Posted in இலங்கை செய்திகள்

ஆற்றுக்கு குதித்த காதல் ஜோடி- காதலன் நீந்தி தப்பினார் – காதலி மரணம்

ஆற்றுக்கு குதித்த காதல் ஜோடி- காதலன் நீந்தி தப்பினார் – காதலி மரணம்

மஹியங்கனை பாலத்தின் மேல் இருந்து இளைஞன் ஒருவனும் யுவதி ஒருவரும் மகாவலி ஆற்றில் குதித்துள்ளனர்.

எனினும் ஆற்றில் குதித்த இளைஞன் நீந்தி கரைக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பின்னர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து மஹியங்கனை பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து காணாமல் போன யுவதியை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

காணாமல் போனவர் ரிதீமாலியத்த பிரதேசத்தில் வசிக்கும் 19 வயதுடைய யுவதி என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவர் நேற்று காலை மேலதிக வகுப்பில் கலந்து கொள்வதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து வௌியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவத்தை நேரில் பார்த்த நபர் ஒருவர் கூறும் போது, முதலில் யுவதி ஆற்றில் குதித்ததாகவும் பின்னர் இளைஞன் ஆற்றில் குதித்ததாகவும் தெரிவித்தார்.

குறித்த சம்பவம் அங்கிருந்த நபர் ஒருவரின் கைப்பேசியில் இவ்வாறு பதிவு செய்யப்பட்டிருந்தது.

    Posted in இலங்கை செய்திகள்

    சீனா தூதர் யாழில் – இந்தியா கொதிப்பில்

    சீனா தூதர் யாழில் – இந்தியா கொதிப்பில்

    இலங்கைக்கான சீன தூதுவர் திடீர் பயணம் ஒன்றை மேற்கொண்டு யாழ்ப்பாணம் சென்று ,யாழ் சென்று அந்த பகுதி மேயருடன் சந்திப்பில் ஈடுபட்டுள்ளார்

    இவரது இந்த சந்த்திப்பின் நோக்கம் தொடர்பில் தெரியவரவிலை

    Posted in இலங்கை செய்திகள்

    வெடிக்கும் காஸ் சிலிண்டர்கள் – பீதியில் மக்கள்

    வெடிக்கும் காஸ் சிலிண்டர்கள் – பீதியில் மக்கள்

    இலங்கையில் சமீப காலங்களாக காஸ் சிலிண்டர்கள் வெடித்த வண்ணம் உள்ளது

    இவ்விதம் மாட்டு காத்தான் குடி பகுதியில் வீடொன்றில் காஸ் சிலிண்டர் வெடித்துள்ளது ,இதில்

    சிறிய பாதிப்பு ஏற்பட்டுள்ள போதிலும் மக்கள் மத்தியில் அச்சம் நிலவுகிறது

      Posted in Uncategorized

      யாழில் ஓட ஓட வாள்வெட்டு – தெரு ரவுடிகள் அட்டகாசம்

      யாழில் ஓட ஓட வாள்வெட்டு – தெரு ரவுடிகள் அட்டகாசம்

      யாழ். பல்கலைக்கழகத்திற்கு அருகில் பரமேஸ்வரா சந்திக்கு அருகாமையில் புதன்கிழமை இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

      மோட்டார் சைக்கிளில் வீதியால் வந்த இளைஞனை பின் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த கும்பல் வாள் வெட்டுத்தாக்குதலை மேற்கொண்டது.

      தாக்குதலில் இளைஞன் படுகாயமடைந்த நிலையில் , யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் , சம்பவம் தொடர்பில் விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து இருந்தனர்.

      இந்த நிலையில் , வண்ணார்பண்ணை பகுதியை சேர்ந்த இரு இளைஞர்களை நேற்றைய தினம் யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவினர் அவர்களது வீட்டில் வைத்து கைது செய்துள்ளனர்.

      அதன் போது , வாள் வெட்டு சம்பவத்திற்கு செல்ல பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் மற்றும் வாள் ஒன்றினையும் மீட்டுள்ளனர்.

      கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் முன் பகை காரணமாகவே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

      அதேவேளை , குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இருவர் தலைமறைவாகியுள்ள நிலையில் அவர்களை கைது செய்யவும் பொலிஸார் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

      Posted in இலங்கை செய்திகள்

      இலங்கையில் பரவும் ஒமிக்ரான்- நால்வர் பாதிப்பு

      இலங்கையில் பரவும் ஒமிக்ரான்- நால்வர் பாதிப்பு

      இலங்கையில் தற்போது உலக நாடுகளை மிரட்டி வரும் ஒமிக்ரான் நோயினால் பதஹிக்க பட்டு நல்லவர் சிக்கியுள்ளனர்

      மேலும் இந்த நோயானது வேகமாக பரவும் நிலை ஏற்படுவதால் ,பலத்த கட்டு பாடுகள் விதிக்க பட்டுள்ளது

        Posted in இலங்கை செய்திகள்

        இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை

        இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை

        இலங்கைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை ,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது.

        அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு

        2021 டிசம்பர்17ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.

        இலங்கைக்குத் தென்கிழக்காக காணப்பட்ட காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் தற்போது தெற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக நிலை கொண்டுள்ளது. அது அடுத்த 24 மணித்தியாலங்களில் அருகிலுள்ள கடற்பரப்புகளை விட்டு விலகி கிழக்குத் திசையில் நகரக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

        மழை நிலைமை:
        புத்தளத்திலிருந்து காங்கேசந்துறை, திருகோணமலை மற்றும் பொத்துவில் ஊடாகஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

        நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

        காற்று :
        நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு திசையிலிருந்து வீசக்கூடும். காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 25-35 கிலோ மீற்றர் வரை காணப்படுவதுடன் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 45 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

        காங்கேசந்துறையிலிருந்து மன்னார் மற்றும் புத்தளம் ஊடாக சிலாபம் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 50-55 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

        கடல் நிலை:
        காங்கேசந்துறையிலிருந்து மன்னார் மற்றும் புத்தளம் ஊடாக சிலாபம் வரையான வரையான கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும்.

        நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள் ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.

        இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன் அக்கடற்பிரதேசங்கள்மிகவும் கொந்தளிப்பாகவும்காணப்படும்.

          Posted in இலங்கை செய்திகள்

          மாணவனை போட்டு தாக்கிய ஆசிரியர் கைது

          மாணவனை போட்டு தாக்கிய ஆசிரியர் கைது

          வெயாங்கொடையில் உள்ள பிரபல பாடசாலையின் ஆசிரியர் ஒருவர் உயர்தர மாணவரை

          பிளாஸ்டிக் குழாயால் தாக்கிய சம்வத்தில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

          ஆசிரியரை கைது செய்த வெயாங்கொடை பொலிஸார், அத்தனகல்ல நீதவான் முன்னிலையில்

          ஆஜர்படுத்திய பின்னர் எதிர்வரும் 22ஆம் திகதி வரை அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

          சந்தேகநபர் நேற்று காலை சட்டத்தரணி ஊடாக வெயாங்கொடை பொலிஸில் முன்னிலையாகியதன் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.

          மாலையில் நேர வகுப்புக்கு மாணவன் வராததால் குறித்த தொழில்நுட்ப ஆசிரியர், பிளாஸ்டிக் குழாயைக் கொண்டு வந்து மாணவனின் கை மற்றம் கால்களில் கொடூரமாக தாக்கியுள்ளார்.

          இதனால் கை, கால்களில் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் மாணவன்

          வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், தாக்குதல் சம்பவம் தொடர்பில் அவரது பெற்றோர் வெயாங்கொடை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

          தாக்குதலுக்கு உள்ளான மாணவன் இம்முறை க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள தொழில்நுட்ப மாணவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

            Posted in இலங்கை செய்திகள்

            இலங்கையில் புதிய கொரனோ சட்டம் அமூல்

            இலங்கையில் புதிய கொரனோ சட்டம் அமூல்

            புதிய சுகாதார வழிகாட்டல், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் இன்று(16) வெளியிடப்பட்டுள்ளது.

            அதற்கமைய, திருமண நிகழ்வுகளில் மண்டப கொள்ளளவில் 50 சதவீதமானோர் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

            அத்துடன், திருமண நிகழ்வுகளில் மதுபான பாவனைக்கு விதிக்கப்பட்டிருந்த தடை தளர்த்தப்பட்டுள்ளது.

            மேலும், மரண சடங்குகளில் ஒரு தடவையில் 30 பேர் பங்கேற்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

            இன்று முதல் எதிர்வரும் 31 ஆம் திகதி வரையில் இந்த புதிய சுகாதார வழிகாட்டல் நடைமுறையில் இருக்கும்.

              Posted in Uncategorized

              இயக்கச்சியில் வீதியில் நின்றவரை மோதி தள்ளிய டிப்பர்

              இயக்கச்சியில் வீதியில் நின்றவரை மோதி தள்ளிய டிப்பர்

              இலங்கை இயக்கச்சி பகுதியில்15-12-2021 வீதியின் ஓரத்தில் மிதிவண்டியுடன் நின்றவரை

              வேகமாக வந்த டிப்பர் வாகனம் ஒன்று மோதி ,தள்ளியது இதன் பொழுது இயக்கச்சி

              சங்கத்தார் வயலை சேர்ந்தவரும் , தற்போது உசனில் வசித்து வருபவருமான செல்லத்தம்பி-

              செல்வகுமார் என அழைக்க படும் மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவரே இந்த விபத்தில் சிக்கினார்

              பலத்த காயமான நிலையில் தற்பொழுது யாழ்ப்பாண போதானா வைத்தியசாலையில் அவசர

              சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளார் ,இதுவரை அவர் கண் விழிக்கவில்லை என உறவினர்கள் தெரிவிக்கின்றனர்

              சாரதி பளை காவல்துறையினரால் கைது செய்ய பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது ,இலங்கை

              வீதி நடை முறைகளை பின்பற்ற தவறி சாரதிகள் வேகமாக பயணிப்பதே இந்த விபத்துக்கு காரணம் என தெரிவிக்க படுகிறது

                Posted in இலங்கை செய்திகள்

                இலங்கையில் கொரானாவுக்கு 16 பேர் மரணம்

                இலங்கையில் கொரானாவுக்கு 16 பேர் மரணம்

                இலங்கையில் கடந்த தினம் கொரனோ நோயின் தாக்குதலில்க் சிக்கி 16 பேர் பலியாகியுள்ளனர்

                ,அதிக நோயாளர்கள் சமீப நாட்களில் அடையாளம் காணப்பட்டுள்ள பொழுதும் இறப்பு

                வீகிதங்கள் குறைவு என கோரி , உரிய மரண எண்ணிக்கையை குறைத்து கூறி வருகின்றமை குறிப்பிட தக்கது

                  Posted in Uncategorized

                  யாழில் வீதிகளில் மிதக்கும் மனித சடலங்கள் – அச்சத்தில் மக்கள்

                  யாழில் வீதிகளில் மிதக்கும் மனித சடலங்கள் – அச்சத்தில் மக்கள்

                  ஆளும் கோட்டா ஆட்சியில் தற்பொழுது கடற்கரையோரங்களில் அண்மித்து மனித எச்சங்கள் மிதந்து வருகின்றன


                  இவ்வாறு ஆருக்கு மேற்பட்ட சடலங்கள் மீட்க பட்ட நிலையில் இன்று தொண்டைமானாறு சின்னமலை


                  பகுதியில் சில மனித எச்சங்கள் மீட்க பட்டுள்ளன

                  இதுவரை இந்த சடல எச்சங்கள் அடையாளம் காணப்படவில்லை

                    Posted in இலங்கை செய்திகள்

                    கடலில் மிதக்கும் தமிழர் உடல்கள் நடப்பது என்ன ..?

                    கடலில் மிதக்கும் தமிழர் உடல்கள் நடப்பது என்ன ..?

                    மன்னார் கோந்தைப்பிட்டி கடற்பரப்பில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரண்டு மீனவர்கள் கடந்த

                    ஞாயிற்றுக்கிழமை (12) மதியம் காணாமல் போன நிலையில் நேற்று காலை ஒரு மீனவர் சடலமாக மீட்கப்பட்டுள்ள நிலையில் மற்றைய நபர் இன்று (14) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

                    நேற்றைய தினம் (13) காலை யாழ்ப்பாணம் பருத்தித்துறையை சேர்ந்த தர்ஷன் (வயது-19) என்பவர் சடலமாக மீட்கப்பட்டார்.

