Tag: கைது
பெண்கள் கைது தங்க துப்பாக்கியுடன்
பெண்கள் கைது தங்க துப்பாக்கியுடன்
பெண்கள் கைது தங்க துப்பாக்கியுடன் ,தங்கத்தால் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் பெண்கள்கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.
ஹவ் லோக் அடுக்குமாடி குடியிருப்பில் டி 86வது துப்பாக்கி வைத்திருந்த சந்தேக நபரான பெண்ணும் மற்றொரு பெண்ணும் வல்லவத்தை போலீசாரல் கைது செய்யப்பட்டுள்ளனர்.
துப்பாக்கியுடன் இரு பெண்கள் கைது
சந்தேகம் நபர்கள் பத்தரப்புள்ள பத்து கொழும்பு 6 ஆகிய பகுதிகளை சேர்ந்த 40 மற்றும் 68 வயது ஆள் தெரிவிக்கப்பட்டுள்ளது
இவர்களுக்கு எப்படி இந்த துப்பாக்கி கிடைத்தது என்பது தொடர்பில் தற்போது போலீசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இலங்கையில் சமீப நாட்களாக துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் அதிகரித்து வருகின்ற நிலையில் தற்போது கைது செய்யப்பட்டுள்ள இந்த பெண்களும் அதில் உடந்தையாக உள்ளீர்களா என்ற சந்தேகத்தை எழுப்பி நிற்கிறது
தங்காமூலம் பூச பட்ட துப்பாக்கி
இவர்களிடம் தங்காமூலம் பூச பட்ட துப்பாக்கி வரும் நாட்களில் விசாரணைகள் பொழுதே இவர்கள் யார் என்பது எத்தனை படுகொலைகளை செய்து உள்ளார்கள் என்பது தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வளமையாக ஆண்களே துப்பாக்கிச் சூட்டி சம்பவங்களை நடத்தி வருவார் .
ஆனால் இம்முறை துப்பாக்கியுடன் பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளது தான் இங்கே மிகப்பெரும் விடயமாக மாறி உள்ளது.
லண்டனில் ஈரான் தூதுவர் கைது
லண்டனில் ஈரான் தூதுவர் கைது
லண்டனில் ஈரான் தூதுவர் கைது செய்யப்படதாக உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன .
லண்டனில் 3 ஈரான் நாட்டை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டதின் பின் புலத்தில் ஈரான் தூதரகத்தின் செயல்பாடுகள் இருப்பதாக ,குற்றம் சுமத்தப்படுகின்ற நிலையில் ஈரான் தூதர அதிகாரிக்கு பிரித்தானியா பிடிவிறாந்து விடுத்துள்ளது .
ஈரானில் தங்கி இருந்து பணிபுரிந்த பிரிட்டன் நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு ஈரான் சில நடவடிக்கையை மேற்கொண்டது.
அதற்கு பதிலடியாக தற்பொழுது பிரித்தானியா நடவடிக்கை முடுக்கி விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் ஐரோப்பிய சட்ட திட்டங்களை மீறி செயல்பட்ட தானா குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இவருடைய திட்டங்கள் வேறு வகையில் இருக்கலாம் என அஞ்சப்படுவதால் இந்த கைது நடவடிக்கை இடம் பெற்றுள்ளது.
ஈரானுக்கு பிரித்தானியாக்கும் இடையில் முருகல் நிலை உச்சம் பெற்று வரும் நிலையில் இது கைது மிகப்பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிட தக்கது .
- அமெரிக்க கருவூலச் செயலாளரும் பஹ்ரைன் நிதி அமைச்சரும் ஈரான் மீதான தடைகள் குறித்து விவாதித்தனர்

- ஓமான் ஈரான் பேச்சு அமெரிக்கா கொதிப்பு

- விசா சந்திப்புகளுக்கு டிரம்ப் நிர்வாகம் தற்காலிகத் தடை

- இஸ்லாமாபாத் மருத்துவமனை தீ விபத்தில் குறைந்தது 15 பச்சிளங்குழந்தைகள் பலி

- ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது

- ஈரான் மீதான போரின் மத்தியில் துருப்புக்கள் மீது ஏற்படும் பாதிப்புகள் குறித்து விசாரணை நடத்த அமெரிக்க செனட்டர்கள் கோரிக்கை

- அமெரிக்கா தடைகளை விரிவுபடுத்தியதை அடுத்து பதிலடி கொடுப்பதாக ஈரான் உறுதி

- பயங்கரவாதத்திற்கு நிதியுதவி அளிக்கும் நாடுகள் பட்டியலிலிருந்து சிரியாவை அமெரிக்கா நீக்கியது

- ஈரானிடம் அடிவாங்கி சுருண்ட அமெரிக்கா

- 30 ஆண்டுகளுக்குத் தேவையான வெடிமருந்துகளை இஸ்ரேல் பயன்படுத்தியுள்ளது

- ஹோர்முஸ் ஜலசந்தியைப் பயன்படுத்தும் கப்பல்களுக்குக் கட்டணம் விதிக்க ஈரானிய நாடாளுமன்றக் குழு ஒப்புதல்

