தோட்டாவுடன் சிப்பாய் கைது
Posted in இலங்கை செய்திகள்

தோட்டாவுடன் சிப்பாய் கைது

தோட்டாவுடன் சிப்பாய் கைது

தோட்டாவுடன் சிப்பாய் கைது ,தனது பையில் துப்பாக்கி தோட்டாவை மறைத்து வைத்துக் கொண்டு ஜனாதிபதி செயலகத்திற்குள் நுழைய முயன்ற இராணுவ சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இராணுவ சிப்பாய் , சமிக்ஞை படையணியில் இணைக்கப்பட்ட ஒரு சிப்பாய் என பொலிஸார் கூறுகின்றனர்.

சந்தேக நபரான சிப்பாய், ஜனாதிபதி செயலகத்தில் கடமையாற்றுகின்ற நிலையில் கடந்த 20 ஆம் திகதி, அவர் விடுமுறை பெற்று லுனுகம்வெஹெரவில் உள்ள தனது இல்லத்திற்கு சென்று திரும்பி வந்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தின் பொது நுழைவாயிலுக்கு அருகில் வைத்து ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவு அதிகாரிகளால் குறித்த சிப்பாயின் பையை ஸ்கேனர் பயன்படுத்தி சோதனையிட்ட போது பையில் T-56 துப்பாக்கி தோட்டா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

30 தோட்டாக்களுடன் காணாமல் போன மெகசின் கண்டுபிடிப்பு
Posted in இலங்கை செய்திகள்

30 தோட்டாக்களுடன் காணாமல் போன மெகசின் கண்டுபிடிப்பு

30 தோட்டாக்களுடன் காணாமல் போன மெகசின் கண்டுபிடிப்பு

காணாமல் போயிருந்த இராணுவ பொலிஸ் படைக்கு சொந்தமான T-56 துப்பாக்கியின் மெகசீன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இராணுவ ஊடகப் பிரிவு அறிக்கையொன்றை வௌியிட்டு இதனைத் தெரிவித்துள்ளது.

பொல்ஹேன்கொட இராணுவ பொலிஸ் படை முகாமில் இருந்த 30 தோட்டாக்களுடன் கூடிய ரக T-56 ரக மெகசீன் இராணுவ பொலிஸ் படை முகாமின் நீர் வடியும் வடிகாலில் இருந்து கண்டெடுக்கப்பட்டது.

30 தோட்டாக்களுடன் காணாமல் போன மெகசின் கண்டுபிடிப்பு

இன்று (09) மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதலில், சிவில் பணியாளர்கள் பயன்படுத்தும் சுகாதார அமைப்புக்கு அருகிலுள்ள வடிகாலில் இருந்து, காணாமல் போன குறித்த மெகசின் 30 தோட்டாக்களுடன் கண்டுபிடிக்கப்பட்டது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை இராணுவ பொலிஸார் மற்றும் கிருலப்பனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.