வவுனியா காட்டுக்குள் ஆண் சடலம் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

ஒரே நாளில் மூவர் படுகொலை

ஒரே நாளில் மூவர் படுகொலை

நாட்டில் நேற்றைய தினம் மூன்று கொலைகள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சி, மூதூர் மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பொலிஸ் பிரிவுகளில் இந்த கொலைகள் பதிவாகியுள்ளன.

மூதூர் புளியடிச்சோலை கங்குவேலியில் இருவருக்கு இடையில் ஏற்பட்ட தனிப்பட்ட தகராறு நீண்டதில் அதில் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த தாக்குதலில் காயமடைந்த 47 வயதுடைய நபர் கிளிவெட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உருத்திரபுரம் பகுதியில் உள்ள வீடொன்றிற்குள் நுழைந்த சிலர், வீட்டில் இருந்த மூவரை கூரிய ஆயுதங்களால் தாக்கியுள்ளனர்.

தாக்குதலுக்கு உள்ளாகி படுகாயமடைந்தவர்கள் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உருத்திரபுரம் பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஒரே நாளில் மூவர் படுகொலை

இதேவேளை யாழ்ப்பாணம் அத்தியடி பிரதேசத்தில் வசிக்கும் 52 வயதுடைய பெண்ணொருவர் பொல்லு ஒன்றினால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண்ணின் வீட்டில் பணிபுரிந்த நபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் வந்து இக்கொலையை செய்துவிட்டு வீட்டின் கேட்டை பூட்டிவிட்டு அப்பகுதியில் இருந்து தப்பிச் சென்றுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No posts found.
இரும்பு கம்பியால் வாலிபர் அடித்து கொலை
Posted in இலங்கை செய்திகள்

நபரொருவர் அடித்துக் கொலை

நபரொருவர் அடித்துக் கொலை

மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புளியடிச்சோலை எனும் கிராமத்தில் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் நேற்று (12) மாலை இடம்பெற்றுள்ளது.

கொலை செய்யப்பட்டுள்ள நபர் அதே கிராமத்தைச் சேர்ந்த முத்துசாமி கோகிலராசா (48) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது:

இரு நபருக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பை ஏற்படுத்தியதாகவும் இதனால் படுகாயத்துக்கு உள்ளான குறித்த நபர் சிகிச்சைக்காக கிளிவெட்டி பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் மரணித்துள்ளதாக தெரியவருகிறது.

குறித்த வன்முறைச் சம்பவம் கிராமத்தின் வீதியில் வைத்து இடம்பெற்றுள்ளது .

மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

No posts found.
ரயில் பயணங்கள் திடீர் ரத்து
Posted in இலங்கை செய்திகள்

ரயில் பயணங்கள் திடீர் ரத்து

ரயில் பயணங்கள் திடீர் ரத்து

இன்று (13) இயக்கப்படவிருந்த அலுவலக ரயில்கள் உட்பட பெரும் எண்ணிக்கையிலான ரயில் பயணங்கள் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ரயில் இயந்திர சாரதிகள் தொழிற்சங்கத்தினால் முன்னெடுக்கப்படும் தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக இவ்வாறு ரயில் பயணங்கள் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனால், பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

இதன்படி, மஹவயிலிருந்து கொழும்பு மற்றும் மொரட்டுவை வரை பிரதான ரயில் வீதியில் இயங்கும் அலுவலக ரயில்கள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தவிர, பிரதான வீதியில் இயக்கப்படும் பல அலுவலக ரயில்களும் இன்று காலை ரத்து செய்யப்பட்டன.

இதேவேளை, கரையோர ரயில் வீதியிலும் பல அலுவலகப் ரயில்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதுடன், காலியில் இருந்து மருதானை
நோக்கிச் செல்லும் சமுத்திராதேவி ரயில் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

No posts found.
பூட்டிய பாடசாலைக்குள் கஞ்சா புகைத்தவர்கள் கைது
Posted in இலங்கை செய்திகள்

உணவு கேட்ட மகனை கம்பியால் தாக்கிய தந்தை

உணவு கேட்ட மகனை கம்பியால் தாக்கிய தந்தை

உணவு கோரிய 16 வயது மகனை தந்தை ஒருவர் கம்பியால் தாக்கிவிட்டு
தப்பி சென்றுள்ளார் .

தந்தையின் பலத்த அடிகாயங்களுக்கு
உள்ளான தந்தை கைது செய்யப் பட்டுள்ளார் .

சம்பவ தினத்தின் பொழுது பெற்றவர்கள் அதிக மது போதையில் ,
இருந்த நிலையில் ,
இந்த துன்பியல் சம்பவம் இடம்பெற்றுள்ளது .

No posts found.
தீயில் எரிந்து அழிந்த தும்பு தொழில் சாலை
Posted in இலங்கை செய்திகள்

தீயில் எரிந்து அழிந்த தும்பு தொழில் சாலை

தீயில் எரிந்து அழிந்த தும்பு தொழில் சாலை

இலங்கை கட்டன பகுதியில் உள்ள தும்பு தொழில் சாலை
ஒன்றில் இடம் பெற்ற திடீர் தீவிபத்தில் சிக்கி
அந்த தும்பு தொழிற்சாலை முற்றாக தீயில் எரிந்து அழிந்துள்ளது .

இந்த தீ விபத்தினால் பல மில்லியன் ரூபாய்கள்
இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது .

இந்த தும்பு தொழில் சாலை தீ விபத்து
தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .

No posts found.
ஆற்றில் கவிழ்ந்த படகு நால்வர் மரணம்
Posted in இலங்கை செய்திகள்

ஆற்றில் கவிழ்ந்த படகு நால்வர் மரணம்

ஆற்றில் கவிழ்ந்த படகு நால்வர் மரணம்

மட்டு கொக்கட்டி சோலை பகுதியில் ஆசிரியரும் .
மாணவர்கள் மூவர் இணைந்து பயணித்த படகு கவிழ்ந்ததில் .
நால்வரும் நீரில் மூழ்கி பலியாகினர் .

பலியானவர்களில் ஆசிரியர் சடலமாக மீட்க பட்டார் .தற்போது மூன்று மாணவர்களும்
சடலங்களாக மீட்க பட்டனர் .

மேற்படி சம்பவம் பெரும் துயரை ஏற்படுத்தியுள்ளது .

No posts found.
கஜேந்திரன் உள்ளிட்ட 18 பேருக்கு பிணை
Posted in இலங்கை செய்திகள்

கஜேந்திரன் உள்ளிட்ட 18 பேருக்கு பிணை

கஜேந்திரன் உள்ளிட்ட 18 பேருக்கு பிணை

சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு எதிராக யாழ் நகரில் போராட்டம் நடத்திய பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் உள்ளிட்ட 18 பேரையும் தலா மூன்று இலட்சம் பெறுமதியான இரண்டு சரீர பிணையில் விடுவித்து யாழ்ப்பாண பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

நேற்று (11) இரவு 11மணியளவில் நீதவானின் வாசஸ்தலத்தில் 18 பேரையும் பொலிஸார் ஆஜர்படுத்தியபோதே பதில் நீதவான் இந்த உத்தரவையிட்டார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு எதிராக யாழ் நகரில் போராட்டம் நடத்திய பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா
கஜேந்திரன் உள்ளிட்ட 18 பேர் நேற்று (11) மதியம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

No posts found.
தீ விபத்தில் மூன்று மாத குழந்தை பலி
Posted in இலங்கை செய்திகள்

சிவனொளிபாத மலை ஏறும்போது குழந்தை பிரசவித்த பெண்

சிவனொளிபாத மலை ஏறும்போது குழந்தை பிரசவித்த பெண்

இரத்தினபுரி பகுதியில் இருந்து சிவனொளிபாத மலைக்கு நேற்று தரிசனம் செய்ய வந்த பெண் ஒருவர் குழந்தையை பிரசவித்துள்ளார்.

32 வயதுடைய பெண் நல்லதண்ணி நகரில் இருந்து சிவனொளிபாத மலைக்கு தரிசனம் செய்ய மலை ஏரிக் கொண்டிருந்த வேளையில், ஊசி மலைப் பகுதியில் வைத்து அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டு, அவ்விடத்திலேயே பெண் குழந்தை ஒன்றை பிரசவித்துள்ளார்.

