Posted in இலங்கை செய்திகள்

2020 பொதுத் தேர்தலில் வடக்கு, கிழக்கில் 20 இலட்சத்து 71 ஆயிரத்து 527 பேர் வாக்களிக்க தகுதி

2020 பொதுத் தேர்தலில் வடக்கு, கிழக்கில் 20 இலட்சத்து 71 ஆயிரத்து 527 பேர் வாக்களிக்க தகுதி

பாராளுமன்ற தேர்தலில் இம்முறை வடக்கு மற்றும் கிழக்கில் 20 இலட்சத்து 71 ஆயிரத்து 527 பேர் வாக்களிக்கத் தகுதிபெற்றுள்ளனர்.

இதற்கமைய கிழக்கு மாகாணத்தில் 12 இலட்சத்து 12 ஆயிரத்து 655 பேரும், வடக்கு மாகாணத்தில் 8 இலட்சத்து 58 ஆயிரத்து 872 பேரும் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

வடக்கு, கிழக்கில் 29 பாராளுமன்ற ஆசனங்களுக்காக 85 அரசியல் கட்சிகள் 112 சுயேச்சைக் குழுக்கள் சார்பாக 1,768 வேட்பாளர்கள்

போட்டியிடுகின்றனர். வடக்கில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 07 ஆசனங்களுக்காக 19 அரசியல் கட்சிகள், 14 சுயேச்சைக் குழுக்கள் சார்பாக 330 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். வன்னி

மாவட்டத்தில் 06 ஆசனங்களுக்காக 17 அரசியல் கட்சிகள், 28 சுயேச்சைக் குழுக்களின் சார்பாக 304 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

கிழக்கில் 16 பாராளுமன்ற பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்காக 1033 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் உள்ளனர். இதில் 49 அரசியல் கட்சிகளும் 70 சுயோட்சைக் குழுக்களும் உள்ளடங்குகின்றன.

இதற்கமைய மட்டக்களப்பு மாவட்டத்தில் 05 ஆசனங்களுக்காக 16 அரசியல் கட்சிகள், 22 சுயேச்சைக் குழுக்கள் சார்பாக 304 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

இதேபோன்று திகாமடுல்ல மாவட்டத்தில் 07 ஆசனங்களுக்காக 20 அரசியல் கட்சிகள், 34 சுயேச்சைக் குழுக்களின் சார்பாக 540 பேர் போட்டியிடுகின்றனர். திருகோணமலை மாவட்டத்தில் 4

ஆசனங்களுக்காக 13 அரசியல் கட்சிகள், 14 சுயேச்சைக் குழுக்களின் சார்பாக 189 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இம்முறை கொரோனா வைரஸ் காரணமாக வாக்களிக்கச்

செல்பவர்கள் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றியே வாக்களிக்கவுள்ளனர். வாக்காளர்கள் வாக்களிப்பு

நிலையங்களுக்கு சிறுவர்களை அழைத்து வருவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

      Posted in இலங்கை செய்திகள்

      வாக்கு பெட்டிகளை வாக்களிப்பு நிலையங்களுக்கு எடுத்துச் செல்லும் பணி ஆரம்பம்

      வாக்கு பெட்டிகளை வாக்களிப்பு நிலையங்களுக்கு எடுத்துச் செல்லும் பணி ஆரம்பம்

      நாளை (5) நடைபெறவுள்ள பாராளுமன்ற பொது தேர்தலுக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டிருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

      மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலக பொறுப்பில் உள்ள வாக்கு பெட்டிகளை இன்று (4) காலை 8.00 மணிக்கு வாக்களிப்பு மத்திய நிலையங்களுக்கு எடுத்துச்செல்லும் பணி ஆரம்பமானது. 12,985

      வாக்களிப்பு நிலையங்களுக்காக 71 மத்திய நிலையங்களில் இருந்து வாக்குப்பெட்டிகள் அனுப்பி வைக்கப்படுகின்றன. மத்திய

      நிலையங்களுக்கு வாக்கும் பெட்டிகளை அனுப்பும் பணி இன்று மாலைக்குள் பூர்த்தி அடையவுள்ளது.

      நாளை நடைபெறவுள்ள வாக்களிப்பு தொடர்பான ஒத்திகை இன்று தேர்தல் மத்திய நிலையங்களில் இடம்பெறுவதாகவும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

      வாக்குப் பெட்டிகளுக்களுக்கான பாதுகாப்பில் பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வாக்களிப்பு நிலையங்களில் கிருமி நீக்க

      பணிகளை மேற்கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிப்பதாகவும் ஆணையாளர் குறிப்பிட்டார்.

      இம்முறை பொது தேர்தலில் 25 அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்களை பிரதிநித்துவப்படுத்தி 7,456 பேர் போட்டியிடுகின்றனர்.

      இதேவேளை பொது தேர்தலில் பாதுகாப்பு நடவடிக்கைகளில் சிவில் பாதுகாப்பு படைப்பிரிவைச் சேர்ந்த 10,500 பேர் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

      பொலிஸாருக்கு மேலதிகமாக சிவில் பாதுகாப்பு படையினரும் தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படுவதாக சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய மேலும் தெரிவிததார்

          Posted in இலங்கை செய்திகள்

          பணம் கொடுத்து வாக்காளர் அட்டைகளை வாங்கிய நபர்கள் கைது

          பணம் கொடுத்து வாக்காளர் அட்டைகளை வாங்கிய நபர்கள் கைது

          தலா 5 ஆயிரம் ரூபா பணம் கொடுத்து வாக்காளர் அட்டைகளை வாங்கிய இருவர் பேருவளை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

          கைது செய்யப்பட்டவர்கள் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

          மேலும் அவர்கள் வந்த காரையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

          மேலும் 2 சந்தேக நபர்களை கைது செய்ய பொலிஸார் விசாரணை மேற்கொண்டி வருகின்றனர்.

              Posted in இலங்கை செய்திகள்

              நாடளாவிய ரீதியில் 66 வாக்கெண்ணும் மத்திய நிலையங்கள்

              நாடளாவிய ரீதியில் 66 வாக்கெண்ணும் மத்திய நிலையங்கள்

              2020 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின் வாக்கெண்ணும் நடவடிக்கை 6 ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

              அதனடிப்படையில் வியாழக்கிழமை காலை 7 மணி மற்றும் 8 மணிக்கு மாவட்ட ரீதியில் வாக்கெண்ணும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

              நாடளாவிய ரீதியில் 66 வாக்கெண்ணும் மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

              சாதாரண வாக்கெண்ணும் நிலையங்களில் ஒவ்வொரு அரசியல் கட்சி மற்றும் சுயோட்சை குழுக்கள் சார்ப்பில் பிரதிநிதிகளை முன்வைக்க முடியும் தெரிவிக்கப்படுகின்றது.

