Posted in இலங்கை செய்திகள்

கிளிநொச்சியில் சிக்கிய 2,685 கிலோ கஞ்சா

கிளிநொச்சியில் சிக்கிய 2,685 கிலோ கஞ்சா

கிளிநொச்சி பகுதியில் போலீசார் மேற்கொண்ட திடீர்

சுற்றிவளைப்பின் பொழுது மறைத்து வைக்க பட்டிருந்த சுமார் 2,685 கிலோ கஞ்சா மீட்க பட்டுள்ளது

போலீசாருக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலை அடுத்து மேற்படி கைது இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்க படுகிறது

Posted in இலங்கை செய்திகள்

கிளிநொச்சி வீடுகளை உடைத்தெறிந்த புயல் – photo in

கிளிநொச்சி வீடுகளை உடைத்தெறிந்த புயல் – photo in

கிளிநொச்சி மாவட்டத்தில் நேற்றைய தினம் (06.05.2020) காற்றுடனான மழையின் காரணமாக வீடு ஒன்று முழுமையாகவும்

10 வீடுகள் பகுதியாகவும் சேதமடைந்ததுடன் 2 சிறிய தொழில் முயற்சி நிலையங்களும் பாதிக்கப்பட்டன.

    அத்துடன் பயிர்களும் அழிவிற்குள்ளாகியுள்ளன.தேசிய அனர்த்த நிவாரண சேவை நிலையத்தின் ஊடாக

    பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணங்களை வழங்குவதற்கான நடவடிக்கையினை கிளிநொச்சி மாவட்டச்செயலகம்

    முன்னெடுத்துள்ளது. தற்போதைய காலப்பகுதியில் பலத்த காற்றுடனான மழைவீழ்ச்சி மற்றும் இடி மின்னல் பாதிப்புக்கள் ஏற்பட சாத்தியங்கள் உண்டு.

    இதனால் மக்களை அவதானத்துடன் இருக்குமாறும் வீட்டிற்கு அருகில் பாதுகாப்பற்ற வகையில் மரங்கள் இருக்குமாக இருந்தால்

      அவற்றினை அகற்றி பாதுகாப்பாக இருக்குமாறு கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு மக்களுக்கு அறிவுறுத்தலை வழங்கியுள்ளது.

          Posted in இலங்கை செய்திகள்

          கிளிநொச்சி மாவட்ட சிறுபோக முன்னேற்றம் தொடர்பிலான கலந்துரையாடல்

          கிளிநொச்சி மாவட்ட சிறுபோக முன்னேற்றம் தொடர்பிலான கலந்துரையாடல்

          சௌபாக்கியா தேசிய உணவு உற்பத்தித்திட்டத்தின் கீழ் 2020 ஆண்டின் சிறுபோகம் முன்னேற்றம் தொடர்பிலான

          கலந்துரையாடல் கிளிநொச்சி மாவட்டச்செயலகத்தில் நடைபெற்றது.

          மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி R.கேதீஸ்வரனின் தலைமையில் நடைபெற்ற இந்த கலந்துடையாடலில் மாவட்ட

            விவசாயப்பணிப்பாளர், பிரதேச செயலாளர்கள், கமநல சேவை திணைக்களம்

            விவசாயத்திணைக்களம் மற்றும் நீர்ப்பாசன திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

            சௌபாக்கியா தேசிய உணவுத்திட்டத்தினை நடை முறைப்படுத்துவதில்

              உள்ள இடர்பாடுகளை நிவர்த்தி செய்வது தொடர்பிலும் குறித்த காலப்பகுதிக்குள்

              அடைவுமட்டத்தினை எட்டுவதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்குரிய ஏற்பாடுகள் குறித்தும் ஆராயப்பட்டன.

              கிளிநொச்சி மாவட்ட
              கிளிநொச்சி மாவட்ட
                  Posted in இலங்கை செய்திகள்

                  தமிழர் வீடுகளுக்கு முதலை விட்ட இராணுவம் – பதறி ஓடிய மக்கள்

                  தமிழர் வீடுகளுக்கு முதலை விட்ட இராணுவம் – பதறி ஓடிய மக்கள்

                  கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள தமிழர் வீடுகளுக்குள் இலங்கை அரச இராணுவத்தினர் முதலை விட்டுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது

                  இந்த பகுதியில் குளங்கள் ,ஆறுகள்,ஏதும் இல்லாத நிலையில் இந்த முதலைகள் திடீரென வீடுகளுக்குள் நுழைந்துள்ளது,முதலை விடப் பட்ட பகுதிக்கு அருகில் இராணுவ முகாம்கள் உள்ளன

                  கொடிகாமம்,கிளிநொச்சி ,இயக்கச்சி பகுதியில் இந்த முதலைகள் விட பட்டுள்ளன ,வீட்டு தாவரத்தில் உறங்கி கொண்டிருந்த சிறு பிள்ளை ஒன்றை முதலை உண்ண விரைந்து வந்துள்ளது ,

                    இதனை கண்டு நாய் குரைத்து ஒலி எழுப்பிய நிலையில் சுதாகரித்து கொண்ட மக்கள் வீ,ட்டின் முற்ற பகுதியில் வந்த பொழுது முதலையை கண்டுள்ளனர்

                    நாயின் குரைத்து இருக்க விட்டால் அந்த சிசுவை முதலை தின்று இருக்கும் என பாதிக்க பட்டவர்கள் தெரிவிக்கின்றனர் ,

                    ஊரடங்கு வேளையில் இராணுவத்தினர் ,வீடுகளுக்கு அருகில் இவ்வாறு முதலைகளை விட்டு செல்கின்றனர் ,

                    மதம் பிடித்த யானைகளை ஆனையிறவு ,ஊரியன் ,கண்டாவளை ,பகுதிகளில் இராணுவத்தினர் விட்டுச சென்றுள்ளனர்
                    ,
                    இந்த யானைகள் மக்களின் பயன் தரும் மரங்கள் ,மற்றும் மக்களை அடித்து கொன்றுள்ள சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன .

                    மக்கள் இந்த விடயங்களை வெளியில் கூற முடியாத நிலையில் அச்சத்தில் உறைந்துள்ளனர் ,

                    இறுதி போர் முடிவடைந்த நிலையில் தமிழர் பகுதிகளில் இவ்வாறான சம்பவங்கள் அதிகரித்து செல்கின்றமை குறிப்பிட தக்கது

                    தமிழர் வீடுகளுக்கு முதலை
                    தமிழர் வீடுகளுக்கு முதலை