Tag: இலங்கை
பிரபாகரனின் ஜீப் மஹரகமவில் ஓடுகிறது
பிரபாகரனின் ஜீப் மஹரகமவில் ஓடுகிறது
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் பயன்படுத்திய ஜீப் வண்டி, மஹரகமவைச் சேர்ந்த ஒருவர் தற்போது பயன்படுத்தி வருகின்றார்.
மஹரகமவைச் சேர்ந்த கபில புலத்கே (வயது 50) என்பவதே தற்போது பயன்படுத்தி வருகின்றார் என்றும் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
1942 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட இந்த ஜீப், இரண்டாம் உலக போரின் போது உயர் அதிகாரிகளால் பயன்படுத்தப்பட்டது. இந்தியாவிலிருந்து இலங்கைக்குக் கொண்டுவரப்பட்ட இந்த ஜீப், யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் வைத்து அதன் உரிமையாளரிடமிருந்து பயங்கரவாதிகளால் அபகரிக்கப்பட்டுள்ளது.
2009 ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டு வரையிலும் அந்த ஜீப் வண்டி, கராஜில் இருந்துள்ளது. அந்த வாகனத்தின் மூன்றாவது உரிமையாளரே, சகல ஆவணங்களை காண்பித்து, ஜீப் வண்டியை பெற்று, அதனை மஹரகமவில் உள்ள கராஜில் வைத்து திருத்தியுள்ளார்.
இந்த வாகனத்தை தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மற்றும் அவருடைய நெருங்கிய பாதுகாவலர்கள், மூத்த தலைவர்கள் பயன்படுத்தியுள்ளனர் என்றும் தகவல்கள் கிடைத்துள்ளன.
கல்வி அமைச்சரின் அதிரடி அறிவிப்பு.
கல்வி அமைச்சரின் அதிரடி அறிவிப்பு.
தரம் ஒன்றுக்கான மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் தாமதமாகவே ஆரம்பிக்கப்படும் எனவும், இதற்கமைய 2022 ஏப்ரல் மாதம் முதல் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன அறிவித்துள்ளார்.
கண்டியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் இதை குறிப்பிட்டார்.
பாடசாலைகள் 2021 டிசம்பர் 23 அன்று மூடப்பட்டு, புதிய கல்வியாண்டிற்காக 2022 ஜனவரி 03 அன்று மீண்டும் திறக்கப்படும்.
கொரோனா காலக்கட்டத்தில் விடுபட்ட பாடத்திட்டங்களை முடிக்க வேண்டியிருப்பதால் முதல் தவணை ஏப்ரல் மாதத்துடன் முடிவடையும்.
மேலும், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை ஜனவரி 3ஆம் வாரத்திலும், க.பொ.த உயர்தரப் பரீட்சை பெப்ரவரியிலும், க.பொ.த சாதாரண தரப் பரீட்சை மே மாதம் முதல் ஜூன் மாதம் வரையும் நடைபெறவுள்ளது.
இதேவேளை, தரம் ஒன்றிற்கான மாணவர் சேர்க்கை சற்று தாமதித்து ஏப்ரலில் இருந்து உத்தியோகப்பூர்வமாக ஆரம்பிக்கப்படும்.
இது தொடர்பான சுற்று நிருபங்கள் வெளியிடப்பட்டு தற்போது வழமையான நடைமுறைகள் பின்பற்றப்பட்டு வருவதாகவும், பெற்றோர்கள் அதனை பயன்படுத்தி அனுமதிகளை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தெரிவித்தார்.
விடுபட்ட பாடத்திட்டங்களை உள்ளடக்கும் வகையில் ஏனைய தரங்களின் கல்வி நடவடிக்கைகளுக்காக வகுப்பறைகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், தரம் ஒன்றின் மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகளை ஏப்ரல் மாதம் ஆரம்பிக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என்றார்.
