Posted in இலங்கை செய்திகள்

போதை பொருளுடன் 12 பேர் கைது

போதை பொருளுடன் 12 பேர் கைது

இலங்கை சிவனொளிபாதமலைக்கு யாத்திரை சென்ற மக்களில் 12 பேர் கைது செய்ய பட்டுள்ளனர்

இவர்கள் அங்கு போதை பொருள் எடுத்து சென்ற குற்ற சாட்டில் கைது செய்ய பட்டு தடுத்த வைக்க பட்டுள்ளனர்

    Posted in இலங்கை செய்திகள்

    காவல்துறை வேட்டையில் 147 பேர் கைது

    காவல்துறை வேட்டையில் 147 பேர் கைது

    இலங்கை மேல் மாகாணத்தில் காவல்துறையினர் நடத்திய விசேட தேடுதல் மற்றும் சோதனை

    நடவடிக்கையின் பொழுது


    பல்வேறு குற்ற சாட்டுக்களின் அடிப்படியில் 147 பேர் கைது செய்ய பட்டுள்ளதாக போலீஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்

      Posted in Uncategorized

      கொரனோ பரவல் -நெதர்லாந்து முழு அடைப்பு – முடங்கிய நாடு

      கொரனோ பரவல் -நெதர்லாந்து முழு அடைப்பு – முடங்கிய நாடு

      நெதர்லாந்து நாட்டில் கொரனோ நோயானது அதிகரித்து செல்வதால் அந்த நாடு முழுதாக அடித்து மூட பட்டுள்ளது

      பாடசாலைகள் ,கடைகள்,என அனைத்தும் அடித்து பூட்ட பட்டுள்ளது ,மேலும் இந்த முழு

      அளவிலான ஊரடங்கு மற்றும் தடை நீக்கம் எதிர்வரும் மாசி மதம் நாடு பகுதியில் கட்டம்

      கட்டமாக நீக்க படும் என பிரதமர் தெரிவித்துள்ளார்


      நோயில் இருந்து மக்களை காப்பாற்றும் முகமாக இந்த தடை விலக்க பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

        Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

        பிரிட்டனில் 10 ஆயிரம் பேருக்கு புதிய கொரனோ தொற்று

        பிரிட்டனில் 10 ஆயிரம் பேருக்கு புதிய கொரனோ தொற்று

        பிரிட்டனில் மூன்றாம் அலையாக பரவி வரும் புதிய ஓமிக்ரோன் கொரானா நோயின் தாக்குதலில்

        சிக்கி பத்து ஆயிரத்திற்கு மேல் பாதிக்க பட்டுள்ளனர் ,மேலும் ஒரே நாளில் 91 ஆயிரத்திற்கு மேல் பாதிக்க பட்டுள்ளனர்

        தொடர்ந்து மேற்படி நோயானது அதிகரித்து வருவதாலும் மரண எண்னிக்கை 125 க்கு மேல்

        அதிகரித்து செல்வதாலும் விரைவில் நாடு முடக்க படும் நிலைக்கு செல்ல கூடும் என எதிர் பார்க்க படுகிறது

          Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

          இவன் போல நீ எழு

          இவன் போல நீ எழு

          எதிரிக்கு அடங்கா எழுவான்- இவன்
          எண்திசை காட்டும் உதயோன்
          அடிமைக்கு அடங்கா கிழக்கு- இவன்
          அறத்திலே வெடிக்கின்ற துவக்கு

          எதிரிக்கும் எழுகின்ற வியப்பு- இவன்
          எரிகின்ற எங்கள் நெருப்பு
          வீரத்தில் பாய்கின்ற புலி – இவன்
          விடுதலை முழங்கிடும் ஒலி

          தளிர்த்திடும் முளைகளின் ஒளி- இவன்
          தடத்திலே சிக்காத எலி
          வீரத்தில் முளையிடும் முளை – இவன்
          வீரம் பேசிடும் நாளை

          வீழ்சியில் எழுந்த ஏவுகணை – இவன்
          வீரம் பேசிடும் போர்முனை
          வீழாது உழுதிடும் ஏர்முனை- இவன்
          விடுதலை பேசிட நீமுனை ….

          வன்னி மைந்தன்
          ஆக்கம் 18-12-2021

            Posted in இலங்கை செய்திகள்

            வியாபாரியை துரத்திச் சென்ற பொலிஸ் அதிகாரி மரணம்!

