Posted in Uncategorized

இனமோதலை உருவாக்க சதி – ரவுடிகளை களத்தில் இறக்கி விட்ட மகிந்தா

இனமோதலை உருவாக்க சதி – ரவுடிகளை களத்தில் இறக்கி விட்ட மகிந்தா

இலங்கையில் ஆளும் சகோதர்கள் ஆட்சிக்கு எதிராக முப்பது நாட்கள் தொடர்ந்து மக்கள் போராட்டம் நடத்திய வண்ணம் உள்ளனர்

இவ்வேளை மகிந்தா தனது அடியாட்களை களத்தில் இறக்கி விட்டுளளார் ,இதனால்

அமைதி வழிப்போராட்டம் நடத்திய மக்கள் மீது ரவுடிகள் ,குண்டர்கள் தாக்குதலை நடத்தினர்

இவ்வேளை அங்கு அனுரா குமரா ,சஜித் உள்ளிட்டவர்கள் களத்தில் தரித்துள்ளனர்

,இவ்வேளை சஜித் வாகனத்தின் மீது தாக்குதல் மேற்கொள்ள பட்டுள்ளது ,தொடர்ந்து காலிமுக திடல் பதட்டமான களமாக மாறியுள்ளது

தனக்கும் ஆதரவு உள்ளது என மகிந்தா காண்பிக்கின்ற நிலையாக இது உள்ளது

    Posted in இலங்கை செய்திகள்

    அலரிமாளிகையில் மோதல் – இராணுவம் குவிப்பு

    அலரிமாளிகையில் மோதல் – இராணுவம் குவிப்பு

    அலரிமாளிகையில் முன்பாக போராடடத்தில் ஈடுபட்ட மக்களுக்குள் நுழைந்த மகிந்த ஆதரவு குழுவினர் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளனர்

    இதனால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது

    அமைதியான முறையில் போராட்டங்களை நடத்திய மக்களை தனது அடியாட்களை ஏவி குழப்பத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

    மக்கள் படுகொலைகள் இடம்பெறலாம் என எதிர்பார்க்க படுகிறது

    இதில் அழுத்தி நேரலை காணொளி பார்க்க

      Posted in இலங்கை செய்திகள்

      மக்களுக்காக எந்த தியாகத்தையும் செய்ய தயார் – மகிந்தா குத்துக்கரணம்

      மக்களுக்காக எந்த தியாகத்தையும் செய்ய தயார் – மகிந்தா குத்துக்கரணம்

      இலங்கையில் ஆளும் பிரதமர் மகிந்தா மக்களுக்காக தான் எந்த தியாகத்தையும்

      செய்திட தயராக உள்ளதாக மகிந்தா அறிவித்துள்ளார்

      சகோதர்கள் இருவரையும் பதவி விலக கோரி ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ள நிலையில்


      இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளமை குறிப்பிட தக்கது

        Posted in இலங்கை செய்திகள்

        வாங்கிய 200 மில்லியன் டொலர் கடனை செலுத்த முடியா திணறும் இலங்கை

        வாங்கிய 200 மில்லியன் டொலர் கடனை செலுத்த முடியா திணறும் இலங்கை

        இலங்கைக்கு பங்களாதேஸ் இருநூறு மில்லியன் டொலர் கடனை வழங்கியது


        இவ்வாறு பெற்று கொண்ட கடனை மீள செலுத்திட ஒருவருடம் கால அவகாசம் வழங்க பட்டுள்ளது.

        இதுபோல இந்தியா உள்ளிட்ட நாடுகளும் அவகாசம் வழங்கியுள்ளமை குறிப்பிட தக்கது.