                  Posted in இலங்கை செய்திகள்

                  புதிய பாராளுமன்றம் – ஆகஸ்ட் 20 கூடும்

                  புதிய பாராளுமன்றம் – ஆகஸ்ட் 20 கூடும்

                  2020 பொது தேர்தல் வாக்கெடுப்பு நடைபெற்றதன் பின்னர் புதிய பாராளுமன்றத்திற்கான

                  கூடல் ஆகஸ்ட் மாதம் 20 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

                  இதற்கான வர்த்தமானி அறிவித்தல் நேற்று வௌியிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

                  இதன் அடிப்படையில் ஆகஸ்ட் மாதம் 20 ஆம் திகதி வியாழக் கிழமை புதிய பாராளுமன்றம் கூட்டப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

                      Posted in இலங்கை செய்திகள்

                      தேச துரோகி சுமந்திரனின் கருத்துக்கள் தமிழ்த் தேசியத்தினை பலவீனப்படுத்துகின்றது : பிரதமர் வி.உருத்திரகுமாரன் video

                      தேச துரோகி சுமந்திரனின் கருத்துக்கள் தமிழ்த் தேசியத்தினை பலவீனப்படுத்துகின்றது : பிரதமர் வி.உருத்திரகுமாரன் video

                      எம்.ஏ.சுமந்திரனின் பல கருத்துக்கள், அறிக்கைகள் தமிழ்த் தேசியத்தினை பலவீனப்படுத்துவதாகவே உள்ளன எனத் தெரிவித்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள், இதனை மக்கள் புரிந்து கொண்டு செய்ய வேண்டியதனை செய்வார்கள் என்றுதான் நம்புகின்றோம் எனத் தெரிவித்துள்ளார்.

                      சமீபத்தில் இலங்கை ஊடகவியலர்களிடையே இணையவழி செயலிமூலம் நடத்திய ஊடக சந்திப்பிலேயே கேட்கப்பட்ட கேள்வியொன்றுக்கு பதில் அளிக்கும் போது இக்கருத்தினை முன்வைத்துள்ளார்.

                      முஸ்லீம்களை விடுதலைப்புலிகள் இனச்சுத்திகரிப்பு செய்தார்கள் என்று எம்.ஏ.சுமந்திரன் அவர்கள் அடிக்கடி கூறுவதாக குறிப்பிட்டி பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள், ஒரு இனச்சுத்திகரப்பு என்று சொன்னால், ஒரு இனத்தை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு போகச் செல்வது

                      இனச்சுத்திரகரிப்பு அல்ல. அந்த இனத்தை demonization of ethnics groups எனச்செய்வதுதான் இனச்சுத்திகரிப்பு. பொஸ்னியாவை எடுத்துப்பார்தால், முஸ்லீமக்களை விரட்டுப் போது, பள்ளிவாசல்களை தாக்கினாhர்கள், அந்த சமூகத்துக்கு எதிரான எதிர்ப்பினை காட்டினார்கள். ஆனால் எங்களைப் பொறுத்தவரை முஸ்லீம்மக்களுக்கு எதிரான அப்படி ஒன்றும் நடக்கவே இல்லை எனக் குறிப்பிட்டார்.

                      மேலும் பாதுகாப்பு கருத்தியே முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்டார்கள் எனச்சுட்டிக்காட்டிய அந்த சம்பவம் இடம்பெற்றது எனக் குறிப்பிட்டதோடு, அந்தநேரத்தில் பல முஸ்லீம் உறுப்பினர்கள் விடுதலைப்புலிகளுடன் இணைந்திருந்தார்கள். பல விடுதலைப் புலி உறுப்பினர்கள் முஸ்லீம் பெயர்களை கொண்டவர்களாக இருந்தார்கள் எனத் தெரிவித்தார்.

                      எனவே தமிழீழ விடுதலைப் புலிகள் ஒரு இனச்சுத்திகரிப்பில் ஈடுபட்டார்கள் என்ற கருத்துக்கு எந்தவிதமான சட்டத்தின்படியோ, தார்மீககோட்பாட்டின் படியோ பொருந்தாது. இவ்வாறான கருத்துக்களை எம்.ஏ.சுமந்திரன் கூறுவது தமிழ்த் தேசியத்தினை பலவீனப்படுத்துகின்றது. இதனை மக்கள் புரிந்து கொண்டு செய்ய வேண்டியதனை செய்வார்கள் என்றுதான் நம்புகின்றோம் என பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.

                      மேலும் இந்த ஊடக சந்திப்பில் சிறிலங்காவின் நடாளுமன்ற தேர்தல் தொடர்பில் கருத்து தெரிவிக்கையில், 

                      சர்வதேச தளத்தில் தமிழ்தேசியத்திற்காக போராடகூடியவர்களை தெரிவு செய்யுங்கள் !!” சிறிலங்கா பராளுமன்றத்திலோ, அத ன் அரச கட்டமைப்பினுள்ளோ தமிழ தேசிய பிரச்னைக்கு தீர்வு காண இயலாது”
                      1. சிறிலங்காவின் நாடாளுமன்றம் சட்டபூர்வமாகவோ அல்லது தார்மீகரீதியாகவோ தமிழர் தேசத்தை ஆளுகை செய்வதற்கு அருகதையோ தகுதியோ அற்றது.

                      2. 1972ம் ஆண்டிலிருந்து நடைமுறைக்கு வந்த அரசியலமைப்பு சட்டங்கள் எவையும் தமிழர் தேசத்தின்; பங்குபற்றலுடனும் சம்மதத்துடனும் உருவாக்கப்பட்டவை அல்ல. இந்த அரசியலமைப்பு சட்டங்கள் சிங்கள தேசத்தால் தமிழர் தேசத்தின் மீது

                      திணிக்கப்பட்டவை. தமிழர் தேசம் தனது இறைமையினை என்றும் சிங்கள அரசிடம் தாரைவார்த்துக் கொடுத்ததில்லை.

                      3. சிறிலங்கா உண்மையில் ஒரு ஜனநாயக நாடல்ல. அது ஒரு இனநாயக நாடு. சிங்கள இனத்தின் மேலாண்மையினை தமிழ், முஸ்லீம் மக்கள் மீது நிலைநிறுத்தும் இயந்திரமாகவே சிறிலங்கா அரசு இயங்குகிறது. சிறிலங்கா அரசின் அங்கங்களான

                      நாடாளுமன்றம், அரசாங்கம், நீதிமன்றம் போன்ற அனைத்து அலகுகளிலும் சிங்கள பௌத்த பேரினவாதம் இறுகிப் புரையோடிப் போயுள்ளது. நாடாளுமன்றத்தில் அங்கம் வகிப்பதன் ஊடாக

                      சிறிலங்கா அரசுடன் பேரம் பேசும் சக்தி தமிழர்களுக்கு இதுவரை இருந்தது இல்லை. இனி மேல் இருக்கப் போவதும் இல்லை.