- டிரம்பால் சரிந்த உலக பொருளாதாரம்

வவுனியாவில் மோட்டார்சைக்கிள் திருடன் கைது
வவுனியாவில் மோட்டார்சைக்கிள் திருடன் கைது
வவுனியாவில் மோட்டார்சைக்கிள் திருடன் கைது ,வவுனியாவில் மோட்டார் சைக்கிள் திருடன் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா காவல்துறையினர் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வவுனியா பகுதியில் ஐந்து மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபன் ஒருவரே ,தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இம்மாதம் வவுனியா வீர பெரியகுளம், மதவாச்சி ,வவுனியா ,முதலாம் குறுக்குத்தெரு ,மதவாச்சி அட்விரக்கட ,செட்டிகுளம் ,ஆகிய பகுதிகளில் மோட்டார் சைக்கிள் காணாமல் போயிருந்தது.
குறித்த திருட்டு சம்பவத்துடன் தொடர்பு கொண்ட நபரை தற்பொழுது மடக்கிப் படிக்கப்பட்டுள்ளார்.
தற் பொழுது சிதம்பர புறம் வீதி ஈரம் பெரியகுளம் பகுதியைச் சேர்ந்த 27 வயது வாலிபன் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளார்.
அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் பொழுது ஐந்து மோட்ட சைக்கிள்களும் முறையே, 5,802,99 5 லட்சம் மூன்று லட்சம் ஒன்பது லட்சத்து 70 ஆயிரம் விலைகளுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது .
குறித்த வாலிபன் தற்பொழுது கைது செய்யப்பட்ட நிலையில் ,போலீசார் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- சாலை விபத்துகளில் 7 வயது சிறுமி உட்பட மூவர் பலி

- கண்டி எசல மகா பெரஹெரா திருவிழா பொலிஸ் சிறப்புப் பாதுகாப்பு

- பல அதிவேக நெடுஞ்சாலை சந்திப்புகளில் கடும் போக்குவரத்து நெரிசல்

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- எல் நினோ மற்றும் லா நினோ நிகழ்வுகளுக்கு இலங்கை முன்கூட்டியே தயாராக இருக்க வேண்டும் – சஜித்

தமிழ் ரவுடிகள் கனடாவில் கைது
தமிழ் ரவுடிகள் கனடாவில் கைது
தமிழ் ரவுடிகள் கனடாவில் கைது ,டொராண்டோவில் கைது செய்யப்பட்ட இலங்கை கும்பல் தலைவரை நாடு கடத்த கனடா நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

2022 ஆம் ஆண்டு பாரிஸ் அருகே ஒரு போட்டி கும்பல் மீது நடந்த கொடிய தாக்குதலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் கடந்த ஆண்டு டொராண்டோவில் கைது செய்யப்பட்ட இலங்கை கும்பல் தலைவரை நாடு கடத்த ஒன்ராறியோ நீதிபதி அனுமதி அளித்துள்ளார்.
டொராண்டோ தெற்கு தடுப்பு மையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிரசன்னா நல்லலிகம், கனடாவின் நீதித்துறை
அமைச்சரின் ஒப்புதலுக்காக காத்திருக்கும் 30 நாட்களுக்குப் பிறகு பிரான்சிடம் சரணடையப்படுவார்.
வழக்கின் ஒரு சர்ச்சைக்குரிய பதிவின்படி, செப்டம்பர் 21, 2022 அன்று, நல்லலிங்கம் AAVA கும்பலின் நான்கு உறுப்பினர்களுக்கு ஆயுதங்களை
வழங்கி, போட்டி கும்பலின் “வாகனத்தை அடித்து நொறுக்க” பாரிஸின் வடக்கு புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள லா கோர்னியூவ் என்ற கம்யூனுக்குச் செல்லும்படி அறிவுறுத்தினார்.
நள்ளிரவுக்கு சற்று முன்பு, அந்தக் குழு இரண்டு கார்களில் லா கோர்னியூவுக்குச் சென்றது.
பாதுகாப்பு காட்சிகளில், நல்லலிங்கத்தின் கூட்டாளிகள் எனக் கூறப்படும் நான்கு பேர், ஒரு வாகனத்திலிருந்து வெளியேறி, வாள்கள், கத்திகள் மற்றும்
கத்திகளைப் பயன்படுத்தி போட்டியாளரின் காரையும், இறுதியில் அதில் இருந்தவர்களையும் தாக்குவது காணப்பட்டது.
தாக்குதல் நடத்தப்பட்டபோது, நல்லலிங்கம் என்று அவரது வழக்கறிஞர்களால் கூறப்படும் ஒருவர், இரண்டு வாகனங்களில் ஒன்றிற்குள் இருந்தார்.
சம்பவ இடத்திற்கு வந்தபோது, பிரெஞ்சு அதிகாரிகள் இரண்டு பாதிக்கப்பட்டவர்களை “வேதனையில்” கண்டனர். ஒருவர் பின்னர் காயங்களுக்கு ஆளானார்.
நல்லலிங்கம் மே 2024 இல் டொராண்டோவில் குடியேற்ற விசாரணைக்கு ஆஜராகத் தவறியதால் கைது செய்யப்பட்டார்.
சில வாரங்களுக்குள், நிலுவையில் உள்ள கைது வாரண்டில் அவரை நாடு கடத்த பிரான்ஸ் விண்ணப்பித்தது.
இவர்கள் சிறை பிடிக்க பட்ட செய்ய ;ல் தமிழ் ரவுடிகள் அடக்க அரசுக்குகள் மேற்கொள்ளும் ஆகிடும் முயற்சியை காண்பிக்கிறது .
- சாலை விபத்துகளில் 7 வயது சிறுமி உட்பட மூவர் பலி