பின் அவரது குடும்பத்தினர் நல்லதண்ணி பொலிஸாரின் உதவியுடன்
அம்பியூலன்ஸ் வண்டி மூலம் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்திய சாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

No posts found.
காதலர் தினத்தன்று இதற்கு தடை
Posted in இலங்கை செய்திகள்

காதலர் தினத்தன்று இதற்கு தடை

காதலர் தினத்தன்று இதற்கு தடை

கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பகுதியினுள் இயங்கி வரும் அனைத்து தனியார் கல்வி நிலையங்களுக்கும் காதலர் தினமான எதிர்வரும் 14ஆம் திகதி விடுமுறை வழங்குமாறு கல்முனை மாநகர முதல்வர், சிரேஷ்ட சட்டத்தரணி ஏ. எம்.றகீப் கோரிக்கை விடுத்துள்ளார்.

கல்முனை வாழ் பெற்றோர்கள்,சமய அமைப்புகள் மற்றும் பல்வேறு சமூக அமைப்புகள் முன்வைத்த சில முறைப்பாடுகளுக்கமைய இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

கடந்த ஆண்டு காதலர் தினத்தில், இது போன்ற பல்வேறு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

எனவே, இது போன்ற ஒரு நிலைமையை தவிர்த்துக்கொள்ளும் சமூக நோக்குடன் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், பெற்றோர்களிடமும் தங்களது ஆண், பெண் பிள்ளைகளை அன்றைய தினத்தில் மேலதிக வகுப்புகளுக்கு அனுப்ப வேண்டாம் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக கல்முனை மாநகர முதல்வர், சிரேஷ்ட சட்டத்தரணி ஏ. எம்.றகீப் தெரிவித்தார்.

காதலர் தினத்தன்று இதற்கு தடை

இதேவேளை, கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பகுதியினுள் தனியார் வகுப்புக்களை நடத்துபவர்கள் கல்முனை மாநகர சபையிடம் அனுமதி பெற வேண்டும் என்ற நடைமுறை ஏற்கனவே அமுலில் உள்ளது.

அத்துடன், தனியார் வகுப்புக்கள் நடாத்தப்படுவதற்கான சில ஒழுங்கு விதிகளும் உருவாக்கப்பட்டுள்ளன.

மாணவர்களுக்கான சுத்தமான காற்றோட்ட வசதி, இருக்கை ஒழுங்குகள், கழிவறை வசதிகள் என்பன சீராக இருக்கும் பட்சத்தில் மாத்திரமே அவர்களுக்கு தனியார் வகுப்புக்களை நடத்த அனுமதி வழங்கப்படும் என்ற
முறைமையும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக கல்முனை மாநகர முதல்வர் ஏ. எம்.றகீப் குறிப்பிட்டார்

No posts found.
197 குடும்பங்களுக்கு ஜனாதிபதியினால் காணி உறுதிகள் வழங்க பட்டுள்ளன
Posted in இலங்கை செய்திகள்

197 குடும்பங்களுக்கு ஜனாதிபதியினால் காணி உறுதிகள் வழங்க பட்டுள்ளன

197 குடும்பங்களுக்கு ஜனாதிபதியினால் காணி உறுதிகள் வழங்க பட்டுள்ளன

வடக்கு மீள்குடியேற்ற கொடுப்பனவுகளில் 197 குடும்பங்களுக்கு ஜனாதிபதியின் அனுசரணையில் காணி உறுதிகள் விநியோகிக்கப்பட்டன.

வடக்கில் இடம்பெயர்ந்த 197 குடும்பங்களுக்கு காணி உறுதிகள் மற்றும் நிதி இழப்பீடுகள் வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் யாழ்.மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

தலா 38,000. ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய உள்நாட்டுப் போரின் போது பாதுகாப்புப் படையினர் பயன்படுத்திய காணிகளை பூர்வீகக் குடிமக்களுக்கு
மீள ஒப்படைக்கும் வேலைத்திட்டத்தின் ஒரு அங்கமாகவே இந்த காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன.

No posts found.
துருக்கி மக்களுக்கு இலங்கையின் நன்கொடை
Posted in இலங்கை செய்திகள்

துருக்கி மக்களுக்கு இலங்கையின் நன்கொடை

துருக்கி மக்களுக்கு இலங்கையின் நன்கொடை

நிலநடுக்கத்தினால் பாதிக்கப்பட்ட துருக்கி மக்களுக்கு இலங்கை தேயிலை நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.

தேயிலைத் தொகை துருக்கிக்கான தூதுவரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

இலங்கை தேயிலை ஏற்றுமதியாளர்களிடம் இருந்து நன்கொடையாக பெறப்பட்ட தேயிலையே துருக்கி மக்களுக்காக வழங்கப்பட்டுள்ளது.

