Posted in Uncategorized

அகதி தஞ்ச கோரிக்கைகாக புலிகள் அமைப்பு லண்டனில் இயக்கம்- இலங்கை அரசு

அகதி தஞ்ச கோரிக்கைகாக புலிகள் அமைப்பு லண்டனில் இயக்கம்- இலங்கை அரசு

பிரிட்டனில் புலிகள் அழிக்க பட்டதன் பின்னர் பெரும்பாலான புலிகள் அமைப்பினர் அதில் இருந்து ஒதுங்கி விட்டனர் ,அவர்கள் தாம் ஒன்று தமது வேலை ஒன்று என உள்ளனர்


ஆனால் அகதி தஞ்ச அகோரிக்கை ஏற்று நடத்தும் சிலர் ஆட்களை கூட்டி அவர்களுக்கு விசா பெற்று கொள்ளும்

முகமாக இந்த கூட்டங்களை ஒழுங்கு படுத்தி அதில் கலந்து கொள்கின்றனர்
என சிங்கள உளவுத்துறை ஊடகம் ஒன்று செய்தி வெளிட்டு தமிழர்களை கொச்சை படுத்தியுள்ளது

மேற்படி தகவலை பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு புலிகள் கட்சி பிரமுகர் தமக்கு தெரிவித்துள்ளதாக அதில் குறிப்பிட பட்டுள்ளது

அப்படி என்றால் சிங்கல அரசினால் சில சட்டத்தரணிகள் இலக்கு வைக்க படுவதுடன் ,மேலும் அகதிகளுக்கு ஆப்பு வைக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது

மகிந்த காசில் வாழ்கை ஓட்டும் புலிகள் கட்சிகள் என்பது இப்போது அம்பலமாகியுள்ளது இங்கே குறிப்பிட தக்கது

    Posted in Uncategorized

    செல்பி மோகம் – ரயிலில் இருந்து வீழ்ந்து இறந்த வாலிபர்

    செல்பி மோகம் – ரயிலில் இருந்து வீழ்ந்து இறந்த வாலிபர்

    வவுனியா கல்லாறு பாலத்தின் ஊடக பயணித்து கொண்டிருந்த பயணிகள் தொடரூந்தில்

    பயணித்த வாலிபர் ஒருவர் செல்பி மோகத்தினால் அந்த பாலத்தை கடக்கும் பொழுது செல்பி

    எடுக்க முயன்று அதில் மோதுண்டு வீழ்ந்த பரிதாபம் இடம்பெற்றுள்ளது

    சிதைந்த நிலையில் சடலம் மீட்க பட்டு குடும்ப உறவுகளிடம் ஒப்படைக்க பட்டுள்ளது

    இறந்தவர் 21 வயதுடைய வாலிபர் என தெரிவிக்க படுகிறது

      Posted in Uncategorized

      இந்தியா இராணுவ சரக்கு விமனங்கள் கொழும்பில் செய்த வேலை

      இந்தியா இராணுவ சரக்கு விமனங்கள் கொழும்பில் செய்த வேலை

      இந்தியாவில் தயாரிக்கப்பட்ட நானோ நைட்ரஜன் திரவ உரத் தொகுதியை ஏற்றிக்கொண்டு

      இந்திய விமானப்படையின் இரண்டு சிறப்பு சரக்கு விமானங்கள் வியாழக்கிழமை கட்டுநாயக்க

      பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தன.

      கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் கூறியதாவது: இரண்டு IAF C-17 Globemaster

      விமானங்கள் 100,000 கிலோ நானோ நைட்ரஜனுடன் பண்டாரநாயக்க சர்வதேச விமான

      நிலையத்தை வந்தடைந்தன. இலங்கை விவசாயிகளுக்கு நானோ நைட்ரஜன் உரம் கிடைப்பதை

      விரைவுபடுத்துவதற்கும், இயற்கை விவசாயத்தை நோக்கிய இலங்கை அரசாங்கத்தின்

      முன்முயற்சிக்கு ஆதரவளிப்பதற்கும் இந்த நடவடிக்கை மேற்கொள்ள பட்டதாக இந்திய அதெரிவித்துள்ளது

      Posted in இலங்கை செய்திகள் குற்ற செய்திகள்

      மகளை கர்ப்பமாக்கிய தந்தை – சிசுவை கொன்று வீசிய கொடூரம்

      மகளை கர்ப்பமாக்கிய தந்தை – சிசுவை கொன்று வீசிய கொடூரம்


      பிறந்து மூன்று நாள்களேயான சிசுவின் சடலம், கிட்டங்கி ஆற்றங்கரைக்குள் வீசப்பட்ட நிலையில் வெள்ளிக்கிழமை (05) பொலிஸாரால் மீட்கப்பட்டது.

      சம்மாந்துறைப் பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, அம்பாறை மாவட்டத்தின் சொறிக் கல்முனை – சம்மாந்துறை பிரதான வீதியின் கிட்டங்கி ஆற்றில் இச்சிசுவின் சடலம் மீட்கப்பட்டது.

      இது தொடர்பாக, சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சென்னல் கிராமம் – 01 கிராம சேவையாளர் பிரிவில் வசித்துவரும் பக்கீர் தம்பி அஸ்பர் (வயது-41) என்பவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார்.

      தனது 19 வயதுடைய மகளுடன் தகாத உறவில் ஈடுபட்டு பிறந்த சிசுவையே இவ்வாறு ஆற்றுக்குள் வீசியதாக கைதாகிய சந்தேகநபர், பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

      சந்தேகநபருடன் குறித்த பகுதிக்கு விரைந்த பொலிஸார் மற்றும் அம்பாறை மாவட்ட விசேட குற்றத்தடுப்புப் பிரிவினர், இராணுவத்தினர் ஒன்றிணைந்து வீசப்பட்ட சிசுவின் சடலத்தை மீட்டெடுத்தனர்.

      சம்பவ இடத்துக்கு வருகை தந்த சம்மாந்துறை நீதவான் நீதிமன்ற நீதிபதி ஐ.என்.றிஸ்வான், உயிரிழந்து சிசுவை பார்வையிட்டதுடன், பிரேத பரிசோதனையை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.

      இதனையடுத்து, அம்பாறை ஆதார வைத்தியசாலைக்கு சிசுவின் சடலம் எடுத்துச்செல்லப்பட்டது.

      நாளாந்த கூலி தொழிலாளியான சந்தேக நபர், இரண்டு திருமணம் செய்தவர் என்பதுடன், தற்போது மனைவிமார்களுடன் இல்லாத நிலையில், முதல் திருமணத்தில் பிறந்த 19 வயதுடைய தனது மகள் மற்றும் இரண்டாவது திருமணத்தில் பிறந்த 2 பிள்ளைகளுடனும் வாழ்ந்து வந்த நிலையில், இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

      சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை, சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

        Posted in Uncategorized

        காவல்துறை திடீர் சோதனை – 1,019 பேர் கைது

        காவல்துறை திடீர் சோதனை – 1,019 பேர் கைது

        இலங்கை மேல்மனத்தில் காவல்துறை அணியினர் நடத்திய திடீர் சோதனைநடவடிக்கையின்

        பொழுது


        சுமார் 1,019 பேர் கைது செய்ய பட்டுள்ளனர்

        இவர்கள் நீதிம்னற பிடியாணை பிறப்பிக்க பட்டு தலைமறைவாக இருந்த நூற்றுக்கு

        மேற்பட்டவர்கள் கைதாகியுள்ளமை குறிப்பிட தக்கது

          Posted in இலங்கை செய்திகள்

          பஸ் வான் மோதல் – சிலர் காயம்


          பஸ் வான் மோதல் – சிலர் காயம்

          இலங்கையில் நிலவி வரும் சீரற்ற காநிலையில் சிக்கி அரச பேரூந்து ஒன்றும் ,வான் ஒன்றும்

          நேரெதிர் மோதின .


