Posted in இலங்கை செய்திகள்

ரணில் நிதி அமைச்சர் -அடுத்து என்ன ..? கயானா காலியாகும் ..!

ரணில் நிதி அமைச்சர் -அடுத்து என்ன ..? கயானா காலியாகும் ..!

இலங்கையில் ஆளும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கா


எதிர் வரும் நிதி அமைச்சராக பதவி பிராமணம் செய்திட உள்ளதாக தென்னிலங்கை தகவல்கள் தெரிவிக்கின்றன

இவ்விதம் பதவி ஏற்கும் ரணிலினால் நெருக்கடியில் உள்ள நாட்டினை


முன்னிறுத்தி செல்லுமா என்பதே கேள்வியாகும் ..!

    Posted in இலங்கை செய்திகள்

    23 அமைச்சர்களுக்கு 23 செயலர்கள் தெரிவு

    23 அமைச்சர்களுக்கு 23 செயலர்கள் தெரிவு

    இலங்கையில் கலப்பு ஆட்சியில் அங்கம் வகிக்கும் இருபத்தி மூன்று அமைச்சர்களுக்கு


    23 செயலர்கள் நியமிக்க பட்டுள்ளனர்

    நாடு பெரும் நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில் ,இந்த அமைச்சர்கள் தெரிவு என்பது


    நெருக்கடியை தனிக்குமா என்பதே இன்றைய கேள்வியாகும்

      Posted in இலங்கை செய்திகள்

      ஈழப் படு கொலை சுவடுகள் நூல் சீமானால் வெளியீடு video

      ஈழப் படு கொலை சுவடுகள் நூல் சீமானால் வெளியீடு video

      இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தம் முள்ளி வாய்க்கால் சிங்கள படு கொலையின் கோர தாண்டவம் ,தமிழ் இன


      அழிப்பு தொடர்பான ஈழ படுகொலை சுவடுகள் என்ற நூல் ஒன்று முள்ளிவாய்கால் தினத்தில் தமிழகத்தில் செந்தமிழன் சீமானால் வெளியிட பட்டுள்ளது

      தமிழர்களின் போரின் வலியையும் ,சிங்கள அரச பயங்கரவாததின் படுகொலை கோர

      வெறி காட்சிகளை இந்த நூல் அம்பல படுத்துகிறது ,தமிழர்களே வாங்கி படியுங்கள்
      ,என சீமான் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்

      click here video

      https://www.youtube.com/watch?v=L_xHvlBi1iY
      Posted in இலங்கை செய்திகள்

      ஆட்டோ ,பேரூந்து கட்டணங்கள் அதிகரிப்பு -திணறும் மக்கள்

      ஆட்டோ ,பேரூந்து கட்டணங்கள் அதிகரிப்பு -திணறும் மக்கள்

      இலங்கையில் எரிபொருள் விலையில் ஏற்பட்ட விலை அதிகரிப்பை அடுத்து பேரூந்து ,மற்றும் ஆட்டோ


      பயண செலவுகள் அதிகரிக்க பட்டுள்ளது ,ஆட்டோ ஒன்றின் முதலாவது கிலோ மீட்டருக்கு நூறு ரூபா
      அறவிட தீர்மானிக்க பட்டுள்ளது

      இந்த கடுகதி விலை உயர்வினால் மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்

        Posted in இலங்கை செய்திகள்

        இலங்கைக்கு மேலும் 500 மில்லியன் டொலர் கடன் வழங்கும் இந்தியா

        இலங்கைக்கு மேலும் 500 மில்லியன் டொலர் கடன் வழங்கும் இந்தியா

        இலங்கைக்கு மேலும் 500 மில்லியன் அமெரிக்கா டொலர்களை கடனாக வழங்க

        இந்தியா தீர்மானித்துள்ளது குறித்த தொகை பணத்திற்கு எரிபொருள் வழங்க தீர்மானிக்க பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது

        நாட்டின் தற்கால நெருக்கடியை தீர்க்க இந்தியாவில் கடனை வாங்கி குவிக்கும்

        இலங்கை ,அதனை மீள செலுத்திட முடியாத நிலைக்கு செல்லும் நிலை ஏற்பட போகிறது என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளமை
        குறிப்பிட தக்கது

          Posted in இலங்கை செய்திகள்

          வெளிநாட்டுக்கு தப்பி செல்ல முயன்ற 67 பேர் கைது

          வெளிநாட்டுக்கு தப்பி செல்ல முயன்ற 67 பேர் கைது

          இலங்கையில் இருந்து கடல்வழியாக வெளி நாட்டுக்கு தப்பி செல்ல முயன்ற அறுபத்தி ஏழுபேர்
          கடற் படையினரால் கைது செய்ய பட்டுள்ளனர்

          இவர்கள் திருகோணமலை சல்லிசம்பல் தீவு பகுதியில் குழுமியிருந்த வேளையே கைது செய்ய பட்டுள்ளனர்


          கைதானவர்கள் விசாரணையின் பின்னர் நீதிமன்றில் முன்னிலை படுத்தப்படுவர் என எதிர் பார்க்க படுகிறது

            Posted in இலங்கை செய்திகள்

            நாட்டில் எகிறிய எரிபொருள் விலை – கொதிப்பில் மக்கள்

            நாட்டில் எகிறிய எரிபொருள் விலை – கொதிப்பில் மக்கள்

            இலங்கையில் எரிபொருள் விலை 30 முதல் 50 ரூபாவினள மேலும் அதிகரிக்க பட்டுள்ளது
            இந்த விலை உயர்வினால் மக்கள் பெரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்

            நாட்டில் நிலவி வரு பொருளாதார நெருக்கடி நிலையை சமாளிக்க அத்தியாவசிய பொருட்களின் விலை
            அதிகரித்த வண்ணம் உள்ளது குறிப்பிட தக்கது

              Posted in இலங்கை செய்திகள்

              ஜனாதிபதி பல்லு பிடுங்கும் -21 ஆவது திருத்தம் சமர்ப்பிப்பு

              ஜனாதிபதி பல்லு பிடுங்கும் -21 ஆவது திருத்தம் சமர்ப்பிப்பு

              நிறைவேற்று அதிகார ஜனாதிபதியின் அதிகாரங்களை கட்டுப்படுத்தும்

              அரசியலமைப்பின் 21ஆவது திருத்தம், இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, வீடியோ மூலம் தெரிவித்துள்ளார்.

              பாராளுமன்றக் கட்சித் தலைவர்களின் அவதானிப்புகளுக்காக திருத்தத்தின் பிரதிகளை விநியோகிக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது

              இது தொடர்பில் வெள்ளிக்கிழமை (27) கலந்துரையாடப்படும் என்றும் இந்த திருத்தம் இறுதி அனுமதிக்காக அமைச்சரவைக்கு
              அனுப்பி வைக்கப்படும் எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

                Posted in இலங்கை செய்திகள்

                ஆறு மைல் தூரத்திற்கு வரிசையில் காத்திருக்கும் மக்கள்

                ஆறு மைல் தூரத்திற்கு வரிசையில் காத்திருக்கும் மக்கள்

                இலங்கை மாத்தே கொட பகுதியில் இருந்து ஆறு மைல் தூரத்திற்கு மக்கள் எரிபொருள் கொள்வனவு
                செய்திட வரிசையில் காத்துள்ள அதிர்ச்சி காணொளி வெளியாகியுள்ளது

                நாட்டில் நிலவும் பொருளாத நெருக்கடி நிலை காரணமாக இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது

                போராட்ட காலத்தில் தமிழர்கள் வன்னி யாழ் பகுதியெங்கும் மெழுகுவர்த்தியில்

                வாழ்ந்த வரலாற்றை சிங்களவர்கள் அனுபவிக்க வேண்டும் என்பதே பாதிக்க பட்ட தமிழர்கள் விருப்பமாக உள்ளது