          Posted in இலங்கை செய்திகள்

          முல்லைதீவில் -பலாப்பழம் பறிக்க மரத்தில் ஏறியவர்-விழுந்து மரணம்

          முல்லைதீவில் -பலாப்பழம் பறிக்க மரத்தில் ஏறியவர்-விழுந்து மரணம்

          முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கணுக்கேணி கிழக்கு பகுதியில் வீட்டு காணியில் இருந்த பலாமரத்தில் பலாப்பழம் பறிக்க மரத்தில்

          ஏறிய முதியவர் தவறி விழுந்து மரணமான சம்பவம் கணுக்கேணி கிழக்கு பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

          நேற்று மாலை மரத்தில் பழுத்திருந்த பலாப்பழத்தினை வெட்டுவதற்காக ஏறிய

          கணுக்கேணி கிழக்கு முள்ளியவளை பகுதியில் வசித்து வந்த 72 வயதுடைய தம்பாப்பிள்ளை கனகராசா என்பவரே தவறி விழுந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

          தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த முள்ளியவளை
          பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

            Posted in இலங்கை செய்திகள் குற்ற செய்திகள்

            பெண்ணை வெட்டி தப்பிக்க முயன்றவர் – மின்சாரம் தாக்கி மரணம்

            பெண்ணை வெட்டி தப்பிக்க முயன்றவர் – மின்சாரம் தாக்கி மரணம்

            இலங்கை கிரிபத் கொட பகுதியில் பெண் ஒருவரை கத்தியால் வெட்டி விட்டு தப்பி

            செல்ல முயன்ற வாலிபர் ஒருவர் வேலி பாய்ந்து தப்பிக்க முற்பட்ட பொழுது மின்சாரம் தாக்கி பலியாகியுள்ளார்

            அங்குள்ள கமராவில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது ,

            வெட்டு காயங்களுக்கு உள்ளான பெண் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளார்

              Posted in Uncategorized

              துமிந்த சில்வா நாட்டை விட்டு தப்பி ஓட்டம்

              துமிந்த சில்வா நாட்டை விட்டு தப்பி ஓட்டம்

              இலங்கையில் சிறையில் அடைக்க பட்டு கோட்டாவின் மன்னிப்பின் பேரில் விடுதலை

              செய்யப்பட்ட துமிந்த சில்வா தற்போது நாட்டை விட்டு தப்பித்து சிங்கப்பூர் பயணமாகியுள்ளார்

              இலங்கையில் ஆளும் அடச்சியாளர்கள் பதவி கவிழ்க்க பட்டு சிறையில் அடைக்க படும் நெருக்கடி


              நிலை ஏற்படும் என்ற காரணத்தால் முக்கியமானவர்கள் தப்பி ஓடிய வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது

                Posted in Uncategorized

                யாழில் பெண்மீது வாள்வெட்டு – திருடர்கள் கொலைவெறி தாக்குதல்

                யாழில் பெண்மீது வாள்வெட்டு – திருடர்கள் கொலைவெறி தாக்குதல்

                யாழ்ப்பாணம் தெல்லிப்பழை பகுதியில் தனிமையில் வசித்து வந்த பெண்மணி ஒருவர்
                வீட்டுக்குள் திருடர்கள் நுழைந்துள்ளனர்.

                இவர்களை கண்ணுற்ற அவர்கள் பெண்மணியை வெட்டி விட்டு தப்பி சென்றுள்ளனர்.


                தப்பி ஓடிய திருடர்ளை கண்டு பிடிக்கும் நகர்வில் ல் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

                மேற்படி சம்பவம் யாழ்ப்பாண மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

                  Posted in இலங்கை செய்திகள்

                  ரணில் வீடு செல்ல வேண்டும் – மக்கள் அவர் வீடு முன்பாக போராட்டம்

                  ரணில் வீடு செல்ல வேண்டும் – மக்கள் அவர் வீடு முன்பாக போராட்டம்

                  இலங்கையில் ஆளும் கோட்டா அரசுக்கு முண்டு டு கொடுத்து ஆட்சி நடத்தி வரும் ரணில் விக்கிரமசிங்கவும் கோட்டா ,மகிந்தா போல வீடு செல்ல வேண்டும் என மக்கள் கோரி வருகின்றனர் .

