Posted in சினிமா

நடிகையின் நிர்வாண புகைப்படத்திற்கு குவிந்த லைக்குகள்

நடிகையின் நிர்வாண புகைப்படத்திற்கு குவிந்த லைக்குகள்

பிரபல நடிகையின் நிர்வாண புகைப்படம் சமூக வலைத்தளத்தில் ரசிகர்களிடையே வரவேற்பு பெற்று அதிக லைக்குகளை குவித்து வருகிறது.

நடிகையின் நிர்வாண புகைப்படத்திற்கு குவிந்த லைக்குகள்
வனிதா கராத்


பாலிவுட்டில் வெளியாகி பெரும் வெற்றியை பெற்ற திரைப்படம் கபீர் சிங். இந்த படத்தில், வீட்டில் வேலை செய்யும்

பணிப்பெண்ணாக நடித்து, பாராட்டுகளை பெற்றவர் மராத்திய நடிகை வனிதா கராத்.

இவர், பாடி பாசிட்டிவிட்டி என்ற சமூக இயக்கத்திற்காக ஆடை ஏதும் அணியாமல் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். உடல்

பருமனாக இருப்பவர்களுக்காக இந்த அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

புதிய வருடம் 2021 ஆம் ஆண்டிற்கான காலண்டர் ஒன்றில் உடல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக பாடி பாசிட்டிவ் என்ற

சமூக இயக்கத்துடன் இணைந்து ஆடை எதுவுமின்றி நிர்வாணமாக போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

வனிதா கராத்

அதனுடன் நான் எனது திறமையை பார்த்து பெருமைப்படுகிறேன் என்றும், எனது ஆர்வம், என் நம்பிக்கை மற்றும் நான் என் உடலைப்

பார்த்துப் பெருமைப்படுகிறேன் என்று பதிவு செய்திருக்கிறார். தற்போது இந்த புகைப்படங்கள் அதிக லைக்குகள் பெற்று சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது

Posted in சினிமா

ஆபாச கேள்விக்கு பதிலடி கொடுத்த நீலிமா

ஆபாச கேள்விக்கு பதிலடி கொடுத்த நீலிமா

சினிமா மற்றும் சின்னத்திரையில் பிரபல நடிகையாக இருக்கும் நீலிமா ரசிகரின் ஆபாசமான கேள்விக்கு பதிலடி கொடுத்திருக்கிறார்.

ரசிகரின் ஆபாச கேள்விக்கு பதிலடி கொடுத்த நீலிமா
நீலிமா


தமிழ் சினிமாவில் தேவர்மகன் என்ற படத்தின் மூலம் குழந்தைநட்சத்திரமாக அறிமுகமானவர் நீலிமா ராணி. அதனை

தொடர்ந்து அவர் விரும்புகிறேன், தம், மொழி, ராஜாதி ராஜா, சந்தோஷ் சுப்பிரமணியம், நான் மகான் அல்ல என ஏராளமான

படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பல தொடர்களில் மிரட்டலான வில்லியாகவும் நடித்து வருகிறார்.

நீலிமா அவ்வப்போது வித்தியாசமான போட்டோசூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருவார். இந்நிலையில் அவர்

சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்.

நீலிமாவின் பதிவு

அப்பொழுது நபர் ஒருவர், ஒரு நைட்க்கு எவ்ளோ என்று ஆபாசமாக கேட்டுள்ளார். அதற்கு நீலிமா, கொஞ்சம் நாகரீகத்தை

எதிர்பார்க்கிறேன். மற்றவர்களை கேவலமாக பேசுவது வக்கிர புத்தி. தயவு செய்து மனோதத்துவ மருத்துவரை பாருங்கள் என்று நெத்தியடி பதிலளித்துள்ளார்.

Posted in சினிமா

புதிய உச்சத்தைத் தொட்ட வாத்தி கம்மிங் பாடல்

புதிய உச்சத்தைத் தொட்ட வாத்தி கம்மிங் பாடல்

விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘மாஸ்டர்’ படத்தின் வாத்தி கம்மிங் பாடல் புதிய உச்சத்தைத் தொட்டிருக்கிறது.

புதிய உச்சத்தைத் தொட்ட வாத்தி கம்மிங் பாடல்
விஜய்


விஜய் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘மாஸ்டர்’. லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி,

மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, ரம்யா, அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.

அனிருத் இசையமைத்திருக்கும் இப்படத்தின் ‘வாத்தி கம்மிங்…’ என்ற பாடல் வெளியாகி ரசிகர்களிடையே ஏகோபித்த வரவேற்பு

பெற்றது. இந்நிலையில், இப்பாடல் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்து இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

வாத்தி கம்மிங் பாடல்

இதை விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கொண்டாடி வருகின்றனர்.

இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 13 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

வாத்தி கம்மிங் பாடல்
வாத்தி கம்மிங் பாடல்
Posted in சினிமா

கொரோனா விதிமீறல் – நடிகர் சொஹைல் கான் உள்பட 3 பேர் மீது வழக்கு

கொரோனா விதிமீறல் – நடிகர் சொஹைல் கான் உள்பட 3 பேர் மீது வழக்கு

கொரோனா விதிகளை மீறிய குற்றச்சாட்டில் பாலிவுட் நடிகர் சொஹைல் கான், அவரது மகன் மற்றும் சகோதரர் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளது.

கொரோனா விதிமீறல் – நடிகர் சொஹைல் கான் உள்பட 3 பேர் மீது எப்.ஐ.ஆர். பதிவு

இந்தி திரையுலகில் பிரபல நடிகர் மற்றும் தயாரிப்பாளராக உள்ளவர் சொஹைல் கான். இவரது சகோதரர் அர்பாஸ் கான்.

அவரும் நடிகராக உள்ளார். சொஹைல் கான் கடந்த ஆண்டு டிசம்பர் 25-ம் தேதி துபாயில் இருந்து இந்தியாவுக்கு திரும்பியுள்ளார்.

சொஹைலுடன், அவரது சகோதரர் அர்பாஸ் கான் மற்றும் அவரது மகன் நிர்வாண் கான் ஆகியோரும் வந்தனர். உலகம் முழுவதும்

கொரோனா பாதிப்புகளை முன்னிட்டு தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக மகாராஷ்டிராவின் மும்பை நகருக்கு வந்திறங்கிய சொஹைல் கான் உள்ளிட்ட 3 பேரையும் ஓட்டல்

ஒன்றில் தனிமைப்படுத்திக் கொள்ளும்படி மும்பை மாநகராட்சி அறிவுறுத்தி இருந்தது.

எனினும், இதனை கவனத்தில் கொள்ளாமல் 3 பேரும் தங்களது வீடுகளுக்குச் சென்றுள்ளனர். இதுபற்றிய விவரம் அறிந்து 3 பேருக்கு

எதிராகவும் மும்பை பெருநகர மாநகராட்சி சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

இந்நிலையில், கொரோனா பாதுகாப்பு விதிகளை மீறிய குற்றச்சாட்டின் பேரில் சொஹைல் கான் உள்பட 3 பேர் மீது

போலீசார் எப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளனர். சொஹைல் உள்பட 3 பேரையும் மும்பையில் உள்ள தாஜ் லேண்ட்ஸ் எண்ட் ஓட்டலில் அதிகாரிகள் தனிமைப்படுத்தி வைத்துள்ளனர்.

Posted in சினிமா

மத்திய அமைச்சர் பற்றி அவதூறாக பேசிய நடிகர் கைது

மத்திய அமைச்சர் பற்றி அவதூறாக பேசிய நடிகர் கைது

பிரபல இந்தி நகைச்சுவை நடிகர், மத்திய அமைச்சர் பற்றி அவதூறாக பேசியதாக கைது செய்யப்பட்டுள்ளார்.

மத்திய அமைச்சர் பற்றி அவதூறாக பேசிய நடிகர் கைது
முனாவர் பாரூகி


பிரபல இந்தி நகைச்சுவை நடிகர் முனாவர் பாரூகி. குஜராத்தை சேர்ந்த இவர் பொது மேடைகளில் சர்ச்சை கருத்துகளை பேசுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

சமீபத்தில் இந்தூர் டூகான் என்ற இடத்தில் உள்ள ஒரு ஓட்டலில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசும்போது இந்து கடவுள்கள்

பற்றியும், மத்திய மந்திரி அமித்ஷா குறித்தும் அவதூறான கருத்துகளை பேசியதாக எதிர்ப்புகள் கிளம்பின.

முனாவர் பாரூகி மீது நடவடிக்கை எடுக்கும்படி அங்குள்ள பா.ஜனதா எம்.எல்.ஏ மாலினி லட்சுமணன் சிங் மகன் ஏக்லவ்யா சிங்

கவுர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து முனாவர் பாரூகியை கைது செய்தனர். அவருடன் மேலும் 4 பேரும் கைதானார்கள்.

முனாவர் பாரூகி,

முனாவர் பாரூகி உள்பட கைது செய்யப்பட்ட அனைவர் மீதும் மத உணர்வை தூண்டுதல், கவனக்குறைவான செயலால்

தொற்றுநோயை பரப்ப காரணமாக இருத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

Posted in சினிமா

நான் கேள்விப்பட்ட சிம்பு வேற, பழகிய சிம்பு வேற… பாரதிராஜா புகழாரம்

நான் கேள்விப்பட்ட சிம்பு வேற, பழகிய சிம்பு வேற… பாரதிராஜா புகழாரம்

நான் கேள்விப்பட்ட சிம்பு வேற, பழகிய சிம்பு வேற… இயக்குனர் பாரதிராஜா படவிழாவில் புகழ்ந்து பேசியிருக்கிறார்.

நான் கேள்விப்பட்ட சிம்பு வேற, பழகிய சிம்பு வேற… பாரதிராஜா புகழாரம்
பாரதிராஜா


சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்திருக்கும் படம் ஈஸ்வரன். கிராமத்து

பின்னணியில் சென்ட்டிமெண்ட், எமோஷன், காதல், ஆக்ஷன், காமெடி என அனைத்தும் கலந்த ஜனரஞ்சகமான படமாக

ஈஸ்வரன் உருவாகி உள்ளது. இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்துள்ளார். மேலும் பாரதிராஜா, நந்திதா,

முனீஸ்காந்த், காளி வெங்கட், பாலசரவணன், யோகி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் சுசீந்திரன், சிம்பு உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

இதில் பாரதிராஜா பேசும்போது, நான் கேள்விப்பட்ட சிம்பு வேற, பார்த்து பழகிய சிம்பு வேற.. சிம்பு ஒரு ஒழுக்கமான மனிதர். ஏழு

மணிக்கு படப்பிடிப்பு என்றால் 6.45 மணிக்கு படப்பிடிப்பு தளத்திற்கு வந்து விடுகிறார். ஒரே டேக்கில் சாதாரணமாக நடித்து விட்டு

சென்று விடுகிறார். சிம்புக்கு எதுவும் மறைக்கத் தெரியாது. இப்போ சிம்புவை நான் ரொம்ப நேசிக்கிறேன். என்றார்.

Posted in சினிமா

ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்திய வையாபுரி

ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்திய வையாபுரி

தமிழ் சினிமாவில் பல ஹீரோக்களுடன் சேர்ந்து நடித்த நடிகர் வையாபுரி யின் புதிய கெட்டப் ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்திய வையாபுரியின் புதிய கெட்டப்
வையாபுரி


கமல்ஹாசன், ரஜினிகாந்த், விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்திருக்கும் வையாபுரி, தற்போதைய
இளையதலைமுறை நடிகர்களுடனும் நடித்து வருகிறார். காமெடி

நடிகராக மட்டுமே பரிச்சையமான வையாபுரி, ‘பிக் பாஸ்’
நிகழ்ச்சிக்குப் பிறகு காமெடி வேடங்களுடன் குணச்சித்திர

வேடங்களுக்கும் கச்சிதமாக பொருந்துவார், என்ற நம்பிக்கையை பல
இயக்குநர்களுக்கு கொடுத்திருக்கிறார்.

இந்த நிலையில், புத்தாண்டில் புது முயற்சி மேற்கொள்ளும் விதமாக போட்டோ ஷூட் ஒன்றை நடிகர் வையாபுரி நடத்தியுள்ளார். மிக


வித்தியாசமான கெட்டப்போடு இருக்கும் வையாபுரியின் போட்டோ ஷூட் புகைப்படங்கள், சமூக வலைதளங்களில் வெளியாகி வைராகி
வருவதோடு, இளைஞர்கள் அந்த புகைப்படங்களை வைத்து பல மீம்ஸ்களை உருவாக்கி டிரெண்டிங் ஆக்கி வருகிறார்கள்.

வையாபுரி

“யாரு…ஹாலிவுட் நடிகரா இவரு, இல்லப்பா நம்ம ஊரு வையாபுரிப்பா…”, ”தினேஷ் கார்த்திக் செமயா இருக்காருல, யோவ் அது


வையாபுரி யா” இப்படி பல வகையில் வையாபுரியின் போட்டோ ஷூட் புகைப்படங்களை வைத்து நெட்டிசன்கள் மீம்ஸ்களை உருவாக்கி


வெளியிட்டு வர, தற்போது கோலிவுட்டின் ஹாட் டாப்பிக்காகியுள்ளது வையாபுரியின் புகைப்படங்கள். பிரபல

காஸ்ட்யூம் டிசைனர் சத்யா, வையாபுரி தோற்றத்தை இப்படி ஸ்டைலிஷாக மாற்றி இருக்கிறார்.

Posted in சினிமா

பேச ஒன்றுமில்லை.. இனிமேல் செயல்தான்… சிம்பு அதிரடி

பேச ஒன்றுமில்லை.. இனிமேல் செயல்தான்… சிம்பு அதிரடி

ஈஸ்வரன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட சிம்பு, பேச ஒன்றுமில்லை.. இனிமேல் செயல்தான்… என்று கூறியுள்ளார்.

பேச ஒன்றுமில்லை.. இனிமேல் செயல்தான்… சிம்பு அதிரடி
சிம்பு


சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்திருக்கும் படம் ஈஸ்வரன். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில்

நடைபெற்றது. இதில் சுசீந்திரன், சிம்பு உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

இதில் சிம்பு பேசும்போது, இத்தனை நாள் நான் எப்படி இருந்தேன், எப்படி இப்படி மாறினேன், இந்தப் படம் எப்படி உருவானது, எப்படி

முடிந்தது என்று உண்மையிலேயே எனக்கும் தெரியவில்லை. அதான் உண்மை. இறைவனுக்கு மட்டும் தான் தெரியும். எங்க

பார்த்தாலும் நெகட்டிவ் ஆக இருக்கிறது. யாரைப் பார்த்தாலும் பொறாமை, போட்டி, குறை சொல்வது என்று இருக்கிறார்கள்.

அட்வைஸ் பண்றதை எல்லாரும் நிறுத்தவேண்டும். நம்மை சுற்றி இருப்பவர்களிடம் இருந்து அட்வைஸ் கேட்பதை

நிறுத்திக்கொள்ளுங்கள். மனசு சுத்தமாய் இருந்தால் எல்லாம் நன்றாகவே நடக்கும். நான் வாழ்க்கையில் ஒரு சமயத்தில்

கஷ்டப்பட்டேன் என்றால் மனதளவில் ரொம்ப பாதிக்கப்பட்டேன். அதனால் தான் உடல் எடை கூடியது. படப்பிடிப்புக்கு செல்ல முடியவில்லை.

இறைவன் எங்கேயும் இல்லை. உள்ளத்தில் தான் இருக்கிறார். உள்ளத்தை சரி செய்தேன். இப்போ எல்லாம் நன்றாகவே நடக்கிறது

. எல்லோரிடமும் அன்பை செலுத்துங்கள். ரசிகர்களுக்கும் ஒன்று சொல்ல ஆசைப்படுகிறேன். பேச ஒன்றுமில்லை இனிமேல்

செயல்தான். அடுத்தடுத்து என்னுடைய நடிப்பில் பல படங்கள் வெளியாக இருக்கிறது. ஈஸ்வரன் படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி என்றார்.

சிம்பு அதிரடி
சிம்பு அதிரடி
Posted in சினிமா

புகைப்படங்களை நீக்கிய தீபிகா படுகோனே

புகைப்படங்களை நீக்கிய தீபிகா படுகோனே

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் தீபிகா படுகோனே திடீரென்று தனது புகைப்படங்களை நீக்கியதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

திடீரென்று புகைப்படங்களை நீக்கிய தீபிகா படுகோனே… ரசிகர்கள் அதிர்ச்சி
தீபிகா படுகோனே


பாலிவுட்டில் பிரபல நடிகையாக இருப்பவர் தீபிகா படுகோனே. இவர் இன்ஸ்டாகிராம், ட்விட்டரில் மிகவும் ஆக்டிவானவர்.

இன்ஸ்டாகிராமில் மட்டும் 52.5 மில்லியன் ஃபாலோவர்களைக் கொண்டுள்ளார். ட்விட்டரில் 27.7 மில்லியன் ஃபாலோவர்களைக் கொண்டுள்ளார்.

இந்நிலையில் தன்னுடைய இன்ஸ்டாகிராம், ட்விட்டர் போஸ்டுகள் அனைத்தையும் முற்றிலுமாக அழித்துள்ளார். அதோடு டிபியும்

மாற்றப்பட்டுள்ளது. அவரின் இந்த திடீர் முடிவு பலரையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தீபிகா படுகோனே

அவரது அக்கவுண்டுகள் ஹாக் செய்யப்பட வில்லை என்றும், அவரே

புகைப்படங்களை வேண்டும் என்றே நீக்கியதாகவும் கூறப்படுகிறது.

Posted in சினிமா

புதிய அவதாரம் எடுத்த இசையமைப்பாளர் டி.இமான்

புதிய அவதாரம் எடுத்த இசையமைப்பாளர் டி.இமான்

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் டி.இமான் தற்போது புதிய அவதாரம் எடுத்துள்ளார்.

புதிய அவதாரம் எடுத்த இசையமைப்பாளர் டி.இமான்
இசையமைப்பாளர் டி இமான்


தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் டி.இமான். இவர் தற்போது ரஜினி நடிக்கும் அண்ணாத்த படத்திற்கு இசையமைத்து வருகிறார்.

இசையில் தனித்தன்மையுடன் பெரும் வெற்றியை பெற்றிருக்கும் இமான் திரைப்பயணத்தில் தயாரிப்பாளராக தனது புதிய

பயணத்தை துவங்கவுள்ளார். “DI Productions” எனும் பெயரில் தயாரிப்பு நிறுவனத்தை துவக்கியுள்ளார் டி.இமான்.

இமான்

இந்நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக “தேங்க் யூ ஜீஸஸ்” ( Thank You Jesus ) எனும் ஆன்மீக ஆல்பம் உருவாகிறது. முழுக்க இயேசு

கிறிஸ்துவை போற்றும்படி ஆங்கில மொழியில், ஆன்மீக அன்பர்கள் எழுதி, பாடும் இந்த ஆல்பத்தில் 8 பாடல்கள் அடங்கியுள்ளது.

Posted in சினிமா

பெத்த மகளை இப்படியா அசிங்கப்படுத்துவது? – சிவானி தாய்க்கு சின்மயி கண்டனம்

பெத்த மகளை இப்படியா அசிங்கப்படுத்துவது? – சிவானி தாய்க்கு சின்மயி கண்டனம்

பிக்பாஸ் வீட்டுக்கு வந்த சிவானியின் தாயார், அவரை திட்டியதற்கு, பாடகி சின்மயி டுவிட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பெத்த மகளை இப்படியா அசிங்கப்படுத்துவது? – சிவானி தாய்க்கு சின்மயி கண்டனம்
சிவானி, அகிலா, சின்மயி
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் போட்டியாளர்களின்

உறவினர்கள் வந்தனர். அதில் முதல் நபராக வந்த சிவானியின் அம்மா, சிவானியை வறுத்தெடுத்தார். சிவானியின் அம்மா நடந்து

கொண்ட விதம் சக போட்டியாளர்களுக்கு மட்டுமின்றி பிக்பாஸ் ரசிகர்களுக்கும் அதிர்ச்சியாக இருந்தது.

ஒரு பக்கம் சிவானியை அவரது அம்மா கண்டித்ததற்கு சிலர் பாராட்டு தெரிவித்தாலும், தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஒரு

நிகழ்ச்சி என்று பார்க்காமல் தனது மகளை இவ்வாறு திட்டி அசிங்கப்படுத்தி இருக்கக்கூடாது என்றும் பலர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

சின்மயி

இந்நிலையில் பாடகி சின்மயி இதுகுறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு கருத்தை பதிவு செய்துள்ளார். அதில், “நான் பிக்பாஸ்

நிகழ்ச்சியைப் பார்ப்பதில்லை, ஆனால் அந்த தாய் தன் மகளை அசிங்கப்படுத்தியதை நான் கேள்விப்பட்டேன். அது எனக்கு மிகவும் தவறாக தெரிகிறது.

ஊர்ல 4 பேர் என்ன சொல்வாங்கனு சொல்லி பல அம்மாக்கள் தங்களுடைய மகள்களை அசிங்கப்படுத்துகிறார்கள். நீங்கள் பெற்றோர் எனில், தயவு செய்து உங்கள் மகளின்

குணாதிசயங்களை அசிங்கப்படுத்துவதை நிறுத்திவிட்டு பொறுப்புடன் பேசுங்கள்” என சின்மயி கூறியுள்ளார்.

Posted in சினிமா

வைரலாகும் விக்னேஷ் சிவன் – நயன்தாராவின் புத்தாண்டு கொண்டாட்ட புகைப்படங்கள்

வைரலாகும் விக்னேஷ் சிவன் – நயன்தாராவின் புத்தாண்டு கொண்டாட்ட புகைப்படங்கள்

விக்னேஷ் சிவன் – நயன்தாராவின் புத்தாண்டு கொண்டாட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

வைரலாகும் விக்னேஷ் சிவன் – நயன்தாராவின் புத்தாண்டு கொண்டாட்ட புகைப்படங்கள்
விக்னேஷ் சிவன், நயன்தாரா


2021 புத்தாண்டு தினத்தை உலகம் முழுவதும் உள்ள மக்கள் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக சினிமா பிரபலங்கள் பலர் தங்களுடைய சமூக வலைதளங்களில்

புத்தாண்டு கொண்டாட்ட புகைப்படங்களை பகிர்ந்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், தமிழ்

திரையுலகில் காதல் ஜோடிகளாக வலம் வந்து கொண்டிருக்கும் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஜோடியும் புத்தாண்டை சிறப்பாக கொண்டாடியுள்ளனர்.

விக்னேஷ் சிவன், நயன்தாரா

நயன்தாராவுடன் புத்தாண்டு கொண்டாடிய புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள விக்னேஷ் சிவன் அதில் கூறியிருப்பதாவது: அனைவருக்கும் இனிய புத்தாண்டு

நல்வாழ்த்துக்கள். இப்போது நாம் வாழ்வில் ஒரு மறக்கமுடியாத கட்டத்தை கடந்து விட்டோம். தற்போது 2021ஆம் ஆண்டை நோக்கி முன்னேறுவோம்.

விக்னேஷ் சிவன், நயன்தாரா

இந்தாண்டு சிறந்த தருணங்களுடனும், மகிழ்ச்சியாகவும், நல்ல ஆரோக்கியத்துடனும், அமைதியாகவும், திருப்தியாகவும் அமைய அனைவருக்கும் எனது நல்வாழ்த்துக்கள்’ என்று அவர்

குறிப்பிட்டுள்ளார். விக்னேஷ் சிவன் – நயன்தாராவின் புத்தாண்டு கொண்டாட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன

விக்னேஷ் சிவன் - நயன்தாரா
விக்னேஷ் சிவன் – நயன்தாரா
Posted in சினிமா

விஜய் பட நடிகர் திடீர் மரணம்

விஜய் பட நடிகர் திடீர் மரணம்

ரஜினியுடன் பாட்ஷா படத்திலும் விஜயுடன் குருவி படத்திலும் நடித்த நடிகர் உடல்நலக்குறைவு காரணமாக மரணமடைந்துள்ளார்.

ரஜினி, விஜய் பட நடிகர் திடீர் மரணம்
நர்சிங் யாதவ்


பிரபல தெலுங்கு நடிகர், நர்சிங் யாதவ். தமிழ், தெலுங்கு, இந்தி என சுமார் 300 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். ராம்கோபால் வர்மாவின் அனைத்து படங்களிலும் பார்க்கலாம்.

தமிழில், ரஜினியின் சூப்பர் ஹிட் படமான பாட்ஷா, ஹரி இயக்கத்தில் விஷால், ஸ்ருதிஹாசன் நடித்த பூஜை, சுசீந்திரன்

இயக்கத்தில் விக்ரம் நடித்த ராஜபாட்டை, சக்தி, ரம்யா நம்பீசன் நடித்த ஆட்டநாயகன், பிரபு சாலமன் இயக்கத்தில் சார்மி நடித்த

லாடம், விஜய், த்ரிஷா நடித்த குருவி உட்பட பல படங்களில் நடித்திருக்கிறார்.

நர்சிங் யாதவ்,

கடந்த சில மாதங்களாகவே சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டிருந்த நர்சிங் யாதவ், அதற்கான சிகிச்சையை பெற்று வந்தார். இந்த நிலையில் தற்போது சிகிச்சை பலனின்றி

உயிரிழந்தார். நர்சிங்கின் மரணத்திற்கு ரசிகர்களும், திரையுலகினரும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

Posted in சினிமா

நடிகர் விஜய்யின் கோரிக்கை நிராகரிப்பு – திரையுலகினர் ஏமாற்றம்

நடிகர் விஜய்யின் கோரிக்கை நிராகரிப்பு – திரையுலகினர் ஏமாற்றம்

முதல்வரிடம் நடிகர் விஜய் விடுத்த கோரிக்கை ஏற்கப்படாததால் திரையுலகினர் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

நடிகர் விஜய்யின் கோரிக்கை நிராகரிப்பு – திரையுலகினர் ஏமாற்றம்
விஜய்


கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இந்த சூழலை மாற்றி 100 சதவீத

இருக்கைகளுடன் தியேட்டர்கள் இயங்க அனுமதிக்க வேண்டும் என்று நடிகர் விஜய் சமீபத்தில் முதல்வரை சந்தித்தபோது வேண்டுகோள் விடுத்தார்.

இந்நிலையில், ஊரடங்கை கூடுதல் தளர்வுகளுடன் ஜனவரி 31 வரை நீட்டித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று அறிவிப்பு வெளியிட்டார். அதில், சினிமா, சின்னத்திரை படப்பிடிப்புகளில்,

பணியாற்றும் பணியாளர்கள் எண்ணிக்கைக்கு உச்ச வரம்பு இல்லை என்ற புதிய அறிவிப்பையும் வெளியிட்டிருந்தார். ஆனால்,

திரையரங்குகளில் அனுமதிக்கப்படும் இருக்கைகள் எண்ணிக்கை 50 சதவீதம் என்ற நிலையே நீடிக்கிறது.

எடப்பாடி பழனிச்சாமி, விஜய்

ஊரடங்கு நீட்டிப்பு உத்தரவின்போது, தியேட்டர்கள் 100 சதவீத இருக்கைகளுடன் இயங்க அனுமதி அளிக்கப்படும் என்றும்,

‘மாஸ்டர்’ படத்தை தொடர்ந்து ஒவ்வொரு திரைப்படமாக வெளியிடலாம் என்றும் திரைத்துறையினர் எண்ணியிருந்தனர்

. இந்த நிலையில், விஜய் விடுத்த கோரிக்கை ஏற்கப்படாததால் திரையுலகினர் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

Posted in சினிமா

எடப்பாடி பழனிசாமியுடன் நடிகர் விஜய் திடீர் சந்திப்பு

எடப்பாடி பழனிசாமியுடன் நடிகர் விஜய் திடீர் சந்திப்பு

சென்னையில் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நடிகர் விஜய் சந்தித்து பேசினார்.

விஜய் நடிப்பில் உருவாகி உள்ள மாஸ்டர் திரைப்படம் பொங்கலுக்கு ரிலீஸ்

ஆக உள்ளது. ஜனவரி 13ல் படத்தை தியேட்டர்களில் திரையிட படக்குழு முடிவு திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில், நடிகர் விஜய் மற்றும் மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளர்

லலித்குமார் உள்ளிட்ட படக்குழுவினர் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினர்.

இந்த சந்திப்பின்போது, தியேட்டர்களில் பார்வையாளர்கள் அனுமதியை

50 சதவீதத்தில் இருந்து 100 சதவீதமாக அதிகரிக்கும்படி கோரிக்கை வைத்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

Posted in சினிமா

சண்டைக்காட்சியில் காயமடைந்த ஆர்யா

சண்டைக்காட்சியில் காயமடைந்த ஆர்யா

ஆனந்த் சங்கர் இயக்கும் எனிமி படத்தின் படப்பிடிப்பில் சண்டைக்காட்சியில் டூப் போடாமல் நடித்த நடிகர் ஆர்யா காயமடைந்துள்ளார்.

சண்டைக்காட்சியில் டூப் போடாமல் நடித்து காயமடைந்த ஆர்யா
ஆர்யா
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருக்கும் ஆர்யா,

விஷால் இருவரும் நெருங்கிய நண்பர்கள். இருவரும் இணைந்து பாலா இயக்கிய அவன் இவன் படத்தில் நடித்திருந்தார்கள். தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு இருவரும் இணைந்து ‘எனிமி’

படத்தில் நடித்து வருகிறார்கள். இப்படத்தை அரிமா நம்பி, இருமுகன், நோட்டா போன்ற படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர்

இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ஆர்யா

அண்மையில் ஆர்யா நடிக்கும் சண்டைக் காட்சி படமாக்கப்பட்டது. அப்போது டூப் போடாமல் நடித்த ஆர்யா, எதிர்பாராத விதமாக கீழே விழுந்து காயம் அடைந்தார். இதையடுத்து மருத்துவமனையில்

அனுமதிக்கப்பட்ட ஆர்யா, சிகிச்சை முடிந்த கையோடு படப்பிடிப்பு தளத்துக்கு வந்து எஞ்சியுள்ள சண்டைக் காட்சிகளை நடித்துக் கொடுத்துள்ளார். தன்னால் படப்பிடிப்பு தடைபட்டுவிடக் கூடாது

என்ற காரணத்துக்காக நடிகர் ஆர்யா, வலியையும் பொருட்படுத்தாமல் நடித்துக்கொடுத்தது படக்குழுவினரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

Posted in சினிமா

பண்ணைவீட்டில் தனது 55-வது பிறந்தநாளை கொண்டாடிய சல்மான் கான்

பண்ணைவீட்டில் தனது 55-வது பிறந்தநாளை கொண்டாடிய சல்மான் கான்

இந்தி நடிகர் சல்மான் கான் தனது 55-வது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார்.

பண்ணைவீட்டில் தனது 55-வது பிறந்தநாளை கொண்டாடிய சல்மான் கான்
பிறந்தநாள் கொண்டாட்டத்தில் சல்மான் கான்


இந்தி சினிமா துறையில் மிகவும் பிரபலமானவர் நடிகர் சல்மான்கான். இவர் 100-க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார்.

இவர் மத்தியபிரதேசம் மாநிலம் இந்தூரில் 1965 ஆம் ஆண்டு டிசம்பர் 27-ம் தேதி பிறந்தார். இவர் தனது நடிப்பு திறனால் பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார்.

இந்நிலையில், நடிகர் சல்மான் கான் இன்று (டிசம்பர் 27) தனது 55-வது வயதில் அடியெடுத்துவைக்கிறார். தனது பிறந்தநாளையொட்டி

நேற்று இரவே மகாராஷ்டிராவின் ராய்கட் மாவட்டத்தில் உள்ள தனது பண்ணைவீட்டிற்கு சல்மான் கான் சென்றார்.

அங்கு தனது நண்பர்கள் மற்றும் பாலிவுட் துறையினருடன் இணைந்து சல்மான் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடினார்.

55-வது பிறந்தநாளை கொண்டாடிவரும் சல்மான் கானுக்கு அவரது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

சல்மான் கான்
சல்மான் கான்
Posted in சினிமா

வைரலாகும் நடிகையின் நீச்சலுடை புகைப்படம்

வைரலாகும் நடிகையின் நீச்சலுடை புகைப்படம்

தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக வலம் வரும் சாக்‌ஷி அகர்வாலின் நீச்சல் உடை புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

வைரலாகும் சாக்‌ஷி அகர்வாலின் நீச்சலுடை புகைப்படம்
சாக்ஷி அகர்வால்
தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக வலம் வருபவர் சாக்‌ஷி அகர்வால். இவர் ரஜினி நடித்த காலா, அஜித் நடித்த விஸ்வாசம்

உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமானார். மேலும் பிக்பாஸ் போட்டியிலும் கலந்து கொண்டு ரசிகர்களை கவர்ந்தார்.

தற்போது சாக்‌ஷி சின்ட்ரெல்லா, டெடி, புரவி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

நடிகை சாக்‌ஷி அகர்வால் எப்போதும் சமூகவலைதளத்தில் பல புகைப்படங்களை வெளியிட்டு வருவார். உடற்பயிற்சி, ரசிகர்களுக்கு அறிவுரை என வீடியோ, கவர்ச்சி புகைப்படங்களை

பதிவு செய்து வரும் சாக்‌ஷி தற்போது நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார்.

சாக்ஷி அகர்வால்

விடுமுறைக்காக கோவா சென்று இருக்கும் நடிகை சாக்ஷி அகர்வால் அங்கு இருக்கும் கடற்கரையில், நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்து இருக்கிறார்.

தற்போது இந்த புகைப்படங்கள் ரசிகர்களிடையே அதிக வரவேற்பு பெற்று லைக்குகளை குவித்து வருகிறது.

நீச்சலுடை புகைப்படம்
நீச்சலுடை புகைப்படம்
Posted in சினிமா

புதிய தொழில் தொடங்கிய காஜல்

புதிய தொழில் தொடங்கிய காஜல்

தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னனி நடிகையாக வலம் வரும் நடிகை காஜல் அகர்வால், புதிய தொழில் ஒன்றை தொடங்கியுள்ளார்.

புதிய தொழில் தொடங்கிய காஜல் அகர்வால்
காஜல் அகர்வால்
தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னனி நடிகையாக வலம் வருபவர் நடிகை காஜல் அகர்வால். காஜல் தற்போது தெலுங்கில் சிரஞ்சீவியுடன் ’ஆச்சார்யா’ படத்திலும் தமிழில் ’இந்தியன் 2’

மற்றும் பேய் படம் ஒன்றிலும் நடிக்கிறார். இவர் சமீபத்தில் தொழில் அதிபர் கவுதம் கிச்சலுவை திருமணம் செய்து கொண்டார். கடந்த

சில வாரங்களுக்கு முன் மாலத்தீவில் தேனிலவை கொண்டாடிய காஜல், தற்போது மீண்டும் ஆச்சார்யா படப்பிடிப்பில் கலந்துகொண்டார்.

இந்த நிலையில் காஜல் அகர்வால் தன் கணவருடன் இணைந்து வீட்டு உள் அலங்கார பொருட்கள் விற்பனை மற்றும் இண்டீரியர் டெக்கரேட் பிசினஸ் தொடங்கி உள்ளார். இந்த நிறுவனம் மூலம்

வீட்டை அலங்கரித்து தருவதுடன். வீட்டுக்கு தேவையான மெத்தை, தலையணை உள்ளிட்ட அலங்கார பொருட்களை ஆன்லைனிலும்

விற்பனை செய்கிறார்கள். அதோடு, இந்த நிறுவனத்தின் அறிமுக விளம்பர படத்தில் கணவருடன் இணைந்து நடித்திருக்கிறார் காஜல்.

காஜல் அகர்வால்

பல நடிகைகள் திருமணத்திற்கு பிறகு நடிப்பை விட்டு விலகியிருக்கிறார்கள். உதாரணமாக அசின், ஜெனிலியா போன்றவர்களைச் சொல்லலாம். தற்போது காஜல் புது தொழில்

தொடங்கியிருப்பதைப் பார்த்து, ரசிகர்கள் இவரும் நடிப்பை விட்டு விலகப்போகிறாரா என சந்தேகித்து வருகின்றனர்.

Posted in சினிமா

ரஜினிகாந்த் விரைவில் நலம் பெற வாழ்த்துக்கள் – கமல்ஹாசன் டுவீட்

.ரஜினிகாந்த் விரைவில் நலம் பெற வாழ்த்துக்கள் – கமல்ஹாசன் டுவீட்

நண்பர் ரஜினிகாந்த் விரைவில் நலம்பெற வாழ்த்துக்கள் என கமல்ஹாசன் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

நண்பர் ரஜினிகாந்த் விரைவில் நலம் பெற வாழ்த்துக்கள் – கமல்ஹாசன் டுவீட்
ரஜினிகாந்த் – கமல்ஹாசன்

சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வந்தது. அதில் பணியாற்றிய டெக்னீஷியன்கள் 4 பேருக்கு கடந்த சில

தினங்களுக்கு முன்னர் கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்ததையடுத்து, படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

இதையடுத்து நடிகர் ரஜினிகாந்துக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா இல்லை என தெரியவந்தது.

இதற்கிடையில், நடிகர் ரஜினிகாந்த் இன்று திடீரென ஐதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவது தொடர்பான சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

நடிகர் ரஜினிகாந்த் உடல்நிலை சீராக உள்ளது எனவும், அவர் நலமாக உள்ளார் எனவும் இன்று இரவு மருத்துவமனையில்

இருப்பார் எனவும் அப்பல்லோ நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, நடிகர் ரஜினிகாந்த் பூரண உடல்நலமடைந்து விரைவில் குணமடைய ரசிகர்கள், சினிமா துறையினர், அரசியல் கட்சியினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் நடிகர் ரஜினிகாந்த் குணமடைய வாழ்த்து

தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்த்ல் வெளியிட்டுள்ள பதிவில்,

’நண்பர் விரைவில் நலம் பெற வாழ்த்துக்கள் @rajinikanth (ரஜினிகாந்த்)’

என பதிவிட்டுள்ளார்.