக்கிறது. மாதுலுஓயா, குடாகங்கை என்பனவற்றின் நீர்மட்டம் அதிகரித்துள்ளமையால் பத்தேகம, வெலிவிட்ட
, நியாமகம, நெலுவ, அக்மீமன, நாகொட, அல்பிட்டிய, போபே, போத்தல ஆகிய இடங்களின் தாழ்நிலப் பிரதேசங்களில் சிறு வெள்ளம் ஏற்படலாம். நில்வளா கங்கை – அளுத்கம – கல்ஹாகொட ஆகிய பகுதிகளில் பெருக்கெடுக்கலாம்.
குக்குலே கங்கை, தெதுறுஓயா ஆகிய நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளமையால் பிரதேச வாசிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென்று திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. இதேவேளை,
நாட்டில் தற்சமயம் நிலவும் மழையினால் கடல் பிரதேசம் கொந்தழிப்பாக இருக்கும் எனவும் இதனால் கடலுக்குச் செல்வோர் எச்சரிக்கையாக
இருக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
மூன்று மாதத்தில் இலங்கையில் உணவு பஞ்சம் ஏற்படும் – அபாய எச்சரிக்கை
மூன்று மாதத்தில் இலங்கையில் உணவு பஞ்சம் ஏற்படும் – அபாய எச்சரிக்கை
இலங்கையில் எதிர் வரும் மூன்று மாதத்திற்குள் நாடெங்கும் . உணவு பற்றாக்குறை
ஏற்பட்டு ,உணவு பஞ்சம் ஏற்படும் எனவும் ,இதனால் பல ஆயிரம் மக்கள் பட்டியணியால் தவிக்கும் நிலை ஏற்பட போகிறது என எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது
மத்திய வங்கியின் கயானாவை காலி செய்த, பசில் தலைமையிலான குழுவினரின்
செயல் பாட்டினால் இவ்விம்மன நெருக்கடிக்குள் இலங்கை சிக்கியுள்ளது
தற்கால நெருக்கடி நிலை தொடர்ந்து பயணித்தால் ,இலங்கை சோமாலிய போன்ற நாடாக மாற்றம் பெறும்
என எதிர் பார்க்க படுகிறது
மண்சரிவு அபாயம் ஆறு மாவாட்டங்களுக்கு எச்சரிக்கை
மண்சரிவு அபாயம் ஆறு மாவாட்டங்களுக்கு எச்சரிக்கை
இலங்கையில் நிகழ்கால கலாநிலை காரணமாக ஆறு மாவாட்டங்களுக்கு மண்சரிவு
அபாயம் ஏற்படுத்தியுள்ளதாக அறிவிக்க பட்டுள்ளது
இதன் பிரகாரம் Ratnapura, Kalutara, Kandy, Kegalle, Matara and Nuwara Eliya. பகுதியில் இந்த
அசம்பாவிதங்கள் இடம்பெறலாம் என்பதாக தெரிவிக்க பட்டுள்ளது
உக்கிரேனுக்குஆயுதம் வழங்குவதை நிறுத்துக – பிரான்சுக்கு ரசிய ஏச்சரிக்கை
உக்கிரேனுக்குஆயுதம் வழங்குவதை நிறுத்துக – பிரான்சுக்கு ரசிய ஏச்சரிக்கை
உக்கிரேன் மீது ரசியா போரினை தொடுத்துள்ள வேளை மேற்கு நாடுகள் ஆயுதங்களை அள்ளி
வழங்கி வருகின்றன ,இவ்வேளை பிரான்ஸ் அதிபருடன் தொலைபேசியில் உரையாடிய
புட்டீன் உக்கிரேனுக்கு ஆயுதங்கள் வழங்குவதை நிறுத்த வேண்டும் என தெரிவித்த்துளளார் ,
அவ்வாறு வழங்கினாள் விளைவுகளை சநதிப்பீர்கள் என அவர் தொடர்ந்து எச்சரித்து வருகின்றமை குறிப்பிட தக்கது
இஸ்ரேலுக்கு ரசியா எச்சரிக்கை – முறுகல் உச்சம்
இஸ்ரேலுக்கு ரசியா எச்சரிக்கை – முறுகல் உச்சம்
உக்கிரேனுக்கு இஸ்ரேல் அரசு ஆயுதங்களை வழங்கி வருகிறது ,இஸ்ரேலின் இந்த
முடிவிற்கு ரசியா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது
தொடர்ந்து இஸ்ரேல் இவ்விதம்ஸ் செயல்பட்டால் அது விளைவுகளை சந்திக்கும் என ரசியா எச்சரித்துள்ளது .
உக்கிரேன் ரசியாவிடம் வீழ்ச்சியுறும் நிலையில் உள்ள போதும், சர்வதேச முக்கிய நாடுகள்
ஆயுதங்களை அள்ளி வழங்கி வருகின்றமை குறிப்பிட தக்கது.
1901 பேருக்கு பொலிசார் எச்சரிக்கை
1901 பேருக்கு பொலிசார் எச்சரிக்கை
சுகாதார விதிமுறைகளை மீறிய மேலும் 1901 நபர்கள் பொலிசாரினால் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
மேல் மாகாணத்தில் ,சுகாதார வழிகாட்டி தொடர்பான விதிமுறைகள் உரிய வகையில் பொது
மக்களால் கடைப்பிடிக்கப்படுகின்றதா? என்பது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போதே பொலிசார் இவ்வாறு எச்சரித்துள்ளனர்.
இந்த நடவடிக்கையின் போது 9,793 பேர் நேற்று (02) பரிசோதிககு உட்படுத்தப்பட்டனர்.
4,121 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 3,276 முச்சக்கர வண்டிகளும் இதன்போது பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
இந்த நடவடிக்கையில் 10,199 பொலிசார் கடமையில் ஈடுப்படுத்தப்பட்டனர்.
சொத்து சேர்ப்பவர்களுக்கு எச்சரிக்கை
சொத்து சேர்ப்பவர்களுக்கு எச்சரிக்கை
சட்டவிரோதமாக சொத்துக்களை சேர்ப்பவர்கள் தொடர்பான தகவல்களை வழங்க, பொதுமக்களுக்கு அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அவ்வாறானவர்கள் தொடர்பான நியாயமான சந்தேகங்கள் இருப்பின் மாத்திரம் 1917 என்ற அவசர தொலைபேசி இலக்கத்தினை தொடர்பு கொண்டு தகவல்களை வழங்குமாறு பொலிஸார் பொதுமக்களிடத்தில் கோரியுள்ளனர்.
இந்த அவசர தொலைபேசி இலக்கத்திற்கு 24 மணிநேரமும் தகவல்களை வழங்க முடியும்.
எவ்வாறாயினும், தனிப்பட்ட விரோதங்கள் காரணமாக குறித்த இலக்கத்தினை தவறான முறையில் பயன்படுத்தினால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது
சுகாதார விதிமுறைகளை மீறியவர்களுக்கு எச்சரிக்கை
சுகாதார விதிமுறைகளை மீறியவர்களுக்கு எச்சரிக்கை
மேல் மாகாணத்தில் முச்சக்கர வண்டி, மோட்டார் சைக்கிள்களை பரிசோதிப்பதற்காக பொலிசாரினால் நேற்று (21) விசேட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள்களின் எண்ணிக்கை 2,910 ஆகும். முச்சக்கர வண்டிகளின் எண்ணிக்கை 2,640 ஆகும்.
இந்த வாகனங்களில் பயணித்த 7,285 பேரில் சுகாதார விதிமுறைகளை மீறிய 1,901 நபர்கள் எச்சரிக்கப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் ஒமிக்ரோன் எச்சரிக்கை
இலங்கையில் ஒமிக்ரோன் எச்சரிக்கை
நாட்டில் ‘ஒமிக்ரோன் வைரஸ் திரிபு’ இனங்காணப்பட்டிருப்பதனால் பண்டிகைக் காலத்தில்
பொறுப்புடன் செயற்படுமாறு சுகாதார சேவைகள் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளரான
விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹோரத் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இம்மாதம் மற்றும் ஜனவரி மாதங்களில் மக்கள் சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றுவதில்
மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் பொது மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.
கடலில் கொந்தளிப்பு – மக்களுக்கு எச்சரிக்கை
கடலில் கொந்தளிப்பு – மக்களுக்கு எச்சரிக்கை
இலங்கைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது.
அடுத்த 24 மணித்தியாலத்துக்கானஇ நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு
2021 நவம்பர் 29ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது
மழை நிலைமை:
பெந்தோட்டையிலிருந்து காலிமற்றும் மாத்தறை ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான
கடற்பரப்புகளில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் குறிப்பாக பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
காற்று :
திருகோணமலையிலிருந்து காங்கேசந்துறை மற்றும் மன்னார் ஊடாக கொழும்பு வரையான கடற்பரப்புகளில் காற்றானது கிழக்கு அல்லது தென்கிழக்கு திசையிலிருந்து வீசக்கூடுவதுடன்,
நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து அல்லது மாறுபட்ட திசைகளிலிருந்து வீசக்கூடும்.
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20-30 கிலோ மீற்றர் வரை காணப்படும்.
திருகோணமலையிலிருந்து காங்கேசந்துறை ஊடாக மன்னார் வரையான கடற்பரப்புகளில்
காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-45 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
கடல் நிலை:
திருகோணமலையிலிருந்து காங்கேசந்துறை ஊடாக மன்னார் வரையான கடற்பரப்புகள் அவ்வப்போது ஓளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன் அக்கடற்பிரதேசங்கள்மிகவும் கொந்தளிப்பாகவும்காணப்படும்.
கடைகளுக்கு எச்சரிக்கை – மீறினால் அனுமதி இரத்து
கடைகளுக்கு எச்சரிக்கை – மீறினால் அனுமதி இரத்து
பொதுமக்கள் முறையான சுகாதார அறிவுறுத்தல்களை பின்பற்றுகிறார்களா என்பதை
பரிசீலிப்பதற்காக மேல் மாகாணத்தில் பொலிஸார் விசேட சோதனை நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர்.
அதன்படி, பஸ்களில் இருக்கைகளுக்கு அதிகமாகப் பயணிகளை ஏற்றிச் செல்வது, முகக்கவசம் அணியாமை, குளிரூட்டப்பட்ட பஸ்களுக்கு நடமாடும் வியாபாரிகள் நுழைதல் போன்ற
நடடிக்கைகளை ஆராய்வதற்காக, இந்த விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நேற்று (14) நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 2 மணிவரையிலான இரண்டு மணிநேர சோதனை
நடவடிக்கையில், 451 பொலிஸ் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
318 பஸ் ஊழியர்கள், 65 குளிரூட்டப்பட்ட பஸ்கள் மற்றும் 505 வர்த்தக நிலையங்களுக்கு சுகாதார
வழிகாட்டுதல்களை மீறுவதற்கு எதிராக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகக் பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
யாழ் மக்களுக்கு எச்சரிக்கை
யாழ் மக்களுக்கு எச்சரிக்கை
இலங்கைச் சூழவுள்ள கடற்பரப்புகளில்வானிலைமற்றும் கடல் நிலை ,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது.
அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு
2021 ஒக்டோபர் 07ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது
மழை நிலைமை:
காங்கேசந்துறையிலிருந்து புத்தளம், கொழும்பு மற்றும் காலி ஊடாகமாத்தறை வரையான கடற்பரப்புகளில் கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
காற்று :
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து வீசக்கூடுவதுடன். காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும்.
மன்னாரிலிருந்து காங்கேசந்துறை ஊடாக முல்லைத்தீவு வரையான கடற்பரப்புகளிலும் காலியிலிருந்து மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக மட்டக்களப்பு வரையான கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
கடல் நிலை:
மன்னாரிலிருந்து காங்கேசந்துறை வரையான கடற்பரப்புகளும் காலியிலிருந்து மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக மட்டக்களப்பு வரையான கடற்பரப்புகளும் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும். நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள் மிதமான அலையுடன் காணப்படும்.
ஜந்து மாவட்டங்களுக்கு எச்சரிக்கை
ஜந்து மாவட்டங்களுக்கு எச்சரிக்கை
பலத்த மழையின் காரணமாக ஜந்து மாவட்டங்களுக்கு மண்சரிவு அனர்த்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
காலி , களுத்துறை , கண்டி, கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அனர்த்த எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதாக தேசிய கட்டிட ஆய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த அறிவிப்பு மாலை 06 மணிவரை ஏற்புடையது என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டனில் குளிர்காலத்தில் 60 ஆயிரம் பேர் மரணிப்பர் – வெளியான எச்சரிக்கை
பிரிட்டனில் குளிர்காலத்தில் 60 ஆயிரம் பேர் மரணிப்பர் – வெளியான எச்சரிக்கை
பிரிட்டனில் எதிர்வரும் குளிர் காலத்தில் மட்டும் சுமார் அறுபதாயிரம் மக்கள் மரணிப்பர் என ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்
மூன்றாம் கொரனோ அலையின் தாக்குதலாக இது அமைய பெறும் என எச்சரிக்க பட்டுள்ளதுடன் ,இவ்வேளை மருத்துவ
மனைகளினால் மக்களை கட்டு படுத்த முடியாத ,பராமரிக்க முடியாத நிலை நீடிக்கும் எனவும் அவர்கள் சுட்டி காட்டியுள்ளனர்
மேற்படி தகவலை அடுத்து மீள கொரனோ தடைகள் தொடரலாம் என எதிர்பார்க்க படுகிறது
உங்கள் பகுதிகளில் இது நடக்கலாம் – எச்சரிக்கை
உங்கள் பகுதிகளில் இது நடக்கலாம் – எச்சரிக்கை
=மழை நிலைமை:
கொழும்பிலிருந்து காலி ஊடாகமாத்தறை வரையானகடற்பரப்புகளில் சில இடங்களில் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
காற்று :
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு அல்லது மேற்கு திசையிலிருந்து வீசக்கூடும். காற்றின் வேகமானது 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படுவதுடன், காலியிலிருந்து
ஹம்பாந்தோட்டை ஊடாகபொத்துவில் வரையான கடற்பரப்புகளிலும் புத்தளத்திலிருந்து மன்னார் ஊடாககாங்கேசந்துறை வரையான கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது
அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
கடல் நிலை:
காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளும் புத்தளத்திலிருந்து மன்னார் வரையான கடற்பரப்புகளும் அவ்வப்போது கொந்தளிப்பாகக்
காணப்படும். நாட்டைச் சூழவுள்ளஏனைய கடற்பரப்புகள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும் என்றும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இஸ்ரேலில் உள்ள இலங்கையருக்கு அவசர எச்சரிக்கை
இஸ்ரேலில் உள்ள இலங்கையருக்கு அவசர எச்சரிக்கை
இஸ்ரேல் நாட்டில் தற்போது இடம்பெற்று வரும் இராணுவ மோதல்களை அடுத்து , மக்களை
வெளியில் செல்ல வேண்டாம் என்றும் ,பாதுகாப்பான இடத்தில தங்கி கொள்ளுமாறும் வேண்டுதல் விடுக்க பட்டுள்ளது
மேலும் பயணங்களை மேற்கொள்ள வேண்டாம் என்றும் அறிவுறுத்தல் விடுக்க பட்டுள்ளது
,தொடர்ந்து ஹிஸ்புல்லா மாற்றும் இஸ்ரேலுக்கு இடையில் பலத்த மோதல்கள் இடம்பெற்று வரும்
நிலையில் இந்த அறிவுறுத்தல் விடுக்க பட்டுள்ளமை குறிப்பிட தக்கது
- இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல்
- ஈரான் இஸ்ரேல் போர் ஆரம்பம்
- இஸ்ரேலில் உள்ள இராணுவ இலக்குகளைத் தாக்கியதாக ஈரான்
- ஈரான் ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்வதைத் தவிர நெதன்யாகுவுக்கு ‘வேறு வழியில்லை’ என்கிறார் டிரம்ப்
- தெற்கு லெபனானில் இஸ்ரேலிய தாக்குதலில் இருவர் பலி, 22 பேர் காயம்
- இஸ்ரேலியத் துப்பாக்கிச் சூட்டில் பாலஸ்தீனிய மீனவர் கொல்லப்பட்டார்
- தெற்கு காசாவில் ஹமாஸ் தளபதி பலி
- போதையில் சாரதி இரு பெண்கள் பலி
- கடல் அபாயகரமானதாக மாறுவதால் எச்சரிக்கை
- யாழா பருவத்திற்கு நீர்த்தேக்கங்களில் 63% நீர் இருப்பு உறுதி: நீர்ப்பாசனத் திணைக்களம்
இலங்கையில் கொரனோ – மக்களுக்கு சிவப்பு எச்சரிக்கை
இலங்கையில் கொரனோ – மக்களுக்கு சிவப்பு எச்சரிக்கை
இலங்கையில் தீவிரமாக கொரனோ நோயானது பரவி வரும் நிலையில்
தற்போது சிவப்பு
எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது .
கொழும்பு பகுதியில் 294 பேருக்கு மேலாக பாதிக்க பட்டுள்ளனர்
தொடர்ந்து தமிழர் பகுதி யாழிலும் இந்த நோயானது வேகமாக பரவி வருவதாக இராணுவம் தொடர்ந்து தெரிவித்து வருகின்றமை இங்கே கவனிக்க தக்கது
மண்சரிவு அபாயம் – மக்களுக்கு அவசர எச்சரிக்கை
மண்சரிவு அபாயம் – மக்களுக்கு அவசர எச்சரிக்கை
இலங்கையில் ஏற்பட்டுளள சீரற்ற காலநிலை காரணமாக மலை பகுதி வழியாக செல்லும் மக்களிற்கு அவசர எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது
பதுளை பிரதான வீதி, நுவரெலியா சாலைகளில் மண்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளது , ஆதலால்
இவ் வழியாக பயணப்படுபவர்களை மிக விழிப்பாக செல்லும் படி எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது
பாறைகள் உருண்டு வீதிகளில் விழலாம் என எதிர் பார்க்க படுகிறது ,மக்களே யாக்கிரதை
இலங்கையில் நிலநடுக்கம் ஏற்படும் என எச்சரிக்கை
இலங்கையில் எதிர் காலத்தில் நில நடுக்கம் தொடராக ஏற்படும் வாய்ப்புக்கள் உள்ளதாக காலநிலை ஆராய்ச்சியார்கள் தெரிவித்துள்ளனர்
நில நடுக்கம்
உலகம் மாறி வரும் பருவ நிலையின் காரணமாக ஏற்பட்ட மாறுதலே இந்த நில நடுக்கம் ஏற்பட காரணமாக அமைந்துள்ளது
என சுட்டி காட்டப்பட்டுள்ளது ,
ஈரான் ,பனாமா துருக்கி ,இந்தோனேசிய போன்ற நாடுகளில் அதிக கூடிய நில நடுக்கம் ஏற்பட்டு இருந்தமை இங்கே குறிப்பிட தக்கது
எச்சரிக்கை
எனவே இதனை கருத்தில் கொண்டு மலை பகுதியில்வளை மக்கள் மிக அவதானமாக இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாகவும்
குறிப்பிடும் இவர்கள் சமீப நாட்களில் இலங்கையில் ஏற்பட்ட தொடர் நிலஅதிர்வுகள் இதனாலே ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்
















