Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
ஏழு மாவட்டங்களுக்கு மண் சரிவு அபாய எச்சரிக்கை
ஏழு மாவட்டங்களுக்கு மண் சரிவு அபாய எச்சரிக்கை
இலங்கையில் இடம்பெற்று வரும் கனமழை காரணமாக மண் சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளது
இதனால் மக்களை விழிப்பாக இருக்கும் படி அனர்த்த
முகாமைத்துவ அமைச்சு வேண்டுதல் விடுத்துள்ளது
மேலும் ஏழு மாவட்டங்களுக்கு இந்த அபாய எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது
வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களை அழைத்துவர
வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களை அழைத்துவர
கொவிட் 19 நோய்த்தொற்று பரவலுக்கு மத்தியில் நிர்க்கதியாகவுள்ள அல்லது பல்வேறு கஷ்டங்களுக்கு
முகம்கொடுத்துள்ள வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்துவருவதற்காக புதிய முறைமையொன்று தயாரிக்கப்படவுள்ளது.
நாளை நடைபெறவுள்ள கலந்துரையாடலின் போது புதிய நிகழ்ச்சித்திட்டம் குறித்து தீர்மானிக்கப்படும். வெளிநாடுகளில்
உள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்துவரும் ஜுன் மாத விமானப் பயணம் அதற்கு ஏற்ப திட்டமிடப்படும்.
நோய்த்தொற்று உலகளாவிய ரீதியில் உள்ள காரணத்தினால் பாதிக்கப்பட்டுள்ள வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களை
நாட்டுக்கு அழைத்து வரும் நிகழ்ச்சித்திட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் பணிப்புரையின் பேரில் கடந்த ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்பட்டது.
சீனாவின் வூஹான் நகரில் இருந்த மாணவர்கள் உள்ளிட்ட 33 இலங்கையர்கள் பெப்ரவரி மாதம் 01ஆம் திகதி இலங்கைக்கு அழைத்துவரப்பட்டனர். நோய்த்தடுப்பு நடவடிக்கையின் பின்னர்
அவர்கள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். யாத்திரை சென்று இந்தியாவின் சில நகரங்களில் நிர்க்கதியாகவிருந்த 839 இலங்கையர்கள் மார்ச் 19 ஆம் திகதி நாட்டை வந்தடைந்தனர்.
கடந்த மே 25ஆம் திகதியாகும் போது 20நாடுகளில் இருந்து 5485 பேர் இவ்வாறு நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர். அவர்களில் 4826 பேர் வெளிவிவகார அமைச்சினாலும் வெளிநாடுகளில் உள்ள
இலங்கை தூதரகங்களினாலும் இனம்காணப்பட்டவர்களாகும். பீசீஆர் பரிசோதனையின் பின்னர் அவர்களில் 05 வீதமானவர்கள்
அல்லது 0.01 வீதமானோர் கொரோனா நோய்த்தொற்றுடையவர்களாக உறுதிசெய்யப்பட்டிருந்தனர்.
எனினும் அண்மையில் ஐக்கிய அரபு இராச்சியத்தின் டுபாயிலிருந்து வருகை தந்த 197 பேரில் 22 பேர் நோய்த்தொற்றுடையவர்கள் என உறுதிசெய்யப்பட்டது.
குவைட்டிலிருந்து வருகை தந்த 462 பேரில் 150 பேர் பீசீஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், அவர்களில் 96 பேர்
கொரோனா நோயாளிகள் என இனம்காணப்பட்டுள்ளனர். மேலும் 300 பேர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளனர்.
குவைட்டிலிருந்து நாட்டுக்கு வருகைதந்த அனைவரும் பல்வேறு காரணங்களினால் அந்நாட்டில் தடுப்புநிலையங்கள் அல்லது நாடுகடத்தப்படுவதற்கான முகாம்களில் இருந்தவர்களாகும்.
நோய்த்தொற்றுடையவர்களாக இனம்காணப்பட்டுள்ளவர்களுக்கு சிகிச்சையளிப்பதும் முக்கியமானதாகும். இந்த பின்புலத்தில் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களை மீண்டும் நாட்டுக்கு
அழைத்துவரும் முறைமையை திருத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அழைத்துவரப்படாத போது அவர்களுக்கு ஏற்படக்கூடிய நிலைமைகளை மனிதாபிமான ரீதியாக நோக்கி
அவர்களை அழைத்து வரும் நடவடிக்கையை தொடர்ந்தும் மேற்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
புதிய முறைமையை தயாரிப்பதற்காக நாளை இடம்பெறவுள்ள கலந்துரையாடலில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க, ஜனாதிபதி அலுவலகத்தின்
வெளிவிவகாரங்களுக்கான மேலதிக செயலாளர் ஜயனாத் கொலம்பகே, விசேட வைத்திய நிபுணர் பபா பலிஹவதன,
மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் பணிப்பாளர் வைத்தியர் ஜயருவன் பண்டார ஆகியோர் பங்குபற்றவுள்ளனர்.
ஆறுமுகம் தொண்டமான் திடீர் மரணம்
ஆறுமுகம் தொண்டமான் திடீர் மரணம்
மலையக மக்கள் விடுதலைக்கு போராடி வந்த ஆறுமுகம் தொண்டமான்
அவர்கள் திடீரென உடல் நலம் குன்றியதால் மருத்துவமனையில் மரணமடைந்துள்ளார்
இவரது மரணம் மலையக மக்களுக்கு பெரும் இழப்பு என அந்த மக்கள் கண்ணீர் மல்க தெரிவித்து வருகின்றனர்
இந்தியா இலங்கை திடீர் பேச்சு – உள்ளே நடந்தது என்ன …?
இந்தியா இலங்கை திடீர் பேச்சு – உள்ளே நடந்தது என்ன …?
புதிதாக நியமிக்கப்பட்ட இந்திய உயர் ஸ்தானிகர் வெளிநாட்டு உறவுகள் அமைச்சர் தினேஷ் குணவர்தனவை சந்தித்துள்ளார்.
இலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்ட இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் போக்லே இன்று குடியரசுக் கட்டிடத்தில் வெளிநாட்டு
உறவுகள் அமைச்சர் தினேஷ் குணவர்தனவை மரியாதை நிமித்தம் சந்தித்தார்.
2020 மே 14ஆந் திகதி தகைமைச் சான்றுகளை சமர்ப்பித்த பின்னர் உயர் ஸ்தானிகராக தனது பணிகளை ஆரம்பித்த முதலாவது தினத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது, பரவலான
இருதரப்புப் பிரச்சினைகள் குறித்த கருத்துக்களை வெளிநாட்டு உறவுகள் அமைச்சருடன் உயர் ஸ்தானிகர் போக்லே பரிமாறிக் கொண்டார்.
புதிய உயர் ஸ்தானிகரை வரவேற்ற அமைச்சர் குணவர்தன, இந்தியாவுடனான வலுவான மற்றும் ஆழ்ந்த ஒத்துழைப்புக்கான இலங்கையின் முழுமையான உறுதிப்பாட்டை உறுதிப்படுத்திய
அதே நேரத்தில், கோவிட்-19 தொற்றுநோய் நிலைமைக்கு மத்தியில் இடம்பெற்ற தெளிவான நல்லெண்ணப் பரிமாற்றங்கள் தொடர்பில் தனது பாராட்டுக்களைத் தெரிவித்தார். அண்டை நாடுகளுடனான
தனது முதல் கொள்கையினூடாக, இலங்கையுடனான நெருக்கமான ஒத்துழைப்புக்கான பிரதமர் நரேந்திர மோடியின் உறுதிமொழிகளை உயர் ஸ்தானிகர் போக்லே தெரிவித்தார்.
கோவிட்-19 நோய் நிலைமைக்குப் பின்னரான புதியதொரு சர்வதேச சூழலில், கடல்சார் ஒத்துழைப்பு, பாதுகாப்புப் பரிமாற்றங்கள், உணவு மற்றும் சுகாதாரப் பாதுகாப்பை உறுதி செய்தல், திறன்
விருத்திக்கான மேம்பட்ட உதவி மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஆகியவற்றின் மூலம் பரஸ்பரம் நன்மை பயக்கும் வர்த்தகம், முதலீடு, வளர்ச்சி மற்றும் அரசியல் உறவுகளை நோக்கி
பணியாற்றுவதற்கு இரண்டு பிரமுகர்களும் ஒப்புக்கொண்டனர். இரு நாடுகளுக்குமிடையிலான இந்து – பௌத்த கலாச்சார
உறவுகளின் பண்டைய அடித்தளத்தின் அடிப்படையில், சுற்றுலாப் பரிமாற்றங்களை ஆரம்பிப்பதற்கு ஒப்புக்கொள்ளப்பட்டது.
நிலுவையிலுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மற்றும் ஏனைய இருதரப்பு ஆவணங்களை முன்னெடுத்துச் செல்வதற்கு இரு
தரப்பினரும் மேலும் உடன்பட்டனஇந்த சந்திப்பின் போது, வெளிவிவகார செயலாளர் ரவிநாத ஆரியசிங்க மற்றும்
வெளிநாட்டு உறவுகள் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்
2 ,வாரங்களுக்குப் பின்னரே பாடசாலைகளை மீண்டும் ஆரம்பம்
2 ,வாரங்களுக்குப் பின்னரே பாடசாலைகளை மீண்டும் ஆரம்பம்
கொவிட் 19 தொற்று பரவலுக்கு பின்னர் பாடசாலைகளை மீள ஆரம்பிக்கும் திகதியை இன்னும் ஒரு வாரம் அல்லது இரண்டு
வாரங்களில் அறிவிக்கக் கூடியதாக இருக்குமென்று கல்வி அமைச்சர் டலஸ் அளகப்பெரு தெரிவித்தார்.
கல்வி அமைச்சில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் இதனை தெரிவித்தார்.
66 நாட்களுக்குப்பின்னர் இன்று முழுநாட்டிலும் மீண்டும் வழமையான பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.இதில் எதிர்வரும் ஒரு வாரக் காலப்பகுதியில் சமூகததின் செயற்பாடு
போக்குவரத்துத் துறையிலான விடயங்கள் முதலான விடயங்கள் ஆராயப்படும் என்று கல்வி அமைச்சர் தெரிவித்தார். இதன்
அடிப்படையில் தீர்மானங்கள் மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.
பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பாக கல்வி அமைச்சும் சுகாதார அமைச்சின் அதிகாரிகளுக்கிடையில் பேச்சுவார்;த்தை நடத்தப்பட்டதாகவும் கூறினார்.
பாடசாலை மாணவர்களை பாடசாலைக்கு அழைப்பது பல கட்டங்களின் கீழ் இடம்பெறும் . முதல் கட்டத்தின் கீழ் உயர்தரத்தில்
கல்வி பயிலும் மாணவர்களுக்காக பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கு எதிர்பார்த்துள்ளோம் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
நாட்டில்; 43 இலட்சம் பாடசாலை மாணவர்கள் கல்வி பயிலுகின்றனர். இவர்கள் பொதுப்போக்குவரத்தை பயன்படுத்துகின்றனர்.இதனால் இவர்களது போக்குவரத்து
வசதிகளுக்காக போக்குவரத்து அமைச்சுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படவிருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
தென்கொரியாவில் 4 மாதங்களுக்கு பின்னரே பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்பட்டன. பிரிட்டனில் கொவிட் தொற்றுக்கு மத்தியில் ஆரம்ப பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதையும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
எல்ரீரீயுடனான போரை முடிவுக்கு கொண்டு வந்தது போன்று இதனை நாம் செய்ய முடியாது. கொரோனா வைரசு தொற்று சர்வதேச ரீதியில் பெரும் பிரச்சினையாக இன்று அமைந்துள்ளது.
