Posted in Uncategorized

பாண்,சாப்பாட்டு பொதி ,எரிபொருள் விலை திடீர் அதிகரிப்பு

பாண்,சாப்பாட்டு பொதி ,எரிபொருள் விலை திடீர் அதிகரிப்பு

.450 கிராம் நிறையைக் கொண்ட பாணின் விலை, 30 ரூபாவினாலும் பணிஸ் 10


ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது என பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

எரிபொருள்களின் விலை அதிகரிப்பை அடுத்து, சாப்பாட்டு ​​பொதியின் விலை 20 ரூபாவினாலும்,


கொத்துரொட்ட 10 ரூபாவினாலும், சிற்றுண்டி விலைகள் 5 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

    Posted in இலங்கை செய்திகள்

    விமானப் பயணச் சீட்டு விலை அதிகரிப்பு

    .விமானப் பயணச் சீட்டு விலை அதிகரிப்பு

    இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில், இலங்கையில் விநியோகிக்கப்படும் அனைத்து விமானப் பயணச் சீட்டுகளின் விலைகளும்; 27 சதவீதத்தால்

    அதிகரிக்கப்பட்டுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபை தெரிவித்துள்ளது.

    அமெரிக்க டொலரின் பெறுமதிக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக

    சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் தலைவர் உபுல் தர்மதாச தெரிவித்துள்ளார்.

    அமெரிக்க டொலர் ஒன்றின் பெறுமதி 203 ரூபாய் 60 சதமாக இருந்த நிலையில், இன்று அதன் பெறுமதி 259 ரூபாய் 99 சதமாக அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்

      Posted in இலங்கை செய்திகள்

      மாலைதீவிலிருந்து இரத்மலானைக்கு நேரடி விமான சேவை

      மாலைதீவிலிருந்து இரத்மலானைக்கு நேரடி விமான சேவை

      ஐந்து தசாப்தங்களின் பின்னர் மாலைதீவிலிருந்து கொழும்பு இரத்மலானை விமான

      நிலையத்திற்கு நேரடி விமான சேவையை ஆரம்பிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

      எதிர்வரும் 27ம் திகதி தொடக்கம் இந்த விமான சேவை இடம்பெறும்.இன்று (10)

      இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் விமான சேவைகள் இராஜாங்க அமைச்சர் டி.வி.சானக்க இதனை தெரிவித்தார்.

      அபிவிருத்தி திட்டத்திற்கு அமைவாக இரத்மலானை விமான நிலையம் இந்தியா மற்றும் மாலைதீவை கேந்திரமாகக் கொண்டு பிராந்திய சர்வதேச விமான நிலையமாக

      அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.இரத்மலானை சர்வதேச விமான நிலையம் 1938 இல் அமைக்கப்பட்டது.

      1968 இல் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து விமான சேவைகள் ஆரம்பிக்கப்பட்டதால், பிராந்திய மற்றும் சர்வதேச விமானங்கள் செயல்படவில்லை

      நாட்டின் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதை இலக்காகக் கொண்டு இந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

        Posted in இலங்கை செய்திகள்

        பணம் இன்றி தவிக்கும் இலங்கை – மக்கள் தலையில் ஏற்ற பட்ட சுமைகள்

        பணம் இன்றி தவிக்கும் இலங்கை – மக்கள் தலையில் ஏற்ற பட்ட சுமைகள்

        அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதியை கட்டுப்படுத்துவதன் மூலம்

        மாதாந்தம் சுமார் 75 மில்லியன் அமெரிக்க டொலர் சேமிக்கப்படும் என இலங்கை மத்திய வங்கி கணித்துள்ளது.

        எவ்வாறாயினும், 600 க்கும் மேற்பட்ட பொருட்களின் வரிகளை அதிகரிக்க மத்திய வங்கி முன்மொழிந்திருந்தது.

        ஆனால், நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இறக்குமதியை

        கட்டுப்படுத்தும் வகையில் 367 அத்தியாவசியமற்ற பொருட்கள் மட்டுமே உரிமத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.

        இறக்குமதிக் கட்டுப்பாட்டிற்காக மத்திய வங்கி முன்மொழிந்த பொருட்களின்

        பட்டியலின்படி, ஒவ்வொரு மாதமும் சுமார் 300 மில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாடுகளுக்குச் செல்லும் என்று மதிப்பிடப்பட்டது.