பிரதமர் அலுவலகம், வெளிவிவகார அமைச்சு மற்றும் இலங்கை தேயிலைச் சபை
ஆகியன இந்த நன்கொடைக்கான செயற்பாடுகளை ஒருங்கிணைத்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No posts found.
பாகிஸ்தான் கூட்டுப்படைகளின் பிரதம அதிகாரி ஜனாதிபதியுடன் சந்திப்பு
Posted in இலங்கை செய்திகள்

பாகிஸ்தான் கூட்டுப்படைகளின் பிரதம அதிகாரி ஜனாதிபதியுடன் சந்திப்பு

பாகிஸ்தான் கூட்டுப்படைகளின் பிரதம அதிகாரி ஜனாதிபதியுடன் சந்திப்பு

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள பாகிஸ்தான் கூட்டுப்படைகளின் பிரதம அதிகாரி ஜெனரல் சாஹிர் ஷம்ஷாத் மிர்ஸா (Sahir Shamshad Mirza) நேற்று (10) முற்பகல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்தார்.

நட்பு நாடுகள் என்ற வகையில் இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலுள்ள நீண்டகால நெருங்கிய உறவை நினைவுகூர்ந்த ஜனாதிபதி, ஜெனரல் சாஹிர் ஷம்ஷாத் மிர்ஸா உள்ளிட்ட குழுவினருடன் சிநேகபூர்வ உரையாடலில் ஈடுபட்டார்.

இச்சந்திப்பைக் குறிக்கும் வகையில் ஜெனரல் சாஹிர் ஷம்ஷாத் மிர்ஸா, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு நினைவுப் பரிசொன்றையும் வழங்கினார்.

ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, பாதுகாப்புப் படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் பாகிஸ்தான் கடற்படையின் ரியர் அட்மிரல் அப்துல்
பாஸித் பட் (Rear Admiral Abdul Basit Butt) உள்ளிட்ட பிரதிநிதிகள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்

வெல்லவாய பகுதியில் மீண்டும் நிலநடுக்கம்
Posted in இலங்கை செய்திகள்

வெல்லவாய பகுதியில் மீண்டும் நிலநடுக்கம்

வெல்லவாய பகுதியில் மீண்டும் நிலநடுக்கம்

வெல்லவாய பிரதேசத்தில் மீண்டும் சிறிய நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

வெல்லவாய நகரின் கிழக்கில் இன்று (11) அதிகாலை 3.48 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, நிலநடுக்க நிலைமை குறித்து மக்கள் அனாவசியமாக அச்சப்பட வேண்டாம் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

நேற்று பிற்பகல் (10) புத்தள மற்றும் வெல்லவாய பகுதிகளில் 3.5
மற்றும் 3 ரிக்டர் அளவுகோலில் இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No posts found.
அரசாங்கத்தின் கொள்கை பிரகடனம் நடைமுறைக்கு சாத்தியமற்றது சாணக்கியன்
Posted in இலங்கை செய்திகள்

அரசாங்கத்தின் கொள்கை பிரகடனம் நடைமுறைக்கு சாத்தியமற்றது சாணக்கியன்

அரசாங்கத்தின் கொள்கை பிரகடனம் நடைமுறைக்கு சாத்தியமற்றது சாணக்கியன்

பௌத்த பிக்குகளை போல் இந்து குரு அல்லது முஸ்லிம் மௌலவி அரசியலமைப்பை தீயிட்டு எரித்திருந்தால் அவர்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருப்பார்கள் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற அரசாங்கத்தின் கொள்கை பிரகடன உரை மீதான விவாதத்தி கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது உரையாற்றிய அவர், ‘ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரச தலைவர் என்ற ரீதியில் முழு நாட்டுக்கும் சிறந்த எடுத்துக்காட்டாக செயற்பட வேண்டும்.

அரசாங்கத்தின் கொள்கை பிரகடனம் நடைமுறைக்கு சாத்தியமற்றதாக உள்ளது. பொருளாதார மற்றும் சமூக கட்டமைப்பில் நிலவும் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் திட்டம் ஏதும் கொள்கை பிரகடனத்தில் உள்ளடக்கப்படவில்லை.