                    இந்த நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை (14) காலை மன்னார் உப்பளம் கடற்கரை பகுதியில் குறித்த மீனவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

                    குறித்த சடலம் தற்போது மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

                    மன்னார் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

                    கடந்த ஞாயிற்றுக்கிழமை (12) மதியம் மூன்று மீனவர்கள் கோந்தை பிட்டி கடலில் தமது படகை செலுத்தி தொழிலுக்குச் செல்ல சரி பார்த்துள்ளனர்.

                    இதன் போது படகில் வெளி இணைப்பு இயந்திரத்தை இணைந்து படகை செலுத்தி பார்த்துள்ளனர். இதன் போது குறித்த படகில் மீனவர்கள் உட்பட 8 பேர் இருந்துள்ளனர்.

                    இதன் போது படகின் வெளி இணைப்பு இயந்திரம் திடீரென இயங்காத நிலையில் காணப்பட்டுள்ளது.

                    இதன் போது காற்றின் காரணமாக படகு கடலில் சென்று கொண்டிருந்தது. இதன் போது படகின் முன் அணியத்தில் நின்ற ஒருவர் திடீரென கடலில் வீழ்ந்து கடல் நீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் மற்றைய மீனவர் அவரை காப்பாற்ற கடலில் குதித்துள்ளார்.

                    எனினும் குறித்த மீனவரும் கடல் நீரில் இழுத்துச் செல்லப்பட்டார்.

                    எனினும் ஏனையவர்கள் போராடியும் குறித்த இருவரையும் மீட்க முடியவில்லை. நீண்ட நேரத்தின் பின்னர் குறித்த படகின் வெளி இணைப்பு இயந்திரம் இயங்கிய நிலையில் இவர்கள் கரை திரும்பி ஏனைய மீனவர்களின் உதவியுடன் தேடியுள்ளனர்.

                    இதன் போது கோந்தை பிட்டி கடலில் இருந்து சற்று தொலைவில் தர்ஷன் (வயது-19) என்பவர் மீட்கப்பட்ட நிலையில் அவரது சடலம் மீனவர்களால் மீட்கப்பட்டு கோந்தைப்பிட்டி கடற்கரைக்கு கொண்டு வரப்பட்டது.

                    மற்றைய மீனவரை மீனவர்கள் தேடிய நிலையில் இன்று (14) காலை மன்னார் உப்பளம் கடற்கரை பகுதியில் வைத்து சடலமாக மீட்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

                    Posted in இலங்கை செய்திகள்

                    யாழில் வெடித்து சிதறிய காஸ் சிலிண்டர் – பெண் காயம்

                    யாழில் வெடித்து சிதறிய காஸ் சிலிண்டர் – பெண் காயம்

                    யாழ்ப்பாணம் துன்னாலை பகுதியில் எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறியதால் பெண் ஒருவர்

                    காயங்களுக்கு உள்ளாகியுள்ளார் ,மேலும் வீட்டின் கூரைகள் என்பனவும் பாதிக்க பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது

                    நாடெங்கும் காஸ் சிலிண்டர் தொடராக வெடித்து வருகின்றமை குறிப்பிட தக்கது

                      Posted in Uncategorized

                      காட்டுக்கு சென்ற இரு பெண்களை காணவில்லை – தேடும் பொலிஸ்

                      காட்டுக்கு சென்ற இரு பெண்களை காணவில்லை – தேடும் பொலிஸ்

                      இலங்கை சிங்கராயவன காட்டுக்குள் ஏலாக்காய் பறிக்க சென்ற இரு பெண்கள் காணாமல் போயுள்ளனர்


                      இவர்களை தேடி கண்டு பிடிக்கும் பணியில் போலீசார் இராணுவத்தினர் ஈடுபடுத்த பட்டுள்ளனர்


                      இவர்கள் கடத்த பட்டார்களா அல்லது கட்டு விலங்குகள் தாக்குதலுக்கு உள்ளானார்களா என்பது