- கண்டி எசல மகா பெரஹெரா திருவிழா பொலிஸ் சிறப்புப் பாதுகாப்பு

- பல அதிவேக நெடுஞ்சாலை சந்திப்புகளில் கடும் போக்குவரத்து நெரிசல்

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- எல் நினோ மற்றும் லா நினோ நிகழ்வுகளுக்கு இலங்கை முன்கூட்டியே தயாராக இருக்க வேண்டும் – சஜித்

- பாதாள உலக பிரமுகர் ‘பஸ் லலித்’ துபாயிலிருந்து கொண்டுவரப்பட்டார்

- டெத் வேலியில் சேற்றில் கார் சிக்கியதால் பிரெஞ்சு சுற்றுலாப் பயணி உயிரிழந்தார்

- ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் வழக்கில் பாதுகாப்புத் தரப்பு வாதம் நிறைவடைந்தது

- பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) ரூ. 834,000 மதிப்புள்ள சிகரெட்டுகளுடன் இந்தியர்கள் கைது

- மோசமான வானிலையால் 16,600க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்

- வணக்கத்துக்குரிய ஹேமரத்ன தேரர் வழக்கில் நீதிமன்றத்தில் தடயவியல் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது

- பெட்டா பேருந்து நிலையத்தில் பை திருடனை விரைவாகக் கைது செய்ய சிசிடிவி உதவியது

இந்தியாவிலிருந்து இலங்கைள் வந்தவர்கள் கைது
இந்தியாவிலிருந்து இலங்கைள் வந்தவர்கள் கைது
இந்தியாவிலிருந்து இலங்கைள் வந்தவர்கள் கைது ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை அறிவித்துள்ளது.
இந்தியாவிலிருந்து இலங்கைக்குள் சட்ட விரோதமான முறையில் நுளைத்த நாலு இலங்கையர் உள்ளிட்ட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வல்வெட்டித்துறை காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இவர்கள் கடல் வழியாக நுழைய முற்பட்ட பொழுது இந்த கைது இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை மற்றும் மன்னர் மாவட்டங்களைச் சேர்ந்த ஆண் பெண் மற்றும் இரு சிறு சிறுமிகள் என ,நால்வர் இலங்கையில் சட்ட விரோதமான முறையில் இந்தியாவிற்கு சென்ற நிலையில் ,இந்திய கடலோர காவல்துறையால் கைது செய்யப்பட்டு மண்டப முகாமில் தடுத்து வைக்கப்பட்டு இருந்தனர்.
இலங்கையில் குறித்த நால்வரும் இந்தியாவுக்கு சட்ட விவரமுறையில் யில்கடல்வழியாக வழியாக திரும்பி வந்துள்ளனர்.
அவ்வாறு வந்த பொழுது இவர்கள் நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை காவல் படைகள் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் இருந்து கடல் வழியாக வல்வெட்டித்துறையை நோக்கி வந்தவர்களே இப்பொழுது கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
கைது செய்யப்பட்டவர்கள் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்ட வருகின்றனர்.
நீதிமன்ற விசாரணையின் பின்னர் அவர்கள் விடுதலை செய்யப்படலாம் அல்லது சிறையில் வைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடல் வழியாக இந்தியாவில் இருந்து இலங்கைக்கு .இலங்கை இருந்து இந்தியாவுக்கும் செல்கின்ற மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
- சாலை விபத்துகளில் 7 வயது சிறுமி உட்பட மூவர் பலி

- கண்டி எசல மகா பெரஹெரா திருவிழா பொலிஸ் சிறப்புப் பாதுகாப்பு

- பல அதிவேக நெடுஞ்சாலை சந்திப்புகளில் கடும் போக்குவரத்து நெரிசல்

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- எல் நினோ மற்றும் லா நினோ நிகழ்வுகளுக்கு இலங்கை முன்கூட்டியே தயாராக இருக்க வேண்டும் – சஜித்

- பாதாள உலக பிரமுகர் ‘பஸ் லலித்’ துபாயிலிருந்து கொண்டுவரப்பட்டார்

- டெத் வேலியில் சேற்றில் கார் சிக்கியதால் பிரெஞ்சு சுற்றுலாப் பயணி உயிரிழந்தார்

- ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் வழக்கில் பாதுகாப்புத் தரப்பு வாதம் நிறைவடைந்தது

- பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) ரூ. 834,000 மதிப்புள்ள சிகரெட்டுகளுடன் இந்தியர்கள் கைது

- மோசமான வானிலையால் 16,600க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்

- வணக்கத்துக்குரிய ஹேமரத்ன தேரர் வழக்கில் நீதிமன்றத்தில் தடயவியல் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது

- பெட்டா பேருந்து நிலையத்தில் பை திருடனை விரைவாகக் கைது செய்ய சிசிடிவி உதவியது

ஆசிரியர் கைது மாணவி துஷ்பிரயோகம்
ஆசிரியர் கைது மாணவி துஷ்பிரயோகம்
ஆசிரியர் கைது மாணவி துஷ்பிரயோகம் என மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளதாக இலங்கை செய்திகள் தெரிவிக்கின்றன .
தெவி நிவார பகுதியில் உள்ள பாடசாலை ஆங்கில ஆசிரியர் ஒருவர், மாணவி ஒருவரை பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளாக்கினார் என்கின்றகுற்ற சாட்டின் அடிப்படையில் ,தற்போது சிறுவர் மற்றும் மகளிர் பணியாகத்தால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சரளமாக ஆங்கிலம் பேசக்கூடிய இந்த ஆசிரியர். அங்கு கல்வி கற்ற ஒரு மாணவியுடன் நெருங்கி பழகினார் என்கின்ற அடிப்படையில், இந்த கைது இடம்பெற்றுள்ளது.
சமீப காலங்களாக பாடசாலைகளில் ஆசிரியர்கள் மாணவர்களுடன் ,தவறான நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதான குற்றச்சாட்டுக்கள் ,அதிகரித்து வரும் இடையில் இந்த கைது இடம் பெற்றுள்ளது.
இந்த கைதின் பின்புலத்தில் இது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இது ஆசிரியர்களுக்கு எதிரான திட்டமிடப்பட்ட சதியா .அல்லது உண்மையில் இந்த குற்றச்சாட்டுக்கள் இடம்பெறுகின்றனவா .என்பது தொடர்பாக தெரிய வரவில்லை.
தொடர்ந்தும் அதிகரித்து வரும் ,இவ்வாறான குற்றச்சாட்டுகள் சம்பவங்களினால் பெற்றவர்கள் அச்ச நிலையில் காணப்படுகின்றனர் .
இதனை தடுப்பதற்கு கல்வி அமைச்சு சீரான ஒரு நடவடிக்கை மேற்கொண்டால் மட்டும்தான் ,இவ்வாறு நடவடிக்கையை தடுக்க முடியும்.
இலங்கையில் மாணவர்களை நெறிப்படுத்த வேண்டுமாக இருந்தால் ,சீரிய வழியில் செல்ல வேண்டுமாக இருந்தால் ,கல்வி அமைச்சு தகுந்த நெருக்கமான ,நடவடிக்கை மேற்கொண்டால் மட்டும்தான், இவ்விதமான சம்பவங்கள் தடுக்கப்படும்.
இவ்வாறான குற்றச்சாட்டுக்கு உள்ளாக்கப்படுபவர்கள், ஆசிரியர் பணியிலிருந்து நீக்கப்பட்டு ,அவர்கள் அரச உத்தியோகத்தில் ஈடுபட முடியாது என்ற சட்டம் ,அமல்படுத்தப்பட்டால் மட்டும்தான் இதனை தடுக்க முடியும்.
ஆனால் கல்வி அமைச்சு ஆளு அரசுகள் இதனை செய்யுமா என்பதுதான் இன்றைய கேள்வியாக உள்ளது .
பிரபல நடிகை கைது
நடிகை கைது
பிரபல நடிகை கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
இலங்கை காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற விசேட தகவலை அடுத்து இலங்கையின் பிரபல நடிகையாக இருக்கக்கூடிய, செமினி இட மா லோகடா என்கின்ற நடிகை தற்பொழுது கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவருக்கு எதிராக ஏழு பிடிவிறாந்துகள் விடுக்கப்பட்ட நிலையில் ,இந்த நடிகை கைது செய்யப்பட்டு, தற்பொழுது தங்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடிகை சட்டவிரோத செயல்பாடுகளில் ஈடுபட்டதாக தெரிவித்தும் ,இவர் மீது விதிக்கப்பட்டிருந்த 7 பிடிவிறாந்துகளும் தற்போது அமல்படுத்தப்பட்டு ,அந்த வழக்குகளின் அடிப்படையிலேயே, தற்போது கைது செய்யப்பட்டு நீதிமன்றில் பாரப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசியல்வாதிகளுடன் நெருங்கிய தொடர்புகளை கொண்டு பாரிய குற்ற நடவடிக்கையில் நடிகை ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முழுமையான விசாரணைகள் முடிவடைந்து, இவர் விடுதலை செய்யப்படுகின்ற பொழுதுதான் ,இவர் என்ன செய்தார் என்ற விடயம் தெரிய வரும் என தெரிவிக்கப்படுகிறது.
இந்த நடிகை கைது செய்யப்பட்டதை அடுத்து ,அவரது ரசிகர்கள் கொந்தளிப்பில் உறைந்துள்ளதாக இலங்கை உள்ளூர் செய்திகள் தெரிவிக்கின்றன.
- சாலை விபத்துகளில் 7 வயது சிறுமி உட்பட மூவர் பலி

- கண்டி எசல மகா பெரஹெரா திருவிழா பொலிஸ் சிறப்புப் பாதுகாப்பு

- பல அதிவேக நெடுஞ்சாலை சந்திப்புகளில் கடும் போக்குவரத்து நெரிசல்

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- எல் நினோ மற்றும் லா நினோ நிகழ்வுகளுக்கு இலங்கை முன்கூட்டியே தயாராக இருக்க வேண்டும் – சஜித்

- பாதாள உலக பிரமுகர் ‘பஸ் லலித்’ துபாயிலிருந்து கொண்டுவரப்பட்டார்

- டெத் வேலியில் சேற்றில் கார் சிக்கியதால் பிரெஞ்சு சுற்றுலாப் பயணி உயிரிழந்தார்

- ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் வழக்கில் பாதுகாப்புத் தரப்பு வாதம் நிறைவடைந்தது

- பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) ரூ. 834,000 மதிப்புள்ள சிகரெட்டுகளுடன் இந்தியர்கள் கைது

- மோசமான வானிலையால் 16,600க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்

