Posted in சினிமா

அரசியல் நிருபராக களமிறங்கும் ஸ்ருதிஹாசன்

அரசியல் நிருபராக களமிறங்கும் ஸ்ருதிஹாசன்

பிரபாஸ் நடிப்பில் ராதே ஷ்யாம், சல்லார், ஆதிபுருஷ் ஆகிய படங்கள் தயாராகின்றன. இதில் சல்லார் திரைப்படத்தில்

ஸ்ருதிஹாசன் நாயகியாக நடிக்கிறார். இந்த வருடம் ஜனவரியில் ஸ்ருதி நடிப்பதை சல்லார் படக்குழு முறைப்படி அறிவித்தது.

தெலுங்கு, கன்னடத்தில் தயாராகும் சல்லார் திரைப்படம், தமிழ், மலையாளம், இந்தி ஆகிய

மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு ஒரேநேரத்தில் வெளியிடப்பட உள்ளது. இந்தப் படத்தை பிரசாந்த் நீல் இயக்குகிறார். ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படமாக இது தயாராகிறது.

ஸ்ருதி ஹாசன் – பிரபாஸ்

இந்தப் படத்தில் ஸ்ருதிஹாசனின் வேடம் என்ன என்பது தற்போது தெரிய வந்துள்ளது. அவர் இதில்

அரசியல் நிருபராக நடிக்கிறார். இது மிக முக்கியமான வேடம் என்கிறது படக்குழு. சென்ற வருட

இறுதியில் சல்லார் திரைப்படம் தொடங்கியது. இந்த வருட ஆரம்பத்தில் படப்பிடிப்பை நடத்தினர்.

தற்போது ராதேஷ்யாம் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் பிரபாஸ் இருப்பதால் சல்லாரின் படப்பிடிப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

Posted in சினிமா

நடிகை மனிஷா யாதவ்வுக்கு கொரோனா

நடிகை மனிஷா யாதவ்வுக்கு கொரோனா

பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் ‘வழக்கு எண் 18/9’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் மனிஷா யாதவ். இப்படத்திற்கு பிறகு ‘ஆதலால் காதல் செய்வீர்’, ‘த்ரிஷா

இல்லனா நயன்தாரா’ ஆகிய பேர் சொல்லும் படங்களில் நடித்தாலும், மனிஷா யாதவ்வுக்கு சொல்லிக் கொள்ளும்படி படங்கள் எதுவும் அமையவில்லை.

இதையடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளிவந்த ‘சென்னை 600028’ இரண்டாம் பாகத்தில் ‘சொப்பன சுந்தரி’ என்ற பாடலுக்கு குத்தாட்டம் ஆடினார். அதைத் தொடர்ந்து எந்த

படவாய்ப்புகளும் இல்லாததால் கடந்த 2017-ம் ஆண்டு அவர் தனது காதலரை திருமணம் செய்துகொண்டார். கடந்தாண்டு இவர் நடிப்பில் ‘சண்டிமுனி’ திரைப்படம் வெளியானது.

மனிஷா யாதவ்வின் டுவிட்டர் பதிவு

இந்நிலையில், நடிகை மனிஷா யாதவ்வுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: “கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டதும்

தனிமைப்படுத்திக் கொண்டேன். விரைவில் குணமாகி விடுவேன் என்ற நம்பிக்கை உள்ளது. சில நேரங்களில் மூச்சுத்திணறல் ஏற்படுகிறது, மற்றபடி எந்தவித பிரச்சனையும் இல்லை.

அனைவரும் வீட்டிலேயே இருங்கள், ஆரோக்கியமாக இருங்கள், வெளியே சென்றால் மாஸ்க் அணிந்துகொள்ளுங்கள்” என அறிவுறுத்தி உள்ளார்.

    Posted in சினிமா

    பட வாய்ப்புக்காக இயக்குனர் படுக்கைக்கு அழைத்தார்

    பட வாய்ப்புக்காக இயக்குனர் படுக்கைக்கு அழைத்தார்

    பிரபல இந்தி நடிகை பிராச்சி தேசாய், பெரிய படத்தில் நடிக்க வைக்க இயக்குனர் ஒருவர் படுக்கைக்கு அழைத்தார் என்று மீ டூ புகார் கூறியுள்ளார்.

    நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மீது நடிகைகள் ஏற்கனவே மீ டூவில் பாலியல் புகார் சொல்லி பரபரப்பு ஏற்படுத்தினர். புதிய படங்களில் நடிக்க வாய்ப்பு கேட்கும் நடிகைகளை

    படுக்கைக்கு அழைப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. பல முன்னணி இயக்குனர்கள் மீ டூ புகாரில் சிக்கினர்.

    இந்த நிலையில் பிரபல இந்தி நடிகை பிராச்சி தேசாயும் மீ டூ புகார் கூறியுள்ளார். இவர் இந்தியில் ராக் ஆன், லைப் பார்ட்னர், தேரி மேரி கஹானி, போலீஸ் ஹேல், ஏக் வில்லன், கார்பன் உள்பட பல படங்களில் நடித்துள்ளார்.

    பிராச்சி தேசாய்

    பிராச்சி தேசாய் கூறும்போது ‘ஒரு பெரிய படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. அந்த படத்தின் இயக்குனர் நேரடியாகவே அவரது விருப்பத்துக்கு இணங்கும்படி அழைத்தார்.

