அனைத்து பாடசாலைகளுக்கும் இன்று விடுமுறை
Posted in இலங்கை செய்திகள்

அனைத்து பாடசாலைகளுக்கும் இன்று விடுமுறை

அனைத்து பாடசாலைகளுக்கும் இன்று விடுமுறை ,சீரற்ற வானிலை காரணமாக நாட்டின் பல மாவட்டங்களில் உள்ள பாடசாலைகளுக்கு இன்று (04) விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தென் மாகாணத்தின் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் இன்றும் நாளையும் (05) இரண்டு நாட்கள் விடுமுறை வழங்கப்படுவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

களுத்துறை, இரத்தினபுரி, கேகாலை மாவட்டங்களில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

மேலும், ஹோமாகம, கம்பஹா, களனி ஆகிய கல்வி வலயங்களில் உள்ள பாடசாலைகளுக்கும் கடுவெல பிரிவில் உள்ள பாடசாலைகளுக்கும் இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நிலவும் வானிலையை கருத்தில் கொண்டு எதிர்வரும் நாட்களில் பாடசாலை களை நடத்துவது தொடர்பான தீர்மானங்களை பிராந்திய கல்விப் பணிப்பாளர்களுக்கு அறிவிக்குமாறு கல்வி அமைச்சு மாகாண அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளது.

இஸ்ரேல் பாடசாலைகள் அடித்து பூட்டு
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் பாடசாலைகள் அடித்து பூட்டு

இஸ்ரேல் பாடசாலைகள் அடித்து பூட்டு

Error: View 9293b2au4w may not exist
பொலிஸில் சரணடைந்த 11பாடசாலை மாணவிகள்
Posted in இலங்கை செய்திகள்

பொலிஸில் சரணடைந்த 11பாடசாலை மாணவிகள்

பொலிஸில் சரணடைந்த 11பாடசாலை மாணவிகள்


பொலிஸில் சரணடைந்த 11பாடசாலை மாணவிகள் ,யாழ்ப்பாணம், தீவகம் கல்வி வலயத்திலுள்ள பாடசாலையொன்றின் விடுதியில் கிறிஸ்தவ அருட்சகோதரி ஒருவரின் கொடூர தாக்குதலை தாங்க முடியாமல்,

அங்கு தங்கியிருந்த 11 பாடசாலை மாணவிகள் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளனர்.

10 முதல் 17 வயதுக்குட்பட்ட பாடசாலை மாணவிகளே பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தனர்.

அகப்பை காம்பு மற்றும் தடியால் தாக்குவது,

அகப்பை காம்பு மற்றும் தடியால் தாக்குவது, தலைமுடியை பிடித்து சுவருடன் தாக்குவதென, விடுதிக்கு பொறுப்பான அருட்சகோதரி கடந்த 3 வருடங்களாக தம்மை சித்திரவதை செய்வதாக மாணவிகள் கண்ணீருடன் முறையிட்டுள்ளனர்.

புது வகையான ஆங்கில உச்சரிப்பை பேசச் சொல்வது, ஆங்கில உச்சரிப்பு தவறு, ஆங்கிலம் முறையாக பேசாதது, பிரார்த்தனையை முறையாக மனனம் செய்யாதது உள்ளிட்ட காரணங்களிற்காகவே அருட் சகோதரி தாக்குதல் நடத்தியதாக குறிப்பிடப்படுகிறது.

அத்துடன், பாடசாலை மாணவிகளுடன் உரையாடக்கூடாத கெட்ட வார்த்தைகளையும் உபயோகித்து திட்டுவதாக குறிப்பிட்டுள்ளனர்.

ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

பாடசாலையில் குறித்த விடயத்தை சொன்னபோதும் சமாளித்து போகுமாறு கூறவே அச்சம் காரணமாக 11 மாணவிகளும் இன்று ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளனர்.

இதனையடுத்து அனைத்து மாணவிகளும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை சட்டவைத்திய அதிகாரியிடம் முற்படுத்தப்பட்டனர்.

மாணவிகளிடம் நடத்தப்பட்ட பரிசோதனை யில், அவர்களின் உடலில் தாக்கப்பட்ட தழும்புகள் அவதானிக்கப்பட்டுள்ளது.

குறித்த 11 மாணவிகளும் ஊர்காவற்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் விடுதி பொறுப்பாசிரியரை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

பாடசாலை மாணவர்களின் வருகை அதிகரிப்பு
Posted in இலங்கை செய்திகள்

பாடசாலை மாணவர்களின் வருகை அதிகரிப்பு

பாடசாலை மாணவர்களின் வருகை அதிகரிப்பு

பாடசாலை மாணவர்களின் வருகை அதிகரிப்பு பகல் உணவு வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் ஆரம்பப் பாடசாலைகள் மற்றும் 100ற்கும் குறைவான மாணவர்கள் உள்ள பாடசாலைகளில் மாணவர்களின் வருகை அதிகரித்துள்ளதா

என்பது பற்றியும், உணவுத் திட்டத்தைப் பெற்றுக்கொள்ளும் ஆரம்பப் பாடசாலை கற்கும் மாணவர்கள் மற்றும் 100 பேருக்குக் குறைவான பாடசாலைகளில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கை பற்றி ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு

பாராளுமன்ற வழி வகைகள் பற்றிய குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ பாட்டலி சம்பிக ரணவக்க, கல்வி அமைச்சின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கினார். அத்துடன், இத்திட்டத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்தும் அறிக்கை கையளிக்குமாறு அவர் குறிப்பிட்டார்.