இலங்கையிலும் அது உண்டு. இந்த விடயங்களை நாம் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்த கல்வி அமைச்சர்
பாடசாலை மாணவர்களை பாதுகாத்து அதாவது பாடசாலைகளை மூடி கொவிட் 19 தொற்றிற்கு எதிரான போராட்டத்தை
ஆரம்பித்தோம். இதே போன்றே இதனை முடிவிற்கு கொண்டு வந்து நாம் மீண்டும் பாடசாலைகளை ஆரம்பிப்போம் என்பதே எமது
நிலைப்பாடு. மாணவர்களின் பாதுகாப்பு உறுதிசெய்யப்பட்ட பின்னரே பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கபடும் என்று கல்வி அமைச்சர் டலஸ் அளகப்பெரு மேலும் தெரிவித்தார்.
கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 1278 ஆக அதிகரிப்பு
கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 1278 ஆக அதிகரிப்பு
இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான நோயாளர்களின் எண்ணிக்கை 1278 ஆக அதிகரித்துள்ளது..
இன்றைய தினத்தில் இதுவரையில் பதிவான கொரோனா தொற்று புதிய நோயாளர்களின்; எண்ணிக்கை 96ஆகும்.
இந்த நோயாளர்களில் 88 பேர் குவைட் நாட்டிலிருந்து வந்த பின்னர் மின்னேரியா மற்றும் திருகோணமலை தனிமைப்படுத்தல் மத்திய
நிலையங்களில் தனிமைப்படுத்தலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளவர்கள். ஏனைய
8 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டடுள்ள கடற்படை அங்கத்தவர்களாவர்.
இதற்கமைவாக இலங்கையில் பதிவான கொரோனா தொற்றுக்குள்ளான
மொத்த நோயாளர்களின் எண்ணிக்கை 1278 ஆகும் என்று அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்தள்ளது.
குவைத்திலிருந்து இலங்கை தந்த 90 பேருக்கு கொரோனா.
குவைத்திலிருந்து இலங்கை தந்த 90 பேருக்கு கொரோனா.
குவைத் நாட்டிலிருந்து வருகை தந்த 90 பேர் இதுவரையில் கொரோனா
வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை இனம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்திலிருந்து வெளி மாவட்டங்களுக்கான பஸ் சேவைகள் ஆரம்பம்
யாழ்ப்பாணத்திலிருந்து வெளி மாவட்டங்களுக்கான பஸ் சேவைகள் ஆரம்பம்
யாழ்ப்பாணத்திலிருந்து வெளி மாவட்டங்களுக்கான பஸ் சேவைகள் இன்றைய தினம் ஆரம்பிக்கப்பட்டது
கொழும்பு, கம்பஹா மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்து சேவை இன்றைய தினம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மத்திய பேருந்து
நிலையத்திலிருந்து இலங்கை போக்குவரத்துச் சபையினர் பஸ் சேவைகள் அக்கரைப்பற்று, கண்டி, திருகோணமலை ஆகிய மாவட்டங்களுக்கான பஸ் சேவையை ஆரம்பித்துள்ளனர்.
இன்று அதிகாலையில் இருந்து வெளி மாவட்டங்களுக்கான சேவைகள் மட்டுப்படுத்தப்பட்ட அளவில்
ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் கொழும்புக்கான சேவை நீர்கொழும்பு வரைக்கும் இடம்பெறுவதாக யாழ் மத்திய பேருந்து நிலைய பொறுப்பதிகாரி தனராஜ் தெரிவித்தார்.
இன்றைய தினம் ஆரம்பிக்கப்பட்டுள்ள குறித்த சேவையானது ஒவ்வொரு பிரதேசங்களுக்கும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பஸ் சேவை இடம்பெறவுள்ளதாகவும் எனினும் இது காலப்போக்கில்
அதிகரிப்பதற்குரிய சாத்தியக் கூறுகள் காணப்படுவதாகவும் எனினும் பஸ் சேவையினை பெற்றுக் கொள்ளும் பொதுமக்கள் சுகாதார திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள சுகாதார
நடைமுறைகளை பின்பற்றி தங்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
நாட்டில் கொரானா தொற்றுநோய் தாக்கத்தினை கட்டுப்படுத்தும் முகமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்குச் சட்டம்
அமுல்படுத்தப்பட்டதன் காரணமாக மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்து தடைபட்டு வந்த நிலையில் இன்றைய தினம் நாடு
பூராகவும் ஊரடங்கு சட்டம் தளர்த்ப்பட்டுள்ள நிலையில் மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்து சேவைகள் யாவும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
உள்ளூர் சேவையில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்து பஸ் சேவைகளையும் அதிகரிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொதுமக்களின் போக்குவரத்தினை இலகுபடுத்தும் முகமாக உள்ளூர் சேவைகள் அதிகரிக்கப்பட வுள்ளன..
இன்றைய தினம் தனியார் போக்குவரத்து சேவைகளும் வழமைபோல் இடம்பெற்று வருகின்றது எனினும் வெளி மாவட்டங்களுக்கான தனியார் பஸ்சேவைகள்
ஆரம்பிக்கப்படவில்லை அதாவது வடக்கு மாகாணத்துக்குட்பட்ட மாவட்டங்களுக்கு மட்டுமே தனியார் போக்குவரத்து சேவை இன்று இடம்பெற்று வருகின்றது.
தீயில் எரிந்த மூன்று கடைகள் – கண்ணீரில் முதலாளிகள்
தீயில் எரிந்த மூன்று கடைகள் – கண்ணீரில் முதலாளிகள்
இலங்கை அம்பாலங்கோடை பகுதியில் உள்ள மூன்று கடைகள் திடீரென
தீயில் எரிந்து நாசமாகின ,இந்த தீவிபத்தால் கடைகள் முற்றாக எரிந்து அழிந்துள்ளன
இந்த தீ விபத்து எவ்வாறு பரவியது என்பது தொடர்பில் தெரியவரவில்லை விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது
19 சிங்கள கடற்படையினர் கொரனோவில் இருந்து விடுதலை
19 சிங்கள கடற்படையினர் கொரனோவில் இருந்து விடுதலை
19 கடற்படை வீரர்கள் பூரணமாக குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வெளியேறி உள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
அதன்படி இதுவரையில் 332 கடற்படை வீரர்கள் பூரணமாக குணமடைந்து
வைத்தியசாலையில் இருந்து வெளியேறி உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
தேர்தல் திகதிக்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணை ஆரம்பம்
தேர்தல் திகதிக்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணை ஆரம்பம்
ஜூன் மாதம் 20 ஆம் திகதி பொதுத் தேர்தலை நடாத்துவதற்கு தேர்தல்
ஆணைக்குழுவால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு
உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான ஆறாவது நாள் விசாரணை உயர் நீதிமன்றத்தில் ஆரம்பமாகியுள்ளது
கொரோனா – உயிரிழந்தோரின் எண்ணிக்கை பத்தாக அதிகரிப்பு
கொரோனா – உயிரிழந்தோரின் எண்ணிக்கை பத்தாக அதிகரிப்பு
இலங்கையில் கொரோனா வைரசு தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை பத்தாக அதிகரித்துள்ளது.
