ஆட்டோ பேருந்து விபத்தில் இருவர் பலி
Posted in இலங்கை செய்திகள்

பேருந்து விபத்தில் பலர் காயம்

பேருந்து விபத்தில் பலர் காயம்

வெலிகந்த, சிங்கபுர பிரதேசத்தில் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20 பேர் காயமடைந்துள்ளனர்.

வெலிகந்த சிங்கபுர வீதியில் 8 ஆவது கிலோ மீற்றர் தூண் பகுதியில் பேருந்து சாரதிக்கு பேருந்தின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்து இடம்பெற்ற போது பேருந்தில் சுமார் 75 பேர் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பேருந்து விபத்தில் பலர் காயம்

தனியார் நிறுவன ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்தே விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்தவர்கள் வெலிகந்த பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக பொலன்னறுவை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

video

வீழ்ந்து நொறுங்கிய பயணிகள் விமானம் பலர் காயம்
Posted in உலக செய்திகள்

வீழ்ந்து நொறுங்கிய பயணிகள் விமானம் பலர் காயம்

வீழ்ந்து நொறுங்கிய பயணிகள் விமானம் பலர் காயம்

இலகுரக பயணிகள் விமானம் ஒன்று வீழ்ந்து நொறுங்கியதில் பலர் காயமடைந்துள்ளனர்

Upper Austria பகுதியில் பறந்து கொண்டிருந்த ஒற்றை இயந்திரத்தை கொண்ட Rockwell Commander 112B aircraft
விமானம் ஒன்று திடீரென வீழ்ந்து நொறுங்கியது

இந்த விபத்தில் நால்வர் படுகாயமடைந்துள்ளனர் .
விமானம் பலத்த சேதமாய்ந்துள்ளது .

வீழ்ந்து நொறுங்கிய பயணிகள் விமானம் பலர் காயம்

இயந்திர கோளாறு காரணமாக இந்த விபத்து இடம் பெற்றதாக தெரிவிக்க பட்டுள்ளது .

காயமடைந்தவர்கள் மீட்க பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர் .

குறித்த விபத்து தொடர்ப்பிலான விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

video

பிலிப்பைன்ஸில் தீ விபத்து 6 பேர் பலி 2 பேர் காயம்
Posted in உலக செய்திகள்

பிலிப்பைன்ஸில் தீ விபத்து 6 பேர் பலி 2 பேர் காயம்

பிலிப்பைன்ஸில் தீ விபத்து 6 பேர் பலி 2 பேர் காயம்

பிலிப்பைன்ஸில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி ஆறு பேர் பலியாகியும் இருவர்
காயமடைந்துள்ளனர் .

காயமடைந்தவர்கள் மீட்க பட்டு மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர் .

இந்த தீ விபத்து தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன.

video

வவுனியாவில் விபத்து ஐவர் காயம்
Posted in இலங்கை செய்திகள்

வவுனியாவில் விபத்து ஐவர் காயம்

வவுனியாவில் விபத்து ஐவர் காயம்

மோட்டார் சைக்கிள் மீது தேங்காய் ஏற்றிச்சென்ற ஜீப் ரக வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் ஐவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த விபத்தானது பொருளாதார மத்திய நிலையத்திற்கு முன்பாக இடம்பெற்றிருந்தது.

விபத்து தொடர்பாக மேலும் தெரிய வருகையில்,

வவுனியாவில் விபத்து ஐவர் காயம்

நகரில் பகுதியில் இருந்து மூன்று முறிப்பு நோக்கி சென்ற ஜீப் ரக வாகனம் முன்னே சென்ற மோட்டார் சைக்கிளின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இவ்விபத்தில் மோட்டார் சைக்கிள் மற்றும் ஜீப் ரக வாகனத்தில் பயணித்த ஐவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணையினை வவுனியா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

video

குளத்தில் மூழ்கி இருவர் மரணம்
Posted in இலங்கை செய்திகள்

படகு கவிழ்ந்ததில் 4 பேர் மாயம்

படகு கவிழ்ந்ததில் 4 பேர் மாயம்

மாரவில, முகுதுகட்டுவ பிரதேசத்தில் கடலுக்குச் சென்ற படகு கவிழ்ந்ததில் ஜப்பானிய பிரஜை உட்பட நால்வர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காணாமல் போன படகின் உரிமையாளரால் இன்று (19) அதிகாலை 03.30 மணியளவில் மாரவில பொலிஸாருக்கு இது தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று 18ஆம் திகதி மாலை 05.30 மணியளவில் ஜப்பானியர் உட்பட 05 பேர் சிறிய டிங்கி படகில் கடலுக்குச் சென்றுள்ளனர். மீன்பிடிக்கும்போது மழை பெய்ததால் படகு கடலில் கவிழ்ந்தது.