        இதை கட்டுப்படுத்தவே 600 க்கும் மேற்பட்ட பொருட்களின் வரிகளை அதிகரிக்க மத்திய வங்கி முன்மொழிந்திருந்தது

          Posted in இலங்கை செய்திகள்

          யாழில் இளம் பெண் கைது

          யாழில் இளம் பெண் கைது

          யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீட போலி அடையாள அட்டையுடன் தங்கியிருந்த யுவதியொருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

          குறித்த யுவதி யாழ்.பல்கலைக்கழக மருத்துவபீட போலி அடையாள அட்டையை காண்பித்து திருநெல்வேலி பகுதியில் வாடகை அறையில் தங்கியிருந்துள்ளார்.

          அவரது நடவடிக்கைகளில் வீட்டு உரிமையாளர் சந்தேகம் கொண்டமையால் இது தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

          இத்தகவலின் பிரகாரம் வீட்டுக்கு சென்ற பொலிஸார் வாடகை அறையில் தங்கியிருந்த யுவதியிடம் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

          அதன்போது யுவதி மருத்துவ பீட மாணவி அல்ல என்பதனையும் அது போலியான அடையாள அட்டை என்பதையும் கண்டறிந்துள்ளனர்.

          இதனையடுத்து யுவதி கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்

            Posted in Uncategorized

            மாட்டு வண்டியில் பயணிக்கும் அரசியல்வாதிகள்

            நாட்டில் அதிகரித்துள்ள விலைவாசி, பொருட்கள் தட்டுப்பாடு, மின்வெட்டு உள்ளிட்ட

            பல்வேறு காரணங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக கரைதுறைப்பற்று பிரதேச

            சபை உறுப்பினர்கள் இன்று மாட்டு வண்டியில் பிரதேச சபைக்கு சென்றுள்ளனர்.

            நாட்டின் இந்த நிலைமைகளுக்கு அரசு உடனடியாக தீர்வு வழங்க வேண்டும் எனக் கோரி கவனயீர்ப்பு நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளனர்.

            முள்ளியவளை காட்டா விநாயகர் ஆலயத்திலிருந்து மாட்டு வண்டியில்

            கரைதுறைப்பற்று பிரதேசசபை தவிசாளர்,
            உப தவிசாளர் உறுப்பினர்கள் பிரதேசசபையை நோக்கி இன்று நகர்ந்து செல்கின்றனர்

              Posted in Uncategorized

              பயத்தில் பாராளுமன்றுக்கு வராது தப்பி ஓடிய பசில்

              பயத்தில் பாராளுமன்றுக்கு வராது தப்பி ஓடிய பசில்

              நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச சபைக்கு வருவது இல்லை. அவர்தான் நாட்டின் நிதி நிலைமை தொடர்பில் தெளிவுபடுத்த வேண்டும். ஆனால், அவருக்குப் பதிலாக வேறு

              உறுப்பினர்கள் பதில் கூறி வருகின்றனர். நிதி அமைச்சரைச் சபைக்கு வரச் சொல்லுங்கள். இல்லையென்றால் சபாநாயகர் நிதி அமைச்சருக்குக் கட்டளை அனுப்புங்கள்.

              -இவ்வாறு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம், எதிரணி பிரதம கொறடாவான லக்‌ஷ்மன் கிரியெல்ல கோரிக்கை விடுத்தார்.

              நாடாளுமன்றம் இன்று முற்பகல் 10 மணியளவில் கூடியது. இதன்போது ஒழுங்குப் பிரச்சினையொன்றை எழுப்பிய லக்‌ஷ்மன் கிரியெல்ல எம்.பி.,

              நிதி அதிகாரம் நாடாளுமன்றத்துக்கே இருக்கின்றது. டிசம்பர் 10ஆம் திகதியே நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச சபையில் உரையாற்றினார். அதன்பின்னர் நாட்டின் நிதி

              நிலைவரம் தொடர்பில் கடந்த மூன்று மாதங்களாக நிதி அமைச்சர் நாடாளுமன்றத்துக்குத் தெளிவுபடுத்தவில்லை.

              எனவே, நாடாளுமன்றம் வந்து தெளிவுபடுத்துமாறு, நிதி அமைச்சருக்கு சபாநாயகர் உத்தரவிடவேண்டும் – என்றார்

                Posted in Uncategorized

                யாழில் பஸ் சாரதியின் மூக்கை வெட்டிய நபர்

                யாழில் பஸ் சாரதியின் மூக்கை வெட்டிய நபர்

                யாழில் தனியார் பேருந்தை இடைமறித்த நபரொருவர் சாரதியின் மூக்கை கத்தியால் வெட்டி விட்டு தப்பியோடியுள்ளார்.

                யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வீதியில் நேற்று (08) இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் காயமடைந்த சாரதி சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

                பருத்தித்துறையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்து கொண்டிருந்த குறித்த தனியார் பேருந்தினை நீர்வேலி கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் வீதியில் வழிமறித்த நபரொருவர், சாரதியின் மூக்கை கத்தியால் வெட்டி விட்டு தப்பியோடியுள்ளார்.

                அதனை அடுத்து அங்கு நின்றவர்கள் சாரதியை மீட்டு யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதித்தனர்.

                சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்

                  Posted in இலங்கை செய்திகள்

                  துறைமுகத்தில் தேங்கி கிடக்கும் உணவுகள் – பணம் இன்றி தவிக்கும் இலங்கை

                  துறைமுகத்தில் தேங்கி கிடக்கும் உணவுகள் – பணம் இன்றி தவிக்கும் இலங்கை

                  வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சுமார் 2500 கொண்டனர் அடங்கிய உணவு பொருட்களை கொழும்பு துறைமுகத்தில் கப்பல்களில் தேங்கி கிடக்கின்றன

                  குறித்த உணவு பொருட்களுக்குரிய பணத்தை இலங்கையால் செலுத்த முடியாத நிலையில் இவை தேங்கி கிடப்பதாக தெரிவிக்க படுகிறது

                  நாட்டை மகிந்த ,கோட்டா குடும்பம் கொள்ளையடித்து வரும் நிலையில் ,இவ்விதம் நாடு கீழ் நிலைக்கு சென்றுள்ளதாக நோக்கர்கள் தெரிவிக்கினற்னர்

                    Posted in Uncategorized

                    யாழில் -போதையில் தந்தை ரகளை – காவல் நிலையத்தில் தஞ்சமடைந்த சிறுமி

                    யாழில் -போதையில் தந்தை ரகளை – காவல் நிலையத்தில் தஞ்சமடைந்த சிறுமி

                    யாழ்ப்பாணம் ஆவரங்கால் பகுதியில் தந்தை ஒருவர் தினமும் போதையில் வந்து தாயாரை கொடுமை படுத்தி சண்டையில் ஈடுபட்டு வந்துள்ளார் ,

                    இந்த சம்பவத்தை பார்வையிட்ட சிறுமி அதில் இருந்து தப்பிக்க காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்தார் ,

                    இவ்விதம் தஞ்சம் அடைந்த 12 வயது சிறுமி நன்னடைத்தை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளார்
                    இப்படியும் சீரழியும் குடும்பங்கள்

                      Posted in இலங்கை செய்திகள்

                      கோட்டா மாமியார் மரணம்

                      கோட்டா மாமியார் மரணம்

                      இலங்கை ஆளும் ஜனாதிபதி கோத்தபாயவின் மனைவியின் தயார் அமெரிக்காவில்

                      தனது 89 தாவது வயதில் மரணமாகியுள்ளார்

                      இவரது இறுதி நிகழ்விற்கு கோட்டபாய மனைவி செல்ல தயாராகி வருவதாக தெரிவிக்க படுகிறது

                        Posted in Uncategorized இலங்கை செய்திகள்

                        இலங்கையில் 68 வயதுடைய யானை மரணம்

                        இலங்கையில் 68 வயதுடைய யானை மரணம்

                        இலங்கையில் அதிக வயது கூடிய யானை என்ற பெயரை பெற்று விளங்கி வந்த

                        Nadugamuwa Raja என்ற யானை வெள்ளவெறியா பகுதியில் பலியாகியுள்ளது ,இந்த

                        யானையின் உடலை கண்டு தரிசித்து
                        செல்ல மக்கள் முண்டியடித்த வண்ணம் உள்ளனர் ,இது முறைப்படி அடக்கம் செய்ய படும் என தெரிவிக்க பட்டுள்ளது

                          Posted in Uncategorized

                          ரசிய இராணுவ ஜெனரல் குண்டு தாக்குதலில் படுகொலை

                          ரசிய இராணுவ ஜெனரல் குண்டு தாக்குதலில் படுகொலை

                          உக்கிரேன் ரசியாவுக்கு இடையில் இடம்பெற்று வரும் மோதலில் சிக்கி இரண்டு இராணுவ ஜெனரல்கள் பலியாகியுள்ளதாக உக்கிரேன் தெரிவித்துள்ளது