                  Posted in இலங்கை செய்திகள்

                  பால்மா இன்றி இறந்த சிசு – கொதிப்பில் மக்கள்

                  இலங்கையில் ஏற்பட்ட எரிபொருள் நெருக்கடி காரணமாக பிறந்தே இரண்டே நாளான பச்சிளம் குழந்தை உயிரிழந்த சம்பவம் நாட்டு மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

                  ஹல்தும்முல்லை பகுதியில் இந்த துயர சம்பவம் பதிவாகி உள்ளது. தாய்ப்பால் சரிவர கிடைக்காத காரணத்தினால் குறித்த குழந்தையின் குருதியில் சீனி அளவு குறைந்து உடல் மஞ்சள் நிறமாக மாறத் தொடங்கியுள்ளது.

                  உடனடியாக வைத்தியசாலை கொண்டு செல்ல முயன்ற பெற்றோருக்கு, சரியான நேரத்தில் போக்குவரத்து வசதி கிடைக்காவில்லை.

                  குழந்தையை வைத்தியசாலை எடுத்துச் செல்ல ஆட்டோ ஒன்றைத் தேட ஒரு மணிநேரத்துக்கும் அதிகமான நேரம் கழிந்துவிட்டது. அவர்களின் வீட்டிலிருந்து

                  ஹல்தும்முல்லை வைத்தியசாலைக்கு செல்ல அரைமணிநேரம் தான் பயணிக்க வேண்டும். நீண்ட போராட்டத்திற்கு பின்னர் வைத்தியசாலைக்கு கொண்டு சென்று

                  குழந்தை அம்புலன்ஸ் ஊடாக நுவரெலியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

                  எனினும் இரத்தத்தில் சீனியின் அளவு கடுமையாக குறைவடைந்த காரணத்தினால் குழந்தை இறந்துவிட்டது.

                    Posted in இலங்கை செய்திகள்

                    வாலிபனை அடித்து இழுத்து சென்ற கொடூரம்

                    நாவலப்பிட்டி நகரிலுள்ள தனியார் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருளைப் பெற்றுக்கொள்ள வருகைத் தந்த இளைஞர் ஒருவர், எரிபொருள் நிரப்பு நிலைய

                    உரிமையாளர், அவரது மகன் மற்றும் எரிபொருள் நிரப்பு நிலைய பணியாளர்களால் தாக்கப்பட்ட சம்பவம் ஒன்று, நேற்று (22) இரவு இடம்பெற்றுள்ளது.

                    இத்தாக்குதலில் காயமடைந்த இளைஞன், தனது ஓட்டோவுக்கு பெட்ரோல் நிரப்புவதற்காக நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்த போது, குறித்த எரிபொருள்

                    நிரப்பு நிலைய உரிமையாளரின் நண்பர் ஒருவர் வரிசையில் நிற்காமல் எரிபொருளை பெற முயற்சித்துள்ளார்.

                    இதன்போது இந்த விடயம் தொடர்பில் குறித்த இளைஞன், எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

                    இந்த நிலையிலேயே குறித்த இளைஞன் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதுடன், எரிபொருள் நிரப்பு நிலைய பணியாளர்களால் அடித்து இழுத்துச் செல்லப்பட்டு நாவலப்பிட்டி ரயில் நிலையத்துக்கு அருகில் வீசப்பட்டுள்ளான்.

                    இதனையடுத்து, 1990 அம்பியூலன்ஸ் ஊடாக நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட இளைஞன், மேலதிக சிசிச்சைக்காக கண்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

                    இதேவேளை, எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்,
                    குறித்த இளைஞனுக்கு எதிராக நாவலப்பிட்டி பொலிஸ்


                    நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ள நிலையில், இச்சம்பவம் இடம்பெற்ற போது,
                    பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல்
                    அமைதியாக இருந்ததாக வரிசையில் நின்ற நுகர்வோர் தெரிவித்துள்ளனர்.