            வியாபாரியை துரத்திச் சென்ற பொலிஸ் அதிகாரி மரணம்!

            திருகோணமலை தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்பலகாமம் பொலிஸ் நிலையத்தில்

            கடமையாற்றிய பொலிஸ் அதிகாரியொருவர் நேற்றிரவு (16) போதை வியாபாரி ஒருவரை துரத்தி பிடித்த போது தவறி விழுந்து மரணமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

            இதன்போது கஜ்ஜி முகமது தாரிக் வயது 49 என்பவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

            மேலும் தெரியவருவதாவது,

            தம்பலகாமம் பொலிஸாருக்கு ஹோரொயின் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுவதாக

            கிடைத்த ரகசிய தகவலையடுத்து சந்தேக நபர்களை முள்ளிப்பொத்தானை என்ற இடத்தில் கைது செய்ய முற்பட்ட போதே இவ் மரணம் ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

            கைது செய்யப்பட்டவர் கந்தளாய் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

            மரணம் குறித்து மேலதிக விசாரணை தம்பலகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

            சடலம் கந்தளாய் தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் பிரேத பரிசோதனையின்

            பின்னர் உறவினர்களிடம் கையளிப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

              Posted in இலங்கை செய்திகள்

              கடனில் சிக்கித் தவிக்கும் இலங்கை

              கடனில் சிக்கித் தவிக்கும் இலங்கை

              நாட்டில் நிலவும் டொலர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக சீனா, ஜப்பான் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளிடம் கடன் வாங்குதற்கு அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக அறியமுடிகிறது.

              இது தொடர்பில் நட்பு நாடுகளுடன் கலந்துரையாடல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கடந்த வாரம் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் நிதி அமைச்சர் பெசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

              இந்திய விஜயம் வெற்றியடைந்துள்ளதாகவும், சுமார் 140 கோடி அமெரிக்க டொலர்களை நிவாரணம் வழங்குவதற்கு இந்திய அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

              அதேவேளை, சர்வதேச நாணய நிதியத்துடன் தாம் கலந்துரையாடி வருவதாகவும், கடுமையான நிபந்தனைகளுக்கு உட்படாமல் சலுகை முறையில் பரிவர்த்தனை செய்ய உத்தேசித்துள்ளதாகவும் நிதியமைச்சர் குறிப்பிட்டார்.

                Posted in இலங்கை செய்திகள்

                பதட்டத்தில் நாடு- வெடிக்கும் காஸ் சிலிண்டர்கள்

                பதட்டத்தில் நாடு வெடிக்கும் காஸ் சிலிண்டர்கள்

                திம்புள்ள – பத்தனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் சமையல் எரிவாயு அடுப்பு வெடிப்பு சம்பவங்கள் இரண்டு பதிவாகியுள்ளன.

                கொட்டகலை, பத்தனை கிறேக்கிலி தோட்டத்தில் வீடு ஒன்றில் இந்த வெடிப்பு சம்பவம் இரவு 07.00 மணியளவில் இடம்பெற்றதாக பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.

                சமைத்துக் கொண்டிருந்த போது அடுப்பு திடீரென வெடித்து சிதறியுள்ளது. அடுப்புக்கு பாவிக்கப்பட்டுள்ள லிட்ரோ எரிவாயு சிலிண்டர் பொங்கியிருந்தமையும் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

                சம்பவத்தில் எவருக்கும் பாதிப்புக்கள் ஏற்படவில்லை.

                இதேவேளை, கொட்டகலை சிமோல் டிரேட்டன் தோட்டத்தில் குடியிருப்பாளர்கள் சமையல் செய்து கொண்டிருந்த போது, திடீரென அடுப்பு வெடித்தது.

                இந்த வெடிப்பு சம்பவத்தினால் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்பதுடன் திம்புள்ள பத்தனை பொலிஸார் இவ்விரு சம்பவ இடங்களுக்கும் சென்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்..

                  Posted in இலங்கை செய்திகள்

                  யாழில் பெற்றோல் குண்டு தாக்குதல்

                  யாழில் பெற்றோல் குண்டு தாக்குதல்

                  மானிப்பாயில் புதன்கிழமை வீடு ஒன்றுக்குள் புகுந்து வன்முறையில் ஈடுபட்ட கும்பலைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

                  நவாலி மற்றும் கொக்குவிலைச் சேர்ந்த மூன்று சந்தேகநபர்களே யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரினால் நேற்று கைது செய்யப்பட்டனர்.

                  சந்தேகநபர்களிடமிருந்து 2 வாள்கள் மற்றும் மோட்டார் சைக்கிளும் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

                  வீட்டுக்குள் புகுந்த கும்பல் பெறுமதியான பொருள்களை சேதப்படுத்தியதுடன் பெற்றோல் குண்டுத் தாக்குதலை மேற்கொண்டிருந்தது.

                  யாழ்ப்பாணம் பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் கீழான தலைமை பொலிஸ் பரிசோதகர் நிகால் பிரான்ஸிஸ் தலைமையிலான மாவட்ட குற்றத் தடுப்பு பொலிஸ் பிரிவே இந்தக் கைது நடவடிக்கையை முன்னெடுத்தது

                    Posted in இலங்கை செய்திகள்

                    இலங்கையில் ஏற்படவுள்ள மாற்றம்

                    இலங்கையில் ஏற்படவுள்ள மாற்றம்

                    2022ஆம் ஆண்டு ஆரம்பத்தில் பல அமைச்சரவை மாற்றங்களைச் செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

                    இதன்படி பல முக்கிய அமைச்சுப் பதவிகளில் மாற்றங்கள் செய்யப்படவுள்ளதாக தெரியவருகிறது.

                    அடுத்த வருட ஆரம்பத்தில் அரசாங்க வேலைத்திட்டத்தை புத்துணர்ச்சியுடனும் வேகத்துடனும் முன்னெடுக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அரசாங்கப் பேச்சாளர் ஒருவர் இன்று தெரிவித்தார்.

                    இதேவேளை, அமைச்சரவை நியமனம் தொடர்பில் அரசாங்கத்தின் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏற்கனவே தமது ஆட்சேபனைகளை முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

                      Posted in இலங்கை செய்திகள்

                      10 வாகனங்கள் நேரெதிர் மோதல்

                      10 வாகனங்கள் நேரெதிர் மோதல்

                      தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற மூன்று விபத்துக்களில் 10 வாகனங்கள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

                      தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் தொடங்கொட 34 கிலோமீற்றர் கம்பத்திற்கு அருகில் நேற்று (17) பிற்பகல் இந்த விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

                      சம்பவத்தில் மூன்று பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

                      லொறி ஒன்று, 3 சொகுசு பேருந்துகள், 2 ஜீப் வண்டிகள், 4 கார்கள் இவ்விபத்தில் சிக்கியுள்ள

                        Posted in இலங்கை செய்திகள்

                        ஆற்றுக்கு குதித்த காதல் ஜோடி- காதலன் நீந்தி தப்பினார் – காதலி மரணம்

                        ஆற்றுக்கு குதித்த காதல் ஜோடி- காதலன் நீந்தி தப்பினார் – காதலி மரணம்

                        மஹியங்கனை பாலத்தின் மேல் இருந்து இளைஞன் ஒருவனும் யுவதி ஒருவரும் மகாவலி ஆற்றில் குதித்துள்ளனர்.

                        எனினும் ஆற்றில் குதித்த இளைஞன் நீந்தி கரைக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

                        பின்னர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

                        இதனையடுத்து மஹியங்கனை பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து காணாமல் போன யுவதியை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

                        காணாமல் போனவர் ரிதீமாலியத்த பிரதேசத்தில் வசிக்கும் 19 வயதுடைய யுவதி என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

                        இவர் நேற்று காலை மேலதிக வகுப்பில் கலந்து கொள்வதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து வௌியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

                        சம்பவத்தை நேரில் பார்த்த நபர் ஒருவர் கூறும் போது, முதலில் யுவதி ஆற்றில் குதித்ததாகவும் பின்னர் இளைஞன் ஆற்றில் குதித்ததாகவும் தெரிவித்தார்.

                        குறித்த சம்பவம் அங்கிருந்த நபர் ஒருவரின் கைப்பேசியில் இவ்வாறு பதிவு செய்யப்பட்டிருந்தது.

                          Posted in இலங்கை செய்திகள்

                          சீனா தூதர் யாழில் – இந்தியா கொதிப்பில்

                          சீனா தூதர் யாழில் – இந்தியா கொதிப்பில்

                          இலங்கைக்கான சீன தூதுவர் திடீர் பயணம் ஒன்றை மேற்கொண்டு யாழ்ப்பாணம் சென்று ,யாழ் சென்று அந்த பகுதி மேயருடன் சந்திப்பில் ஈடுபட்டுள்ளார்

                          இவரது இந்த சந்த்திப்பின் நோக்கம் தொடர்பில் தெரியவரவிலை

                          Posted in இலங்கை செய்திகள்

                          வெடிக்கும் காஸ் சிலிண்டர்கள் – பீதியில் மக்கள்

                          வெடிக்கும் காஸ் சிலிண்டர்கள் – பீதியில் மக்கள்

                          இலங்கையில் சமீப காலங்களாக காஸ் சிலிண்டர்கள் வெடித்த வண்ணம் உள்ளது

                          இவ்விதம் மாட்டு காத்தான் குடி பகுதியில் வீடொன்றில் காஸ் சிலிண்டர் வெடித்துள்ளது ,இதில்

                          சிறிய பாதிப்பு ஏற்பட்டுள்ள போதிலும் மக்கள் மத்தியில் அச்சம் நிலவுகிறது

                            Posted in Uncategorized

                            யாழில் ஓட ஓட வாள்வெட்டு – தெரு ரவுடிகள் அட்டகாசம்

                            யாழில் ஓட ஓட வாள்வெட்டு – தெரு ரவுடிகள் அட்டகாசம்

                            யாழ். பல்கலைக்கழகத்திற்கு அருகில் பரமேஸ்வரா சந்திக்கு அருகாமையில் புதன்கிழமை இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

                            மோட்டார் சைக்கிளில் வீதியால் வந்த இளைஞனை பின் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த கும்பல் வாள் வெட்டுத்தாக்குதலை மேற்கொண்டது.

                            தாக்குதலில் இளைஞன் படுகாயமடைந்த நிலையில் , யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் , சம்பவம் தொடர்பில் விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து இருந்தனர்.

                            இந்த நிலையில் , வண்ணார்பண்ணை பகுதியை சேர்ந்த இரு இளைஞர்களை நேற்றைய தினம் யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவினர் அவர்களது வீட்டில் வைத்து கைது செய்துள்ளனர்.

                            அதன் போது , வாள் வெட்டு சம்பவத்திற்கு செல்ல பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் மற்றும் வாள் ஒன்றினையும் மீட்டுள்ளனர்.

                            கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் முன் பகை காரணமாகவே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

                            அதேவேளை , குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இருவர் தலைமறைவாகியுள்ள நிலையில் அவர்களை கைது செய்யவும் பொலிஸார் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

                            Posted in இலங்கை செய்திகள்

                            இலங்கையில் பரவும் ஒமிக்ரான்- நால்வர் பாதிப்பு

                            இலங்கையில் பரவும் ஒமிக்ரான்- நால்வர் பாதிப்பு

                            இலங்கையில் தற்போது உலக நாடுகளை மிரட்டி வரும் ஒமிக்ரான் நோயினால் பதஹிக்க பட்டு நல்லவர் சிக்கியுள்ளனர்

                            மேலும் இந்த நோயானது வேகமாக பரவும் நிலை ஏற்படுவதால் ,பலத்த கட்டு பாடுகள் விதிக்க பட்டுள்ளது

                              Posted in இலங்கை செய்திகள்

                              இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை

                              இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை

                              இலங்கைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை ,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது.

                              அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு

                              2021 டிசம்பர்17ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.

                              இலங்கைக்குத் தென்கிழக்காக காணப்பட்ட காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் தற்போது தெற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக நிலை கொண்டுள்ளது. அது அடுத்த 24 மணித்தியாலங்களில் அருகிலுள்ள கடற்பரப்புகளை விட்டு விலகி கிழக்குத் திசையில் நகரக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

                              மழை நிலைமை:
                              புத்தளத்திலிருந்து காங்கேசந்துறை, திருகோணமலை மற்றும் பொத்துவில் ஊடாகஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

                              நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

                              காற்று :
                              நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு திசையிலிருந்து வீசக்கூடும். காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 25-35 கிலோ மீற்றர் வரை காணப்படுவதுடன் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 45 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

                              காங்கேசந்துறையிலிருந்து மன்னார் மற்றும் புத்தளம் ஊடாக சிலாபம் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 50-55 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

                              கடல் நிலை:
                              காங்கேசந்துறையிலிருந்து மன்னார் மற்றும் புத்தளம் ஊடாக சிலாபம் வரையான வரையான கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும்.

                              நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள் ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.

                              இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன் அக்கடற்பிரதேசங்கள்மிகவும் கொந்தளிப்பாகவும்காணப்படும்.

                                Posted in இலங்கை செய்திகள்

                                மாணவனை போட்டு தாக்கிய ஆசிரியர் கைது

                                மாணவனை போட்டு தாக்கிய ஆசிரியர் கைது

                                வெயாங்கொடையில் உள்ள பிரபல பாடசாலையின் ஆசிரியர் ஒருவர் உயர்தர மாணவரை

                                பிளாஸ்டிக் குழாயால் தாக்கிய சம்வத்தில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

                                ஆசிரியரை கைது செய்த வெயாங்கொடை பொலிஸார், அத்தனகல்ல நீதவான் முன்னிலையில்

                                ஆஜர்படுத்திய பின்னர் எதிர்வரும் 22ஆம் திகதி வரை அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

                                சந்தேகநபர் நேற்று காலை சட்டத்தரணி ஊடாக வெயாங்கொடை பொலிஸில் முன்னிலையாகியதன் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.

                                மாலையில் நேர வகுப்புக்கு மாணவன் வராததால் குறித்த தொழில்நுட்ப ஆசிரியர், பிளாஸ்டிக் குழாயைக் கொண்டு வந்து மாணவனின் கை மற்றம் கால்களில் கொடூரமாக தாக்கியுள்ளார்.

                                இதனால் கை, கால்களில் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் மாணவன்

                                வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், தாக்குதல் சம்பவம் தொடர்பில் அவரது பெற்றோர் வெயாங்கொடை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

                                தாக்குதலுக்கு உள்ளான மாணவன் இம்முறை க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள தொழில்நுட்ப மாணவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

                                  Posted in இலங்கை செய்திகள்

                                  இலங்கையில் புதிய கொரனோ சட்டம் அமூல்

                                  இலங்கையில் புதிய கொரனோ சட்டம் அமூல்

                                  புதிய சுகாதார வழிகாட்டல், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் இன்று(16) வெளியிடப்பட்டுள்ளது.

                                  அதற்கமைய, திருமண நிகழ்வுகளில் மண்டப கொள்ளளவில் 50 சதவீதமானோர் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

                                  அத்துடன், திருமண நிகழ்வுகளில் மதுபான பாவனைக்கு விதிக்கப்பட்டிருந்த தடை தளர்த்தப்பட்டுள்ளது.

                                  மேலும், மரண சடங்குகளில் ஒரு தடவையில் 30 பேர் பங்கேற்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

                                  இன்று முதல் எதிர்வரும் 31 ஆம் திகதி வரையில் இந்த புதிய சுகாதார வழிகாட்டல் நடைமுறையில் இருக்கும்.

                                    Posted in Uncategorized

                                    இயக்கச்சியில் வீதியில் நின்றவரை மோதி தள்ளிய டிப்பர்

                                    இயக்கச்சியில் வீதியில் நின்றவரை மோதி தள்ளிய டிப்பர்

                                    இலங்கை இயக்கச்சி பகுதியில்15-12-2021 வீதியின் ஓரத்தில் மிதிவண்டியுடன் நின்றவரை

                                    வேகமாக வந்த டிப்பர் வாகனம் ஒன்று மோதி ,தள்ளியது இதன் பொழுது இயக்கச்சி

                                    சங்கத்தார் வயலை சேர்ந்தவரும் , தற்போது உசனில் வசித்து வருபவருமான செல்லத்தம்பி-

                                    செல்வகுமார் என அழைக்க படும் மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவரே இந்த விபத்தில் சிக்கினார்

                                    பலத்த காயமான நிலையில் தற்பொழுது யாழ்ப்பாண போதானா வைத்தியசாலையில் அவசர

                                    சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளார் ,இதுவரை அவர் கண் விழிக்கவில்லை என உறவினர்கள் தெரிவிக்கின்றனர்

                                    சாரதி பளை காவல்துறையினரால் கைது செய்ய பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது ,இலங்கை

                                    வீதி நடை முறைகளை பின்பற்ற தவறி சாரதிகள் வேகமாக பயணிப்பதே இந்த விபத்துக்கு காரணம் என தெரிவிக்க படுகிறது