இலங்கையில் வாழும் எவருக்கும் சுதந்திரம் இல்லை என்பதால் 75 ஆவது சுதந்திர தினத்தை கறுப்பு சுதந்திரமாக அனுஷ்டித்தோம்.

அரசாங்கத்தின் கொள்கை பிரகடனம் நடைமுறைக்கு சாத்தியமற்றது சாணக்கியன்

தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள சமூகத்தினர் அனைவரும் ஒன்றிணைந்து 1948 ஆம் ஆண்டு சுதந்திரத்தை பெற்றுக்கொண்டனர்.

ஆங்கிலேயர் சிங்கள பெரும்பான்மை சமூகத்திடம் தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை கையளித்து சென்றார்கள்.

சிங்கள அரச தலைவர்களின் தவறான நிர்வாகத்தினால் நாடு வங்குரோத்து நிலை அடைந்துள்ளது. இதனை வெளிப்படுத்தும் வகையில் தான் 75 ஆவது சுதந்திர தினத்தை கறுப்பு சுதந்திரமாக அனுஷ்டித்தோம்.

சிங்கள சமூகத்தினருக்கு பொருளாதார சுதந்திரம் தற்போது இல்லை என்பதால் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.

பௌத்த பிக்குகள் நேற்று முன்தினம் பாராளுமன்ற சுற்றுவட்டத்தில் 13 ஆவது திருத்த நகல்களை தீயிட்டார்கள். இவர்களை போல் இந்து குருக்கள் அல்லது முஸ்லிம் மௌலவி செயற்பட்டிந்தால் அவர்கள் பயங்கரவாத தடைச்சட்டதின் கீழ் கைது செய்யப்பட்டிருப்பார்.

பௌத்த பிக்குகளுக்கு அரசியல் சுதந்திரம் உள்ளது என்பதால் அவர்கள் அரசியலமைப்பை எரிக்கிறார்கள்.

ராஜபக்ஷர்களின் முதுகில் ஏறி சவாரி செய்தவர்கள் உள்ளுராட்சிமன்றத் தேர்தல் இடம்பெறவுள்ள பின்னணியில் இனவாதத்தை பிரசாரமாக மேற்கொள்ள 13ஆவது திருத்தத்தை கையில் எடுத்துள்ளார்கள்.

2019 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக இனவாதம் கட்டவிழ்த்து விடப்பட்டது. தற்போது 13 ஆவது திருத்தம் ஆகவே சிங்கள மக்கள் இந்த உண்மையை விளங்கிக் கொள்ள வேண்டும்.

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் தொடர்பில் கருத்துரைக்க முன் மாகாண
சபை தேர்தலை நடத்த அரசாங்கம் அவதானம் செலுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

குடிபோதையில் மக்களுக்குள்க் புகுந்த வண்டி ஏற்பட்ட விபத்து
Posted in இலங்கை செய்திகள்

விபத்தில் வான் மோதி தந்தை மகள் பலி

விபத்தில் வான் மோதி தந்தை மகள் பலி

கட்டுகஸ்தோட்டை பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் தந்தையும் மகளும் உயிரிழந்துள்ளனர்.

கட்டுகஸ்தோட்டை ஜம்புகஹபிட்டிய வீதியில் பயணித்த தந்தையும் மகளும் வேன் ஒன்றுடன் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

பொல்கொல்ல பிரதேசத்தை சேர்ந்த 47 வயதுடைய நபரும் அவரது 14 வயது மகளும் விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

விபத்து தொடர்பில் வேன் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை வத்தளை, ஹெந்தல – அலகந்த வீதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில் 23 வயதுடைய மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் பெண் ஒருவர் பலத்த காயமடைந்து
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

No posts found.
போக்குவரத்து அமைச்சரின் அதிரடி உத்தரவு
Posted in இலங்கை செய்திகள்

போக்குவரத்து அமைச்சரின் அதிரடி உத்தரவு

போக்குவரத்து அமைச்சரின் அதிரடி உத்தரவு

வடக்கு புகையிரத பாதை அபிவிருத்திப் பணிகளின் போது இடம்பெற்றதாக கூறப்படும் முறைகேடுகள் குறித்து உடனடியாக விசாரணை நடத்துமாறு போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

போக்குவரத்து அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் இந்த அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.

வவுனியாவிற்கும் அனுராதபுரத்திற்கும் இடையிலான இந்த வீதியின் நிர்மாணப் பணிகள் இந்திய நிறுவனமொன்றுக்கு வழங்கப்பட்டுள்ளதுடன், அதே நிறுவனம் மேலும் பல நிறுவனங்களுக்கு துணை ஒப்பந்தங்களை வழங்கியுள்ளது.

துணை ஒப்பந்தம் செய்யப்பட்ட நிறுவனங்கள் புகையிரத திணைக்களத்தில் பணிபுரியும் சில அதிகாரிகள் மற்றும் தொழிற்சங்கங்களைச் சேர்ந்தவர்களுடையது எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், இத்திட்டத்திற்கு வழங்கப்பட்ட உபகரணங்களும் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கிட்னி மோசடி புரிந்த தரகர் கைது
Posted in இலங்கை செய்திகள்

கிட்னி மோசடி புரிந்த தரகர் கைது

கிட்னி மோசடி புரிந்த தரகர் கைது

கிட்னி மோசடி புரிந்த தரகர் ஒருவர் இலங்கை கட்டுநாயக்க வான்தளத்தில் வைத்து கைது செய்யப் பட்டுள்ளார்

இலங்கை பொரளை தனியார் வைத்தியசாலை ஒன்றில்,
பணிபுரிபவர் போன்று வறுமை நிலையில் உள்ளவர்களை,
ஏமாற்றி கிட்னி மோசடியில் இடம்பெற்ற பொழுது கைது செய்யப் பட்டுள்ளார் .

கைதானவரிடம் தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

இவ்வாறன கிட்டினி மோசடி புரிந்து மிக பெரும் கும்பல் சிக்கியது குறிப்பிட தக்கது .

பெண்களுடன் அலைபேசியில் ஆபாசம் நபர் கைது
Posted in இலங்கை செய்திகள்

பெண்களுடன் அலைபேசியில் ஆபாசம் நபர் கைது

பெண்களுடன் அலைபேசியில் ஆபாசம் நபர் கைது

பெண்களுடன் அலைபேசியில் ஆபாசமாக பேசி காட்சிகளை அனுப்பி பண மோசடி செய்துள்ளது அம்பலமாகியுள்ளது .

இலங்கை பல்லேகம பிரதேசத்தை சேர்ந்த 44 வயது நபரே இவ்வாறு கைது செய்யப் பட்டுள்ளார் .


கைதானவர் பல பெண்களை ஏமாற்றி பணமோசடி செய்துள்ளமை கண்டு பிடிக்க பட்டுள்ளது .

பெண்களிடம் ஆபாசமாக பேசி ஏமாற்றய நபரிடம் தொடர்ந்து விசாரணைகள் இடம் பெற்ற வண்ணம் உள்ளன.

No posts found.
இந்தியாவுக்கு கடத்த பட்ட 10 கோடி தங்கம்
Posted in இலங்கை செய்திகள்

இந்தியாவுக்கு கடத்த பட்ட 10 கோடி தங்கம்

இந்தியாவுக்கு கடத்த பட்ட 10 கோடி தங்கம்

இந்தியாவுக்கு இலங்கையில் இருந்து கடத்தி செல்ல
பட்ட பத்து கோடி ரூபாவுக்கு மேலான பெறுமதியான தங்கம் மீட்க பட்டுள்ளது .

வருவாய் துறையினர் நடத்திய சோதனை நடவடிக்கையின் பொழுது இந்த தங்கம் சிக்கியது .
கைதானவர்களிடத்தில் விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

No posts found.
இந்திய மத்திய இணை அமைச்சரை சந்தித்த செந்தில்
Posted in இலங்கை செய்திகள்

இந்திய மத்திய இணை அமைச்சரை சந்தித்த செந்தில்

இந்திய மத்திய இணை அமைச்சரை சந்தித்த செந்தில்

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மற்றும் தமிழக பா.ஜ.க தலைவர்

அண்ணாமலை அவர்களுடன் இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான், யாழ்ப்பாணம் இந்திய உதவி உயர்ஸ்தானிகர் ஆகியோர் யாழ் நூலகத்தை

பார்வையிட்டதுடன், அங்குள்ள டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் உருவ சிலைக்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

மேலும் யாழ்ப்பாணம் ஆளுநர் அலுவலகத்தில் மரியாதை நிமிர்த்தம் சந்திப்பொன்றும் இடம்பெற்றது.

No posts found.