Tag: கொலை
லண்டனில் கொலை செய்யப்பட்ட இலங்கை பெண்
லண்டனில் கொலை செய்யப்பட்ட இலங்கை பெண்
லண்டனில் கொலை செய்யப்பட்ட இலங்கை பெண் Niwunhellage Dona Nirodha Kalapni Niwunhella) சம்பவம் தொடர்பான திடீர் அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகியிருக்கின்றன.
பிரித்தானியாவில் 32வயது மதிக்கத்தக்க இலங்கையைச் சேர்ந்த சிங்கள பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இரத்த வெள்ளத்தில் வீதியில் துடித்துக் கொண்டிருந்த Nirodha அவசரகால மருத்துவ படை பிரிவினர் சென்று பார்த்தபொழுது அவர் மூச்சடங்கி இறந்து போனார்.
அழகிய பெண் படுகொலை
குறித்த அழகிய பெண்ணை படுகொலை செய்த குற்றச்சாட்டில் அடிப்படையில் அவருக்கு தெரிந்தவரான சிங்களவர் என கருதப்படும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த Nirodha படுகொலைக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை.
அழகான 32 வயது அழகிய பெண்ணை பறிகொடுத்து அந்த குடும்பம் தவிக்கிறது.
இந்த சம்பவம் பிரித்தானியா வாழ் இலங்கையர்களுக்கு மத்தியில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.இந்த கொலைக்கான காரணம் கண்டறியப்படவில்லை .
குறித்த கொலையாளி கைது
தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் படுகொலை இடம்பெற்ற சில மணித்துளிகளில் குறித்த கொலையாளி கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்
89 பாலஸ்தீனியர் கொலை
89 பாலஸ்தீனியர் கொலை
89 பாலஸ்தீனியர் கொலை காசாவில் 24 மணி நேரத்தில் இஸ்ரேல் 89 பாலஸ்தீனியர்களைக் கொன்றது
கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 31 உதவி தேடுபவர்கள் உட்பட குறைந்தது 89 பாலஸ்தீனியர்கள்
கொல்லப்பட்டுள்ளதாகவும், 513 பேர் காயமடைந்துள்ளதாகவும் அந்த பகுதி சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பாலஸ்தீனியர்கள் பட்டினியால் பலி
செவ்வாய்க்கிழமை காசா பகுதியில் இரண்டு குழந்தைகள் உட்பட மேலும் பல பாலஸ்தீனியர்கள் பட்டினியால் இறந்ததாகவும் அல் ஜசீரா சுகாதார
அமைச்சகம் தெரிவித்துள்ளது, இது 103 குழந்தைகள் உட்பட பசி தொடர்பான மொத்த இறப்புகளின் எண்ணிக்கையை 227 ஆக உயர்த்தியுள்ளது.
24 மணி நேரத்தில் காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 31 உதவி தேடுபவர்கள் உட்பட குறைந்தது 89 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாகவும்,
513 பேர் காயமடைந்ததாகவும் அந்த பகுதி சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலிய தாக்குதல்களின் இடிபாடுகளில் இருந்து
முந்தைய இஸ்ரேலிய தாக்குதல்களின் இடிபாடுகளில் இருந்து பதினொரு உடல்கள் மீட்கப்பட்டதாகவும் அமைச்சகம் டெலிகிராமில் தெரிவித்துள்ளது.
அக்டோபர் 7, 2023 முதல் காசா மீதான இஸ்ரேலின் போரில் மொத்தம் 61,599 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 154,088 பேர் காயமடைந்துள்ளனர் என்று அமைச்சகம் மேலும் கூறியது.
மே 27 ஆம் தேதி அமெரிக்காவை தளமாகக் கொண்ட GHF மூலம் இஸ்ரேல் புதிய உதவி விநியோக பொறிமுறையை அறிமுகப்படுத்தியதிலிருந்து
கொல்லப்பட்ட உதவி கோருபவர்களின் மொத்த எண்ணிக்கை 1,838 ஐ எட்டியுள்ளது, 13,409 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹோமாகம கொலை தொடர்பில் 4பேர்கைது
ஹோமாகம கொலை தொடர்பில் 4பேர்கைது
ஹோமாகம கொலை தொடர்பில் 4பேர்கைது ஹோமாகம பொலிஸ் பிரிவில் ஒருவரை கழுத்தை நெரித்து கொலை செய்து கிளை வீதியில் வீசிய குற்றத்தில் தொடர்புடைய நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 10ஆம் திகதி நடந்த இந்தக் குற்றத்தைத் தொடர்ந்து, நேற்றிரவு (25) மாதம்பிட்டிய மற்றும் கிரேண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுகளில்
குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள்
மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின்போது, நுகேகொட குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் சந்தேக நபர்களைக் கைது செய்தனர்.
