Posted in இலங்கை செய்திகள்

ஜனாதிபதிக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை

ஜனாதிபதிக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை

பாராளுமன்ற நிலையியற் கட்டளைகளை இடைநிறுத்தி ஜனாதிபதிக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை எம்.ஏ.சுமந்திரன் முன்வைத்துள்ளார்.

நிலையியற் கட்டளையின் பிரகாரம் அவ்வாறு செய்யமுடியாது என ஆளும் கட்சியின் பிரதம கொறடாவான அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

அப்படியாயின், வாக்கெடுப்புக்குச் செல்வோமென தெரிவித்துள்ளார். அதன்பிரகாரம் வாக்களிப்பு அழைக்கும் மணி,
பாராளுமன்றத்தில் ஒலித்துக்கொண்டிருக்கின்றது.

    Posted in இலங்கை செய்திகள்

    நான் குடும்ப ஆட்சியை காப்பற்ற வரைவில்லை ரணில்

    நான் குடும்ப ஆட்சியை காப்பற்ற வரைவில்லை ரணில்

    ஒரு தனி மனிதன், ஒரு குடும்பம் அல்லது ஒரு கூட்டத்தை பாதுகாப்பதற்காக நான் இந்த சவாலை பொறுப்பேற்கவில்லை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

    நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை தொடர்பில் பொதுமக்களுக்கு இன்று மாலை விசேட உரையாற்றிய போது பிரதமர் இதனை தெரிவித்தார்.

    நான் பொறுப்பேற்றது மிகவும் அபாயகரமான சவால். கத்தியின் மேல் நடப்பதைவிட இது பயங்கரமான சவால் மிகுந்தது. மிகவும் ஆழமானது. அடியே தெரியவில்லை. பாலங்கள் மெல்லிய கண்ணாடியால் அமைக்கப்பட்டுள்ளன. கைப்பிடி இல்லை.

    என்னுடைய கால்களில் கழற்ற முடியாத பாதணிகள் போடப்பட்டுள்ளன. அதன் அடியில் கூர்மையான இரும்பு ஆணிகள் பொருத்தப்பட்டுள்ளன. குழந்தையை பாதுகாப்பாக

    அடுத்த பக்கம் கொண்டு செல்ல வேண்டி உள்ளது. இந்த சவாலை நான் நாட்டிற்காகவே பொறுப்பேற்றேன்.எனது நோக்கமும் அர்ப்பணிப்பும் ஒரு தனிமனிதன் , ஒரு குடும்பம்,

    அல்லது ஒரு கூட்டத்தை பாதுகாப்பது அல்ல முழு நாட்டினதும் மக்களை காப்பாற்றுதே, இளைஞர்களின் எதிர்காலத்தை காப்பாற்றுவதே .உயிரை பணயம் வைத்து இந்த

    சவாலுக்கு நான் முகம் கொடுப்பேன். அந்த சவாலை வெற்றி கொள்வேன். அதற்கு உங்கள் அனைவரினதும் ஒத்துழைப்பையும் எனக்கு பெற்றுத் தாருங்கள். நான் எனது

    கடமையை நாட்டிற்காக செய்து முடிப்பேன்.
    அது நான் உங்களுக்கு அளிக்கும் உறுதியாகும்.

      Posted in இலங்கை செய்திகள்

      ஆர்மேனிய ஜனாதிபதி வழங்கும் முள்ளிவாய்க்கால் நினைவுப்பேருரை ! – நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

      ஆர்மேனிய ஜனாதிபதி வழங்கும் முள்ளிவாய்க்கால் நினைவுப்பேருரை ! – நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

      மே-18 தமிழீழத் தேசிய துக்க நாளில் ஆர்மேனியாவின் முன்னாள் அரசுத் தலைவரான யுசஅநn ளுயசமளைளயைn ஆர்மென் சர்கிசியன் அவர்கள் முள்ளிவாய்க்கால் நினைவுப்பேருரை ( Armen Sarkissian ) ஒன்றினை வழங்க இருக்கின்றார்.

      ஒவ்வொரு ஆண்டின் உலகின் முக்கிய பிரமுகர்களை அழைத்து முள்ளிவாய்க்கால் நினைவுப்பேருரையினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது.