                          உக்கிரேன் கூட்டு நாடுகளின் ஆயுத வழங்குதல் தாக்குதலில் ரசிய படைகள் பலத்த இழப்பை சந்தித்த வண்ணம் உள்ளன

                          அதனாலேயே இந்த முக்கிய இரண்டு இராணுவ தாக்குதல் தளபதிகளாக விளங்கிய ஜெனரல்களை இழந்துள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

                            Posted in இலங்கை செய்திகள்

                            செல்பி மோகம் – ஆற்றில் விழுந்த மரணம்

                            செல்பி மோகம் – ஆற்றில் விழுந்த மரணம்

                            இப்பலோகம பகுதியில் உள்ள ஜயா ஆற்றின் கரையில் உள்ள மரத்தில் ஏறி செல்ஃபி

                            எடுக்க முயன்ற சிறுவன் ஒருவன் கால் தவறி ஆற்றில் விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

                            ஆற்றில் விழுந்த சிறுவன் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

                            இப்பலோகம பிரதேசத்தை சேர்ந்த 13 வயதுடைய சிறுவன் ஒருவனே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

                            நேற்று (07) மாலை காணாமல் போன குழந்தை தொடர்பில் இதுவரை எவ்வித தகவலும் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

                            பொலிஸார் மற்றும் அப்பகுதி மக்கள் குழந்தையை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

                              Posted in இலங்கை செய்திகள்

                              இலங்கை வந்த 3 எண்ணெய் கப்பல்

                              இலங்கை வந்த 3 எண்ணெய் கப்பல்

                              இலங்கை கடற்பரப்பிற்கு வந்த மூன்று எரிவாயு கப்பல்களில் ஒன்றிற்கான பணம்

                              செலுத்தப்பட்டதை அடுத்து முத்துராஜவெல எரிவாயு முனையத்திற்கு எரிவாயு அனுப்பும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

                              இலங்கைக்கு எரிவாயு ஏற்றி வந்த மூன்று கப்பல்கள் வத்தளை, உஸ்வெட்டகேயாவ மற்றும் தல்தியவத்தை கடற்பரப்பில் சுமார் ஏழு நாட்களாக நங்கூரமிட்டு

                              நிறுத்தப்பட்டிருந்தன.

                              இதன்படி, தல்தியவத்தை எரிவாயு நிலையத்திலிருந்து முத்துராஜவெல எரிவாயு

                              முனையத்திற்கு 2,500 மெற்றிக் தொன் எரிவாயுவை வெளியேற்றும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

                              எரிவாயுவை ஏற்றி வந்த மற்றுமொரு கப்பலுக்கான கொடுப்பனவுகள் இன்று செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

                                கொத்து குண்டு தாக்குதலில் 12 சிறுவர்கள் மரணம் - சவூதி அட்டூழியம்
                                Posted in இலங்கை செய்திகள்

                                துப்பாக்கி சூடு இருவர் காயம்

                                துப்பாக்கி சூடு இருவர் காயம்

                                கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நடுவூற்று கிராம சேவகர் பிரிவில் நேற்றிரவு (7)

                                இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் இருவர் படுகாயமடைந்து திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

                                30 வயதுடைய நஜிம்கான் வசிம், 32 வயதுடைய சாகுல் ஹமீத் முகம்மது ரமீஸ் ஆகிய

                                இருவருமே இவ்வாறு படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக கிண்ணியா பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

                                சந்தேக நபர்களை தேடி பொலிஸார் தீவிர சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

                                மணல் வியாபாரத்தில் ஏற்பட்ட தகராறுகளை இதற்கு காரணம் என கூறப்படுகின்றது.

                                குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

                                  Posted in இலங்கை செய்திகள்

                                  கொவிட் தொற்றுக்குள்ளான இளைஞர், யுவதிகளுக்கு பாலியல் பிரச்சினைகள்

                                  கொவிட் தொற்றுக்குள்ளான இளைஞர், யுவதிகளுக்கு பாலியல் பிரச்சினைகள்

                                  கொவிட் தொற்றுக்குள்ளான இளைஞர், யுவதிகளுக்கு பாலியல் பிரச்சினைகள் அல்லது கருவுறுதல் தாமதமாவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

                                  உடல் நோய்கள் தொடர்பான விசேட வைத்தியர் பிரியங்கார ஜயவர்தன இதனை தெரிவித்துள்ளார்.

                                  எவ்வாறாயினும், பூஸ்டர் தடுப்பூசி பெற்றுக்கொண்டால் மலட்டுத்தன்மை

                                  ஏற்படக்கூடும் என வெளியாகும் செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்

                                    Posted in இலங்கை செய்திகள்

                                    ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் பெரும் அரசியல் சதி- ஐநாவில் முழக்கம்

                                    ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் பெரும் அரசியல் சதி- ஐநாவில் முழக்கம்

                                    இலங்கையில் 2019 ஏப்பிரலில் நடந்த ஈஸ்டர் தொடர் குண்டுத் தாக்குதல் பெரும் அரசியல் சதி வலைத் திட்டத்தின் ஒரு பகுதிதான்.”

                                    -இவ்வாறு ஜெனிவா அமர்வில் பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டினார் கொழும்புப் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை.

                                    ஜெனிவாவில் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலின் பிரதான அரங்கில் நேற்று உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

                                    அங்கு அவர் ஆற்றிய உரையின் விவரம் வருமாறு:-

                                    “2019 ஏப்ரல் 21ஆம் திகதி இலங்கையில் இடம்பெற்ற ஈஸ்டர் ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களில் 14 நாடுகளைச் சேர்ந்த 47 வெளிநாட்டவர்கள், 52 குழந்தைகள் உட்பட 269 பேர் உயிரிழந்தனர். 500 இற்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.

                                    இந்தப் படுகொலைகள் சில இஸ்லாமிய தீவிரவாதிகளின் வேலையாகத்தான் இருக்கும் என்றே முதல் மனப்பதிவு ஏற்பட்டது. ஆனால், தொடர்ந்து நடைபெற்ற புலனாய்வுகள் இந்தப் படுகொலைகள் மிகப்பெரும் அரசியல் சதித்திட்டத்தின் ஒரு பகுதி என்பதைச் சுட்டி நிற்கின்றன.

                                    நாங்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் – சிவில் அமைப்புக்கள் உண்மைகளைப் பின்பற்றிச் சென்று தொடர்ந்து வலியுறுத்தி வந்த போதிலும் – இலங்கையின் தற்போதைய அரசு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை வழங்கத் தவறிவிட்டது.

                                    தாக்குதலின் பின்னணியில் உள்ள உண்மைகளை வெளிக்கொணர்ந்து, அதற்குக் காரணமானவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து சட்ட நடவடிக்கை மேற்கொள்வதற்குப் பதிலாக நீதிக்காக குரல் எழுப்புபவர்களைத் துன்புறுத்தவும் அச்சுறுத்தவும் முயற்சிக்கப்படுகின்றது.

                                    இதனால் இந்தக் கொடூரமான குற்றங்கள் நடந்து ஏறத்தாழ மூன்று ஆண்டுகளுக்குப் பின்னரும் அந்த ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை உண்மையில் என்ன நடந்தது என்பது பற்றி நாம் இன்னும் அறியாமல் இருட்டில் இருக்கின்றோம்.

                                    இது பாதிக்கப்பட்ட மக்களின் அடிப்படை உரிமைகளை கடுமையாக மீறும் விடயம் என்பதால், கடந்த ஆண்டு ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலினால் தொடங்கப்பட்ட சாட்சிய சேகரிப்பைத் தொடரவும், அதன்மூலம் ஈஸ்டர் ஞாயிறு படுகொலையின் உண்மைத்தன்மையை வெளிக்கொண்டு வருவதற்கான விசாரணை வழிமுறை ஒன்றை வகுக்கவும் ஆதரவு தருமாறு ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸில் மற்றும் அதன் அனைத்து உறுப்பு நாடுகளையும் நாங்கள் வற்புறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்” – என்றா

                                    Posted in இலங்கை செய்திகள்

                                    இலங்கைப் பெண்கள் சமூகப் பொறுப்புடன் முன்னேறி வருகின்றனர்

                                    இலங்கைப் பெண்கள் சமூகப் பொறுப்புடன் முன்னேறி வருகின்றனர்

                                    வீரப் பெண் தலைமுறையின் வரலாற்றை பின்பற்றி இலங்கைப் பெண்கள் இன்று சமூகப் பொறுப்புடன் தொடர்ந்து முன்னேறி வருகின்றனர் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார்.

