கொரோனா – உயிரிழந்தோரின் எண்ணிக்கை பத்தாக அதிகரிப்பு
இலங்கையில் கொரோனா வைரசு தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை பத்தாக அதிகரித்துள்ளது.
குவைத்தில் இருந்து வந்த பின்னர் திருகோணமலை தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் இருந்த பெண் இன்று
உயிரிழந்ததையடுத்தே கொரோனா வைரசு தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை பத்தாக அதிகரித்துள்ளது.
குவைத்தில் இருந்து வந்த பின்னர் திருகோணமலை தனிமைப்
படுத்தல் மத்திய நிலையத்தில் இருந்த 51 வயது பெண் திடீரென உயிரிழந்துள்ளார்.
இந்தப்பெண் கொரோனா வைரசு தொற்றுக்குள்ளான நோயாளர் என்ற ரீதியில் உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதார சேவைகள்
பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க குறிப்பிடார்.