Posted in இலங்கை செய்திகள்

அமைச்சருடன் பழகிய 118 பேருக்கு கொரனோ – தனிமை படுத்தல்

இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகரவுடன் நெருங்கிப் பழகிய

118 பேர் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என, சுகாதாரப் பிரிவினர் தெரிவித்தனர்.

இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகரவுடன் நெருங்கிப் பழகிய சமய பெரியார்கள் ஐந்து பேர் உட்பட ஹெட்டிப்பொலவில் உள்ள

அலுவலகத்திற்கு மக்கள் சந்திப்பு தினத்தன்று சமூகமளித்த 75 நபர்கள் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என, சுகாதாரப் பிரிவினர் தெரிவித்தனர்.

மேலும், அமைச்சரின் குடும்ப அங்கத்தவர்கள், பாதுகாப்பு அதிகாரிகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என, சுகாதாரப் பிரிவினர் தெரிவித்தனர்.

இராஜாங்க அமைச்சர் ஹிக்கடுவ பிரதேசத்தில் அமைந்துள்ள

சுயதனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அத்துடன், தயாசிறி ஜயசேகரவின் பிரத்தியேக செயலாளருக்கும்

கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

Posted in இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் 6 பகுதிகள் சிவப்பு எச்சரிக்கை – மக்கள் நடமாட்டம் முடக்கம்

மட்டக்களப்பில் 6 பகுதிகள் சிவப்பு எச்சரிக்கை – மக்கள் நடமாட்டம் முடக்கம்

கிழக்கு மாகாணத்தில் 6 பிரதேசங்கள், கொரோனா சிவப்பு வலயங்கள் என்று அடையாளப்படுத்தப்பட்டுள்ளன என கிழக்கு

மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் அ.லதாகரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் நடைபெற்ற ஊடக சந்திப்பில், அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்படி, மட்டக்களப்பு – திருகோணமலை நகர், காத்தான்குடி, அட்டாளைச்சேனை, கல்முனை தெற்கு, சாய்ந்தமருது, உகன ஆகிய

6 சுகாதார பிரிவுகளே, இவ்வாறு சிவப்பு வலயங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன என அவர் தெரிவித்தார்.

இதேவேளை, அட்டாளைச்சேனை சுகாதார வைத்தியதிகாரி பிரிவுக்குட்பட்ட ஒலுவில், பாலமுனை, அட்டாளைச்சேனை, தீகவாபி

ஆகிய கிராமங்களில் இதுவரை 87 கொரோனாத் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் எனவும், 02 மரணங்கள்

நிகழ்ந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டிய அப்பிரிவின் வைத்தியதிகாரி டொக்டர் எஸ். அகிலன், கொரோனா தொற்று சிவப்பு எச்சரிக்கை வலயமாக அட்டாளைச்சேனை

பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமையால், பொதுமக்கள் தொடர்ந்தும் சுகாதார அறிவுறுத்தல்களைப் பேணி நடந்துகொள்ளுமாறு வலியுறுத்தினார்.

Posted in இலங்கை செய்திகள்

ஹக்கீமுக்கு கொரோனா

ஹக்கீமுக்கு கொரோனா

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர், பாராளுமன்ற

உறுப்பினர் ரவூப் ஹக்கீமுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.

தற்போது, தான் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தனது

டுவிட்டரில் பதிவொன்றை இட்டு இன்று(10) தெரிவித்துள்ளார்.

அத்துடன், கடந்த 10 நாள்களில் தன்னுடன் தொடர்புகொண்டவர்கள் தேவையான

சுகாதார பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகயை மேற்கொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

Posted in இலங்கை செய்திகள்

யுத்தத்தில் இறந்தவர்களை நினைவு கூறுவதற்கு பொதுத் தூபி- டக்கிளஸ் வெடி

யுத்தத்தில் இறந்தவர்களை நினைவு கூறுவதற்கு பொதுத் தூபி- டக்கிளஸ் வெடி

தமிழ் மக்களின் பெயரால் நடைபெற்ற ஆரம்பிக்கப்பட்ட யுத்தத்தின் காரணமாக உயிரிழந்தவர்களை நினைவு கூறுவதற்கு

பொதுவான நினைவுத் தூபி அவசியம் என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

யாழ். பல்கலைக் கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி இடித்தழிக்கப்பட்டமை தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே இதனைத் தெரிவித்தார்

இதுதொடர்பாக மேலும் கருத்து தெரிவிக்கையில், உரிய அனுமதி பெறப்படாமல் சட்டத்திற்கு முரணாக அமைக்கப்பட்ட

காரணத்தினாலேயே குறித்த தூபி இடிக்கப்பட்டதாக யாழ். பல்கலைக் கழக துணைவேந்தர் வெளியிட்டுள்ள கருத்தை சுட்டிக்

காட்டிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நீண்ட காலத் திட்டமிடல் இன்றி குறுகிய காலச் சிந்தனையுடன் மேற்கொள்ளுகின்ற

தீர்மானங்கள் எந்தளவு அவமானத்தையும் அசௌகரியங்களையும் ஏற்படுத்தும் என்பதை இந்தச் சம்பவமும் வெளிப்படுத்தியுள்ளது எனவும் தெரிவித்தார்.

மேலும், கடந்த ஆட்சிக் காலத்தில் யுத்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவு கூருவதற்கான பொதுவான தூபி அமைக்கப்பட வேண்டும்

என்று தனிநபர் பிரேரணை கொண்டு வந்ததை சுட்டிக் காட்டிய அமைச்சர், தமிழ் பிரதிநிதிகளின் போதிய ஒத்துளைப்பு

இன்மையினால் தொடர்ந்தும் முன்னெடுக்க முடியவில்லை என்று தெரிவித்ததுடன், எதிர்வரும் அமைச்சரவையில் குறித்த விடயம்

தொடர்பாக பிரஸ்தாபிக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..

Posted in இலங்கை செய்திகள்

யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் பதற்றம்; முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடித்தழிப்பு

யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் பதற்றம்; முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடித்தழிப்பு

யாழ்ப்பாணம் பல்கலைக் கழக வளாகத்துக்குள் உள்ள நினைவுத் தூபி இன்று (08) இரவோடிரவாக இடித்தழிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக் கழக வாயில் மூடப்பட்டு எவரும் உட்செல்ல அனுமதிக்கப்படவில்லை. இதனால் அங்கு பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது.

நினைவுத் தூபிகள் இடித்து அழிக்கப்படுவதாக கிடைத்த தகவலை அடுத்து மாணவர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் பல்கலை முன்றலில் கூடியுள்ளனர்.

யாழ்பல்கலைகழக வளாகத்திற்குள் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை இடித்தழிக்கும் நடவடிக்கை இடம்பெறுகின்றது.

முகங்களை முழுமையாக மூடியபடி இராணுவத்தினர் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர் என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பின்னிணைப்பு

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம் மின்குமிழ்கள் அணைக்கப்பட்டு ஜே.சி.பி இயந்திரம் கொண்டு இடித்தழிக்கப்பட்டது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பராமரிப்பு பகுதியே இந்த இடித்து அழிக்கும் பணியை இரவோடு இரவாக முன்னெடுத்தது.

முள்ளிவாய்க்காலில் இறுதிக்கட்டப் போரில் உயிரிழந்த பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நினைவாக,

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் நினைவிடம் ஒன்று மாணவர்களால் அமைக்கப்பட்டது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நிர்வாகத்தின் வழிகாட்டலுடன் முன்னெடுக்கப்பட்டு வந்த கட்டுமானப் பணிகளை இடைநிறுத்துமாறு உயர்கல்வி அமைச்சும், பல்கலைக்கழக

மானியங்கள் ஆணைக்குழுவும், 2018ஆம் ஆண்டு ஏப்ரலில் பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு உத்தரவிட்டது.

முள்ளிவாய்க்கால் நினைவிடத்தை அமைக்கும் பணிகள் மாணவர்களால் முடிக்கப்பட்டு நினைவேந்தல் நிகழ்வும் நடத்தப்பட்டது.

இந்நிலையில் நினைவு தூபி இடித்தடிக்கப்பட்டது.

இதேவேளை நள்ளிரவை தாண்டியும் பல்கலை மாணவர்கள் அரசியல் கட்சி பிரதிநிதிகள் பல்கலை முன்றலில் அமர்ந்து எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அந்நிலையில் பெருமளவான பொலிஸ் விசேட அதிரடி படையினர் , பொலிஸார் , இராணுவத்தினர் குவிக்கப்ட்டுள்ளனர்.

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடித்தழிப்பு
முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடித்தழிப்பு
Posted in இலங்கை செய்திகள்

கிளிநொச்சியில் மக்களுக்கு உணவு வழங்கும் இராணுவம்

கிளிநொச்சியில் மக்களுக்கு உணவு வழங்கும் இராணுவம்

சிங்கப்பூரில் உள்ள பௌத்த விகாரையின் தலைமை தேரர் காலே உதித்த தேரர், வணக்கத்திற்குரிய பலங்கொட புத்தகோஷா தேரர் மற்றும் சிங்கப்பூர் புத்த சங்கத்தின் உறுப்பினர்கள் ஆகியோரின்

அனுசரணையில் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் படையினர் கொவிட்-19 தொற்று நோயின்

காரணமாக பாதிப்புக்குள்ளான கிளிநொச்சி பகுதியில் உள்ள வறிய குடும்பங்களுக்கு 07 ஆம் திகதி 1000 உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டன.

இதற்கான ஒருங்கிணைப்பானது கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் சம்பத் கொட்டுவேகொடவினால் மேற்கொள்ளப்பட்டது.

கொவிட்-19 கட்டுப்பாடுகள் மற்றும் வாழ்வாதார வழிமுறைகள் இழப்பு காரணமாக கஷ்டங்களுக்கு உள்ளான குடும்பங்களை

அடிப்படையாக கொண்டு வரவிருக்கும் இந்து நம்பிக்கையின் தைப் பொங்கல் திருவிழாவை நடத்துவதற்கான ஊக்கமாகவும் இந்த திட்டம் மேற்கொள்ளப்பட்டது.

கிளநொச்சி பாதுகாப்புப் படைத் தளபதி மேஜர் ஜெனரல் சம்பத் கொட்டுவேகொட , 57வது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் சுஜீவ சேனரத் யாப்பா, 571 மற்றும் 662 வது பிரிகேட்

தளபதிகள், 9வது விஜயபாகு காலாட் படையணி மற்றும் 20 வது பட்டாலியன் இலங்கை இலேசாயுத காலாட்படையணியின் கட்டளை அதிகாரிகள் குறித்த பயனாளிகளின் வீடுகளுக்கு சென்று

சுகாதார வழிகாட்டுதல்களையும் தடுப்பு நடவடிக்கைகளையும் கடைபிடித்து குறித்த உலர் உணவு பொதிகளை வழங்கினர்.

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கேணல் பொது பதவி நிலை கேணல் அனில் சோமவீர மற்றும் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் தலைமை

ஒருங்கிணைப்பாளர் சிவில் விவகாரங்கள் லெப்டினன்ட் கேணல் எல்.கித்சிறி ஆகியோர் குறித்த திட்டத்தினை வெற்றிகரமாக

நிறைவு செய்ய நன்கொடையாளர்களுடன் ஒருங்கிணைப்பினை மேற்கொண்டு தங்களது முழுமையான ஒத்துழைப்பை வழங்கினர்.

Posted in இலங்கை செய்திகள்

மூவாயிரம் வீடுகளை அமைக்கும் கோட்டா அரசு

மூவாயிரம் வீடுகளை அமைக்கும் கோட்டா அரசு

கொட்டாவை – மாகும்புர பிரதேசத்தில் 314 வீடுகளைக் கொண்ட மாடிவீட்டுத் தொகுதி நடுத்தர வர்க்கத்தினருக்காக ஐயாயிரம் மாடிவீட்டுத் தொகுதிகளை அமைக்கும் அரசாங்கத்தின்

வேலைத்திட்டத்தின் கீழ் அமைக்கப்படவுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

இதன் முதல் கட்டமாக மூவாயிரம் வீடுகள் அமைக்கப்படவுள்ளன.

இதற்காக 40 பில்லியன் ரூபா செலவிடப்படும். மாக்கும்புர பலநோக்கு போக்குவரத்து மத்திய நிலையத்தின் அதிவேக

நுழைவுப் பகுதிக்கும் ஹைலெவல் பாதைக்கும் அருகில் இந்த வீடுகள் அமைக்கப்படவுள்ளமை விசேட அம்சமாகும்.

கொழும்பு ஒன்று முதல் 15 வரையான கொழும்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் 68 ஆயிரத்து 894 குடிசைகள் அமைந்துள்ளன.

இவற்றில் சுமார் 20 ஆயிரம் குடும்பங்களை புதிய வீடுகளில் குடியமர்த்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. 2022ஆம்

ஆண்டு ஜனவரி ஏழாம் திகதிக்குள் மூவாயிரம் வீடுகளை அமைக்க அமைச்சு எதிர்பார்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Posted in இலங்கை செய்திகள்

வெளிநாடுகளிலிருந்து இலங்கையர்களை அழைத்து வருவதில் முறைக்கேடுகள் நடந்தால் அதற்கெதிராக நடவடிக்கை

வெளிநாடுகளிலிருந்து இலங்கையர்களை அழைத்து வருவதில் முறைக்கேடுகள் நடந்தால் அதற்கெதிராக நடவடிக்கை

வெளிநாடுகளில் இருந்து இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்காக தற்பொழுது நடைமுறைப்படுத்தப்படும் விமான சேவைகளின் எண்ணிக்கையை அடுத்த வாரத்தில் இருந்து

அதிகரிப்பதற்கு தேவையான நடவடிக்கையை அரசாங்கம் மேற்கொண்டிருப்பதாக அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

வெளிநாடுகளில் இருந்து இலங்கையர்களை அழைத்து வருவதில் எந்தவகையான முறைக்கேடுகள் நடைப்பெற்றாலும்

அதற்கெதிராக நடவடிக்கை எடுப்பதற்கு தயாராக இருப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.

கொரோனா தொற்றுக்கு மத்தியில் நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற சபை

ஒத்திவைப்பு வேளையில் உரையாற்றுகையிலேயே அமைச்சர் இந்த விடயத்தினை குறிப்பிட்டார்.

ஜனாதிபதியுடன் பேச்சு வார்த்தை நடத்தி அடுத்த வாரம் முதல் இவர்களை அழைத்து வருவதற்கான விமான சேவைகள் அதிகரிக்கப்படவுள்ளது.

Pay தனிமைப்படுத்தல் அதாவது பணம் செலுத்தி தனிமைப்படுத்தல் கட்டாயமாக்கப்படவில்லை. 45,000 க்கும்

மேற்பட்டோர் வெளிநாடுகளில் இருந்து இலங்கை வரவழைக்கப்பட்டு அவர்களுக்கு இலவசமாக தனிமைப்படுத்தல் மேற்கொள்ளப்பட்டது.

வெளிநாடுகளில் உள்ள இலங்கை பணியாளர்களை நாட்டுக்கு வரவழைத்து இலவசமாக தனிமைப்படுத்தல் மேற்கொள்ளப்படும்.

இந்த நடவடிக்கைகள் ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைவாக முன்னெடுக்கப்படுகின்றன.

கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வேலைத்திட்டம் தொடர்பில் பொது மக்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளதாக

பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க சுட்டிக்காட்டியபோதே அமைச்சர் இந்த விடயங்களை குறிப்பிட்டார்.

Posted in இலங்கை செய்திகள்

பொலிஸ் திடீர் சோதனை -26 பேர் கைது

பொலிஸ் திடீர் சோதனை -26 பேர் கைது

கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 26 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முகக்கவசம் அணியாத, சமூக இடைவெளியை பேணாத

குற்றங்களுக்காக இவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸ்

ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

கடந்த வருடம் ஒக்டோபர் 30ஆம் திகதியிலிருந்து இதுவரையில் 2361

பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

செட்டிநாடு மீன் குழம்பு இப்படி செய்ங்க உடனே காலியாகும்
Posted in இலங்கை செய்திகள்

ஆற்றில் மிதந்த மனித சடலம் – நடந்தது என்ன ..?

ஆற்றில் மிதந்த மனித சடலம் – நடந்தது என்ன ..?

மட்டக்களப்பு தேற்றாத்தீவு கடற்கரையை அண்டிய வாவிபகுதியில் ஆண் ஒருவரின் சடலம் அடையாளம் காணப்படாத நிலையில்

இன்று (08) கரையொதுங்கியுள்ள நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிசார் தெரிவித்தனர்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட நபர் சுமார் 60 வயதுமதிக்கத்தக்கவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சடலத்தின் அடையாளம் இதுவரை கணப்படாத நிலையில் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா

வைத்தியசாலைக்கு ஒப்படைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதக பொலிசார் தெரிவித்தனர்.

Posted in இலங்கை செய்திகள்

யாழில் வீடு புகுந்து ரவுடிகள் அட்டகாசம்

யாழில் வீடு புகுந்து ரவுடிகள் அட்டகாசம்

உடுவில் அம்பலவாணர் வீதியில் வீடு ஒன்றுக்குள் புகுந்த வன்முறைக் கும்பல் அட்டூழியத்தில் ஈடுபட்டுவிட்டுத் தப்பித்துள்ளது.

வயோதிபப் பெண்ணும் அவருடைய மகனும் வசிக்கும் வீட்டிலேயே இந்தத் தாக்குதலை வன்முறைக் கும்பல் நேற்று (07) இரவு 9.30 மணி அளவில் மேற்கொண்டுள்ளது.

5 மோட்டார் சைக்கிள்களில் வந்த 10 பேர் கொண்ட குழு முகத்தை மூடிக் கட்டியவாறு வீட்டுக்குள் புகுந்து பெறுமதியான

இலத்திரனியல் சாதனங்கள் உள்ளிட்ட உடமைகளைத் தாக்கிச் சேதப்படுத்தி அட்டூழியத்தில் ஈடுபட்டுவிட்டுத் தப்பித்துள்ளது.

கொழும்பில் இருந்து வருகை தந்து வாடகை வீடு எடுத்து நீண்டகாலமாக வசிக்கும் தாயும் மகனும் எந்தவொரு பிரச்சினைக்கும் செல்வதில்லை என்று அயலவர்கள் தெரிவித்தனர்.

தாக்குதல் நடத்திய கும்பலும் தாய் மற்றும் மகன் மீது தாக்குதல் நடத்தாமல் அச்சுறுத்தும் வகையில் உடமைகளைச் சேதப்படுத்திவிட்டுத் தப்பித்துள்ளது.

சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

Posted in இலங்கை செய்திகள்

அமைச்சருக்கு கொரனோ

இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகரவுக்கு கொரோனா

வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்த, ஹிக்கடுவ பகுதியில் உள்ள ஹோட்டலொன்றில் அமைக்கப்பட்டுள்ள

தனிமைப்படுத்தல் நிலையத்தில் அவர் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Posted in இலங்கை செய்திகள்

சொத்துக்காக மோதல்; பெண் படுகொலை

சொத்துக்காக மோதல்; பெண் படுகொலை

மத்துகம வெலிமானாவ பகுதியில் இன்று(08) அதிகாலை 1 மணியளவில் 62 வயது பெண் சொகுசு வாகனத்தில் மோதி கொலைசெய்யப்பட்டுள்ளார்.

இதனையடுத்து, கொலையை செய்த உறவினர் அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பெண்ணின் 37 வயது மகன் உயிரிழந்த நிலையில் அவரது சடலத்தை வீட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது, அவரது சொத்துகளை பிரித்து கொள்வது தொடர்பில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து, குறித்த கொலைச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

cbi-6295 என்ன வெள்ளை நிற வெகனார் வாகனத்தில் குறித்த சந்தேக நபர் தப்பிச்சென்றுள்ளதாக தெரிவித்த அவர், தகவல் அறிந்தவர்கள் 0718591701 என்ற மத்துகம பிரதான பொலிஸ் பரிசோதகரின் தொலைபேசி இலக்கத்துக்கு அறிவிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

Posted in இலங்கை செய்திகள்

முகக்கவசம் இன்றி நடமாடிய 377 பேரில் 3 பேருக்கு கொரோனா

முகக்கவசம் இன்றி நடமாடிய 377 பேரில் 3 பேருக்கு கொரோனா

முகக்கவசம் அணியாதவர்களை கைது செய்து ரபிட் ஆன்டிஜன் அல்லது பி.சீ.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்துகின்ற திட்டத்தின்

மூலம் நேற்றைய தினம் (07) கைது செய்யப்பட்டவர்களில் மூவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

முகக்கவசம் அணியாது பொது இடங்களில் நடமாடிக் கொண்டிருந்த 377 பேர் நேற்றைய தினம் கைது

செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களுள் 220 பேர் ஆன்டிஜன் பரிசோதனைக்கும், 157 பேர் பி.சீ.ஆர் பரிசோதனைக்கும்

உட்படுத்தப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

இதேவேளை மீன் கடைகள், மரக்கறிக் கடைகள் மற்றும் பொருளாதார மத்திய நிலையங்களில் கொரோனா

தொற்றாளர்களை இனங்காண்பதற்கான பரிசோதனைகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

Posted in இலங்கை செய்திகள்

வௌிநாட்டில் உள்ள இலங்கையர்களுக்கான விஷேட அறிவிப்பு

வௌிநாட்டில் உள்ள இலங்கையர்களுக்கான விஷேட அறிவிப்பு

வௌிநாட்டில் சிக்கியுள்ள இலங்கையர்களை அழைத்து வருவதற்காக

எதிர்வரும் வாரம் முதல் விமான சேவைகளை அதிகரிக்கவுள்ளதாக அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளது.

டுவிட்டர் கணக்கில் பதிவு ஒன்றை பதிவிட்டு அவர் இதனை தெரிவித்துள்ளார்.

பணம் செலுத்தி தனிமைப்படுத்தலுக்கு உட்பட வேண்டும் என்ற அவசியம் இல்லை

எனவும் வருகை தரும் அனைவருக்கும் அரசாங்கத்தினால்

தனிமைப்படுத்தல் வசதி ஏற்படுத்தி தரப்படும் எனவும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

Posted in இலங்கை செய்திகள்

கிளிநொச்சியில் கல்வி மேம்பாட்டுக்கு இராணுவத்தினர் உதவி

கிளிநொச்சியில் கல்வி மேம்பாட்டுக்கு இராணுவத்தினர் உதவி

கிளிநொச்சி மாவட்ட பாடசாலை மாணவர்களின் கல்வித் தேவைகளுக்கு உதவும் வகையில் கிளிநொச்சி பாதுகாப்புப் படை

தலைமையகத்தினால் அப்பகுதியில் வசிக்கும் 300 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் மற்றும் வாசிப்பு உசாத்துணை நூல்கள் வழங்கி வைக்கப்பட்டன.

மகாதேவ சுவாமிகள் சிறுவர் இல்லம் மற்றும் அறிவுச்சோலை சிறுவர் இல்லம் ஆகிய சிறுவர் இல்லங்களை சேர்ந்த

மாணவர்களுக்கே இவ்வாறு கற்றல் உபகரணங்கள் மற்றும் உசாத்துணை வாசிப்பு நூல்கள் என்பன வழங்கி வைக்கப்பட்டன.