                      4. தற்போதய சிறிலங்கா அரசின் நாடாளுமன்ற உறுப்பினர்களினது மொத்த எண்ணிக்கை 225 ஆகும். இதில் தமிழர் பிரதேசங்களுக்குரிய ஆசனங்களின் எண்ணிக்கை மொத்தம் 23.

                      இதன்படி தமிழர்களின் பிரதிநிதித்துவம் மொத்த உறுப்பினர்கள் தொகையில் பத்தில் ஒரு வீதத்துக்கும் குறைவாகவே இருக்கும். நடைபெறவுள்ள தேர்தலில் ராஜபக்சக்களின் கட்சி

                      நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு ஆசனங்களைப் பெறமுடியாது போனாலும் கூட மூன்றில் இரண்டு பங்கு ஆசனங்கள் சிங்கள கட்சிகளுக்குடையதாகவே இருக்கும்.

                      5. குடியுரிமைச்சட்டம், தனிச் சிங்களச் சட்டம், பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் என தமிழர்களுக்கு எதிரான பல சட்டங்கள், தமிழர்கள் பிரதிநிதிகளாக நாடாளுமன்றத்தில் இருந்த நிலையிலேயே தான் சிங்கள ஆட்சியாளர்களால்

                      நிறைவேற்றப்பட்டன. அந்;நேரத்தில் தமிழர்களால் இதனைத் தடுக்க முடியவில்லை. தமிழர்கள் அமைச்சர்களாகவும், இரண்டு முறை

                      எதிர்க்கட்சித் தலைவர்களாகவும் கூட இருந்திருக்கின்றார்கள். அப்படியிருந்தும் அவர்களால் தமிழர்களின் நலன் சார்ந்து எதனையுமே செய்ய முடியவில்லை.

                      6. சிறிலங்கா நாடாளுமன்றத்தில் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் அங்கம் வகிப்பதன் மூலம் தமிழர் தேசத்தின் தேசியப் பிரச்சனைக்குத் தீர்வு காண முடியாது. சிறிலங்காவின்

                      அரசகட்டமைப்புக்குள் தமிழ் மக்களின் தேசியப்பிரச்சனைக்குத் தீர்வு காணமுடியாது என்பதனை உய்த்தறிவது என்பது ஒன்றும் கடினமான விடயமல்ல.

                      7. ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் பொதுச்செயலர் பான் கீ மூன் அவர்களால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கையில் சிறிலங்கா அரசியலில் தமிழர்களுக்கு ஒரு காத்திரமான பங்கு

                      இல்லாமை, இலங்கையின் தேசிய இனப்பிரச்சனைக்கு முக்கியமான ஒரு காரணம் எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

                      8. இப் பின்னணியை வைத்துப் பார்க்கும் போது, தமிழர்கள் சிறிலங்காவின் நாடாளுமன்றத்; தேர்தலில் ஏன் போட்டியிட

                      வேண்டும் என்ற வினா எழுவது இயல்பானதே. உரிமைக் கோட்பாட்டின் அடிப்படையில் இவ் வினா எழுவது நியாயம்

                      எனினும் இரண்டு தந்திரோபாயக் காரணங்களுக்காக தமிழ்த் தேசிய நிலைப்பாட்டைக் கொண்டவர்கள் இத் தேர்தலில் போட்டியிடுவது தவிர்க்க முடியாததாக இருக்கிறது.

                      9. முதலாவது காரணம்: சிறிலங்காவின் நாடாளுமன்றத்தில் தமிழர் தேசிய பிரச்சனைக்கு தீர்வினைக் காண முடியாது என்ற போதும், அத் தளத்தினை தமிழர் தேசத்தின் சுதந்திர வேட்கையினை

                      வெளிப்படுத்தும் ஒரு மேடையாக, களமாக, கருவியாகக் கையாளக் கூடிய வாய்ப்பை தமிழர் தேசம் முடிந்த அளவு பயன்படுத்த வேண்டும். சர்வதேச சமூகத்தை நோக்கி எமது அரசியல்

                      பெருவிருப்புக்களை வெளிக்காட்டுவதற்கான ஒரு கருவியாக நாடாளுமன்றத்தையும் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற அந்தஸ்தையும் தமிழர் தேசம் கையாள வேண்டும்.

                      10. இரண்டாவது காரணம்: சிறிலங்காவின் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசிய நிலைப்பாட்டைக் கொண்டுள்ளோர் போட்டியிடத் தவறின் சிறிலங்காவின் சிங்களக் கட்சிகளும், இக்

                      கட்சிகளது அடிவருடிகளும் தமிழர் பிரதிநிதிகளாக நாடாளுமன்றம் செல்லும் நிலை உருவாகும். இந் நிலை உருவாகுவதனைத் தவிர்த்தல் தமிழ்த் தேசிய நிலைப்பாடு என்ற நோக்குநி;லையில் நன்மையானதே.

                      11. இந்தத் தேர்தலில் தமிழர்களின் தேசிய அரசியல் பரப்பானது சாதி, மத பேதங்களுடன் பிளவுபட்டுவிடுமோ என்ற

                      அச்சத்தினையும் சில ஆய்வாளர்கள் வெளிப்படுத்துகிறார்கள். இப் பேதங்களையெல்லாம் கடந்ததுதான் விடுதலை அரசியல் என்ற தெளிவுடன் நமது மக்கள் செயலாற்றுவார்கள் என்பது எமது நம்பிக்கை.


                      12. 1985ல் இருந்து எமது தேசிய இனப் பிரச்சனை கொழும்பைக் கடந்து திம்புவுக்கு சென்றது. பின்னர் ஆயிரம் ஆயிரம் மாவீரர்களதும், மக்களதும் உயிர்த்தியாகத்தினாலும், அளப்பரிய

                      அர்பணிப்புக்களாலும், வீரத்தினாலும் அது திம்புவில் இருந்து தாய்லாந்து, ஜெனீவா, நோர்வே, சுவிஸ், ஜேர்மனி என்று அனைத்துலக அரசியல் வெளியினை நோக்கி சென்றுள்ளது.

                      13. இன்று சிறிலங்கா அரசின் திட்டமி;டப்பட்ட தமிழின அழிப்பு அனைத்துலகப் பேசுபொருளாகியுள்ள இந் நிலையில் தேர்வு

                      செய்யப்படும் தமிழர் பிரதிநிதிகள் இந்த சர்வதேச தளத்தில் எமது தேசிய அரசியல் பெருவிருப்பினை கொள்கையாகவும், செயற்பாடாகவும் கொண்டு செல்லக்கூடியவர்களாக இருக்க வேண்டும் என்பது தெட்டத் தெளிவு.

                      இதனால் தமிழ்த் தேசியத்தை தமது சொல்லாலும் செயலாலும் உண்மையாக வலுப்படுத்துக்கூடியர்களை இனம் கண்டு மக்கள் தமது பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுக்க வேண்டும். தெரிவு

                      செய்யப்படும் பிரதிநிதிகள் பின்வரும் நிலைப்பாடுகளைக் கொண்டியங்குவோராக இருத்தல் வேண்டும்.

                      அ – ஈழத்தமிழர்களின் தேசிய இனப் பிரச்சனைக்கான தீர்வு தமிழர் தேசம் என்ற அங்கீகாரத்துடன் –  தாயகத்திலும் புலம்பெயர்ந்தும் வாழும் தமிழ் மக்கள் மத்தியில் நடத்தப்படும் ஒரு

                      பொதுவாக்கெடுப்பு மூலமே காணப் படவேண்டும். இவ் விடயம் கஜேந்திரகுமார் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்ணணி, முன்னாள் நீதியரசர், வட மாகாண முதலமைச்சர்

                      சீ.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி, ஆகிய கட்சிகளது தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கப்பட்டிருப்பது நம்பிக்கையையும், உற்சாகத்தையும் தருவதாக உள்ளது.

                      ஆ – இனப்படுகொலை, மானிடத்துக்கு எதிரான குற்றங்கள், போர்க்குற்றங்கள் புரிந்த சிறிலங்கா அரசும் அதன் அரசியல், இராணுவ தலைவர்களும் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட வேண்டும்.

                      இ – நடந்தேறிய சர்வதேசக் குற்றங்கள் ‘systemic crime ‘ என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரது அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இது தமிழர்களுக்கு எதிராகப் புரியப்பட்ட குற்றங்கள் எனும்போது அவை தனிநபர்களாலோ, ஒரு குறிப்பிட்ட

                      இராணுவப் பிரிவினாலோ புரியப்பட்டவை அல்ல. முhறாக இவை சிறிலங்கா என்ற ‘அரசு’ செய்த குற்றங்களாகவே உள்ளன. எனவே சிறிலங்கா அரசை சர்வதேச நீதிமன்றத்தின் முன்னால்

                      இனஅழிப்புக்கு எதிரான சர்வதேச சட்டத்தின் கீழ் கொண்டு செல்லத் தமிழர் பிரதிநிதிகள் பாடுபடுவேண்டும்.

                      ஈ – சர்வதேச தளத்தில் தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்துக்கான ஆதரவை வலுப்படுத்துவதற்கான செயற்பாடுகளில் உறுதியாக ஈடுபடவேண்டும்.

                      உ. தாயகத்தில் தமிழர் தேச நிர்;மாணத்தை உறுதியாக மேற்கொள்ளக் கூடியவர்களாகவும் இருத்தல் வேண்டும்.

                      தேர்தலுக்குப் பின்னர் உருவாகக் கூடிய நிலைமைகள்:
                      தேர்தலுக்குப் பின்னர் சிறிலங்கா ஆட்சியாளர்கள் தமிழர்களின் தேசிய அடையாளத்தினைச் சிதைத்து, தமிழ் மக்களை ‘சிறிலங்கன்’ என்ற அடையாளத்துடன் சிங்களத்துடன் கரைக்கும் முயற்சிகளில்

                      தீவிரமாக ஈடுபடக் கூடிய நிலைமைகள் உள்ளன. இம் முயற்சியினை வெற்றிகரமாகச் செயற்படுத்தும் வகையில் வெளியுறவுக் கொள்கையில் தந்திரமான யதார்த்தத்தினைக்

                      கடைப்பிடித்து பலம் மிக்க அனைத்துலக அரசுகளுடன், அவர்களின் நலன்களுடன் அனுசரித்துப் போகும் ‘சமரசமான’ நிலைப்பாட்டை எடுக்கக்கூடிய நிலைமைகளும் உள்ளன. சர்வதேச சக்திகளும் தமிழ் மக்களுக்காகக் குரல் கொடுப்பதனை விடத் தமது

                      நலன்களின் அடிப்படையில் சிங்கள ஆட்சியாளர்களுடன் சமரச நிலைiயில் உறவாடுவதனையே விரும்புவார்கள்.

                      இத்தகையதொரு நிலை உருவாகாமல் தடுப்பதில் நடைபெறப்போகும் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறும் தமிழ்த் தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட பிரதிநிதிகளுக்குப்

                      பெரும் பொறுப்பு உண்டு. அரசுகளுடன் நமது உரிமைகளுக்காகச் செயற்படுவது என்பது நித்திரை கொள்பவனை எழுப்பும் வேலை

                      அல்ல, மாறாக நித்திரை கொள்வது போல நடிப்பவனை எழுப்பும் வேலை என்ற புரிதலுடன் இவர்கள் தமது செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.

                      சிறிலங்கா அரசுடன் தமது நலன்களை அடைந்து கொள்ளும் இலக்குடன் அனைத்துலக அரசுகள் தமிழர்; தேசத்தின் நலன்களைப் பலிகொடுக்க முயலும் சந்தர்ப்பங்களில் எல்லாம் அவற்றை

                      எதிர்த்து உறுதியாகச் செயலாற்றக் கூடியவர்கள் தமிழர் பிரதிநிதிகளாகத் தேர்வு செய்யப்படுவது அவசியம்.

                      அனைத்துலக அரசுகளின் நிலைப்பாட்டை நாம் அறிந்தவர்கள் என்பதனை அவ் அரசுகளுக்கு உணர்த்திக் கொண்டு, அதேசமயம் இணக்க அரசியல் என்ற பெயரில் தமிழர்களின் நலன்களைப் பலி

                      கொடுக்காமல், அரசுகளின் நிலைப்பாடுகளிடையே அரசுகளின் நலன்களையும்;, தமிழர்களின் நலன்களையும்  இணைக்கக் கூடிய

                      அரசதந்திரம் கொண்டவர்களாக இருக்க வேண்டும். செயலாற்ற வேண்டும்.

                      தமிழீழத் தேசியத் தலைவர் கூறியவாறு எந்தவொரு அரசியல் முன்னெடுப்புக்கும் பலம் அவசியமானது. எனவே சர்வதேச

                      தளத்தில் அரசியலை மேற்கொள்வதற்கு அரசதந்திரத்துடன் மக்கள் சக்திகளை வலுவாக அணிதிரட்டக் கூடியவர்களை மக்கள் தேர்வு செய்யவேண்டும்.

                      தேர்தலுக்குப் பின்னர் நாம் தொடர்ந்து முன்னோக்கிச் செல்ல வேண்டிய பாரிய அரசியல் செயற்பாட்டுக்கான பொறுப்பும் தமிழர் தேசத்துக்கு உண்டு. சிறிலங்காவின் தேர்தல் அரசியல்

                      மாயைகளுக்குள் தலையைப் புதைக்காமல், நாம் ஒரு தேசமாக நிமிர்ந்து நிற்க உதவும் தமிழ் தேசிய பேரியக்கம் ஒன்று

                      கட்டியெழுப்பப் படவேண்டும். அதனை நோக்கிய முன்னெடுப்பைத் தமிழர் பிரதிநிதிகள் மேற்கொள்ள வேண்டும்

                      https://www.youtube.com/watch?v=HncUNQ60H5E&feature=youtu.be
                      Posted in இலங்கை செய்திகள்

                      இலங்கையில் வேகமாக பரவும் கொரோனா – புதிதாக 08 நோயாளர்கள் பாதிப்பு

                      இலங்கையில் வேகமாக பரவும் கொரோனா – புதிதாக 08 நோயாளர்கள் பாதிப்பு

                      இலங்கையில் கொரோனா தொற்று நோயாளர்கள் இன்று காலை 6.00 மணி வரையில் 08 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

                      கொவிட் 19 தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில,; இந்த எட்டு பேரில் ஒருவர்

                      கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் பணியாற்றும் உறுப்பினருடன் நெருங்கிய தொடர்புகளை கொண்டிருந்தவரென்று அடையகளங்காணப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

                      ஏனைய 07 பேரும் வெளி நாடுகளில் இருந்து இலங்கைக்கு வந்த பின்னர் முப்படையினரால் நடத்தப்படும் மத்திய நிலையங்களில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்வர்கள்.

                      இதற்கமைவாக கந்தக்காடு போதைப்பொருள் நிவாரண சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் இன்றைய தினம் வரை

                      கொவிட் 19 தொற்று நோயாளர் எண்ணிக்கை 601 என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

                      புனர்வாழ்வு பெற்று வருகின்ற கைதிகள் – 482
                      பணியாளர் சபையின் உறுப்பினர்கள் -66


                      அழைப்பின் பேரில் வரும் பணியாளர்கள் -05
                      குடும்பம் மற்றும் தொடர்புபட்டவர்கள் 44
                      வெலிக்கடை சிறைச்சாலையில் கொவிட் 19 வைரஸ் நோயாளர் -01


                      கொவிட் 19 தொற்று நோயாளர்களின் மொத்த எண்ணிக்கை -601

                      இன்றைய தினம் வெளிநாடுகளில் இருந்து வந்த 07 பேர் முப்படையினரால் நடத்தப்படும் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

                      மேலும் இன்றைய தினம் டோஹாவில் இருந்து 13பேரும் சென்னையில் இருந்து 29 பேரும் ஜப்பானில் இருந்து ஒருவரும்

                      இலங்கை வரவுள்ளனர். இவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தல் முகாம்களுக்கு அனுப்பிவைக்கப்பட்வுள்ளனர்.

                      இன்றைய தினம் (03) இராணுவத்தினால் நடத்தப்படும் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் இருந்து 55 பேர்

                      தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை பூர்த்தி செய்து வீடுகளுக்கு செல்லவுள்ளனர் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

                      இதற்கமைவாக புனானி மத்திய நிலையத்pல் 52 பேரும் ஹோட்டல் ஜெட்வினில் ஒருவரும் கற்பிட்டி ருவல மத்தியத்தில் இருவருமாக இவ்வாறு வீடு திரும்புகின்றனர்.

                      இதுவரையில் (03.08.2020) 29,121 பேர் தனிமைப்படுத்தலை பூர்த்தி செய்து வீடுகளுக்கு சென்றுள்ளனர்.

                      முப்படையினாரால் நடத்தப்படும் 33 தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் 2294 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

                      இதேவேளை நேற்றைய (02) தினம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கை 1,210 ஆகும். இலங்கையில் இதுவரையில் 162,090 பேருக்கு பி.சி.ஆர் பிரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

                      இதேவேளை இன்றைய தினம் (03) காலை 6.00 மணியளவில் 75 பேர் முழுமையாக குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து

                      சென்றுள்ளனர். இவர்களுள்ள 06 பேர் வெளிநாடுகளில் இருந்து நாடடிற்கு வந்த பின்னர் தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில்

                      இருந்தவர்கள். ஏனைய 69 பேரும் உள்நாட்டில் அடையாங்காணப்பட்டவர்கள் என்றும் அந்த அறிக்கையில் மேலும தெரிவிக்கப்பட்டுள்ளது.

                          Posted in இலங்கை செய்திகள்

                          புதுக்குடியிருப்பில் கள்ள வாக்கு சீட்டுடன் கோட்டா கட்சி உறுப்பினர் கைது

                          புதுக்குடியிருப்பில் கள்ள வாக்கு சீட்டுடன் கோட்டா கட்சி உறுப்பினர் கைது

                          முல்லைத்தீவு மாவட்டடத்தில் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் மாதிரி

                          வாக்குச்சீட்டுக்களை கைவசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் ஈழமக்கள்

                          ஜனநாயக கட்சியின் வன்னிமாவட்ட வேட்பாளர் ஒருவர் உள்ளிட்ட நான்கு பேர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

                          இது தொடர்பில் தெரியவருகையில்,

                          புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் மாதிரி வாக்குச்சீட்டுடன் கட்சி ஆதரவாளர்கள்

                          நடமாடுவதாக தேர்தல் ஆணைக்குழுவிற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய

                          தகவல் அடிப்படையில் தேர்தல் ஆணைக்குழு அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

                          ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் வேட்பாளர் ஒருவரும் கட்சியின் ஆதரவாளர்

                          ஒருவரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவாளர் ஒருவரும், ஸ்ரீலங்கா

                          பொதுஜன பெரமுன கட்சியின் ஆதரவாளர் ஒருவருமாக நால்வர் இவ்வாறு கைதுசெய்யப்பட்டு புதுக்குடியிருப்பு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

                          சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்

                              Posted in இலங்கை செய்திகள்

                              சிறிதரன் விடுத்த முக்கிய வேண்டுதல்

                              சிறிதரன் விடுத்த முக்கிய வேண்டுதல்

                              இரணைமடு குளத்தின் தண்ணீரை யாழ்ப்பாணத்திற்கு வழங்க முடியாதென

                              நான் கூறியதாக ஊடங்களில் வெளிவந்துள்ள செய்திகள் தொடர்பில் விளக்கமளிக்க வேண்டிய பொறுப்பு எனக்கு உள்ளது.

                              இரணைமடு குளத்தில் காணப்படும் தண்ணீரானது கிளிநொச்சி மாவட்ட

                              மக்களுக்கே காணமல் உள்ள நிலையில் அதனை யாழ்ப்பாணத்திற்கு

                              கொடுப்பதற்கு முடியாத என்பதே என்னுடைய உறுதியான நிலைப்பாடாக

                              காணப்படுகின்றது. அதனால் மாற்றுத் திட்டமொன்றினை தேடவேண்டிய நிலையில் நாம் அனைவரும் உள்ளோம்.

                              இதனையே என்னுடைய தேர்தல் பிரச்சார மேடையில் நான் தெரிவித்திருந்தேன்.

                              ஆனால் எனக்கு எதிராக செயற்படும் சில ஊடகங்கள் இந்த செய்தியை

                              திரிபுபடுத்தி எனக்கு இருக்கும் மக்கள் ஆதரவினை குறைப்பதற்கான

                              முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றார்கள். யாழ்ப்பாணம் கிளிநொச்சி

                              இந்த மக்கள் உண்மையை புரிந்து கொண்டு எனக்கு வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது என தெரிவித்துள்ளார்.

                                  Posted in இலங்கை செய்திகள்

                                  மட்டக்களப்பு மாவட்டத்தில் மூன்று வாக்களர்களுக்கு ஓரு வாக்களிப்பு நிலையம்

                                  மட்டக்களப்பு மாவட்டத்தில் மூன்று வாக்களர்களுக்கு ஓரு வாக்களிப்பு நிலையம்

                                  மட்டக்களப்பு மாவட்டத்தின் மட்டக்களப்பு தேர்தல் தொகுதியில் மாந்தீவு தொழுநோயாளர் வைத்தியசாலை மட்டக்களப்பு

                                  வாவியின் நடுவே மட்டக்களப்பு விமான நிலையத்திற்கு மேற்காக அமைந்துள்ள தீவாகும்.

                                  இது பிரித்தானியரின் ஆட்சிக்காலத்தில் அமைக்கப்பட்டதொழுநோய் வைத்திய சாலை..

                                  தொழுநோய் வைத்தியசாலையில் சுமார் 200பேர் வரை தங்கியிருந்து சிகிச்சை பெறக்கூடிய வசதிகளை கொண்டதாக

                                  அமைக்கப்பட்டிருந்தது அங்கு வேலைசெய்யும் ஊழியர்கள் தங்கியிருக்கும் விடுதிகள் வணக்க தலங்கள் என பலவசதிகளும் இருந்துள்ளது.

                                  மாந்தீவில் 2009ம் ஆண்டு பாரிய தீ அனர்த்தம் ஒன்று ஏற்ப்பட்டுள்ளது அப்போது 13 நோயாளர்கள் சிகிச்சை பெற்று

                                  வந்துள்ளனர் அங்கு தீ அனர்த்தத்தின் பின்னர் வைத்தியசாலை சரியான பராமரிப்பு இன்றி மூன்று பேர்தவிர அனைவரும்

                                  சென்றுவிட்டதாகவும் அதில் தற்போதுள்ளவர்களின் வாக்குகள் மட்டக்களப்பு தேர்தல் தொகுயில் பதியப்பட்டு வாக்கெடுப்பு நடத்தப்படுகின்றது.

                                  இவர்களுக்கான வாக்குப் பெட்டி இயந்திரப்படகு மூலம் மாந்தீவு ஓரு வாக்களிப்பு நிலையத்திற்கு கொண்டு செல்வதற்கான விசேட

                                  ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி திருமதி கலாமதி பத்மராஜாதெரிவிதார்.

                                  மூன்று வாக்களர்களுக்கும் பொதுவான நியமங்களே கடைப்பிடிக்கப்படவுள்ளதாகவும் வழமையான வாக்களிப்பு

                                  நேரமாகிய 7.00 மணிக்கு முதல் 5.00 மணிவரை வாக்களிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ள

                                      Posted in இலங்கை செய்திகள்

                                      இளம் புத்திசாலி உறுப்பினர்கள் புதிதாக பாராளுமன்றத்திற்கு வரவேண்டும் – மகிந்தா

                                      இளம் புத்திசாலி உறுப்பினர்கள் புதிதாக பாராளுமன்றத்திற்கு வரவேண்டும் – மகிந்தா

                                      இளைய தலைமுறையினர் நாட்டை பொறுப்பேற்க வேண்டிய காலம் எழுந்துள்ளமையால், இளைய புத்திசாலித்தனம் மிகுந்த

                                      உறுப்பினர்கள் புதிதாக பாராளுமன்றத்திற்கு வரவேண்டிய காலம் வந்துள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

                                      நேற்று முன்தினம் (2020.08.01) பிற்பகல் காலி மாவட்டம் ஹபராதுவ பிரதேசத்தில் நடைபெற்ற சந்திப்பின்போது உரையாற்றிய பிரதமர்,

                                      நாட்டை அபிவிருத்தி செய்து முன்னோக்கி கொண்டு செல்வதற்கு இளைய தலைமுறையினரின் ஒத்துழைப்பு மிகவும் முக்கியமானது என குறிப்பிட்டார்.

                                      நாட்டின் எதிர்கால பயணத்திற்கு இளைஞர் சமுதாயத்தினர் இம்முறை பொதுத் தேர்தலில் சரியான தெரிவொன்றை

                                      மேற்கொள்ள வேண்டும் என்றும் பிரதமர் இன்போது மேலும் தெரிவித்தார்.

                                      இரண்டாக பிளவடைந்து சண்டையிட்டுக் கொண்டிருக்கும் ஐக்கிய தேசிய கட்சிக்கு பதிலாக நாட்டை கட்டியெழுப்பி அபிவிருத்தியை நோக்கிய திட்டமிட்டலுடன் கூடிய பயணத்தை

                                      முன்னெடுத்திருக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் கைக்கோர்க்குமாறும் பிரதமர் இளைய சமுதாயத்தினரிடம் கேட்டுக்கொண்டார்.

                                          Posted in இலங்கை செய்திகள்

                                          தமிழ் மக்களை நாமே காப்பாற்ற போகிறோம் – கோட்டாவின் புலி கட்சி ஊளை

                                          தமிழ் மக்களை நாமே காப்பாற்ற போகிறோம் – கோட்டாவின் புலி கட்சி ஊளை

                                          இலங்கையில் இறுதி போர் முடிவுக்கு வரப் பட்டு விடுதலை புலிகளின் முது நிலை தளபதிகள் படுகொலை செய்யப்பட்டனர்

                                          ,கைது செய்ய பட்டவர்கள் சிறைகளில் அடைக்க பட்டு ஊசி அடிக்க பட்டு அவர்கள் மூளை இயல் இலங்கை நிலையில் உள்ளனர்

                                          அவவிதமான மிக காட்டு மிராண்டி தனமான இனப் படு கொலையை நடத்திய இரத்த காடடேறி கொடாத இலங்கையில் ஆட்சி [புரிந்து வருகிறார் .

                                          இவரது பின்புல நிதி பங்களுப்பிடபிடன் உருவான புளிக்காட்சி ஒன்று தாமே தமிழர்களில் ஏக பிரதிநிதிகள் என தற்போது முழங்கி

                                          வருகின்றனர் ,ஊடக போராளி ஒருவரது ஆதரவுடன் உருவாக்க பட்ட கட்சி
                                          முதலாவது பயணத்திலேயே மக்களினால் நிராகரிக்க பட்டது

                                          இதன் உருவாக்கத்தை பொழுதே நாம் மேற்படி கருத்துரை வலியுறுத்தினோம்

                                          செல்ல காசாக உள்ள மேற்படி கட்சி தற்போது தேர்தல் வேளையில் கூட்டமைப்பின் முக்கிய நபரான சிறிதரனை இலக்கு வைத்து பயணித்து வருகின்றனர்

                                          கூட்டமைப்பின் அடிநாதமாக விளங்கி வருபவரும் மக்கள் செல்வாக்கு அதிகம் உள்ள ஒரே ஒருவர் ஸ்ரீதரன் ஆவர் ,தளபதி தீபன்

                                          ,கில்மன் போன்றவர்களை போருக்கு கொடுத்த குடும்பத்தில் உதயாமானவர் ஸ்ரீதரன்

                                          இவர் வன்னி மக்களின் செல்ல பிள்ளையாக இன்றுவரை உள்ளார் ,அவ்வாறான இவரை வீழ்த்திவிட கோத்தபாயவின் காசுக்கு ஊளையிடுகிறது இந்த புலி கும்பல்

                                          எல்லா புலி தலைவர்களையும் கொலை செய்த கோட்டா உங்களை மட்டும் வெளியில் விட காரணம் என்ன ..?

                                          தேச துரோகி கருணாவுடன் அருகில் நின்று பாடம் பிடித்து வெளியான உங்கள் காட்சிகளை கொஞ்சம் திரும்பி பாருங்கள் ராசாக்களே

                                          சுவரை கண்டால் நாய்கள் காலை தூக்கும் என்பதை இதை தான் போலும் ,இது புலி கட்சி அல்ல புல்லு கட்சி என்பதே சரியானதாகும் என்பது மக்கள் கூற்று

                                              Posted in இலங்கை செய்திகள்

                                              இலங்கையில் அதிகரித்த கொரனோ – யாழில் 20 பேர் மரணம்

                                              இலங்கையில் அதிகரித்த கொரனோ – யாழில் 20 பேர் மரணம்

                                              இலங்கையில் தற்போது கொரனோ நோயானது வேகமாக பரவி வருகிறது

                                              தற்போது மக்களை ஒன்று கூட வேண்டாம் ஏச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது

                                              ஒருவருக்கு இடையில் இரண்டு மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும் ,மேலும் இலங்கையில் மருத்துவ மனைகளில் காய்ச்சல்

                                              என்ற போர்வையில் கொரனோ நோயாளிகள் அனுமதிக்க பட்டுள்ளனர்

                                              தேர்தல் நெருங்குவதால் மக்கள் ஒன்று கூடி வாக்களிக்க மாட்டார்கள்

                                              என்ற நிலையில் ஆளும் கோட்டபாய அரசு குறித்த நோய் தொடர்பாண் பாதிப்புக்களை மூடி மறைத்து வருகிறது

                                              யாழ்ப்பாணத்தில் 20 பேர் இந்த நோயினால் சில நாட்களில் இறந்துள்ளதான தகவல்கள் வெளியாகிறது ,ஆனால் யாழ்ப்பாண

                                              மருத்துவமனை மேற்படி தகவலை மூடி மறைத்து வருவதாக உள்ளிருந்து கசியும் கசிவுகள் தெரிவிக்கின்றன

                                              மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் ,கலந்து கொள்வதால் இந்த நோயானது அதிவேகமாக பரவும் அபாயம் உள்ளதாக உலக

                                              சுகாதார மையம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளமை இங்கே சுட்டி காட்ட தக்கது

                                                  Posted in இலங்கை செய்திகள்

                                                  வாக்களிப்பு நிலையங்களில் வாக்காளர்களின் சுகாதாரப் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது- தேர்தல் ஆணையம்

                                                  வாக்களிப்பு நிலையங்களில் வாக்காளர்களின் சுகாதாரப் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது- தேர்தல் ஆணையம்

                                                  வாக்களிப்பு நிலையங்களுக்கு வரும் சகல வாக்காளர்களதும் சுகாதாரப் பாதுகாப்பு 100 சதவீதம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக

                                                  தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷபிரிய தெரிவித்துள்ளார்.

                                                  கடந்த சில தினங்களாக வாக்களிப்பு நிலையங்களைக் கொண்டு ஒத்திகைகள் நடத்தப்பட்டன. இதன் மூலம் சுகாதாரப் பாதுகாப்பு

                                                  நடவடிக்கைகள் பற்றி அதிகாரிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டதாகம் அவர் சுட்டிக்காட்டினார்.

                                                  இவற்றைக் கருத்திக்கொண்டு அச்சமும் சந்தேகமும் இன்றி வாக்குச் சாவடிகளுக்குச் சென்று வாக்களிக்குமாறு

                                                  வாக்காளர்களைக் தாம் கோருவதாகவும் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷபிரிய தெரிவித்தார்.

                                                  வாக்களிப்பு நிலையங்களுக்கு வரும் சகல வாக்காளர்களும் கட்டாயமாக முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். கைகளைக் கழுவிவிட்டு வருவதும் கட்டாயமானது. வாகளிப்பு நிலையத்தில்

                                                  முதலாவது உத்தியோகத்தரிடம் ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஆவணத்தைக் சமர்ப்பித்த பின்னரும் வாக்காளர்கள் கைகளை கழுவ நிர்ப்பந்திக்கப்படுவார்கள்.

                                                  ஒவ்வொரு வாக்காளருக்கும் தொற்று நீக்கப்பட்ட பேனா அல்லது பென்சில் வழங்கப்படும். வாக்கைச் செலுத்திவிட்டு

                                                  வெளியேறும்போது கைகழுவுவது அவசியமாகும். இந்த ஏற்பாடுகள் காரணமாக வாக்காளர்களுக்கு கிருமி தொற்றக்கூடிய சாத்தியம்

                                                  இல்லையென்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மேலும் தெரிவித்தார்

                                                      Posted in இலங்கை செய்திகள்

                                                      தேர்தல் இறுதிப் பிரசாரக் கூட்டங்கள் இன்று-ஓய்ந்தது சரவெடி

                                                      தேர்தல் இறுதிப் பிரசாரக் கூட்டங்கள் இன்று-ஓய்ந்தது சரவெடி

                                                      பொதுத்தேர்தலில்போட்டியிடும்அரசியல்கட்சிகள்மற்றும்சுயேட்சைக்குழுக்களின்இறுதிப்பிரசாரக்கூட்டங்கள்இன்றுஇடம்பெறவுள்ளன.

                                                      பொதுத் தேர்தலுக்கான சகல பிரசார நடவடிக்கைகளும் இன்று நள்ளிரவுடன் முடிவடைகின்றன. அதன் பின்னர் பிரசாரக்

                                                      கூட்டங்களை நடத்துவதும், வீடுவீடாகச் சென்று வாக்குக் கேட்பதும், துண்டுப் பிரசுரங்களை விநியோகிப்பதும், பதாதைகளைக்

                                                      காட்சிப்படுத்துவதும், சுவரொட்டிகளை ஒட்டுவதும் தடைசெய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

                                                      சகல ஊடகங்கள் வாயிலாகவும் முன்னெடுக்கப்படும் பிரசார நடவடிக்கைகளும்

                                                      இன்று நள்ளிரவு பூர்த்தி செய்ய வேண்டும் என்றும் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷபிரிய தெரிவித்தார்.

