Tag: இலங்கை
இலங்கை வந்தடைந்த எரிவாயு கப்பல்
இலங்கை வந்தடைந்த எரிவாயு கப்பல்
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருங்கடியை திணைக்க தற்போது 2,000 மெற்றிக் தொன் எரிவாயுவுடனான கப்பல் ஒன்று இன்று காலை இலங்கையை வந்தடைந்ததாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த கப்பல் இலங்கையை வந்தடைந்த போதிலும் , இன்று எரிவாயு விநியோகிக்கப்படாது என லிட்ரோ நிறுவனம் முன்னதாக அறிவித்திருந்தது.
எரிவாயுடவை பெற்றுடை மக்கள் நீண்ட வரிசையில் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் முன் காத்துள்ளனர்
பல மைல்கள் தொலைவில் நீண்டு செல்லும் நிரையில் காத்து கிடந்த மக்களில் சிலர் மரணித்துள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது ,லிட்ரோ நிறுவனம் தம்மிடம் எரிபொருள்,எரிவாயு கையிருப்பில் இல்லை என கையைவிரித்து வருகிறது
இதனால் சில எரிபொருள் நிலையங்களில் மக்களுக்கும் ,லிட்ரோ நிறுவன ஊழியர்களுக்கும் இடையில் மோதல்கள் கூட இடம்பெற்றன
இலங்கை ஜனாதிபதி கோத்தபாயவின் தெளிவற்ற அரசியல் ,பொருளாதார கொள்கை காரணமாக இலங்கையில் இவ்விதமான பாரிய பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியது
இராணுவ தளபதியாக விளங்கியவர் இராணுவவ சிந்தனையில் நாட்டை ஆழ முயற்சித்து இன்று அவர்கள் ஆட்சி அதிகாரம் இழந்து மக்கள் மன்றில் அவமானப்பட்டு நாட்டை விட்டு ஓடும் நிலைக்கு ராஜபக்ச குடும்ப நிலை சிக்கியுள்ளது
வீட்டுக்கு சிறந்த தலைவன் இருந்தால் மட்டுமே நாட்டை கட்டியெழுப்ப அந்த தலைவனால் முடியும்
இவ்வாறான கோட்பாட்டு நிலையில் கோத்தபாய மேற்கொண்ட தவறான அரசியல் நகர்வும் பழிவாங்கும் அரசியல் வங்குரோத்தும் இன்று அவரை பெரும் நெருக்கடியில் சிக்க வைத்துள்ளது
இலங்கை வந்தடைந்த எரிவாயு கப்பல்
எரிபொருள் தட்டுப் பாட்டால் மக்களின் அத்தியாவசிய செயல் பாடுகள் செயலற்று போயின ,பேரூந்துகள்,லாரிகள்,முதல் விவசாயமும் செயல் இழந்து போயிற்று
இதனால் அன்றாட விவசாய ,உணவு உறபத்தியில் பெரும் வீழ்ச்சியும் ,மக்கள் வாழ்வாதாரத்திலும் பெரும் இடி வீழ்ந்துள்ளது
போரை வென்று மக்களின் மனங்களை வென்றதாக ஆணவ குதிரையில் ஆடி வந்த ராஜபக்ச குடும்பத்திற்கு இலங்கையில் பெரும் அடி வீழ்ந்துள்ளது ,
தமிழர்கள் முஸ்லீம் எதிரியாக விளங்கிய நிலையில் இன்று சொந்த சிங்கள மக்களுக்கும் இவர்களுக்கு எதிரியாக மாறியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
மக்கள் வாழ்வாதாரத்தில் நெருக்கடியை ஏற்படுத்திய நிலையிலே ராஜபாக்ச குடும்பம் வீழ்ச்சி நிலையில் சிக்கியுள்ளது
வீழ்ந்து போன இலங்கையில் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப வேண்டும் ,அப்பொழுதே ஆட்சியாளர்களின் மனங்களில் ,சிந்தனையில் மாற்றங்கள் ஏற்பட வேண்டும்
அப்பொழுதே எரிபொருள் கப்பல்கள் நாட்டை வந்தடையும் ,மீளவும் இலங்கை இயல்பு நோக்கி நடைபயிலும் ,எரிபொருள் விலை உயர்வு ,மின்சாரம் தட்டுப்பாடு ,காய்கறிகள் விலை உயர்வு ,உரத் தட்டுப்பாடு
இவ்வாறான நெருக்கடிகள் தொடர்ந்து சென்றால் ஆளும் ஆட்சியாளர்களை மக்கள் தூக்கி எறிவதை தவிர வேறு வழியில்லை என்பதே இலங்கையின் இன்றைய கள நிலவராம் எடுத்து கூறு விடயமாக உள்ளது
மாற்றங்கள் எழுந்திட அரசியல் தலைவர்கள் சிந்தனையில் மாற்றங்கள் ஏற்பட வேண்டும் என்பதே நிகழ்காலம் கூறும் விடயமாக பதிந்து கிடக்கிறது .
காணமால் போனவர் சடலமாக மீட்பு
காணமால் போனவர் சடலமாக மீட்பு
வீட்டில் இருந்து காணாமல் போனவர் ,கல்முனையில் பொது மைதானத்தில் சடலமாக மீட்கப்பட்ட்டுள்ளார்
குடும்பஸ்தரின் சடலம் ஒன்றே இவ்வ்ரு மீட்க பட்டு ,பிரேத பரிசோதனைக்காக கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது.
அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவில் உடையார் வீதியை சேர்ந்த 58 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான காளிக்குட்டி கணேசன் கடந்த வியாழக்கிழமை (2) மாலை காணாமல் போயிருந்தார்
இவ்வாறு காணமல் போன நிலையில் பொது மைதானத்தில் சடலமாக காணப்படுவதாக பொதுமக்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கி இருந்தனர்.
இந்நிலையில் சம்பவ இடத்திற்கு கல்முனை பொலிஸ் குழுவினர் சென்று விசாரணை மேற்கொண்டு தடயப்பொருட்களை ஆய்வு செய்துள்ளனர்.
காணமால் போனவர் சடலமாக மீட்பு
குறித்த சடலத்திற்கு அருகில் இருந்து அலறி விதைகள் மீட்கப்பட்டிருந்தன. சம்பவ இடத்தில் குடும்பத்தினர் அழைக்கப்பட்டு மேலதிக விசாரணைகள்
இடம்பெற்ற நிலையில் பிரேத பரிசோதனைக்காக கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை கல்முனை பொலிஸ் நிலைய பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.
இலங்கையில் தொடராக காணாமல் போபவர்கள் இவ்வாறு சடலமாக மீட்க பட்டு வருவது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
இலங்கையில் ஆளும் ஜனாதிபதி கோத்தபாய ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்ததன் பின்னர் நீர் நிலைகளில் மர்மமான முறையில் மக்கள் சடலங்கள் மீட்க படுகிறது
இது தமிழர் பகுதியை மட்டும் இன்றி தென் இலங்கை ஆதிக்க வெறி சிங்களவர்கள் வசிக்கும் பகுதியிலும் சடலங்கள் மீட்க பட்ட வண்ணம் உள்ளன
அணைத்து மரணங்களும் ஒப்பிட்டு பார்க்கும் பொழுதே ஓரே விதமான முறையில் மரணங்கள் உள்ளதே அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது
இவை திட்டமிடப்பட்ட குழு ஒன்றினால் மேற் கொள்ள படும் மர்ம படு கொலைகளின் பின்புலம் என கருத படுகிறது
ஜே ஆர் ஜேவர்தனா இலங்கையின் ஜனாதிபதியாக விளங்கிய பொழுது ஜேவிபி சகோதர படுகொலையை ஆரம்பித்து வைத்தார் ,நீர் நிலைகளில் மிக கோரமான முறையில் ஜேவிபி உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் அடித்து வீச பட்ட நிலையில் அந்த ஆண் பெண் சடலங்கள் மீட்க பட்டன
அது போலவே இப் பொழுது இலங்கையில் கோத்தபாய ராஜபக்சே ஆட்சியில் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிட தக்கது .-வன்னி மைந்தன் –
காதலி வீட்டை அடித்து நொறுக்கிய காதலன்
காதலி வீட்டை அடித்து நொறுக்கிய காதலன்
காதலி காதல் தொடர்பை நிறுத்தியதால் ஆத்திரமடைந்த காதலன் கடந்த முன் தினம் இரவு அவனது வீடு சென்று தனது காரால் காதலியின் வீட்டை சேதப்படுத்தியுள்ளஅடித்து நொறுக்கிய சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.
காதலன் தனது காரை ஓட்டிச் சென்று காதலியின் வீட்டின் கேட்டை உடைத்து அதன் பின்னர் அங்கிருந்தவர்களை குழு ஒன்றுடன் இணைந்து தாக்க முயற்சித்ததாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த முன் தினம் இரவு இரவு 10 மணியளவில் அனுராதபுரத்தில் உள்ள காதலியின் வீட்டிற்கு முன்பாக இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
காதலன் தனது காதலியின் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த காரையும் தனது காரை கொண்டு பலமுறை கடுமையாக மோதி சேதப்படுத்தியுள்ளார்.
அவர் தனது பெற்றோர் மீது கார் ஏற்றி கொலை செய்ய முயன்றதாக காதலி பொலிஸில் குறிப்பிட்டுள்ளார்.
இச்சம்பவத்தால் தான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாகவும், தனது உயிருக்கு ஆபத்து ஏற்படும் முன், இந்தப் பிரச்னைக்கு தீர்வு காணுமாறு பொலிஸாரிடம் குறித்த பெண் கோரிக்கை விடுத்துள்ளார்.
அனுராதபுரம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
யாழ் மக்களுக்கு 5000 வழங்கும் அரசு
யாழ் மக்களுக்கு 5000 வழங்கும் அரசு
இலங்கை வடக்கு யாழ்ப்பாண பகுதியில் வசிக்கு சமூர்த்தி பணியாளர்களுக்கு ஐந்தாயிரம் ரூபா அவர்களின் வங்கியில் வைப்பிலிட பட்டு வருவதாக யாழ்ப்பாண அரச அதிபர் தெரிவித்துள்ளார்
யாழ் மக்களுக்கு 5000 வழங்கும் அரசின் செயல் திட்டம் தற்கால நிலையில் மக்களுக்கு மகிழ்வை தருகிறது ,எனினும் அனைத்து பணியார்களுக்கும் கட்டம் கட்டமாக இந்த பணம் வழங்க படும் என தெரிவிக்க படுகிறது
எதிரிகளாக தமிழர்களை பார்க்கும் ஆளும் கோத்தபாயா அரசினால் , இந்த மக்களின் கோரிக்கைகள்
உரிய முறையில் நடைமுறை படுத்த படுமாஎன்ற சந்தேகம் எழுந்துள்ளது
யாழ் மக்கள் ஆளும் கோட்டா அரசுக்கு எதிராக, எதிர் போராட்டங்களில் ஈடுபடாத பொழுதும் ,புலி தமிழர்கள் என ஆளும் அரச இனவாதம் முத்திரை குத்தி வைத்து பழிவாங்கும் அரசியலை நடத்தி வருகின்றமை தெரிந்ததே.
யாழ் மக்கள் ஆளும் கோட்டா அரசுக்கு எதிராக, எதிர் போராட்டங்களில் ஈடுபடாத பொழுதும் ,புலி தமிழர்கள் என ஆளும் அரச இனவாதம் முத்திரை குத்தி வைத்து பழிவாங்கும் அரசியலை நடத்தி வருகின்றமை தெரிந்ததே.
சுமந்திரன் வீட்டருகில் இராணுவ சிப்பாய் மரணம்
சுமந்திரன் வீட்டருகில் இராணுவ சிப்பாய் மரணம்
தமிழ் தேசிய கூட்டமைப்பின் முக்கிய உறுப்பினராக விளங்கி வரும் சுமந்திரன் வீட்டின் அருகில்
இலங்கை இராணுவ சிப்பாய் ஒருவர் மதற்கொலை புரிந்துள்ளார்
இவரது இந்த மரணம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது ,
இருபத்தி இரண்டு வயதான இந்த இளம் சிப்பாய் தன்னை தானே சுட்டு தற்கொலை புரிந்துள்ளதாக முதல்கட்ட விசாரங்களில் தெரிய வந்துள்ளது
தமிழ் தேசிய கூட்டமைப்பின் சுமன் சுமந்திரன் வீடருகில் இடம்பெற்ற இராணுவ சிப்பாய் தற்கொலை சமபவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது
இலங்கை இராணுவத்தின் இளம் இராணுவ சிப்பாய் மேற்கொண்ட இந்த தற்கொலை சம்பவவத்திற்கு உரிய காரணம் இதுவரை தெரியவில்லை
சமீப காலங்களாக இலங்கை இராணுவ சிப்பாய்கள் இவ்விதமான தற்கொலை சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றமை அதிகரித்து செல்கின்றது
இது அவர்கள் உளவியல் உரனில் ஏற்பட்ட
அதீத தாக்கம் காரணமாக இடம் பெருகின்றமை குறிப்பிட தக்கது
தமிழ் கட்சிகளை நட்புடன் பாருங்க-மனோ கணேசன்
தமிழ் கட்சிகளை நட்புடன் பாருங்க-மனோ கணேசன்
ஒடுக்கப்படும் தமிழ் கட்சிகளை நட்புடன் பாருங்கள். நாம் அன்றிலிருந்து “கோடா-கோ-ஹோம்”தான்..!
போராட்டக்கள அனைத்து கட்சி போராளிகள் குழுவிடம் மனோ கணேசன்
“தம்பி, இந்நாட்டில் ஜனாதிபதியாக. பிரதமராக நாம் துடிதுடிக்கவில்லை. அப்படி துடியாய் துடிக்கும் பெருங்கட்சிகளை ஒரு கூடையில் போடுங்கள்.
எம்மை போன்ற ஒடுக்கப்பட்ட மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் முற்போக்கு கட்சிகளை வேறு விதமாக பாருங்கள். இந்நாட்டில் ஜனாதிபதியாக. பிரதமராக எமக்கு தகுதி இல்லாமல் இல்லை. அவை நிச்சயமாக எமக்கு இருக்கின்றன.
ஆனால், நாம் பேரினவாதத்தால் ஒடுக்கப்பட்டுள்ள எமது மக்களை விடுவிக்கவே இன்று துடிக்கிறோம்.” என தமிழ் முற்போக்கு கூட்டணியை சந்தித்த போராட்டக்கள அனைத்து கட்சி போராளிகள் குழுவிடம் மனோ கணேசன் எம்பி தெரிவித்தார்.
தமிழ் முற்போக்கு கூட்டணி- அனைத்து கட்சி போராளிகள் குழு சந்திப்பு, இன்று கூட்டணி தலைவர் மனோ கணேசன் இல்லத்தில் நிகழ்ந்தது. தமிழ் முற்போக்கு
கூட்டணியின் பிரதி தலைவர் பழனி திகாம்பரமும் இச்சந்திப்பில் கலந்துக்கொண்டார். இதுபற்றி மனோ எம்பி மேலும் கூறியதாவது,
தமிழ் முற்போக்கு கூட்டணிக்கும், காலிமுகதிடல், “அனைத்து கட்சி போராளிகள்” (அகபோ) தூதுக்குழுவினக்கும் இடையில் எனது இல்லத்தில் நிகழ்ந்தது. இந்த சந்திப்பில்
திகாம்பரம் எம்பியும் கலந்துக்கொண்டார். அனைத்து கட்சி போராளிகள்” (அகபோ) சார்பில், விபீதக பொத்துவகே, நிராஷான் விதானகே, மனிஷ் கலப்பத்தி, கெலும் அமரதுங்க ஆகியோர் கலந்துக்கொண்டனர்.
இன்றைய அரசியல் நிலைமைகள் தொடர்பில் நடைபெற்ற பேச்சுகளின் போது, தொடர்ந்து தமுகூ-அகபோ இடையில் பரஸ்பர தொடர்புகளை பேணி செயற்படுவது என்று முடிவானது. மலையக மக்கள், இலங்கை தேசிய தளத்தில் உள்வாங்கப்படுவது தொடர்பான, தமுகூ யின் மலையக அபிலாஷை ஆவணமும் அனைத்து கட்சி போராளிகளுக்கு வழங்கப்பட்டது.
இவர்களிடம் தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பில் நான் எடுத்து கூறியது, “தம்பி, நாட்டில் ஜனாதிபதி, பிரதமர் ஆக வேண்டும் என துடியாய் துடிக்கும் பெருங்கட்சிகளை
ஒரு கூடையில் போடுங்கள். எம்மை போன்ற ஒடுக்கப்பட்ட மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் முற்போக்கு கட்சிகளை வேறு விதமாக பாருங்கள்”
“தமிழர்களாகிய எங்களுக்கு இந்த உணவு இல்லை, மின்சாரம் இல்லை,.. என்பவை பழகிப்போன பிரச்சினைகள். போர் காலத்தில் பல்லாண்டுகளாக தமிழ் மக்கள் இப்படி
வாழ்ந்தார்கள். மலை நாட்டில் போர் இல்லாமலேயே நம் மக்கள் தோட்ட சிறைகளுக்குள் இப்படிதான் வாழ்கிறார்கள்.”
தமிழ் கட்சிகளை நட்புடன் பாருங்க-மனோ கணேசன்
“கலவர காலங்களில் எங்கள் வீடுகள் எரிக்கப்பட்டன. எம் மக்கள் கொல்லப்பட்டார்கள். ஆகவே இவை எமக்கு சகஜம். ஆகவே புதிய இலங்கையை உருவாக்குவோம். இவை அனைத்திற்கும் தீர்வு தேடுவோம். மாற்றத்தை கொண்டு வர சொல்லிவிட்டு, நீங்கள்
ஓரமாய் ஒதுங்கி நிற்காதீர்கள். அந்த தேடலில் நீங்களும் நேரடியாக பங்களியுங்கள். அந்த தீர்வு உணவு, மின்சாரம், எரிவாயு ஆகியவற்றுக்கு அப்பால் இருக்க வேண்டும்.”
“மலையக தமிழ் மக்களில் மூன்றில் ஒரு பகுதியினர் தோட்டங்களில் பின்தங்கி வாழ்கின்றனர். அவர்களை தேசிய தளத்தில் உள்வாங்க அரசு இயந்திரத்தில் பெரும் தயக்கம் காணப்படுகிறது. அதை நாம் முறியடிப்போம். நீங்களும் உதவ வேண்டும்.”
இவற்றுக்கு, அனைத்து கட்சி போராளிகள் (அகபோ)
சார்பில் பதிலளித்த பேச்சாளர் கெலும் அமரதுங்க கூறியதாவது,
“நாம் உங்களை தேடி வந்து சந்தித்தமைக்கு காரணம் உண்டு. ஏனைய தமிழ்,
முஸ்லிம் கட்சிகளையும், ஜனநாயக கட்சிகளையும் நாம் சந்திக்கிறோம்.
இன்று விலகி போக இருந்த கோதாபய ராஜபக்ச,
ரணில் விகிரமசிங்கவின் உள்நுழைவால் கொஞ்சம் மூச்சு வாங்குகிறார்.
நாம் எதிர்பார்க்கும் மாற்றம் நீங்கள் கூறுவது போன்று,
உணவு, மின்சாரம் ஆகியவற்றுக்கு அப்பால் ஆனது. அதில் நாம் இந்நாட்டின் அனைத்து இன,
மத மக்களுடன் பயணிக்க விரும்புகிறோம். நாம் பலரை சந்தித்தோம்.
மாற்றத்துக்காக எம்மை நேரடியாக பங்களிக்கும்படி இதுவரை யாரும் கூறவில்லை.
நீங்கள்தான் திறந்த மனதுடன் அதை கூறுகிறீர்கள். உங்களுடன் தொடர்புகளை பேண விரும்புகிறோம்.
மலையக தமிழ் மக்களையும் நாம் சரிசமமாக கவனத்தில் எடுப்போம்.”
குளத்தில் மிதந்த பெண் சடலம்
குளத்தில் மிதந்த பெண் சடலம்
காணமால் போன இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவர் குளத்தில் இருந்து சடலமாக மீட்க பட்டுள்ளார்
மருதமுனையில் காணமல் போன் தாயை தேடிய உறவுகளுக்கு, இவரது சடலம் குளத்தில் மிதந்த நிலையில் கண்டு பிடிக்க பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
மீட்க பட்ட சடலம் மருத்துவ சுடல பரிசோதனைக்கு எடுத்து செல்ல பட்டுள்ளது
சமீப நாட்களில் நீர் நிலைகளில் தொடராக மனித சடலங்கள் மிதந்த வண்ணம் உள்ளது
இந்த மர்ம கொலைகளின் பின்புலத்தில் கோட்டாவின் நிழல் டிவிஷன் படைகள் செயல் படுகிறதா என்ற அச்சத்தை தோற்றுவித்துள்ளது
காணாமல் போவார்கள் ,பலர் இவ்விதம் குளத்தில் ,
நீர் நிலைகளில் சடலங்களாக மீட்க பட்டு வருகின்றமை மேற்படி சந்தேகத்தை வலுப்படுத்தியுள்ளது
ரணிலுடன் கட்சி தலைவர்கள் சந்திப்பு
ரணிலுடன் கட்சி தலைவர்கள் சந்திப்பு
இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் கட்சி தலைவர்
சந்தித்த பேசுகின்றனர்
ரணிலுடன் நடந்த படும் இந்த சந்திப்பின் பொழுது , நாட்டில் நிலவும் நெருக்கடி மற்றும், அதற்கான தீர்வு தொடர்பில் பேச படும் என எதிர் பார்க்க படுகிறது
கடைசி தலைவர்கள் சந்திப்பு இலங்கைக்கு மேலும் பணத்தை பெற்று கொடுக்கும்
நல்லெண்ண வாய்ப்பாக மாற்றுவதற்கு ரணில் விக்கிரமசிங்கா முனைய கூடும் என எதிர் பாக்க படுகிறது
ரணிலுடன் ஒன்று சேரமாட்டடோம் என கூச்சலிட்ட கட்சி தலைவர்கள் இந்த சந்திப்புக்களுக்கு தயாராகி செல்கின்றமை கவனிக்க தக்கது
சீனா மருத்துவ பொருட்கள் இலங்கை வந்தன
சீனா மருத்துவ பொருட்கள் இலங்கை வந்தன
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக தற்பொழுது
இலங்கைக்கு 500 மில்லியன் மருத்துவ உதவிகள் பொருட்களை வழங்கியுள்ளது
முதல் கட்டமாக இந்த தொகுதிகள் வந்தடைந்துள்ளது ,மேலும் இரு கட்டங்களில் ஏனைய மருத்துவ பொருட்கள் வந்தடையும் என சீனா தெரிவித்துள்ளது
வரும் வாரங்களில் அரசின் உதவிகள் முழுமையாக வந்தடையும் என எதிர்பார்க்க படுகிறது
உலக வங்கியிடம் 3 பில்லியன் கடன் கேட்டு அடம் பிடிக்கும் இலங்கை
உலக வங்கியிடம் 3 பில்லியன் கடன் கேட்டு அடம் பிடிக்கும் இலங்கை
இலங்கையின் நெருக்கடியை தீர்ப்பதற்கு உலக வங்கியிடம் இலங்கை மூன்று
பில்லியன் அமெரிக்கா டொலர்களை வாங்கிட பேச்சுக்களில் ஈடுபட்டுள்ளது
இந்த கடனை பெற்றாலும் இலங்கைக்கு அவை போதுமானதாக இல்லை
இந்தியா சீனாவிடம் பெற்று கொண்ட கடன்களை மீள் செலுத்துவதற்கே போதாமை
உள்ளது ,ஆனால் அதை தெரிந்தும் மேலும் நாட்டை படுபாதாளத்தில் தள்ளிடவும் ,
தமது அரசை தக்க வைத்து கொள்ளவும் பிச்சை கேட்டு நிற்கிறது இலங்கை பேரினவாதம்
இலங்கையில் ஜனாதிபதியாகும் பசில் – என்ன தான் நடக்கிறது
இலங்கையில் ஜனாதிபதியாகும் பசில் – என்ன தான் நடக்கிறது
அரசியலமைப்பின் 21ஆவது திருத்தம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படுவதற்கு முன்னர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகினால் பசில் ராஜபக்ஷ
ஜனாதிபதியாக வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார சுட்டிக்காட்டியுள்ளார்.
21ஆவது அரசியலமைப்புத் திருத்தம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் ஜனாதிபதி
கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகினால் இவ்வாறானதொரு நிலைமை ஏற்படாது என வாசுதேவ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இலங்கைக்கு உதவ சீனா தயாராம் -பொறியில் சிக்கும் இலங்கை
இலங்கைக்கு உதவ சீனா தயாராம் -பொறியில் சிக்கும் இலங்கை
நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியை சமாளிக்க சீன தூதுவர் Qi Zhenhong, 5 வகையான உதவிகள் தொடர்பில் விபரித்துள்ளார்.
அதாவது வேகமாக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், அதிகளவான வெளிநாட்டு நேரடி முதலீடு, வர்த்தகம், இரு தரப்பு கடன் தீர்வு மற்றும் இலங்கைக்கான ஆதரவு
ஆகியவற்றை கருத்தில் கொண்டு சீனாவிடம் இருந்து இலங்கைக்கு ஐந்து வழி முறையிலான உதவிகளை எடுத்துரைத்தார்.
கடந்த மே 24 அன்று அவர் தனது மனைவி ஜின் கியான் உடன் இலங்கையின் கிழக்கு மாகாணத்திற்கு மூன்று நாள் பயணத்தை திருகோணமலையில் இருந்து
தொடங்கினார், இவர்களுக்கு ஆளுநர் மற்றும் பல்வேறு தரப்பினரின் அன்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
தூதுவர் மற்றும் அவரது மனைவி Jin Qian ,சீன வர்த்தக சபை பிரதிநிதிகளுடன் வணிக மன்றத்தில் சந்திப்பு இடம்பெற்றது. அதன்போது இலங்கை எதிர்கொண்டுள்ள
தற்போதைய பொருளாதார நெருக்கடிகளை சமாளிக்க,
சீன அரசு அதிக முதலீட்டை வழங்கி ஊக்குவிக்க எண்ணி உள்ளதாக தெரிவித்துள்ளார்
40,000 மெட்ரிக் தொன் டீசல் இலங்கைக்கு
40,000 மெட்ரிக் தொன் டீசல் இலங்கைக்கு
மேலும் 40,000 மெட்ரிக் தொன் டீசலுடனான கப்பல் இலங்கையை வந்தடைந்துள்ளதாக
தெரிவிக்கப்படுகின்றது.
இந்திய உதவித்திட்டத்தின் கீழ் இந்த கப்பல் நேற்று மாலை கொழும்பை வந்தடைந்துள்ளது.
வீரவன்சவின் மனைவி மீதான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
போலியான ஆவணங்களை பயன்படுத்தி, இராஜதந்திர கடவுச்சீட்டை பெற்றார் என்றக்
குற்றசாட்டின் கீழ், 2 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர்
விமல் வீரவன்சவின் மனைவி சஷீ வீரவன்சவின் பிணை மனு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
பிணை மனுமீதான விசாரணை, கொழும்பு நீதவான் நீதிமன்றத்தால், நாளை (31) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
ஈழப்பிரச்சினையை இதைவிட தெளிவு படுத்த முடியாது video
ஈழப்பிரச்சினையை இதைவிட தெளிவு படுத்த முடியாது
இலங்கையில் நடந்தேறிய இனப்படுகொலையும் ,அதன் பின்னால் ஆளும் மோடி அரசு அதனை எவ்வாறு தீர்க்க முயல்கிறது என்பது தொடர்பாக ஆளும் மோடி கட்சியின்
தமிழக தலைவர் அண்ணாமலை ,எடுத்துரைத்த விகிதம் ,அதில் உள்ள முடிச்சு
அவிழ்ப்புக்கள் ,கண்ணுற்ற தமிழர்களை வியப்பில் அலாதியுள்ளதுடன் ,அவரின் அரசியல் தோலை தூர பார்வை என்பது வியக்க வைத்துள்ளது
இது மேடை பேச்சு அல்லது தீர்வு நோக்கி இந்தியா நகர்கிறதா என்பதை காலம் தீர்மானிக்க வேண்டும்
ஐயா அண்ணாமலை அவர்களுக்கு ஈழ தமிழர்கள் சிறப்பாக எமது ஆதரவையும்,வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறோம்
விரைவில் புதிய அரசியல் கூட்டணி
விரைவில் புதிய அரசியல் கூட்டணி
புதிய அரசியல் கூட்டணி ஒன்று விரைவில் உருவாக்கப்படும் என தேசிய சுதந்தி
ர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
மேலும், பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் கட்சிகளின் பூரண
சம்மதத்துடன் சுயாதீன கட்சிக்கு என்று தலைவர்
ஒருவர் தெரிவு செய்யப்படுவார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்
இலங்கையில் விபச்சாரத்தில் ஒன்பது லட்சம் பெண்கள்
இலங்கையில் விபச்சாரத்தில் ஒன்பது லட்சம் பெண்கள்
பாலியல் தொழிலாளர்களை பொலிஸார் துன்புறுத்தக்கூடாது. அவர்களை கண்ணியத்துடன் நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொரோனா பெருந்தொற்று காலத்தில் பாலியல் தொழிலாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். அவர்களுக்கு ரேஷனில் உணவுப் பொருள்கள், நிதியுதவி வழங்க
வேண்டும் என்று கோரி தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை நீதிபதிகள் நாகேஸ்வர ராவ், பி.ஆர்.கவாய், ஏ.எஸ்.போபண்ணா அமர்வு விசாரித்து வருகிறது.
இவ்வழக்கு அண்மையில் விசாரணைக்கு வந்தது. அப்போது தொண்டு நிறுவனம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஆனந்த் குரோவர் கூறும்போது, “நாடு முழுவதும் 9
லட்சத்துக்கும் மேற்பட்ட பாலியல் தொழிலாளர்கள் உள்ளனர். அவர்களை பொலிஸார் மோசமாக நடத்துகின்றனர். பாலியல் வழக்கில் கைதாகும் பெண்கள், அவர்களது
விருப்பத்துக்கு மாறாக காப்பகங்களில் சேர்க்கப்படுகின்றனர். இந்த நடைமுறைக்கு தடை விதிக்க வேண்டும்” என்று கோரினார்.
மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஜெயந்த் கூறும்போது, “பெண்கள் கடத்தப்பட்டு பாலியல் தொழிலில் தள்ளப்படுகின்றனர். அவர்களின் பாதுகாப்புக்காகவே காப்பகங்களில் சேர்க்கப்படுகின்றனர்” என்று வாதிட்டார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:
விருப்பத்துடன்கூடிய பாலியல் தொழில் சட்டபூர்வமானது. எனினும் பாலியல் விடுதிகள் நடத்துவது சட்டவிரோதம். பெரும்பாலான நேரங்களில் பாலியல் தொழிலாளர்களை
பொலிஸார் மோசமாக நடத்துகின்றனர். இந்த அணுகுமுறையை கைவிட வேண்டும். அவர்களை உடல் ரீதியாகவோ, வார்த்தைகளாலோ பொலிஸார் துன்புறுத்தக்கூடாது.
கண்ணியமாக நடத்த வேண்டும். அவர்களை கைது செய்யக்கூடாது. அபராதம் விதிக்கக்கூடாது. பாலியல் தொழிலாளர்கள் முறைப்பாடு செய்தால், அதன்பேரில் பொலிஸார் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு வழங்கப்படும் அனைத்து வசதிகளையும் பாலியல் தொழிலாளர்களுக்கும் வழங்க வேண்டும். காப்பகங்களில்
தங்க வைக்கப்பட்டிருக்கும் பாலியல் தொழிலாளர்கள் குறித்து மாநில அரசுகள் ஆய்வு செய்ய வேண்டும்.
விருப்பத்துக்கு மாறாக அவர்கள் தங்க வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தால்,
அவர்களை வீட்டுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாலியல் தொழிலாளர்களின் அடையாளம்,
பெயர்களை ஊடகங்கள் வெளியிடக்கூடாது. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
வழக்கின் அடுத்த விசாரணை ஜூலை 27-ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
வீதியில் கவிழ்ந்த எரிபொருள் பவுசர்- ஓடிய பெட்ரோல்
வீதியில் கவிழ்ந்த எரிபொருள் பவுசர்
குருநாகலில் எரிபொருள் பவுசர் ஒன்று வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
கொழும்பில் இருந்து கிண்ணியா நோக்கி எரிபொருளை ஏற்றிக் கொண்டு சென்ற பவுசர் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்து ஏற்படும் போது பவுசரில் 13,200 லீற்றர் பெற்றோல் இருந்துள்ளதுடன் பெருமளவிலான எரிபொருள் இதன்போது கசிந்து வீணாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குருநாகல் தீயணைப்புப் பிரிவினரின் பெரும் முயற்சியின் பின்னர் பவுசர் மீண்டும் வீதிக்கு கொண்டுவரப்பட்டது.
பாரபட்சம் காட்டும் வைத்தியசாலை நிருவாகத்திற்கு எதிரான கவனயீர்ப்பு போராட்டம்!
பாரபட்சம் காட்டும் வைத்தியசாலை நிருவாகத்திற்கு எதிரான கவனயீர்ப்பு போராட்டம்!
பைஷல் இஸ்மாயில் –
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் கடமையாற்றுகின்ற சுகாதார ஊழியர்களின் மேலதிக நேரக் கொடுப்பனவு குறைப்பிற்கு எதிராகவும் அதனை வழங்கக்கோரிய ஒரு மணிநேர கவனயீர்ப்பு அடையாள வேலை நிறுத்தப்
போராட்டத்தை நாளை (27) முன்னெடுக்கவுள்ளதாகவும் வைத்தியசாலையின் சுகாதார தொழில் வள்லுனர்கள் ஒன்றியத்தின் தலைவரும், தாதிய உத்தியோகத்தருமான ஏ.ஆர்.விஷாம் தெரிவித்தார்.
வைத்தியசாலையில் கடமையாற்றுகின்ற ஊழியர்கள் அனைவரும் ஒன்றினைந்து நாளை காலை 9.30 மணி தொடக்கம் 10.30 மணிவரை வைத்தியசாலைக்கு முன்பாக
கவனயீர்ப்பு அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பில், அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போது நாட்டில் நிலவுகின்ற எரிபொருள் பற்றாக்குறை மற்றும் விலையேற்றம் போன்ற பல பிரச்சினைகளுக்கு மத்தியில் தாதிய உத்தியோகத்தர்கள், மருத்துவ ஆய்வுனர்கள், ஒளிப்பதிவு
இயக்குனர்கள், மருத்துவ மாதுக்கள், E.C.G தொழில் நுட்பவியலாளர்கள், கண்பார்வை தொழில் நுட்பவியலாளர்கள் ஆகியோர் வைத்தியசாலைக்கு வருகைதந்து தங்களின்
கடமைகளில் எவ்வித குறைகளுமின்றி பொதுமக்களுக்கான சேவைகளை வழங்கி வருகின்ற இந்நிலைமையில் அவர்களின் முழுமையான மேலதிக நேரக் கொடுப்பனவை வைத்தியசாலை நிருவாகம் வழங்க மறுத்துள்ளது.
கடந்த 2022.05.13 ஆம் திகதி அரசினால் வெளியிடப்பட்ட சுற்று நிருபத்திற்கமைவாக, வைத்தியசாலையின் நிருவாகத்திடம் கலந்துரையாடியபோது, அவரவர்களின்
அடிப்படைச் சம்பளத்திற்கேற்ப எல்லோருக்கும் சமமாக முழுமையான மேலதிக நேரக் கொடுப்பனவுகள் வழங்கப்படும் என்று நிருவாகத்தினர் தெரிவித்திருந்தபோதும்,
கடந்த ஏப்ரல் மாதக் கொடுப்பனவை முழுமையாக வைத்தியர்களுக்கு மட்டும் வழங்கிவிட்டு ஏனை சுகாதார ஊழியர்களுக்கு பூரணமாக வழங்க மறுத்துவிட்டனர்.
அரசினால் வெளியிடப்பட்ட சுற்று நிருபத்திற்கு முரனாகவும்,
வைத்தியர்களைத் தவிர ஏனைய சுகாதார ஊழியர்களுக்கு பாரபட்சம் காட்டும் செயற்பாடுகளை
வைத்தியசாலை நிருவாகத்தினர் முன்னெடுத்து வருகின்ற விடயங்களை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.
எங்களுக்கான சரியான தீர்வினை எதிர்வரும் 30 ஆம் திகதிக்குள் வழங்கவேண்டும் இல்லை எனில்
தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு முன்வைக்கப்பட்டு அதற்கான போராட்டங்களை முன்னேடுக்கவுள்ளோம்
என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
நாட்டை விட்டு தப்பி ஓடிய மகிந்த மகனின் மனைவி – நாடு திரும்பினார்
நாட்டை விட்டு தப்பி ஓடிய மகிந்த மகனின் மனைவி – நாடு திரும்பினார்
இலங்கையில் ஏற்பட்ட மக்கள் போராட்டத்தின் உச்சத்தை அடுத்து நாட்டை விட்டு
மகிந்த மகனின் மனைவி தப்பி ஓடினர் .அவர் தற்போது மீள நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்க படுகிறது
Yoshitha மனைவியே இவ்விதம் நாடு திரும்பியுள்ளார் ,எனினும் நாமல் மனைவி
இதுவரை இலங்கை வரவில்லை என்பது குறிப்பிட தக்கது