குவைத்தில் இருந்து வந்த பின்னர் திருகோணமலை தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் இருந்த பெண் இன்று
உயிரிழந்ததையடுத்தே கொரோனா வைரசு தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை பத்தாக அதிகரித்துள்ளது.
குவைத்தில் இருந்து வந்த பின்னர் திருகோணமலை தனிமைப்
படுத்தல் மத்திய நிலையத்தில் இருந்த 51 வயது பெண் திடீரென உயிரிழந்துள்ளார்.
இந்தப்பெண் கொரோனா வைரசு தொற்றுக்குள்ளான நோயாளர் என்ற ரீதியில் உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதார சேவைகள்
பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க குறிப்பிடார்.
சமூக இடைவெளி விதிமுறைகளை மீறுவோர் நாளை முதல் கைது – பொலிஸ் எச்சரிக்கை
சமூக இடைவெளி விதிமுறைகளை மீறுவோர் நாளை முதல் கைது – பொலிஸ் எச்சரிக்கை
நாளைய தினம் நாடுமுழுவதிலும் ஊரடங்கு சட்டம் பகல் வேளையில் தளர்த்தப்படுகிறது.
இக்காலப்பகுதிக்குள் ஊரடங்கு சட்டம் அமுலில் இல்லாத போதிலும் சமூக இடைவெளியை கடைபிடிக்கத் தவறுவோருக்கு எதிராக சட்ட
நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண இன்று நாட்டு மக்களுக்கு அறிவித்தார் .
ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படட போதிலும் அத்தியாவசிய தேவைகளுக்கும் நிறுவனங்களில் கடமையாற்றுவோர் தவிர்ந்த
ஏனையோர் வீடுகளிலேயே இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
2 மாதங்களுக்கு மேலதிகமாக ஊரடங்கு சட்டத்திற்குட்பட்டிருந்த மக்கள் அதற்கு முன்னர் எவ்வாறு செயற்பட்டிருந்தார்களோ
தற்பொழுது கொரோனா வைரசு தொற்ற தடுப்பிற்கு மத்தியில் அவ்வாறு செயற்பட கூடாதென்றும் அவர் அறிவுறுத்தினார்.
ஊரடங்கு சட்டத்தைப் போன்று கொரோனா தொற்று தடுப்பு சட்ட விதிகளுக்கு அமைவாக சுகாதார அமைச்சிற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு உட்பட்டவகையில் சமூவிதிகளை மீறுவோருக்கு
எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்வதற்கு பொலிஸாருக்கு அதிகாரமுண்டு. குற்றவியல் சட்டத்திற்கு சமமான வகையில் இந்த சட்ட விதிகளும் அமைந்திருப்பதாக தெரிவித்த அவர் சுகாதார
சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்கவினால் பொலிஸாருக்கு அதிகாரம் வழங்கும் வகையிலான விசேட சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட முதலாவது நபர் கடந்த மார்ச் மாதம் 11ஆம் திகதி அடையாளங் காணப்பட்டார். அதன் பின்னர் 18ஆம் திகதியும் இவ்வாறானோர் அடையாளங்
காணப்பட்டனர். புத்தளம், கொச்சிகடை உள்ளிட்ட பொலிஸ் பிரதேசங்களுக்கு ஆரம்பத்தில் தொற்று நோய் தடுப்புக்கான பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டு பின்னர்
படிப்படியாக நாடு முழுவதிலும் கொரோனா வைரசை தடுப்பதற்காக விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் சமூக இடைவெளியை பேணாதவர்களுக்கு எதிராக விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. சிவில் உடையில் பொலிஸாரை
கடமையில் நாம் இதற்காக ஈடுபடுத்தவுள்ளோம். சமூக இடைவெளியை கடைபிடிக்காதவரை கைது செய்வதற்காக இந்த நடவடிக்கை சிவில் உடையிலுள்ள பொலிஸார் இவர்களை
அடையாளங் காணும் பொழுது அந்த இடத்திற்கு பொலிஸார் விரைவார்கள். காணொளி போன்ற நவீன தொழில் நுட்பத்தை
பயன்படுத்தி இவ்வாறானோரை அடையாளங் காண்பதற்கும் நாம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம் என்றும் அவர் கூறினார்
கொழும்பு , கம்பஹா உள்ளிட்ட மாவட்டங்களில் இந்த ஊரடங்கு சட்டம் நீண்டகாலம் அமுலில் இருந்தது, இருப்பினும் கடந்த 2 வாரக் காலப்பகுதிகளில் நடைமுறையில் தளர்வு ஏற்படுத்தப்பட்டு
பொதமக்களின் செயற்பாடுகள் கவனத்தில் கொள்ளப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
அத்தியாவசிய தேவைகளுக்கு மாத்திரமே இந்த மாவட்டங்களில் பொதுமக்களுக்கு அனுமதியளிகக்கப்படுகின்றது.
ஊரடங்கு சட்டத்தை மீறிய சுமார் 65, 000 பேர் கைது
செய்யப்பட்டனர். 18 000 வாகனங்கள் கைப்பற்றப்பட்டன.. சுமார் 30, 000 பேர் தனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட்டதுடன் அதனை மீறி
செயல்பட்ட 7000 பேருக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் கூறினார்.