          இதில் இரு வண்டிகளின் சாரதிகளும் படுகாயமடைந்துள்ளனர்


          காலநிலை சீர் கேட்டினால இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்க படுகிறது

            Posted in Uncategorized

            யாழில் வாள்வெட்டு – ரவுடிகள் அட்டகாசம்

            யாழில் வாள்வெட்டு – ரவுடிகள் அட்டகாசம்

            யாழ்ப்ப்பாணம் கொக்குவில் – கேணியடிப் பகுதியில் ஊந்துருளியில் வருகை தந்த மூவர்
            திடீரென வாலிபர் மீது சரமாரியாக வாள்வெட்டு தாக்குதலை நடத்தினர்

            இதில் பலத்த காயமடைந்த வாலிபர் யாழ்ப்பாண மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்

            மகிந்த ஆட்சியில் உருவாக்க பட்ட வாள்வெட்டு குழுவினர் பெரும் அடாவடியில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது

              Posted in இலங்கை செய்திகள்

              காலநிலை சீர் கேட்டில் சிக்கி ஐவர் மரணம்

              காலநிலை சீர் கேட்டில் சிக்கி ஐவர் மரணம்

              இலங்கையில் நிலவி வரும் சீரற்ற காலநிலை சீர்கேட்டில் சிக்கி இதுவரை ஐவர் பலியாகியுள்ளனர் ,மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர்

              வெள்ள பெருக்கில் சிக்கிய மக்கள் தற்காலிக தங்கும் இடங்களில் தங்க வைக்க பட்டுள்ளனர்

                Posted in இலங்கை செய்திகள்

                இலங்கையில் இருந்து பிரான்ஸுக்கு நேரடி விமான சேவைகள் ஆரம்பம்

                இலங்கையில் இருந்து பிரான்ஸுக்கு நேரடி விமான சேவைகள் ஆரம்பம்

                இலங்கை கொழுப்பு விமான நிலையத்தில் இருந்து பிரான்ஸ் பரிசுக்கு நேரடி விமான சேவை ஒன்றை


                Air France விமான சேவை ஆரம்பித்துள்ளது

                இந்த சேவைகள் ஆரம்பிக்க படுவதால் பயணிகள் குஷியில் உறைந்துள்ளனர் ,


                நேரடி விமான சேவைகள் பலது தடுக்க பட்ட நிலையில் மீள சேவை ஆரம்பிக்க பட்டுள்ளதால்

                இலங்கையின் உல்லாச துறையில் பாரிய தாக்கத்தை இது ஏற்படுத்து என கூற படுகிறது

                  Posted in Uncategorized

                  அமெரிக்கா பறக்கும் கூட்டமைப்பு – அவசர அழைப்பு ஏன் ..?

                  அமெரிக்கா பறக்கும் கூட்டமைப்பு – அவசர அழைப்பு ஏன் ..?

                  இலங்கையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் குழு ஒன்று அமெரிக்காவிற்கு பயணமாகிறது ,இந்த

                  பயணத்தின் பொழுது


                  இலங்கை தமிழர் தொட்ரபில் பேச படவுள்ளதாக தெரிவிக்க படுகிறது


                  அமெரிக்காவின் அழைப்பினை ஏற்று இவர்கள் பயணமாவது ஆளும் ஆட்சியாளர்களுக்கு

                  கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது

                    Posted in இலங்கை செய்திகள்

                    இலங்கையில் சீனாவின் இராணுவத்தளம் – அமெரிக்கா கொதிப்பு

                    இலங்கையில் சீனாவின் இராணுவத்தளம் – அமெரிக்கா கொதிப்பு

                    இலங்கையில் சீனா இராணுவத்தின் பெரும் இராணுவ தளம் ஒன்றை அமைத்து வருவதாக
                    அமெரிக்கா குற்றம் சுமத்தியுள்ளது