நாடுகளை பகைத்துக்கொண்டு பயணம் செய்ய முடியாது – அமைச்சர் ஜோன்ஸ்டன்
அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கை பிரகடனத்திற்கு அமைவாக பொதுமக்களுக்கு வினைத்திறனான சேவையை வழங்கும் நோக்கில்
நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் தலைமையில் குருநாகல் பதிவாளர் திணைக்களத்தின் புதிய அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது
இந்த நிகழ்வின் பின்னர் சீன உரக் கப்பல் தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய
கேள்விகளுக்கு அமைச்சர் பதிலளித்தார்.
இங்கு பேச வேண்டியது பண விவகாரம் , குறித்து அல்ல இரு நாடுகளுக்கிடையே ஏற்பட்டுள்ள ஒப்பந்தம் குறித்தே கவனிக்க வேண்டியுள்ளது எனவே அதை வழங்க வேண்டும் என அமைச்சரவை தீர்மானித்தது. நாடுகளுடன் பணியாற்றும் போது கவனமாக இருக்க வேண்டும். அதில் எனக்கு
எந்தத் தவறும் தெரியவில்லை யாராவது தவறு செய்தால், அந்த தவறை கண்டுபிடிக்க வேண்டும்.
அதற்கு முன் இரு நாடுகளுக்கு இடையே ஏற்படப் போகும் நெருக்கடிக்கு தீர்வு காண வேண்டும். உடன்பாடு ஏற்பட்ட பிறகு தவறு , நடந்திருந்தால் பணத்தை செலுத்த வேண்டும்.
6.5 மில்லியன் டொலர் களுக்காக நாட்டுடன் கோபப்படுவதா அல்லது அமைதியான முறையில் தீர்ப்பது என்பதுதான் முதலில் பார்க்க வேண்டிய விஷயம்.
மக்களை மனதில் வைத்துத்தான் அரசாங்கம் முடிவுகளை எடுக்க வேண்டும்.சில தவறுகள் உள்ளன. வரலாற்றில் இது முதல் சம்பவம் இதுவல்ல . தவறுகளை நாம் திருத்திக் கொள்ள வேண்டும்.
சேதனப் பசளை ஊடான விவசாயம் குறித்து பரீட்சார்த்தமாக புதிய முயற்சி செய்யப்பட்டது.
விவசாயிகளுக்கு உரம் வழங்க வேண்டும்.இதனால் அரசு திடீரென சேதனப் பசளை கொண்டு வந்து மாதிரிகளை சோதனை செய்த போது தொழில்நுட்ப கோளாறு காரணமாக அது நமக்கு ஒத்து வரவில்லை. இரண்டு அரசாங்கங்களுக்கு இடையிலான செயற்பாடு காரணமாக நாம் ஒருதலைப்பட்சமான முடிவுகளை எடுக்க முடியாது. அதனால் லாப நஷ்டத்தை ஏற்க வேண்டியுள்ளது. நாடுகளை கோபித்துக்கொண்டு பயணம் செய்ய முடியாது
நாடுகளை பகைத்துக்கொண்டு பயணம் செய்ய முடியாது – அமைச்சர் ஜோன்ஸ்டன்
அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கை பிரகடனத்திற்கு அமைவாக பொதுமக்களுக்கு வினைத்திறனான சேவையை வழங்கும் நோக்கில் நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் தலைமையில் குருநாகல் பதிவாளர் திணைக்களத்தின் புதிய அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது
இந்த நிகழ்வின் பின்னர் சீன உரக் கப்பல் தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சர் பதிலளித்தார்.
இங்கு பேச வேண்டியது பண விவகாரம் , குறித்து அல்ல இரு நாடுகளுக்கிடையே ஏற்பட்டுள்ள ஒப்பந்தம் குறித்தே கவனிக்க வேண்டியுள்ளது எனவே அதை வழங்க வேண்டும் என அமைச்சரவை தீர்மானித்தது. நாடுகளுடன் பணியாற்றும் போது கவனமாக இருக்க வேண்டும். அதில் எனக்கு எந்தத் தவறும் தெரியவில்லை யாராவது தவறு செய்தால், அந்த தவறை கண்டுபிடிக்க வேண்டும்.
