Posted in சினிமா

பிரபல நடிகர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

பிரபல நடிகர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

பிரபல மலையாள சினிமா நடிகர் அனில் நெடுமங்காடு (48) அணையில் குளித்த போது தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

பிரபல நடிகர் நீரில் மூழ்கி உயிரிழப்பு – திரையுலகினர் அதிர்ச்சி
அனில் நெடுமங்காடு
மலையாள சினிமாவில் முக்கிய வேடங்களில் நடித்து வருபவர் அனில். இவர் திருவனந்தபுரம் அருகே உள்ள நெடுமங்காடு என்ற இடத்தை சேர்ந்தவர். நாடக நடிகரான இவர், சுமார் 20

வருடங்களுக்கு முன் ஒரு பிரபல மலையாள தனியார் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து வந்தார்.

இதன் பின்னர் மலையாள சினிமாவில் நடிக்கத் தொடங்கினார். கடந்த சில வருடங்களாக இவர் நடித்து வரும் படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் படங்களாக மாறியுள்ளன. பிரித்விராஜ், பிஜு மேனன்

ஆகியோர் நடிப்பில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டாக ஓடிய ஐயப்பனும் கோஷியும் என்ற படத்தில் இவர் நடித்த போலீஸ் இன்ஸ்பெக்டர் வேடம் பரபரப்பாக பேசப்பட்டது.

இந்நிலையில் ஜோஜு ஜார்ஜ் நாயகனாக நடிக்கும் பீஸ் என்ற படத்தில் இவர் ஒரு முக்கிய வேடத்தில் நடித்து வந்தார். இந்த

படத்திற்கான படப்பிடிப்பு இடுக்கி மாவட்டம் தொடுபுழா என்ற இடத்தில் நடைபெற்று வருகிறது. இன்று நடந்த படப்பிடிப்பில் இவர் கலந்து கொண்டார்.

அனில்

மாலையில் படப்பிடிப்பு முடிந்த பின்னர் அருகில் உள்ள மலங்கரா அணைக்கு நண்பர்களுடன் குளிக்கச் சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக ஆழமான பகுதியில் சிக்கிய அனில்

தண்ணீரில் மூழ்கினார். இதைப்பார்த்த அவரது நண்பர்கள் உடனடியாக அவரை மீட்க முயன்றனர். ஆனால் ஆழமான பகுதி என்பதால் அவரை காப்பாற்றுவதில் முதலில் சிரமம் ஏற்பட்டது.

ஆனாலும் சிறிது நேரத்திற்குப் பின் அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே நடிகர் அனில் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து அவரது

உடல் பிரேத பரிசோதனைக்காக தொடுபுழா மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்

Posted in சினிமா

2020-ல் திரையுலகை உலுக்கிய மரணங்கள்

2020-ல் திரையுலகை உலுக்கிய மரணங்கள்

கோலிவுட் முதல் பாலிவுட் வரை பல்வேறு திரையுலக பிரபலங்கள் இந்தாண்டு மரணமடைந்தனர். அவற்றின் தொகுப்பை காணலாம்.

சேது முதல் சித்ரா வரை… 2020-ல் திரையுலகை உலுக்கிய எதிர்பாரா மரணங்கள் – முழு தொகுப்பு
2020-ல் மரணமடைந்த சினிமா பிரபலங்கள்


2020, சினிமா மற்றும் சின்னத்திரைக்கு மிக மோசமான ஒரு வருடம் தான். இந்தாண்டு திரையுலகில் எதிர்பாராத மரணங்கள், அதிர்ச்சி தரும் தற்கொலைகள் என ஏராளமான சம்பவங்கள் அரங்கேறி உள்ளன. அதன் தொகுப்பை காணலாம்.

திரையுலகை உலுக்கிய மரணங்கள்
திரையுலகை உலுக்கிய மரணங்கள்

விசு

விசு

எழுத்தாளர், இயக்குநர், நடிகர், தொகுப்பாளர் என பன்முகத்திறமை கொண்டவர் விசு. சினிமாவில் குடும்ப சென்டிமென்டை வைத்து ஏராளமான படங்களை இயக்கியும் நடித்தும் இருக்கும் இவர்

சின்னத்திரையிலும் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி உள்ளார். அவரது அரட்டை அரங்கம் நிகழ்ச்சிக்கு அதிக அளவு ரசிகர்கள் இருந்ததும் குறிப்பிடத்தக்கது. சிறு நீரகக் கோளாறு காரணமாக

அவதிப்பட்டு வந்த விசு, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், கடந்த 22 மார்ச் 2020 அன்று மரணம் அடைந்தார்.

சேது

சேதுராமன்

நடிகர் சந்தானத்தின் நெருங்கிய நண்பரான டாக்டர் சேதுராமன், கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு ஹீரோவாக அறிமுகமானார். தொடர்ந்து வாலிப

ராஜா, சக்கப்போடு போடு ராஜா, 50 50 போன்ற படங்களில் நடித்துள்ளார். நடிகர் சேதுராமன் ஒரு தோல் சிகிச்சை நிபுணரும் கூட. இவர் தனியாக கிளினிக் நடத்தி வந்தார். ஏராளமான சினிமா

பிரபலங்கள் அவரிடம் சிகிச்சை பெற்று வந்துள்ளனர். இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் 26-ம் தேதி இரவு திடீரென

ஏற்பட்ட மாரடைப்பால் சேதுராமன் மரணமடைந்தார். 34 வயதில் அவர் மரணமடைந்தது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

ஜீன் டெய்ச்

ஜீன் டெய்ச்

துறுதுறுவென சேட்டைகள் செய்யும் குட்டி எலியும், அதை துரத்தி விளையாடும் பூனையின் வேடிக்கைகள் நிறைந்த தொடர் தான் டாம் அண்ட் ஜெர்ரி. வயது வரம்பின்று அனைவரும் பார்த்து ரசிக்கும் இந்த கார்ட்டூன் தொடரை இயக்கியவர் ஜீன் டெய்ச். ஆரம்ப காலத்தில் ராணுவத்திலும், விமானியாகவும் பணியாற்றிய இவர் பின்னர் கார்ட்டூன் இயக்கி வந்தார். வயது முதிர்ச்சி காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இவர், கடந்த ஏப்ரல் மாதம் 16-ந் தேதி காலமானார். அவருக்கு வயது 95.

இர்பான் கான்

இர்பான் கான்

30 ஆண்டுகளாக திரையுலகில் நடித்து வந்தவர் இர்பான் கான். ஏராளமான பாலிவுட் படங்களில் நடித்துள்ள அவர், ஹாலிவுட்டிலும் தி அமேசிங் ஸ்பைடர் மேன், லைஃப் ஆப் பை, ஜுராசிக் வேர்ல்டு போன்ற படங்களில் நடித்து உலக அளவில் பிரபலமானார். புற்றுநோய் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த இர்பான் கான் (வயது 53) கடந்த ஏப்ரல் 29-ந் தேதி காலமானார். கடந்த சில ஆண்டுகளாக லண்டன் சென்று புற்றுநோய்க்காக அவர் சிகிச்சை பெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.

ரிஷி கபூர்

ரிஷி கபூர்

40 ஆண்டுகளாக பாலிவுட் படங்களில் நடித்து வந்த ரிஷி கபூர், கடைசியாக கடந்த 2018-ம் ஆண்டு அமிதாப் பச்சனுடன் 102 நாட் அவுட் என்கிற படத்தில் நடித்தார். இதையடுத்து ரிஷி கபூருக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டதால் அவர் படங்களில் நடிப்பதை நிறுத்திக்கொண்டார். அமெரிக்கா சென்று ஓராண்டு புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று குணமடைந்த அவர் கடந்த ஏப்ரல் 30-ந் தேதி மூச்சுத்திணறல் காரணமாக உயிரிழந்தார்.

சிரஞ்சீவி சர்ஜா

சிரஞ்சீவி சர்ஜா

தென்னிந்திய சினிமாவை உலுக்கிய மரணங்களில் நடிகர் சிரஞ்சீவி சர்ஜாவின் மரணமும் ஒன்று. நடிகர் அர்ஜுனின் சகோதரி மகனான சிரஞ்சீவி சர்ஜா கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வந்தார். 20-க்கும் மேற்பட்ட கன்னட படங்களில் நடித்துள்ள இவர், கடந்த ஜூன் மாதம் 8-ம் தேதி திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் மரணமடைந்தார். சிரஞ்சீவி சர்ஜா (வயது 39)கடந்த 2018-ம் ஆண்டுதான் பிரபல நடிகையான மேக்னா ராஜை காதலித்து கரம்பிடித்தார். சிரஞ்சீவி சர்ஜா உயிரிழக்கும் போது அவரது மனைவி 4 மாத கர்ப்பிணியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

சுஷாந்த் சிங்

சுஷாந்த் சிங்

பாலிவுட் மட்டுமின்றி ஒட்டு மொத்த இந்திய சினிமா ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்திய மரணம் என்றால் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட்டின் மரணம். இவரது மரணம் கிரிக்கெட் ரசிகர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. ஏனெனில் அவர் தோனியின் வாழ்க்கை வரலாறு படமான ‘எம்.எஸ்.தோனி – தி அன்டோல்டு ஸ்டோரி’ படத்தில் தோனியாக நடித்திருந்தார். 34 வயதே ஆன சுஷாந்த் சிங் கடந்த ஜூன் மாதம் 14-ம் தேதி மும்பை உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது மரணம் தற்கொலையா? கொலையா? என சந்தேகம் எழுந்த நிலையில், அவரது மரண வழக்கு சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கப்பட்டது. 6 மாதங்களுக்கு மேலாக அதுகுறித்த விசாரணை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

இயக்குனர் சாச்சி

இயக்குனர் சாச்சி

கதாசிரியர், தயாரிப்பாளர், இயக்குநர் என பன்முகத் திறமை கொண்டவர் சாச்சி. இவர் கடந்த 2015-ம் ஆண்டு பிருத்விராஜ், பிஜூ மேனன் உள்ளிட்டோர் நடித்த அனார்களி படத்தின் மூலம் இயக்னராக அறிமுகமானார். இவரது இரண்டாவது படமான அய்யப்பனும் கோஷியும் இந்தாண்டு பிப்ரவரி மாதம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் வசூலையும் வாரிக்குவித்தது. 48 வயதே ஆன இயக்குனர் சாச்சி கடந்த ஜூன் மாதம் 18-ம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார்.

சாட்விக் போஸ்மேன்

சாட்விக் போஸ்மேன்

உலக மக்களை பெரிதும் கவர்ந்த படம் அவெஞ்சர்ஸ். இதில் நடித்த நடிகர்கள் அனைவரும் உலக மக்களிடையே மிகவும் பிரபலம். அந்த வகையில் இப்படத்தில் பிளாக் பேந்தர் கதாபாத்திரத்தில் நடித்தவர் சாட்விக் போஸ்மேன். 43 வயதான இவர் கடந்த 4 வருடங்களாக புற்று நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இவர் கடந்த ஆகஸ்ட் 29-ந் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது மறைவு ஹாலிவுட் பட ரசிகர்களுக்கு பேரிழப்பு என்றே சொல்லலாம்.

வடிவேல் பாலாஜி

வடிவேல் பாலாஜி

சின்னதிரையில் காமெடி நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமானவர் வடிவேல் பாலாஜி. இவர் நகைச்சுவை நடிகர் வடிவேலு போல் காமெடி செய்வதால் ‘வடிவேல் பாலாஜி’ என்று அழைக்கப்பட்டார். பிரபல காமெடி நிகழ்ச்சிகளான ‘அது இது எது’, ‘கலக்கப் போவது யாரு’, போன்ற பல நிகழ்ச்சிகள் மூலம் ரசிகர்களை கவர்ந்தார். உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த வடிவேல் பாலாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் கடந்த செப்டம்பர் 10-ம் தேதி திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் உயிரிழந்தார். அவருக்கு வயது 42.

புளோரண்ட் பெரேரா

புளோரண்ட் பெரேரா

நடிகர் விஜய்யின் புதிய கீதை படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமாவனர் புளோரண்ட் பெரேரா. இதையடுத்து இவர் கயல், எங்கிட்ட மோதாதே, வேலையில்லா பட்டதாரி 2, ராஜா மந்திரி, தொடரி போன்ற படங்களில் நடித்துள்ளார். பல வருடங்களாக ஊடகத்துறையில் பணியாற்றி இவர் கடந்த செப்டம்பர் மாதம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.இருப்பினும் சிகிச்சை பலனின்றி கடந்த செப்டம்பர் மாதம் 15-ம் தேதி உயிரிழந்தார்.

எஸ்.பி.பாலசுப்ரமணியம்

எஸ்.பி.பாலசுப்ரமணியம்

பின்னணி பாடகர் எஸ்.பி.பி.யின் மரணம், இசை உலகுக்கே பேரிழப்பு என்றே சொல்லலாம். பாடும் நிலா என்றழைக்கப்படும் எஸ்.பி.பி. நாற்பதாயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடி கின்னஸ் சாதனை படைத்துள்ளார். பின்னணி பாட்கராக மட்டுமல்லாமல் இசையமைப்பாளர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகத்திறமை கொண்டவராக விளங்கினார். பாடகர் எஸ்.பி.பி. கடந்த ஆகஸ்ட் மாதம் 4-ம் தேதி லேசான கொரோனா அறிகுறியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் கொரோனாவில் இருந்த மீண்ட அவர் உடல்நலக்குறைவு காரணமாக 50 நாட்களுக்கும் மேலாக சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் கடந்த செப்டம்பர் 25-ம் தேதி மரணமடைந்தார். அவருக்கு வயது 74.

ஷான் கானெரி

ஷான் கானெரி (முதல் ஜேம்ஸ் பாண்ட் நடிகர்)

ஹாலிவுட்டில் 1960களில் தொடங்கிய ஜேம்ஸ் பாண்ட் படங்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். இதுவரை 24 ஜேம்ஸ் பாண்ட் படங்கள் வந்துள்ளன. இதில் முதல் ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் நடித்தவர் ஷான் கானெரி. இவர் 7 ஜேம்ஸ் பாண்ட் படங்களில் நடித்துள்ளார். ஸ்காட்லாந்தைச் சேர்ந்த இவர், ஆஸ்கர், பாஃப்தா மற்றும் கோல்டன் க்ளோப் என பல்வேறு முக்கிய விருதுகளை வென்றுள்ளார். இவர் வயது முதிர்வு காரணமாக கடந்த அக்டோபர் 31-ந் தேதி காலமானார்.

தவசி

தவசி

‘கிழக்குச் சீமையிலே’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகத்திற்கு நடிகராக அறிமுகமானார் தவசி. ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தில் நடிகர் சூரியின் தந்தையாக நடித்த இவர், அப் படத்தில் இடம்பெற்ற ‘கருப்பன் குசும்புக்காரன்’ என்ற டயலாக்கின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார். தமிழில் சுமார் 50க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களில் பல்வேறு வேடங்களில் நடித்துள்ளார். ரஜினி நடிப்பில் உருவாகி வரும் ‘அண்ணாத்த’ படத்திலும் இவர் நடித்துள்ளார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த தவசி கடந்த நவம்பர் 23-ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சித்ரா

சித்ரா

பிரபல தொகுப்பாளினியும், சீரியல் நடிகையுமான சித்ரா கடந்த டிசம்பர் 9-ம் தேதி நசரத்பேட்டை அருகே உள்ள நட்சத்திர ஓட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இவர் தனது காதலரான ஹேம்நாத்தை பதிவு திருமணம் செய்து கொண்டார். வரும் பிப்ரவரி மாதம் பிரமாண்டமாக திருமணம் செய்ய திட்டமிட்டிருந்தனர். ஆனால் அதற்குள் சித்ரா தற்கொலை செய்துகொண்டார். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது கணவரான ஹேம்நாத்தை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

ஷாநவாஸ்

ஷாநவாஸ்

மலையாள சினிமாவில் எடிட்டராக கால் பதித்தவர் ஷாநவாஸ் (வயது 37). இவரது சொந்த ஊர் நரணிபுலா. கடந்த சில வருடங்களுக்கு முன் முதன்முதலாக கரி என்ற மலையாள படத்தை இயக்கினார். இந்தப் படம் சூப்பர் ஹிட்டாக ஓடாவிட்டாலும் சினிமா விமர்சகர்களின் ஆதரவு கிடைத்தது. இதையடுத்து பிரபல நடிகர் ஜெயசூர்யாவை கதாநாயகனாக வைத்து “சூபியும் சுஜாதாவும்” படத்தை இயக்கினார். இந்தாண்டு ஓடிடி-யில் வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. தனது அடுத்த படத்திற்காக கதை எழுதும் பணியில் தீவிரமாக ஈடுபட்டிருந்த ஷாநவாஸுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், அவர் மூளைச்சாவு அடைந்ததால் டிசம்பர் 23-ந் தேதி உயிரிழந்தார்

Posted in சினிமா

ரஜினிக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை

ரஜினிக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை

அண்ணாத்த படப்பிடிப்பில் கலந்துகொண்ட நடிகர் ரஜினிகாந்த் மீண்டும் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

ரஜினிக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை
ரஜினி
ஐதராபாத்தில் நடைபெற்ற ‘அண்ணாத்த’ படப்பிடிப்பு குழுவில் 4 பேருக்கு கொரோனா இருப்பது தெரியவந்ததால் படப்பிடிப்பு ரத்து

செய்யப்பட்டது. அதனைதொடர்ந்து ரஜினிகாந்துக்கும், மற்ற படக்குழுவினருக்கும் பரிசோதனையில் தொற்று இல்லை என்று தெரிய வந்தது.

இருப்பினும் நடிகர் ரஜினிகாந்துக்கு தன்னை தனிமைப்படுத்திக்கொண்டார். இதர நடிகர், நடிகைகளும்

தனிமைப்படுத்திக்கொண்டனர். மேலும் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதால் ரஜினிகாந்த் சென்னை திரும்புகிறார் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்துக்கு இன்று இரவு அல்லது நாளை காலைக்குள் மீண்டும் கொரோனா பரிசோதனை செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Posted in சினிமா

வைரலாகும் அரவிந்த் சாமியின் எம்.ஜி.ஆர் வேடம்

வைரலாகும் அரவிந்த் சாமியின் எம்.ஜி.ஆர் வேடம்

எம்.ஜி.ஆரின் நினைவு நாளான இன்று, நடிகர் அரவிந்த் சாமி தான் எம்.ஜி.ஆர். தோற்றத்தில் இருக்கும் புகைப்படங்களை டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி ‘தலைவி’ என்ற திரைப்படம் உருவாகி

வருகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் தயாராகும் இந்த படத்தை ஏ.எல்.விஜய் இயக்கி உள்ளார். இப்படத்தில்

ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரணாவத்தும், எம்.ஜி.ஆர் வேடத்தில் அரவிந்த் சாமியும் நடித்துள்ளனர்.

எம்.ஜி.ஆரின் நினைவு நாளான இன்று, நடிகர் அரவிந்த் சாமி தான் எம்.ஜி.ஆர். தோற்றத்தில் இருக்கும் புகைப்படங்களை டுவிட்டரில்

பகிர்ந்துள்ளார். மேலும் அவர் கூறியிருப்பதாவது: புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆராக 1 மணிநேரம் நடித்தது வெறும் கெளரவம் மட்டும் அல்ல பெரிய பொறுப்பு. என் மீது நம்பிக்கை வைத்த இயக்குனர்

ஏ.எல். விஜய் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு நன்றி. தலைவரின் நினைவாக இந்த புகைப்படங்களை இன்று வெளியிடுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

அரவிந்த் சாமியின் டுவிட்டர் பதிவு

இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அரவிந்த்சாமி அச்சு அசல் எம்.ஜி.ஆர் போலவே இருப்பதாக கமெண்ட் செய்து

வருகின்றனர். தலைவி படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Posted in உலக செய்திகள் சினிமா

ரஜனிக்கு கொரனோ- தனிமை படுத்தி கொண்டார்

ரஜனிக்கு கொரனோ- தனிமை படுத்தி கொண்டார்

தமிழ் திரையுலகின் நாயகனாக வலம் வரும் ரஜனிகாந்த் அண்ணாத்த

படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர் ,இதில் அந்த படப்பிடிப்பு கொட்டகையில்

இருந்த எட்டு பேருக்கு கொரனோ பரவிய நிலையில் தற்பொழுது படபிடிப்பு

நிறுத்த போட்டுள்ளதுடன் ,அங்கிருந்த அனைவருக்கும் சோதனைகள் மேற்கொள்ள பட்டு வருகின்றன

இதனை அடுத்து ரஜனி கைதராபாத்தில் தன்னை தனிமை படுத்தி கொண்டுள்ளார் ,


இவருக்கு கொரனோ தொற்று ஏற்பட்டு இருக்கலாம் என கருத படுகிறது

Posted in சினிமா

அண்ணாத்த படப்பிடிப்பில் இணைந்த நடிகைகள்

அண்ணாத்த படப்பிடிப்பில் இணைந்த நடிகைகள்

சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துவரும் அண்ணாத்த படப்பிடிப்பில் பிரபல நடிகைகள் இரண்டு பேர் இணைந்து இருக்கிறார்கள்.

அண்ணாத்த படப்பிடிப்பில் இணைந்த நடிகைகள்… வைரலாகும் செல்பி
ரஜினி


ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘அண்ணாத்த’. சிறுத்தை சிவா இயக்கும் இந்தப்படத்தில் குஷ்பு, மீனா, பிரகாஷ்ராஜ், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ் உள்ளிட்ட பலர்

நடிக்கின்றனர் . சூப்பர் ஸ்டாருடன் பல வருடங்களுக்கு பிறகு முன்னணி நடிகைகள் குஷ்பு, மீனா உள்ளிட்டோர் நடிக்க உள்ளதால்

அண்ணாத்த படம் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த பல மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அண்ணாத்த படப்பிடிப்பு கடந்த 13 ஆம் தேதி ஐதராபாத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. ரஜினிகாந்த்

, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோரின் காட்சிகள் படம்பிடிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது நடிகை குஷ்பு மற்றும் மீனா படப்பிடிப்பிற்கு இணைந்துள்ளனர்.

மீனா – குஷ்பு

நடிகை குஷ்புவும் மீனாவும் விமான நிலையத்தில் சந்தித்து ஒன்றாக பயணித்து உள்ளனர். இவர்கள் சந்தித்த தருணத்தை இருவரும்

தங்கள் இன்ஸ்டாவில் போஸ்ட் செய்து மகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளனர்.

Posted in சினிமா

ரகுல் பிரீத் சிங்கிற்கு கொரோனா

ரகுல் பிரீத் சிங்கிற்கு கொரோனா

சமீபத்தில் குடும்பத்தினருடன் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்று வந்த நடிகை ரகுல் பிரீத் சிங்கிற்கு தற்போது கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

சுற்றுலா சென்று வந்த ரகுல் பிரீத் சிங்கிற்கு கொரோனா பாதிப்பு
ரகுல் பிரீத் சிங்
கொரோனா அச்சுறுத்தல் குறையத் தொடங்கி, பல்வேறு முன்னணி

நடிகர்களும் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளனர். அனைத்துப் படப்பிடிப்புகளுமே கொரோனாவுக்கான முன்னெச்சரிக்கை

நடவடிக்கையுடன்தான் நடைபெற்று வருகின்றன. ஆனாலும், சிலருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

முன்னணி நடிகை ரகுல் பிரீத் சிங், சில தினங்களுக்கு முன்பு குடும்பத்தினருடன் மாலத்தீவுக்குச் சுற்றுலா சென்றுவிட்டுத்

திரும்பினார். தற்போது படப்பிடிப்புக்குச் செல்வதற்காக அவர் ஆயத்தமாகி வந்தார். இதனிடையே, தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ரகுல் பிரீத் சிங் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக ரகுல் பிரீத் சிங் தனது சமூக வலைத்தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:

ரகுல் பிரீத் சிங்

“எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்பதை உங்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன். என்னை நானே

தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். தற்போது நன்றாக இருக்கிறேன்.

நன்கு ஓய்வெடுத்த பின்பு மீண்டும் படப்பிடிப்பில் கலந்துகொள்வேன். என்னைச் சந்தித்த அனைவரும் கொரோனா

பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி, பாதுகாப்பாக இருக்கவும்”.

இவ்வாறு ரகுல் பிரீத் சிங் தெரிவித்துள்ளார்.

Posted in சினிமா

தேர்தலில் போட்டியிடுவேன் – பிக்பாஸ் சண்டைக்காரி

தேர்தலில் போட்டியிடுவேன் – காயத்ரி ரகுராம்

கட்சி மேலிடம் கட்டளையிட்டால் நான் தேர்தலில் போட்டியிடுவேன் என்று நடிகையும், நடன இயக்குனருமான காயத்ரி ரகுராம் கூறியிருக்கிறார்.

கட்டளையிட்டால் தேர்தலில் போட்டியிடுவேன் – காயத்ரி ரகுராம்
காயத்ரி ரகுராம்
மறைந்த டான்ஸ் மாஸ்டர் ரகுராமின் மகள், காயத்ரி ரகுராம்.

இவரும் டான்ஸ் மாஸ்டராக பணிபுரிந்தவர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய 4 மொழிப் படங்களுக்கு நடனம் அமைத்திருக்கிறார்.

சார்லி சாப்ளின் என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து, பரசுராம், விசில், வை ராஜா வை, யாதுமாகி நின்றாய்

உள்பட பல படங்களில் கதாநாயகியாக நடித்தார். இப்போது அவர் நடித்துக்கொண்டே, டான்ஸ் மாஸ்டராகவும் பணிபுரிந்து வருகிறார்.

காயத்ரி ரகுராம் பா.ஜனதா கட்சியில் உறுப்பினராக இருந்து வருகிறார். வருகிற சட்டசபை தேர்தலில், பா.ஜனதாவுக்காக

பிரசாரம் செய்ய முடிவு செய்து இருக்கிறார். இதுபற்றி அவர் கூறியதாவது:-

“வருகிற தேர்தலில் பா.ஜனதா கட்சியின் வெற்றிக்காக தமிழ்நாடு முழுவதும் நான் பிரசாரம் செய்வேன். இந்தத் தேர்தலில் பா.ஜனதா அமோக வெற்றி பெறும்.

கட்சி மேலிடம் கட்டளையிட்டால் நான் தேர்தலில் போட்டியிடுவேன். வெற்றியும் பெறுவேன். சினிமாவில் பணிபுரிந்து கொண்டே அரசியலில் தொடர்ந்து ஈடுபடுவேன்”

இவ்வாறு அவர் கூறினார்..

Posted in சினிமா

தியேட்டர்களுக்கு மூன்று மாத மின் கட்டணம் ரத்து – முதல்வர் அதிரடி அறிவிப்பு

தியேட்டர்களுக்கு மூன்று மாத மின் கட்டணம் ரத்து – முதல்வர் அதிரடி அறிவிப்பு

தியேட்டர்களுக்கு மூன்று மாத மின்கட்டணம் ரத்து செய்யப்படும் என்று ஆந்திர முதல்வர் அறிவித்துள்ளார்.

தியேட்டர்களுக்கு மூன்று மாத மின் கட்டணம் ரத்து – முதல்வர் அதிரடி அறிவிப்பு
தியேட்டர்


ஆந்திராவில் உள்ள அனைத்து தியேட்டர்களுக்கு ஏப்ரல், மே, ஜூன் ஆகிய 3

மாத மின் கட்டணம் முழுமையாக ரத்து ரத்து செய்யப்படுவதாக ஆந்திர முதல்வர் அறிவித்துள்ளார்.

ஜெகன் மோகன் ரெட்டி

தற்போதைய மின் கட்டணத்தை தவணை முறையில் கட்டவும் அனுமதி

அளித்துள்ளார். மேலும் நகரங்கள், புறநகர்களில் உள்ள தியேட்டர்களுக்கு

ரூ.10 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. கிராமப்புறங்களில் உள்ள

தியேட்டர்களுக்கு ரூ.5 லட்சம் வரை கடன் வழங்கப்படும். இந்த கடனுக்கு

வட்டி இல்லை என்றும் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்

Posted in சினிமா

அப்பா பாடலுக்கு நடனம் ஆடிய மகள் ஐஸ்வர்யா

அப்பா பாடலுக்கு நடனம் ஆடிய மகள் ஐஸ்வர்யா

நடிகை ஐஸ்வர்யா அர்ஜுன், தன்னுடைய அப்பா பாடலுக்கு நடனமாடி வெளியிட்ட வீடியோவிற்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகிறார்கள்.

அப்பா பாடலுக்கு நடனம்.. ஐஸ்வர்யா அர்ஜுனுக்கு குவியும் லைக்குகள்
அர்ஜுன் – ஐஸ்வர்யா அர்ஜுன்


நடிகர் அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யா அர்ஜுன் 2013 ஆம் ஆண்டு ‘பட்டத்து யானை’ என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில்

அறிமுகமானார். அப்படத்தில் நடிகர் விஷாலுக்கு ஜோடியாக நடித்த கதாபாத்திரம் பாராட்டுக்களை பெற்றது.

இந்நிலையில் ஐஸ்வர்யா அர்ஜுன் தனது தந்தை நடிப்பில் வெளியான ரிதம் படத்திலிருந்து தனக்கு பிடித்த பாடலான ”காற்றே

என் வாசல் வந்து..” என்ற பாடலுக்கு நடனமாடி வீடியோ பதிவு செய்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

ஐஸ்வர்யா அர்ஜுன்

இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. மேலும் அதிக லைக்குக்களையும் குவித்து வருகிறது.

Posted in சினிமா

ஆரவ்வின் தந்தை திடீர் மரணம்

ஆரவ்வின் தந்தை திடீர் மரணம்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமானவர் ஆரவ், அவரின் தந்தை நிலாமுதீன் இன்று அதிகாலை காலமானார்.

பிக்பாஸ் பிரபலம் ஆரவ்வின் தந்தை திடீர் மரணம்
ஆரவ், நிலாமுதீன்
கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் ஆரவ். ஓ காதல் கண்மணி, சைத்தான் ஆகிய படங்களில் சிறிய வேடத்தில் நடித்திருந்த ஆரவ், சரண் இயக்கிய ‘மார்க்கெட் ராஜா

எம்.பி.பி.எஸ்.’ படத்தின் மூலம் ஹீரோவானார். தற்போது ராஜபீமா படத்தில் நடித்து வருகிறார். ஆரவ்வுக்கும், இளம் நடிகை ராஹிக்கும் சமீபத்தில் திருமணம் நடந்தது.

இந்நிலையில், ஆரவ்வின் தந்தை நிலாமுதீன் இன்று அதிகாலை திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் காலமானார். அவரின் இறுதிச்

சடங்கு இன்று மாலை, சொந்த ஊரான நாகர்கோவிலில் நடைபெற உள்ளது. அவரின் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து

வருகின்றனர். ஆரவ்வின் தந்தை கல்லூரி பேராசிரியராக பணியாற்றி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

திடீர் மரணம்
திடீர் மரணம்
Posted in சினிமா

தன்னை இயக்குனராக்கிய தயாரிப்பாளரை வில்லனாக்கிய விக்னேஷ் சிவன்

தன்னை இயக்குனராக்கிய தயாரிப்பாளரை வில்லனாக்கிய விக்னேஷ் சிவன்

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் இயக்குனரான விக்னேஷ் சிவன், தன்னை இயக்குனராக அறிமுகம் செய்த தயாரிப்பாளரை வில்லனாக்கி இருக்கிறார்.

தன்னை இயக்குனராக்கிய தயாரிப்பாளரை வில்லனாக்கிய
சமீபத்தில் வெளியான பாவ கதைகள் இணைய தொடரில்

விக்னேஷ் சிவன் இயக்கிய லவ் பண்ணா உட்ரணும் படத்தில் அஞ்சலிக்கு அப்பாவாக நடித்தவர் பதம் குமார். முதல் படம் என்பது

தெரியாத அளவுக்கு சிறப்பாக நடித்ததால் தொடர்ந்து வில்லன், குணச்சித்திர கதாபாத்திரங்கள் இவருக்கு குவிகிறது.

ஆனால் இவர் ஒரு வெற்றிகரமான தயாரிப்பாளர், இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளரும் கூட. அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது, ‘என் தந்தை வேணு தெலுங்கு சினிமாவில் பிரபல

ஒளிப்பதிவாளர். தொடக்கத்தில் ஒளிப்பதிவாளராக இருந்தேன். 3 இந்தி படங்கள் இயக்கினேன். இந்தியில் படம் தயாரித்தபோது ஐஸ்வர்யா ராய் என் படத்தில் தான் நடிப்பதாக இருந்தது.

பதம் குமார்

உலக அழகி போட்டியில் வென்ற பின்னர் ஒரு ஆண்டு ஒப்பந்தத்தில் இருந்ததால் அந்த படத்தில் நடிக்க முடியவில்லை. பின்னர் தயாரிப்பு, வினியோகத்தில் இறங்கிவிட்டேன். நானி, வாணி கபூர்

நடிப்பில் வெளியான ஆகா கல்யாணம், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிலம்பரசன், வரலட்சுமி நடித்த போடா போடி படங்கள் என் தயாரிப்பு தான்.

என் தயாரிப்பில் அடுத்து பங்கஜ் திரிபாதி நடிப்பில் இந்தி படம் தொடங்க உள்ளது. நீங்கள் என்னை இயக்குனராக்கினீர்கள். நான் உங்களை நடிகராக்குகிறேன் என்று விக்னேஷ் சிவன்

உணர்வுபூர்வமாக சொன்னதால் நடித்தேன். நல்ல பெயர் கிடைத்துள்ளது. நல்ல கதாபாத்திரங்களில் நடிக்கவும் திட்டமிட்டுள்ளேன்’. இவ்வாறு அவர் கூறினார்.

Posted in சினிமா

தெருநாய்கள் மீது பாசம் காட்டும் ஹன்சிகா.

தெருநாய்கள் மீது பாசம் காட்டும் ஹன்சிகா.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் ஹன்சிகா, தெருநாய்களுக்கு உணவளித்து ஆச்சர்யப்படுத்தி இருக்கிறார்.

தெருநாய்கள் மீது பாசம் காட்டும் ஹன்சிகா
ஹன்சிகா
நடிகைகள் பலருக்கும் நாய்குட்டிகள் என்றால் பிரியமாக இருப்பார்கள். ஆனால் தெரு நாய்களிடமும் அவர்கள் அதே அன்பை

செலுத்துவர்களா என்றால் அது சந்தேகம்தான். திரிஷா, வரலட்சுமி போன்ற சிலரே தெரு நாய்கள் மீதும் பாசம் காட்டுவார்கள். ஆனால்

நடிகை ஹன்சிகாவோ தெருநாய்களுக்கு உணவளித்து ஆச்சர்யப்படுத்தி இருக்கிறார்.

இதுகுறித்து இன்ஸ்டாவில் வீடியோ பதிவிட்டுள்ள அவர் கூறியிருப்பதாவது, ”கிறிஸ்துமஸ் கிட்டத்தட்ட நெருங்கி

வந்துவிட்டது, நாம் அனைவரும் நம் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் கொண்டாடும்போது, தெருக்களில் உள்ள நமது நண்பர்களை மறந்து விடக்கூடாது.

நாம் கிறிஸ்துமஸ் தாத்தாவின் கரங்களைப்போல் தெருநாய்களின் பசியை உணவளித்து தீர்க்கவேண்டும், தினசரி நம்மால் முடிந்த

சத்தான உணவை தெருநாய்களுக்கு அளித்து உதவி செய்வோம்” என கூறியுள்ளார்.

ஹன்சிகா
ஹன்சிகா
Posted in சினிமா

ஓடிடியில் பொங்கல் ரிலீசுக்கு கடும்போட்டி

ஓடிடியில் பொங்கல் ரிலீசுக்கு கடும்போட்டி

பொங்கல் பண்டிகைக்கு சில முன்னணி நடிகர்களின் படங்களை ஓடிடியில் வெளியிட பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம்.

ஓடிடியில் பொங்கல் ரிலீசுக்கு கடும்போட்டி
சக்ரா, மாறா பட போஸ்டர்கள்
கொரோனா பரவல் காரணமாக இந்தியாவில் கடந்த மார்ச் மாதம்

லாக்டவுன் போடப்பட்டது. இதன் காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டதால், புதிய படங்களை ஓடிடி-யில் நேரடியாக வெளியிட

ஆரம்பித்தனர். அந்த வகையில் சூர்யா தயாரிப்பில் ஜோதிகா நடித்த ‘பொன்மகள் வந்தாள்’ படம் முதலில் வெளியிடப்பட்டது. இப்படத்திற்கு ஓரளவு வரவேற்பு கிடைத்தது.

இதையடுத்து நிறைய படங்களை ஓடிடி-யில் வெளியிட ஆரம்பித்தனர். அவற்றில் பெரும்பாலான படங்கள் தோல்வி

படங்களாகவே அமைந்தன. இருப்பினும் தீபாவளிக்கு ஓடிடியில் வெளியிடப்பட்ட சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ மற்றும்

நயன்தாராவின் ‘மூக்குத்தி அம்மன்’ ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன.

ஓடிடி

இதனால் பொங்கல் பண்டிகைக்கு சில முன்னணி நடிகர்களின் படங்களை ஓடிடியில் வெளியிட பேச்சுவார்த்தை நடைபெற்று

வருகிறதாம். இதுவரை மாதவனின் மாறா, விஷாலின் சக்ரா ஆகிய படங்கள் பொங்கலுக்கு ஓடிடியில் வெளியிடப்பட இருப்பதாக

கூறப்படுகிறது. மேலும் சில படங்களும் இந்த போட்டியில் இணைய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது

Posted in சினிமா

என்னை கல்யாணாம் பண்ண யாரும் இல்ல – நடிகை சகிலா வருத்தம்

என்னை கல்யாணாம் பண்ண யாரும் இல்ல – நடிகை சகிலா வருத்தம்

மலையாளம் மற்றும் தமிழ் படங்களில் நடித்து மிகவும் பிரபலமான நடிகை ஷகிலா அளித்த பேட்டியில், கணக்கு வைத்துக் கொண்டதே இல்லை என்று கூறியிருக்கிறார்.

மலையாளத்தில் நடிகையாக அறிமுகமான ஷகிலா தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தியில் பல படங்களில் நடித்துள்ளார். ஷகிலாவின் வாழ்க்கை வரலாறு படமாகி உள்ளது. இப்படத்தை

கன்னட இயக்குனர் இந்திரஜித் லங்கேஷ் இயக்க ரிச்சா சத்தா ஷகிலாவாக நடித்துள்ளார். இந்தி மொழியில் எடுக்கப்பட்ட இப்படம், ஒரே நேரத்தில் தமிழ், கன்னடம், தெலுங்கு மொழிகளில்

மொழிமாற்றம் செய்யப்பட்டு வரும் 25ந்தேதி வெளியாகவுள்ளது. இதன் டிரெய்லர் வெளியீட்டு நிகழ்ச்சியில் ஷகிலா அளித்த பேட்டியில் கூறியதாவது:

டிவி நிகழ்ச்சியில் பங்கேற்கும் அனுபவம்?
28 ஆண்டுகளாக சினிமா துறையில் எல்லா விதமான

கதாபாத்திரங்களிலும் நடித்துவிட்டேன். ஆனால் டிவியில் வரும் சமையல் நிகழ்ச்சி என்னை இன்னும் பிரபலமாக்கிவிட்டது. டிவியின் வளர்ச்சி அபாரமானது.

நடித்த படங்களின் எண்ணிக்கை?
2 படங்கள் இயக்கி இருக்கிறேன். நடித்த படங்களின் எண்ணிக்கை எனக்கே தெரியவில்லை. கணக்கு வைத்துக்கொண்டதே இல்லை. நிறைய ஏமாற்றப்பட்டேன்.

இன்னும் வாடகை வீட்டில் வசிப்பது ஏன்?
நான் சம்பாதிப்பது அனைத்தையும் என் அக்காவிடம் தான் கொடுத்துவைத்தேன். அவர் ஏமாற்றிவிட்டார். என்னை போன்ற

நடிகைகளுக்கு இது ஒரு பெரிய பாடம். ஆனால் பொருளாதார ரீதியாக சிரமத்தை உணர்ந்தது இல்லை. நடுத்தர வர்க்க வாழ்க்கையை வாழ்ந்து பழகியதால் எந்த எதிர்பார்ப்போ வருத்தமோ இல்லை.

ஷகிலா

நிஜத்தில் உங்கள் கேரக்டர் எப்படி?
கோழை. அதை மறைக்க தான் தைரியமாக இருப்பதை போல் நடிக்கிறேன்.

செக்ஸ் படங்களில் நடித்தபோது மிரட்டல்கள் வந்ததா?
ஒரு அமைச்சர் மூலமாக மறைமுக மிரட்டல் வந்தது. என் படங்களுக்கான சென்சாரை நிறுத்தி வைத்தனர்.

உங்கள் மீது விழுந்த கவர்ச்சி முத்திரையால் வருத்தமா?
இல்லவே இல்லை. ஒரு நடிகை என்றால் இப்படித்தான் என்ற பார்வை விழும். அதை மாற்றவே முடியாது. அம்மா வேடம், குணச்சித்திர வேடம் என்று எல்லா வித வேடங்களிலும் நடித்துள்ளேன்.

அரசியல் அழைப்பு வந்ததா?
இன்னும் எதுவும் வரவில்லை. ஆனால் அரசியலுக்கு வர ஆவலாக இருக்கிறேன். அழைப்பு வந்தால் செல்வேன்.

திருமணம் செய்யாமலேயே இருக்க திட்டமா?
திருமண வாழ்க்கை என்பது மிகவும் பிடித்தமான ஒன்று. ஆனால் எனக்கு அமையவில்லை. திருமண விஷயத்தில் சிலரால் ஏமாற்றப்பட்டேன்.

இவ்வாறு பேட்டியளித்தார்.

Posted in சினிமா

காதலிக்கிறேன் – வனிதாவின் பதிவால் ரசிகர்கள் அதிர்ச்சி

காதலிக்கிறேன் – வனிதாவின் பதிவால் ரசிகர்கள் அதிர்ச்சி

பீட்டர் பால் உடன் பிரச்சனை ஏற்பட்டு சமீபத்தில் பிரிந்த வனிதா, தற்போது மீண்டும் காதலிப்பதாக பதிவிட்டுள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நடிகை வனிதா கடந்தாண்டு நடந்த பிக்பாஸ் 3வது சீசனில் கலந்துகொண்டதன் மூலம் பிரபலமானார். இவருக்கு ஏற்கனவே 2

முறை திருமணமாகி விவாகரத்து பெற்றுவிட்டார். இதனிடையே கடந்த ஜூன் மாதம் இவர் பீட்டர் பால் என்பவரை 3-வது திருமணம் செய்து கொண்டார்.

பீட்டர் பாலுக்கும் ஏற்கனவே திருமணமாகி மனைவியும், குழந்தையும் உள்ளனர். முதல் மனைவியை விவாகரத்து

செய்யாமல் வனிதாவை மணந்ததாக சர்ச்சை எழுந்தது. இது பரபரப்பை ஏற்படுத்தியது. வனிதா – பீட்டர் பால் திருமண உறவு சில

மாதங்களே நீடித்தது. இருவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனைகள் காரணமாக பிரிந்து விட்டனர்.

வனிதாவின் இன்ஸ்டா பதிவு

இந்நிலையில், வனிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மீண்டும் காதலிக்கிறேன் என பதிவிட்டுள்ளார். ஆனால் எதற்காக அவ்வாறு

பதிவு செய்தார், என்பது தெரியவில்லை. வனிதாவின் இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Posted in சினிமா

யாரையும் லவ் பண்ணல… வருத்தத்தில் நடிகை

யாரையும் லவ் பண்ணல… வருத்தத்தில் நடிகை

பிரபல நடிகையாக இருப்பவர் நான் யாரையும் லவ் பண்ணல என்று வருத்தப்பட்டு கூறியிருக்கிறாராம்.

யாரையும் லவ் பண்ணல… வருத்தத்தில் நடிகை
கிசுகிசு
தமிழில் ஒரு சில படங்களில் நடித்து தெலுங்கு பக்கம் வெற்றி

படங்களில் நடித்த நடிகை, மறுபடியும் தமிழில் வந்து அண்ணன் தம்பி இருவருடன் நடித்து புகழின் உச்சிக்கு சென்றாராம். இந்த

நிலையில் நடிகை பிரபல நடிகரை காதலிப்பதாக செய்திகள் வந்த தாம்.

இதை அறிந்த நடிகை, நான் யாரையும் காதலிக்கவில்லை. அப்படி ஒருவரை இன்னும் பார்க்கவில்லை என்று வருத்தப்பட்டு கூறியிருக்கிறாராம்.

Posted in சினிமா

தெலுங்கிலும் பட்டையை கிளப்பிய மாஸ்டர்

தெலுங்கிலும் பட்டையை கிளப்பிய மாஸ்டர்

விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் மாஸ்டர் படத்தின் தெலுங்கு டீசர் வெளியாகி ரசிகர்களிடையே அதிகம் வரவேற்பு பெற்று வருகிறது.

தெலுங்கிலும் மாஸ் காண்பித்த மாஸ்டர்
விஜய்
விஜய் நடித்திருக்கும் படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கும் இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி வில்லனாக

நடித்துள்ளார். மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, ஷாந்தனு, ஸ்ரீமன், அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் டீசர் தீபாவளியன்று வெளியானது. யூடியூப் தளத்தில் ‘மாஸ்டர்’ டீசர் வெளியானது முதல் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது.

மாஸ்டர்

தற்போது மாஸ்டர் படத்தின் தெலுங்கு டீசர் இன்று மாலை 6 மணிக்கு வெளியானது. சில நிமிடத்தில் இந்த டீசர்

ரசிகர்களிடையே வரவேற்பு பெற்று பல லட்சம் பார்வையாளர்களை கடந்தது. மேலும் அதிக லைக்குகளையும் குவித்து வருகிறது.

Posted in சினிமா

தலைகீழாக தொங்கிய நடிகை

தலைகீழாக தொங்கிய நடிகை

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தற்போது தலைகீழாக தொங்கும் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பதறிப் போய் இருக்கிறார்கள்.

தலைகீழாக தொங்கிய நடிகை… பதறிய ரசிகர்கள்
அமலாபால்


தமிழில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை அமலாபால். இவரது நடிப்பில் அதோ அந்த பறவை போல, கடாவர் திரைப்படம்

உருவாகியுள்ளது. சமீப காலமாக அமலாபால் சமூக வலைத்தளத்தில் சர்ச்சை புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார் அமலா பால்.

ஆண் நண்பர்களுடன் மதுகோப்பையுடன் இருக்கும் படங்களை வெளியிட்டார். இன்னொரு ஆண் நண்பர் அருகில் நிற்க

கடற்கரையில் படுத்திருப்பதுபோன்ற புகைப்படம் வந்தது. பின்னர் புகைப்பிடித்து வாயில் இருந்து வரும் புகையை வட்டமாக

வெளியிடுவது போன்ற புகைப்படத்தை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தினார்.

அமலாபால்

தற்போது துணியில் தலைகீழாக தொங்குவது போன்ற புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். வித்தியாசமாக யோகா செய்யும் அமலா

பாலின் இந்த போட்டோக்களை பார்க்கும் ரசிகர்கள் பலரும் பதறிவிட்டனர்

Posted in உலக செய்திகள் சினிமா

தேர்தலில் போட்டியிடும் சத்யராஜ் மகள்

தேர்தலில் போட்டியிடும் சத்யராஜ் மகள்

வருகிற சட்டமன்ற தேர்தலில் தன்னுடைய மகளுக்கு ஆதரவாக நடிகர் சத்யராஜ் பிரச்சாரம் செய்ய இருக்கிறார்.

தேர்தலில் மகளுக்கு ஆதரவாக களமிறங்கும் சத்யராஜ்
மகளுடன் சத்யராஜ்


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் சத்யராஜ். நடிகராக மட்டுமில்லாமல் சமூக செயற்பாட்டாளராகவும் குறிப்பாக திராவிட இயக்க சிந்தனைகளை பிரசாரம் செய்யும் பெரியாரின்

தொண்டராகவும் இருக்கக் கூடியவர். இவர் அரசியலில் இறங்க இருப்பதாகவும் வரும் தேர்தலில் திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய இருப்பதாகவும் செய்திகள் சமூக வலைத்தளங்களில்

வெளியாகின. இதுகுறித்து நாம் அவரிடம் தொடர்பு கொண்டு கேட்டதற்கு அவரும் அவர் மகள் திவ்யா சத்யராஜும் அளித்துள்ள விளக்கம் பின்வருமாறு,

என் குழந்தைகள் மீது அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டுள்ள தகப்பன் நான். என் மகளை தைரியமான பெண்ணாக வளர்த்து இருக்கிறேன். ஒரு ஊட்டச்சத்து நிபுணராக திவ்யாவின் வெற்றியை

நினைத்து பெருமைப்படுகிறேன். திவ்யாவின் அரசியல் பாதையிலும் ஒரு தகப்பனாகவும் நண்பனாகவும் என் மகளுக்கு

பக்கபலமாக இருப்பேன். நிச்சயமாக என் மகளுக்காக பிரச்சாரம் செய்வேன்.” இவ்வாறு சத்யராஜ் கூறினார்.

திவ்யா சத்யராஜ்

திவ்யா சத்யராஜ் கூறும்போது, அப்பா என் உயிர் தோழன் என் அரசியல் பாதையில் என்னுடன் கைகோர்த்து நிற்பார். ஆனால் ஒரு

முக்கியமான விஷயம், I am a selfmade independent person, சொந்த வளர்ச்சிக்காக ஒரு போதும் அப்பாவின் புகழை உபயோகிக்க மாட்டேன்’ என்று திவ்யா சத்யராஜ் கூறினார்.

சத்யராஜ் மகள் திவ்யா ஒரு பிரபலமான ஊட்டச்சத்து நிபுணர். இவர் கொரோனா நேரத்தில் தமிழ் மக்களுக்கு ஊட்டச்சத்து மிகுந்த உணவை இலவசமாக வழங்க மகிழ்மதி” என்ற இயக்கத்தை

ஆரம்பித்திருக்கிறார். சில வருடங்களுக்கு முன் மருத்துவ துறையில் நடக்கும் முறைகேடுகள் பற்றியும் நீட் தேர்வை எதிர்த்தும் திவ்யா சத்யராஜ் பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதம் சமூக

வலைதளங்களில் வைரல் ஆனது. கொரோனா நேரத்தில் பெரும் இழப்புகளை சந்தித்த விவசாயிகளுக்கு நேரடி நஷ்ட ஈடு வழங்க

வேண்டும் என்று திவ்யா விவசாயத்துறை அமைச்சரிடம் கோரிக்கை வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

விரைவில் திவ்யா சத்யராஜ் எந்த கட்சி சார்பாக போட்டியிட போகிறார் என்ற விவரத்தை வெளியிட இருக்கிறார்.

சத்யராஜ் மகள்
சத்யராஜ் மகள்