கொழும்பு 14 மற்றும் 15 பகுதிகளைச் சேர்ந்த கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள், 18 முதல் 24 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
அவர்கள் தற்போது ஹோமாகம பொலிஸ் நிலையத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.
கொலை செய்யப்பட்ட நபர் பயணித்த கார்
கொலை செய்யப்பட்ட நபர் பயணித்த கார் கேகாலை-மாவனெல்ல வீதியில் கண்டுபிடிக்கப்பட்டது.
நீண்ட விசாரணைகளுக்குப் பின்னர், கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை பொலிஸார் அடையாளம் கண்டு கைது செய்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக ஹோமாகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பெண் கழுத்தறுத்துக் கொலை
பெண் கழுத்தறுத்துக் கொலை
பெண் கழுத்தறுத்துக் கொலை ,நாவலப்பிட்டி இம்புல்பிட்டி தோட்டத்தில் கைவிடப்பட்ட பங்களாவில் திருமணத்திற்கு மாறான மனைவியின் கழுத்தறுத்துக் கொலை செய்த நபர் பொலிஸாரிடம் சரணடைந்துள்ளார்.
சந்தேக நபர் கம்பளையில் சரணடைந்துள்ள நிலையில், பின்னர் மேலதிக விசாரணைகளுக்காக நாவலப்பிட்டி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
நேற்று (22) மாலை இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதுடன், உயிரிழந்தவர், நாவலப்பிட்டி இம்புல்பிட்டி தோட்டத்தைச் சேர்ந்த 39 வயதான மூன்று பிள்ளைகளின் தாய் என தெரியவந்துள்ளது.
கொலை செய்யப்பட்ட பெண்
கொலை செய்யப்பட்ட பெண், சந்தேக நபருடன் கம்பளை புஸ்ஸல்லாவ பகுதியில் சுமார் 09 மாதங்கள் வசித்து வந்த பின்னர் தனது சட்டப்பூர்வ கணவரின் வீட்டிற்குத் திரும்பிச் சென்றுள்ளார்.
வீட்டில் இருந்த குறித்த பெண், அவ்வப்போது சந்தேக நபருக்கு தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டு, வீட்டு வேலைக்காக வெளிநாடு செல்லத் தயாராகி வந்துள்ளார்.
பொலிஸார் நடத்திய விசாரணைகளில் சந்தேக நபர் வெளிநாடு செல்வதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
கொலை செய்யப்பட்ட பெண் வெளிநாடு செல்வதற்காக கிராம சேவகர் சான்றிதழ் பெறச் சென்றபோது, சந்தேக நபர் அவரை தொலைபேசியில்
பாழடைந்த வீட்டிற்கு வருமாறு அழைத்து கொலை
அழைத்து பாழடைந்த வீட்டிற்கு வருமாறு அழைத்த நிலையில், அங்கு சென்ற பெண்ணின் கழுத்தை அறுத்து சந்தேகநபர் கொலை செய்துள்ளார்.
இறந்த பெண்ணின் உடல், பிரேத பரிசோதனைக்காக நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியிடம் அனுப்பப்பட்டுள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.
மகளைக் கொலை செய்த தந்தை
மகளைக் கொலை செய்த தந்தை
மகளைக் கொலை செய்த தந்தை ,9வயது மகளைக் கொலை செய்ததாக தந்தை மீது குற்றச்சாட்டு.
வார இறுதியில் நியூயார்க்கின் வடபகுதியில் தனது 9 வயது மகள் இறந்த வழக்கில் கனடாவைச் சேர்ந்த ஒருவர் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக அதிகாரிகள் திங்களன்று தெரிவித்தனர்.