அதற்கு முன் இரு நாடுகளுக்கு இடையே ஏற்படப் போகும் நெருக்கடிக்கு தீர்வு காண வேண்டும். உடன்பாடு ஏற்பட்ட பிறகு தவறு , நடந்திருந்தால் பணத்தை செலுத்த வேண்டும்.
6.5 மில்லியன் டொலர் களுக்காக நாட்டுடன் கோபப்படுவதா அல்லது அமைதியான முறையில் தீர்ப்பது என்பதுதான் முதலில் பார்க்க வேண்டிய விஷயம்.
மக்களை மனதில் வைத்துத்தான் அரசாங்கம் முடிவுகளை எடுக்க வேண்டும்.சில தவறுகள் உள்ளன. வரலாற்றில் இது முதல் சம்பவம் இதுவல்ல . தவறுகளை நாம் திருத்திக் கொள்ள வேண்டும்.
சேதனப் பசளை ஊடான விவசாயம் குறித்து பரீட்சார்த்தமாக புதிய முயற்சி செய்யப்பட்டது.
விவசாயிகளுக்கு உரம் வழங்க வேண்டும்.இதனால் அரசு திடீரென சேதனப் பசளை கொண்டு வந்து மாதிரிகளை சோதனை செய்த போது தொழில்நுட்ப கோளாறு காரணமாக அது நமக்கு ஒத்து வரவில்லை. இரண்டு அரசாங்கங்களுக்கு இடையிலான செயற்பாடு காரணமாக நாம் ஒருதலைப்பட்சமான முடிவுகளை எடுக்க முடியாது. அதனால் லாப நஷ்டத்தை ஏற்க வேண்டியுள்ளது. நாடுகளை கோபித்துக்கொண்டு பயணம் செய்ய முடியாது
முகக்கவசம் அணியாத 1,831 பேருக்கு பொலிஸார் எச்சரிக்கை
முகக்கவசம் அணியாத 1,831 பேருக்கு பொலிஸார் எச்சரிக்கை
மேல் மாகாணத்தில் முறையாக முகக்கவசம் அணியாத 1,831 பேருக்கு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
போக்குவரத்து பிரிவில் கடமையாற்றும் 778 பொலிஸ் உத்தியோகத்தர்களின் பங்களிப்புடன், மேல் மாகாணத்தில் நேற்று(19) மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போதே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையின் போது 3,021 மோட்டார் சைக்கிள்கள், 2,645 முச்சக்கர வண்டிகள் மற்றும் 7,810 நபர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
தகுதியற்ற நியமனத்திற்கு தரமான பதிலடி கொடுத்த கொழும்பு பல்கலை மாணவர்கள்!
தகுதியற்ற நியமனத்திற்கு தரமான பதிலடி கொடுத்த கொழும்பு பல்கலை மாணவர்கள்!
கொழும்பு பல்கலைக்கழகத்தின் “வேந்தர்” பதவிக்கு முருத்தெட்டுவே ஆனந்த தேரரை தற்போதைய அரசாங்கம் நியமித்தமைக்கு எதிராக ஆசிரியர் சங்கங்கள் மற்றும் கொழும்பு
பல்கலைக்கழகத்தின் பிரதான மாணவர் ஒன்றியம் என்பன தமது பலத்த எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தன.
அரசியல் ரீதியான திருப்திப்படுத்தலுக்கே குறித்த நியமனம் தேரருக்கு வழங்கப்பட்டதாக பலர் கூறியிருந்தார்கள்.
இந்நிலையில் கொழும்பு பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா சில நாட்களுக்கு முன் நடைபெற்றது. இங்கு பட்டம் பெற வந்த மாணவர்கள் முருத்தெட்டுவ ஆனந்த தேரரிடம் இருந்து
தமது பட்டத்தை பெறாமல் அரங்கில் தமது எதிர்ப்பை பதிவு செய்து சென்றனர்.
குறித்த எதிர்ப்பை பதிவு செய்த மாணவர்கள் அனைவரும் கொழும்பு பல்கலைகழக சட்டபீடத்தை
சேர்ந்த மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும். அத்தோடு பலர் உயர் நீதிமன்றத்தில்
சட்டத்தரணிகளாக சத்தியப்பிரமாணம் செய்தவர்கள் என்பதும் சிறப்பான தகவல்.
முகாமைத்துவ பீடம் மற்றும் நிதி ஆசிரியர் சங்கமும் (FMFTA) குறித்த நிகழ்வைப் புறக்கணித்துள்ளன.
தற்போதைய இனவாத அரசாங்கத்திற்கு எதிராக தமது பலமான எதிர்ப்பை துணிந்து செயலில் வெளிப்படுத்திய மாணவர்களுக்கு எமது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.
எம்பி சிறிதரன் இவ்விதம் பதிவிட்டுள்ளார்
காணாமல் போன 13 வயது சிறுமி – பற்றைக்குள் சடலமாக மீட்பு
காணாமல் போன 13 வயது சிறுமி – பற்றைக்குள் சடலமாக மீட்பு
முல்லைத்தீவு மாவட்டத்தின்புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மூங்கிலாறு கிராமத்தினை சேர்ந்த 13 அகவை சிறுமி கடந்த 15 ஆம் முதல் காணவில்லை என புதுக்குடியிருப்பு
பொலிஸ் நிலையத்தில் பெற்றோரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் குறித்த சிறுமி இன்று (15) மூங்கிலாறு 200 வீட்டுத்திட்டம் பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றில் சடலமாக இனம் காணப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்கள்.
சம்பவ இடத்திற்கு முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி வருகைதந்து பார்வையிட்டு சட்டநடவடிக்கைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்துள்ளார்கள்.
உயிரிழந்த சிறுமி தொடர்பில் மேலும் தெரியவருகையில், 13 அகவையுடைய குறித்த சிறுமி மூங்கிலாறு வடக்கு உடையார் கட்டில் வசிக்கின்றார் இந்த சிறுமி திருகோணமலையில் விடுதியில்
தங்கி நின்று படிப்பதாகவும் காணாமல் போவதற்கு இரண்டு நாட்களுக்க முன்னர்தான் வீட்டிற்கு வந்துள்ளதாகவும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மூங்கிலாறு வடக்கு 200 வீட்டுத்திட்ட தனியார் பற்றைக்காணி ஒன்றில் இருந்தே குறித்த சடலம் இன்று இனங்காணப்பட்டுள்ளது.