மாணவி கடத்தல் கத்தி முனையில்
மாணவி கடத்தல் கத்தி முனையில்
மாணவி கடத்தல் கத்தி முனையில் கத்தி முனையில் தாயாருடன் சென்ற மாணவியை கடத்த முயற்சித்த நபர் கைது செய்யபப்ட்டுள்ளார்.
அனுர ஆட்சியில் கடத்தல், கொலை கொள்ளை, ஊழல் துப்பாக்கிச் சூடு, கைதுகள் என தொடர்ச்சியாக அதிகரித்த வண்ணமே காணப்படுகின்றது.
இந்நிலையில், கொழும்பு – கறுவாத்தோட்டம் மல்வீதி பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றுக்கு முன்னால் காரில் இருந்த தாயையும் மாணவியையும் கத்தி முனையில் மிரட்டி,
மாணவியை கடத்திச் செல்ல முயன்ற சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் தெரியவருவதாவது,
சந்தேக நபர் கடந்த 02 ஆம் திகதி அன்று கறுவாத்தோட்டம் மல்வீதி பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றுக்கு முன்னால் நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றுக்குள் அத்துமீறி நுழைந்துள்ளார்.
பின்னர் சந்தேக நபர் தாயையும் மாணவியையும் கத்தி முனையில் மிரட்டி காரை செலுத்திச் செல்லுமாறு தாயிடம் கூறியுள்ளார்.
இதன்போது தாயும் மாணவியும் காரில் இருந்து இறங்கி சத்தமிட்டு பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர்.
இதனையடுத்து சந்தேக நபர் கார் ஒன்றில் ஏறி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
இது தொடர்பில் கறுவாத்தோட்டம் பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில்,
சந்தேக நபர் கொழும்பு கொலன்னாவை பிரதேசத்தில் வைத்து புதன்கிழமை (07) கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் வியாழக்கிழமை (08) நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் அவரை 72 மணிநேரம் பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்ய கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதனையடுத்து சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், கப்பம் கோரும் நோக்கத்தில் மாணவியை கடத்திச் செல்ல முயன்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
மாணவியை கடத்துவதற்காக சந்தேக நபர் நீண்ட நாட்களாக திட்டமிட்டுள்ளதாகவும் பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
34பேர் காவல்துறையால் கைது
34பேர் காவல்துறையால் கைது
34பேர் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை காவல்துறை இப்படி அறிவித்துள்ளது.
இலங்கையில் சட்டவிரோதமாக தங்கி இருந்து பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த 34 பேரையே தாங்கள் கைது செய்யப்படுவதாக குடிவரவு குடி அகழ்வு அமைச்சு அறிவித்துள்ளது.
இவ்வாறு இலங்கை தங்கி இருந்தவர்கள் 19 முதல் 54 வயதுக்கு உட்பட்ட பங்களாதேஷ் ஆண்கள் குழுவில் கண்டரிக்கப்பட்டுள்ளது.
விசா காலாவதியானா நிலையில் அது கடந்து நாட்டில் தங்கி இருந்தார்கள் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே ,இந்த பங்களாதேஷ் பிரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை குடிவரவு அமைச்சர் அறிவித்துள்ளது.
இவர்கள் எதற்காக இலங்கைக்குள் வாழ்ந்து இருந்தார்கள் இந்த விடயம் தெரிவிக்கவில்லை.
கைது செய்யப்பட்டவர்கள் காவல்துறை விசாரணையின் பின்னர் தற்பொழுது நீதிமன்றில் பாரப்படுத்தப்பட்டுள்ளனர்.
இலங்கைக்கு வருகின்ற உல்லாச பயணிகள் பலர் இவ்வாறு விசாக்கள் கால அவதியான நிலையிலும் அங்கு தங்கி வருவதாக போலீசார் இப்படி தெரிவிக்கின்றனர்.
துறவியின் உடையில் நுழைய முயன்ற மாணவன் கைது
துறவியின் உடையில் நுழைய முயன்ற மாணவன் கைது
துறவியின் உடையில் நுழைய முயன்ற மாணவன் கைது ,பௌத்த துறவியின் உடையில் ஸ்ரீ தலதா மாளிகைக்குள்நுழைய முயன்ற பள்ளி மாணவன் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர் கம்பஹா, கிரல்லவெல பகுதியைச் சேர்ந்த18 வயதுடைய பாடசாலை மாணவன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
புத்த துறவிகளுக்கான ஒதுக்கப்பட்ட வரிசை வழியாகதலதா மாளிகைக்குள் நுழைய முயன்ற போது அவர் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் குறித்துகண்டி பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேற்குக் கரையில் இஸ்ரேலியப் படைகள்50பேர் கைது
மேற்குக் கரையில் இஸ்ரேலியப் படைகள்50பேர் கைது
மேற்குக் கரையில் இஸ்ரேலியப் படைகள்50பேர் கைது ,மேற்குக் கரையில் இஸ்ரேலியப் படைகள் பெரிய அளவில் கைது நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் கடந்த 24 மணி நேரத்தில் சிறார், பெண்கள் மற்றும் முன்னர் விடுவிக்கப்பட்ட கைதிகள் உட்பட குறைந்தது 50 பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலியப் படைகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
ரமல்லாவின் வடக்கே உள்ள கோபார் நகரில் கைது நடவடிக்கை குவிந்ததாக அல் ஜசீராவிடம் வட்டாரங்கள் தெரிவித்தன, அங்கு குறைந்தது 24 பேர் கைது செய்யப்பட்டனர்.
இவர்களில் சுமார் 16 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர், இதில் முன்னாள் கைதி ஹனான் பர்கோட்டி மற்றும் பிற முன்னாள் கைதிகள் அடங்குவர்.
பிப்ரவரி மாத இறுதியில் விடுவிக்கப்பட்டு எகிப்துக்கு நாடு கடத்தப்பட்ட இஸ்ரேலிய சிறையில் மிக நீண்ட காலம் பணியாற்றிய பாலஸ்தீனிய
கைதியான நெய்ல் பர்கோட்டியின் வீடு இராணுவ முகாம்களாகவும் டஜன் கணக்கான பாலஸ்தீனியர்களுக்கான விசாரணை மையமாகவும் மாற்றப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.
ஹெப்ரானுக்கு தெற்கே உள்ள அத் தஹிரியா நகரத்திலும் இஸ்ரேலியப் படைகள் இன்று விடியற்காலையில் தாக்குதல் நடத்தி, பாலஸ்தீனிய
வீடுகளைச் சோதனையிட்டு, நகராட்சி மன்றத்தின் மூன்று உறுப்பினர்கள் உட்பட பத்து பாலஸ்தீனியர்களைக் கைது செய்தன.
மற்ற இடங்களில், அஸ்ஸுன் மற்றும் பெத்லகேம் நகரங்களிலும், நப்லஸுக்கு கிழக்கே உள்ள பெய்ட் ஃபுரிக் நகரத்திலும் கைதுகள் நடந்தன.
இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை, இஸ்ரேல் சுமார் 9,792 பாலஸ்தீனியர்களை சிறையில் அடைத்துள்ளது, அவர்களில் 3,498 பேர் குற்றச்சாட்டுகள் இல்லாமல் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று அறிக்கை மேலும் கூறியது
மாணவன் அடித்துக் கொலை 11 பேர் கைது
மாணவன் அடித்துக் கொலை 11 பேர் கைது
மாணவன் அடித்துக் கொலை 11 பேர் கைது ,வெலகெதர பொலிஸ் பிரிவில் சக பாடசாலை மாணவனின் மரணம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பதினொரு இளைஞர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர், சில
வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சிறார் தடுப்பு மையங்களுக்கு அனுப்பப்பட்டதுடன், மேலும் இருவர் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
ஏப்ரல் 16 ஆம் திகதி தனிப்பட்ட தகராறு காரணமாக சக பாடசாலை மாணவனை இளைஞர்கள் குழு ஒன்று உடல் ரீதியாக தாக்கியது.
பலத்த காயமடைந்த சிறுவன் குருநாகல் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஏப்ரல் 22 ஆம் திகதி உயிரிழந்தார்.
தாக்குதல் நடந்த நாளில் கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, 18 வயதுக்குட்பட்டவர்கள் என்பதால்,
சிறார் தடுப்பு மையங்களுக்கு அனுப்பப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மீதமுள்ள எட்டு சந்தேக நபர்களும் நேற்று பிலேஸ்ச நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர், அதன் பின் இரண்டு சந்தேக நபர்கள் ஏப்ரல் 29 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
மீதமுள்ள ஆறு சந்தேக நபர்கள் வயது குறைந்தவர்கள் என்பதால், அவர்களை சிறார் தடுப்பு மையங்களுக்கு அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டது.
எட்டு சந்தேக நபர்களும் ஏப்ரல் 29 ஆம் திகதி அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தப்பட உள்ளனர். மாவத்கம பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சுமார் 8 கிலோ கிராம் தங்கத்துடன் இருவர் கைது
சுமார் 8 கிலோ கிராம் தங்கத்துடன் இருவர் கைது
சுமார் 8 கிலோ கிராம் தங்கத்துடன் இருவர் கைது ,தலைமன்னார் – உறுமலை கடற்கரைப் பகுதியில் கடல் வழியாகச் சட்டவிரோதமாகக் கடத்தப்படவிருந்த தங்கத்துடன் இரண்டு சந்தேக நபர்களைக் கடற்படை கைது செய்துள்ளது.
இதன்போது சட்டவிரோதமாக இந்தியாவுக்குக் கொண்டு செல்லத் தயாராக இருந்ததாகச் சந்தேகிக்கப்படும் 8 கிலோ 960 கிராம் தங்கம் மீட்கப்பட்டுள்ளது.
கைதான சந்தேக நபர்கள் இருவரும் தலைமன்னார், உறுமலை பகுதியைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட தங்கம் மற்றும் படகுடன் சந்தேக நபர்கள் இருவரும் காங்கேசன்துறை சுங்க அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆயுதங்களுடன் பாதாள குழுவினர் கைது
ஆயுதங்களுடன் பாதாள குழுவினர் கைது
ஆயுதங்களுடன் பாதாள குழுவினர் கைது ,ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழுத் தலைவரான கெஹல்பத்தர பத்மேவுடன் தொடர்புடைய ஏழு சந்தேக நபர்களை விசேட அதிரடிப் படை (STF) கைது செய்துள்ளதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
நேற்று ஏப்ரல் 19 ஆம் திகதி கம்பஹாவில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது இந்தக் கைதுகள் இடம்பெற்றதுடன் அப்போது, முதலில் இரண்டு துப்பாக்கிகளுடன் இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
அதே கும்பலுடன் தொடர்புடைய மேலும் ஐந்து சந்தேக நபர்களை விசாரணையின் போது சிறப்புப் படையினர் கைது செய்தனர்.
விசாரணையில், அந்தக் குழு “கம்பஹா ஒஸ்மான்” என்று அடையாளம் காணப்பட்ட ஒருவரைக் கொல்லத் திட்டமிட்டிருந்தது தெரியவந்தது.
சந்தேக நபர்கள் தற்போது பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் குறித்து மேலும் விசாரணைகள் நடந்து வருகின்றன.
பிள்ளையானின் சாரதி அதிரடியாக கைது
பிள்ளையானின் சாரதி அதிரடியாக கைது
பிள்ளையானின் சாரதி அதிரடியாக கைது முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையானின் சாரதியை குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் இன்று கைது செய்துள்ளனர்.
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்டமை
தொடர்பான விசாரணைகளுக்காக முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் கடந்த 8 ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பிலேயே பிள்ளையானின் சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் தற்போது குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் 90 நாட்கள் தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் விசாரிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஆயுதங்கள் மீட்பு நபர் கைது
ஆயுதங்கள் மீட்பு நபர் கைது
ஆயுதங்கள் மீட்பு நபர் கைது ,பொலிஸ் காவலில் உள்ள சந்தேகநபர் தெரிவித்த தகவலின்படி, T56 துப்பாக்கிக்குப் பயன்படுத்தப்படும் 50 தோட்டாக்களையும், ஒரு கூர்மையான ஆயுதத்தையும் அதுருகிரிய பொலிஸார் மீட்டுள்ளனர்.
கடந்த 12 ஆம் திகதி அதுருகிரிய பொலிஸ் அதிகாரிகள் குழுவால் குறித்த சந்தேகநபர் 11 கிராம் 100 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டார்.
பின்னர் சந்தேகநபர் தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் தடுத்து வைத்து விசாரணைக்கப்பட்ட போது இந்த வெடிமருந்துகள் மற்றும் கூர்மையான ஆயுதங்கள் நேற்று (17) மீட்கப்பட்டன.
சந்தேக நபர் அதுருகிரிய பகுதியைச் சேர்ந்த 25 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் அதுருகிரிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
பணம் நகைகளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது
பணம் நகைகளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது
பணம் நகைகளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது ,தெவுந்தர – ஹும்மன வீதியில் மூன்றரை கோடி ரூபாய் பணம் மற்றும் தங்க வளையல்கள், காதணிகள் உட்பட 150 கிராம் தங்கம் என்பவற்றுடன் மேல் மாகாண பொலிஸ்
புலனாய்வுத் தலைமையகத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரும் மேலும் ஐவரும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் தெரிவித்தனர்.
சந்தேகத்திற்கிடமான வாகனத்தை நிறுத்தி சோதனை செய்யும் போது வாகனத்தின் பின்புறம் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இவை கைப்பற்றப்பட்டுள்ளன.
தெவுந்தர பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாமைச் சேர்ந்த அதிகாரிகள், ஹும்மான வீதியில் வேகமாகச் சென்ற வாகனத்தை நிறுத்துமாறு உத்தரவிட்டுள்ளனர்.
இந்த சோதனையின் போது, சந்தேகத்திற்குரிய ஐந்து பேர் பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளால் பணம் மற்றும் தங்க ஆபரணங்களுடன் கைது செய்யப்பட்டனர்.
மேல் மாகாண புலனாய்வுத் தலைமையகத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே காரை ஓட்டிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
விசாரணையின் போது பொலிஸ் உத்தியோகத்தர் வழங்கிய வாக்குமூலங்களில் முரண்பாடுகள் காணப்படுவதாக விசேட அதிரடிப்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். போதைப்பொருள் விற்பனையில் கிடைத்த பணத்தை பகிர இவர்கள் எடுத்துச் சென்றார்களா என்பது குறித்து விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன
நகை அணிந்திருந்த பெண்கள் இருவர் கைது
நகை அணிந்திருந்த பெண்கள் இருவர் கைது
நகை அணிந்திருந்த பெண்கள் இருவர் கைது ,22 கரட்டுக்கு மேல் நகை அணிந்திருந்த பெண்கள் இருவர் கைது
22 கரட்டுக்கு மேல் செய்யப்பட்ட நகைகளை சட்டவிரோதமாக நாட்டுக்குள் எடுத்துச் செல்ல முயன்றனர் என்ற குற்றச்சாட்டின் கீழ் கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளால் பெண்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் ரூ. 28 மில்லியன், 85 ஆயிரத்து 820 ரூபா, பெறுமதியான நகைகளை உடலில் அணிந்துகொண்டு, கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில் உள்ள ‘கிரீன் சேனல்’ வழியாக நாட்டை விட்டு வெளியேற முயன்றனர்,
அவர்கள் குருநாகல் பகுதியைச் சேர்ந்த 29 மற்றும் 35 வயதுடைய இரண்டு பெண்கள், சவுதி அரேபியாவில் துப்புரவுப் பணியாளர்களாகப் பணிபுரிந்தனர்.
சுங்கக் கட்டளைச் சட்டத்தின்படி, 22 காரட்டுகளுக்கு மேல் மதிப்புள்ள நகைகளை நாட்டிற்குள் கொண்டு வருவது தடைசெய்யப்பட்டுள்ளது, மேலும் இந்த நபர்கள் தங்கள் சேவையிலிருந்து திரும்பும்போது வணிக நோக்கங்களுக்காக இந்த நகைகளை கொண்டு வந்ததாக சுங்க விசாரணைகள் தெரிவிக்கின்றன.
அவர்கள் சவுதி அரேபியாவின் ஜெட்டாவிலிருந்து அபுதாபிக்கு வந்திருந்தனர், அங்கிருந்து, எதிஹாட் ஏர்வேஸ் விமானம் EY-396 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்திருந்தனர்.
இருவரும் தங்கள் உடலில் 932 கிராம் எடையுள்ள நெக்லஸ்கள் மற்றும் வளையல்களை அணிந்திருந்தனர்.
பின்னர், இந்த விவகாரம் குறித்து முறையான சுங்க விசாரணை நடத்தப்பட்டு, நகைகள் பறிமுதல் செய்யப்பட்டு, அவர்களுக்கு அபராதம் செலுத்த உத்தரவிடப்பட்டது.
2 கோடி ரூபாயை கடத்த முயன்றவர் கைது
2 கோடி ரூபாயை கடத்த முயன்றவர் கைது
2 கோடி ரூபாயை கடத்த முயன்றவர் கைது ,2 கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு நாணய தாள்களை சட்டவிரோதமாக கொண்டு செல்ல முயன்ற பயணி ஒருவர் கைது செய்யப்பட்டார்.
சுங்கத்திடம் அறிவிக்காமல் சிங்கப்பூருக்கு கொண்டு சென்ற நபரை, கட்டுநாயக்க விமான நிலையத்தின் புறப்படும் முனையத்தில் சுங்க அதிகாரிகள் குழு கைது செய்தது.
அவர் நெகம்போவின் கடோல்கெலே பகுதியில் வசிக்கும் 52 வயது தொழிலதிபர்.
அவர் கடந்த வெள்ளி கிழமை அதிகாலை 01.07 மணிக்கு சிங்கப்பூருக்குப் புறப்படவிருந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் UL-308 இல் ஏறுவதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்திருந்தார்.
அவர் தனது சூட்கேஸில் வெளிநாட்டு நாணயங்களை மறைத்து வைத்திருப்பதை விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் கவனித்ததை அடுத்து, விமான நிலைய சுங்க அதிகாரிகளுக்கு தகவல் அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
பின்னர் சுங்க அதிகாரிகள் அவரைக் கைது செய்து, அவரது பொதிகளை ஆய்வு செய்தபோது, 41,000 யூரோக்கள், 40,000 கனடிய டொலர்கள், 15,000 சுவிஸ் பிராங்குகள், 3,500 சவுதி ரியால் மற்றும் 4 மில்லியன் இலங்கை ரூபாய்களைக் கண்டுபிடித்தனர்.
பின்னர், சுங்கத்துறையின் மூத்த துணை இயக்குநர் துஷார விஜேசேனவால் முறையான சுங்க விசாரணை நடத்தப்பட்டது, இதன் போது பயணி தன்னுடன் எடுத்துச் செல்ல முயன்ற அனைத்து பணமும் பறிமுதல் செய்யப்பட்டு, அவருக்கு ரூ. 31,76,800. அபராதமும் செலுத்த அவருக்கு உத்தரவிடப்பட்டது. பயணி அபராதம் செலுத்த நடவடிக்கை எடுத்திருந்தார்.
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டதற்காக 43 நபர்கள் கைது
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டதற்காக 43 நபர்கள் கைது
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டதற்காக 43 நபர்கள் கைது ,2025 மார்ச் 25 முதல் ஏப்ரல் 07 வரை மீன்வள ஆய்வாளர்களின் உதவியுடன் பல்வேறு சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 43 நபர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
பாலமீன்மடு, வான்கலை, மண்டைதீவு, இறக்கண்டி, உள்ளாங்காளி, வாழச்சனை, ஊரணி குளம், ஒலுதுடை, கடைக்காடு, சுண்டிகுளம், நாவக்காடு
குளம், வவுணதீவு குளம் மற்றும் வாழைப்பாடு கடலோர மற்றும் கடற்கரைப் பகுதிகளில் இந்த கைதுகள் மேற்கொள்ளப்பட்டதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
சட்டவிரோத இரவு நேர டைவிங், கடல் வெள்ளரிகளை சட்டவிரோதமாக அறுவடை செய்தல், வெடிபொருட்களைப் பயன்படுத்தி மீன்பிடித்தல் மற்றும்
அங்கீகரிக்கப்படாத மீன்பிடி வலைகளைப் பயன்படுத்துதல் போன்ற நடைமுறைகளில் ஈடுபட்ட நபர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், இந்த நடவடிக்கைகளில் 45 அங்கீகரிக்கப்படாத மீன்பிடி வலைகள், 5005 கடல் வெள்ளரிகள், 13 டிங்கி படகுகள், வெடிபொருட்கள் மற்றும் மீன்பிடி உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த தனித்தனி நடவடிக்கைகளில் கைது செய்யப்பட்ட மீன்பிடி படகுகள், டைவிங் மற்றும் மீன்பிடி உபகரணங்களுடன் சந்தேக நபர்களும் மாமுனை, மன்னார், யாழ்ப்பாணம், திருகோணமலை, வாழைச்சேனை, வவுணதீவு
மற்றும் கிளிநொச்சி மீன்வள ஆய்வாளர்களிடம் சட்ட நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டதாக கடற்படை மேலும் தெரிவித்துள்ளது.








