கொரோனா வைரசு தொற்றை தடுப்பதற்காக ஜனாதிபதி , பிரதமர், இராணுவ தளபதி, சுகாதார பிரிவினர், பொலிஸ் மா அதிபர் ஆகியோர் மேற்கொண்ட திட்டமிட்ட நடவடிக்கையின் காரணமாக
குறிப்பிடத்தக்க முன்னோட்டத்தை கண்டுள்ளோம். உலக நாடுகளில் இந்த தொற்று தீவிரம் அடைந்துள்ளது. இருப்பினும் நாம் எமது நடவடிக்கையின் மூலம் வெற்றிகரமான பெறுபேறுகளை
கண்டுள்ளோம். இதற்கு மக்களின் அர்ப்பணிப்பு முக்கியமாக அமைந்தது. இந்த வெற்றியை நாம் தொடர்ந்து தக்க வைத்துக்
கொள்ள வேண்டும். இதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் என்றும் அவர் தெரிவித்தார்.
உடல் பயிற்சி நிலையங்கள், ஸ்பா மற்றும் திரையரங்குகளை மீளத்திறக்க அனுமதிவழங்கப்படவில்லை சிகையலங்கார
நிலையங்கள் மற்றும் அழகு நிலையங்களில் சுகாதார ஆலோசனைகளைப் பின்பற்றுவது அவசியம் என்றும் கூறினார்.
கொழும்பு மாவட்டத்திலேயே பொருளாதாரத்திற்கான வர்த்தக நிலையங்கள், விமான நிலையம் உள்ளிட்ட பலவகையுண்டு..
இங்கு ஊரடங்கு தற்பொழுது இல்லை எனவே பொதுமக்கள் பின்வரும் விடயங்களில் கவனம் செலுத்துவது முக்கியமானதாகும்.
1.சுயதொழிலில் ஈடுபடுவோர் நிறுவனங்களில் பணியாற்றுவோர் அத்தியாவசிய தேவைகளை கொண்டுள்ளோர் தவிர்ந்த ஏனையோர் வீடுகளில் இருப்பது மிகவும் முக்கியமானதாகும்.
- சமூக இடைவெளி இதற்க மிகவும் முக்கியமானதாகும். இதனை கருத்தில் கொண்டு அனைவரும் செயல்பட வேண்டும்.
சுமார் 2 மாதங்கள் மற்றும் 2 வாரங்களிற்கு பின்னர் தமது நிறவனங்களுக்கு பணிக்காக வருவோர் கைலாகு கொடுத்து மகிழ்வது வழமை இது தவிர்க்க்பபட வேண்டும். எமது
பாரம்பரியத்திற்கு அமைவாக வணக்கம் தெரிவித்து வரவேற்பது பொருத்தமாகும், கைலாகு கொடுப்பது கட்டி அரவணைப்பதன்
மூலம் கொரோனா தொற்று பரவுவதற்கு ஏதுவாக அமையும். இந்த பழக்க வழக்கங்களை தவிர்த்துக்கொள்ள வேண்டும்.
இருமல் தும்மலைக் கொண்டிருப்பவர்கள் அடையாளங் காணப்பட்டால் அவர்கள் தொடர்பில் நிறுவனம் அல்லது ஊழியர்கள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்
. இது குறித்து சுகாதார பிரிவிற்கு அறிவித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அனைவரும் முகக்கவசம் அணிவது முக்கியமானதாகும். நுகர்வோர் நிறுவனங்களில் கடந்த
காலங்களில் சமூக இடைவெளி கடைபிடிக்கப்படவில்லை. நாம் கவனத்தில் கொண்டோம். தொடர்ந்தும் நிறுவனங்கள் இவ்வாறு
செயற்படுமாயின் நிறுவனத்தின் உரிமையாளர் அல்லது முகாமையாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கெர்ளப்படும்.
ஹோட்டல்களை திறப்பது தொடர்பில் இன்னும் இறுதி முடிவு எட்டப்படவில்லை. சமைத்த உணவை
பரிமாறுவோருக்கும்,,பெட்டிகடைகளைத் திறப்பதற்கும் அனுமதி வழங்கப்படவில்லை. இத்தொழிற்துறையினருக்கு எதிராக நாம் செயல்படவில்லை. இதில் சுகாதார நடைமுறைகள்
முன்னெடுக்கப்பட வேண்டியுள்ளது. அதற்காக இவர்கள் காத்திருக்க வேண்டும் என்றும் பிரதி பொலிஸ் மா அதிபர் கூறினார்.
.இரவு நேர ஊரடங்கு சட்டத்தின் போது கொழும்பு, கம்பஹா மாவட்டங்களில் ஊரடங்கு விதிமுறைகளின் கீழ் பொலிஸார்
செயற்படுவர். ஏனைய மாவட்டங்களிலும் பொலிஸார் செயற்படுவர் என்றும் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண மேலும் தெரிவித்தார்.
கடைகளை உடைத்து பணத்தை திருடி சென்ற கொள்ளை கும்பல்
கடைகளை உடைத்து பணத்தை திருடி சென்ற கொள்ளை கும்பல்
இலங்கை கட்டன் நுவரெலியா பகுதியிகள் அதிகாலை வேளை கடைகள் இரண்டுக்கும் நுழைந்த திருடர்கள்
அங்கிருந்த பணம் ,மற்றும் சிகரட் ,விலை உயர்ந்த பொருட்களை திருடி கொண்டு தப்பி சென்றுள்ளனர்
அங்கு பொறுத்த பட்டிருந்த கமராவில் பதிய பெற்ற காடசிகளை வைத்து
அவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்

யாழில் புயலில் வீடுகளை இழந்தவர்களுக்கு நஷ்ட்ட ஈடு – அரசு அறிவிப்பு
யாழில் புயலில் வீடுகளை இழந்தவர்களுக்கு நஷ்ட்ட ஈடு – அரசு அறிவிப்பு
யாழ்ப்பாணத்தில் கடந்த நாட்களில் வீசிய கடுமையான காற்றின் காரணமாக வீடுகள் சேதமடைந்தோருக்கு நஷ்டஈடு
வழங்கப்படவுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் தெரிவித்தார்.