படகு கவிழ்ந்ததில் 4 பேர் மாயம்

படகை ஓட்டிச் சென்றவர்கள் இது குறித்து கரையில் இருந்த மற்றொரு மீனவருக்கு தொலைபேசி செய்தி மூலம் தகவல் தெரிவித்துள்ளனர்.

அதன்படி படகு கவிழ்ந்ததாக கூறப்படும் பகுதிக்கு சென்ற மற்றொரு குழுவினர் படகை ஓட்டி வந்தவர்களை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.

எனினும், இதன்போது படகில் இருந்த ஏனைய நான்கு பேரும் காணாமல் போயுள்ளதாக முறைப்பாட்டாளர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

கடற்படையினரின் உதவியுடன் காணாமல் போனவர்களை தேடும் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாக மாரவில பொலிஸார் தெரிவிக்கின்றனர்

வான் விபத்தில் 11 பேர் காயம்
Posted in இலங்கை செய்திகள்

வான் விபத்தில் 11 பேர் காயம்

வான் விபத்தில் 11 பேர் காயம்

ஹொரவப்பொத்தான- கெப்பித்திக்கொல்லாவ பிரதான வீதியில் கிவுளக்கடை பகுதியில் வானொன்று விபத்துக்குள்ளானதில் 11 பேர் காயமடைந்துள்ளனர்.இந்த சம்பவம் வெள்ளிக்கிழமை (10) காலை இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பில் இருந்து வவுனியாவுக்கு நேர்முகத் தேர்வு ஒன்றுக்காக சென்றவர்களே விபத்தில் சிக்கியுள்ளனர்.

வான் விபத்தில் 11 பேர் காயம்

வாகனம் வீதியோரம் மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் காயமடைந்தவர்கள் ஹொரவப்பொத்தான வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

அவர்களில் 4 பேர் மேலதிக சிகிச்சைக்களுக்காக அநுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். சாரதியின் அசமந்தத்தினால் இந்த விபத்து நிகழ்ந்திருக்கலாமென கருதப்படுகிறது.

விபத்து தொடர்பில் விசாரணைகளை ஹொரவப்பொத்தான பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

பேருந்தின் மீது மரம் விழுந்ததில் மூவர் காயம்
Posted in இலங்கை செய்திகள்

பேருந்தின் மீது மரம் விழுந்ததில் மூவர் காயம்

பேருந்தின் மீது மரம் விழுந்ததில் மூவர் காயம்

கொஸ்கம – அளுதம்பலம பகுதியில் தனியார் பேருந்தின் மீது மரம் ஒன்று வீழ்ந்ததில் மூவர் காயமடைந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

122 ஆம் இலக்கத்தில் (கொழும்பு – அவிசாவளை) இயங்கும் தனியார் பேரூந்து ஒன்று கொழும்பில் இருந்து அவிசாவளை நோக்கி இன்று (30) மாலை பெய்த கடும் மழைக்கு மத்தியில் பயணித்த போது மரம் ஒன்று பேரூந்தின் மீது வீழ்ந்துள்ளது.

இந்த சம்பவம் காரணமாக கொழும்பு – அவிசாவளை பிரதான வீதியில் வாகன போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வீடியோ

இஸ்ரேலுக்கு பலத்த இழப்பு 5000 பேர் காயம்
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேலுக்கு பலத்த இழப்பு 5000 பேர் காயம்

இஸ்ரேலுக்கு பலத்த இழப்பு 5000 பேர் காயம்

இஸ்ரேலுக்கு பலத்த இழப்பு ஏற்படுள்ளது பலநூறு பேர் மரணம் ,பல்லாயிரம் பேர் காயம் ,
கமாஸ் மீது தாக்குதல் நடத்த பத்து ஆயிரம் இராணுவம் குவிப்பு ,

இஸ்ரேலுக்கு பலத்த இழப்பு 5000 பேர் காயம்
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேலுக்கு பலத்த இழப்பு 5000 பேர் காயம்

இஸ்ரேலுக்கு பலத்த இழப்பு 5000 பேர் காயம்

இஸ்ரேலுக்கு பலத்த இழப்பு ஏற்படுள்ளது பலநூறு பேர் மரணம் ,பல்லாயிரம் பேர் காயம் ,கமாஸ் மீது தாக்குதல் நடத்த பத்து ஆயிரம் இராணுவம் குவிப்பு .

வீடியோ

லொறி புரண்டதில் 22ற்கு மேற்பட்டோர் காயம்
Posted in இலங்கை செய்திகள்

லொறி புரண்டதில் 22ற்கு மேற்பட்டோர் காயம்

லொறி புரண்டதில் 22ற்கு மேற்பட்டோர் காயம்

மஸ்கெலியா பிரவுன்ஸ்விக் பகுதியில் லொறி ஒன்று பாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளான சம்பவம் செவ்வாய்க்கிழமை (03) இரவு 9.50 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள பிரவுன்ஸ்விக் தோட்ட புளும்பீல்ட் பகுதியில் இருந்து காசல்றி பகுதிக்கு மரண வீடொன்றுக்கு சென்று திரும்பும் வழியிலேயே இவ்விபத்து இடம்பெற்று இருப்பதாக மஸ்கெலியா போக்குவரத்து பொலிசார் தெரிவித்தனர்.

லொறி புரண்டதில் 22ற்கு மேற்பட்டோர் காயம்

விபத்தில் சாரதி உட்பட 22 பேர் காயமடைந்துள்தோடு சாரதி மற்றும் பாதிக்கப்பட்ட மேலும் 17 பேர் மேலதிக சிகிச்சைக்காக டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.

இவர்களில் மூவர் கடுங்காயங்களுக்கு உள்ளான நிலையில் நாவலப்பிட்டி ஆதார வைத்திய சாலைக்கும் கண்டி போதனா வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் சிறு காயங்களுடன் ஒரு ஆண் நான்கு பெண்கள் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வீடியோ

பஸ் விபத்தில் பாடசாலை மாணவன் பலி
Posted in இலங்கை செய்திகள்

விபத்தில் சிக்கி 15 பேர் காயம்

விபத்தில் சிக்கி 15 பேர் காயம்

ராகலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ராகலை – வலப்பனை வீதியின் ஹரஸ்பெத்த பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 15 பேர் காயமடைந்துள்ளனர்.

வலப்பனையிலுள்ள ஆலயமொன்றில் இடம்பெற்ற பூஜை வழிபாடுகளில் கலந்துகொள்வதற்காக வந்திருந்த குழுவினர், கெப் வண்டியில் மீண்டும் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது, ​​கெப் வண்டியின் பின்புறத்தின் கதவு உடைந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் சிக்கி 15 பேர் காயம்

இதன்போது கெப் வண்டியில் பயணித்தவர்கள் வீதியில் விழுந்து காயமடைந்துள்ளனர்

பின்னர் அவர்கள் வலப்பனை மற்றும் ரிக்கிலகஸ்கட வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து நேற்று (30) மாலை இடம்பெற்றுள்ளதுடன், கெப் வண்டியின் சாரதி தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

70 பயணிகளுடன் பயணித்த பஸ் விபத்து
Posted in இலங்கை செய்திகள்

கொழும்பில் பஸ் விபத்து 7 பேர் காயம்

கொழும்பில் பஸ் விபத்து 7 பேர் காயம்

பம்பலப்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டூப்ளிகேஷன் வீதிக்கு அருகில் இன்று (14) அதிகாலை பஸ் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

கொழும்பில் இருந்து கதிர்காமம் நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்று தும்முல்லயிலிருந்து வந்த லொறியுடன் மோதி வீதியில் கவிழ்ந்துள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.

கொழும்பில் பஸ் விபத்து 7 பேர் காயம்

விபத்தின் போது பேருந்தில் சுமார் 15 பயணிகள் இருந்தனர், இரண்டு பெண்கள் மற்றும் ஐந்து ஆண்கள் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மின்விளக்கு இன்றி பேருந்து இயங்கியதாலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இஸ்ரேல் இராணுவம் வெறியாட்டம் ஒருவர் படுகொலை பலர் காயம்
Posted in உலக செய்திகள்

இஸ்ரேல் இராணுவம் வெறியாட்டம் ஒருவர் படுகொலை பலர் காயம்

இஸ்ரேல் இராணுவம் வெறியாட்டம் ஒருவர் படுகொலை பலர் காயம்

ஆக்கிரமிக்க பட்ட பாலஸ்தீனம் மேற்கு கரை பகுதியில் உள்ள ,
துல்கரேம் அகதிகள் முகாம் மீது ,இஸ்ரேலிய படைகள் தாக்குதல் நடத்தினர்

இந்த தாக்குதலில் 23 வயதான மஹ்மூத் ஜராத் மார்பில் சுடப்பட்ட நிலையில் பலியானார்
மேலும் எட்டு பேர் காயமடைந்தனர் .

இஸ்ரேல் இராணுவம் வெறியாட்டம் ஒருவர் படுகொலை பலர் காயம்

காயமடைந்தவர்கள் ஒருவர் மிக ஆபத்தான நிலையில் உள்ளதாக,
வைத்திய சாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன .

. இஸ்ரேலிய இராணுவம் மக்கள் மீது மற்றும் கண்ணீர் புகை குண்டுகளை வீசி,
தாக்குதலை நடத்தினர் .

முகாமில் வசிப்பவர்களின் கூரைகளில் துப்பாக்கி சூடு நடத்த பட்டதில் ,
மக்களுக்கு பெரும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன .

அப்பாவி மக்கள் மீது இஸ்ரல் இராணுவம் தாக்குதல் நடத்தி வருகின்ற பொழுதும் இதுவரை ,
ஐநா சபை எவ்வித நடவடிக்கையும் ,மேற்கொள்ளவில்லை என்பது குறிப்பிட தக்கது .

எரியும் ஆயுத கிடங்கு எண்ணெய் டிப்போ 56 பேர் காயம்
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

எரியும் ஆயுத கிடங்கு எண்ணெய் டிப்போ 56 பேர் காயம்

எரியும் ஆயுத கிடங்கு எண்ணெய் டிப்போ 56 பேர் காயம்

https://youtu.be/gr7uYZiEh1E
சோமாலியாவில் குண்டு வெடிப்பு 6 பேர் மரணம் 12 பேர் காயம்
Posted in உலக செய்திகள்

சோமாலியாவில் குண்டு வெடிப்பு 6 பேர் மரணம் 12 பேர் காயம்

சோமாலியாவில் குண்டு வெடிப்பு 6 பேர் மரணம் 12 பேர் காயம்

சோமாலியா தலைநகர் அருகில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு தாக்குதலில் ,
6 பேர் பலியாகியும் ,12 பேர் காயமடைந்துள்ளனர் .

காயமடைந்தவர்கள் சிலர் உயிர்க்கு ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .


குண்டு வெடிப்பு இடம்பெற்ற பகுதியில் ,சுற்றிவளைக்க பட்டு தேடுதல்கள் முடுக்கி விட பட்டுள்ளன .

பாகிஸ்தானில் ரயில் தடம் புரண்டரயில் 30 பேர்பலி 90 பேர் காயம்
Posted in உலக செய்திகள்

பாகிஸ்தானில் தடம் புரண்டரயில் 30 பேர் பலி 90 பேர் காயம்

ஞாயிற்றுக்கிழமை தெற்கு பாகிஸ்தானில் ரயில் தடம் புரண்டதில் 30 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 90 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர், மீட்பு பணிகள் மாலைக்குள் நிறைவடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பாகிஸ்தானின் நவாப்ஷா நகருக்கு அருகே ராவல்பிண்டி நோக்கிச் சென்ற ரயிலின் 10 கார்கள் தடம் புரண்டதில் சில கார்கள் கவிழ்ந்து பல பயணிகளை சிக்கவைத்ததாக மூத்த ரயில்வே அதிகாரி மஹ்மூதுர் ரஹ்மான் லகோ தெரிவித்தார்.

பாகிஸ்தானில் தடம் புரண்டரயில் 30 பேர் பலி 90 பேர் காயம்

சேதமடைந்த மற்றும் கவிழ்ந்த கார்களில் இருந்து பெண்கள், குழந்தைகள் மற்றும் வயதான பயணிகளை மீட்பு குழுக்கள் மீட்க பட்டனர் .

குறித்தாஹ் விபத்து தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .

எல்ல விபத்தில் ஒருவர் பலி8 பேர் காயம்
Posted in இலங்கை செய்திகள்

எல்ல விபத்தில் ஒருவர் பலி8 பேர் காயம்

எல்ல விபத்தில் ஒருவர் பலி8 பேர் காயம்

எல்ல – வெல்லவாய வீதியின் ரஹதன்கந்த பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து செவ்வாய்க்கிழமை (18) காலை இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தனியார் பஸ் ஒன்று பள்ளமொன்றில் வீழ்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளது. விபத்தில் காயமடைந்த மேலும் 8 பேர் வெல்லவாய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பிரேசிலில் வெள்ளம் 24 பேர் காயம்
Posted in உலக செய்திகள்

பிரேசிலில் வெள்ளம் 24 பேர் காயம்

பிரேசிலில் வெள்ளம் 24 பேர் காயம்

பிரேசில் நாட்டில் ஏற்பட்ட கடும் வெள்ளத்தில் சிக்கி ,ஒருவர் பலியாகியும் 24 பேர் காயமடைந்துள்ளனர் .

மேலும் 790000 மக்கள் மின்சாரம் இன்றி தவித்து வருகின்றனர் .

நூற்றுக்கு மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் அடித்து உடைக்க பட்டுள்ளது .பாதிக்க பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

தலவாக்கலை பஸ் விபத்தில் 26 பேர் காயம்
Posted in இலங்கை செய்திகள்

தலவாக்கலை பஸ் விபத்தில் 26 பேர் காயம்

தலவாக்கலை பஸ் விபத்தில் 26 பேர் காயம்

தலவாக்கலை, வட்டகொடையில் இருந்து மடக்கும்புர வரையிலும் பயணித்துக்கொண்டிருந்த தனியார் பஸ், துனுக்கே தெனிய, கிரிதியெட்டி பிரதேசத்தில் வீதியை விட்டு விலகி விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

இதனால் அந்த பஸ்ஸில் பயணித்த 26 பேர் காயமடைந்துள்ளனர் என பூண்டுலோயா பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

தலவாக்கலை பஸ் விபத்தில் 26 பேர் காயம்

விபத்து இடம்பெற்ற போது, அந்த பஸ்ஸில் 26 க்கும் மேற்பட்டோர் பயணித்துள்ளனர் என்றும் காயமடைந்தவர்கள் கொத்மலை பி​ரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அறியமுடிகின்றது.

அத்துடன், காயமடைந்த பெண் தொழிலாளர்கள் சிலர், நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

வட்டகொடை தோட்டத்தில் வேலைச் செய்வதற்காக வேவஹேன பிரதே்தில் இருந்து ஒருதொகுதி தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு அவர்களுடைய

வீடுகளுக்கு மீண்டும் அழைத்து வந்துக்கொண்டிருந்த போதே இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளது என்றும் விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது.

ஆற்றில் பாய்ந்த பேரூந்து 10 பேர் பலி 40 பேர் காயம்
Posted in இலங்கை செய்திகள்

ஆற்றில் பாய்ந்த பேரூந்து 10 பேர் பலி 40 பேர் காயம்

ஆற்றில் பாய்ந்த பேரூந்து 10 பேர் பலி 40 பேர் காயம்

இலங்கையில் தனியார் பேரூந்து ஒன்று ஆற்றில் பாய்ந்ததில் ,
அதில் பயணித்த பத்து பேர் பலியாகியும் நாற்பதுர் காயமடைந்துள்ளனர்

பொலநறுவையில் இருந்து காத்தான் குடிக்கு,
பயணித்து கொண்டிருந்த பேருந்தே ,சாரதியின் கட்டு பாட்டை இழந்து ஆற்றில் கவிழ்ந்தது .

இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு,
அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர் .

விபத்து தொடர்பிலான விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .