Posted in Uncategorized இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தின் குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு- மகிந்தா முழக்கம்

யாழ்ப்பாணத்தின் குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு- மகிந்தா முழக்கம்

நயினாதீவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தை மக்கள் பாவனைக்காக கையளித்த கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், யாழ்ப்பாணத்தில் இதுவரை காணப்பட்ட குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் யாழ். நகர நீர் குழாய் அமைப்பு மற்றும் தாளையடி கடல் நீர் சுத்திகரிப்பு நிலையம் ஆகியவற்றின் நிர்மாணப் பணிகளை நேற்று (06) முற்பகல் ஆரம்பித்து வைத்தார்.

நயினாதீவில் இடம்பெற்ற நிகழ்வில் அலரி மாளிpகையில் இருந்து நேரடியாக கலந்து கொண்ட கௌரவ பிரதமர், மெய்நிகர் தொழில்நுட்பம் ஊடாக தாளையடி கடல்நீர் சுத்திகரிப்பு நிலைய நிர்மாணப் பணிகள் மற்றும் யாழ் நகர நீர் வழங்கலுக்கான நீர் குழாய் அமைக்கும் நடவடிக்கை என்பவற்றை ஆரம்பித்து வைத்தார்.

யாழ்ப்பாணம் – கிளிநொச்சி நீர் வழங்கல் திட்டத்தின் ஊடாக 186 கிராம அலுவலர் பிரிவுகளுக்கு பாதுகாப்பான குழாய் நீரை வழங்குவதற்கு எதிர்பார்ப்பதுடன் மத்திய அரசாங்கத்தின் நிதி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியின் கீழ் இத்திட்டங்கள் செயற்படுத்தப்படும்.

தாளையடி கடல் நீர் சுத்திகரிப்பு நிலையம் ஊடாக உயர் தொழில்நுட்ப நீர் சுத்திகரிப்பு தொழில்நுட்பத்துடன் கடல் நீரை சுத்தமான குடிநீராக மாற்றுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அத்திட்டம் மற்றும் யாழ் நகர நீர் வழங்கல் திட்டத்தின் பாதுகாப்பான நீர் குழாய்களை பொருத்துவதன் மூலம் சுமார் மூன்று இலட்சம் மக்கள் நன்மையடைவதுடன் அத்திட்டங்களை 2023ஆம் ஆண்டளவில் நிறைவுசெய்யஎதிர்பார்க்கப்படுகிறது.1இப்புதிய வேலைத்திட்டத்தின் மூலம் யாழ்ப்பாணம் நகரம் மற்றும் அதனை அண்மித்து வாழும் சுமார் பன்னிரெண்டு இலட்சம் மக்களுக்கு குழாய் மூலமான பாதுகாப்பான நீரை பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும் என்பது விசேட அம்சமாகும்.

மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்ட நயினாதீவு கடல் நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் ஊடாக நயினாதீவு, அனலைதீவு, எழுவைதீவு பகுதிகளுக்கான நீர் விநியோகம் முறைப்படுத்தப்படுவதுடன் இதன்மூலம் சுமார் 5000 குடும்பங்கள் நேரடியாக நன்மையடைவர்.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் பணிப்பாளர் நாயகம் கென்ச்சி யொகுஹாமா அவர்கள் ஸூம் தொழில்நுட்பம் ஊடாக இந்நிகழ்வில் கலந்துக் கொண்டு இத்திட்டத்திற்கு வாழ்த்து தெரிவித்தார்.

நயினாதீவு விகாராதிபதி வணக்கத்திற்குரிய நவந்தகல பபுமகித்திதிஸ்ஸ தேரர், நயினாதீவு அம்மன் ஆலய பிரதான குருக்கள் சாமதேவ குருக்கள் உள்ளிட்ட சமய தலைவர்கள் மற்றும் யாழ். மக்கள் காணொளி தொழில்நுட்பம் ஊடாக அதிமேதகு ஜனாதிபதி, கௌரவ பிரதமர் உள்;ளிட்ட அரசாங்கத்திற்கு இத்திட்டம் ஊடாக கிடைக்கும் நன்மை குறித்து தங்களது நன்றிகளை தெரிவித்தனர்.

வடக்கு மாகாணத்தில் தற்போது காணப்படும் 9.6 சதவீதமான பாதுகாப்பான நீர் குழாய் அமைப்பை 2025ஆம் ஆண்டளவில் 56.9 சதவீதமாக உயர்த்துவதற்கு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை திட்டமிட்டுள்ளது.
நீர் வழங்கல் அமைச்சர் கௌரவ வாசுதேவ நாணாயக்கார அவர்கள்,

‘எவரையும் தோற்கடிப்பது அன்றி யுத்தத்தை நிறைவு செய்வதே கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் அன்றைய எதிர்பார்ப்பாக காணப்பட்டது. எவ்வளவு செலவானாலும் யுத்தத்தினால் இழந்த தேவைகளை அவர்களுக்கு பெற்றுக்கொடுக்குமாறு கௌரவ பிரதமர் அவர்கள் எமக்கு தொடர்ந்து அறிவுறுத்தினார். அதிகம் செலவாகும் என அமைச்சரவையில் குறிப்பிட்ட போது எவ்வளவு செலவானாலும் இந்த நீர் வழங்கல் திட்டத்தை நாம் அமைக்க வேண்டும் என கௌரவ பிரதமர் அவர்கள் கூறினார். இவை அனைத்தும் வடக்கு மக்களுக்காகவே ஆகும். இந்த பாய்ந்தோடும் நீருடன் கௌரவ பிரதமரின் இதயத்தின் கருணையும், நல்லிணக்கமும் பாய்ந்தோடுகிறது என கூற வேண்டும்.

நீர் வழங்கல் அமைச்சர் கௌரவ வாசுதேவ நாணாயக்கார, கடற்றொழில் அமைச்சர் கௌரவ டக்ளஸ் தேவானந்தா, இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் எரிக் லவேர்து, பிரதமரின் செயலாளர் காமினி செனரத், நீர் வழங்கல் அமைச்சின் செயலாளர் கலாநிதி பிரியத் பந்து விக்ரம, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் தலைவர் திரு.நிசாந்த ரணதுங்க உள்ளிட்ட பிரதிநிதிகள் அலரி மாளிகையில் இருந்து காணொளி தொழில்நுட்பம் ஊடாக நிகழ்வில் கலந்து கொண்டனர்.

நயினாதீவு நீர் சுத்திகரிப்பு நிலைய திறப்பு விழாவில் கிராமிய மற்றும் பிரதேச குடிநீர் வழங்கல் கருத்திட்டங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சனத் நிசாந்த, யாழ். மாவட்ட அபிவிருத்தி குழுவின் இணை தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன், வட மாகாண ஆளுநர் பீ.எஸ்.எம்.சார்ள்ஸ் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Posted in Uncategorized

மதிலை உடைத்து வீட்டுக்குள் புகுந்த வாகனம்

மதிலை உடைத்து வீட்டுக்குள் புகுந்த வாகனம்

யாழ்ப்பாணம் – கண்டி பிரதான வீதியின் வவுனியா, ஈரப்பெரியகுளம் பகுதியில் நேற்று (06) மாலை வாகனமொன்று வீட்டின் மதில் மீது மோதி விபத்திற்கு இலக்காகியுள்ளது.

இந்த சம்பவத்தில் நபரொருவர் காயமடைந்துள்ளதாக ஈரப்பெரியகுளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அநுராதபுரத்தில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த குறித்த வாகனமே வேகத்தை கட்டுப்படுத்த முடியாததால் விபத்திற்கு இலக்காகியுள்ளதாக தெரியவருகிறது.

விபத்தில் வாகன சாரதி காயமடைந்துள்ளதுடன், வாகனமும் பலத்த சேதத்திற்கு உள்ளாகியுள்ளது.

விபத்தில் வீட்டின் மதில் உடைந்துள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகள் ஈரப்பெரியகுளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

    Posted in Uncategorized

    விபத்தில் சிக்கிய மாட்டு லொறி – சிக்கிய திருடர்கள்

    விபத்தில் சிக்கிய மாட்டு லொறி – சிக்கிய திருடர்கள்

    சட்டவிரோதமாக கால்நடைகளை ஏற்றிச் சென்ற லொறியொன்று விபத்துக்குள்ளாகியதில்,


    லொறியின் சாரதியும் உதவியாளரும் காயமடைந்து, தியத்தலாவை வைத்தியசாலையில்
    அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    ஹப்புத்தளை- வல்கவெல பகுதியிலேயே நேற்று (5) இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
    விபத்துக்குள்ளான

    லொறியிலிருந்து 16 கால்நடைகளும் வெள்ளவாயவிலிருந்து
    நுவரெலியாவுக்கு கொண்டு செல்லப்பட்ட போதே, விபத்துக்குள்ளாகியுள்ளது.

    Posted in Uncategorized

    அதிபர், ஆசிரியர்கள் போராட்டம்

    அதிபர், ஆசிரியர்கள் போராட்டம்

    சர்வதேச ஆசிரியர் தினத்தையொட்டி, இன்று (06), அதிபர், ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டுக்கான தீர்வை வலியுறுத்தி நாடளாவிய ரீதியில் போராட்டங்கள் முன்னெடுக்கப்ட்டு

    வருகின்ற நிலையில், வடக்கில் உள்ள அதிபர், ஆசிரியர்கள், கல்விசாரா ஊழியர்களும் போராட்டங்களை முன்னெடுத்தனர்.

    இதற்கமைய, யாழ். – செம்மணியில் உள்ள வடக்கு மாகாண கல்வி அமைச்சு அலுவலத்துக்கு முன்னாள், காலை 10 மணியளவில், கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

    இதன்போது, ஆசிரியர்கள் கறுப்பு கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதேவேளை, வவுனியா வடக்கு கல்வி வலயம் சார்பாக, காலை 9 மணிக்கு, புதுக்குளம் பகுதியில் உள்ள வவுனியா தெற்கு வலயத்துக்கு முன்னாள், ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

    மேலும், கிளிநொச்சி வலயக் கல்வித் திணைக்களத்துக்கு முன்பாகவும், கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

    Posted in Uncategorized

    சகோதரி ஊழலை வெளியிட்ட பத்திரிகை தொடர்பாக விசாரிக்க கோட்டா உத்தரவு

    சகோதரி ஊழலை வெளியிட்ட பத்திரிகை தொடர்பாக விசாரிக்க கோட்டா உத்தரவு

    பென்டோரா பேப்பர்ஸ் குறித்து உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவுக்கு உத்தரவிட்டுள்ளார்.

    இன்று (06) காலை இந்த உத்தரவை ஜனாதிபதி பிறப்பித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர், அமைச்சர் டளஸ் அழகபெரும தெரிவித்தார்.

    அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் தற்போது இடம்பெற்றுக்கொண்டிருக்கும் வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் டளஸ் அழகபெரும மேற்கண்டவாறு தெரிவித்தார்.

    இந்த விசாரணைகளை ஒரு மாத காலத்திற்குள் நிறைவு செய்து, விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்குமாறும் ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார் என்றும் அமைச்சர் கூறினார்.

    Posted in Uncategorized

    கொவிட் நோயிலிருந்து குணமடைந்த பெண்களுக்கு நீண்டகால நோய் அறிகுறிகள்

    கொவிட் நோயிலிருந்து குணமடைந்த பெண்களுக்கு நீண்டகால நோய் அறிகுறிகள்

    கொவிட் தொற்று நோயால் பாதிக்கப்பட்டு குணமடைந்த பெண்களுக்கு, மூன்று முதல் ஆறு மாதங்களுக்குள் சில பாதிப்புகளைக் கொண்ட நீண்டகால நோய் அறிகுறிகள் அடையாளம்

    காணப்பட்டுள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் : மரபணு உயிரியல் மருத்துவப் பிரிவின் பணிப்பாளர் பேராசிரியர் சந்திம ஜீவந்தர தெரிவித்தார்.

    இந்த நோய் அறிகுறிகள் ஆண்களுக்கும் ஏற்படலாம்.

    இந்த நோய் அறிகுறிகளில், மன அழுத்தம் சுமார் 15 வீதம் உயர்வாக காணப்படும்.

    ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் மருத்துவப் பிரிவினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இதுபோன்ற ஒன்பது அறிகுறிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

    1. இயல்பற்ற சுவாசம் 8%
    2. வயிறு சம்பந்தப்பட்ட நோய் அறிகுறிகள் 8%
    3. மன அழுத்தம் 15%
    4. மார்பு மற்றும் தொண்டை வலி 6%
    5. அறிவாற்றல் பிரச்சினைகள் 4%
    6. சோர்வு 5%
    7. தலைவலி 5%
    8. தசை தொடர்பான வலி 5%
    9. மற்றும் பிற உபாதைகள் 7%

    ஆகியன அறிகுறிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

    இந்த நாள்பட்ட கொவிட் நோய் அறிகுறிகள் நவீன மருத்துவத்திற்கு ஒரு சவாலாக இருக்கலாம் என்று விசேட வைத்திய நிபுணர் சந்திம ஜீவந்தர ட்விட்டர் செய்தியொன்றில் தெரிவித்துள்ளார்..

    Posted in Uncategorized இலங்கை செய்திகள்

    புகையிலை, மதுபான அதிகாரசபை உறுப்பினராக திரு.அஜித் ரோஹண நியமனம்

    புகையிலை, மதுபான அதிகாரசபை உறுப்பினராக திரு.அஜித் ரோஹண நியமனம்

    தேசிய புகையிலை மற்றும் மதுபானங்கள் தொடர்பான தேசிய அதிகார சபையின் உறுப்பினராக, சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண நியமிக்கப்பட்டுள்ளார்.

    இவருக்கான நியமனக்கடிதத்தை சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல கையளித்தார்.

    முன்னாள் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், குற்றத் தடுப்பு மற்றும் பொலிஸ் போக்குவரத்து பிரிவுக்குப் பொறுப்பான, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபரான அஜித் ரோஹண, சிறுவர்

    பாதுகாப்பு அதிகாரசபை பணிப்பாளர் சபை உறுப்பினராக கடந்து ஜூலை 21 முதல் அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

    Posted in Uncategorized

    கஞ்சாவுடன் 4 பிள்ளைகளின் தாய் கைது

    கஞ்சாவுடன் 4 பிள்ளைகளின் தாய் கைது

    பெரியநீலாவணை விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிள்ளையாரடி சந்தியில் மேற்கொண்ட திடீர்

    சுற்றிவளைப்பில் 1,100 கிராம் கேரளா கஞ்சாவுடன் பெண் ஒருவர், நேற்று (05) மாலை கைது செய்யப்பட்டார்.

    பெரியநீலாவணை விசேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரி ஆர்.ஏ.டீ.சி. ரத்நாயக்க தலைமையிலான சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகர் ஜீ.எஸ்.பி.பண்டார, பொலிஸ் சார்ஜென்ட்

    குணபால மற்றும் சுபசிங்க, அபேரத்ன, நிம்ஸ் ஆகிய விசேட அதிரடிப்படை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து குறித்த பகுதியை சுற்றி வளைத்தனர்.

    இதன்போது நீண்ட காலமாக மட்டக்களப்பு மாவட்ட கிராமப் பகுதிக்கு கேரளா கஞ்சாவை விற்பனை செய்து வந்த 4 பிள்ளைகளின் தாய் கைது செய்யப்பட்டார்.

    கைது செய்யப்பட்ட சந்தேகநபர், வெல்லாவெளி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார். மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

    Posted in இலங்கை செய்திகள்

    அனைத்து வீதிகளையும் அபிவிருத்தி செய்ய முன்னுரிமை

    அனைத்து வீதிகளையும் அபிவிருத்தி செய்ய முன்னுரிமை

    ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் நாட்டை கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு கொள்கை பிரகடனத்தில் வாக்குறுதியளித்தபடி முன்னுரிமை வீதி அபிவிருத்தித் திட்டத்தின் மூலம்

    விவசாயப் பகுதிகளில் அடையாளம் காணப்பட்ட அனைத்து வீதிகளையும் துரிதமாக அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சின் செயலாளருக்கு ஆலோசனை வழங்கியதாக ஆளும் தரப்பு பிரதம கொறடா நெடுஞ்சாலை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார்.

    இந்தப் பகுதிகளில் உள்ள வீதிகளை அபிவிருத்தி செய்வதன் மூலம், விவசாயிகளுக்கு தாமதமின்றி தங்கள் விவசாய உற்பத்திப் பொருட்களை பொருளாதார மத்திய நிலையங்களுக்கு எடுத்துச்

    செல்ல வாய்ப்பு ஏற்படும். அதன் மூலம் விவசாயிகளின் பொருளாதாரத்தை வலுப்படுத்த முடியும் என்றும் அமைச்சர் கூறினார்.

    கிராமப்புறங்களில் உள்ள பாடசாலைகளுக்கான அனைத்து பிரவேசவீதிகள் அனைத்தையும் மட்டுமன்றி கிராமப்புற மருத்துவமனைகளுக்கான அனைத்து பிரவேச வீதிகளும் முன்னுரிமை

    அளிக்கப்பட்டு அபிவிருத்தி செய்யப்படும் என்றும் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ குறிப்பிட்டார்.

    பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஆளும் தரப்பு மற்றும் எதிர்த்தரப்பு பிரதிநிதிகளினால் தமது பிரதேசங்களில் அபிவிருத்தி செய்வதற்கு முன்வைக்ககும் யோசனைகள்

    அனைத்தையும் முன்னுரிமை வீதி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்வதாகவும் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்தார்.

      Posted in Uncategorized

      தமிழ் அரசியல் கைதிகள் 8 அரசியல் கைதிகளுக்கு பாதுகாப்பு வழங்கவும்-நீதிமன்றம்

      தமிழ் அரசியல் கைதிகள் 8 அரசியல் கைதிகளுக்கு பாதுகாப்பு வழங்கவும்-நீதிமன்றம்

      அனுராதபுரம் சிறைச்சாலையில் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் எண்மருக்கு ​தேவையான பாதுகாப்பை வழங்குமாறு உயர்நீதிமன்றம் இன்று (05) உத்தரவிட்டது.

      அந்த எட்டு கைதிகளின் சார்பில், தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை விசாரணைக்கு எடுத்துகொண்ட போதே, உயர்நீதிமன்றம் மேற்கண்டவாறு தெரிவித்தது.

      அவர்கள், சிறைச்சாலைகள் முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தைக்கு எதிராகவே மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

        Posted in Uncategorized

        தனியார் துறையினரின் ஓய்வூதிய வயது எல்லை அதிகரிப்பு

        தனியார் துறையினரின் ஓய்வூதிய வயது எல்லை அதிகரிப்பு

        தனியார் துறை ஊழியர்களின் குறைந்தபட்ச ஓய்வூதிய வயது எல்லையை 60ஆக சட்டப்பூர்வமாக்க தொழில் அமைச்சு திட்டமிட்டுள்ளது.

        அதன்படி, வேலைவாய்ப்பு நீக்கச் சட்டத்தைத் திருத்தும் திருத்தப்பட்ட அமைச்சரவை பத்திரம் வெளியிடப்பட்ட பிறகு, பாராளுமன்றத்தின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்பட உள்ளது.

        55 வயதை நிறைவு செய்த ஊழியர்களுக்கு ஓய்வு பெறும் வயதை 57ஆகவும், 52 வயதுக்கு கீழ் உள்ள ஊழியர்களுக்கு 60 வயதாகவும் இந்த சட்டம் முன்மொழியப்படவுள்ளது.

        தனியார் துறை ஊழியர்களுக்கான குறைந்தபட்ச ஓய்வூதிய வயது முன்பு 55ஆக இருந்தமை குறிப்பிடத்தக்கது

          Posted in Uncategorized

          மனைவியை அடித்து கொன்ற கணவர் – சோகத்தில் உறைந்த கிராமம்

          மனைவியை அடித்து கொன்ற கணவர் – சோகத்தில் உறைந்த கிராமம்

          குடும்ப பிரச்சினை காரணமாக கணவர் ஒருவர் தனது மனைவியை கொலை செய்த சம்பவம் களவஞ்சிக்குடி பகுதியில் பதிவாகியுள்ளது.

          மஹிலுர் பகுதியை சேர்ந்த 31 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

          கணவரின் தாக்குதலுக்கு உள்ளான பெண்ணை வைத்தியசாலையில் அனுமதிக்கும் சந்தர்ப்பத்தில் அவர் உயிரிழந்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

          சம்பவம் தொடர்பில் குறித்த பெண்ணின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

          குறித்த கணவன் கடந்த 14 ஆம் திகதி வௌிநாட்டில் இருந்து வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

          வௌிநாட்டில் இருந்த சந்தர்ப்பத்தில் அவர் குரல் பதிவு ஒன்றின் மூலம் மனைவியை கொலை செய்வதாக தெரிவித்திருந்ததாக உயிரிழந்த பெண்ணின் சகோதரி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

          அவர்களுக்கு திருமணமான 8 வருடங்கள் ஆவதுடன் 7 வருடமாக கணவர் வௌிநாட்டில் இருந்ததாகவும் அவர்களுக்கு குழந்தை இல்லாததால் பிரச்சினை ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

          சம்பவம் தொடர்பில் களவஞ்சிக்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

            Posted in Uncategorized

            கொரனோ அட்டை – வெடிக்கும் சர்ச்சை

            கொரனோ அட்டை – வெடிக்கும் சர்ச்சை

            பொது இடங்களுக்குச் செல்லும்   போது  கொரோனா தடுப்பூசியின் இரண்டையும் பெறப்பட்டதாக உறுதிப்படுத்தப்படும் அட்டையை பொதுமக்கள் வைத்திருப்பதை கட்டாயமாக்குவதற்கான முடிவை, மேலும் தாமதப்படுத்தலாம் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

             இரண்டு அளவுகளும் பெறப்பட்டதாகக் குறிப்பிடும் தடுப்பூசி அட்டையை, கட்டாயமாக்கப்பட்டு,  பரிசோதிக்கும் நடவடிக்கை செப்டெம்பர் 15ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

             எனினும், அத்தகைய சட்டத்தை ஒரே நேரத்தில் அமல்படுத்த முடியாது என்று, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் கூறினார்.

              Posted in Uncategorized

              வீட்டுக்குள் நுழைந்து நபரை அடித்து கொன்ற ரவுடிகள்

              வீட்டுக்குள் நுழைந்து நபரை அடித்து கொன்ற ரவுடிகள்

              வீடொன்றினுள் பலவந்தமாக நுழைந்த குழு ஒன்று அங்கிருந்த நபர் ஒருவரை அடித்து கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

              பதுளை, லிதமுல்ல பகுதியில் உள்ள வீடொன்றிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

              இரும்பு கம்பியால் குறித்த நபர் தாக்கப்பட்டுள்ளததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

              தாக்குதலில் பலத்த காயமடைந்த நபரை பதுளை வைத்தியசாலையில் அனுமதித்த சந்தர்ப்பத்தில் உயிரிழந்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

              பதுளை, லிதமுல்ல பகுதியை சேர்ந்த 65 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

              சம்பவம் தொடர்பில் பதுளை பகுதியை சேர்ந்த 21, 24 மற்றும் 31 வயதுடைய மூவர் கைது செய்யப்பட்டுள்ளததாக தெரிவிக்கப்படுகின்றது.

                Posted in இலங்கை செய்திகள்

                இலங்கையின் மீன்பிடி சட்டத்தில் திருத்தம் – அமைச்சர் டக்ளஸ்

                இலங்கையின் மீன்பிடி சட்டத்தில் திருத்தம் – அமைச்சர் டக்ளஸ்

                சர்வதேச கடலில் மீன்பிடித் தொழிலில் ஈடுபடுகின்ற இலங்கையின் மீன்பிடிக் கலன்கள் பின்பற்ற வேண்டிய கடப்பாடுகள் மற்றும் சட்டங்களில் மேற்கொள்ள வேண்டிய திருத்த முன்வரைபு தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

                குறித்த கலந்துரையாடல், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில், இராஜாங்க அமைச்சர் கஞ்சன விஜேசேகர, அமைச்சின் செயலாளர் திருமதி இந்து ரத்னாயக்கா,

                கடற்றொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹாவத்த மற்றும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளின் பங்குபற்றலுடன் கடற்றொழில் அமைச்சில் (01) நடைபெற்றது.

                தற்போதைய சூழலுக்கு ஏற்ற வகையில் இலங்கை கடற்றொழிலாளர்களின் நலன்களை பாதுப்பதையும் இலங்கை கடற்றொழில் செயற்பாடுகளை வினைத் திறனுடன் மேற்கொள்வதையும் உறுதிப்படுத்தும் வகையில், குறித்த சட்ட திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

                Posted in Uncategorized இலங்கை செய்திகள்

                ஜந்து மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

                ஜந்து மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

                பலத்த மழையின் காரணமாக ஜந்து மாவட்டங்களுக்கு மண்சரிவு அனர்த்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

                காலி , களுத்துறை , கண்டி, கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அனர்த்த எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதாக தேசிய கட்டிட ஆய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.

                இந்த அறிவிப்பு மாலை 06 மணிவரை ஏற்புடையது என அறிவிக்கப்பட்டுள்ளது.

                Posted in இலங்கை செய்திகள்

                இலங்கைக்கு 500 மில்லியன் டொலர் கடனுதவி வழங்க உலக வங்கி இணக்கம்

                இலங்கைக்கு 500 மில்லியன் டொலர் கடனுதவி வழங்க உலக வங்கி இணக்கம்

                இலங்கைக்கு 500 மில்லியன் டொலர் கடனுதவி வழங்க உலக வங்கி இணக்கம் தெரிவித்துள்ளது
                பல்வேறு பட்ட விடயங்களை சுட்டி காட்டி இந்த அவசர நிதியை இலங்கை கடனாக பெறுகிறது

                கடந்த ஆட்சியில் பல கோடி ரூபாய்களை சுருட்டியது மகிந்த குடும்பம், அதே போல தற்பொழுதும் பெரும் பணத்தை ஆளும் அரசு கொள்ளையடித்து வருவதாக மக்கள் மத்தியில் பேச படுகிறது

                  Posted in Uncategorized

                  பால்மா தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

                  பால்மா தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

                  துறைமுகத்தில் சிக்கியுள்ள 360,000 கிலோகிராம் பால்மாவை விடுவிக்க வணிக வங்கிகளுக்கு அரசாங்கம் இன்னும் டொலர்களை வழங்கவில்லை என்று, பால்மா இறக்குமதியாளர்களின் செய்தி தொடர்பாளர் லக்ஷ்மன் வீரசூரிய தெரிவித்தார்.

                  இதன் காரணமாக, பாலமாக்கள் பழுதடையக் கூடிய அபாயம் இருப்பதால் அருகிலுள்ள நாட்டிற்கு பால்மாவை வழங்குவதற்கான கலந்துரையாடல்கள் நடைபெற்றதாகவும் அப்படியானால், நாட்டில் மேலும் பால்மாக்கான பற்றாக்குறை ஏற்படும் என்றும் அவர் கூறினார்.

                  இன்று பிற்பகல் வணிக வங்கிகளுடனான கலந்துரையாடலின் போது, பால்மாவை துறைமுகத்தில் இருந்து விடுவிப்பதற்கு, தங்களுக்கு டொலர்கள் கிடைக்கவில்லை என்று கூறிய வங்கிகள், வங்கிகளில் பணத்தை வைப்பிலிட்டு, டொலர்கள் வரும் வரை காத்திருக்க வேண்டும் என்றும் கூறியது என, லக்ஷ்மன் வீரசூரிய தெரிவித்தார்.

                  சில ஏற்றுமதியாளர்கள் ஒரு டொலருக்கு 238 டொலர் கொடுக்க முன்வருவதாகவும், பால்மா இருப்பு 35 டொலருக்கு கூடுதலாக வெளியிடப்பட்டால், ஒரு கிலோவுக்கு 4.10 டொலர் கூடுதல் செலவு ஆகும் எனவும், அவர் தெரிவித்தார்.

                  Posted in இலங்கை செய்திகள்

                  ஆயுதங்களுடன் 5 பேர் கைது

                  ஆயுதங்களுடன் 5 பேர் கைது

                  கூரிய ஆயுதங்களை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

                  குறித்த நபர்கள் நிட்டம்புவ, அத்தனகல்ல பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

                  இவர்களை கொழும்பு குற்றவியல் பிரிவினர் கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

                  21, 22 மற்றும் 24 வயதுடைய மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

                  Posted in Uncategorized

                  இலங்கைக்குள் நுழைந்த ஐ எஸ் – வாட்சாப் குழுவை தேடும் பொலிஸ்

                  இலங்கைக்குள் நுழைந்த ஐ எஸ் – வாட்சாப் குழுவை தேடும் பொலிஸ்

                  இலங்கையில் உள்ள முஸ்லீம் தீவிரவாத போக்குடையவர்கள் உலக மகா கொடிய பயங்கரவாத இயக்கமாக விளங்கி வரும்

                  ஐ எஸ் குழுவுடன் இணைந்து செயல் பட்டு வந்த நிலையில் அவர்களை மடக்கி பிடிக்கும் நகர்வில் இலங்கை உளவுத்துறை ஈடுபட்டுள்ளது

                  இவர்கள் இயக்கி வந்த வாட்சாப் குழுவை தேடி தற்போது வேட்டை ஆரம்பமாகியுள்ளது ,விரைவில் இவர்கள் அனைவரும் கைது செய்ய படுவார்கள் என நம்ப படுகிறது