மாவட்டத்தின் தற்போதைய நிலைமைகள் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இது தொடர்பாக மேலும் கூறுகையில், 21ஆம்
திகதியில் இருந்து சற்று காற்று அதிகரித்து காணப்பட்டது. புயல் அபாயத்தை தொடர்ந்து காற்று மணிக்கு 60 கிலோ மீற்றர்
வேகத்தில் வீசியதன் காரணமாக நாட்டில் பல்வேறு பகுதிகளில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
குறிப்பாக யாழ்ப்பாண மாவட்டத்தில் சுமார் 79 வீடுகள் சேதமடைந்துள்ளன. அதில் ஒரு வீடு முழுமையாகவும் மிகுதி 78 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்திருக்கிறது. அதேபோல் 204
குடும்பங்களைச் சேர்ந்த 658 பேர் 3 நாள் வீசிய காற்றின் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். கைதடி கலைவாணி வித்தியாலய பாடசாலை கட்டடம் ஒன்றும்
சேதத்திற்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தெல்லிப்பளை பகுதியில் மரம் ஒன்று முறிந்து விழுந்து ஒரு
பெண்மணி காயமடைந்து சிகிச்சை பெற்றுவருகிறார். சிறு முயற்சியாளர்களுடைய தொழில்கள் பாதிப்படைந்துள்ளன.
ஊர்காவற்றுறை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் காற்றின் காரணமாக மரம் ஒன்று முறிந்து விழுந்து அவரது படகு சேதமடைந்துள்ளது. கோப்பாய் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட
பகுதியில் அதிகளவில் வாழை செய்கை மற்றும் பப்பாசி செய்கைகள் பாதிப்படைந்துள்ளன. எனினும் வீடுகள்
பாதிப்படைந்த அனைவருக்கும் நஷ்ட ஈடு வழங்குவதற்கான முயற்சிகள் மாவட்ட செயலகத்தினால் முன்னெடுக்கப்பட்டு
வருகின்றது. தொழில் முயற்சி பாதிக்கப்பட்ட சிறு முயற்சியாளர்களுக்கும் நஷ்டஈடு வழங்குவதற்குரிய முயற்சிகள் மாவட்ட செயலகத்தால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
காற்றின் பாதிப்பு தொடர்பான அறிக்கையினை உள்நாட்டு அலுவல்கள் அமைச்சுக்கு அனுப்பியுள்ளோம். அத்தோடு தொழில்
முயற்சியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மேலும் ஏதாவது உதவிகள் வழங்க முடியுமா எனவும் நாம் ஆராய்ந்து வருகின்றோம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
புலிகளை அழித்தவர்களால் மட்டுமே நாட்டின் பொருளாதரத்தை கட்டி எழுப்ப முடியும் மகிந்த திமிர் பேச்சு
புலிகளை அழித்தவர்களால் மட்டுமே நாட்டின் பொருளாதரத்தை கட்டி எழுப்ப முடியும் மகிந்த திமிர் பேச்சு
முக்கியமான இந்த காலகட்டத்தில் நாட்டின் பொருளாதாரம் மற்றும் பிள்ளைகளின் சிறந்த எதிர்காலம் தொடர்பில் மக்கள் சிந்தித்து
செயல்படுவது அவசியமென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
யுத்தத்தை வெற்றிகொண்ட தரப்பினராலேயே நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பி சிறந்த எதிர்காலத்தை உருவாக்க முடியுமென்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார். நல்லாட்சி,
ஈஸ்டர் பயங்கரவாதத் தாக்குதல் மற்றும் கொரோனா வைரஸிற்குப் பின்னரான இலங்கை என்ற தொனிப்பொருளில் பிரதமர் நேற்று
வெளியிட்டுள்ள அறிக்கையொன்றிலேயே இதனை குறிப்பிட்டுள்ளார்.
அது தொடர்பில் பிரதமர் மேலும் தெரிவித்துள்ளதாவது, சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கைக்கு இணங்க 2014ஆம் ஆண்டில் இலங்கையே ஆசியாவில் அபிவிருத்தியில் முன்னணி மிக்க நாடாக
திகழ்ந்தது. 2006−2009 யுத்த காலப்பகுதியில் வருடாந்தம் 6 சதவீதமாக இருந்த பொருளாதார வளர்ச்சி வேகம் யுத்தத்திற்குப்
பின்னர் 2010−2014 ஆண்டு காலகட்டத்தில் 7.4 சதவீதமாக அதிகரித்தது.
2005 ஆம் ஆண்டு தேசிய உற்பத்திக்கு சமமாக 90 சதவீதமாக இருந்த முழு கடன் 2014 இறுதியில் 75 சதவீதமாக குறைவடைந்தது. பங்குச்சந்தையின் விலைச்சுட்டு 2005 இல் 1,922 ஆக இருந்ததுடன்
அது 2014 இறுதியில் 7,299 ஆக அதிகரித்திருந்தது. 2005 இல் 1,242 அமெரிக்க டொலராக இருந்த தனிநபர் வருமானம் 2014 ஆம் ஆண்டின் இறுதிப்பகுதியில் 3819 அமெரிக்கடொலர் என
மும்மடங்காக அதிகரித்தது. நாடு சுதந்திரமடைந்த பின்னர் பாரிய உட்கட்டமைப்பு நிர்மாண வேலைத்திட்டங்கள் 2006−2014 கால கட்டத்திலேயே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த அனைத்து பொருளாதார வெற்றிகளையும் நாம் 2007 உலக உணவு நெருக்கடி நிலமையிலேயே அடைந்துள்ளோம். 2008−2009 உலக நிதி நெருக்கடியும் உலக வரலாற்றிலேயே பாரிய எரிபொருள்
விலை அதிகரிப்பும் ஏற்பட்டன. 2006−2009 காலப்பகுதிகளில் உலகச் சந்தையில் எரிபொருள் பெரல் ஒன்றின் விலை 74 அமெரிக்க
டொலராக இருந்த நிலையில் 2010−2014 காலகட்டங்களில் அது 103 டொலராக அதிகரித்தது.