                      தொடர்பில் தெரியவரவில்லை

                        Posted in இலங்கை செய்திகள்

                        சாணக்கியன் மக்களை ஏமாற்றுகின்றார் – கயேந்திரன்

                        சாணக்கியன் மக்களை ஏமாற்றுகின்றார் – கயேந்திரன்

                        சிங்கள மயமாக்கத்தினையோ பௌத்த மயமாக்கத்தினையோ தடுக்க முடியாத சாணக்கியன் எம்.பி மக்களை ஏமாற்றுவதற்காக வடகிழக்கு இணைந்த முதலமைச்சர் சொல்கின்ற ஒரு

                        விடயத்தை தெரிவித்து தொடர்ந்து ஏமாற்ற மக்கள் ஏமாளிகள் அல்லர் என பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளருமான செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

                        அம்பாறை மாவட்டத்தில் பாண்டிருப்பு பகுதியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு கூறினார்.

                        மேலும் அவர் தெரிவித்ததாவது, தமிழ் தாயகத்தில் இடம்பெறுகின்ற பௌத்தமயமாக்கம் சிங்கள மயமாக்கம் போன்ற செயற்பாடுகளை தடுத்து நிறுத்தாவிடின் தமிழ் தேசத்தின் இருப்பினை நாங்கள் பாதுகாக்க முடியாது என்பதை மக்கள் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.

                        இவ்வாறான விடயங்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டுமாயின் தமிழ் தேசத்தின் இறைமை என்பது அங்கீகரிக்கப்பட வேண்டும்.தமிழர்களின் சுயநிர்ணய உரிமை போன்று ஒரு சுயாட்சி எட்டப்பட

                        வேண்டும். இவ்வாறு இல்லாமல் வெறுமனே வடக்கு கிழக்கினை இணைப்பதன் ஊடாக மாத்திரம் இந்த குடியேற்றங்களையோ அல்லது பௌத்த மயமாக்க விடயங்களையோ தடுத்து நிறுத்த முடியாது.

                        ஏனெனில் அதிகாரம் முழுவதும் அவர்களது (அரசு) கைகளிளே உள்ளது.அதே வேளை வடக்கு கிழக்கு இணைக்கப்பட்டிருந்தாலும் அங்கு ஆளுநருக்கு தான் அதிகாரம். அதே போன்று அந்த

                        ஆளுநருக்கு கீழ் உள்ள உத்தியோகத்தர்கள் ஆளுநரின் கட்டளை படி தான் நடப்பார்கள். மக்களால் தெரிவு செய்யப்பட்ட சபையில் கூட முதலமைச்சரின் செயலாளரையும் ஆளுநர் தான்

                        நியமிப்பார்.அங்கே சகல கட்டுப்பாடுகளும் ஆளுநரின் கீழ் தான் இருக்கும். ஆகவே மக்களின் வாக்குகளை பெறுவதற்காக பல்வேறு கருத்துக்களை கூற முடியும்.

                        ஒற்றையாட்சிக்குள் 13 ஆவது திருத்தச்சட்டத்தின் ஊடாக ஒரு போதும் சிங்கள மயமாக்கத்தினையோ பௌத்த மயமாக்கத்தினையோ தடுக்க முடியாது. இது 1987 1988

                        ஆண்டுகளில் இருந்து மாகாண சபை உருவாக்கப்பட்ட நாளில் இருந்து இந்த மாகாண சபை நடைமுறையில் தான் இருக்கின்றது. இச்சபை இணைந்தும் இருந்தது. குடியேற்றம் அந்த

                        வேளையிலும் இடம்பெற்றிருந்தது. அப்போது ஆயுதப்போராட்டத்தினால் குடியேற்றங்கள் தடுக்கப்பட்டு கொண்டிருந்ததே தவிர இந்த மாகாண சபையின் நிர்வாகத்தின் ஊடாக

                        கட்டுப்படுத்தப்பட்டிருக்கவில்லை. இது தான் உண்மையான விடயம். சாணக்கியன் எம்.பி மக்களை ஏமாற்றுவதற்காக சொல்கின்ற ஒரு விடயமாகும்.