சடலம் காணப்பட்ட இடத்துக்கும் இவரின் வீட்டிற்கும் இடைப்பட்ட தூரம் 400 மீற்றர் வரையிலேயே
காணப்படுகிறது சிறுமியின் உடலத்தினை அயல் வீட்டவர்கள் கோழியினை காணவில்லை என தேடி சென்றபோதே அடையாளம் காட்டியுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
நீதிபதி வீட்டில் புகுந்து தாலி கொடியை திருடி சென்ற திருடர்கள்
நீதிபதி வீட்டில் புகுந்து தாலி கொடியை திருடி சென்ற திருடர்கள்
இலங்கை மட்டு அக்கரைப்பற்று பகுதியில் உள்ள நீதிபதி ஒருவரது வீட்டுக்குள் புகுந்த திருடர்கள்
அவரது மனைவியின் 11 பவுன் தாலிக் கொடியை திருடி சென்றுள்ளனர்
திருடர்களை மடக்கி பிடிக்க நீதிபதி முயன்ற பொழுது அவர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்
மேற்படி குற்ற செயல் அவர்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது
கோப்பாயில் சிக்கிய கொள்ளையர்கள் – நகைகள் மீட்பு
கோப்பாயில் சிக்கிய கொள்ளையர்கள் – நகைகள் மீட்பு
யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் வீடொன்றுக்குள் புகுந்து கத்தி முனையில் நகை
கொள்ளையடித்து செல்ல பட்டது
மேற்படி கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று கொள்ளையர்கள் கைது செயய் பட்டதுடன்
இவர்களிடம் இருந்து திருட பட்ட ஆறு லட்சம் ரூபா பெறுமதியான நகைகளும் மீட்க பட்டுள்ளன
தமிழக மீனவர்கள் 43 பேர் சிங்கள கடல்படையால் கைது
தமிழக மீனவர்கள் 43 பேர் சிங்கள கடல்படையால் கைது
இலங்கை நெடுந்தீவு கடல் பகுதியில் அண்மித்து மீன்பிடியில் ஈடுபட்டனர் என்ற குற்ற சாட்டில்
தமிழகத்தை சேர்ந்த 43 மீனவர்கள் சிங்கள கடற்படையால் கைது செய்ய பட்டுள்ளன
கைதானவர்கள் நீதிமன்ற விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளனர்
போதை பொருளுடன் 12 பேர் கைது
போதை பொருளுடன் 12 பேர் கைது
இலங்கை சிவனொளிபாதமலைக்கு யாத்திரை சென்ற மக்களில் 12 பேர் கைது செய்ய பட்டுள்ளனர்
இவர்கள் அங்கு போதை பொருள் எடுத்து சென்ற குற்ற சாட்டில் கைது செய்ய பட்டு தடுத்த வைக்க பட்டுள்ளனர்
காவல்துறை வேட்டையில் 147 பேர் கைது
காவல்துறை வேட்டையில் 147 பேர் கைது
இலங்கை மேல் மாகாணத்தில் காவல்துறையினர் நடத்திய விசேட தேடுதல் மற்றும் சோதனை
நடவடிக்கையின் பொழுது
பல்வேறு குற்ற சாட்டுக்களின் அடிப்படியில் 147 பேர் கைது செய்ய பட்டுள்ளதாக போலீஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்
கொரனோ பரவல் -நெதர்லாந்து முழு அடைப்பு – முடங்கிய நாடு
கொரனோ பரவல் -நெதர்லாந்து முழு அடைப்பு – முடங்கிய நாடு
நெதர்லாந்து நாட்டில் கொரனோ நோயானது அதிகரித்து செல்வதால் அந்த நாடு முழுதாக அடித்து மூட பட்டுள்ளது
பாடசாலைகள் ,கடைகள்,என அனைத்தும் அடித்து பூட்ட பட்டுள்ளது ,மேலும் இந்த முழு
அளவிலான ஊரடங்கு மற்றும் தடை நீக்கம் எதிர்வரும் மாசி மதம் நாடு பகுதியில் கட்டம்
கட்டமாக நீக்க படும் என பிரதமர் தெரிவித்துள்ளார்
நோயில் இருந்து மக்களை காப்பாற்றும் முகமாக இந்த தடை விலக்க பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
பிரிட்டனில் 10 ஆயிரம் பேருக்கு புதிய கொரனோ தொற்று
பிரிட்டனில் 10 ஆயிரம் பேருக்கு புதிய கொரனோ தொற்று
பிரிட்டனில் மூன்றாம் அலையாக பரவி வரும் புதிய ஓமிக்ரோன் கொரானா நோயின் தாக்குதலில்
சிக்கி பத்து ஆயிரத்திற்கு மேல் பாதிக்க பட்டுள்ளனர் ,மேலும் ஒரே நாளில் 91 ஆயிரத்திற்கு மேல் பாதிக்க பட்டுள்ளனர்