                                                      அதேவேளை, நாட்டின் அரசியல் கட்சிகள் இறுதிக் கட்ட பிரசாரத்திற்காக தயாராகி வருகின்றன.

                                                          Posted in இலங்கை செய்திகள்

                                                          பிரேமதேசவின் பின்னர் நல்லாட்சி நான் வழங்குவேன் – சஜித்

                                                          பிரேமதேசவின் பின்னர் நல்லாட்சி நான் வழங்குவேன் – சஜித்

                                                          தனது தந்தையின் பின்னர் இந்நாட்டில் பொது மக்கள் சகாப்தம் ஒன்றினை

                                                          தான் ஏற்படுத்துவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

                                                          தனக்கு எதிராக எவ்வாறான குற்றச்சாட்டுக்கள்

                                                          முன்வைக்கப்பட்டாலும் ´உண்மை ஒருநாள் வெல்லும்´ என அவர் தெரிவித்தார்.

                                                              Posted in இலங்கை செய்திகள்

                                                              பெற்றோர் இன்றி வாழும் குழந்தைகளை அரசு பொறுப்பெடுக்கும் – புதிய திட்டம்

                                                              பெற்றோர் இன்றி வாழும் குழந்தைகளை அரசு பொறுப்பெடுக்கும் – புதிய திட்டம்

                                                              இலங்கையி, பலவேறு பட்ட சூழல் காரணமாக பெற்றவர்களை இழந்து

                                                              அனாதைகளாக தவிக்கும் குழைந்தைகளை அரசு பொறுப்பேற்று பார்க்க உள்ளது என தெரிவிக்க பட்டுள்ளது

                                                              சிறார் பாதுகாப்பு அமைப்பு இந்த தகவலை வெளியிட்டுள்ளது ,
                                                              மேற்குலகில்

                                                              இவ்வாறான நடைமுறை உள்ளது ,அதனை ஆளும் இலங்கை அரசு மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்க படுகிறது

                                                                  Posted in இலங்கை செய்திகள்

                                                                  மெகசின் சிறைச்சாலை வளவில் போதைப் பொருளுடன் பூனை

                                                                  மெகசின் சிறைச்சாலை வளவில் போதைப் பொருளுடன் பூனை

                                                                  ஹெரோயின் போதைப் பொருள் உள்ளிட்ட பொருட்களைக்

                                                                  கொண்ட பொதி கழுத்தில் கட்டப்பட்டு மெகசின் சிறைச்சாலை வளவில்

                                                                  காணப்பட்ட பூனை ஒன்றை சிறைச்சாலை அதிகாரிகள் கண்டுபிடிதுள்ளனர்.

                                                                  இது தொடர்பில் மேலதிக விசாரணைக்காக பூனை தற்போது பொரள்ளை

                                                                  பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் துசார உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.

                                                                  சிறைச்சாலை புலனாய்வுப் பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற தகவல்களுக்கு

                                                                  அமைய குறித்த பூனை நேற்று (01) பிடிக்கப்பட்டதாக சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

                                                                  இதன்போது, பூனையில் கழுத்தில் பொதியொன்று காணப்பட்டுள்ளது.

                                                                  அதில் 1.7 கிராம் ஹெரோயின், இரண்டு சிம் அட்டைகள் மற்றும் Memory Cardry Card ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

                                                                  மெகசின் சிறைச்சாலை
                                                                  மெகசின் சிறைச்சாலை
                                                                      Posted in இலங்கை செய்திகள்

                                                                      கிளிநொச்சியில் கூட்டமைப்பு தேர்தல் கூட்டத்தில் தாக்குதல் – டக்கிளஸ் குழு அட்டகாசம்

                                                                      கிளிநொச்சியில் கூட்டமைப்பு தேர்தல் கூட்டத்தில் தாக்குதல் – டக்கிளஸ் குழு அட்டகாசம்

                                                                      கிளிநொச்சி மாவட்டம் அக்கராயன் பொதுச் சந்தையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பங்கு

                                                                      கொண்ட மக்கள் மீது முன்னாள் ஈ.பி.டி.பி.யின் பாராளுமன்ற உறுப்பினர்

                                                                      சந்திரகுமாரின் குழு ஒன்று தாக்குதல் நடத்தியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

                                                                      கூட்டமைப்பின் வேட்பாளர் சிவஞானம் சிறீதரன் பங்கேற்ற பிரச்சார

                                                                      கூட்டம் நேற்று (01) மாலை அக்கராயன் பொதுச் சந்தைப் பகுதியில் நடைபெற்றுள்ளது.

                                                                      அவர் உரையாற்றிக் கொண்டிருந்த போது, சில நபர்கள் அந்தப் பகுதியில் நின்று கூச்சல் இட்டுக் கொண்டிருந்தனர்.

                                                                      பளையில் நடைபெறுகின்ற பிரச்சார கூட்டத்திற்காக சிறீதரன் புறப்பட்டுச் சென்ற பின்னர் குறித்த குழு உள்ளே புகுந்து

                                                                      பிரச்சாரத்தில் பங்குபற்றிய மக்கள் மீதும் இளைஞர்கள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

                                                                      சம்பவம் தேர்தல் கடமைக்காக நின்ற பொலிஸார் முன்நிலையிலேயே

                                                                      இடம்பெற்றுள்ளது. இதன்போது தாக்குதல் நடத்தியவர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

                                                                      தாக்குதல் நடத்தியவர்கள் மதுபோதையில் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

                                                                          கொத்து குண்டு தாக்குதலில் 12 சிறுவர்கள் மரணம் - சவூதி அட்டூழியம்
                                                                          Posted in இலங்கை செய்திகள்

                                                                          வீட்டுக்குள் சுட்டு கொலை செய்ய பட்ட நிலையில் பெண் சடலமாக மீட்பு

                                                                          வீட்டுக்குள் சுட்டு கொலை செய்ய பட்ட நிலையில் பெண் சடலமாக மீட்பு

                                                                          இலங்கை பல்லத்தர பகுதியில் ஐம்பத்தி இரண்டு வயதுடைய

                                                                          பெண்மணி ஒருவர் வரத்து வீட்டு வளாகத்தில் சுட்டு படு கொலை

                                                                          செய்ய பட்ட நிலையில் சடலமாக மீட்க பட்டுள்ளார்

                                                                          இவரது இந்த படுகொலைகளுக்கான காரணம் தெரியவரவில்லை
                                                                          பொலிஸ் விசாரணைகள் தொடர்ந்த வண்னம் உள்ளது