புதிய பாராளுமன்றம் – ஆகஸ்ட் 20 கூடும்
2020 பொது தேர்தல் வாக்கெடுப்பு நடைபெற்றதன் பின்னர் புதிய பாராளுமன்றத்திற்கான
கூடல் ஆகஸ்ட் மாதம் 20 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான வர்த்தமானி அறிவித்தல் நேற்று வௌியிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
இதன் அடிப்படையில் ஆகஸ்ட் மாதம் 20 ஆம் திகதி வியாழக் கிழமை புதிய பாராளுமன்றம் கூட்டப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.