                      Posted in இலங்கை செய்திகள்

                      வீடுகளை எரிச்சிட்டாங்க – எம்பிக்கள் முறைப்பாடு

                      வீடுகளை எரித்தமை உட்பட தமக்கு ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளது.

                      மனித உரிமைகள் ஆணைக்குழுவில் பல பாராளுமன்ற உறுப்பினர்கள் தனித்தனியாக முறைப்பாடு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

                      இன்றும் ஆணைக்குழுவில் மேலும் பல பாராளுமன்ற உறுப்பினர்கள் முறைப்பாடு செய்ய தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

                      இவ்வாறான முறைப்பாடுகள் அனைத்தும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

                      எவ்வாறாயினும், வீடுகளை எரிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், ஜனநாயக நாடு என்ற வகையில் அனைத்து தரப்பினரும் கருத்து வேறுபாடுகளை மதிக்க வேண்டும் என்றும் மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

                      முறைப்பாடு செய்த சில பாராளுமன்ற உறுப்பினர்கள்,
                      அவர்களுக்கு பாதுகாப்பை வழங்குவது அரசாங்கத்தின் பொறுப்பு என சுட்டிக்காட்டியுள்ளனர்.

                        Posted in இலங்கை செய்திகள்

                        10 அமைச்சர்கள் புதிதாக பதவி ஏற்பு

                        10 அமைச்சர்கள் புதிதாக பதவி ஏற்பு

                        இலங்கையில் இன்று மேலும் பத்து அமைச்சர்கள் புதிதாக பதவி ஏற்க உள்ளதாக தெரிவிக்க படுகிறது

                        ஆளும் ஜனாதிபதி கோட்டா பதவி விலக வேண்டும் என கோரி மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்

                        மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காது கோட்டா பதவி விலக மறுத்து வருகின்றமை குறிப்பிட தக்கது

                          Posted in இலங்கை செய்திகள்

                          பளையில் வெடித்த குண்டு – சிறுமி காயம்

                          பளையில் வெடித்த குண்டு – சிறுமி காயம்

                          பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கிளாலிப் பகுதியில் மர்மப் பொருள் வெடித்ததில் சிறுமி ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.

                          குறித்த சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளது.

                          கிளாலி பாடசாலைக்கு அருகில் உள்ள காணி ஒன்றினை தாயாருடன் இணைந்து துப்புரவு செய்தபோதே குறித்த அனர்த்தம் இடம்பெற்றிருப்பதாக தெரியவந்துள்ளது.

                          சம்பவத்தில் காயமடைந்த சிறுமிக்கு 16 வயது எனவும், நாளை சாதாரண தர பரீட்சையில் தோற்றவுள்ள மாணவி எனவும் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

                          காயமடைந்த சிறுமி யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

                          குறித்த சம்பவம் தொடர்பில் பளைப் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

                            Posted in இலங்கை செய்திகள்

                            முன்னாள் TGTE சபாநாயகர் நாகலிங்கம் பாலசந்திரனுக்கு டாக்ட்டர் பட்டம்

                            முன்னாள் TGTE சபாநாயகர் நாகலிங்கம் பாலசந்திரனுக்கு டாக்ட்டர் பட்டம்

                            பிரான்சில் வசித்து வரும் தொழில் அதிபரும் ,சமூக சேவகருமாக விளங்கி வரும்

                            நாகலிங்கம் பால சந்திரன் அவர்களுக்கு உலக தமிழர் பல்கலைக்கழகம் அமெரிக்காவினால்எதிர்வரும் 28 ஆம் திகதி ,முனைவர் எனும் டாக்ட்டர் பட்டம் வழங்கி கவுரவிக்க படுகிறார்

                            முப்பது வருடங்களாக தமிழீழ போராட்டத்தின் பலமாக தன்னை அர்ப்பணித்து செயல்

                            முன்னாள் TGTE சபாநாயகர்

                            பட்டவரும் ,பிரான்ஸ் தமிழர் புனர்வாழ்வு கழகத்தின் பணிப்பாளர் நாயகமாகவும் செயல் பட்டு தனது பணியினை திறம்பட ஆற்றியவர்

                            மேலும் தனி நபராக போராடி பல மக்களுக்கு உதவிகளை வழங்கி வருபவரும் ,நாடு

                            கடந்த தமிழீழ அரசாங்கத்தின் சபாநாயக்காராக விளங்கி அந்த அமைப்பை சிறந்த முறையில் வழிநடத்திய பெருமையும் இவரை சாரும்

                            தன் இனம் ,தன் மக்கள் என தன்னை நாட்டுக்கு அர்ப்பணித்த பண்பாளன்,அளப்பெரும்

                            சமூக சேவகனுக்கு உரிய கவுரவத்தை உலகத் தமிழர் பல்கலைக்கழகம் ,அமெரிக்கா வழங்கியுள்ளது பெருமை தருகிறது

                            ஈழ மண்ணில் புலிகள் ஆளுகை காலத்தில் தமிழ் மண் வீரியம் பெறவும் ,அந்த போராட்டம் வெல்லவும் பல்வேறு பட்ட உதவிகளை ஒன்று திரட்டி வழங்கிய அளப்பெரும் சேவகர்

                            தவிர பிரான்சில் கலைபண்பாடடு கழகம் உயிர்பெறவும் ,தமிழர் தேசத்தில்

                            பொருண்மிய மேம்பாடு சிறக்கவும் தன் பங்களிப்பை ,தனது சக்திக்கு மீறிய வகையில் அளித்தவர்

                            பல்வேறு பட்ட இராயத்தந்திர உறவுகளை பேணி அதன் மூலம் ஈழ பிரச்சனையை சர்வதேச அரங்கில் உரக்க ஒளிக்க வைத்தவர் ,இவ்வாறன பல்முக ஆற்றல் கொண்ட ஒருவருக்கு இந்த விருது கிடைப்பது மகிழ்வை தருகிறது

                            இவருடன் மேலும் மூன்று தமிழர்களும் அடக்கம் பெறுகின்றனர்

                            அவருக்கும் ,மேலும் இங்கே பட்டம் பெறும் அணைத்து உறவுகளுக்கும் எமது வாழ்த்துக்களையும்
                            பாராட்டையும் தெரிவித்து கொள்கிறோம்

                            நாகலிங்கம் பால சந்திரன்
                            நாகலிங்கம் பால சந்திரன்
                              Posted in இலங்கை செய்திகள்

                              தமிழ் நாட்டு உணவு கப்பல் – இலங்கை வந்தது

                              இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட 2 பில்லியன் ரூபாய் பெறுமதியான நிவாரணப் பொருட்கள், கொழும்பு துறைமுகத்தை இன்று (22) வந்தடைந்தது.

                              அவை, கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயினால் இலங்கை பிரதிநிதிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளன.

                              இதில், வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், கப்பல் துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் மற்றும் பிரதமர் பணிக்குழாம் பிரதானி சாகல ரத்நாயக்க ஆகியோர் கலந்துகொண்டனர்.

                              9,000 மெற்றிக் தொன் அரிசி, 50 மெற்றிக் தொன் பால்மா மற்றும் 25 மெற்றிக் தொன் மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களும் நிவாரண தொகையில் அடங்குகின்றன.

                              கடந்த 18 ஆம் திகதி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் குறித்த நிவாரணக் கப்பல் பச்சைக் கொடி அசைத்து அனுப்பி வைக்கப்பட்டது.

                              40,000 மெற்றிக் தொன் அரிசி, 500 மெற்றிக் தொன் பால் மா மற்றும் மருந்துகள் உட்பட 5.5 பில்லியன் ரூபாய் பெறுமதியான நிவாரணப் பொருட்களை இலங்கைக்கு வழங்க தமிழக அரசாங்கம் ஒப்புக்கொண்ட நிலையில், அதன் முதல் தொகுதி, நாட்டை வந்தடைந்தது.

                              இந்தப் பொருட்கள் வடக்கு, கிழக்கு, மத்திய மற்றும் மேல் மாகாணங்களில் உள்ள ஆதரவற்ற மக்களுக்கு விநியோகிக்கப்படும் என கொழும்பில் உள்ள
                              இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

                                Posted in இலங்கை செய்திகள்

                                தீ வைத்த பெண்ணைதேடும் பொலிஸ்

                                இலங்கையில் தீ வைத்த பெண்ணைதேடும் பொலிஸ்

                                மே 9ஆம் திகதி இடம்பெற்ற வன்முறையின் போது திவுலப்பிட்டிய பிரதேசத்திலுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் அலுவலகம் தாக்கப்பட்டு தீ வைக்கப்பட்ட

                                சம்பவம் குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

                                அதற்கமைய சமூக ஊடகங்களில் வெளியான வீடியோ மற்றும் புகைப்படங்களில்

                                இருந்து பெண்ணொருவர், எம்.பியின் அலுவலகத்தை தாக்கி தீ வைத்தமை கண்டறியப்பட்டுள்ளது.

                                குறித்த பெண்ணைக் கைது செய்வதற்கு பொது மக்களின்
                                உதவியை நாடியுள்ள குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர்,

                                  Posted in இலங்கை செய்திகள்

                                  கொழும்பு தொடர்மாடி மக்களுக்கு சமைத்த உணவு வழங்குங்கள்

                                  • பிரதமரிடம் ரணிலிடம், மனோ கணேசன் கோரிக்கை

                                  குறைவருமான கொழும்பு தொடர்மாடி மக்களுக்கு சமைத்த உணவு வழங்குங்கள்

                                  • பிரதமரிடம் ரணிலிடம், மனோ கணேசன் கோரிக்கை

                                  உணவு இல்லை. காஸ் இல்லை. மின்சாரம் இல்லை. இவற்றால் நாட்டிலேயே மிகவும் துன்புறுவது கொழும்பு தொடர்மாடி குடியிருப்புகளில் வாழும் மக்கள்தான்.

                                  மாநகரத்தில் நாளாந்த வருமானம் பெற்று வந்த குடும்பங்கள், ஒருவேளை உணவுமின்றியும், உணவு சமைக்க வழியுன்றியும் தவிக்கிறார்கள்.

                                  குறிப்பாக, வடகொழும்பின் பின்தங்கிய நகர தோட்ட குடியிருப்புகளில் வாழ்ந்த மக்கள், எமது ஆட்சிகாலத்தில் சுமார் 13,000 தொடர்மாடி இல்லங்களில்

                                  குடியமர்த்தப்பட்டார்கள். இந்த குடும்பங்களை அடையாளம் கண்டு, இவர்களுக்கும், கொழுப்பு நகரின் பின்தங்கிய குடியிருப்புகளில் வாழும் மக்களுக்கும், பங்கீட்டு அட்டைகள் வழங்கி, அவர்களுக்கு சமைத்த உணவு வழங்குங்கள்.

                                  இதற்காக, கொழும்பு துறைமுகத்தில் அமைந்துள்ள பாரிய சமையலறை மற்றும் கொழும்பு மாநகரசபைக்கு சொந்தமான பயன்படுத்தபடாத சமையலறைகள்

                                  ஆகியவை பயன்படுத்தலாம். இராணுவ சமையல் பணியாளர்களை பணியில் அமர்த்தி இயல்பு நிலைமை திரும்பும்வரை இந்த திட்டத்தை முன்னெடுங்கள் என பிரதமர் ரணில்

                                  விக்கிரமசிங்கவுக்கு, தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் கொழும்பு எம்பி மனோ கணேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

                                  இது தொடர்பில் பிரதமருக்கு நேரடியாக கடிதம் அனுப்பியுள்ள மனோ எம்பி, ஊடகங்களிடம் மேலும் கூறியுள்ளதாவது,

                                  நாடு முழுக்க வாழ்வாதார பிரச்சினைகள், மக்களின் கழுத்துகளை நெரிக்கின்றன. இவற்றில் மிகவும் துன்பங்களை நகரங்களில் வாழும் குடும்பங்கள் சந்திக்கிறார்கள். கிராமிய பகுதிகளில் இருக்கும் இயற்கை வளங்கள், மரம், செடி, கொடி, தண்ணீர்

                                  என்பன நகரங்களில் இல்லை. ஒரு கிண்ணம் நீரும் பணம் கொடுத்தே வாங்க வேண்டியுள்ளது. அதிலும் கொழும்பு தொடர்மாடி குடியிருப்புகளில் வாழும் மக்கள் படும்பாடு சொல்லும்தரமன்று.

                                  இந்த கொழும்பு மாநகர பின்தங்கிய மக்களை, விசேட தேவை உள்ள பிரிவினராக அறிவித்து, பங்கீட்டு குடும்ப அட்டைகளை வழங்கி அவர்களுக்கு முதற்கட்டமாக சமைத்த உணவு வழங்குங்கள். இதன்மூலம் இங்கு வாழும் பள்ளி பிள்ளைகள்,

                                  குழந்தைகள், பெண்கள், வயோதிபர்களின் பசியை ஓரளவாவது போக்கலாம். மீண்டும் நாட்டில் இயல்பு நிலைமை திரும்பும்வரை இந்த திட்டத்தை நடைமுறை செய்யுங்கள்.

                                  கொழும்பு மாவட்ட எம்பி என்ற முறையில், எதிரணியில் இருந்தபடி கட்சி பேதமின்றி,
                                  இது தொடர்பில் நாம் உங்களுக்கு ஒத்துழைப்பு வழங்க தயார்.

                                  Posted in இலங்கை செய்திகள்

                                  இலங்கையில் வன்முறையில் ஈடுபட்ட குற்ற சாட்டில் 1500 அப்பாவிகள் போலீசாரால் கைது

                                  இலங்கையில் வன்முறையில் ஈடுபட்ட குற்ற சாட்டில் 1500 அப்பாவிகள் போலீசாரால் கைது

                                  இலங்கையில் ஆளுமா அரசுக்கு எதிராக இடம்பெற்று வரும் போராட்டத்தில் கலந்து

                                  கொண்ட மக்களில் ஆயிரத்து ஐநூறு பேர் கைது செய்ய பட்டுள்ளனர்

                                  இவ்விதம் கைது செய்ய பட்டவர்களில் 677 பேர் விளக்கமறியலில் தடுத்து வைக்க பட்டுள்ளனர்

                                  மக்களை அச்சுறுத்தும் முகமாக இந்த கைதுகள் இடம்பெற்றுள்ளது என சமூக நல ஆர்வளர்கள் தெரிவித்துள்ளனர்

                                    Posted in இலங்கை செய்திகள்

                                    இலங்கையின் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்த – விளையாட போகிறோம் சீனா அறிவிப்பு

                                    இலங்கையின் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்த – விளையாட போகிறோம் சீனா அறிவிப்பு

                                    இலங்கையில் நிகழ் காலத்தில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியில் இருந்து அந்த

                                    நாட்டை மீள தூக்கி நிறுத்திட தாம் அதறகான விளையாட்டை ஆரம்பிக்க போவதாக சீனா அறிவித்துள்ளது

                                    சீனா கடன்வழங்கிய நிலையில் இந்த நிலைக்கு இலங்கை சென்றமை குறிப்பிட தக்கது