2015 ஜனவரியில் அவை அனைத்தும் தலைகீழாக மாறியது. அந்த ஆண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி வேகம் ஐந்து சதவீதமாக குறைவடைந்ததுடன் அதற்கு அடுத்த வருடங்களில் அப்படியே
குறைந்து கடந்த வருடத்தில் அது 2.3 வீதமாக குறைவடைந்தது. ரூபாவின் பெறுமதிக்கு இணங்க அமெரிக்க டொலர் ஒன்றின் விலை 2014ஆம் ஆண்டு 130 ரூபாவாக இருந்த நிலையில் 2019 அக்டோபர்
மாதம் அது 181 ஆக அதிகரித்தது. நாட்டின் மொத்த கடன் சுமை 2014 இறுதியில் 7.39 ட்ரில்லியன் ரூபாவாக இருந்த நிலையில் 2019
அக்டோபர் மாதத்தில் அது 12.89 ட்ரில்லியனாக 74.4 விதமாக அதிகரித்துள்ளது.
2015 ஜனவரியிலிருந்து 2019 அக்டோபர் வரையிலான காலகட்டத்தில் நல்லாட்சி அரசாங்கம் ‘ சவரின் பொன்ட்’ அபிவிருத்தி பிணைமுறி, சிண்டிகேடட் லோன், கரன்சி ஸ்வோப் என
நிதி நிறுவனங்களில் 26 பில்லியன் அமெரிக்க டொலர்களை வெளிநாட்டு கடனாக பெற்றிருந்தது. நல்லாட்சி அரசாங்கம்
இந்தளவு கடன்களை பெற்றிருந்த நிலையில் எந்தவொரு வருமான மார்க்கத்தையும் உருவாக்கவில்லை. 2014ஆம் ஆண்டு
இறுதிப்பகுதியில் 7,299 ஆக இருந்த பங்குச் சந்தையின் பொது விலைச்சுட்டு 2019 அக்டோபர் மாதமளவில் 5,990 வரை குறைவடைந்தது.
இந்தளவு பொருளாதார வீழ்ச்சி 2015−2019 காலகட்டங்களில் இடம்பெற்றதுடன் அக்காலத்தில் மசகு எண்ணை பெரல் ஒன்றின் விலை 60 அமெரிக்க டொலராக வரலாற்றிலேயே மிகக் குறைந்த விலையில் காணப்பட்டுள்ளது. நல்லாட்சி அரசாங்கத்தில் இந்தளவு பொருளாதாரம் வீழ்ச்சி அடைவதற்கு எந்தவித வெளிக் காரணங்களும் கிடையாது. இந்த 2015−2019 காலகட்டங்களில் இந்தியா, பங்காளதேஷ் போன்ற நாடுகள் வேகமான வளர்ச்சியை கண்டன.
அதேவேளை 2019 ஏப்ரல் குண்டுவெடிப்பு காரணமாக ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மீளவில்லை. அந்த வகையில் 2019 நவம்பர் 16ஆம் திகதியில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு
பொருளாதாரம் முழுமையாக சீர்குலைக்கப்பட்டு இருந்த நாட்டையே பொறுப்பேற்க வேண்டியிருந்தது. இத்தகைய சூழ்நிலையிலேயே கொரோனா வைரஸ் தாக்கம் முழு உலகினதும்
பொருளாதாரத்தை வீழ்ச்சியடையச் செய்துள்ளது. இந்த சூழ்நிலையானது 1930 காலகட்டங்களில் நிலவிய மிக மோசமான
பொருளாதார நிலமைக்கு ஒப்பானதாக அமையலாமென எதிர்வு கூறப்படுகிறது.
இந்தநிலையில் முழு உலகமும் பொருளாதார வீழ்ச்சி மற்றும்
வேலையில்லாத் திண்டாட்டத்திற்கு முகம் கொடுக்க வேண்டியுள்ள நிலையில் இலங்கையர்கள் சௌபாக்கியம் தேடி வெளிநாட்டுக்குச் செல்வதும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இத்தகைய சூழ்நிலையில்
நாட்டை மீளக் கட்டியெழுப்புவதே எமது மாற்று வழியாகும். இதில் கொண்டுள்ள இந்த அச்சுறுத்தலிலிருந்து நாட்டை கட்டியெழுப்ப
நாம் ஒன்றிணைந்து செயற்படாவிட்டால் நாட்டின் எதிர்காலம் இருள் மிக்கதாகிவிடும்.
அண்மையில் ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி ஜயசுந்தர தமது சம்பளத்தில் கணிசமான அளவை அன்பளிப்பு செய்துள்ளதுடன் அரசாங்க ஊழியர்களிடம் அது தொடர்பில் அவர் வேண்டுகோள்
விடுத்தபோது எதிர்க்கட்சி அதனை விமர்சனமாக முன்னெடுத்தது. சுயமாக தமது சம்பளத்திலிருந்து ஒரு பகுதியை வழங்க முடியுமா என அவர் வேண்டுகோள் விடுத்த போதும் அதனை சரியாக புரிந்து
கொண்டிருந்த நிலையிலும் எதிர்க்கட்சியினர் கட்டாயமாக சம்பளத்தில் ஒரு தொகை வெட்டப்படுமென பிரச்சாரங்களை மேற்கொண்டனர்.
பீ.பி ஜயசுந்தர 2006−2014 காலப்பகுதியில் நாட்டின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகித்த அரச அதிகாரியாவார். அத்தகைய திறமையான அதிகாரி மீது சேறு பூசி நாட்டின்
பொருளாதார எழுச்சி வேலைத்திட்டத்தை முழுமையாக சிதைப்பதே எதிர்க்கட்சியின் நோக்கம் என்பது இதிலிருந்து தெளிவாகிறது. எனவே சேறு பூசுதல் மற்றும் பொய் பிரசாரங்களை
மேற்கொள்ளும் நல்லாட்சி அரசியல் கலாசாரத்திற்கு உலகின் தற்போதைய கொரோனா அச்சுறுத்தல் நிலையில் இந்த இடமும் கிடைக்கப்போவதில்லையென்பது எனக்கு தெரியும்.