      இம்முறை எட்டாவது அரங்கினை தொட்டுநிற்கும் முள்ளிவாய்க்கால் நினைவுப்பேருரையினை வழங்கும் அரசியல் பிரமுகரான ஆர்மென் சர்கிசியன்

      அவர்கள், (2018-2022) காலப்பகுதியில் ஆர்மேனியாவின் 4வது அரசுத் தலைவராக இருந்துள்ளார். (1996-1997) காலப்பகுதியில் ஆர்மேனியாவின் பிரதமராகவும் பொறுப்பு

      வகித்த இவர், (1998-2018) காலப்பகுதியில் ஐக்கிய இராச்சியத்தில் நாட்டின் நீண்ட காலம் பணியாற்றிய தூதராகவும் இருந்துள்ளார்.

      (1995-1996) காலப்பகுதியில் ஐரோப்பிய ஒன்றியத்திற்கான ஆர்மேனியாவின் தலைவராக இருந்துள்ளதோடு, மேற்குலகில் தொடங்கிய முதல் ஆர்மேனிய

      தூதரகத்தினை லண்டனில் தொடங்கியவர் என்பதோடு, பெல்ஜியம, நெதர்லாந்து, லக்செம்பர்க் மற்றும் வற்றிக்கான் ஆகிய நாடுகளுக்கு ஆர்மேனியாவின் மூத்த தூதராக விளங்கியுள்ளார்.

      பல்வேறு ஆளுமைகளை கொண்ட இவரது முள்ளிவாய்க்கால் நினைவுப் பேருரையானது,


      மே 18 தமிழீழத் தேசிய துக்க நாளாகிய புதன்கிழமை, செவ்வாய்க்கிழமை
      New York 2:00 PM / UK : 7:00 PM / EU : 8:00 PM


      நேரத்துக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் www.tgte.tv வலைக்காட்சியிலும், இதர உலகத்தமிழ் ஊடகங்கள் வழியாகவும் காணலாம்.

        Posted in இலங்கை செய்திகள்

        கொழும்பு பகுதியில் ஒருவர் கத்தியால் குத்தி படுகொலை

        இலங்கை கொழும்பு ஆர்மர் வீதி பகுதி அடுக்குமாடியில் வசித்து வந்த 47வயதுடைய

        நபர் ஒருவர் மர்ம நபர்களினால் கத்தியால் குத்தி படுகொலை செய்ய பட்டுள்ளார்

        இவ்விதம் கொலை செய்ய பட்டதற்கான காரணம் தெரியவில்லை .

        தற்போது காவல்துறை விசாரணைகள் தீவிரமாக முன்னெடுக்க பட்டு வருகின்றன.

        விரைவில்கொலைக்கன காரணம் கண்டறிய படும் என நம்ப படுகிறது .

          Posted in இலங்கை செய்திகள்

          இரு காஸ் கப்பல் இலங்கை வருகிறது

          இரு காஸ் கப்பல் இலங்கை வருகிறது

          இரு கப்பல்கள் காஸ் ஏற்றியபடி இலங்கை வருவதாக ரணில் தெரிவித்துள்ளார்

          இதனால் இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிவாயு தற்காலிகமாக நிவர்த்தி செய்யப்படும்

          என நம்பிக்கை வெளியிட பட்டுள்ளது

            Posted in இலங்கை செய்திகள்

            எங்கள் ஆதரவு ரணிலுக்கு மைத்திரி – குத்துக் கரணம்

            எங்கள் ஆதரவு ரணிலுக்கு மைத்திரி – குத்துக் கரணம்

            இலங்கையில் புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்கா நியமிக்க பட்டதை அடுத்து

            அவருக்கு நாம் ஆதரவு வழங்க மாட்டோம் என மைத்திரி அணி தெரிவித்து வந்தது

            தற்போது நாட்டின் தேவை கருதி தாம் ரணிலுக்கு ஆதரவு வழங்குவதாக மைத்திரி அறிவித்துள்ளார்

            Posted in இலங்கை செய்திகள்

            மக்கள் போராடடத்தை குழப்பும் இந்தியா

            அரசுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டங்களை மழுங்கடிக்கவே புலிகள் மீளுருவாக்கம் என்ற விடயம் பேசப்படுவதாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்லவம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

            அத்துடன், மே 18 நிகழ்வை சிங்கள மக்களும் அனுஷ்டிக்க வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.

            வவுனியாவில் நேற்று (15) இடம்பெற்ற ரெலோ அமைப்பின் முன்னாள் மாவட்ட பொறுப்பாளர் கிறிஸ்ரி குகராயாவின் நினைவு நிகழ்வில் கலந்துகொண்டு, ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

            தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், “வவுனியாவில் சிங்கள தேசத்தின் அத்துமீறலை தடுத்து நிறுத்திய மகானை நாம் நினைவுகூருகின்றோம்.

            “முள்ளிவாய்க்காலில் எமது மக்கள் பாரிய அல்லல் பட்டனர். மஹிந்த மற்றும் கோட்டா அரசு அந்த மக்கள் மீது மோசமான வன்முறையை செய்துகாட்டியது. அந்த வலிகளை இந்த மாதத்தில் நாம் நினைவுகூருகின்றோம்.

            “இதே காலப்பகுதியில் சிங்கள மக்களாலேயே விரட்டியடிக்கப்படும் நிலை கோட்டா அரசுக்கு ஏற்ப்பட்டுள்ளது. சிங்கள மக்களின் அந்த செயற்பாட்டில் நாங்களும் இணைந்துகொள்கின்றோம்.

            “அத்துடன், இழந்துபோன தமது உறவுகளுக்காக அஞ்சலி செய்யும் வாய்ப்பை எந்தத் தடைகளும் இல்லாமல் புதிய பிரதமர் ஏற்ப்படுத்தித் தரவேண்டும். இந்த நிகழ்வில் சிங்கள மக்களும் கலந்துகொள்ள வேண்டும்.

            “இதேவேளை, புலிகளின் மீளுருவாக்கம் என்ற போர்வையில் இந்த போராட்டத்தை மழுங்கடிக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் இருக்கும் என்று முன்னரே சொல்லியிருந்தேன். தற்போது இந்துப்பத்திரிகையில் சொல்லப்பட்டுள்ள விடயம் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.

            “மக்கள் துக்கத்தை அனுபவித்துவரும்இந்தச் சூழலில் இப்படியான செய்திகள் வருவதை ஏற்கமுடியாது.
            இது எமதுமக்களின் அஞ்சலியை தடைசெய்வதற்கான உக்தியாகவே பார்க்கின்றேன்” என்றார்.

            Posted in இலங்கை செய்திகள்

            மகிந்தா நாய் குட்டி திருட்டு – விசாரணை ஆரம்பம்

            மகிந்தா நாய் குட்டி திருட்டு – விசாரணை ஆரம்பம்

            மகிந்தவின் மெதமுலன வீட்டில் வசித்து வந்த மகிந்தாவின் செல்ல நாய்க்குட்டியை திருடி சென்ற


            சஜித் அணியினரின் பிரதேச சபை உறுப்பினர் மீது விசாரணைகள் நடத்த பட்டு வருகின்றன

            இவரே அந்த நாய்க்குட்டியை பராமரித்து வருவதாக தெரிவிக்க படுகிறது

              Posted in இலங்கை செய்திகள்

              புலிகளின் பெயரால் குண்டு வெடிப்பை நடத்தி – இன மோதலை உருவாக்க கோட்டா திட்டம்

              புலிகளின் பெயரால் குண்டு வெடிப்பை நடத்தி – இன மோதலை உருவாக்க கோட்டா திட்டம்

              இலங்கையில் ஆளும் அரசுகளுக்கு எதிராக சிங்கள மக்கள் கொதித்தெழுந்து

              போராட்டம் நடத்தி வருகின்றனர் ,இவ்வேளை வடக்கு ,கிழக்கு தமிழர்கள் அமைதியாக உள்ளனர்

              தனது நெருக்கடியை தனித்து மக்களை திசை திருப்பவும் ,இன மோதல்களை உருவாக்கவும் புலிகளின் பெயரால் குண்டு தாக்குதல்களை நடத்திட கோட்டா சதி திட்டம் தீட்டியுள்ளார் ,

              இவ்வாறான தாக்குதல் ஊடாக சிங்கள மக்களை பயமுறுத்தவும் ,அடிபணிய

              புலிகளின் பெயரால் குண்டு வெடிப்பை நடத்தி – இன மோதலை உருவாக்க கோட்டா திட்டம்

              வைக்கவும் ,அவர்கள் தன்னெழுச்சியை தடுக்கவும் தொடர் ஆயுத போராட்டம் கோட்டாவுக்கு தேவை படுகிறது

              இரத்தம் குடித்து ஏப்பம் விடும் கோட்டாவுக்கு இது புதிதல்ல ,ஆனால் இம்முறை சிங்கள

              பகுதியில் தொடராக குண்டுகள் வெடிப்பதன் மூலம் ,உயிர்ப் பலிகள் இடம்பெறுவதன் ஊடாகவே அவர்களின் எழுச்சியை தடுக்க முடியும்

              அதற்காக தூசி தட்ட படும் புலிகள் அமைப்பு ,இல்லாத புலிகளுக்கு உயிரூட்ட முனைகிறது சிங்கள அரசியல் இனவாதம்.

                Posted in இலங்கை செய்திகள்

                கொழும்பில் குவிக்க படும் ஆயிரத்திற்கு மேற்பட்ட போலீசார்

                கொழும்பில் குவிக்க படும் ஆயிரத்திற்கு மேற்பட்ட போலீசார்

                கொழும்பு பகுதி எங்கும் பாதுகாப்பை பலப் படுத்தும் நோக்கில் ஆயிரத்திற்கு மேற்பட்ட

                போலீசார் வரவழைக்க பட்டு வீதி ரோந்து மற்றும் சோதனை நடவடிக்கையில் ஈடுபடுத்த உத்தரவு பிறப்பிக்க பட்டுள்ளது

                ஆளும் அரசுகளுக்கு எதிராக முன்னெடுக்க படும் போராட்டங்கள் காரணமாக வன்முறைகள் வெடிக்கலாம் என்பதாலும் ,


                அந்த மக்களை அடக்கி ஒடுக்கவும் இந்த போலீசார் இவ்விதம் அழைக்க பட்டுள்ளனர்.

                  முள்ளிவாய்க்கால் நாளில் வெள்ளத்தில் மிதக்கும் சிங்கள கிராமங்கள்
                  Posted in இலங்கை செய்திகள்

                  முள்ளிவாய்க்கால் நாளில் வெள்ளத்தில் மிதக்கும் சிங்கள கிராமங்கள்

                  முள்ளிவாய்க்கால் நாளில் வெள்ளத்தில் மிதக்கும் சிங்கள கிராமங்கள்

                  முள்ளிவாய்க்கால் இறுதி போரின் பின்னர் ஆண்டு தோறும் வைகாசி மாதத்தில் பெரும்

                  வெள்ள பெருக்கு ஏற்பட்டு சிங்கள பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கிய வண்ணம் உள்ளன

                  தமிழர் கண்ணீர் சாபங்கள் விளைவாக இயற்கையே இனவாத சிங்கள மக்களை இவ்விதம் தண்டித்து வருகிறது

                  அதே இனப் படு கொலையை புரிந்த மகிந்த குடும்பம் பதவி இழந்தது நாட்டை விட்டு தப்பி செல்லும் நிலைக்கு முள்ளிவாய்க்கால் மாதம் தள்ளி விட்டுள்ளது

                  காலி மற்றும் மேல் மாகாணத்தில் இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் வெள்ளத்தால் பாதிக்க பட்டுள்ளனர்

                  மேலும் பல நூறு வீடுகள் வெள்ளத்தில் மிதக்கின்றன.

                    Posted in இலங்கை செய்திகள்

                    தனியார் வங்கிகளில் பணம் மீள பெறுவது தடுக்க படுகிறது – பீதியில் மக்கள்

                    தனியார் வங்கிகளில் பணம் மீள பெறுவது தடுக்க படுகிறது – பீதியில் மக்கள்

                    இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருங்கடி காரணமாக இலங்கையில் உள்ள

                    தனியார் வங்கிகளில் வைப்பில் வைக்க பட்ட பணத்தினை மீள பெறுவதில் மக்கள் பெரும் சிரமங்களை சந்தித்த வண்ணம் உள்ளனர்.

                    தற்போது குறித்த தொகைக்கு மேல் மீள பெற முடியாத வரையறை விடுக்க பட்டுள்ளதால் மக்கள் பீதியடைந்து வருகின்றனர்.

                    இவ்வாறான நிலைகள் தொடர்ந்து சென்றால் தனியார் வங்கிகள் அடித்து பூட்டும் நிகழ்வுகள் ஏற்படலாம் என எதிர் பார்க்க படுகிறது.

                      Posted in இலங்கை செய்திகள்

                      காலிமுக திடலில் குவிந்த மக்கள் – அதிர்ச்சியில் கோட்டா

                      காலிமுக திடலில் குவிந்த மக்கள் – அதிர்ச்சியில் கோட்டா

                      இலங்கை காலிமுக திடலில் சமீப நாட்களாக மக்கள் போராட்டம் வீழ்ச்சியடைந்த

                      நிலையில் காணப்பட்டது ,ஊரடங்கு ,மற்றும் இராணுவ குவிப்பின் காரணமாக மக்கள் வருகை மந்தமாக காணப்பட்டது

                      இன்று வழமை போல மக்கள் அதிகம் வருகை தந்து தமது எதிர்ப்பை காண்பித்த வண்ணம் உள்ளனர்

                      தொடர்ந்து இடம் பெறும் இந்த போட்டத்தின் வாயிலாக இதுவரை கோட்டா பதவி விலகாது உள்ளமை


                      மக்களை மேலும் கொந்தளிப்பில் உறைய வைத்துள்ளது

                        Posted in இலங்கை செய்திகள்

                        இலங்கையில் புலிகள் தாக்குதல் நடத்த உள்ளதாக இந்தியா றோ அறிவிப்பு –

                        இலங்கையில் புலிகள் தாக்குதல் நடத்த உள்ளதாக இந்தியா றோ அறிவிப்பு –

                        இலங்கையில் எதிர்வரும் முள்ளிவாய்கால் 18 ஆம் திகதி புலிகள் குண்டு தாக்குதலை

                        மேற்கொள்ள உள்ளதாக இந்திய உளவுத்துறை தெரிவித்துள்ளதாக இலங்கை தெரிவித்துள்ளது

                        ஆளும் அரசுக்கு எதிராக சிங்கள மக்கள் போராட்டம் நடத்தி வருகின்ற நிலையில் அந்த மக்களை மிரட்டவும் ,அடக்கவும் குண்டு தாக்குதல்கள் அவசியமாக உள்ளது

                        அதனை புலிகள் பெயரில் நடத்த கோட்டா திட்டமிட்டுள்ளது ,இதன் ஊடக

                        அம்பலமாகியுள்ளது ,இல்லாத புலிகள் இலங்கையில் குண்டு தாக்குதல் நடத்த உள்ளனர்


                        என்ற தகவல்தமிழர்களை மேலும் பழிவாங்க கோட்டா திட்டம் போட்டு நகர்வதாக இந்த விடயங்கள் அம்பல படுத்துகின்றன

                          Posted in இலங்கை செய்திகள்

                          நாட்டின் நெருக்கடியை தீர்க்க ரணிலினால் முடியும் – விக்கினேஸ்வரன் புகழாரம்

                          நாட்டின் நெருக்கடியை தீர்க்க ரணிலினால் முடியும் – விக்கினேஸ்வரன் புகழாரம்

                          நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு ரணிலினால் தீர்வு காண முடியும் என முன்னாள்

                          முதல்வர் விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார் ,இவர் அதனை செய்திட தாம்

                          நிபந்தனைகளுடன் ஆதரவு வழங்க தயார் என விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்

                          இவ்வாறான கோரிக்கையை ரணில் ஏற்று அதனை நிறைவேற்றாது காலத்தை கடத்தி

                          செல்வார் என்பது ரணில் தந்திரமாக உள்ளதும் ,பின்னர் அவரை தூற்றுவதும் ,அதில் அங்கம் வகித்தவர்கள் வேலையாக உள்ளதும்


                          கடந்த கால கசப்புணர்வுகளாக படிந்துள்ளதை தமிழர்கள் அவதானிக்கலாம்

                            Posted in இலங்கை செய்திகள்

                            வன்முறையில் ஈடுபட்டார்கள் என கூறி 230பேர் பொலிஸாரால் கைது

                            வன்முறையில் ஈடுபட்டார்கள் என கூறி 230பேர் பொலிஸாரால் கைது

                            இலங்கையில் ஆளும் அரசுக்கு எதிராக இடம்பெற்ற போராட்டத்தில் வன்முறை

                            இடம்பெற்றது ,இந்த வன்முறை தாக்குதலில் ஈடுபட்டனர் என கூறி 230 பேரை காவல்துரையினர் கைது செய்துள்ளனர்

                            இந்த கைது நடவடிக்கை போராட்ட காரர்களை மிரட்டும் நகர்வாக உள்ளது

                              Posted in இலங்கை செய்திகள்

                              மண்சரிவு அபாயம் ஆறு மாவாட்டங்களுக்கு எச்சரிக்கை

                              மண்சரிவு அபாயம் ஆறு மாவாட்டங்களுக்கு எச்சரிக்கை

                              இலங்கையில் நிகழ்கால கலாநிலை காரணமாக ஆறு மாவாட்டங்களுக்கு மண்சரிவு

                              அபாயம் ஏற்படுத்தியுள்ளதாக அறிவிக்க பட்டுள்ளது

                              இதன் பிரகாரம் Ratnapura, Kalutara, Kandy, Kegalle, Matara and Nuwara Eliya. பகுதியில் இந்த


                              அசம்பாவிதங்கள் இடம்பெறலாம் என்பதாக தெரிவிக்க பட்டுள்ளது

                                Posted in இலங்கை செய்திகள்

                                டீசல் தட்டுப்பாட்டால் முடங்கிய பேரூந்து சேவை

                                டீசல் தட்டுப்பாட்டால் முடங்கிய பேரூந்து சேவை

                                இலங்கையில் டீசல் விலை அதிகரிக்க பட்ட நிலையில் பேரூந்து போக்குவரத்து முடங்கியுள்ளது ,


                                மீள இந்த சேவைகள் இயல்பு நிலைக்கு திரும்ப எரிபொருள் வழங்குதலை அரசு வழங்க வேண்டும் என்பது


                                போரூந்து ஓட்டுனர்கள் கருத்தாக உள்ளது

                                  Posted in இலங்கை செய்திகள்

                                  இலங்கை பொருளாதாரா நெருக்கடியில் இருந்து மீள ஒரு வருடம் ஆகும்

                                  இலங்கை பொருளாதாரா நெருக்கடியில் இருந்து மீள ஒரு வருடம் ஆகும்

                                  இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதாரா நெருக்கடியில் இருந்து மீள நாடு ஒரு வருடம்

                                  பிடிக்கும் என பொருளியல் நிபுணர்கள் கருத்துரைத்துள்ளனர்.

                                  இதற்கான மாற்று வழிகளை ஆராய்ந்து அதனை நடைமுறை படுத்த அதில் இருந்து மீள

                                  இந்த கால எல்லை தேவையாக உள்ளது என தெரிவித்துள்ளனர்

                                  மீளவும் மக்கள் தலையில் வரிகள் உயர்ரத்த படவுள்ளமை குறிப்பிட தக்கது.

                                    Posted in உலக செய்திகள்

                                    சிரியாவில் 70 வண்டிகளில் ஒயில் திருடி சென்ற அமெரிக்கா இராணுவம்

                                    சிரியாவில் 70 வண்டிகளில் ஒயில் திருடி சென்ற அமெரிக்கா இராணுவம்

                                    சிரியாவில் உள்ள அமெரிக்கா இராணுவத்தினர் ,அங்குள்ள எண்ணெய் வயல்களுக்குள் நுழைந்து எழுபது தாங்கிகளில் ஆயில்கள் மாற்று எரிபொருளை திருடி சென்றுள்ளனர்

                                    பயங்கரவாதம் என்ற போர்வையில் மத்திய கிழக்கு நாடுகளை ஆக்கிரமித்துள்ள

                                    அமெரிக்கா இராணுவம் ,இவ்விதமான திருட்டு வேளைகளில் ஈடுபட்டு வருவதும் ,இவ்விதமாக


                                    திருடும் எண்ணெய்களை கப்பல்கள் மூலம் கடத்தி செல்வதும் சர்ச்சைகளை கிளப்பி வருகின்றமை குறிப்பிட தக்கது