                  இவ்வாறான கோரிக்கையுடன் ரணில் விக்கிரமசிங்கா ,வீடு முன்பாக சிங்கள மக்கள் போராட்டம் ஒன்றை நடத்தி வருகின்றனர் .

                  இந்த போராட்டத்தை அடுத்து அவர் கடுப்பில் உறைந்துள்ளாராம்.

                  தற்போது பலத்த இராணுவ காவல்துறை படதுகாப்பு பலப்படுத்த பட்டுள்ளது .

                    Posted in Uncategorized

                    மகிந்தா பதவி விலகுகிறார் – உள்ளே வெடித்த மோதல்

                    மகிந்தா பதவி விலகுகிறார் – உள்ளே வெடித்த மோதல்

                    இலங்கையில் ஆளும் சகோதரர்கள் பதவி விலக கோரி நாடெங்கும் மக்கள் போராட்டம் நடத்திய வண்னம் உள்ளனர்
                    இவர்களின் இந்த போராட்டத்தினால் ராஜபக்ச குடும்பம் கொதிப்பில் உறைந்துள்ளது

                    தமது ஆட்சியை தக்கவைத்து கொள்ள முடியாத நெருக்கடியில் கோட்டா சிக்கி தவித்து வருகிறார் ,


                    இந்த நிலையில் தற்போது பிரதமர் மகிந்தாவை பதவி விலகும் படி கோட்டா


                    தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில் உள்வீட்டுக்குள் மோதல் வெடித்துள்ளது

                      Posted in இலங்கை செய்திகள்

                      ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் நீரில் மூழ்கி மரணம்

                      ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் நீரில் மூழ்கி மரணம்

                      இலங்கை அக்கரைப்பற்று வாங்காமம் பகுதியில் உள்ள ஆறொன்றில் நீராட சென்ற

                      இரு சிறுவர்கள் நீரில் அடித்து செல்ல பட்டு மரணமாகியுள்ளனர்

                      நீரில் அடித்து செல்ல பட்ட அவர்களை மக்கள் மீட்டு அதே பகுதி மருத்துவ மனையில்

                      சேர்க்க பட்ட பொழுதும் அவர்கள் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர்

                      இலங்கையில் ஆண்டு தோறும் 800 க்கு மேற்பட்டவர்கள் இவ்விதம் நீரில் மூழ்கி

                      மரணமாகி வருகின்றமை குறிப்பிட தக்கது

                        Posted in Uncategorized

                        இலங்கையில் அவசரகால பிரகடனம் அமூல் – மக்களை அடக்க கோட்டா சதி

                        இலங்கையில் அவசரகால பிரகடனம் அமூல் – மக்களை அடக்க கோட்டா சதி

                        இலங்கையில் ஆளும் அரசுக்கு எதிராக நாளுக்கு நாள் போராட்டம் நாடெங்கும்

                        அதிகரித்து செல்கிறது ,இந்த நிலையில் கடந்த இரவு அமுலாகும் வகையில் அவசரகால

                        சட்டம் அமூல் படுத்த பட்டுள்ளது

                        இதற்கான வரத்தமானி கோட்டாவின் கையெழுத்துடன் வெளியாகியுள்ளது ,


                        இதற்கு எதிர்ப்பு தெரிவித்து குரல்கள் எழுந்து வருகின்றன

                        Posted in Uncategorized

                        போலீஸ் காவலரணில் யட்டிகளை காயபோட்டு மக்கள் போராட்டம்

                        போலீஸ் காவலரணில் யட்டிகளை காயபோட்டு மக்கள் போராட்டம்

                        இலங்கை பாரளுமன்றம் அருகில் அமைக்க பட்டுள்ள போலீஸ் வீதி தடைகள் மேல்

                        பட்டிகள் ,யங்கிகள்,பிரசியர் உள்ளிட்டவை காய போட்டு போராட்டக் காரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்

                        இந்த வினோத போராட்டம் மூலம் அரசுக்கு எதிராக தாம் கடும் கோபத்தில் உள்ளதை மக்கள் வெளிப்படுத்திய வண்ணம் உள்ளனர்