கிளிநொச்சி பாதுகாப்புப் படை தலைமையகத்தினால் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு அமைவாக நன்கொடையாளர்

ஒருவரினால் வழங்கப்பட்ட நிதியுதவி மூலம் தேவையுடைய பாடசாலை மாணவர்களுக்கு இராணுவத்தினர் உதவி அளித்தனர்.

இந்த நிகழ்வில் கிளிநொச்சி பாதுகாப்பு படை கட்டளைத் தளபதி, இலங்கை பீரங்கிப்படையணியின் சேவா வனிதா பிரிவின் தலைவி,

நன்கொடையாளர்கள், அதிதிகள் மற்றும் மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Posted in இலங்கை செய்திகள்

தனிமைப்படுத்தல் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பகுதி பொதுமக்களுகான முக்கிய அறிவித்தல்

தனிமைப்படுத்தல் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பகுதி பொதுமக்களுகான முக்கிய அறிவித்தல்

கொரோனா தொற்றின் காரணமாக பொது மக்களின் சுகாதார நலன் கருதி காத்தான்குடி நகரம் கடந்த ஒரு வார காலமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளது

கடந்த நாட்களாக பிரதேசத்தில் எடுக்கப்படுகின்ற ரபிட் அன்டிஜன் பரிசோதனையின் படி தொடர்ச்சியாக தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுவது மிகப் பெரும் கவலையை

ஏற்படுத்தியுள்ளது. இது மிக அவசியமான சுகாதார நடைமுறைகளை பேண வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகின்றது.

உஎனவேதான் இவ்வாறான தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்புக்கு தொடர்ச்சியாக காத்தான்குடி பிரதேச எல்லைக்குள் முடக்க நிலையினை முறையாக பின்பற்றப்படாமையினை எல்லோராலும் கவனத்துக்கும் கொண்டு வரப்பட்டதுடன் இது சம்மந்தமாக இன்றைய மாவட்ட செயலக கூட்டத்திலும் கலந்தாலோசிக்கப்பட்டது.

அதனால் இன்று மாலை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் சில இறுக்கமான நடைமுறைகளை பின்பற்ற வேண்டியதன் அவசியத்தினை மாவட்ட கொரோனா

தடுப்பு செயலணியினர் எடுத்துள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை கருணாகரன் தெரிவித்தார்.

இதனால் இன்று இரவிலிருந்து மிகக் கடுமையான பாதுகாப்பு நடைமுறைகள் காத்தான்குடி பிரதேச எல்லைக்குள் நடைமுறைப்படுத்தப்படும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வீட்டைவிட்டு அனாவசியமாக வெளியேறல், தேவையற்ற நடமாட்டம் என்பன கண்டிப்பாகத் தவிர்க்கப்பட வேண்டும். நாட்டின் பிற மாவட்டங்களில் இவ்வாறான நிலை

காணப்பட்டதனாலேயே பிரதேச முடக்கம் வாரங்கள் கடந்து மாதங்களாக நீண்டமையை நாமறிவோம்.

எனவே அனுமதியின்றி வீதியில் நடமாடுகின்றவர்கள் வீட்டுக்கு வெளியே வருகின்றவர்கள் சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு பொலீசாருக்கு இறுக்கமான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன

. அத்தோடு அனுமதியின்றி வெளியில் வாகனங்களில் நடமாடுகின்றவர்களது வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அரசுடமை ஆக்கப்படும்.

அனுமதியின்றி கடைகளைத் திறந்து வியாபாரம் செய்கின்றவர்களுக்கெதிராக உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

இன்று இரவிலிருந்து முழுமையான இராணுவ பாதுகாப்பு நடைமுறைகளும் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது எனவும் குறிப்பிட்டார்.

இவ் நடைமுறைகளை பின்பற்றாத பட்சத்தில் வருகின்ற வாரங்களில் கூட எமது பிரதேசத்தில் சாதாரண வியாபார

நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது துரதிர்ஷ்டவசமான நிலைக்கு நாம் தள்ளப்படுவோம்.

எனவே எமது பிரதேசத்தின் பொருளாதார நிலையினைக் கருத்தில் கொண்டும் எமது மக்களின் பாதுகாப்பினை கருத்திற் கொண்டும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி பொது முடக்கத்துக்கு

பூரணமான ஒத்துழைப்பினை தருமாறு மிகவும் பணிவன்புடன் மாவட்ட கொரோனா தடுப்பு செயலணியினர் கேட்டுக்கொள்கின்றேன்.

சமூகப் பொறுப்பு சகலருக்கும் உண்டு என்பதனையும், நாம் தொற்றுக்குள்ளாகாமலும் பிறரையும் தொற்றுக்குள்ளாக்காமலும்

செயற்பட்டு பொறுப்புடன் நடந்துகொள்வோம் என்றும் மாவட்ட அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.

Posted in இலங்கை செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய எவருக்கும் மன்னிப்பு இல்லை

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய எவருக்கும் மன்னிப்பு இல்லை

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய எவருக்கும்

ஜனாதிபதி மன்னிப்பு அளிக்கப் போவதில்லை என்று நீதி அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய எந்தவொரு குற்றவாளிக்கும்

ஜனாதிபதி மன்னிப்பு வழங்கப் போவதில்லை என்று நீதி அமைச்சர் அலி சப்ரி வலியுறுத்தியுள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

சட்டமா அதிபருக்கு உரிய தகவல்கள் கிடைத்ததும், உரியவர்களுக்கு

எதிராக குற்றப் பத்திரத்தை தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

Posted in இலங்கை செய்திகள்

மாணவர்களுக்கு சீருடை- கல்வி அமைச்சர்

மாணவர்களுக்கு சீருடை- கல்வி அமைச்சர்

பாடசாலைகள் ஆரம்பித்ததும் மாணவர்களுக்கு சீருடைத் துணிகளை வழங்கவுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் அசோக் அபேசிங்க நேற்றைய தினம் வாய்மூல பதிலை எதிர்பார்த்து கேள்வியொன்றை சமர்ப்பித்த

போது, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இடைக்கேள்வி ஒன்றை கேட்டார். மாணவர்களுக்கு புது வருடத்திற்கான சீருடைத் துணி இன்னமும் வழங்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.

இதற்கு பதிலளித்த கல்வி அமைச்சர், சீருடைத் துணி வழங்கும் வேலைத்திட்டம் சிறப்பாக முன்னெடுக்கப்படுகின்றது.

பாடசாலைகளை தொடங்காமல், சீருடையை விநியோகிப்பது நடைமுறைக்கு சாத்தியமானது அல்ல.

தரம் ஒன்று முதல் தரம் 11 வரையான வகுப்புக்களுக்குரிய பாடப்புத்தகங்கள் கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ

இணையத்தளத்தில் தரவேற்றம் செய்யப்பட்டுள்ளன. பாடசாலைகள் ஆரம்பமானவுடன், புதிய புத்தகங்கள்

மாணவர்களுக்கு நேரடியாக விநியோகிக்கப்படும் எனவும் கல்வி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

செட்டிநாடு மீன் குழம்பு இப்படி செய்ங்க உடனே காலியாகும்
Posted in இலங்கை செய்திகள்

வாகன விபத்தில் இலங்கையில் 1844 பேர் பலி

வாகன விபத்தில் இலங்கையில் 1844 பேர் பலி

இலங்கையில் நடந்து முடிந்த ஆண்டில் சாலை விபத்துக்களில்

மட்டும் சிக்கி சுமார் 1844 பேர் பலியாகியுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்

மேலும் இவ்வாறன விபத்துக்களில் சுமார் 5384 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் ,

சிலர் முற்றாக செயல் முடக்க நிலைக்கு சென்றுள்ளதாகவும் தெரிவிக்க படுகிறது

சாலை விதிகளை கடை பிடிக்க தவறுவதன் விளைவே இந்த

விபத்துக்கள் அதிகம் இடம்பெற காரணம் என பொலிசார் தெரிவிக்கின்றனர்