தொடர்ந்து மேற்படி நோயானது அதிகரித்து வருவதாலும் மரண எண்னிக்கை 125 க்கு மேல்
அதிகரித்து செல்வதாலும் விரைவில் நாடு முடக்க படும் நிலைக்கு செல்ல கூடும் என எதிர் பார்க்க படுகிறது
இவன் போல நீ எழு
இவன் போல நீ எழு
எதிரிக்கு அடங்கா எழுவான்- இவன்
எண்திசை காட்டும் உதயோன்
அடிமைக்கு அடங்கா கிழக்கு- இவன்
அறத்திலே வெடிக்கின்ற துவக்கு
எதிரிக்கும் எழுகின்ற வியப்பு- இவன்
எரிகின்ற எங்கள் நெருப்பு
வீரத்தில் பாய்கின்ற புலி – இவன்
விடுதலை முழங்கிடும் ஒலி
தளிர்த்திடும் முளைகளின் ஒளி- இவன்
தடத்திலே சிக்காத எலி
வீரத்தில் முளையிடும் முளை – இவன்
வீரம் பேசிடும் நாளை
வீழ்சியில் எழுந்த ஏவுகணை – இவன்
வீரம் பேசிடும் போர்முனை
வீழாது உழுதிடும் ஏர்முனை- இவன்
விடுதலை பேசிட நீமுனை ….
வன்னி மைந்தன்
ஆக்கம் 18-12-2021
வியாபாரியை துரத்திச் சென்ற பொலிஸ் அதிகாரி மரணம்!
வியாபாரியை துரத்திச் சென்ற பொலிஸ் அதிகாரி மரணம்!
திருகோணமலை தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்பலகாமம் பொலிஸ் நிலையத்தில்
கடமையாற்றிய பொலிஸ் அதிகாரியொருவர் நேற்றிரவு (16) போதை வியாபாரி ஒருவரை துரத்தி பிடித்த போது தவறி விழுந்து மரணமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதன்போது கஜ்ஜி முகமது தாரிக் வயது 49 என்பவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மேலும் தெரியவருவதாவது,
தம்பலகாமம் பொலிஸாருக்கு ஹோரொயின் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுவதாக
கிடைத்த ரகசிய தகவலையடுத்து சந்தேக நபர்களை முள்ளிப்பொத்தானை என்ற இடத்தில் கைது செய்ய முற்பட்ட போதே இவ் மரணம் ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கைது செய்யப்பட்டவர் கந்தளாய் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மரணம் குறித்து மேலதிக விசாரணை தம்பலகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
சடலம் கந்தளாய் தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் பிரேத பரிசோதனையின்
பின்னர் உறவினர்களிடம் கையளிப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கடனில் சிக்கித் தவிக்கும் இலங்கை
கடனில் சிக்கித் தவிக்கும் இலங்கை
நாட்டில் நிலவும் டொலர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக சீனா, ஜப்பான் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளிடம் கடன் வாங்குதற்கு அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக அறியமுடிகிறது.
இது தொடர்பில் நட்பு நாடுகளுடன் கலந்துரையாடல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கடந்த வாரம் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் நிதி அமைச்சர் பெசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இந்திய விஜயம் வெற்றியடைந்துள்ளதாகவும், சுமார் 140 கோடி அமெரிக்க டொலர்களை நிவாரணம் வழங்குவதற்கு இந்திய அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
அதேவேளை, சர்வதேச நாணய நிதியத்துடன் தாம் கலந்துரையாடி வருவதாகவும், கடுமையான நிபந்தனைகளுக்கு உட்படாமல் சலுகை முறையில் பரிவர்த்தனை செய்ய உத்தேசித்துள்ளதாகவும் நிதியமைச்சர் குறிப்பிட்டார்.
பதட்டத்தில் நாடு- வெடிக்கும் காஸ் சிலிண்டர்கள்
பதட்டத்தில் நாடு வெடிக்கும் காஸ் சிலிண்டர்கள்
திம்புள்ள – பத்தனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் சமையல் எரிவாயு அடுப்பு வெடிப்பு சம்பவங்கள் இரண்டு பதிவாகியுள்ளன.