                    அதற்க்கான அணைத்து நகர்வுகளையு சீனா முடுக்கி விட்டுள்ளது என அமெரிக்கா தெரிவித்துள்ளது
                    இத்தகையை சீனாவின் நிலைப்பாடு இலங்கைக்கு பெரும் நெருக்கடியை தோற்றுவிக்கும் என எதிர் பார்க்க படுகிறது

                    அம்பாந்தோட்டை துறைமுகஹை தமது கையக படுத்தியசீனா அது தனது நாடு போன்று உருவாக்காகி வருகிறது
                    குறிப்பிட தக்கது

                      Posted in இலங்கை செய்திகள்

                      60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மூன்றாவது ஊசி

                      60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மூன்றாவது ஊசி

                      இலங்கையில் அறுபது வயதுக்கு மேற்பட்ட அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும்

                      மூன்றாவது தடுப்பூசி செலுத்த படவுள்ளது என அறிவிக்க பட்டுள்ளது


                      பரவி வரும் நோயின் பரவலை தடுக்கவும் ,உயிர்களை காப்பாற்றவும் இந்த நடவடிக்கை

                      முன்னெடுக்க பட்டு வருவதாக தெரிவிக்க படுகிறது

                        Posted in இலங்கை செய்திகள்

                        இலங்கையில் கொரனோ தாக்குதலில் சிக்கி 13,821 பேர் மரணம்

                        இலங்கையில் கொரனோ தாக்குதலில் சிக்கி 13,821 பேர் மரணம்

                        இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி இது வரை
                        13,821 பேர் மரணமாகியுள்ளனர்

                        மேலும் 544,013 பேர் பாதிக்க பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது

                        Posted in இலங்கை செய்திகள்

                        பொல்லால் அடித்து பெண் ஒருவ படு கொலை

                        பொல்லால் அடித்து பெண் ஒருவ படு கொலை

                        வட்டவளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மவுன்ஜீன் தோட்டத்தில் பொல்லால் அடித்து மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதுடன் சந்தேகத்தின் பேரில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

                        இச் சம்பவம் நேற்று (04.11.2021) இரவு 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

                        அயல் குடும்பத்திற்கும் தனது குடும்பத்திற்கும் ஏற்பட்ட சண்டையை விலக்குவதற்கு சென்ற தாயே இவ்வாறு பொல்லால் அடிப்பட்டு இறந்துள்ளார்.

                        இவ்வாறு உயிரிழந்தவர் மூன்று பிள்ளைகளின் தாயான சந்திரசேகரன் கலாதேவி வயது 57 என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

                        சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வட்டவளை பொலிஸார் தெரிவித்தனர்.

                        உயிரிழந்த பெண்ணின் சடலம் வட்டவளை வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

                        ஹட்டன் நீதிமன்றத்தின் நீதவானின் மரண விசாரணைகளின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என பொலிஸார் தெரிவித்தனர்.

                        கைது செய்யப்பட்ட சந்தேக நபரை ஹட்டன் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

                        இச்சம்பவம் குறித்து அட்டன் கைரேகை அடையாள பிரிவு மற்றும் வட்டவளை பொலிஸார் இணைந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

                          Posted in இலங்கை செய்திகள்

                          பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றிற்கு தயாராகும் ஆசிரியர்கள்

                          பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றிற்கு தயாராகும் ஆசிரியர்கள்

                          அனைத்து தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து எதிர்வரும் 9 ஆம் திகதி பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளதாக ஆசிரியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

                          அதிபர் – ஆசிரியர்கள் சங்கங்களினால் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள நேரத்திற்கு வேலை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என குறித்த சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

                          எமது அனைத்து போராட்டங்களும் ஒன்றிணையும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பதை அரசு புரிந்துகொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

                          Posted in இலங்கை செய்திகள்

                          ஹிட்லரை போல மகிந்தாவும் சாவார் – ரஜனி

                          ஹிட்லரை போல மகிந்தாவும் சாவார் – ரஜனி

                          தீபாவளி தினத்தன்று ரஜனி நடித்த அண்ணாத்த திரைப்படம் வெளியாகியுள்ளது
                          இதில் ரஜனி அரசியல் தலைவர்களை இலக்கு வைத்து பேசுவது வழமை