                        என்னை பொறுத்தமட்டில் அவர்கள் தேர்தல் காலங்களில் பல வாக்குறுதிகளை வழங்கி வந்தமை வரலாறு.2015 ஆண்டு எமக்கு கடைசி சந்தர்ப்பம் ஒன்றினை தாருங்கள் என்று கூறினார்கள்.

                        அதாவது வடக்கு கிழக்கு இணைந்த தாயகத்தில் ஒரு சமஸ்டி தீர்வு ஒன்றினை பெற்றுத்தருவோம் என்றெல்லாம் கூறினார்கள். அதே போன்று 2016 ஆண்டு இறுதிக்குள் யுத்த குற்றவாளிகளை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்துவோம் என்று கூறினார்கள். மக்களை அதனை நம்பி

                        பெருவாரியாக வாக்குகளை இவர்களுக்கு வழங்கி இருந்தார்கள்.வென்ற மறு வாரமே சுமந்திரன் எம்.பி சர்வதேச விசாரணை முடிந்து விட்டது என்று கூறினார்கள். ஜெனிவாக்கு சென்று உள்ளக

                        விசாரணைக்கு வாய்ப்பு பெற்று கொடுத்தார்கள். இப்படி இவர்களது ஏமாற்றுக்களை தேர்தலை மையப்படுத்தி செய்கின்றார்கள். இவர்களது இவ்வாறான நாடகங்களை மக்களும் அறிவார்கள்.

                        முழுக்க முழுக்க ஏமாற்றும் விடயங்களே இவர்களிடம் உள்ளன. மக்கள் இவர்களது பசப்பு வார்த்தைகளை நம்பி மக்கள் ஏமாந்து விடக்கூடாது என்பதை கேட்டுக்கொள்ள விரும்புகின்றேன் என்றார்.

                          Posted in இலங்கை செய்திகள்

                          இலங்கையில் உணவு பஞ்சம் வரப்போகிறது – எச்சரிக்கை

                          இலங்கையில் உணவு பஞ்சம் வரப்போகிறது – எச்சரிக்கை

                          இன்னும் இரண்டு வாரங்களில் வௌநாட்டு கையிருப்பு பூஜ்ஜியத்துக்கு வருவதால் நாட்டில் கடும் பஞ்சம் ஏற்படும் என தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாஸ ராஜபக்ஷ, அடுத்த சில

                          வாரங்களில் அரசாங்கத்தால் அத்தியாவசிய உணவுப்பொருட்களை கூட வழங்க முடியாது என்றார்.

                          நேற்று முன்தினம் (12) கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

                          தொடர்ந்து தெரிவித்த அவர், யுனதனவி மின் உற்பத்தி நிலையத்தை வெளிநாட்டு நிறுவனம் ஒன்றுக்கு பெற்றுக்கொடுத்தமை தொடர்பில் பாரிய பிரச்சினைகள் காணப்படுவதுடன், இதன்

                          மூலம் மின்சாரம் தொடர்பான சர்வாதிகாரத்தை வௌநாட்டு நிறுவனத்தக்கு வழங்குவதன் மூலம் நாட்டுக்கு பாரிய சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது என குறிப்பிட்டார்.

                          நாட்டின் இன்றைய நிர்வாகம் செல்லும் விதத்தில் எமது நாட்டில் டொலர் இருப்பதற்கான சாத்தியமே இல்லை. கடந்த காலங்களில் பிரயோசனமற்ற பல வேலைத்திட்டங்களுக்கு அதிக

                          வட்டியின் கீழ் கடன் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. விசேடமாக 2010 மற்றும் 2014ஆம் ஆண்டுகளில் பெற்றுக்கொண்ட கடனைச் செலுத்துவதில், அதன் பின்னர் வந்த அனைத்து அரசாங்கங்களும் சிரமத்தை எதிர்நோக்கின என்று சுட்டிக்காட்டினார்.

                          அன்று பெற்றுக்கொண்ட கடன் மூலம், நாட்டு நன்மை பயக்கும் ஒரே வேலைத்திட்டம் நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையமாகும். ஏனைய அனைத்து வேலைத்திட்டங்களும் வௌ்ளை யானை போன்று நாட்டுக்கு பயனற்ற வேலைத்திட்டங்களே என்றார்.

