தோட்டாவுடன் சிப்பாய் கைது

தோட்டாவுடன் சிப்பாய் கைது
Spread the love

தோட்டாவுடன் சிப்பாய் கைது

தோட்டாவுடன் சிப்பாய் கைது ,தனது பையில் துப்பாக்கி தோட்டாவை மறைத்து வைத்துக் கொண்டு ஜனாதிபதி செயலகத்திற்குள் நுழைய முயன்ற இராணுவ சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இராணுவ சிப்பாய் , சமிக்ஞை படையணியில் இணைக்கப்பட்ட ஒரு சிப்பாய் என பொலிஸார் கூறுகின்றனர்.

சந்தேக நபரான சிப்பாய், ஜனாதிபதி செயலகத்தில் கடமையாற்றுகின்ற நிலையில் கடந்த 20 ஆம் திகதி, அவர் விடுமுறை பெற்று லுனுகம்வெஹெரவில் உள்ள தனது இல்லத்திற்கு சென்று திரும்பி வந்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தின் பொது நுழைவாயிலுக்கு அருகில் வைத்து ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவு அதிகாரிகளால் குறித்த சிப்பாயின் பையை ஸ்கேனர் பயன்படுத்தி சோதனையிட்ட போது பையில் T-56 துப்பாக்கி தோட்டா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.