வழிவகைகள் பற்றிய குழு அதன் தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தலைமையில் அண்மையில் பாராளுமன்ற குழு அறையில் கூடியபோதே இவ்விடயம் பற்றிக் கலந்துரையாடப்பட்டது.

ஆரம்பப் பாடசாலைகளில் மாணவர்களுக்கு உணவு

ஆரம்பப் பாடசாலைகளில் மாணவர்களுக்கு உணவு வழங்கும் திட்டத்தின் ஊடாக நன்மை பெறும் மாணவர்களின் தொகை 2024ஆம் ஆண்டு 11 இலட்சத்திலிருந்து 16 இலட்சமாக அதிகரிக்கப்பட்டிருப்பதாக வழி வகைகள் பற்றிய குழுவில் தெரியவந்தது.

இதற்கமைய ஒரு மாணவருக்காக ஒதுக்கப்பட்டுள்ள தொகை 80 ரூபாவிலிருந்து 110 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும், உணவின் தரம் தொடர்பில் அளவுகோல்கள் தயார் செய்யப்பட்டுள்ளதாகவும், உணவு வழங்கும் நிகழ்ச்சித் திட்டம் தொடர்பாக மாகாணக் கல்வித் திணைக்களம்,

பிராந்தியக் கல்விப் பிரிவு அதிகாரிகள் மற்றும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் மூலம் தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் குழுவில் தெரியவந்தது.

கடந்த காலத்தில் 6 இலட்சம் பாடசாலை மாணவர்கள் காலை உணவை எடுத்துக்கொள்ளாமல் பாடசாலைகளுக்கு வருகை தருவதாக

அறிக்கையிடப்பட்டதாகவும், இந்த உணவு வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதும் மாணவர்களின் வருகை அதிகரித்திருப்பதாகவும் இங்கு தெரிவிக்கப்பட்டது.

பாடசாலை மாணவர்களுக்கு உணவு வழங்கும் திட்டத்துக்காக வருடமொன்றுக்கு 16.6 பில்லியன் ரூபா செலவிடப்படுவதாகவும், எனினும், 4 பில்லியன் ரூபாவுக்கான பற்றாக்குறை நிலவுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

பாடசாலை மாணவர்களுக்கு உணவு வழங்கும் திட்டத்தில் பங்கெடுக்கும் நோக்கில் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் விருப்பத்துடன் உதவிகளை வழங்கினாலும்,

இந்த உதவிகளை நேரடியாக அரசாங்கத்திற்கு வழங்கத் தயாராக இல்லை எனவும் தலைவர் தெரிவித்தார்.

சமூக ஊடகங்களின் அடிப்படையில் புகார்

ஆசிரியர் சங்கங்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்திச் சங்கங்களுக்கு இவ்வாறான உதவிகளை நேரடியாக வழங்குவதில் ஏதாவது சட்டரீதியான தடைகள் உள்ளனவா என்பது பற்றி ஆராயுமாறும் அவர் அறிவுறுத்தினார்.

மேலும், சமூக ஊடகங்களின் அடிப்படையில் புகார்களைப் பெறுவதற்கான கட்டமைப்பைத் தயாரிக்குமாறு சுட்டிக்காட்டிய குழுவின் தலைவர், வழங்கப்படும் உணவின் தரம் தொடர்பில் புகராளிப்பதற்கு வட்ஸ்அப் செயலியைப் பயன்படுத்துமாறும் ஆலோசனை வழங்கினார்.

அத்துடன், அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கீழ் 2024ஆம் ஆண்டு மே மாதம் 1,000,000 குடும்பங்களுக்கு அதன் நன்மைகள் வழங்கப்பட்டிருப்பதாகவும், இதில், மிகவும்

வறுமையான பிரிவுகளின் கீழ்

வறுமையான மற்றும் வறுமையான பிரிவுகளின் கீழ் முறையே 313,947 குடும்பங்களும், 653,047 குடும்பங்களும் நன்மைகள் வழங்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் குழுவின் தலைவருக்குப் பதில் வழங்கினர்.

தேசிய அடையாள அட்டைகள் மற்றும் வங்கிக் கணக்குகளில் உள்ள சிக்கல்கள் போன்ற பல்வேறு காரணங்களால் நலன்புரித் திட்டங்களைப் பெறுவதற்கு 200,000 பேர் தகுதியடைந்துள்ளபோதிலும் அவர்களுக்கு உரிய நன்மைகளைப் பெற்றுக் கொள்ள முடியாதிருப்பதும் இங்கு தெரியவந்தது.

மேலும், மேன்முறையிடுகளில் காணப்படும் முன்னேற்றங்கள் குறித்தும் குழு கேட்டறிந்துகொண்டது. இந்த வருடத்தின் மே மாதத்தில் ஒவ்வொரு பிரிவின் கீழும் அஸ்வெசும நலன்புரி வழங்கிய முதல்,

நலன்புரித் திட்டத்தைப் பெற்றுக்கொண்ட குடும்பங்களின் எண்ணிக்கை, கையளிக்கப்பட்டுள்ள மேன்முறையீடுகளில் தெரிவுசெய்யப்படவுள்ள பயனாளர்களின் எண்ணிக்கை போன்ற சரியான தகவல்கள் மற்றும் ஜூலை 2024 முதல் பயனாளிகளின்

எண்ணிக்கை 24 இலட்சமாக அதிகரிக்கப்படவுள்ளதால் தகுதியானவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான வழிமுறைகள் மற்றும் அளவுகோல்கள் குறித்த அறிக்கையை குழுவுக்கு வழங்குமாறும் வழிவகைகள் பற்றிய குழுவின் தலைவர் பரிந்துரைத்தார்.

கிராம சேவகர் பிரிவில்

அத்துடன், கிராம சேவகர் பிரிவில் அஸ்வெசும நலன்புரித் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொறுப்பு எந்த அதிகாரிகளைச் சார்ந்தது என்பது தொடர்பில் பிரச்சினை இருப்பதாகவும், இது தொடர்பான அறிக்கையொன்றையும், பெரும்

எண்ணிக்கையிலான நபர்கள் தவறான தகவல்களை வழங்கி அஸ்வெசும பயனாளிகளாகியிருப்பது புலனாகியிருப்பதால் நலன்புரித் திட்டத்தைப் பெற்றுக்

கொள்வதற்கான தகவல்களை வழங்கியவர்களின் புள்ளிவிபரங்கள் அடங்கிய அறிக்கையயும் குழுவிடம் சமர்ப்பிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.

விதாதா நிலையங்கள் மற்றும் வணிக வங்கிகளில் சிறிய மற்றும் நடுத்தர தொழிற்சாலைகளுக்காக கடன் திட்டத்துடன் இதனையும் ஒன்றிணைக்குமாறு வழிவகைகள் பற்றிய குழுவினால் இதற்கு முன்னர் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்

நடைமுறைப்படுத்துப்பட்டுள்ளன என்பது குறித்தும் குழுவின் தலைவர் வினவினார். உத்தேச குடும்ப அமுலாக்கத் திட்டம் குறித்த கால அட்டவணையுடன் தகவல்கள் அடங்கிய அறிக்கையை குழுவிடம் சமர்ப்பிக்குமாறும் அதன் தலைவர்

வலியுறுத்தினார். முதியோர்களுக்கு வழங்கப்படும் மாதாந்த உதவித்தொகை குறித்தும் ஆலோசிக்கப்பட்டதுடன், சிறுநீரக நோயாளர்களுக்கான மாதாந்த

உதவித்தொகைக்கான செலவு குறித்த விரிவான அறிக்கையை வழிவகைகள் பற்றிய குழுவிடம் வழங்குமாறு தலைவர் அறிவுறுத்தினார்.

இக்கூட்டத்தில் வழிவகைகள் பற்றிய குழுவின் உறுப்பினர்களான இராஜாங்க அமைச்சர் சிறிர ஜயகொடி, பாராளுமன்ற உறுப்பினர்களான தயாசிறி ஜயசேகர,

எஸ்.எம்.எம்.முஷாரப், சஞ்சீவ எதிரிமான்ன, உதயன கிரிந்திகொட மற்றும் சுதத் மஞ்சுள ஆகியோரும் கலந்துகொண்டனர்.

வவுனியா மருக்காரம்பளை பாடசாலை அதிபருக்கு பாராட்டுவிழா
Posted in இலங்கை செய்திகள்

வவுனியா மருக்காரம்பளை பாடசாலை அதிபருக்கு பாராட்டுவிழா

வவுனியா மருக்காரம்பளை பாடசாலை அதிபருக்கு பாராட்டுவிழா

வவுனியா மருக்காரம்பளை பாடசாலை அதிபருக்கு பாராட்டுவிழா இடம்பெற்றுள்ளது .வவுனியா மருக்காரம்பளை அ , த ,க, பாடசாலை அதிபர் திருமதி தனபாலசிங்கம் ஸ்ரீராஜலட்சுமி ஓய்வு பெறும் பணி சிறப்புற இடம்பெற்றுள்ளது .

55 தாவது வயதில் சுய விருப்ப ஓய்வு பெறும் ,அதிபர் திருமதி தனபாலசிங்கம் ஸ்ரீராஜலட்சுமி அவர்களது சேவையை பாராட்டி ,மருக்காரம்பளை பாடசாலை ஆசிரியர்கள் ,மாணவர்கள் கௌரவித்தனர். .

அதிபர் திருமதி தனபாலசிங்கம் ஸ்ரீராஜலட்சுமி

அதிபர் திருமதி தனபாலசிங்கம் ஸ்ரீராஜலட்சுமி 1990 ஆம் ஆண்டு முதல் ,பாடசாலை அதிபராக பணி புரிந்து வருகிறார் .

அதிபர் திருமதி தனபாலசிங்கம் ஸ்ரீராஜலட்சுமி அதிபராக விளங்கிய பாடசாலைகள் யாவும் ,அதன் கல்வித்தரம் மற்றும் ,மாணவர்கள் கல்வியல் உயர்வு நிலையில் மிக பெரும் பங்காற்றினார் .

அவ்விதமான சிறந்த சேவை பண்பை கொண்ட அதிபர் திருமதி தனபாலசிங்கம் ஸ்ரீராஜலட்சுமி பிரியாவிடை வைபவம், கடந்த தினம் வெகு சிறப்பாக இடம்பெற்றுள்ளது .

சுயவிருப்ப ஓய்வு

தனது சுய விருப்பத்தின் அடிப்படையில் ஓய்வு பெறுவதாக ,அதிபர் திருமதி தனபாலசிங்கம் ஸ்ரீராஜலட்சுமி தெரிவித்துள்ளார் .

தமது பாடசாலை அதிபர் திருமதி தனபாலசிங்கம் ஸ்ரீராஜலட்சுமி பிரிவை எண்ணி, ஆசிரியர்கள் மாணவர்கள் கண்ணீரில் தவழ்ந்தனர் .

சக ஆசிரியர்களை தனது சகோதர ,சகோரிகளாக கருதி அவர்கள் மீது அன்பு செலுத்தி ,பிரியமுடன் நடந்து கொள்வார் என அங்கு பணியாற்றிய சில ஆசிரியர்கள் நமக்கு தெரிவித்தனர் .

அன்பும் அறமும் ஓங்கும் நிலை கொண்ட மிக நேர்த்தியான சேவையை செய்து ,தமது பாடசாலையை முதன்மை நிலைக்கு எடுத்து செல்ல ,முக்கிய தூணாக விளங்கியவர் ,அதிபர் திருமதி தனபாலசிங்கம் ஸ்ரீராஜலட்சுமி என தெரிவித்துள்ளனர் .

நாட்டுக்கு ஒரு தலைவன் போல தமது பாடசாலையின் முழு வளர்ச்சியிலும், பெரும் பங்காற்றியவர் அதிபர் திருமதி தனபாலசிங்கம் ஸ்ரீராஜலட்சுமி என தெரிவித்து நெகிழ்ந்தனர் .

வறுமையின் கீழ் தவிக்கும் மாணவர்களுக்கும் தன்னாலான தனிமனித உதவிகளை புரிந்து ,அவர்கள் கல்வியில் அதிக அக்கறை செலுத்திய அதிபர் ,திருமதி தனபாலசிங்கம் ஸ்ரீராஜலட்சுமி பிரியாவிடையை ,மகிழ்வோடும் ,துயரத்தோடும் மாணவர்கள் ,ஆசிரியர்கள் ஏற்று கொண்டனர் .

கனமான துயரோடு கண்ணீரால் மலர் தூவி ,விடை பெற்ற வேளையதை விழிகள் இன்னும் மறக்கவில்லை எனவும் ,காலத்தால் அழியாத சாதனையின் நாயகியாய் ,எமது பாடசாலையில் தடம் பதித்து கடக்கிறார் அதிபர் திருமதி தனபாலசிங்கம் ஸ்ரீராஜலட்சுமி என ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர் .

வவுனியா மருக்காரம்பளை பாடசாலை அதிபருக்கு பாராட்டுவிழா
வவுனியா மருக்காரம்பளை பாடசாலை அதிபருக்கு பாராட்டுவிழா
குழந்தையை பிரசவித்த பாடசாலைச் சிறுமி
Posted in இலங்கை செய்திகள்

குழந்தையை பிரசவித்த பாடசாலைச் சிறுமி

குழந்தையை பிரசவித்த பாடசாலைச் சிறுமி

குழந்தையை பிரசவித்த பாடசாலைச் சிறுமி ஒருவர் குழந்தையை வைத்தியசாலையிலேயே விட்டுவிட்டு சென்ற சம்பவம் ஒன்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது.

கர்ப்பம் தரித்திருந்த 15 வயது சிறுமியொருவர் தனது தாயுடன் குழந்தை பிரசவத்துக்காக நேற்று (10) மாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வடமராட்சி துன்னாலை

இதன்போது, வடமராட்சி துன்னாலை பகுதியை அவர்கள் விலாசமாக வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், பிரசவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ள நிலையில், குழந்தையை அநாதரவாக விட்டுவிட்டு இன்று (11) காலை முதல் தாய், சிறுமி என இருவரும் தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

சம்பவம் தொடர்பாக வைத்தியசாலை நிர்வாகத்தால் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இலங்கையில் இவ்வாறான சம்பவங்கள் செல்வதற்கு கரணம் என்ன அறிந்து .

பாதுகாப்பான பாலியல் கல்வி முறையை இலங்கையில் மாணவர்களுக்கு வாழங்குவதன் ஊடாகவே ஒரு சண்டஹ்தியின் துன்பியல் வாழ்வியலை தடுக்க முடியும்

பெண்கள் பாடசாலை கிரிக்கெட் முறை
Posted in இலங்கை செய்திகள்

பெண்கள் பாடசாலை கிரிக்கெட் முறை

பெண்கள் பாடசாலை கிரிக்கெட் முறை

ஆண்களுக்கான பாடசாலை கிரிக்கெட் முறைமையை போன்று பெண்கள் பாடசாலை கிரிக்கெட் முறை யையை விரிவுபடுத்தப்படுவதற்கு சமமான வசதிகள் வழங்கப்பட வேண்டும் என இலங்கை கிரிக்கெட் பயிற்சி ஆலோசகர் மஹேல ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

கல்லூரி மைதானத்தில்

கொழும்பு நாலந்தா கல்லூரி மைதானத்தில் நேற்று (26) ஆரம்பமான நாலந்தா கல்லூரி 88 அணி தலைமையிலான மஹேல சங்க சவால் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட போது அவர் இதனை தெரிவித்தார்.

ஆண்களுக்கான கிரிக்கெட்டை போன்று பெண்களுக்கு

“ஆண்களுக்கான கிரிக்கெட்டை போன்று பெண்களுக்கான பாடசாலை விளையாட்டு முறையை விரிவுபடுத்த வேண்டும், ஏனென்றால் பெண் வீரர்கள் எதிர்காலத்தில் தேசிய மட்டத்திற்கு வர வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்…”

இதேவேளை, நேற்று முன்தினம் (25) அபுதாபியில் நடைபெற்ற மகளிர் 20-20 உலகக் கிண்ணத்திற்கான தகுதிச் சுற்றுப் போட்டியில் தாய்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இலங்கை மகளிர் அணி 67 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 122 ஓட்டங்களைப் பெற்ற நிலையில், இலக்கை துரத்திய தாய்லாந்து மகளிர் அணியால் 16.2 ஓவர்களில் 55 ஓட்டங்களை மாத்திரமே பெற முடிந்தது.

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளருக்கு விளக்கமறியல்
Posted in இலங்கை செய்திகள்

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளருக்கு விளக்கமறியல்

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளருக்கு விளக்கமறியல்

நன்னடத்தை பாடசாலையில் உயிரிழந்த சிறுவனின் மரணம் தொடர்பில் கைதான அப்பாடசாலையின் மேற்பார்வையாளரான பெண்ணை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறும் அது தொடர்பான வழக்கு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதி வரை மறு விசாரணைக்காக ஒத்தி வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சிறுவர் நன்னடத்தை பாடசாலையில் தங்க வைக்கப்பட்ட நிலையில் உயிரிழந்த சிறுவனின் மரணம் தொடர்பில் அப்பாடசாலையின்

மேற்பார்வையாளரான பெண் சந்தேகத்தில் கல்முனை தலைமையக பொலிஸாரால் கைது செய்யப்பட்ட பின்னர் 27 ஆம் திகதி மீண்டும் கல்முனை நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம் சம்சுதீன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போதே மேற்கண்டவாறு உத்தரவிட்டார்.

குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட நிலையில் பொலிஸார் மற்றும் பிரதிவாதியின் சட்டத்தரணி ஆகியோரின் விண்ணப்பங்கள்

ஆராயப்பட்டு 28 வயதுடைய குறித்த பாடசாலையின் மேற்பார்வையாளரான பிறின்ஸி புலேந்திரன் என்பவரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது

பறவை கூடுகளுடன் பாடசாலைக்கு வந்த மாணவர்கள்
Posted in இலங்கை செய்திகள்

பறவை கூடுகளுடன் பாடசாலைக்கு வந்த மாணவர்கள்

பறவை கூடுகளுடன் பாடசாலைக்கு வந்த மாணவர்கள்

தம்புத்தேகம கல்வி வலயத்துக்குட்பட்ட ஆரம்பப் பாடசாலை ஆசிரியர் ஒருவர் பாடசாலை மாணவர்களுக்கு பறவைக் கூடு ஒன்றைக் கொண்டு வருமாறு அனுப்பிய வட்ஸ்அப் தகவலுக்கு அமைய மறுநாள் நாற்பது மாணவர்கள் பறவைக் கூடுகளுடன் வகுப்புக்கு வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

பறவைக் கூடு கொண்டு வரச் சொல்லி சுமார் அறுபது மாணவர்களுக்கு வட்ஸ்அப் மூலம் ஆசிரியர் செய்தி அனுப்பியுள்ளார்.

இதனையடுத்து, சுமார் நாற்பது மாணவர்கள் பறவைக் கூடுகளுடன் பாடசாலைக்கு வந்துள்ளனர்.

பறவைக் கூட்டுடன் குழந்தைகளை வகுப்பறைக்கு அழைத்து வந்த பெற்றோர்கள் வகுப்பறையில் ஏராளமான பறவைக் கூடுகளைக் கண்டு ஆசிரியரின் செயலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

பறவை கூடுகளுடன் பாடசாலைக்கு வந்த மாணவர்கள்

இயற்கைச் சூழலில் பறவைக் கூடுகளை குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுப்பதற்கு பதிலாக இவ்வாறு பறவைக் கூடுகளை அழிக்கக் கற்றுக் கொடுப்பது குறித்து பெற்றோர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தம்புத்தேகம பிரதேச செயலாளருக்கு பெற்றோர்கள் அறிவித்துள்ளனர். தம்புத்தேகம கல்வி வலய ஆரம்பக் கல்வி உதவிப் பணிப்பாளர் உபாலிசேன இது தொடர்பில் ஆராயவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதேவேளை, வனவிலங்கு மற்றும் தாவரங்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 31ஆவது பிரிவின்படி பறவைக் கூடுகளை உடைப்பது, அகற்றுவது மற்றும் அழிப்பது சட்டப்படி குற்றமாகும் என சிரேஷ்ட சுற்றாடல் சட்டத்தரணி கலாநிதி ஜகத் குணவர்தன தெரிவித்துள்ளார்.

அந்தச் சட்டத்தின்படி பறவைக் கூண்டுகளும் பாதுகாக்கப்பட வேண்டியலை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பாடசாலை மாணவனை தாக்கிய மொட்டு கட்சி உறுப்பினரை தேடி விசாரணை
Posted in இலங்கை செய்திகள்

பாடசாலை மாணவனை தாக்கிய மொட்டு கட்சி உறுப்பினரை தேடி விசாரணை

பாடசாலை மாணவனை தாக்கிய மொட்டு கட்சி உறுப்பினரை தேடி விசாரணை

பாடசாலை மாணவனை தாக்கிய திவுலபிட்டிய உள்ளுராட்சி சபையின் பொதுஜன பெரமுனவின் முன்னாள் உறுப்பினர் ஒருவரை கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

தாக்குதலுக்கு உள்ளான தனது மகன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு ஐந்து நாட்களாகியும், சந்தேகத்திற்குரியவர் இதுவரை கைது செய்யப்படவில்லை என குறித்த மாணவனின் தாய் குற்றஞ்சாட்டியுள்ளார்.

கடந்த 11ஆம் திகதி, பாடசாலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த மாணவனை, பந்துராகொட நகரில் வைத்து உள்ளுராட்சி சபையின் முன்னாள் உறுப்பினர் தாக்கியுள்ளார்.

பந்துராகொட பிரதேசத்தில் வசிக்கும் 16 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவரே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளார்.

தாக்குதலின் பின்னர் சந்தேகத்திற்குரியவர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, இதற்கு முன்னர் ஒரு சந்தர்ப்பத்தில், எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவரை தாக்கியதாக குறித்த முன்னாள் உறுப்பினர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

இளம் தாய் துஷ்பிரயோகம் மருத்துவ அறிக்கையில் அதிர்ச்சி
Posted in இலங்கை செய்திகள்

பாடசாலை மாணவியை ஏமாற்றி துஷ்பிரயோகம் செய்தவர் கைது

பாடசாலை மாணவியை ஏமாற்றி துஷ்பிரயோகம் செய்தவர் கைது

மீகஹகிவுல, களுகஹகந்துர பிரதேசத்தில் 15 வயதுடைய பாடசாலை மாணவியை ஏமாற்றி உறவினர் வீட்டில் தங்க வைத்து துஷ்பிரயோகம் செய்ததாக சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் மஹியங்கனை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

மஹியங்கனை பூஜா நகரைச் சேர்ந்த 32 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

பாடசாலை மாணவியை ஏமாற்றி துஷ்பிரயோகம் செய்தவர் கைது

சிறுமியின் பெற்றோர் பொலிஸில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடைய சிறுமி இன்று (06) பதுளை சட்ட வைத்தியரிடம் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

அதேநேரம் சந்தேக நபர் இன்று பதுளை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

சம்பவம் தொடர்பில் கந்தகெட்டிய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்து
Posted in இலங்கை செய்திகள்

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்து

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்து

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று சியம்பலாண்டுவ பிரதேசத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தே விபத்திற்கு உள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் பாடசாலை மாணவர்கள் 24 பேர் உள்ளிட்ட 36 பேர் காயமடைந்துள்ளனர்.

அரச பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையைத் தீர்க்க நடவடிக்கை
Posted in இலங்கை செய்திகள்

கல்வி அமைச்சு விடுத்துள்ள அவசர அறிவித்தல்

கல்வி அமைச்சு விடுத்துள்ள அவசர அறிவித்தல்

வெப்பமான வானிலை மேலும் அதிகரிக்கக்கூடும் என்பதால் இன்று (28), நாளை (29) மற்றும் நாளை மறுதினமும் (01) பாடசாலை மாணவர்களின் வௌிப்புற செயற்பாடுகளை தவிர்க்குமாறு கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இதன்படி, எந்தவொரு பாடசாலையிலும் பயிலும் மாணவர்கள் அதிக வெப்பநிலையின் போது வெளிப்புற விளையாட்டு பயிற்சி நடவடிக்கைகள் அல்லது விளையாட்டு நிகழ்வுகள் அல்லது வேறு எந்த வெளி நடவடிக்கைகளிலும் ஈடுபட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் அறிவிக்குமாறு மாகாண மற்றும் பிராந்திய கல்வி அதிகாரிகளுக்கு ஏற்கனவே பணிப்புரை

கல்வி அமைச்சு விடுத்துள்ள அவசர அறிவித்தல்

விடுக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் சுகாதார அமைச்சும் கல்வி அமைச்சும் பாடசாலைகளுக்கு வழங்கப்படும் அறிவுறுத்தல்களுக்கு அமைய செயற்பட வேண்டும் எனவும் அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இன்றைய தினம் மேல், வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் இரத்தினபுரி மாவட்டத்தின் சில பகுதிகளிலும் மனித உடலால் அதிகமாக உணரக்கூடிய வெப்பநிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது

மூன்று பாடசாலைகளில் திருடிய மாணவர்கள் இருவர் கைது
Posted in இலங்கை செய்திகள்

மூன்று பாடசாலைகளில் திருடிய மாணவர்கள் இருவர் கைது

மூன்று பாடசாலைகளில் திருடிய மாணவர்கள் இருவர் கைது

முந்தல் பகுதியில் உள்ள மூன்று பாடசாலைகளில் உபகரணங்களை சேதப்படுத்தி , சுமார் 8 இலட்சம் பெறுமதியான பணம் மற்றும் உபகரணங்களை திருடிய குற்றச்சாட்டின் கீழ் மாணவர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், கைது செய்யப்பட்ட மாணவர்களால் திருடப்பட்டதாக கூறப்படும் மடிக் கணினி, மைக், வைபை ரவுட்டர், புரஜெக்டர் (Projector) உள்ளிட்ட உபகரணங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

முந்தல் பகுதியில் உள்ள பிரபல பாடசாலை உள்ளிட்ட இரண்டு ஆரம்ப பாடசாலைகளில் உபகரணங்களை சேதப்படுத்தி , உபகரணங்களையும் பணத்தையும் திருடியுள்ளமை முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.

மூன்று பாடசாலைகளில் திருடிய மாணவர்கள் இருவர் கைது

மேற்படி பாடசாலைகளில் நிர்வாக காரியாலயத்தில் இருந்த உபகரணங்களை சேதப்படுத்தி மாணவர்கள், 30 ஆயிரத்திற்கும் அதிக பணத்தை திருடி சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இவ்வாறு இரண்டு தடவைகள் குறித்த பாடசாலைகளுக்குள் புகுந்து பணத்தை திருடிய மாணவர்கள், பணம் கிடைக்காத போது அந்த பாடசாலைகளில் இருந்த உபகரணங்களை திருடிச் சென்றுள்ளனர் எனவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பில் முந்தல் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வீடியோ

பாம்புடன் பாடசாலை வந்த மாணவி
Posted in இலங்கை செய்திகள்

பாம்புடன் பாடசாலை வந்த மாணவி

பாம்புடன் பாடசாலை வந்த மாணவி

தரம் 8 இல் கல்வி பயிலும் மாணவியொருவரின் புத்தகப் பைக்குள் விஷப்பாம்பொன்று இருந்ததில் வகுப்பு மாணவர்கள் மத்தியில் பெரும் அச்சத்ததை ஏற்படுத்தியுள்ளது.

ஹிங்குராக்கொட கல்வி வலயத்திற்குட்பட்ட நகரிலுள்ள பிரபல பாடசாலையொன்றில் புதன்கிழமை (13) காலை பாடசாலைக்கு வருகை

தந்திருந்த மாணவி புத்தகத்தை எடுப்பதற்காக புத்தகப் பைக்குள் கையை விட்ட வேளை ஏதோவொன்று அசைவதாக உணர்ந்த மாணவி சத்தமிட்டவாறு வகுப்பறையை விட்டு வெளியேறியுள்ளார்.

பாம்புடன் பாடசாலை வந்த மாணவி

விடயமறிந்த பாடசாலை அதிபரும்,ஆசிரியர்களும் அந்த மாணவியின் புத்தகப் பையை வகுப்பறையை விட்டு வெளியே எடுத்து பார்க்கையில் அதனுள்ளே கறுப்பு நிற விஷப்பாம்பொன்று இருப்பது தெரிய வந்தது.

மேலும் பாடசாலையில் பணிப்புரிவோரின் உதவியுடன் பாம்பை விரட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வீடியோ

ரணில் சஜித் மோதல் நாடகம்
Posted in இலங்கை செய்திகள்

74 பாடசாலை கட்டிடங்கள் அபாயத்தில்

74 பாடசாலை கட்டிடங்கள் அபாயத்தில்

நாட்டில் 74 இற்கும் மேற்பட்ட பாடசாலைகளில் பாதுகாப்பற்ற கட்டிடங்கள் இருப்பதை கல்வி அமைச்சர் ஒப்புக்கொண்டார்.

இந்த பாடசாலை கட்டிடங்களில் திருத்த வேலைப்பணிகளை மேற்கொள்ள அரசாங்கத்திடம் பணம் இல்லை என்றால், நாட்டை

வங்குரோத்தாக்கியவர்களிடம் இருந்து இதற்கான பணத்தை எடுத்து பாடசாலைகளின் புனரமைப்புக்கு பயன்படுத்துங்கள்.

தேஸ்டன் கல்லூரி, தங்காலையில் உள்ள ஓர் பாடசாலை, சேருநுவர சோமாதேவி பாடசாலை, தொம்பே ஆரம்பப் பாடசாலை கூட பாதுகாப்பற்ற கட்டிடங்களைக் கொண்டுள்ளது.

தொம்பே ஆரம்பப் பிரிவு பாடசாலையில் பணம் இல்லாததால் குறித்த கட்டிடத்தை புனரமைத்து பயன்பாட்டிற்கு எடுங்கள்.

இது ஊடகங்கள் மூலம் தெரிய வந்ததையடுத்து,வலய கல்வி அதிகாரிகள் சம்பந்தப்பட்ட தொம்பே பாடசாலை அதிபரை அழைத்து வந்து கண்டித்துள்ளனர்.

74 பாடசாலை கட்டிடங்கள் அபாயத்தில்

திருகோணமலை மாவட்டத்தில் சேருநுவர சோமாதேவி பாடசாலையில் 300 பிள்ளைகள் கல்வி கற்கிறார்கள்.இந்த பாடசாலை வகுப்பறைகளில் புத்து கட்டப்பட்டு சில வகுப்பறைகளில் பாம்பு கூட இருக்கிறது.

நாட்டை வங்குரோத்தாக்கிய தரப்பினர்கள் யார் என்பதை உயர் நீதிமன்றம் வெளிப்படுத்தியுள்ளது. எனவே, விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட வேண்டும்.

இதன் மூலம் நாட்டுக்கு ஏற்பட்டுள்ள நட்டத்தை அறிவிட்டு, அந்தப் பணத்தைப் பயன்படுத்தி பாடசாலைகளை அபிவிருத்தி செய்யுமாறும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று (06) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

வீடியோ

பெங்களூரில் 15 பாடசாலைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்
Posted in உலக செய்திகள்

பெங்களூரில் 15 பாடசாலைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பெங்களூரில் 15 பாடசாலைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பெங்களுரூ, கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள 15 பாடசாலைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

பாடசாலைகளுக்கு மின்னஞ்சல் மூலம் மர்மநபர் இந்த வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து பாடசாலை நிர்வாகத்தினர் பொலிஸாருக்கு தகவல் கொடுத்தனர்.

இதனை தொடர்ந்து விரைந்து வந்த பொலிஸார், பாடசாலைகளில் இருந்து மாணவ, மாணவியரை வெளியேற்றினர். மேலும், பாடசாலைகளில் தீவிர

சோதனை நடத்தினர். இந்த சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் போலியானது என்பதை கண்டுபிடித்தனர்.

பெங்களூரில் 15 பாடசாலைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

அதேவேளை, வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட பாடசாலைகளில் ஒன்று மாநில துணை முதல் மந்திரி டிகே சிவக்குமாரின் வீட்டிற்கு எதிரே அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

15 பாடசாலைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது யார்? என்பது குறித்து பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வெடிகுண்டு மிரட்டலால் பெங்களூருவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

வெல்லம்பிட்டி பாடசாலை அனர்த்தம் தொடர்பில் விசாரணை
Posted in இலங்கை செய்திகள்

வெல்லம்பிட்டி பாடசாலை அனர்த்தம் தொடர்பில் விசாரணை

வெல்லம்பிட்டி பாடசாலை அனர்த்தம் தொடர்பில் விசாரணை

வெல்லம்பிட்டி பிரதேசத்தில் பாடசாலை ஒன்றில் மதில் சுவர் இடிந்து விழுந்ததில் மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 5 மாணவர்கள்

காயமடைந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்குமாறு கல்வி அமைச்சு கல்வி அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளது.

இவ்விடயம் தொடர்பில் ஆராய்ந்து உடனடியாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த வலய கல்வி அலுவலக அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இதன்படி, குறித்த பாடசாலைக்குச் சென்று சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்கவுள்ளதாக ஜயவர்தனபுர வலயக் கல்விப் பணிப்பாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

வெல்லம்பிட்டி பாடசாலை அனர்த்தம் தொடர்பில் விசாரணை

நேற்று முற்பகல் (15) கைகளை கழுவிக் கொண்டிருந்த முதலாம் தரத்தைச் சேர்ந்த 06 மாணவர்கள் மீது பாடசாலையில் தண்ணீர் குழாய்கள் பொருத்தப்பட்டிருந்த கொங்கிரீட் சுவர் இடிந்து விழுந்தது.

விபத்தில் காயமடைந்த மாணவி ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஐவர் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவத்தின் பின்னர் பிரதேசவாசிகள் குழுவொன்று பாடசாலையின் அதிபரை தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாடசாலையில் நிலவிய அமைதியின்மை காரணமாக பாடசாலையின் கல்வி நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் திங்கட்கிழமை மீண்டும் கல்வி நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன.

அரச பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையைத் தீர்க்க நடவடிக்கை
Posted in இலங்கை செய்திகள்

பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிப்பு

பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிப்பு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாட்டின் அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 13 ஆம் திகதி விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சின் ஊடக செயலாளர் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளார்.

இந்த விடுமுறைக்கு பதிலாக எதிர்வரும் 18 ஆம் திகதி சனிக்கிழமை பாடசாலை இடம்பெற வேண்டும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறு விடுமுறை அளிக்கும் பாடசாலைகளின் அதிபர்கள் இது தொடர்பில் வலயக் கல்விப் பணிப்பாளருக்கு அறிவிக்க வேண்டும் என அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வீடியோ

பருத்தித்துறையில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

பாடசாலையில் மாணவன் மரணம் பாடசாலையில் நடந்தது என்ன

பாடசாலையில் மாணவன் மரணம் பாடசாலையில் நடந்தது என்ன

புஸல்லாவ பிரதேச பாடசாலை மாணவன் ஒருவர் மரணம் அடைந்துள்ளார் ,இவரது மரணம் பாடசலையில் எவ்வாறு இடம்பெற்றது என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .

அவ்வேளை மாணவன் தனது சக மாணவர்களுடன் மேசை மீது ஏறி விளையாடி கொண்டிருந்த பொழுது, அங்கிருந்த மின்விசிறி தாக்கி அவர் பலியாகியுள்ளதாக தெரிவிக்க படுகிறது .

பாடசாலையில் மாணவன் மரணம் பாடசாலையில் நடந்தது என்ன

பாடசலைக்கு மகனை கற்கை நெறிக்கு அனுப்பி வைத்தால் , இவ்வாறு சடலமாக அம் மாணவன் வந்துள்ளது கண்டு ,பெற்றவர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர் .

பாடசாலையின் அசமந்த போக்கே இந்த மாணவன் உயிர்பலிக்கு காரணம் என மக்கள் விசனம் தெரிவித்து வருகின்றனர் .