கொட்டகலை, பத்தனை கிறேக்கிலி தோட்டத்தில் வீடு ஒன்றில் இந்த வெடிப்பு சம்பவம் இரவு 07.00 மணியளவில் இடம்பெற்றதாக பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.
சமைத்துக் கொண்டிருந்த போது அடுப்பு திடீரென வெடித்து சிதறியுள்ளது. அடுப்புக்கு பாவிக்கப்பட்டுள்ள லிட்ரோ எரிவாயு சிலிண்டர் பொங்கியிருந்தமையும் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
சம்பவத்தில் எவருக்கும் பாதிப்புக்கள் ஏற்படவில்லை.
இதேவேளை, கொட்டகலை சிமோல் டிரேட்டன் தோட்டத்தில் குடியிருப்பாளர்கள் சமையல் செய்து கொண்டிருந்த போது, திடீரென அடுப்பு வெடித்தது.
இந்த வெடிப்பு சம்பவத்தினால் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்பதுடன் திம்புள்ள பத்தனை பொலிஸார் இவ்விரு சம்பவ இடங்களுக்கும் சென்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்..
யாழில் பெற்றோல் குண்டு தாக்குதல்
யாழில் பெற்றோல் குண்டு தாக்குதல்
மானிப்பாயில் புதன்கிழமை வீடு ஒன்றுக்குள் புகுந்து வன்முறையில் ஈடுபட்ட கும்பலைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நவாலி மற்றும் கொக்குவிலைச் சேர்ந்த மூன்று சந்தேகநபர்களே யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரினால் நேற்று கைது செய்யப்பட்டனர்.
சந்தேகநபர்களிடமிருந்து 2 வாள்கள் மற்றும் மோட்டார் சைக்கிளும் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வீட்டுக்குள் புகுந்த கும்பல் பெறுமதியான பொருள்களை சேதப்படுத்தியதுடன் பெற்றோல் குண்டுத் தாக்குதலை மேற்கொண்டிருந்தது.
யாழ்ப்பாணம் பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் கீழான தலைமை பொலிஸ் பரிசோதகர் நிகால் பிரான்ஸிஸ் தலைமையிலான மாவட்ட குற்றத் தடுப்பு பொலிஸ் பிரிவே இந்தக் கைது நடவடிக்கையை முன்னெடுத்தது
இலங்கையில் ஏற்படவுள்ள மாற்றம்
இலங்கையில் ஏற்படவுள்ள மாற்றம்
2022ஆம் ஆண்டு ஆரம்பத்தில் பல அமைச்சரவை மாற்றங்களைச் செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதன்படி பல முக்கிய அமைச்சுப் பதவிகளில் மாற்றங்கள் செய்யப்படவுள்ளதாக தெரியவருகிறது.
அடுத்த வருட ஆரம்பத்தில் அரசாங்க வேலைத்திட்டத்தை புத்துணர்ச்சியுடனும் வேகத்துடனும் முன்னெடுக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அரசாங்கப் பேச்சாளர் ஒருவர் இன்று தெரிவித்தார்.
இதேவேளை, அமைச்சரவை நியமனம் தொடர்பில் அரசாங்கத்தின் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏற்கனவே தமது ஆட்சேபனைகளை முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
10 வாகனங்கள் நேரெதிர் மோதல்
10 வாகனங்கள் நேரெதிர் மோதல்
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற மூன்று விபத்துக்களில் 10 வாகனங்கள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் தொடங்கொட 34 கிலோமீற்றர் கம்பத்திற்கு அருகில் நேற்று (17) பிற்பகல் இந்த விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்தில் மூன்று பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
லொறி ஒன்று, 3 சொகுசு பேருந்துகள், 2 ஜீப் வண்டிகள், 4 கார்கள் இவ்விபத்தில் சிக்கியுள்ள