                                    மகளிர் தினத்தை முன்னிட்டு பிரதமர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி பின்வருமாறு:

                                    வாழ்த்துச் செய்தி – 2022 மார்ச் 08

                                    ஒரு தாயாக, மகளாக, சகோதரியாக மற்றும் பாட்டியாக ஒட்டுமொத்த சமுதாயத்தையும் வழிநடத்தும் துணிச்சலான பெண்களின் அர்ப்பணிப்பை

                                    நினைவுகூரும் சர்வதேச மகளிர் தினத்தில் உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களை பகிர்ந்துக் கொள்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

                                    ஒரு நிலையான சமுதாயத்திற்காக தன் வாழ்நாள் முழுவதும் கருணை, ஆளுமை ஆகியவற்றைப் பகிரும் ஒரு பெண்ணின் பெருமையை ஒரு நாளுக்கு மட்டும் வரையறுக்க முடியாது.

                                    மனித இனத்தை மாற்றிய அனைத்து தீர்க்கதரிசிகளின் பிறப்பு முதல், மனித இருப்பை அடையும் வரை அனைத்திற்கும் பெண்தான் காரணம் என்பது இரகசியமல்ல.

                                    இதனால்தான், பிரபல ரஷ்ய எழுத்தாளர் மாக்சிம் கோர்க்கி அவர்கள், சூரிய ஒளி மற்றும் தாய்ப்பாலில் இருந்தே உலகம் படைக்கப்பட்டது என்று குறிப்பிட்டிருக்கிறார்.

                                    வீரப் பெண் தலைமுறையின் வரலாற்றை பின்பற்றி இலங்கைப் பெண்கள் இன்று சமூகப் பொறுப்புடன் தொடர்ந்து முன்னேறி வருகின்றனர்.

                                    இந்த தைரியமான பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதற்காக நமது அரசாங்கம் தொடர்ந்து பணியாற்றும் என்று நான் நம்பிக்கையுடன் தெரிவிக்கிறேன்.

                                    “நிலையான எதிர்காலத்திற்கு இன்று பாலின சமத்துவம்” என்ற சர்வதேச எண்ணக்கருவின் கீழ் கொண்டாடப்படும் இம்முறை சர்வதேச மகளிர் தினத்தில்

                                    உங்களுக்கு எதிரான வன்முறைகளும் பாகுபாடுகளும் இலங்கை சமூகத்திலிருந்து துடைத்தழிக்கப்படும் தினத்தை உருவாக்குவதே எமது எதிர்பார்ப்பாகும்.

                                    “அவள் ஒரு நாடு, ஒரு தேசம், ஒரு உலகம்” என்ற தொனிப்பொருளில் கொண்டாடப்படும் சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டத்தின் ஊடாக நாட்டின் உயிர்நாடியாக விளங்கும் பெண்களின் பங்கு சரியான முறையில் பாராட்டப்படும் என நம்புகிறேன்.

                                    கொவிட் தொற்றுநோய் நிலைமைக்கு மத்தியில் ஏற்பட்ட பல்வேறு சிரமங்களை சமாளிப்பதற்கு தொலைநோக்கு சிந்தனையுடன், சிக்கனமாகவும் பொறுமையாகவும்

                                    செயற்படும் பெண்கள் நாட்டில் காணப்படும் சவால்களை வெற்றி கொள்வதற்கு பெற்றுக் கொடுக்கும் சிறந்த பங்களிப்பு நம் அனைவருக்குமான தைரியமாகும்.

                                    நீங்கள் “அவளுக்கு” பெருமை சேர்ப்பதற்கு இருமுறை சிந்திக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.

                                    மஹிந்த ராஜபக்க்ஷ

                                    Posted in இலங்கை செய்திகள்

                                    24 மணி நேரத்தில் 14 பேர் உயிரிழப்பு

                                    24 மணி நேரத்தில் 14 பேர் உயிரிழப்பு

                                    கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் பதிவான 13 வாகன விபத்துகளில் குறைந்தது 14 பேர் உயிரிழந்துள்ளனர்.

                                    கிரிபாவ, இங்கிரிய, புவரசங்குளம், அநுராதபுரம், பொரளை, பதியத்தலாவ மற்றும்

                                    ஹபரணை ஆகிய பகுதிகளில் விபத்துக்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

                                    மேலும், ஆனமடுவ, நவகுருதுவத்தை, இரத்தினபுரி, அங்குனகொலபெலஸ்ஸ, கிளிநொச்சி மற்றும் வெலிக்கடை ஆகிய இடங்களில் உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன.

                                    உயிரிழந்தவர்கள் 12 வயதுக்கும் 78 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் எனவும்

                                    உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.