ஞாயிற்றுக்கிழமை மெலினா கலனிஸ் ஃபிராட்டோலினின் உடல் ஆழமற்ற குளத்தில் கண்டெடுக்கப்பட்டது. அவரது தந்தை லூசியானோ ஃபிராட்டோலின்,
தான் கடத்தப்பட்டதாக போலீசாரிடம் பொய்யாகக் கூறியதாக அதிகாரிகள் குற்றம் சாட்டினர்.
மாண்ட்ரீலைச் சேர்ந்த ஃபிராட்டோலின், அமெரிக்காவிற்கு விடுமுறைக்குச் சென்றபோது தனது மகளைக் கொன்றதாகக் கூறப்படுகிறது, ஜார்ஜ் ஏரி அருகே அவரது உடலை மறைத்து வைத்து, சிறுநீர் கழிக்க காட்டுக்குள்
சென்றபோது அவர் கடத்தப்பட்டதாகக் கதை புனைந்ததாக நியூயார்க் மாநில காவல்துறையின் கேப்டன் ராபர்ட் மெக்கோனல் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
சனிக்கிழமை மாலை மெலினா கொல்லப்பட்டதாக புலனாய்வாளர்கள் நம்புவதாக மெக்கோனல் கூறினார், அவரும் அவரது தந்தையும் நியூயார்க்
நகரம் மற்றும் கனெக்டிகட்டுக்கு 10 நாள் விடுமுறைக்குப் பிறகு மாண்ட்ரீலுக்குத் திரும்பிச் சென்று கொண்டிருந்ததாகக் கூற தனது தாயாரை அழைத்த சில மணிநேரங்களுக்குப் பிறகு.
“அவர் மெலினாவைக் கொலை செய்து, அவரது உடலை ஒரு தொலைதூரப் பகுதியில் விட்டுச் சென்றதாகக் கூறப்படுகிறது, பின்னர் அவர் சட்ட அமலாக்க அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டார்,” என்று மெக்கோனல் கூறினார்.
ஆண் கடத்திக் கொலை
ஆண் கடத்திக் கொலை
ஆண் கடத்திக் கொலை ,ஆண் ஒருவர் கடத்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கடத்தப்பட்ட நபர் படுகொலை
மர்ம நபர்களினால் கடத்தப்பட்ட நபர் படுகொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக சடகமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
இவ்வாறு இறந்தவர் நான்கு மர்ம நபர்களால் ஆட்டோவில் வந்த குழுவினால் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
இரண்டு மாடி வீட்டில் இருந்த பொழுது அங்கு ஆட்டோவில் வந்த கும்பல் இவரை கடத்தி அவரை படுகொலை செய்து விட்டு தப்பி சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
கடத்தல் படுகொலை
இந்தக் கடத்தல் படுகொலை சம்பந்தமாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் ,இந்த சம்பவம் அந்த பகுதி மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் ஒருவித பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது .
இலங்கையில் நாள்தோறும் இவ்வாறு கடத்தி படுகொலை செய்யும் நடவடிக்கைகள் அதிகமாக இடம்பெற்று வருகின்ற சம்பவம் ,இதன் பின்புலத்தில் அரசியல் பாதாள உலக குழு உள்ளதான செய்திகள் வெளியாகி வருவதால் மக்கள் மத்தியில் ஒருவித பதட்டத்தை இது ஏற்படுத்தியுள்ளது .
எனினும் இந்த படுகொலைக்கான காரணம் அதை கடத்தியவர்கள் யார் என்பது தொடர்பாக தெரிய வரவில்லை என காவல்துறையினர் தெரிவித்து வருகின்றனர்
ஆமியை கொலை செய்தவர் கைது
ஆமியை கொலை செய்தவர் கைது
ஆமியை கொலை செய்தவர் கைது தற்பொழுது கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை போலீசார் தெரிவிக்கின்றனர்.
கொலை தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணை
கடந்த மூன்றாம் தேதி நடந்த கொலை தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணைக்கு இந்த நபர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாகவும் ,என்னிடம் 50 கிராம் 60 பிள்ளைகள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
30 வயதான சந்தேக நபர் ராகம படுவத்த பகுதியைச் சேர்ந்தவர் என தற்போது போலீசார் தெரிவித்துள்ளனர்.
போதை வஸ்து வியாபாரத்தில் ஏற்பட்ட முறுகல் காரணமாக இந்த படுகொலை இடம் பெற்றிருக்க கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கி உடன் கைது செய்யப்பட்ட இவர் தொடர்ந்து விசாரணை உடன் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
தப்பி ஓடிய முன்னாள் ராணுவத்தினர்
தப்பி ஓடிய முன்னாள் ராணுவத்தினர் மற்றும் ராணுவத்தில் உள்ளவர்கள் தற்போது போதை வஸ்து வியாபாரத்தில் அதிகமாக ஈடுபட்டுள்ளது இதற்கு காரணம் என்ன தெரிய வருகிறது.
அதனை அடுத்து தற்பொழுது இவருடன் எப்படி தமது நடவடிக்கையை மேற்கொண்டு என்பது தொடர்பான விடயங்கள் யாவும் போலீசாருக்கு கிடைக்கப்பெறு நிலையில் ,
இவர்கள் விரைவில் கைது செய்யப்படுவாள் எனவும் இவரது கூட்டாளிகளும் இரவில் கை செய்யக்கூடிய வாய்ப்புகள் உள்ளதாக தெரிய வருகிறது.
கோடீஸ்வர தொழிலதிபர் கொலை
கோடீஸ்வர தொழிலதிபர் கொலை
கோடீஸ்வர தொழிலதிபர் கொலை ,கட்டுனேரியில் ஒரு கோடீஸ்வர தொழிலதிபரை கொலை செய்து, சிரிகம்பள பகுதியில் உள்ள கார் கழுவும் இடத்தில் உள்ள கழிவுநீர் தாங்கிக்குள் அவரது உடலை வீசிய குற்றச்சாட்டில்
இரண்டு சகோதரர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கைது செய்யப்பட்ட 19 வயதான சகோதரர், வாகன பழுதுபார்க்கும் நபராவார். அதே நேரத்தில் அவரது 15 வயது தம்பி மாரவிலாவில் உள்ள ஒரு பிரபலமான பாடசாலையில் படித்து வருகிறார்.
கோடீஸ்வர தொழிலதிபரின் கொலையில் முக்கிய சந்தேக நபராகக் கருதப்படும் 20 வயது இளைஞரிடமிருந்து பெறப்பட்ட தகவல்களின்
அடிப்படையில் பாடசாலை மாணவனும் அவரது சகோதரரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
புத்தளம் – மாரவில பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதுடைய வர்த்தகர் ஒருவர் ஜூன் மாதம் 30 ஆம் திகதியிலிருந்து காணாமல்போயுள்ளதாக வென்னப்புவை பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.
இது தொடர்பில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், காணாமல்போன வர்த்தகரின் கார் வென்னப்புவை பிரதேசத்தில் உள்ள
அவரது 20 வயதுடைய நண்பனின் வீட்டிலிருந்து கடந்த வியாழக்கிழமை (03) கைப்பற்றப்பட்டுள்ளது.
இதனையடுத்த கைதுசெய்யப்பட்ட வர்த்தகரின் நண்பனிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், கடந்த ஜூன் மாதம் 30 ஆம் திகதி இரவு
வர்த்தகரும் அவரது 5 நண்பர்களும் மதுபானம் அருந்திக்கொண்டிருந்த போது வர்த்தகருக்கும் நண்பர்களுக்கும் இடையில் ஏற்பட்ட தகராறில் வர்த்தகர் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
பின்னர் நண்பர்கள் அனைவரும் இணைந்து வர்த்தகரின் சடலத்தை வென்னப்புவை, சிறிகம்பொல பிரதேசத்தில் உள்ள வாகனங்களை
பழுதுபார்க்கும் நிலையம் ஒன்றின் கழிவு நீர் குழிக்குள் வீசியதாக வர்த்தகரின் நண்பன் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
டிரான் அலஸுக்கு கொலை மிரட்டல்
டிரான் அலஸுக்கு கொலை மிரட்டல்
டிரான் அலஸுக்கு கொலை மிரட்டல் ,முன்னாள் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸுக்கு பாதாள உலகக் கும்பல் தலைவர் ஒருவரிடமிருந்து தொலைபேசி மூலம் கொலை மிரட்டல்கள் வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பதில் பொலிஸ்மா அதிபரிடம் முறைப்பாடு
இது தொடர்பில் அவர் பதில் பொலிஸ்மா அதிபரிடம் முறைப்பாடு அளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 5 ஆம் திகதி டுபாயில் வசிக்கும் ஒரு பாதாள உலகக் கும்பல் தலைவரிடமிருந்து முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸுக்கு பல தொலைபேசி அழைப்புகள் வந்துள்ளன.
அதில் அவருக்கு கொலை மிரட்டல்கள் வந்ததாக கூறப்படுகிறது.
டிரான் அலஸ் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராக இருந்தபோது, நாட்டை விட்டு தப்பிச் சென்ற பாதாள உலகத் தலைவர்கள் மற்றும் அவர்களுடன்
தொடர்புடைய நபர்களை மீண்டும் அழைத்து வர உத்தரவுகளைப் பிறப்பித்ததாகக் கூறி, இந்தக் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக ‘அத தெரண’ பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவிடம் வினவியது.
பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ்
முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் இது தொடர்பில் தன்னிடம் முறைப்பாடு அளித்துள்ளதாக குறிப்பிட்டார்.
அதன்படி, அனைத்து பிரிவுகளுக்கும் தகவல் வழங்கப்பட்டுள்ளதோடு, சம்பவம் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பதில் பொலிஸ்மா அதிபர் தெரிவித்தார்.
மித்தெனிய முக்கொலை இந்தியாவுக்கு தப்பியவர் சிக்கினார்
மித்தெனிய முக்கொலை இந்தியாவுக்கு தப்பியவர் சிக்கினார்
மித்தெனிய முக்கொலை இந்தியாவுக்கு தப்பியவர் சிக்கினார் ,மித்தெனிய பொலிஸ் பிரிவில், பெப்ரவரி (18) ஆம் திகதியன்று நடந்த மூன்று கொலைகளில் தொடர்புடைய மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் என
சந்தேகிக்கப்படும் 31 வயதான இஷான் மதுசங்க, இந்தியாவிலிருந்து நாடு கடத்தப்பட்டு, வௌ்ளிக்கிழமை(25) அன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அனுப்பப்பட்டார்.
அவர் உஸ்வேவகெதர, டெபொக்காவ பகுதியைச் சேர்ந்தவர், மேலும் இந்த மூன்று கொலைகளுக்கு மேலதிகமாக, கொலை, கைக்குண்டுகளை வைத்திருத்தல் மற்றும் ஹெரோய்ன் உள்ளிட்ட போதைப்பொருள்
வைத்திருந்தல் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளுக்காக மித்தெனிய, ஊருபொக்க, வலஸ்முல்ல மற்றும் மித்தெனிய ஆகிய மாத்தறை பிரிவுகளில் உள்ள பல பொலிஸ் நிலையங்களால் தேடப்படும் சந்தேக நபராவார்.
இந்த மூன்று கொலைகளில், விதானகமகே அருண பிரியந்த, அவரது மகள் மற்றும் மகன் ஆகியோர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் படகு மூலம் இந்தியாவுக்கு தப்பிச் சென்று போலியான பெயரில் அங்கு தங்கியிருந்துள்ளார். குற்றப் புலனாய்வுத்
துறையால் நாட்டிற்கு வழங்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில், அவர் நாட்டின் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டு, வௌ்ளிக்கிழமை (25) அன்று கட்டுநாயக்கவிற்கு நாடு கடத்தப்பட்டார்.
பருத்தித்துறையில் மூதாட்டி ஒருவர் அடித்துக் கொலை
பருத்தித்துறையில் மூதாட்டி ஒருவர் அடித்துக் கொலை
பருத்தித்துறையில் மூதாட்டி ஒருவர் அடித்துக் கொலை ,யாழ். பருத்தித்துறை – தும்பளையில் மூதாட்டி ஒருவர் பொல்லால் தாக்கி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
மாம்பிரம்பற்றை வீதி, தும்பளையில் சகோதரியுடன் வசித்து வந்த செம்பியன்பற்று வடக்கை சேர்ந்த சின்னத்தம்பி குணதேவி (வயது 69) என்ற மூதாட்டியே இத்தாக்குதலில் உயிரிழந்துள்ளார்.
வீட்டில் திருடும் நோக்குடன் சென்ற இளைஞரே மூதாட்டியைத் தாக்கி படுகொலை செய்துள்ளார். மேற்படி இளைஞன் பொலிஸாரால் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
குறித்த வீட்டில் சகோதரிகளான இரண்டு மூதாட்டிகள் வசித்து வருகின்றனர். அதில் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை (20) காலை உயிர்த்த ஞாயிறு பிரார்த்தனைக்காக தேவாலயத்துக்குச் சென்றுள்ளார். மற்றையவர் வீட்டில் தனிமையில் இருந்துள்ளார்.
அந்நிலையில் இரண்டு மூதாட்டிகளும் தேவாலயத்துக்குச் சென்றுள்ளார்கள் என நினைத்து, அயல்வீட்டு இளைஞர் வீட்டினுள் களவுக்குச் சென்றுள்ளார்.
அவ்வேளை வீட்டில் இருந்த மூதாட்டி இளைஞர் களவில் ஈடுபடுவதை அவதானித்ததை அடுத்து இளைஞர் பொல்லால் மூதாட்டியைத் தலையில் பலமாகத் தாக்கி விட்டு தப்பிச் சென்றுள்ளார். இரத்த வெள்ளத்தில் வீழ்ந்த மூதாட்டி உயிரிழந்தார்.
தேவாலயத்துக்கு சென்ற மற்றைய மூதாட்டி வீட்டுக்கு வந்த போது மூதாட்டி இரத்த வெள்ளத்தில் சடலமாகக் காணப்பட்டதை அவதானித்து அயலவர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
அதனையடுத்து அயலவர்கள் பொலிஸாருக்குத் தகவல் வழங்கியதை அடுத்து , சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த துடன், சடலத்தை மீட்டு உடற்கூற்று பரிசோதனைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் அயல் வீட்டு இளைஞரை தும்பளை, மணல் ஒழுங்கையில் வைத்து மடக்கிப் பிடித்தனர்.
கைது செய்யப்பட்ட இளைஞர், கொலைக் குற்றத்தை ஏற்றுக்கொண்டு வாக்குமூலம் வழங்கியுள்ள நிலையில், பருத்தித்துறை பொலிஸார் அவரிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இளைஞன் அடித்துக்கொலை
இளைஞன் அடித்துக்கொலை
இளைஞன் அடித்துக்கொலை ,கெட்ட பொல என்றழைக்கப்படும் சூதாட்டத்தின் போது ஏற்பட்ட கைகலப்பில் இளைஞன் ஒருவர் பொல்லுகளால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம், ஆனமடுவ, வடத்த, ஹல்மில்லேவ பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இளைஞனை பொல்லுகளால் அடித்து கொலை செய்தனர் என்றக் குற்றச்சாட்டில், பெண் உட்பட இருவர் சந்தேகத்தின் பேரில்,கைது செய்யப்பட்டுள்ளதாக ஆனமடுவ பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் ஆனமடுவ, வதத்த, ஹல்மில்லேவ பகுதியைச் சேர்ந்த ஜெயசுந்தர என்றழைக்கப்படும், 25 வயதுடைய சஜீத் திவங்க என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர், திருமணமாகாத நபராவார்.
கைது செய்யப்பட்டவர்கள் கொலை செய்யப்பட்ட இளைஞனின் தாயாரின் தம்பி என்றும், இவர், அப்பகுதியில் சட்டவிரோத கசிப்பு கடத்தலில்
ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. அத்துடன், சந்தேக நபரின் மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரின் கடைக்கு முன்னால் நடத்தப்பட்ட சூதாட்டத்தில் ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து, அவரது மாமாவால்
பொல்லுகளால், தாக்கப்பட்டதில் மருமகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக முதற்கட்ட விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கழுத்து அறுக்கப்பட்ட பெண் கொலை
கழுத்து அறுக்கப்பட்ட பெண் கொலை
கழுத்து அறுக்கப்பட்ட பெண் கொலை ,மத்துகம, தொலஹேன பகுதியில் நேற்று (18) பகல் 33 வயதுடைய பெண் ஒருவர் கழுத்து அறுக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
மர்வின் சமரநாயக்க மாவத்தை, அங்கலவத்தை பகுதியைச் சேர்ந்தவர் குறித்த பெண்ணின் உடலில் பல வெட்டுக் காயங்கள் காணப்படுகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
காதல் உறவு தொடர்பான தகராறு காரணமாக இந்தப் படுகொலை இடம்பெற்றுள்ளமை பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
அதன்படி, சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவர் அப்பகுதியிலிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
மேலும் உயிரிழந்த பெண்ணின் சடலம் நீதவான் விசாரணையின் பின்னர் நாகொடை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபரை கைது செய்ய மத்துகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்
இருவர் சுட்டு கொலை எகிறும் துப்பாக்கி கலாச்சாரம்
இருவர் சுட்டு கொலை எகிறும் துப்பாக்கி கலாச்சாரம்
இருவர் சுட்டு கொலை எகிறும் துப்பாக்கி கலாச்சாரம் .இலங்கை மாத்தறை பகுதியில் வாகனத்தில் வந்தவர்கள் மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள்மீது திடீர் துப்பாக்கி சூட்டு தாக்குதலை நடத்தினர் .இதில் சம்பவ இடத்தில இரண்டு வாலிபர்கள் பலியாகினர் .
வானில் வந்தவர்கள் டீ 56 மற்றும் கை துப்பாக்கி ஊடாக தாக்குதலை நடத்தியுள்ளனர் .
எனினும் சம்பவம் இடம்பெற்ற சற்று தொலைவில் வான் எரிக்க பட்ட நிலையில் கண்டு பிடிக்க பட்டுள்ளது .
இந்த துப்பாக்கி சூட்டு படுகொலைகளின் காரணம் உடனடியாக தெரியவில்லை .இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
கொலை தொடர்பாக 8 சந்தேக நபர்கள் கைது
கொலை தொடர்பாக 8 சந்தேக நபர்கள் கைது
கொலை தொடர்பாக 8 சந்தேக நபர்கள் கைது ,கொலை சம்பவம் தொடர்பில் கிராண்ட்பாஸ் பகுதியில் எட்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஜபோஸ்லேன் பகுதியில் அண்மையில் இரண்டு இளைஞர்கள் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டிருந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பிலேயே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளதுடன், விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
வயோதிப சகோதரிகள் கொலை 15 வயது பேத்தி கைது
வயோதிப சகோதரிகள் கொலை 15 வயது பேத்தி கைது
வயோதிப சகோதரிகள் கொலை 15 வயது பேத்தி கைது ,மூதூர் – தாஹாநகர் பகுதியில் இன்று காலை இரண்டு சகோதரிகள் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், 15 வயதுச் சிறுமி கைது செய்யப்பட்டுள்ளார்.
இதில், 68 மற்றும் 74 வயதுடைய இரண்டு சகோதரிகளின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர்களில் ஒருவர் ஓய்வு பெற்ற ஆசிரியர் எனவும் மற்ற நபர் தாதி எனவும் தெரிவிக்கப்படுகிறது .
இந்நிலையில், கொலையுண்ட இருவரினதும் பேத்தியான 15 வயது சிறுமி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்
ஒருவர் அடித்து கொலை
ஒருவர் அடித்து கொலை
ஒருவர் அடித்து கொலை ,வெல்லாவௌி – சின்னவத்தை பிரதேசத்தில் நேற்று (14) மது அருந்தச் சென்ற நண்பர்களுக்கடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இதில், வெல்லாவெளி சின்னவத்தை பக்கியெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடைய புவனேந்திரராசா என்பவரே உயிரிழந்துள்ளார்.
நேற்று பகல் 12 மணியளவில் புவனேந்திரராசா அவருடைய 3 நண்பர்களுடன் சின்னவத்தை பகுதியிலுள்ள வயல்பகுதிக்கு சென்று மதுபானம் அருந்தியுள்ளார்.
இந்த நிலையில் குறித்த நபருக்கும் ஏனைய 3 நண்பர்களுக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டதையடுத்து அவர் மீது 3 பேரும் பொல்லால் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
குறித்த வயல்பகுதிக்கு மாலை வேளையில் சென்ற கிராம உத்தியோகத்தர் சடலம் ஒன்று இருப்பதைகண்டு பொலிஸாருக்கு தெரியப்படுத்தியதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து நீதிமன்ற அனுமதியை பெற்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மட்டு போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்ததுடன் குறித்த நண்பரை தாக்கி கொலை செய்த குற்றச்சாட்டின் 3 நண்பர்களையும் பொலிஸர் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில், கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொலை செய்யப்பட்டு வீசப்பட்ட இளைஞன்
கொலை செய்யப்பட்டு வீசப்பட்ட இளைஞன்
கொலை செய்யப்பட்டு வீசப்பட்ட இளைஞன் ,அங்குணுகொலபெலஸ்ஸ – அபேசேகரகம வீதியில், கீரியகொடெல்ல சந்தியில், அதிவேக நெடுஞ்சாலைக்கு அருகிலுள்ள மேம்பாலத்தின் கீழ் இளைஞனின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் 23 வயதுடைய அபேசிங்க விஜேநாயக்க சந்தீப லக்ஷான் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த இளைஞன் கொலை செய்யப்பட்டு பாலத்திலிருந்து வீசப்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இந்த மர்ம மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அங்குணுகொலபெலஸ்ஸ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
பெண் எரித்துக் கொலை
பெண் எரித்துக் கொலை
பெண் எரித்துக் கொலை ,தம்பகல்ல பொலிஸ் பிரிவின் கொலொன்கந்தபிட்டிய பகுதியில் உள்ள வீடொன்றில் பெண் ஒருவர் எரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாக தம்பகல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், கொலை தொடர்பாக உயிரிழந்த பெண்ணின் மகன், மகள் மற்றும் மருமகள் ஆகியோரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
உயிரிழந்தவர் கொலொன்கந்தபிட்டிய, தம்பகல்ல பகுதியைச் சேர்ந்த 55 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்த பெண் மண்வெட்டியால் அடித்து பின்னர் எரித்துக் கொல்லப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த பெண்ணின் சடலம் மொனராகலை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், தம்பகல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
ரோயல் பார்க் கொலை சம்பவம் மைத்திரிக்கு நோட்டீஸ்
ரோயல் பார்க் கொலை சம்பவம் மைத்திரிக்கு நோட்டீஸ்
ரோயல் பார்க் கொலை சம்பவம் மைத்திரிக்கு நோட்டீஸ் ,ரோயல் பார்க் கொலை வழக்கு தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு உயர் நீதிமன்றம் இன்று (11) நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ரோயல் பார்க் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட ஜூட் ஷ்ரமந்த ஜெயமஹாவுக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி மன்னிப்பு ரத்து
செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ஒரு மில்லியன் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்ற நீதிமன்றத்தின் உத்தரவை நிறைவேற்றத் தவறியதற்காக, இந்த நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அதன்படி, அவருக்கு தண்டனை வழங்காமல் இருப்பதற்கான காரணத்தை ஏப்ரல் 29 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகி சமர்ப்பிக்குமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
கடந்த ஆண்டு இந்த வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்டபோது, அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டதற்காக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,
ஒரு மாதத்திற்குள் ஒரு மில்லியன் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, மனுதாரர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜெயவர்தன, மைத்திரிபால சிறிசேன இன்றுவரை அந்தத் தொகையை செலுத்தவில்லை என்று தெரிவித்தார்.
அதன்படி, மைத்திரிபால சிறிசேனவுக்கு நீதிமன்றத்தில் ஆஜராகி, இந்த இழப்பீட்டை செலுத்தத் தவறியதற்காக தண்டிக்கப்படாமல் இருப்பதற்கான காரணத்தை முன்வைக்குமாறு கோரி நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
கடந்த 2005 ஆம் ஆண்டு ஜூன் 20 ஆம் திகதி, ராஜகிரிய பிரதேசத்தில் அமைந்துள்ள றோயல் பார்க் தொடர் மாடி வீடமைப்பு தொகுதியில் 19 வயதான இவோன் ஜோன்சன் என்ற வெளிநாட்டு யுவதி கொலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.








