    படுக்கையை பகிர்ந்து கொள்ளும்படி வற்புறுத்தினார். நான் மறுத்துவிட்டேன். படுக்கைக்கு நான் ஒப்புக்கொண்டு இருந்தால் இன்னும் நிறைய படங்களில் நடிக்க எனக்கு வாய்ப்புகள் வந்து

    இருக்கும். அப்படி நடிக்க தேவை இல்லை. பெரிய படத்தின் இயக்குனர் அழைத்துமே ஒப்புக்கொள்ள வில்லை. குறைவான படங்களில் நடித்தாலும் நல்ல கதையம்சம் உள்ள படங்களை தேர்வு செய்து நடிப்பேன்’’ என்றார்.

    பிராச்சி தேசாய்
    பிராச்சி தேசாய்
      Posted in சினிமா

      கர்ப்பமான நிலையில் என்ஜாய் என்ஜாமி பாடலுக்கு நடனம் ஆடிய நடிகை

      கர்ப்பமான நிலையில் என்ஜாய் என்ஜாமி பாடலுக்கு நடனம் ஆடிய நடிகை

      தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘பகல்நிலவு’ என்ற சீரியல் மூலம் மிகவும் பிரபலமான நடிகை கர்ப்பமான நிலையில் என்ஜாய் என்ஜாமி பாடலுக்கு குத்தாட்டம் போட்டிருக்கிறார்.

      கர்ப்பமான நிலையில் என்ஜாய் என்ஜாமி பாடலுக்கு நடனம் ஆடிய நடிகை
      சமீரா


      தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரபலமான சீரியல்களில் ஒன்று ‘பகல்நிலவு’. இந்த சீரியலில் உண்மையான காதலர்களான அன்வர் மற்றும் சமீரா முக்கிய வேடங்களில் நடித்தது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

      காதலர்களாக இருந்த அன்வர் மற்றும் சமீரா கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். சமீபத்தில் சமீரா தான் கர்ப்பமாக இருப்பதாக யூடியூப் சேனல் மூலம் அறிவித்திருந்தார்.

      சமீரா

      இந்த நிலையில் சமீரா தற்போது சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கர்ப்பமான இருக்கும் நிலையிலும் அவர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய அளவில் ஹிட்டான

      ’என்ஜாய் என்ஜாமி’ பாடலுக்கு செம ஆட்டம் போட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.

      சமீரா
      சமீரா
        Posted in சினிமா

        நடுக்கடலில் திருமணம் செய்த திரௌபதி நடிகை ஷீலா

        நடுக்கடலில் திருமணம் செய்த திரௌபதி நடிகை ஷீலா

        திரௌபதி, டூ லேட், மண்டேலா ஆகிய படங்களில் நடித்து மிகவும் பிரபலமான நடிகை ஷீலா, நடுக்கடலில் திருமணம் செய்துக் கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.

        பழைய வண்ணாரப்பேட்டை படத்தை இயக்கிய ஜி மோகன் இயக்கத்தில் கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி வெளியான திரைப்படம் திரௌபதி#

        . இந்த படம் சமூகத்தில் நிலவும் பிரச்சனைகளுக்குத் தீர்வு சொல்லும் வகையில் உருவாகி இருந்தது. இந்த படத்தில் கதாநாயகனாக ரிச்சர்ட் நடித்து இருந்தார். கதாநாயகியாக ஷீலா நடித்திருந்தார்.

        ஷீலா ஏற்கனவே ‘டூ லேட்’ என்ற படத்தில் நடித்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு நேரடியாக டிவியில் வெளியான யோகி பாபுவின் ‘மண்டேலா’ படத்திலும் ஷீலா நடித்து இருந்தார். இந்த படம் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. இந்நிலையில் நடிகை ஷீலாவின் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

        ஷீலா

        நடுக்கடலில் ஒருவருடன் மாலையுடன் இருக்கிறார் நடிகை ஷீலா. இவருக்கு கடந்த 2014 ஆம் ஆண்டு நாளைய இயக்குனரில் பங்கேற்ற தம்பி சோழர் என்பவரை திருமணம் செய்துக்

        கொண்டார். அப்போது எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

        நடுக்கடலில் திருமணம்
        நடுக்கடலில் திருமணம்
          Posted in சினிமா

          விவேக் நடிப்பில் வெளியாக இருக்கும் 3 படங்கள்

          விவேக் நடிப்பில் வெளியாக இருக்கும் 3 படங்கள்

          தமிழ் சினிமாவில் சின்ன கலைவாணர் என்று அழைக்கப்பட்டு வந்த மறைந்த நடிகர் விவேக் நடிப்பில் மூன்று திரைப்படங்கள் வெளியாக இருக்கிறது.

          விவேக் நடிப்பில் வெளியாக இருக்கும் 3 படங்கள்
          விவேக்


          சமீபத்தில் மறைந்த விவேக் நடிப்பில் கடைசியாக தாராள பிரபு என்ற திரைப்படம் வெளியானது. ஹரிஷ் கல்யாண் உடன் டாக்டர் கண்ணதாசன் என்ற கேரக்டரில் நடித்திருந்தார் விவேக்.

          இக்கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. தற்போது நடிகர் விவேக் இவ்வுலகை விட்டு விடைபெற்றிருக்கும் நிலையில் அவர் நடிப்பில் அடுத்ததாக 3 படங்கள் திரைக்கு வர உள்ளன.

          நடிகர் விஜய் சேதுபதியுடன் முதல்முறையாக விவேக் இணைந்து நடித்துள்ள படம் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’. வெங்கட கிருஷ்ணா ரோகந்த் இயக்கியிருக்கும் இத்திரைப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியான நிலையில் விரைவில் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

          விவேக்

          அதேபோல் லெஜண்ட் சரவணன் ஹீரோவாக அறிமுகமாகும் படத்திலும் அவருடன் முக்கிய நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் விவேக். இன்னும் பெயரிடப்படாத

          இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் உடன் இந்தியன் 2 திரைப்படத்திலும் விவேக் நடித்து வந்தார்.

          அவரது காட்சிகள் ஏற்கெனவே படமாக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியானது. அதேவேளையில் பல்வேறு காரணங்களால் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

            Posted in சினிமா

            கொரோனா ஊசி விமர்சனம்- முன்ஜாமீன் கேட்டு மன்சூர் அலிகான் மனு

            கொரோனா ஊசி விமர்சனம்- முன்ஜாமீன் கேட்டு மன்சூர் அலிகான் மனு

            சென்னை மாநகராட்சி ஆணையர் கொடுத்த புகாரில் நடிகர் மன்சூர் அலிகான் மீது வடபழனி காவல் நிலையத்தில் வழக்கு பதியப்பட்டுள்ளது.

            கொரோனா தடுப்பூசி குறித்து அவதூறு பரப்பியதாக நடிகர் மன்சூர் அலிகான் மீது வழக்கு பதியப்பட்டுள்ள நிலையில், அவர் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார்.

            நடிகர் விவேக், கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட மறுநாள் மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மரணம் அடைந்தார்.

            கொரோனா தடுப்பூசி

            இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் மன்சூர் அலிகான், கொரோனா தடுப்பூசி குறித்தும், அரசியல்வாதிகள் குறித்தும் சில கருத்துகளை தெரிவித்தார். அவரது பேச்சு சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

            தொடர்ந்து, சென்னை மாநகராட்சி ஆணையர் கொடுத்த புகாரில் நடிகர் மன்சூர் அலிகான் மீது வடபழனி காவல் நிலையத்தில் வழக்கு பதியப்பட்டுள்ளது.

            இந்த நிலையில், நடிகர் மன்சூர் அலிகான் சென்னை மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டில் முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார்.

            அந்த மனுவில், தனது பேட்டியை மாநகராட்சி ஆணையர் தவறாக புரிந்து கொண்டதாகவும், உள்நோக்கத்தோடு வேண்டும் என்று தடுப்பூசி குறித்து அவதூறு பரப்பவில்லை எனவும், எதேச்சையாக பேட்டியில் வெளிப்பட்ட கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது.

            கொரோனா தடுப்பூசி செலுத்துவதை கட்டாயப்படுத்தக் கூடாது என்றுதான் கூறினேனே தவிர தடுப்பூசி குறித்து தவறாக எதுவும் தெரிவிக்கவில்லை என மனுவில் கூறியுள்ளார்.

            இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

              Posted in சினிமா

              அரசுக்கும், ரசிகர்களுக்கும் நன்றி – நடிகர் விவேக் மனைவி

              அரசுக்கும், ரசிகர்களுக்கும் நன்றி – நடிகர் விவேக் மனைவி

              நடிகர் விவேக்கின் குடும்பத்தினர் செய்தியாளர்களை சந்தித்தனர், அப்போது அவரின் மனைவி அருள்செல்வி மத்திய, மாநில அரசுகளுக்கு நன்றி தெரிவித்தார்

              தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர் விவேக். தமது காமெடி மூலமாக மக்களுக்கு

              தேவையான நல்ல கருத்துக்களை கொண்டு சேர்த்துள்ள இவர் நேற்று காலமானார். இவரது உடல் நேற்று மாலை காவல்துறை மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

              இந்நிலையில், இன்று நடிகர் விவேக்கின் குடும்பத்தினர் செய்தியாளர்களை சந்தித்தனர். விவேக்கின் மனைவி

              அருள்செல்வி மகள்கள் அமிர்த நந்தினி, தேஜஸ்வினி, மைத்துனர் செல்வகுமார் பத்திரிகையாளர் சந்திப்பின்போது உடனிருந்தனர்.

              பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விவேக்கின் மனைவி அருள்செல்வி, “எங்களுக்கு பக்க பலமாக இருந்த மத்திய,

              மாநில அரசிற்கு நன்றி, அரசு மரியாதை அளித்ததற்கு அரசிற்கு நன்றி, இறுதி வரை உடன் இருந்த காவல்துறைக்கும்,

              ஊடக்கத்துறைக்கும் நன்றி. இறுதி அஞ்சலியில் பங்கு பெற்ற கோடான கோடி ரசிகர்கர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம்” என்றார்.

              நடிகர் விவேக் மனைவி
              நடிகர் விவேக் மனைவி
                Posted in சினிமா

                நட்புக்காக சம்பளமே வாங்காமல் நடித்த யோகி பாபு

                நட்புக்காக சம்பளமே வாங்காமல் நடித்த யோகி பாபு

                பிசியாக வலம் வரும் நேரத்தில் நட்புக்கு முக்கியத்துவம் கொடுத்து சம்பளமே வாங்காமல் நடித்த நடிகர் யோகி பாபுவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

                நட்புக்காக சம்பளமே வாங்காமல் நடித்த யோகி பாபு
                யோகி பாபு
                வழக்கு எண், தனி ஒருவன், தில்லுக்கு துட்டு உள்பட 25க்கும் மேற்பட்ட படங்களுக்கு

                படத்தொகுப்பாளராக பணியாற்றியவர் கோபி கிருஷ்ணா. இவர் தயாரிப்பில் நடன இயக்குனர் தினேஷ் நடிப்பில் உருவாகும் படம் ‘நாயே பேயே’. இந்த படத்தை சக்திவாசன் இயக்கி உள்ளார்.

                ஐஸ்வர்யா, ‘ஆடுகளம்’ முருகதாஸ், புச்சி பாபு, ரோகேஷ், கிருஷ் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

                பிசியான காமெடி நடிகராக இருக்கும் யோகி பாபு, படத்தின் நாயகன் தினேஷ் மாஸ்டர் மற்றும் தயாரிப்பாளர் கோபி கிருஷ்ணாவுடனான நட்புக்காக இந்த படத்தின் விளம்பர பாடலில் நடனமாடி

                கொடுத்துள்ளார். அந்த பாடல் வீடியோ வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

                இதுகுறித்து கோபி கிருஷ்ணா கூறியதாவது: “படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் யோகி பாபுவை நடிக்க வைக்க முயற்சி செய்தோம். படம் முழுக்க வரும் கதாபாத்திரம் என்பதால்

                அவரது கால்ஷீட் 40 நாட்கள் தேவைப்பட்டது. ஆனால் கால்ஷீட் பிரச்சினையால் அவரால் நடிக்க முடியவில்லை. அவருக்கு பதிலாக முருகதாஸ் நடித்தார்.

                யோகி பாபு

                இந்த படத்துக்கு தனது பங்களிப்பு ஏதாவது இருக்கவேண்டும் என்று சொன்ன அவரே கொடுத்த ஐடியா தான் இந்த விளம்பர பாடல். ஒரு நாள் முழுக்க எங்களுடன் இருந்து நடித்து கொடுத்தார்.

                சம்பளம் வாங்கிக்கொள்ளவில்லை. கேரவன் வசதி கூட வேண்டாம் என்று மறுத்துவிட்டார். எனக்காகவும் தினேஷ் மாஸ்டருக்காகவும் இந்த உதவியை செய்துகொடுத்தார்.

                பிசியாக வலம் வரும் நேரத்தில் நட்புக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்த பேருதவியை செய்த அவரை என்றும் மறக்க மாட்டோம். அவர் மட்டுமல்லாது சக்தி சரவணன், லொள்ளுசபா ஜீவா,

                பிக்பாஸ் பரணி, டைகர் தங்கதுரை, பிடிச்சுருக்கு அசோக் என அனைவருமே சம்பளம் வாங்கிக்கொள்ளாமல் நடித்து கொடுத்து உதவினார்கள்.

                இவர்கள் இடம் பெற்றுள்ள பாடல் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றதுடன், படத்தின் வியாபாரத்துக்கும் உதவியுள்ளது”. இவ்வாறு அவர் கூறினார். கலகலப்பான குடும்ப படமாக உருவாகி இருக்கும் நாயே பேயே படம் வரும் 23 ம் தேதி வெளியாக இருக்கிறது

                  Posted in சினிமா

                  முதல் அமைச்சர் மகளாக நடிக்கும் நயன்தாரா

                  முதல் அமைச்சர் மகளாக நடிக்கும் நயன்தாரா

                  தமிழில் முன்னணி நடிகையாக வலம்வரும் நயன்தாரா, அடுத்ததாக பிரபல நடிகரின் படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

                  முதல் அமைச்சர் மகளாக நடிக்கும் நயன்தாரா
                  நயன்தாரா


                  மலையாளத்தில் மோகன்லால் நடித்து பிளாக்பஸ்டர் ஹிட்டான திரைப்படம் ‘லூசிபர்’. இந்தியாவையே மிரள‌ வைத்த இந்த படத்தில் மோகன்லால் அரசியல்வாதியாகவும்,

                  அண்டர்கிரவுண்ட் கேங்ஸ்டராகவும் நடித்திருந்தார். இதைத்தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் தயாரிக்கும் பணிகளை துவங்கிவிட்டார் பிருத்விராஜ்.

                  தற்போது லூசிபர் படம் தெலுங்கில் ரீமேக் ஆகிறது. இதில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிக்க இருக்கிறார். பிரபல இயக்குனர் மோகன் ராஜா இந்த படத்தை இயக்கவிருக்கிறார். சுமார் 200

                  கோடி ரூபாய் செலவில் தயாரிக்கவுள்ள இப்படத்தின் பணிகள் நடைபெற்று வருகிறது. கடந்த ஜனவரி மாதமே தொடங்கவிருந்த இந்த படத்தின் ஷூட்டிங் கொரோனா காரணமாக இன்னும் தொடங்கப்படவில்லை.

                  மோகன்ராஜா, மோகன்லால், சிரஞ்சீவி

                  இந்தப் படத்தில் மலையாளத்தில் மஞ்சு வாரியர் நடித்திருந்த முதலமைச்சர் மகள் கதாபாத்திரத்திற்கு, நயன்தாராவை நடிக்க வைக்க முதலில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

                  னால் கால்ஷீட் பிரச்சினையால் நயன்தாரா மறுத்துவிட்டார். அதன்பிறகு சில நடிகைகளை பரிசீலித்து வந்தனர்.

                  இந்நிலையில், தற்போது நயன்தாராவையே நடிக்க வைக்க மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. விரைவில் இந்த படத்தில் நயன்தாரா இணைவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

                    Posted in சினிமா

                    நடிகர் விவேக் உடல் தகனம் செய்யப்பட்டது – 78 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதை

                    நடிகர் விவேக் உடல் தகனம் செய்யப்பட்டது – 78 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதை

                    மாரடைப்பால் மரணமடைந்த நடிகர் விவேக்கின் உடல், 78 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

                    நடிகர் விவேக் உடல் தகனம் செய்யப்பட்டது – 78 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதை
                    விவேக்
                    சென்னையில் வசித்து வந்த நடிகர் விவேக், மாரடைப்பு காரணமாக நேற்று (ஏப்.16) காலை 11

                    மணியளவில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு மருத்துவமனையில் எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று (ஏப்.17)

                    அதிகாலை 4.35 மணியளவில் அவர் உயிரிழந்ததாக மருத்துவமனை தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டது.

                    இதனைத் தொடர்ந்து அவரின் உடல் விருகம்பாக்கத்திலுள்ள அவரது இல்லத்திற்கு கொண்டுசெல்லப்பட்டது. அங்கு அவரது நண்பர்கள், திரைத்துறை பிரபலங்கள், நடிகர்கள், நடிகைகள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

                    இதையடுத்து மாலை 4 மணியளவில் விருகம்பாக்கத்தில் இருந்து, மேட்டுக்குப்பம் பகுதியில் உள்ள மின்மயானத்திற்கு அவரது உடல், ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. இறுதி ஊர்வலத்தில் ஏராளமான திரையுலக பிரபலங்களும், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

                    விவேக்கின் உடலுக்கு காவல்துறை மரியாதை செலுத்திய போது எடுத்த புகைப்படம்

                    விவேக்கின் புகழுக்கு பெருமை சேர்க்க, அவரது கலை, சமூகச் சேவையை கெளரவிக்கும் விதமாக காவல்துறை மரியாதையுடன், அவரது உடலை அரசு தகனம் செய்ய தேர்தல் ஆணையம் அனுமதி அளித்திருந்தது.

                    அதன்படி நடிகர் விவேக்கின் உடலுக்கு, 78 துப்பாக்கிக் குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதை அளிக்கப்பட்டது. இதையடுத்து காவல்துறை சார்பில் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

                    இதையடுத்து விவேக்கின் உடலுக்கு அவரது மகள் இறுதிச் சடங்குகளை செய்தார். பின்னர் நடிகர் விவேக்கின் உடல், மேட்டுக்குப்பத்தில் உள்ள மின்மயானத்தில் எரியூட்டப்பட்டது.

                    Posted in சினிமா

                    மனிதர்கள் மட்டுமல்ல… நீ நட்ட மரங்களும் உனக்காக துக்கம் அனுசரிக்கின்றன – வைரமுத்து இரங்கல்

                    மனிதர்கள் மட்டுமல்ல… நீ நட்ட மரங்களும் உனக்காக துக்கம் அனுசரிக்கின்றன – வைரமுத்து இரங்கல்

                    மனிதர்கள் மட்டுமல்ல, நீ நட்ட மரங்களும் உனக்காக துக்கம் அனுசரிக்கின்றன என விவேக் மறைவிற்கு கவிஞர் வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார்.

                    மனிதர்கள் மட்டுமல்ல… நீ நட்ட மரங்களும் உனக்காக துக்கம் அனுசரிக்கின்றன – வைரமுத்து இரங்கல்
                    விவேக், வைரமுத்து


                    தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் விவேக். இவருக்கு நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து சென்னை வடபழனியில் உள்ள தனியார்

                    மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நடிகர் விவேக், இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

                    அவரது மறைவிற்கு ரசிகர்கள், திரை பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

                    அந்த வகையில் கவிஞர் வைரமுத்து, விவேக் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது:

                    “அய்யோ! சிரிப்பு செத்துவிட்டதே!
                    எல்லாரையும் சிரிக்கவைத்த கலைஞன்
                    அழவைத்துவிட்டுப் போய்விட்டானே!

                    திரையில் இனி பகுத்தறிவுக்குப்
                    பஞ்சம் வந்துவிடுமே!

                    மனிதர்கள் மட்டுமல்ல விவேக்!
                    நீ நட்ட மரங்களும் உனக்காக
                    துக்கம் அனுசரிக்கின்றன.

                    கலைச் சரித்திரம் சொல்லும் :
                    நீ ‘காமெடி’க் கதாநாயகன்”

                    இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

                    Posted in சினிமா

                    கணவர் மீது கொடுத்த புகாரைத் திரும்பப் பெற்றார் நடிகை!

                    கணவர் மீது கொடுத்த புகாரைத் திரும்பப் பெற்றார் நடிகை!

                    கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காவல் நிலையத்தில் அளித்த புகாரை திரும்ப பெற்றுள்ளார் நடிகை ராதா.

                    சுந்தரா டிராவல்ஸ் அடாவடி உள்பட பல படங்களில் கதாநாயகியாக நடித்தவா் நடிகை ராதா (38). இவா் சென்னை சாலிகிராமம், லோகையா தெருவில் கணவரைப் பிரிந்து தனது மகன், தாயுடன் வசித்து வருகிறாா்.

                    எண்ணூா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் வசந்தராஜா (40) என்பவருடன் ராதாவுக்கு பழக்கம் ஏற்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு, இருவரும் வீட்டிலேயே தாலி கட்டி திருமணம் செய்து கொண்டனராம். பின்னா், ஒரே வீட்டில் குடும்பம் நடத்தினராம். எனினும் வசந்தராஜா, நடிகை ராதா

                    மீது சந்தேகபட்டு அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தாராம். இதில் மன வேதனை அடைந்த ராதா, தன்னை அடித்து கொடுமைப்படுத்தி வரும் வசந்தராஜா மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்

                    என்று விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இது குறித்து குற்றப்பிரிவு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

                    இந்த விசாரணையில், வசந்தராஜா ஏற்கெனவே திருமணமாகி மனைவி, இரு குழந்தைகளுடன் ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள காவலா் குடியிருப்பில் வசித்து வருவது தெரியவந்தது.

                    மேலும் வசந்தராஜா, திருவான்மியூா் காவல் நிலையத்தில் பணிபுரிந்துபோது நடிகை ராதாவுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால், வசந்தராஜா, தனது மனைவிக்கு தெரியாமல், ராதாவை

                    இரண்டாவதாகத் திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்துள்ளாா். கடந்த மாதம் வரை வடபழனி காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த வசந்தராஜா, பல்வேறு பிரச்னைகளில் சிக்கியதால்

                    அங்கிருந்து எண்ணூா் காவல் நிலையத்துக்கு பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளாா் என்பது தெரியவந்தது.

                    இந்நிலையில் கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காவல் நிலையத்தில் அளித்த புகாரை இன்று திரும்பப் பெற்றுக்கொண்டார் நடிகை ராதா.

                      Posted in சினிமா

                      பெண்ணிற்கு தொல்லை கொடுத்த பிக் பாஸ் பிரபலம்

                      பெண்ணிற்கு தொல்லை கொடுத்த பிக் பாஸ் பிரபலம்

                      பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே அதில் என்றும் சர்ச்சைக்கு பஞ்சமே இருந்தது இல்லை. அதிலும் ஜூலி, மீரா மிதுன், சுஜித்ரா போன்றவர்கள் பிக் பாஸ்ஸுக்கு பின்னரும் சுஜித்ரா சர்ச்சைகளில்

                      சிக்கினர். இப்படி ஒரு நிலையில் முதன் முறையாக சர்ச்சையில் சிக்கியுள்ளார் நடிகரும் முன்னாள் பிக் பாஸ் போட்டியாளருமான டேனியல்.

                      விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் பங்குபெற்று ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர் டேனி. ஆனால், இவர் பிக்பாஸ்

                      நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்னதாகவே பல்வேறு படங்களில் நடித்திருக்கிறார். இவர் முதன் முதலாக தனுஷ் நடிப்பில் வெளியான பொல்லாதவன் படத்தின் மூலம் அறிமுகமானார்.

                      அதன் பின்னர் பல்வேறு படங்களில் நடித்து இருந்தார். அதிலும் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என்ற வெளியான ரொம்ப சுமார் மூஞ்சி குமாரு என்ற கதாபாத்திரத்தில் இவர் பேசிய ‘பிரெண்டு லவ் மேட்டரு’ என்ற

                      வசனத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலம் அடைந்தார். அதன் பின்னர் இவருக்கு பிக்பாஸில் கலந்து கொள்ளும் வாய்ப்பும்.பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த டேனி மேடையில் தனது காதலியான டெனிஷா குறித்து மிகவும் உருக்கமாக பேசி இருந்தார்.

                      பல ஆண்டுகளாக டெனிஷாவை காதலித்து வரும் டேனி வெளியே சென்றதும் அவரை திருமணம் செய்துகொள்வேன் என்றும், தனது திருமணத்தை கமல் முன் நின்று நடத்த வேண்டும் கமல் தெரிவித்திருந்தார்.டேனி கூறியது போலவே வெளியே சென்றதும் தனது நீண்ட வ்ருட காதலியான

                      டெனிஷாவை திருமணம்செய்துகொண்டார். 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் 3 ஆம் தேதி தனது காதலி டெனிஷாவை பதிவு திருமணம் செய்து கொண்ட டேனிக்கு கடந்த ஆண்டு தான் குழந்தை பிறந்தது.

                      பிக் பாஸுக்கு பின்னரும் தொடர்ந்து நடித்து வரும் இவர் சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் பெண் ஒருவருடன் பேசிய ஸ்க்ரீன் ஷாட் ஆதாரங்கள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி ஆதாரங்கள் இதுகுறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “Thonuchu Solliton” என்ற கணக்கில் இருந்து டேனியல் 17

                      வயது பள்ளி வயது பெண்ணுடன் மோசமாக பேசியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் ‘ நான் அந்த பெண்ணின் விவரங்களைச் சேர்க்கவில்லை. டேனியல் போப் இரவு நேர பல பெண்கள் டி.எம்-கிற்கு மெசேஜ் செய்து அவர்களின் படங்களைக் கேட்கிறார்.

                      அவள் 17 வயது பள்ளி பெண் (அவள் புத்திசாலி. அவன் கேட்டபோது அவளுடைய விவரங்கள் எதுவும் அவனுக்குக் கொடுக்கவில்லை) இந்த டேனியல் போப் ஒரு குழந்தையுடன் இந்த நபர் .

                      அவர் தனது படங்களை இரண்டு முறை மற்றும் அதுவும் அதிகாலை 2 மணிக்கு அனுப்பும்படி கேட்டுள்ளார். அவர் எவ்வளவு காலமாக இதைச் செய்கிறார் என்று தெரியவில்லை’ என்று அந்த இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

                      Posted in சினிமா

                      வாட்ஸ் ஆப் நம்பர் கேட்ட ரசிகருக்கு போலீஸ் நம்பரை கொடுத்த சுருதி ஹாசன்

                      வாட்ஸ் ஆப் நம்பர் கேட்ட ரசிகருக்கு போலீஸ் நம்பரை கொடுத்த சுருதி ஹாசன்

                      தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் சுருதிஹாசன், சமீபத்தில் சமூக வலைத்தளம் வாயிலாக ரசிகர்களுடன் கலந்துரையாடினார்.

                      வாட்ஸ் ஆப் நம்பர் கேட்ட ரசிகருக்கு போலீஸ் நம்பரை கொடுத்த சுருதி ஹாசன்
                      சுருதி ஹாசன்


                      கமல்ஹாசனின் மூத்த மகளான சுருதி ஹாசன் இந்தியில் அறிமுகமாகி, பின்னர் தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமானார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான கிராக், வக்கீல் சாப் ஆகிய படங்கள் மாபெரும் வரவேற்பை பெற்றன.

                      தற்போது தமிழில் விஜய் சேதுபதியுடன் இணைந்து லாபம் என்கிற படத்தில் நடித்து வருகிறார். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் சுருதிஹாசன் அண்மையில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார்.

                      சுருதி ஹாசனின் டுவிட்டர் பதிவு

                      அப்போது ரசிகர் ஒருவர் ‘மேடம், பிளீஸ் உங்களது வாட்ஸ் ஆப் நம்பரைக் கொடுங்கள்’ என்று கேட்டிருக்கிறார்.

                      இதற்கு பதிலளித்த நடிகை சுருதி ஹாசன், போலீஸ் அவசர உதவி எண் ஆன 100 என்ற நம்பரைக் குறிப்பிட்டிருந்தார். நடிகர் சுருதி ஹாசனின் இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது

                        Posted in சினிமா

                        எனது உரிமைகளில் யாரும் குறுக்கிட முடியாது – ஷங்கர் பதிலடி

                        எனது உரிமைகளில் யாரும் குறுக்கிட முடியாது – ஷங்கர் பதிலடி

                        அந்நியன் படத்தை இயக்குனர் ஷங்கர் இந்தியில் ரீமேக் செய்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளியானது. இதையடுத்து, ஷங்கர் தன்னிடம் அனுமதி பெறாமல் ரீமேக்

                        செய்வதாக அந்நியன் படத்தின் தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரன், இயக்குனர் ஷங்கருக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தார்.

                        இந்நிலையில், இதற்கு விளக்கமளித்து இயக்குனர் ஷங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது: அந்நியன் 2005-ம் ஆண்டு வெளியானது. அந்தப் படம் சம்பந்தப்பட்ட

                        அனைவருக்குமே, அதன் கதையும், திரைக்கதையும் என்னுடையது என்று தெரியும். கதை, திரைக்கதை, இயக்கம் ஷங்கர் என்கிற பெயருடன்தான் இந்தப் படமும் வெளியானது.

                        படத்தின் திரைக்கதையை எழுத நான் யாரையும் நியமிக்கவில்லை. ஆதலால், இதன் திரைக்கதையை நான் விரும்பும்படி பயன்படுத்திக் கொள்ள எனக்கு உரிமை உள்ளது. படைப்பை எழுதியவன் என்ற முறையில் எந்தச் சூழலிலும், எனது உரிமைகளில் யாரும் குறுக்கிட முடியாது.

                        ஷங்கர் வெளியிட்ட அறிக்கை

                        மறைந்த சுஜாதாவின் பெயரை இதில் சம்பந்தப்படுத்தியதை கண்டு ஆச்சரியமடைந்தேன். இந்தப் படத்துக்கு அவர் வசனங்கள் எழுத மட்டுமே நியமிக்கப்பட்டார். அதற்கான உரிய பெயரும்,

                        அவருக்கு கொடுக்கப்பட்டது. அவர் எந்த விதத்திலும் திரைக்கதையிலோ, பாத்திரப் படைப்பிலோ சம்பந்தப்படவில்லை. எனவே வசனகர்த்தா என்பதைத் தாண்டி அவர் வேறு எந்த வகையிலும் இதில் ஈடுபடவில்லை.

                        திரைக்கதை என்னிடம் இருப்பதால் அதை நான் விரும்பும் வகையில் பயன்படுத்திக் கொள்ளும் முழு உரிமை எனக்கு உள்ளது. ஏன், அந்நியனுக்காக நீங்களோ, உங்கள் நிறுவனமோ எந்த

                        விதமான உரிமைகளையும் கோர முடியாது, ரீமேக் செய்யவும் முடியாது. ஏனெனில் அந்த உரிமை உங்களுக்கு எழுத்துபூர்வமாக தரப்படவில்லை. அப்படி எதுவும் இல்லாத நிலையில், படத்தின்

                        கதைக்கான உரிமை உங்களிடம் உள்ளது என்பதைச் சொல்ல உங்களுக்கு எந்த அடிப்படையும் இல்லை.

                        ஒரு தயாரிப்பாளராக, ‘அந்நியன்’ படத்தின் மூலம் நல்ல லாபம் அடைந்துள்ளீர்கள். தற்போது தேவையின்றி, உங்களுக்குக் கொஞ்சமும் தொடர்பில்லாத எனது எதிர்கால முயற்சிகளின் மூலம்

                        ஆதாயம் தேடப் பார்க்கிறீர்கள். இந்த விளக்கத்துக்குப் பின்னராவது உங்களுக்கு ஒழுங்கான புரிதல் வரவேண்டும். இனி இது போன்ற அடிப்படையற்ற விஷயங்களை பேச மாட்டீர்கள் என்று நம்புகிறேன்”. இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

                          Posted in சினிமா

                          பிரபல நடிகருக்கு கொக்கி போடும் நடிகை

                          பிரபல நடிகருக்கு கொக்கி போடும் நடிகை

                          தமிழ் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் நடித்து பிரபலமாக இருக்கும் நடிகை ஒருவர் முன்னணி நடிகருக்கு கொக்கி போட்டு வருகிறாராம்.

                          பிரபல நடிகருக்கு கொக்கி போடும் நடிகை
                          கிசுகிசு


                          தமிழ் சினிமாவில் ஒரு படத்தில் நடித்த நடிகையின் படம் ப்ளாப் ஆனதால், தெலுங்கு பக்கம் சென்ற நடிகை

                          அங்கு முன்னணி நடிகை அந்தஸ்துக்கு உயர்ந்தாராம். தற்போது அந்த நடிகை தமிழில் முன்னணி நடிகரின் படத்தில் ஒப்பந்தம் ஆகி படப்பிடிப்புக்கு தயாராகி வருகிறாராம்.

                          இந்நிலையில், அடுத்த படத்திற்காக தமிழில் மற்றொரு முன்னணி வாரிசு நடிகருக்கு கொக்கி போட்டு வருகிறாராம்.

                          எப்படியாவது அவர் படத்தில் நடிக்கும் வாய்ப்பை பிடித்து விட வேண்டும் என்று முயற்சி செய்து வருகிறாராம்.

                            Posted in சினிமா

                            காதலுக்கு துணை நின்ற சிலம்பரசன்.

                            மங்காத்தா’ படத்தில் அஜித்துடனும், ‘ஜில்லா’ படத்தில் விஜய்யுடனும் சேர்ந்து நடித்தவர் மகத். இவர் சிம்புவுடன் ‘

                            அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ என்ற படத்தில் நடித்திருந்தார். மேலும் கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு மிகவும் பிரபலமானார்.

                            சிம்பு வெளியிட்ட காதல் பர்ஸ்ட் லுக் போஸ்டர்

                            இந்நிலையில், மகத் நடிப்பில் உருவாகி வரும் ‘காதல் ConditionsApply’ என்ற படத்தின் டைட்டில் லுக் போஸ்டரையும்,

                            மோஷன் போஸ்டரையும் நடிகர் சிம்பு வெளியிட்டிருக்கிறார். லிப்ரா புரொடக்‌ஷன் ரவீந்தர்

                            தயாரிக்கும் இந்த படத்தை அரவிந்த் இயக்குகிறார். தற்போது இந்த மோஷன் போஸ்டர் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது

                              Posted in சினிமா

                              கொரோனாவிற்கு பயப்பட தேவையில்லை – செந்தில்

                              கொரோனாவிற்கு பயப்பட தேவையில்லை – செந்தில்

                              தமிழ் சினிமாவில் மூத்த நகைச்சுவை நடிகர் செந்தில். இவர் தற்போது நடிகராகவும், அரசியல்வாதியாகவும் இருக்கிறார்.

                              சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலுக்காக பா.ஜனதாவில் இணைந்து பிரச்சாரம் செய்தார். இவருக்கு சமீபத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை அனுமதிக்கப்பட்டார்.

                              தற்போது செந்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் எனக்கு கொரோனா தொற்று வந்தது உண்மைதான்.

                              கொரோனா வந்தால் யாரும் பயப்பட தேவையில்லை. ஊசி போட்டுக் கொண்டு வீட்டில் தனிமைப் படுத்திக் கொள்ளுங்கள். மருந்து மாத்திரையை தவறாமல் உட்கொள்ளுங்கள்.

                              செந்தில்

                              ஊசி போட்டதால்தான் எனக்கு பெரியளவிற்கு பாதிப்பு இல்லை. அதுபோல் நீங்களும், கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள் என்று வீடியோ கூறியிருக்கிறார்.

                                Posted in சினிமா

                                பிரசாந்த் படத்தில் இணைந்த மாஸ்டர் பட நடிகர் பூவையார்

                                பிரசாந்த் படத்தில் இணைந்த மாஸ்டர் பட நடிகர்

                                நீண்ட இடைவெளிக்குப் பிறகு பிரசாந்த் கதாநாயகனாக நடிக்கும் அந்தகன் படத்தில் மாஸ்டர் படத்தின் மூலம் ரசிகர்களை கவந்தவர் இணைந்திருக்கிறார்.

                                பிரசாந்த் படத்தில் இணைந்த மாஸ்டர் பட நடிகர்
                                பிரசாந்த்


                                பாலிவுட்டில் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான படம் ‘அந்தாதூன்’. இப்படத்தை தமிழில் ரீமேக் செய்கின்றனர். ‘அந்தகன்’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் நடிகர் பிரசாந்த் நாயகனாக நடிக்கிறார். இதற்காக அவர் பிரத்யேகமாக பியானோ பயிற்சி பெற்றுள்ளார்.

                                மேலும் இப்படத்தில் சிம்ரன், வனிதா, இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், யோகிபாபு, பிரியா ஆனந்த், சமுத்திரகனி, லீலா சாம்சன் என ஏராளமானோர் நடிக்கின்றனர். இப்படத்தை பிரசாந்த்தின் தந்தை தியாகராஜனே இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

                                பூவையார்

                                இந்நிலையில், இப்படத்தில் சூப்பர் சிங்கர் பிரபலம் பூவையார் இணைந்திருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார். சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான

                                மாஸ்டர் படத்தில் பூவையார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.