                        நாடு தழுவிய ரீதியில் கரத்தால் இடம்பெற்று வருகிறது ,


                        இதுவரை மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து பதவி


                        விலக கோட்டபாய மறுத்து வருகின்றமை குறிப்பிட தக்கது

                          Posted in Uncategorized

                          நாடெங்கும் அரசுக்கு எதிராக போரட்டம் – வீதிகள் அடித்து பூட்டு

                          நாடெங்கும் அரசுக்கு எதிராக போரட்டம் – வீதிகள் அடித்து பூட்டு

                          இலங்கையில் ஆளும் அரசுக்கு எதிராக நாடளாவிய ரீதியில் மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்


                          இவர்கள் போராட்டத்தினால் நாட்டின் இயல்பு வாழ்வு முடக்க பட்டுள்ளது

                          வடக்கு கிழக்கு உள்ளிட்ட பகுதிகளும் தமிழர்கள் கடையடைப்பு மற்றும் வீதி


                          மறுப்பு போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர்

                            Posted in Uncategorized

                            போலீசார் மக்கள் மோதல் – காவலரண் தீக்கிரை – 12 பேர் காயம்

                            போலீசார் மக்கள் மோதல் – காவலரண் தீக்கிரை – 12 பேர் காயம்

                            அம்பாறை அக்கரைப்பற்று பால முனை பகுதியில் காவல் கடமையில் ஈடுபட்டு கொண்டிருந்த


                            போலீசாருக்கும் மக்களுக்கும் இடையில் பெரும் மோதல் ஒன்று இடம்பெற்ற்றுள்ளது

                            ஊந்துருளி ஒன்றை காவலரண் தடை வழியாக செல்ல போலீசார் அனுமதித்துள்ளனர்

                            ,எனினும் அந்த வண்டி விபத்தில் சிக்கியது ,இதனை அறிந்த ஊர் மக்கள் திரண்டு வந்து அங்கு கடமையில் இருந்த போலீசாரை தாக்கினர்

                            இதில் அதிகாரிகள் உள்ளிட்ட பண்ணிரெண்டு பேர் பலத்த காயங்களுக்கு உள்ளாகினர்

                            போலீசார் நடத்திய துப்பாககி சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார் ,தொடர்ந்து பதட்டம் நிலவுகிறது

                              Posted in இலங்கை செய்திகள்

                              இலங்கையில் நான்காவது கொரனோ ஊசி

                              இலங்கையில் நான்காவது கொரனோ ஊசி

                              இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயினை தடுப்பதற்கு தற்போது நான்காவது

                              தடுப்பூசி செலுத்த பட்டு வருகிறது

                              இந்த ஊசியினை யாவரும் கண்டிப்பாக செலுத்த வேண்டும் என தெரிவிக்க பட்டுளள்து

                                Posted in Uncategorized

                                பிச்சைக்கரா வேடமிட்டு வீடுகளில் கொள்ளை – மடக்கிய போலீஸ்

                                பிச்சைக்கரா வேடமிட்டு வீடுகளில் கொள்ளை – மடக்கிய போலீஸ்

                                இலங்கை பாணந்துறை பகுதியில் தனியாக வசிக்கும் பெண்களை இலக்கு வைத்து நடத்த பட்ட கொள்ளை அம்பலமாகியுள்ளது

                                பகலில் இவர்கள் வீடுகளுக்குள் பிச்சைக்கார வேடத்தில் செல்லும் நபர்கள் அவர்களை அங்கு நோட்டமிட்டு


                                இரவில் கூரிய ஆயுதங்களை தாங்கிய வண்ணம் வீட்டு கதவுகளை உடைத்து கொள்ளையில் ஈடுபட்டு வந்துள்ளமை அம்பலமாகியுள்ளது