எதிர்காலத்தில் எதிர்கொள்ள நேரும் உலக நிலைமைகளின் கீழ் இலங்கையின் பொருளாதாரம் மற்றும் எமது பிள்ளைகளின் எதிர்காலம் ஆகியவை நாட்டை ஆட்சி செய்யும் திறமை
படைத்தவர்களின் செயற்பாடுகளிலேயே தங்கியுள்ளது. ஜேர்மன் சிறந்த பலமிக்க பொருளாதாரத்தை கொண்டிருந்த வேளையிலேயே கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை எதிர்கொள்ள
நேர்ந்ததால் அதனை வெற்றிகரமாக எதிர்கொள்ள முடிந்ததென ஜேர்மன் உயர்ஸ்தானிகர் எஞ்சலா மேர்க்கெல் தெரிவித்துள்ளார்.
எனினும் இலங்கை அதற்கு மாறான ஒரு நிலையிலேயே இந்த வைரஸ் தாக்கத்தை எதிர்கொள்ள நேர்ந்துள்ளது.
இந்த முக்கியமான தருணத்தில் இலங்கையில் அனைத்து பிரஜைகளும் நிலைமை தொடர்பு சரியாக சிந்தித்து மிகவும் பொருத்தமானவர்களை தெரிவு செய்வது அவசியமாகும்.
கொரோனா வைரஸ் நாட்டை பாதித்துள்ள நிலையில் நாட்டை நல்லாட்சி அரசாங்கம் ஆட்சியில் செய்திருந்தால் எதிர்கொள்ள நேரும் விளைவை நான் கூற வேண்டியதில்லை. தற்போது நாட்டை
ஆட்சி செய்யும் ஜனாதிபதியும் ஏனையவர்களும் யுத்தத்தை வெற்றி கொண்டவர்கள். பாரிய சவால்களுக்கு மத்தியில் சுதந்திரத்தின்
பின் நாட்டை பாரிய பொருளாதாரத்தில் கட்டியெழுப்பிய குழுவினராகும்.
கொரோனா வைரஸ் தாக்கத்தின் பின்னர் இலங்கையை உலகின் முன்னணி நாடாக முன்னேற்றுவது அத்தகைய தலைவர்கள்தான் என்றும் பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தை பெற்ற பெண்
ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தை பெற்ற பெண்
இலங்கை அனுராதபுரத்தில் ஒரே பிரசவத்தில் மூன்று பெண் குழந்தயை இளம் பெண் ஒருவர் பெற்றுள்ளார்
சிங்கள கடற்படை இராணுவ சிப்பாயாக உள்ளவரின் மனைவியே இவ்வாறு குழந்தையை பிரசவித்துள்ளார்
எனினும் பிறந்த சிசுக்களை கணவன் பார்க்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது
,தற்போது இவர் தனிமை படுத்தல் முகாமில் சிறை வைக்க பட்டுள்ள நிலையில் காணொளி வாயிலாக தனது சிசுக்களை பார்வையிட்டு நெகிழ்ந்துள்ளார்
திருமண வைபவங்கள் 100 பேருக்கு மேல் கலந்து கொள்ள தடை
திருமண வைபவங்கள் 100 பேருக்கு மேல் கலந்து கொள்ள தடை
திருமண வைபவங்களை ஏற்பாடு செய்யும் பொழுது அதற்கென திருமணம்
நடைபெறும் பிரதேசத்திலுள்ள சுகாதார வைத்திய அதிகாரியின் அனுமதியை பெறவேண்டும்.
திருமண வைபவத்தில் கலந்துகொள்வோரின் எண்ணிக்கை Invitees 100 பேருக்கு வரையறுக்கப்பட வேண்டும் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
திருமண வைபவம் மற்றும் அனைத்து வைபவங்களும் சுகாதார அமைச்சின் மூலம் வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டலுக்கு
அமைவாகவே நடைபெற வேண்டும் என்று சுகாதார அமைசசின் சுற்றுச்சூழல் சுகாதாரம், தொழில்சார் சுகாதாரம் மற்றும் உணவு
பாதுகாப்பு பிரதி பணிப்பாளர் நாயகம் வைத்தியர் லக்ஷ்மன் கம்லத் தெரிவித்துள்ளார்.
வைபவங்களின் போது முககவசம் அணிவதும் அவசியம் என்றும் அவர் தெரிவித்தார்.

இலங்கையில் 64,387 பேர் காவல்துறையால் அதிரடி கைது
இலங்கையில் 64,387 பேர் காவல்துறையால் அதிரடி கைது
இலங்கையில் ஊரடங்கு சட்டத்தை மீறி வீழ்த்தியில் உலாவிய சுமார் 64,387
பேரை தாம் கைதுசெய்துள்ளதாக இலங்கை காவத்துறையினர் தெரிவித்துள்ளனர
அத்துமீறி உலாவிய நபர்களுக்கு தண்டப்பணம் அறவிட பட்டுள்ளதுடன் ,
அவர்கள் பயணித்த வாகனங்களும் பறிமுதல் செய்ய பட்டுள்ளன
மேலும் பிறிதொரு சுற்றிவளைப்பில் 345 பேர் கைது செய்ய பட்டுள்ளனர்
கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 1117 ஆக உயர்வு
கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 1117 ஆக உயர்வு
இலங்கையில் பதிவான கொரோனா நோயாளர்களின் மொத்த எண்ணிக்கை 1117.
இந்த நோயாளர்களில் 674 பேர் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.
இன்றைய தினத்தில் இதுவரையில் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்ட பதிய நோயாளர்களின் எண்ணிக்கை 28 ஆகும்.
இந்த நோயாளர்களில் ஜவர் குவைட் நாட்டில் இருந்து வற்து திருக்கோணமலை தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள நபர்களாவர்.
ஏனைய 23 பேரும் குவைட்டில் இருந்து வந்த பிளனர் மின்னேரிய தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளவர்கள்.
இதேபோன்று இதுவரையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த நோயாளர்களில் 434 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
நேற்றைய தினத்தில் (2020.05.23) மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனைகளின் எண்ணிக்கை 1998 ஆவதுடன் இத்தினத்தில்
அடையாளங்காணப்பட்ட நோயாளர்களின் எண்ணிக்கை 21 ஆகும் என்று அரசாங்க தகவல் திணைக்களம் இன்று மாலை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது






