Posted in இலங்கை செய்திகள்

தீ வைத்த பெண்ணைதேடும் பொலிஸ்

இலங்கையில் தீ வைத்த பெண்ணைதேடும் பொலிஸ்

மே 9ஆம் திகதி இடம்பெற்ற வன்முறையின் போது திவுலப்பிட்டிய பிரதேசத்திலுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் அலுவலகம் தாக்கப்பட்டு தீ வைக்கப்பட்ட

சம்பவம் குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

அதற்கமைய சமூக ஊடகங்களில் வெளியான வீடியோ மற்றும் புகைப்படங்களில்

இருந்து பெண்ணொருவர், எம்.பியின் அலுவலகத்தை தாக்கி தீ வைத்தமை கண்டறியப்பட்டுள்ளது.

குறித்த பெண்ணைக் கைது செய்வதற்கு பொது மக்களின்
உதவியை நாடியுள்ள குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர்,

    Posted in இலங்கை செய்திகள்

    கொழும்பு தொடர்மாடி மக்களுக்கு சமைத்த உணவு வழங்குங்கள்

    • பிரதமரிடம் ரணிலிடம், மனோ கணேசன் கோரிக்கை

    குறைவருமான கொழும்பு தொடர்மாடி மக்களுக்கு சமைத்த உணவு வழங்குங்கள்

    • பிரதமரிடம் ரணிலிடம், மனோ கணேசன் கோரிக்கை

    உணவு இல்லை. காஸ் இல்லை. மின்சாரம் இல்லை. இவற்றால் நாட்டிலேயே மிகவும் துன்புறுவது கொழும்பு தொடர்மாடி குடியிருப்புகளில் வாழும் மக்கள்தான்.

    மாநகரத்தில் நாளாந்த வருமானம் பெற்று வந்த குடும்பங்கள், ஒருவேளை உணவுமின்றியும், உணவு சமைக்க வழியுன்றியும் தவிக்கிறார்கள்.

    குறிப்பாக, வடகொழும்பின் பின்தங்கிய நகர தோட்ட குடியிருப்புகளில் வாழ்ந்த மக்கள், எமது ஆட்சிகாலத்தில் சுமார் 13,000 தொடர்மாடி இல்லங்களில்

    குடியமர்த்தப்பட்டார்கள். இந்த குடும்பங்களை அடையாளம் கண்டு, இவர்களுக்கும், கொழுப்பு நகரின் பின்தங்கிய குடியிருப்புகளில் வாழும் மக்களுக்கும், பங்கீட்டு அட்டைகள் வழங்கி, அவர்களுக்கு சமைத்த உணவு வழங்குங்கள்.

    இதற்காக, கொழும்பு துறைமுகத்தில் அமைந்துள்ள பாரிய சமையலறை மற்றும் கொழும்பு மாநகரசபைக்கு சொந்தமான பயன்படுத்தபடாத சமையலறைகள்

    ஆகியவை பயன்படுத்தலாம். இராணுவ சமையல் பணியாளர்களை பணியில் அமர்த்தி இயல்பு நிலைமை திரும்பும்வரை இந்த திட்டத்தை முன்னெடுங்கள் என பிரதமர் ரணில்

    விக்கிரமசிங்கவுக்கு, தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் கொழும்பு எம்பி மனோ கணேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

    இது தொடர்பில் பிரதமருக்கு நேரடியாக கடிதம் அனுப்பியுள்ள மனோ எம்பி, ஊடகங்களிடம் மேலும் கூறியுள்ளதாவது,

    நாடு முழுக்க வாழ்வாதார பிரச்சினைகள், மக்களின் கழுத்துகளை நெரிக்கின்றன. இவற்றில் மிகவும் துன்பங்களை நகரங்களில் வாழும் குடும்பங்கள் சந்திக்கிறார்கள். கிராமிய பகுதிகளில் இருக்கும் இயற்கை வளங்கள், மரம், செடி, கொடி, தண்ணீர்

    என்பன நகரங்களில் இல்லை. ஒரு கிண்ணம் நீரும் பணம் கொடுத்தே வாங்க வேண்டியுள்ளது. அதிலும் கொழும்பு தொடர்மாடி குடியிருப்புகளில் வாழும் மக்கள் படும்பாடு சொல்லும்தரமன்று.

    இந்த கொழும்பு மாநகர பின்தங்கிய மக்களை, விசேட தேவை உள்ள பிரிவினராக அறிவித்து, பங்கீட்டு குடும்ப அட்டைகளை வழங்கி அவர்களுக்கு முதற்கட்டமாக சமைத்த உணவு வழங்குங்கள். இதன்மூலம் இங்கு வாழும் பள்ளி பிள்ளைகள்,

    குழந்தைகள், பெண்கள், வயோதிபர்களின் பசியை ஓரளவாவது போக்கலாம். மீண்டும் நாட்டில் இயல்பு நிலைமை திரும்பும்வரை இந்த திட்டத்தை நடைமுறை செய்யுங்கள்.

    கொழும்பு மாவட்ட எம்பி என்ற முறையில், எதிரணியில் இருந்தபடி கட்சி பேதமின்றி,
    இது தொடர்பில் நாம் உங்களுக்கு ஒத்துழைப்பு வழங்க தயார்.

    Posted in இலங்கை செய்திகள்

    இலங்கையில் வன்முறையில் ஈடுபட்ட குற்ற சாட்டில் 1500 அப்பாவிகள் போலீசாரால் கைது

    இலங்கையில் வன்முறையில் ஈடுபட்ட குற்ற சாட்டில் 1500 அப்பாவிகள் போலீசாரால் கைது

    இலங்கையில் ஆளுமா அரசுக்கு எதிராக இடம்பெற்று வரும் போராட்டத்தில் கலந்து

    கொண்ட மக்களில் ஆயிரத்து ஐநூறு பேர் கைது செய்ய பட்டுள்ளனர்

    இவ்விதம் கைது செய்ய பட்டவர்களில் 677 பேர் விளக்கமறியலில் தடுத்து வைக்க பட்டுள்ளனர்

    மக்களை அச்சுறுத்தும் முகமாக இந்த கைதுகள் இடம்பெற்றுள்ளது என சமூக நல ஆர்வளர்கள் தெரிவித்துள்ளனர்

      Posted in இலங்கை செய்திகள்

      இலங்கையின் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்த – விளையாட போகிறோம் சீனா அறிவிப்பு

      இலங்கையின் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்த – விளையாட போகிறோம் சீனா அறிவிப்பு

      இலங்கையில் நிகழ் காலத்தில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியில் இருந்து அந்த

      நாட்டை மீள தூக்கி நிறுத்திட தாம் அதறகான விளையாட்டை ஆரம்பிக்க போவதாக சீனா அறிவித்துள்ளது

      சீனா கடன்வழங்கிய நிலையில் இந்த நிலைக்கு இலங்கை சென்றமை குறிப்பிட தக்கது

        Posted in இலங்கை செய்திகள்

        நாடெங்கும் போலீசார் சுற்றிவளைப்பு தேடுதல்

        நாடெங்கும் போலீசார் சுற்றிவளைப்பு தேடுதல்

        இலங்கையில் நாடளாவிய ரீதியில் போலீசார் திடீர் சுற்றிவளைப்பு தேடுதலை நடத்தி வருகின்றனர்


        குற்ற செயல்களில் ஈடுபட்டவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் இந்த

        நடவடிக்கை முன்னெடுக்க படவுள்ளது என போலீசார் தெரிவித்துள்ளனர்

        அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வருகின்ற நிலையில் அதனை தடுக்கும்

        முகமாக இந்த் சுற்றிவளைப்பு நடத்த படுகிறதாம்

          தீயில் எரிந்த
          Posted in இலங்கை செய்திகள்

          எரிபொருள் விற்பனை நிலைய முதலாளி வீட்டுக்கு தீ வைத்த மக்கள்

          எரிபொருள் விற்பனை நிலைய முதலாளி வீட்டுக்கு தீ வைத்த மக்கள்

          இலங்கை கொக்கிராவ பகுதியில் எரி பொருள் நிலையம் வைத்து நடத்தி வந்த

          உரிமையாளர் ஒருவரது வீட்டிற்கு சென்ற குழுவொன்று அவரது வீட்டிற்கு தீ வைத்துள்ளனர்

          எரி பொருள் கிடைக்காத நிலையியல் சீற்றம் கொண்ட மக்களில் சிலர் இந்த தீ


          வைத்தலை புரிந்திருக்கலாம் என போலீசார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்

            Posted in இலங்கை செய்திகள்

            115 மில்லியன் ரூபா பெறுமதியான மருந்துகள் அன்பளிப்பு செய்த பிரான்ஸ்

            115 மில்லியன் ரூபா பெறுமதியான மருந்துகள் அன்பளிப்பு செய்த பிரான்ஸ்

            இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை அடுத்து பிரான்ஸ் நாடு

            இலங்கைக்கு பதின் ஐந்து மில்லியன் ரூபா பெறுமதியான மருந்து பொருட்களை அன்பளிப்பு செய்துள்ளது

            தமது நாட்டின் தற்கால நிலை கருதி பல நாடுகளிடம்


            இலங்கை பிச்சை கேட்டு வருகின்ற நிலையில் இந்த உதவிகள் வழங்க பட்டுள்ளமை குறிப்பிட தக்கது

              Posted in இலங்கை செய்திகள்

              தமிழக செல்வந்தர்கள் இலங்கையில் முதலீடு

              தமிழக செல்வந்தர்கள் இலங்கையில் முதலீடு

              இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக தமிழகத்தின் முக்கிய

              செல்வந்தர்கள் இலங்கையில் பல கோடி ரூபாவுக்கு முதலீடு செய்துள்ளனர்

              இதன் மூலம் இலங்கையின் பொருளாதாரம் முன்னோக்கி செல்லும் நிலை ஏற்படும் என எதிர்க்க படுகிறது

              முதன் முதலாக வெளிப்படையான அறிவிப்புடன் தமிழக செல்வந்தர்கள் இலங்கையில்

              முதலீடு செய்துள்ளமை குறிப்பிட தக்கது

                Posted in இலங்கை செய்திகள்

                இலங்கையில் காஸ் எரிபொருள் விலை அதிகரிக்க படுகிறது அதிர்ச்சியில் மக்கள்

                இலங்கையில் காஸ் எரிபொருள் விலை அதிகரிக்க படுகிறது அதிர்ச்சியில் மக்கள்

                இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக ,நலிந்துபோயுள்ள

                நாட்டின் பொருளாதாரத்தை கட்டி எழுப்ப இலங்கையில் வரி வீதம் அதிகரிக்க வேண்டிய நிலைக்கு இலங்கை சென்றுள்ளது

                இதனால் இலங்கை மத்திய வங்கி காஸ்,மற்றும் எரிபொருள்கள் விலையை அதிகரிக்கும் படி அரசிடம் பரிந்துரை செய்துள்ளது

                இதனால் மக்கள் மேலும் கொதிப்பில் உறைந்துள்ளனர்

                இலங்கை குடி மக்கள் தலைகள் ஒவ்வொன்றுக்கும் பல ஆயிரம் ரூபா நாள் தோறும்

                வரியாக செலுத்த வேண்டிய நிலைக்கு அரசு தள்ளியுள்ளது என்ற குற்ற சாட்டு வலுத்து வருகிறது

                இவை மேலும் ஆளும் அரசுகளுக்கு எதிராக மக்கள் கொதித்தெழும் நிலை ஏற்படும் என எதிர் பார்க்க படுகிறது

                  Posted in இலங்கை செய்திகள்

                  அமைச்சர்களுக்கு சம்பளம் மற்றும் சலுகைகள் நிறுத்தம்

                  அமைச்சர்களுக்கு சம்பளம் மற்றும் சலுகைகள் நிறுத்தம்

                  தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலைமையில் அரசாங்கத்தில் அமைச்சர்களாக பதவியேற்போர், அமைச்சர்களுக்கான சம்பளம் மற்றும் சலுகைகளை

                  பெற்றுக்கொள்ளாத வகையில் தீர்மானங்களை எடுத்துள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சபையில் தெரிவித்துள்ளார்.

                  பாராளுமன்றத்தில் நேற்று எரிபொருள் நெருக்கடி நிலைமை தொடர்பில் உரையாற்றும் போதே பிரதமர் இதனை தெரிவித்துள்ளார். அதன்போது பிரதமர் மேலும் தெரிவிக்கையில்,

                  எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வு காண்பற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுக்கும் அதேவேளை அமைச்சர்கள் நியமனம் தொடர்பிலும் தீர்மானங்களை எடுத்துள்ளோம்.

                  அவர்கள் அமைச்சர்களுக்கான சம்பளத்தை பெற்றுக்கொள்ள மாட்டார்கள்.
                  அதேபோன்று அமைச்சர்களுக்கான சலுகைகளை குறைக்கவும் நடவடிக்கை எடுப்போம் என்றார்.

                    Posted in இலங்கை செய்திகள்

                    மாவின் விலை 40 ரூபாவால் அதிகரிப்பு

                    மாவின் விலை 40 ரூபாவால் அதிகரிப்பு

                    இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலையில் மாவின் விலை

                    கிலோவுக்கு நாப்பது ரூபாவால் அதிகரிக்க பட்டுள்ளது

                    இந்த விலை அதிகரிப்பால் மக்கள் பெரிதும் கொந்தளிப்பில் உள்ளனர் ,நாள் தோறும் பொருட்களின் விலை


                    அதிகரித்த வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது

                      Posted in இலங்கை செய்திகள்

                      ராஜீவ் கொலை வழக்கில் இருந்து பேரறிவாளன் விடுதலை

                      ராஜீவ் கொலை வழக்கில் இருந்து பேரறிவாளன் விடுதலை

                      இந்தியா பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிக்க வைக்க பட்ட பேரறிவாளன் நீதிமன்றினால் விடுதலை செய்ய பட்டுளளார் .

                      முப்பது வருடங்களுக்கு மேலாக சிறையில் அடைத்து வைக்க பட்ட பேரறிவாளன் இந்தியா உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் விடுதலை செய்ய பட்டுள்ளார்.

                      இவரது விடுதலை மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

                      ஆனால் ராஜீவ் காந்தி ஆதரவு மக்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது .

                      பேரறிவாளன் விடுதலை மகிழ்வையும் சர்ச்சையும் கிளப்பி செல்கிறது .

                        Posted in இலங்கை செய்திகள்

                        ஒருவர் வெட்டி கொலை – தொடரும் வன்முறைகள்

                        ஒருவர் வெட்டி கொலை – தொடரும் வன்முறைகள்

                        இலங்கை பலப்பிட்டிய பகுதியில் குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட வாய் தகராறு முற்றி


                        ஒருவர் வெட்டி கொலை செய்ய பட்டுள்ளார்

                        இந்த கொலையை புரிந்தவர் தற்போது தலை மறைவாகியுள்ளார்


                        இவரை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்

                        Posted in இலங்கை செய்திகள்

                        இலங்கைக்கு உலக வங்கி 160 மில்லியன் கடனுதவி

                        இலங்கைக்கு உலக வங்கி 160 மில்லியன் கடனுதவி

                        இலங்கையின் தற்கால நெருக்கடி நிலையினை தொடர்ந்து இலங்கைக்கு உலக வங்கி 160 மில்லியன் அமெரிக்கா டொலர் கடனுதவி வழங்கியுள்ளது,

                        இந்த நிதி உதவி தற்கால நெருக்கடி நிலைக்கு தீர்வு வழங்கும் முகமாக வழங்கி வைக்க பட்டுள்ளது .

                        தற்கால நிலையை கருத்தில் கொண்டு கடனை உலக வாங்கி மற்றும் நாடுகளிடம் இலங்கை வாங்கி குவித்து வருகிறது .

                        எதிர்காலத்தில் இந்த கடனை மீள செலுத்த
                        முடியா நிலையில் இலங்கை சிக்கி தவிக்கும் நிலை ஏற்படும் பேராபத்து காத்து கிடக்கிறது .

                        இலங்கை உலக வங்கியிடம் பெற்றுக்கொண்ட பணம் எதுவரைக்கும் போதுமானது என்ற கேள்வியும் அதனை மீள இலங்கை உலக வங்கிக்கு எவ்வாறு செலுத்த போகிறது என்ற அச்ச நிலை மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது .

                          Posted in இலங்கை செய்திகள்

                          பிரித்தானியாவில் முள்ளிவாய்கால் நினைவேந்தல்

                          பிரித்தானியாவில் முள்ளிவாய்கால் நினைவேந்தல்

                          பிரித்தானியாவில் உணர்வுபூர்வமாக முள்ளிவாய்கால் நினைவேந்தல் வார நிகழ்வுகள் ! – நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

                          தமிழர் தாயகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வார நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டு வரும் சமவேளை,

                          புலம்பெயர் நாடுகளில் இவ்வார நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

                          இதன்வரிசையில், பிரித்தானியாவில் குருதிக்கொடை, முள்ளிவாய்க்கால் கஞ்சி, பரப்புரை முன்னெடுக்கப்பட்டுள்ளன.

                          ‘உயிர்கொடுத்தவர்களுக்காய் உதிரம் கொடுப்போம்’ எனும் தொனிப்பொருளில் Tooting Doner Centre,Croydon Doner Centre ஆகிய இடங்களல் 30 ற்கும் மேற்பட்டோர் இரத்த தானம் வழங்கியிருந்தனர்.

                          Aston Hall Hotel Aston, Sheffield பகுதியிலும் குருதிக்கொடை நிகழ்வு முன்னெடுக்கப்பட்டிருந்தது.

                          2009ம் ஆண்டு தமிழர்கள் மீதான சிங்கள பௌத்த பேரினவாத அரசின் இனஅழிப்பு போர்க்காலம். கடும்யுத்த களம், உணவுத்தடை,

                          மருந்துக்களுக்கு தடை, போர் தவிர்ப்பு வலயம் என்ற பெயரில் மக்களை கொத்துக் கொத்தாக தனது கொடிய ஆயுதங்களால் இனப்படுக்கொலை செய்து கொண்டிருந்தது

                          . இந்த நெருக்கடியான பெருந்துயரான காலத்தில் மக்களின் வயிற்றுப் பசியினை நம்பிக்கையோடு கஞ்சி தீர்த்திருந்தது.

                          போராளிகள் தமக்கென ஒதுக்கப்பட்டிருந்த அரசியினை மக்களின் பசிபோக்க கஞ்சியாக சமைத்து வழங்கியிருந்தனர்.

                          இதுவே ‘முள்ளிவாய்கால் கஞ்சியாக’ மக்களின் அப்பெருந்துயரை நினைவேந்திக் கொள்ளப்படுகின்றது.

                          இதேவேளை பிரித்தானிவின் பல பாகங்களில் தமிழர் வர்த்தக நிலையங்கள், பாடசாலைகள், வைத்தியசாலைகள் போன்றவற்றில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கி

                          எமது மக்கள் பட்ட துயரங்களை வேற்றின மக்களுக்கும், உலகநாடுகளுக்கும் உணர்த்த காட்சிப்படங்கள் மூலமாகவும், துண்டுப்பிரசுரம் மூலமாகவும் தெரிவித்திருந்தார்கள்.

                          மே18 தமிழீழ தேசிய துக்க நாள் என்பது நாம் துயரத்தில் துவண்டு போகும்
                          நாளல்ல மாறாக எமது மக்கள் அடைந்த துயரத்தையும் உயிர்ப்பாய் உள்வாங்கி


                          ஒருதேசமாக பாதுகாப்பாகவும் கௌரவமாகவும் வாழ்வதற்கு சுகந்திரமும்
                          இறைமையும் கொண்ட தமிழீழ அரசினை அமைப்பதே ஒரே வழி என உறுதிகொள்ளும் நாளாகும்.

                          எதிரி இராணுவத்தால் மேற்கொள்ள பட்ட தமிழர் மீதான இன அழிப்பில் பங்கெடுத்த உலக நாடுகள் இளநக்கிக்கு ஆதரவாக செயலாற்றிய வண்ணம் உள்ளன .

                          இதுவரை மாண்டு போன உயிர்களின் ஆத்துமா சாந்தியடைய எவ்வித தண்டனையும் எதிரி அரசுக்கு ஐநாவால் வழங்கப்படவில்லை .

                          பிரித்தானியாவில்  முள்ளிவாய்கால் நினைவேந்தல்

                          பிரித்தானியாவில்  முள்ளிவாய்கால் நினைவேந்தல்
                          பிரித்தானியாவில்  முள்ளிவாய்கால் நினைவேந்தல்
                          பிரித்தானியாவில்  முள்ளிவாய்கால் நினைவேந்தல்
                            Posted in உலக செய்திகள்

                            பிரான்ஸ் புதிய பிரதமராக எலிசபெத் போர்னி நியமனம்

                            பிரான்ஸ் புதிய பிரதமராக எலிசபெத் போர்னி நியமனம்

                            எலிசபெத் போர்னி,முந்தைய அரசில் தொழிலாளர் நலத்துறை மந்திரியாக பதவி வகித்து வந்தார்.

                            பிரான்ஸ் புதிய பிரதமராக எலிசபெத் போர்னி நியமனம்- அதிபர் இம்மானுவேல் மேக்ரோன் அறிவிப்பு
                            எலிசபெத் போர்னி, இமானுவேல் மேக்ரான்

                            பிரான்ஸ் நாட்டின் அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற இம்மானுவேல் மேக்ரான் 2-வது முறையாக அந்நாட்டின் அதிபராக பொறுப்பேற்றுள்ளார்.

                            இதையடுத்து பிரான்ஸ் அரசில் மாற்றங்களை கொண்டு வர அவர் முடிவு செய்தார். இதன் அடிப்படையில் பிரான்ஸ் பிரதமர் ஜீன் கெஸ்ட்க்ஸ் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.

                            இதையடுத்து முந்தைய அரசில் தொழிலாளர் மந்திரியாக பதவி வகித்து வந்த எலிசபெத் போர்னி பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை
                            அதிபர் இம்மானுவேல் மேக்ரோன் வெளியிட்டுள்ளார்.

                            61 வயதான போர்ன், பிரான்ஸ் வரலாற்றில் அந்நாட்டு பிரதமராக நியமிக்கப்பட்ட இது 2-வது பெண் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

                            பிரதமராக நியமிக்கப்பட்ட பின்னர் பேசிய எலிசபெத் போர்னி, இந்த நியமனத்தை அனைத்து சிறுமிகளுக்கும் அர்ப்பணிக்க விரும்புகிறேன் என்றும், உங்கள் கனவுகளுக்குப் பின் செல்லுங்கள் என்றும் தெரிவித்தார்.

                            புதிய பிரதமர், பருவநிலை மாற்றம் தொடர்பான கொள்கைகளை செயல்படுத்துவதை விரைவுபடுத்துவார் என்று அதிபர் இம்மானுவேல் மேக்ரோன் தெரிவித்தார்.

                            அதிபரும், புதிய பிரதமரும் பிரான்ஸ் புதிய அரசில் பங்கேற்கும் அமைச்சரவை குறித்து
                            இறுதி முடிவு எடுப்பார்கள் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

                            Posted in உலக செய்திகள்

                            கவர்ச்சி உடையில் பிக்பாஸ் பிரபலம்

                            கவர்ச்சி உடையில் பிக்பாஸ் பிரபலம்

                            பியார் பிரேமா காதல் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான ரைசா வில்சன் கவர்ச்சி புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

                            கவர்ச்சி உடையில் பிக்பாஸ் பிரபலம்
                            ரைசா வில்சன்


                            பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரபலமடைந்து, பிறகு சினிமாவில் வலம் வந்த பலரில் ரைசா வில்சனும் ஒருவர். பிக்பாஸ் சீசன் 1-இல் பங்கேற்று பியார் பிரேமா காதல் படத்தின்

                            மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். துருவிக்ரம் நடித்த வர்மா படத்திலும் நடித்தார். இவர் தற்போது தி சேஸ், காதலிக்க நேரமில்லை உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். மேலும் பல படங்களில் நடித்து வருகிறார்.

                            படங்களில் பிசியாக நடித்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். தற்போது நீச்சல்

                            உடையில் கவர்ச்சியாக இருக்கும் புகைப்படத்தை நடிகை ரைசா பதிவிட்டுள்ளார்.
                            இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

                              Posted in இலங்கை செய்திகள்

                              வன்முறையில் ஈடுபட்டார்கள் 664 பேர் கைது

                              வன்முறையில் ஈடுபட்டார்கள் 664 பேர் கைது

                              கடந்த 9 ஆம் திகதி கொள்ளுப்பிட்டி மற்றும் காலி முகத்திடல் பகுதிகளில் இடம்பெற்ற கலவரம் தொடர்பில் 664 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

                              கடந்த 24 மணி நேரத்தில் இந்த சம்பவம் தொடர்பில் 258 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

                              இவர்களில் 67 பேர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் 43 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

                              கடந்த 24 மணித்தியாலங்களில் கைது செய்யப்பட்ட மற்றுமொரு குழுவினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

                              எவ்வாறாயினும், இதுவரை கைது செய்யப்பட்ட மொத்த எண்ணிக்கையில் 206 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

                              இவர்களில் 272 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை மாகாணங்களுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர்களின் மேற்பார்வையில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

                              அவர்கள் மீது சட்டவிரோதமாக கூடுதல், தாக்குதல், காயம், சொத்துக்களை அழித்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட உள்ளது.

                              இதேவேளை, சம்பவங்கள் தொடர்பில் இதுவரை 791 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், அவற்றில் மேல் மாகாணத்தில் இருந்து 444 முறைப்பாடுகளும், தென் மாகாணத்தில் இருந்து 118 முறைப்பாடுகளும்
                              கிடைக்கப்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

                                Posted in இலங்கை செய்திகள்

                                காஸ் சுமந்த படி இலங்கை வந்தடைந்த இரு கப்பல்

                                காஸ் சுமந்த படி இலங்கை வந்தடைந்த இரு கப்பல்

                                இலங்கைக்கு காஸ் ஏற்றிய அப்டி இரு கப்பல்கள் வந்தடைந்துள்ளன


                                இவற்றுக்கு எலுமில்லியன் டொலர் செலுத்த படவுள்ளதாக தெரிவிக்க படுகிறது

                                இந்த கப்பல்கள் வருகையால்நடத்தில் எரிபொருள் தட்டுப்பாடு நீங்கும் என எதிர் பார்க்க படுகிறது

                                  Posted in இலங்கை செய்திகள்

                                  ரணிலுக்கும் மொட்டுக்கும் இடையில் சண்டை தீவிரம்

                                  ரணிலுக்கும் மொட்டுக்கும் இடையில் சண்டை தீவிரம்

                                  பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கும் இடையே முதலாவது முரண்பாடு முதல் நாளன்றே தோற்றியுள்ளது.

                                  ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவியேற்றதன் பின்னர், பாராளுமன்றம் இன்று (17) முதன்முறையாக கூடியது.

                                  இந்நிலையில், நாளொன்றை வீணடிப்பதைத் தவிர்க்க, பெண் எம்.பி ஒருவரை பிரதி

                                  சபாநாயகராக ஏகமனதாக நியமிக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எம்.பி.க்களிடம் கேட்டுக் கொண்டார்.

                                  எனினும், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன, ஆண் எம்.பி ஒருவரின் பெயரை பிரேரித்து முன்மொழிந்தது. இது, பாராளுமன்றத்தில் ரகசிய வாக்கெடுப்புக்கு வழிவகுத்தது.

                                  பிரதி சபாநாயகருக்கு ரோகினி கவிரத்னவின் பெயரை எதிர்க்கட்சிகள் முன்மொழிய, ஸ்ரீ லங்கா பொதுஜ பெரமுன.


                                  அஜித் ராஜபக்ஷவை முன்மொழிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.