                                கைதானவர்களிடம் இருந்து நகைகள்,மற்றும் பணம் என்பன மீட்க பட்டுள்ளன ,

                                தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .மக்களே உசார் ,கொள்ளையர்கள் உங்கள் அருகில்,

                                  Posted in Uncategorized

                                  அலிசப்ரி வாகனத்தில் மோதுண்டு ஒருவர் மரணம்

                                  அலிசப்ரி வாகனத்தில் மோதுண்டு ஒருவர் மரணம்

                                  அலிசப்ரி எம்பியின் வாகனத்தில் மோதுண்டு ஒருவர் பலியாகியுள்ளார்

                                  இந்த விபத்து கடந்த இரவு இடம்பெற்றுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்

                                  குறித்த விபத்து தொடர்பிலான விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

                                    Posted in Uncategorized

                                    இலங்கை வந்தடைந்த இந்தியா எண்ணெய் கப்பல்

                                    இலங்கை வந்தடைந்த இந்தியா எண்ணெய் கப்பல்

                                    இலங்கைக்கு இந்தியா தொடரந்து அவசர உதவிகளை வழங்கிய வண்ணம் உள்ளது

                                    ,கொழும்பு துறைமுகத்திற்கு 440,000 மெட்ரிக் தொன் எடையுள்ள எண்ணெய்களை

                                    தாங்கிய வண்ணம் இந்த கப்பல் வந்தடைந்துள்ளது

                                    சமீப காலங்களாக இலங்கைக்கு இந்தியா அவசர வசர உதவிகளை வழங்கியவண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது

                                      Posted in Uncategorized

                                      இலங்கை நாடாளுமன்றத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு மனோ கணேசன் நன்றி தெரிவித்து உரை

                                      இலங்கை நாடாளுமன்றத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு மனோ கணேசன் நன்றி தெரிவித்து உரை

                                      பொருளாதார நெருக்கடி எங்களுக்கு புதிதல்ல. வடகிழக்கில் யுத்தம் காரணமாகவும், மலைநாட்டு தோட்டங்களில் யுத்தமில்லாமலும் பல்லாண்டுகளாக இந்த “உணவில்லை, மருந்தில்லை” என்ற பொருளாதார நெருக்கடி விடயங்கள் நிலவின. ஆகவே அவை

                                      எமக்கு புதிதல்ல. ஆனால், இந்நாட்டின் ஒட்டு மொத்த மக்களுக்கு இன்றைய நெருக்கடி புதிது. ஆகவேதான் நாடு முழுக்க போராட்டங்கள் நிகழ்கின்றன.

                                      இந்த பின்னணியில், தமிழர்களுக்கு மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த இலங்கையருக்கும் உதவ தீர்மானித்து, அதற்காக இந்திய ஒன்றிய அரசின் அனுமதியையும், இலங்கை அரசின் ஒப்புதலையும் பெற்றதன் மூலம், ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்

                                      வாழ்ந்த, எங்கள் தமிழறிஞர் கணியன் பூங்குன்றனாரின் “யாதும் ஊரே; யாவரும் கேளீர்” என்ற கூற்றுக்கு மெய்யான சமகால அர்த்தத்ததை வெளிப்படுத்தி உள்ளீர்கள் என தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை விளித்து இன்று இலங்கை நாடாளுமன்றத்தில்

                                      உரை நிகழ்த்திய தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர், இலங்கை தலைநகர கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் கூறியுள்ளார்.

                                      தமுகூ தலைவர் மனோ கணேசன் பா.உ. தனது உரையில் மேலும் கூறியுள்ளதாவது,

                                      இலங்கை ஒருபோதும் இல்லாத விதத்தில் நெருக்கடியை சந்தித்த இவ்வேளையில், இதற்கு எவர் பொறுப்பு கூற வேண்டும் என இச்சபையில் சண்டை இடும்

                                      இவ்வேளையில், இருண்ட குகைக்குள் ஒரு ஒளிக்கீற்றாக நிகழ்ந்த ஒரு நிகழ்வை இந்த மாமன்றத்தின் கவனத்துக்கு, தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர், தலைநகர மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறைகளில் கொண்டு வர விரும்புகிறேன்.

                                      இந்தியாவின் தமிழ் மாநில தமிழ்நாடு அரசின் சார்பில் தமிழக முதல்வர் கெளரவ மு.க. ஸ்டாலின், கண்ணீரால் சூழ்ந்துள்ள இலங்கையில் வாழும் அனைத்து மக்களுக்காகவும் நிவாரண உதவிகளாக அரிசி, பால்மா, மருந்து ஆகியவற்றை வழங்க உள்ளதாக

                                      அறிவித்துள்ளார். அதற்கான ஒன்றைய அரசின் அனுமதியையும், இலங்கை அரசின் ஒப்புதலையும் அவர் பெற்றுள்ளார்.

                                      ஆரம்பத்தில் இலங்கையில் வாழும் தொப்புள் கொடி உறவுகளான தமிழருக்கு மாத்திரம் உதவ போகின்றோம் என முதல்வர் கூறிய போது, இலங்கை வாழ் தமிழக வம்சாவளி மலையக தமிழர் சார்பில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவராக

                                      நானும், வடகிழக்கில் வாழும் இலங்கை வம்சாவளி ஈழத்தமிழர் சார்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளராக நண்பர் சுமந்திரனும், ஒரு செய்தியை நேரடியாகவும், ஊடகங்கள் மூலமாகவும் முதல்வர் ஸ்டாலினுக்கு அனுப்பினோம்.

                                      “முதல்வர் அவர்களே, இலங்கையில் இன்று நாம் அனைவரும் நெருக்கடியில் இருக்கின்றோம். நாம் அனைவரும் போராடுகிறோம். சிங்களவர், தமிழர், முஸ்லிம்,

                                      பெளத்தர், இந்து, இஸ்லாம், கிறிஸ்தவர் என்ற பேதங்களை மறக்க ஆரம்பித்துள்ளோம். ஆகவே உங்கள் உதவிகள் எமது நாட்டின் அனைவருக்குமாக அனுப்பி வையுங்கள்” என கோரினோம்.

                                      முதல்வர் இதை சடுதியாக புரிந்துக்கொண்டு, மனதை உருக்கும் விதத்தில் சட்டமன்றத்தில் உரை நிகழ்த்தினார். ஒட்டுமொத்த இலங்கை மக்களுக்கும் உதவிடுவதாக கூறினார். அது தம் கடமை என்றார். இலங்கை நாட்டையோ, இலங்கை

                                      மக்களையோ, பிற நாட்டவராக பார்க்க தோன்றவில்லை என்றார். எங்கள் கண்கள் கலங்க அவரது உரையை நாம் செவி மடுத்தோம்.

                                      இலங்கை மக்களின் பசியை போக்கும் அதேவேளை, பால்குடி பாலகர்களின் அழுகையை போக்கும் அதேவேளை, நோய் நொடிகளை போக்கும் அதேவேளை, தமிழ்

                                      , சிங்கள மக்களுக்கும், தமிழகத்துக்கும், இலங்கைக்கும் இடையில் வரலாற்றுரீதியாக நிலவிய சந்தேகங்கள், அச்சங்கள், ஆகியவற்றையும் போக்கும் பாதையில் இது முதலடியாக அமைந்துள்ளது.

                                      தெற்கிலும், வட-கிழக்கிலும் வாழும் தமிழ் மக்களின் எதிர்காலம், சிங்கள மக்களுடனும், தமிழ் பேசும் முஸ்லிம் மக்களுடனும் பின்னி பிணைந்துள்ளது. இதுதான் இலங்கை இனப்பிரச்சினையின் அடிப்படை. இதை இன்று தமிழக முதல்வர்

                                      புரிந்துக்கொண்டுள்ளார் என நம்புகிறேன். தமிழக அரசுக்கும், தமிழக முதல்வருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகளை தெரிவிக்கிறோம்.