                          அதில் ஹிட்லர் ,முசோலின் ,இடிஅமீன் போல நீயும் சாவாய் என்கிறார் ,அது இலங்கையில் பெரும் தமிழ் இனப்படுகொலைகளை நடத்திய மகிந்தாவுக்கு தெரிவிக்க பட்ட சொல்லாக உள்ளது

                          இதே ரஜனி இலங்கை சென்று மகிந்தாவுடன் குலாவி வந்தமை இங்கே குறிப்பிட தக்கது

                            Posted in இலங்கை செய்திகள்

                            கொரனோவுக்கு இலங்கையில் 15 பேர் மரணம்

                            கொரனோவுக்கு இலங்கையில் 15 பேர் மரணம்

                            இலங்கையில் நேற்றைய (03) தினம் மேலும் 15 பேர் கொரோனா வைரசு தொற்றின் காரணமாக உயிரிழந்துள்ளனர்.

                            சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இதனை உறுதி செய்திருப்பதாக அரசாங்க தகவல்

                            திணைக்களம் இன்று (04) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது:

                              Posted in இலங்கை செய்திகள்

                              மண்சரிவு அனர்த்த எச்சரிக்கை

                              மண்சரிவு அனர்த்த எச்சரிக்கை

                              நாட்டில் 8 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

                              கண்டி, நுவரெலியா. மாத்தளை, பதுளை, இரத்தினபுரி, களுத்துறைஇ காலி மாவட்டங்களில் வசிக்கும் மக்கள் இததொடர்பில் அவதானத்துடன் செயல்பட வேண்டுமென்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைம் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

                              தற்சமயம் நிலவும் சீரற்ற காலநிலையினால் மலையக பகுதிகளில் மண்சரிவு, மண்மேடுகள் சரிவு போன்ற அனர்த்தங்கள் இடம்பெறுவதற்கான அறிகுறிகள் பற்றி எச்சரிக்கையாக இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

                              இவ்வாறான அறிகுறிகள் தென்பட்டால் உரிய பகுதியை விட்டு பாதுகாப்பான பகுதிகளுக்குச் செல்வது அவசியமாகும் என்றும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

                              பொலிசாரும் முப்படையினரும் மாவட்ட பிரதேச செயலகங்களும் அனர்த்த நிலையை எதிர்கொள்ள தயார் நிலையிலுள்ளன

                              Posted in இலங்கை செய்திகள்

                              வெடித்து சிதறிய கடை – ஓடிய மக்கள்

                              வெடித்து சிதறிய கடை – ஓடிய மக்கள்

                              வெலிகம, கப்பரதொட்ட பகுதியில் உள்ள சிற்றூண்டிச்சாலை ஒன்றில் வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

                              சம்பவத்தில் இருவர் காயமடைந்து மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

                              சிற்றூண்டிச்சாலையின் எரிபொருள் சிலிண்டர் வெடித்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

                              சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

                                Posted in இலங்கை செய்திகள்

                                வாகனத்தால் மக்களை இடித்து கொன்ற சிறுவன்

                                வாகனத்தால் மக்களை இடித்து கொன்ற சிறுவன்


                                இன்று காலை வெலிசர பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மூவர் காயமடைந்து ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

                                கொழும்பில் இருந்து நீர்கொழும்பு நோக்கி, குறித்த சிறுவனால் செலுத்தப்பட்ட அதிசொகுசு வாகனம், வீதியை விட்டு விலகி எதிர் திசையில் பயணித்த கார், ஓட்டோ மற்றும் இரண்டு மோட்டார் சைக்கிள்களுடன் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

                                ‍வேகக்கட்டுப்பாட்டை இழந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

                                விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவரே உயிரிழந்துள்ளதுடன், இந்த விபத்து தொடர்பில் மஹபாகே பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்