                          நிதியமைச்சர் முன்வைத்த பட்ஜெட் தொடர்பில் எவ்வித தௌிவும் இல்லை. அதனால் தான் அதற்கு ஆதரவாக வாக்களிக்க முடியாமல் போனது.


                          தான் அரசியலில் இருந்தாலும் தான் மக்கள் பக்கமே இருப்பதாகவும் ஆட்சிக்கு வரும் அரசாங்கம் அதன் தலைவர்கள் செய்யும் தவறை தவறென்று சுட்டிக்காட்டும் தைரியம் தனக்கு அதிகமாக உள்ளது என்றும் குறிப்பிட்டார்.

                          அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்தின் பின்னர் பிரதமர் உள்ளிட்ட அனைத்து அமைச்சர்களும் ஜனாதிபதியின் அடிமைகளாக மாறியுள்ளனர். சகலருக்கும் முதுகெலும்பு இல்லை. இன்றைய

                          அமைச்சர்கள் ஜனநாயக நாட்டில் முழுமையாக பொறுப்பு கூறும் அமைச்சர்கள் அல்ல. ஜனாதிபதியின் அடிமைகளாக மாறியுள்ளனர் என்றார்.

                            Posted in இலங்கை செய்திகள்

                            இரு சிறுவர்களை காணவில்லை தேடும் பொலிஸ்

                            இரு சிறுவர்களை காணவில்லை தேடும் பொலிஸ்

                            இலங்கை கொட்டதெனிய பகுதியில் 10.12,மற்றும் சிறுவர்கள் காணமல் போயுள்ளனர் ,இவ்விதம்

                            காணாமல் போன சிறுவர்களை தேடி கண்டு பிடிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்

                            ,இவர்கள் கடத்த பட்டார்களா அல்லது எங்கேனும் விபத்தில் சிக்கி இறந்தார்களா என்ற ஐயம் நிலவுகிறது

                              Posted in இலங்கை செய்திகள்

                              இலங்கையில் கொரானாவுக்கு 27 பேர் மரணம்

                              இலங்கையில் கொரானாவுக்கு 27 பேர் மரணம்

                              இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலுக்கு சிக்கி கடந்த தினம் 27 பேர்

                              பலியாகியுள்ளனர் ,இவ்வாறு இறந்தவர்களில் 14 ஆண்கள் மற்றும் 13 பெண்கள் என தெரிவிக்க

                              பட்டுள்ளது ,மேலும் புதிய கொரனோ தாக்குதலில் சிக்கி முதலாவது நபர் இறந்துள்ளதாக சுகாதர அமைச்சு தெரிவித்துள்ளது

                                Posted in இலங்கை செய்திகள்

                                சிங்கப்பூருக்கு பறந்த கோட்டபாயா

                                சிங்கப்பூருக்கு பறந்த கோட்டபாயா

                                இலங்கை ஆளும் தமிழ் இனக்கொலையாளி கோட்டபாய ராஜபக்ஸ்சா


                                தனிப்பட்ட விடயம் ஒன்றை மேற்கொண்டு சிங்கப்பூருக்கு பயணித்துள்ளார் என ஜனாதிபதி


                                ஊடாக பேச்சாளர் தெரிவித்துள்ளார்

                                  Posted in இலங்கை செய்திகள்

                                  இலங்கையில் நாளை ரயில்வே சேவைகள் பாதிப்பு மக்களுக்கு எச்சரிக்கை

                                  இலங்கையில் நாளை ரயில்வே சேவைகள் பாதிப்பு மக்களுக்கு எச்சரிக்கை

                                  இலங்கையில் நாளை முதல் ரயில்வே சேவைகள் பாதிக்க படும் என ரயில்வே அதிகாரி

                                  தெரிவித்துள்ளார்

                                  தொழிலாளர்கள் பணிபுறக்கணிப்பு அது தொடர்பான வேதன விடயங்கள் பேசு பொருளாக

                                  உள்ளதினால் இந்த தாமதம் ஏற்படும் என தெரிவிக்க பட்டுள்ளது