விஜயதாசவுக்கு எதிரான தடை உத்தரவு
Posted in இலங்கை செய்திகள்

விஜயதாசவுக்கு எதிரான தடை உத்தரவு

விஜயதாசவுக்கு எதிரான தடை உத்தரவு

விஜயதாசவுக்கு எதிரான தடை உத்தரவு ,ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக விஜயதாச ராஜபக்ஷவையும், பதில் செயலாளராக கீர்த்தி உடவத்தவையும் நியமிப்பதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய அந்த

கட்சியின் அமைப்புக்கள் மற்றும் அதிகாரிகள் செயற்படுவதற்கு தடை உத்தரவு பிறப்பிக்குமாறு முன்வைத்த கோரிக்கையை கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று (16) நிராகரித்துள்ளது.

எவ்வாறாயினும், இந்த முறைப்பாட்டைத் திருத்தவும், உரிய தடை உத்தரவுக்கான சமர்ப்பணங்களை உறுதிப்படுத்தவும் வாதிக்கு அவகாசம் உள்ளதாக நீதிபதி சந்துன் விதான தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் துமிந்த திசாநாயக்கவினால் இந்த முறைப்பாடு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இராணுவத்தினரின் எண்ணிக்கையை குறைக்க அரசுஅவதானம்
Posted in இலங்கை செய்திகள்

இராணுவத்தினரின் எண்ணிக்கையை குறைக்க அரசுஅவதானம்

இராணுவத்தினரின் எண்ணிக்கையை குறைக்க அரசுஅவதானம்

இராணுவத்தினரின் எண்ணிக்கையை குறைக்க அரசுஅவதானம் ,2030 ஆம் ஆண்டளவில் இராணுவத்தினரின் எண்ணிக்கையை ஒரு இலட்சமாக கொண்டு வருவதற்கு எதிர்பார்க்கப்படுவதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.

இராணுவத்தை தயார்படுத்துவதே அரசாங்கத்தின் நோக்கம்

யுத்தத்தின் பின்னரான தற்போதைய மற்றும் எதிர்கால அச்சுறுத்தல்களை கருத்தில் கொண்டு இந்த நாட்டுக்கு ஏற்றவாறு இராணுவத்தை தயார்படுத்துவதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என அவர் தெரிவித்துள்ளார்.

“போருக்குப் பின்னர், தற்போதைய மற்றும் எதிர்கால அச்சுறுத்தல்களை ஆராய்ந்து எமது நாட்டுக்கு ஏற்ற இராணுவத்தை தயார்படுத்துவது ஜனாதிபதி, அரசாங்கம் மற்றும் பாதுகாப்பு சபையின் நம்பிக்கையாகும்.

அதன்படி, பாதுகாப்பு ஆய்வு 2030 என்ற திட்டத்தின் கீழ் தனி நிபுணர் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, எங்களிடம் 208,000 வீரர்கள் உள்ளனர்.

அதனை ஒரு லட்சம் வரை கொண்டு வர வேண்டும் என எதிர்பார்க்கிறோம்.

நாங்கள் யாரையும் நீக்குவதற்கு எதிர்பார்க்க பார்க்கவில்லை.

ராணுவத்தினரின் எண்ணிக்கை

எண்ணிக்கையில், ராணுவத்தில் ஏற்படும் இயற்கையான குறைவைக் கணக்கிட்டு, 2030க்குள், ராணுவத்தினரின் எண்ணிக்கையை 100,000 அளவில் வைத்திருப்பதே எங்கள் தற்போதைய எதிர்பார்ப்பாகும்.

மேலும், கடற்படை மற்றும் விமானப்படை பலப்படுத்தப்பட வேண்டும்.

புவியியல் ரீதியாக, நாம் மிகவும் சிக்கலான முக்கியமான இடத்தில் இருக்கிறோம்.

எனவே, கடற்படையை பலப்படுத்துவதையும் ஒரு திட்டமாக செயல்படுத்தி வருகிறோம்” என்றார்.

பிரான்ஸ் வீதியில் உணவின்றி தவிக்கும் தமிழ் முதியவர்
Posted in இலங்கை செய்திகள்

பிரான்ஸ் வீதியில் உணவின்றி தவிக்கும் தமிழ் முதியவர்

பிரான்ஸ் வீதியில் உணவின்றி தவிக்கும் தமிழ் முதியவர்

பிரான்ஸ் வீதியில் உணவின்றி தவிக்கும் தமிழ் முதியவர் ,ஏதாவது வேலை கொடுங்கள் நான் பசி போக்கி கொள்வேன் என கையேந்தி நிற்கும் பரிதாப காட்சிகள் வெளியாகி பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .

சில நாட்களுக்கு முன்னதாக பிரான்ஸ் வீதியில் மதுபோதைக்கு அடிமையாகி அதில் இருந்து மீண்டுவர முடியாது ஐந்து தமிழர்கள் காணப்பட்ட காணொளிகள் வெளியாகி இருந்தன .

உண்ண உணவின்றி தவிக்கும் தமிழர்

அவ்வாறான கால பகுதியில் தற்போது ,அதே பிரான்ஸ் நாட்டில் உண்ண உணவின்றி வீதியில் உறங்கும் தமிழர் காட்சிகள் வெளியாகி ,உலக தமிழரை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது .

அகதிகளாக பிரான்ஸ் நாட்டுக்கு வந்து ,பல உளவியலுக்கு பாதிப்புக்கு உள்ளான நிலையில் ,பல தமிழர்கள் வாழ்ந்து வருவது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .

உணவின்றி வீதியில் தவிக்கும் இந்த தமிழ் , முதியவரை பிரான்ஸ் தமிழர்களே காப்பற்றி கரம் கொடுங்கள் .

சமூக வலைத் தளத்தில் வெளியாகியுள்ள அந்த காணொளியில் வெளியான கைபேசி இலக்கத்தை இங்கே தருகிறோம் .அதன் ஊடாக தொடர்பு கொண்டு உதவுங்கள் மக்களே .0033 753038400

full வீடியோ பார்க்க இதில் அழுத்துங்கள்

முள்ளிவாய்க்கால் நினைவுதினம் பிரிட்டன் பாராளுமன்றில்
Posted in இலங்கை செய்திகள்

முள்ளிவாய்க்கால் நினைவுதினம் பிரிட்டன் பாராளுமன்றில்

முள்ளிவாய்க்கால் நினைவுதினம் பிரிட்டன் பாராளுமன்றில்

முள்ளிவாய்க்கால் நினைவுதினம் பிரிட்டன் பாராளுமன்றில் இன்று இடம்பெறுகிறது .

பிரிட்டன் எதிர்கட்சியாக விளங்கும் தொழில் கட்சியின் மிக முக்கிய அமைச்சர்கள் எம்பிக்கள் கலந்து கொள்ளும் இந்த கூட்ட தொடரில் முக்கிய முடிவுகள் எட்ட படும் என எதிர் பார்க்க படுகிறது .

தமிழ் இனஅழிப்பு

தமிழ் இனஅழிப்பு இடம்பெற்று 14 வருடங்கள் கழிந்துள்ள பொழுதும் , இதுவரை பாதிக்க பட்ட தமிழருக்கான தீர்வு எட்டப்படவில்லை .

அதனை அடுத்து பிரிட்டன் பாரா ளுமன்றில் இடம்பெறும் இந்த நினைவு கூறல் கூட்ட தொடர்பில் ,பாதிக்க பட்ட தமிழருக்கான முள்ளிவாய்க்கால் நினைவுதினமாக இது அமைய பெறும் என எதிர் பார்க்க படுகிறது .

இஸ்ரேல் பாலஸ்தீனம் மீதான போர்

இஸ்ரேல் பாலஸ்தீனம் மீதான போரும் அதனால் ஏற்படுத்த பட்ட இன நிலை நிலையில் ,தற்பொழுது அது போன்று தமிழருக்கான அரசியல் விடுதலை பெற்று தர வேண்டும் என எதிர் பார்க்க படுகிறது .

ஒன்று பட்டு தமிழ் அரசியல் கட்சிகள் செயல் படுகின்ற பொழுது தான் ,தமிழருக்கான தீர்வும் ,விடுதலையும் கிட்டும் என உலக மக்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர் .

தனி ஈழம் வெற்றி பெறும்
Posted in இலங்கை செய்திகள்

தனி ஈழம் வெற்றி பெறும்

தனி ஈழம் வெற்றி பெறும்

தனி ஈழம் வெற்றி பெறும் ,தமிழர்களுக்கு எதிராகவே யுத்தம் நடத்தப்பட்டது என்ற குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் வடக்கு கிழக்கில் தனி ஈழத்தை ஸ்தாபிக்க முயற்சிக்கும் அடிப்படைவாத நோக்கம் வெற்றி பெறும் என்று ஆளும் தரப்பு எம்.பி.யான ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.

இலங்கை இராணுவத்தினருக்கு எதிராக சாட்சியம் திரட்டும் நடவடிக்கைகள் தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளதுடன் இந்த சாட்சியங்களை அடிப்படையாகக் கொண்டு சர்வதேச நீதிமன்றத்தில் இலங்கை

இராணுவத்துக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய முடியுமா என்பது குறித்து உறுப்பு நாடுகளுடன் கலந்துரையாடுவதாக ஐ. நா. சபையின் உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டுள்ளமை சாதாரண விடயமல்ல என்றார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (14) இடம்பெற்ற பலஸ்தீனத்தின் இனறைய நிலை தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில்,

இஸ்ரேல் நாட்டில் இடம்பெற்ற பொது நிகழ்ச்சியின் மீது பலஸ்தீனம் தாக்குதல் மேற்கொண்டதன் பின்னரே இரு தரப்பினருக்கும் இடையிலான முரண்பாடுகள் தீவிரமடைந்துள்ளன. யுத்தம் கொடுமையானது.

யுத்தத்தின் போது இரு தரப்பிலும் இழப்புக்கள் நேரிடும்.அப்பாவி மக்களே கொல்லப்படுவார்கள்.


பலஸ்தீனத்துக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் யுத்தம் தீவிரமடைந்துள்ள நிலையில் அமெரிக்கா,ஐக்கிய நாடுகள் சபை எவ்வாறு செயற்படுகிறது என்பதை விளங்கிக் கொள்ள முடிகிறது.

30 வருட கால யுத்தத்தின் போது இஸ்ரேல் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளது. விடுதலைப் புலிகள் சிங்களவர்களையும்,முஸ்லிம்களையும் வெட்டிக் கொலை செய்யும் போது புலிகளுக்கு எதிராக அமெரிக்கா எவ்வித

பிரேரணைகளையும் கொண்டு வரவில்லை.அதேபோல் இலங்கை இராணுவத்துக்கு ஆதரவு வழங்கும் வகையில் பிரேரணைகளை கொண்டு வரவில்லை.

விடுதலைப் புலிகள் அமைப்பு அப்பாவி மக்களை கொலை செய்து கொண்டிருந்த போது விடுதலைப் புலிகளுக்கு எதிரான தாக்குதலை நிறுத்தி அவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு,அரசியல் தீர்வு குறித்து ஆராயுமாறு அமெரிக்கா அழுத்தம் பிரயோகித்தது.

விடுதலைப் புலிகளிடமிருந்து நாட்டை பாதுகாக்க 29 ஆயிரம் இராணுவத்தினர் தமது உயிரை தியாகம் செய்தார்கள்.இந்த தியாகத்துக்கு தற்போது மதிப்பளிக்கப்படுகிறதா என்பது சந்தேகத்துக்கிடமாக உள்ளது.

இராணுவத்தினருக்கு எதிராக சாட்சியம் திரட்டும் நடவடிக்கைகள் தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த சாட்சியங்களை அடிப்படையாகக் கொண்ட சர்வதேச நீதிமன்றத்தில் இலங்கை இராணுவத்துக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய முடியுமா என்பது

குறித்து உறுப்பு நாடுகளுடன் கலந்துரையாடுவதாக ஐக்கிய நாடுகள் சபையின் உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டுள்ளார் . இது சாதாரணமானதல்ல.

இலங்கை இராணுவத்தினருக்கு எதிராக முன்னெடுக்கப்படும் வெளியக பொறிமுறை நீடித்தால் இலங்கையில் சுயாதீனத்துக்கு பாதிப்பு ஏற்படும்.

தமிழர்களுக்கு எதிராகவே யுத்தம் நடத்தப்பட்டது என்ற குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் வடக்கு கிழக்கில் தனி ஈழத்தை ஸ்தாபிக்க முயற்சிக்கும் அடிப்படைவாத நோக்கம் வெற்றிப் பெறும் என்றார்.

கல்விசாரா ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு
Posted in இலங்கை செய்திகள்

கல்விசாரா ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு

கல்விசாரா ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு

கல்விசாரா ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு ,பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பை இன்று (15) முதல் தீவிரப்படுத்த தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 13 ஆம் திகதி அமைச்சரவைக்கு அனுப்பப்பட்ட 2 அமைச்சரவைப் பத்திரங்களுக்கு உரிய தீர்வு காணப்படவில்லை என பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் கூட்டுக் குழுவின் இணைத் தலைவர் தம்மிக்க எஸ். பிரியந்த தெரிவித்தார்.

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு

இதற்கமைய பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் 14 வது நாளாக இன்றும் தொடர்கிறது.

இந்நிலையில், சகல ஊழியர்களும் பிள்ளைகளின் கல்வியில் கவனம் செலுத்தி பணிக்கு வருமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

பல கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம்

இதேவேளை, பல கோரிக்கைகளை முன்வைத்து கிராம அதிகாரிகளால் ஆரம்பிக்கப்பட்ட 3 நாள் சுகயீன விடுமுறையை அறிவிக்கும் தொழிற்சங்க நடவடிக்கையில் நிர்வாக கிராம அதிகாரிகள் இணைந்து கொள்ள உள்ளனர் என தெரிவிக்க பட்டுள்ளது .

வாக்கு சேகரிக்க சிலருக்கு பணம்
Posted in இலங்கை செய்திகள்

வாக்கு சேகரிக்க சிலருக்கு பணம்

வாக்கு சேகரிக்க சிலருக்கு பணம்

வாக்கு சேகரிக்க சிலருக்கு பணம் தேர்தலில் வெற்றி பெற்றிட தேர்தல் பரப்புரைகளை மேற்கொள்ள சிலருக்கு பணம் வழங்க படுகிறது சஜித்

இன்று மதுபான அனுமதிப் பத்திரங்கள், குறைந்த அளவில் போதையூட்டும் மதுபான வகைகளுக்கான அனுமதிப்பத்திரம் மற்றும் அதிக போதையூட்டும் மதுபான வகைகளுக்கான அனுமதிப்பத்திரம் என பெரும் அரசியல் சூதாட்டம் நடந்து வருகிறது.

இதன் மூலம் வாக்கு சேகரிக்க சிலருக்கு பணம் கிடைத்தாலும், நாட்டுக்கும், மக்களுக்கும், இளைஞர்களுக்கும் நேர்ந்த பயன் ஏதுமில்லை.

போதைப்பொருளால் ஏற்படும் பாதிப்புகள்

அரசியல்வாதிகள் வைத்தியசாலைகளுக்கு உபகரணங்களை வழங்குவதை போல மது மற்றும் போதைப்பொருளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து வெளிப்படையாக பேச வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

மதுபான நிறுவனங்கள் இன்று சக்தி வாய்ந்த ஒன்றாக மாறிவிட்டன. இந்நிறுவனங்களால் எந்தவொரு பிரபல நபரையும் பணத்துக்காக எடுத்துக் கொண்டு, அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய முறையான வரிகளை செலுத்தத் தவறிவிடுகின்றனர்.

பண பலம் இருப்பதால் மாத்திரம் வரி

பண பலம் இருப்பதால் மாத்திரம் வரி செலுத்தாமல் இருப்பது ஒருபுறமிருக்க,மறுபுறம் நாட்டு மக்களையும், பிள்ளைகளையும், இளைஞர்களையும் மரணப் படுக்கைக்கு இட்டுச்செல்கின்றனர் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இது குறித்து பிள்ளைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பெரியவர்கள் இதுபோன்ற செயல்களைச் செய்தாலும் இளைஞர்கள், பிள்ளகைகளை இதிலிருந்து விடுவிக்க வேண்டும்.

கசப்பான உண்மை

இதிலுள்ள கசப்பான உண்மையைப் பேச வேண்டும். வாக்குகளைப் பெறுவதற்காக மதுபான, பியர் அனுமதிப் பத்திரங்களை விநியோகிப்பது உகந்த காரியமல்ல.

தற்போது மத வழிபாட்டுத் தலங்களுக்கு அருகிலும் பியர் அனுமதிப்பத்திரம் வழங்கப்படுகின்றன.

எதிர்ப்புகள் வந்தாலும் அவ்வாறான அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டே வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

மூச்சுத் திட்டத்தின் 60 ஆவது கட்டமாக மஹர, மல்வத்து, ஹிரிபிட்டிய வைத்தியசாலைக்கு 1,300,000 பெறுமதியான Mini Autoclav 1 மற்றும் Pulse Oximeter 1

என்பவற்றை நன்கொடையாக வழங்கி வைக்கும் நிகழ்வில் நேற்று(14) கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

யார் என்ன சொன்னாலும்

யார் என்ன சொன்னாலும், யார் என்ன செய்தாலும் பிள்ளைகள், மது, சிகரெட் போதைவஸ்துக்களை அடியோடு ஒழிப்போம். இது குடும்பத்தின் வளர்ச்சிக்கு காரணமாக அமையும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

இவற்றைச் சொன்னால் வாக்குகளை இழக்க நேரிடும். மனசாட்சிப்படி பேச வேண்டும். பிள்ளைகளை உரிய முறையில் பராமரிக்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

தேர்தல் நேரத்தில் இளம் தலைமுறையினர் மது, போதைப்பொருள், சிகரெட் போன்றவற்றின் ஆபத்தில் இருந்து பாதுகாக்கப்படுவார்கள் என்று பல்வேறு போதைக்கு முற்றுபுள்ளி என பல பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டாலும், பாடசாலை பருவத்தில்

பல்வேறு திட்டங்களின் மூலம், ஆரம்பத்திலிருந்தே இயன்றவரை மது ஒழிப்பு திட்டத்தை கடைப்பிடிக்க நாம் அர்ப்பணிப்போடு செற்பட வேண்டும். மதுபானம்,

போதைப்பொருள் போன்றவற்றை பயன்படுத்தாத ஓர் நபராக இதை கைவிட வேண்டும் என்ற எண்ணப்பாட்டை தாம் கொண்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

மதுபாவனை கல்லீரலை கடுமையாக சேதப்படுத்தும்

மதுபாவனை கல்லீரலை கடுமையாக சேதப்படுத்தும். ராகம வைத்தியசாலையில் கல்லீரல் மாற்று சிகிச்சை திட்டம் இயங்கி வருகின்றது.

இதன் காரணமாக கசப்பான உண்மையை வெளிக்கொணர வேண்டிய தருணம் வந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

LTTE மீதான தடை நீட்டிப்பு
Posted in இலங்கை செய்திகள்

LTTE மீதான தடை நீட்டிப்பு

LTTE மீதான தடை நீட்டிப்பு

LTTE மீதான தடை நீட்டிப்பு ,தமிழீழ விடுதலை புலிகள் தடையை இந்தியா மேலும் நீடித்துள்ளதக அறிவித்துள்ளது புலிகள் அழிக்க பட்ட பின்னரும் தொடரும் தடை.

விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து கடந்த 1991 ஆம் ஆண்டு இந்தியாவில் விடுதலைப் புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்டது.

அதன் பிறகு குறிப்பிட்ட கால இடைவெளியில் இந்த தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டு வருகிறது.

இறுதியாக கடந்த 2019 ஆம் ஆண்டு தடை நீட்டிப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

தற்போது விடுதலைப் புலிகள் மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

விடுதலைப் புலிகள் உயிரோடு இந்தியா

தடை குறித்த அறிவிப்பில், “விடுதலைப் புலிகள் இன்னும் இந்தியாவின் ஒருமைப்பாடு மற்றும் பாதுகாப்புக்கு பாதகமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக மத்திய அரசு கருதுகிறது.

இலங்கையில் நடைபெற்ற போரில் கடந்த 2009 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் அமைப்பு தோற்கடிக்கப்பட்ட போதிலும், தனி ஈழம் என்ற கருத்தை அவர்கள் கைவிடவில்லை.

பிரச்சாரம் மற்றும் நிதி சேர்க்கை நடவடிக்கை

பிரச்சாரம் மற்றும் நிதி சேர்க்கை நடவடிக்கைகள் என தனி ஈழத்துக்கான நடவடிக்கைகள் தொடர்ந்து ரகசியமாக நடைபெறுகின்றன.

போரில் உயிர் தப்பிய விடுதலைப் புலிகள் அமைப்பின் நிர்வாகிகள் இலங்கையிலும் சரி, சர்வதேச அளவிலும் சரி விடுதலைப் புலிகள் அமைப்பினை மீண்டும் கட்டமைக்க தேவையான முயற்சிகளை ஆரம்பித்துள்ளனர்.

விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான குழுக்கள்

விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான குழுக்கள் மக்கள் மத்தியில் பிரிவினைவாதப் போக்கைத் தொடர்ந்து வளர்த்து வருவதோடு, இந்தியாவிலும் குறிப்பாகத் தமிழகத்தில் விடுதலைப் புலிகளுக்கான ஆதரவுத் தளத்தை மேம்படுத்துகின்றன.

இது இந்தியாவின் பிராந்திய ஒருமைப்பாட்டுக்கு பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும்” என்று கூறி தடைக்கான காரணங்களாக மத்திய உள்துறை சுட்டிக்காட்டியுள்ளது. என இந்து தெரிவித்துள்ளது .

கண்டு பிடிக்கப்பட்ட பெண்ணின் சடலம்
Posted in இலங்கை செய்திகள்

கண்டு பிடிக்கப்பட்ட பெண்ணின் சடலம்

கண்டு பிடிக்கப்பட்ட பெண்ணின் சடலம்

கண்டு பிடிக்கப்பட்ட பெண்ணின் சடலம் ,காலி தவலம பிரதேசத்தில் பெண் ஒருவரின் கொலை தொடர்பிலான மர்மங்கள் நான்கு வருடங்களின் பின்னர் காலி மாவட்ட குற்றப்பிரிவின் விசாரணைகளில் வௌிக்கொணரப்பட்டுள்ளது.

கொன்று உடலை கழிவறை குழியில் வீசிய கோரம்

பெண்ணின் கள்ளக்காதலனே அவரை கொன்று உடலை கழிவறை குழியில் வீசியது தெரியவந்தது.

இதன்படி, நான்கு வருடங்களுக்கு முன்னர் படுகொலை செய்யப்பட்ட 29 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயின் சடலம் காலி தவலம் ஹல்லகந்த பிரதேசத்தில் உள்ள காட்டுப்பகுதியில் உள்ள கழிவறை குழி ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கண்டு பிடிக்கப்பட்டிருந்தது.

நிலுஷிகா சந்தமாலி 2020 ஜூன் 6 ஆம் திகதி முதல் காணாமல் போயிருந்த நிலையில், அவரின் தாயார் அந்த நேரத்தில் பொலிஸில் முறைப்பாடு அளித்திருந்தார்.

முதல் திருமணத்திலிருந்து விவாகரத்து

தனது முதல் திருமணத்திலிருந்து விவாகரத்து பெற்ற நிலுஷிகா, தனது இரண்டு குழந்தைகளுடன் “பதல சாந்த” என்ற ஆணுடன் வாழ்ந்து வந்தார், அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை ஒஒன்றும் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மூன்று பிள்ளைகளின் தாயான இவர் காணாமல் போனமை தொடர்பில் அப்போது பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்ட போதும் எவ்வித தகவலையும் வெளிக்கொணர முடியவில்லை.

பொலிஸ் விசாரணைகள்

இவ்வாறானதொரு பின்னணியிலேயே சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் காலி பிரிவு குற்றத்தடுப்பு பிரிவினருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதன்படி, நான்கு வருடங்களாக விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், காணாமல் போன பெண்ணின் கள்ளக்காதலனான ஹேனகொடகே சாந்த என்ற 44 வயதுடைய “பதல சாந்த” என்ற நபரை கைது செய்தனர்.

அடித்துக் கொன்று உடல் மறைப்பு

இதன்போது, அவரை அடித்துக் கொன்று உடலை வீட்டின் அருகே உள்ள கழிவறை குழியில் மறைத்து வைத்தது தெரியவந்தது.

குடும்பத் தகராறு காரணமாக மனைவியைத் தாக்கிய “பதல சாந்த”, அப்பகுதியிலுள்ள வீடொன்றில் நடைபெற்ற விருந்தில் கலந்துகொண்டதாகவும், அங்கு குழந்தைகள் வந்து தாயின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகத் தெரிவித்ததாகவும் தெரியவந்துள்ளது.

அப்போது, குடிபோதையில் இருந்த பதல சாந்த, வீட்டுக்கு வந்து மனைவியை மீண்டும் தாக்கியதாகவும், மறுநாள் காலை உடல் குளிந்து காணபபட்ட நிலையில், துணியொன்றில் உடலை சுற்றி கழிவறை குழியில் போட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பின்னர், அவர் தனது மனைவியின் வீட்டிற்கு சென்று ஒன்றும் தெரியாதது போது அவர்களிடம் மனைவி தொடர்பில் விசாரித்ததாக பொலிசார் தெரிவித்தனர்.

சடலம் நிலுஷிகாவின் சடலம் என குழந்தைகளும் உறவினர்களும் அடையாளம் கண்டுள்ளனர்.

அப்போது, ​​அவர் அணிந்திருந்த காதணியும் கிடைத்தது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

சிசுவை பிரசவித்த மாணவி சிக்கினார்
Posted in இலங்கை செய்திகள்

சிசுவை பிரசவித்த மாணவி சிக்கினார்

சிசுவை பிரசவித்த மாணவி சிக்கினார்

சிசுவை பிரசவித்த மாணவி சிக்கினார் ,யாழ்.போதனா வைத்தியசாலையில் சிசுவை பிரசவித்த பின்னர் , சிசுவை வைத்தியசாலையில் கைவிட்டு சென்ற 15 வயதான

பாடசாலை மாணவியை பொலிஸார் மீட்டுள்ளதுடன் , மாணவியை வன்புணர்ந்து கர்ப்பமாக்கிய குற்றச்சாட்டில் 25 வயதான இளைஞனையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

யாழ்.போதனா வைத்தியசாலையில்

யாழ்.போதனா வைத்தியசாலையில் 15 வயதான பாடசாலை மாணவி பிரசவத்திற்காக கடந்த வாரம் அனுமதிக்கப்பட்டிருந்தார். தாயாரும் மாணவிக;கு உதவியாக

நின்றுள்ளார். மாணவிக்கு குழந்தை பிறந்ததும் மறுநாள், தாயும் மாணவியும் குழந்தையை வைத்தியசாலையில் கைவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.

யாழ்ப்பாண பொலிஸ்

சம்பவம் தொடர்பில் வைத்தியசாலை நிர்வாகத்தினர் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர். முறைப்பாட்டின் பிரகாரம்

விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் சிறுமி நெல்லியடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்தவர் என கண்டறிந்து , அது தொடர்பில் நெல்லியடி பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.

நெல்லியடி பொலிஸார் முன்னெடுத்த விசாரணைகளின் அடிப்படையில், குழந்தையை பிரசவித்த மாணவியையும் , அவரது தாயாரையும் கண்டறிந்து பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணைகளை முன்னெடுத்தனர்.

விசாரணைகளின் அடிப்படையில் , மாணவியை வன்புணர்வுக்கு உட்படுத்தி, கர்ப்பமாக்கிய மல்லாவி பகுதியை சேர்ந்த 25 வயதான இளைஞனை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இளைஞனிடம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

பாராளுமன்றில் செல்வராசா கஜேந்திரன் ஆற்றியஉரை
Posted in இலங்கை செய்திகள்

 பாராளுமன்றில் செல்வராசா கஜேந்திரன் ஆற்றியஉரை

பாராளுமன்றில் செல்வராசா கஜேந்திரன் ஆற்றியஉரை

பாராளுமன்றில் செல்வராசா கஜேந்திரன் ஆற்றியஉரை ஏற்படுத்தியுள்ளது .

இஸ்ரேல் பாலஸ்தீன மக்களை மிக கொடூரமாக கொன்று குவித்து வருகிறது .கொலையை கண்டித்து பாராளுமன்றில் செல்வராசா கஜேந்திரன் ஆற்றியஉரையாற்றினார் .

பாலஸ்தீனத்தில் இடம்பெற்ற நக்பா படுகொலை

வரலாற்றியல் தொட்டு நிகழ்கால நிலவரங்கள்வரை மிக பேசியுள்ளார் .செல்வராசா கஜேந்திரன் ஆற்றிய உரையில் ,பாலஸ்தீனத்தில் இடம்பெற்ற நக்பா படுகொலை எவ்வாறான கொடூர செயல் என எடுத்துரைத்தார் .

மிகவும் உணர்ச்சி பூர்வாமாக செல்வராசா கஜேந்திரன் ஆற்றிய பேச்சு வலி தோய்ந்த பாலஸ்தீன மக்களின் குரலாக காணப்பட்டது .

முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் ரவுகக்கீம் இலங்கை பாராளுமன்றில் கொண்டு வந்த தீர்மானத்தை ஆதரித்து செல்வராசா கஜேந்திரன் தனது பேச்சை ஆற்றினார் .

இலங்கை புரிந்த படுகொலை

300 கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள தமிழர் தாயாக பகுதியில் இலங்கை புரிந்த படுகொலைக்கு ஏன் நீங்கள் குரல் கொடுக்கவில்லை என்ற கேள்வியை எழுப்பினார் .

தமிழர் மனங்களில் எழுகின்ற கேள்வியை பாரளுமன்றில் செல்வராசா கஜேந்திரன் எழுப்பியுள்ளது உலக தமிழர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது .

அந்த உரையையினை கேட்பதற்கு கீழே இணைப்பு வழங்க பட்டுள்ளது .

full video

வீடியோ பார்க்க இதில் அழுத்துங்க

லண்டன் Harrowவில் குமுதினி படுகொலை நினைவேந்தல்
Posted in இலங்கை செய்திகள்

லண்டன் Harrowவில் குமுதினி படுகொலை நினைவேந்தல்

லண்டன் Harrowவில் குமுதினி படுகொலை நினைவேந்தல்

லண்டன் Harrowவில் குமுதினி படுகொலை நினைவேந்தல் இடம்பெறவுள்ளது .குமுதினி படுகொலையின் 39ஆவது ஆண்டு நினைவேந்தல் லண்டன் Harrow பகுதியில் நாளை புதன்கிழமை (15/05/24)நடைபெற உள்ளது.

இலங்கை கடற்படையின் காட்டுமிராண்டித்தனமான படுகொலையின் வெளிப்பாடாகக் குமுதினிப் படுகொலை கருதப்படுகின்றது .

குமுதினிப் படுகொலை

குமுதினிப் படுகொலை இடம்பெற்று 39 வருடங்கள் கடந்த நிலையில் நாளை லண்டனில் இந்த நினைவஞ்சலிக் கூட்டம் நடைபெற உள்ளது.

குமுதினிப் படுகொலைகள் அல்லது குமுதினி படகுப் படுகொலைகள் 1985 ஆம் ஆண்டு மே 15 ஆம் நாள் நெடுந்தீவிற்கும்,புங்குடுதீவிற்கும் இடையில் சேவையாற்றிய பொழுது இடம்பெற்றது .

குமுதினிப் படகில் பயணம் செய்தவர்கள் கூட்டாகப் படுகொலை செய்யப்பட்ட தினமாகும்.

1985 ஆம் ஆண்டு காலை 07 மணி அளவில் சுமார் 67 பேருடன் பயணித்த குமுதினி படகை சுற்றிவளைத்த கடற்படையினர் குழந்தைகள் சிறுவர்கள் முதியவர்கள் என பாராது 36 பேரை குத்தியும் வெட்டியும் கொலை செய்தனர்.

அவ்வாறன இனவாத அரசாள நடத்திய அந்த குமுதினி நினைவு நாள் இடம்பெறுகிறது என்பதை நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் தெரிய படுத்தியுள்ளனர் .

தகவல் –ஈழம் ரஞ்சன்

பலஸ்தீனத்திற்கு ஆதரவாக கொழும்பில் போராட்டம்
Posted in இலங்கை செய்திகள்

பலஸ்தீனத்திற்கு ஆதரவாக கொழும்பில் போராட்டம்

பலஸ்தீனத்திற்கு ஆதரவாக கொழும்பில் போராட்டம்

பலஸ்தீனத்திற்கு ஆதரவாக கொழும்பில் போராட்டம் ,இஸ்ரேலுடனான மோதலில் பாதிக்கப்பட்டுள்ள பலஸ்தீனர்களுக்கான ஆதரவை வெளிப்படுத்தும் போராட்டமொன்று கொழும்பில் இன்று நடைபெற்றது.

எதிர்க்கட்சித் தலைவர் எம்.பி. சஜித் பிரேமதாச, ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி.க்களான முஜிபுர் ரஹ்மான், எஸ்.எம். மரிக்கார், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாத் பதியுதீன் ஆகியோர் சுதந்திர பலஸ்தீனத்தை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கொள்ளுப்பட்டியில் நடைபெற்ற போராட்டத்தில் சிறுவர்கள் உட்பட பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டதை காணமுடிந்தது.

இப்போராட்டம் Friends of Free Palestine இனால் ஏற்பாடு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது,

இலங்கையில் இடம்பெறவுள்ள தேர்தலை அடுத்து மக்கள் மீது அக்காரி கொண்ட கட்சிகளாக தம்மை அடையாள படுத்த நாடவடிக்கைகைகளை கட்சிகள் மேற்கொண்டு வருகின்றன .

அதன் பின்னர் தற்போது முஸ்லீம் மக்களுக்கு ஆதரவாக பல காட்சிகள் வீதி இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் .

இஸ்ரேலினால் பலஸ்தீன மக்கள் படுகொலை செய்யப்பட்ட வண்ணம் உள்ளனர் ,இஸ்ரேலுக்கு அடங்காத இஸ்ரேல் சஜித் நடத்திய அடங்க போகிறது என்பதை மக்கள் கவனிக்க வேண்டும் .

யாழில் வெடிமருந்துகள் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

யாழில் வெடிமருந்துகள் மீட்பு

யாழில் வெடிமருந்துகள் மீட்பு

யாழில் வெடிமருந்துகள் மீட்பு ,யாழ்ப்பாணம், வேலணை சாட்டி கடற்கரை பகுதியில் இருந்து சுமார் 3 கிலோ வெடிமருந்துகள் உள்ளிட்ட வெடிபொருட்கள்

மீட்கப்பட்டுள்ளதுடன், அவற்றை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

மீட்கப்பட்ட வெடி பொருட்கள்

மீட்கப்பட்ட வெடி பொருட்களையும் , கைது செய்யப்பட்ட நபரையும் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக ஊர்காவற்துறை பொலிஸாரிடம்

ஒப்படைக்கப்படைத்து ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மேலும் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு பொலிஸார் கோரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சாட்டி கடற்கரை பகுதியில் வெடிபொருட்கள் காணப்படுவதாக, 12 ஆம் திகதி பொலிஸ் விசேட அதிரடி படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ

விசேட அதிரடி படையினர்

இடத்திற்கு விரைந்த விசேட அதிரடி படையினர் 03 கிலோ 145 கிராம் வெடி மருந்துக்கள் , ஆர்.பி.ஜி எறிகணைகள் 08 மற்றும் 60 எம்.எம். மோட்டார் எறிகணைகள் 12 என்பவை மீட்டமை குறிப்பிடத்தக்கது.

மீன்பிடி தேவைக்கு குறித்த வெடிபொருட்கள் உடைமையில் வைத்திருந்ததாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

ஆண் ஒருவரின் சடலம் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

ஆண் ஒருவரின் சடலம் மீட்பு ,முல்லைத்தீவு – மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முறிகண்டி பிள்ளையார் கோவிலுக்கு அண்மித்த பகுதியில் உள்ள உணவகம் ஒன்றுக்கு பின் பகுதியிலேயே இவ்வாறு சடலம் அடையாளம் காணப்பட்டுட்டது.

பொலிஸார் விசாரணை

சடலம் ஒன்று காணப்படுவது தொடர்பில் மாங்குளம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

வவுனியா ஊர்மிலாந்தோட்டம் பகுதியை சேர்ந்த 49 வயதுடைய ஆசீர்வாதம் என்பவருடையது என அடையாளம் காணப்பட்டுள்ளது.

கிளிநொச்சி வைத்தியசாலை

சம்பவ இடத்துக்கு சென்ற முல்லைத்தீவு நீதிமன்ற மேலதிக நீதவான் சடலத்தை பார்வையிட்டதுடன், கிளிநொச்சி வைத்தியசாலைக்கு எடுத்து சென்று பிரேத பரிசோதனை மேற்கொண்ட பின்னர் உறவினர்களிடம் கையளிக்குமாறு அறிவுறுத்தினார்.

இலங்கையில் நாள் தோறும் இடம்பெறும் இவ்விதமான படுகொலை சம்பவங்கள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .

இந்த படுகொலைக்கு பின்னல் யார் உள்ளது ..? என்பதை விசாரிக்க போலீசார் தயங்கி வருவது ஏன் என்ற கேள்வி எழுப்பிபி பட்டுள்ளது ,எனினும் போலீசார் தரப்பில் உரிய பதில் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடதக்கது .

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு
Posted in இலங்கை செய்திகள்

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு குறித்து அரசாங்கம் விடுத்துள்ள வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய பெருந்தோட்ட கம்பனிகள் செயற்பட வேண்டியது அவசியமென வலியுறுத்திய நீர் வழங்கல் மற்றும்

பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான், அதற்கு எதிராக கம்பெனிகள் மேற்கொள்ளும் நீதிமன்ற நடவடிக்கைளுக்கு முகம்கொடுக்கத் தயாரெனவும் தெரிவித்தார்.

கூட்டு ஒப்பந்தம் இருந்த காலத்தில் 2 வருடங்களுக்கு ஒரு முறை சம்பளம் அதிகரிப்பு செய்யப்பட்ட நிலையில் கடந்த நான்கு வருடங்களாக தொழிலாளர்களுக்கு சம்பள அதிகரிப்பு வழங்கப்படவில்லை எனத் தெரிவித்த

அமைச்சர் ஜீவன் தொண்டமான், டொலரின் பெறுமதி வீழ்ச்சியை சாதகமாக கொண்டு பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிக்க கம்பனிகள் முன்வர வேண்டுமெனவும் வலியுறுத்தினார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில்

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (13) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர் ஜீவன் தொண்டமான் மேலும் குறிப்பிட்டதாவது:

“தற்பொழுது நடைமுறைப்படுத்தப்படும் நாள் சம்பள முறைமை பொருத்தமற்றதாகும். அந்த முறைமையில் இருந்து மாற வேண்டியது

அவசியம். அதற்காக நான்கைந்து வருடங்கள் அவசியப்படும். அதற்காக தோட்ட தொழிலாளர்களை 1000 ரூபா சம்பளத்துடன் காத்திருக்கச் வைப்பதை ஏற்றுகொள்ள முடியாது.

தேர்தல் காலத்தில் ஒவ்வொரு கட்சியும் ஒவ்வொரு தொகையை பெற்றுத்தருவதாக கூறும். எதிர்கட்சிகள் தோட்ட மக்களை சிறுதோட்ட

உரிமையாளர்களாக மாற்றுவதாக கூறினாலும் அதற்காக பொறிமுறை என்னவென்பது கேள்விக்குரியாகும்.

ஆரம்பத்தில் பெருந்தோட்ட தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பளத்தில் ஒரு ரூபா கூட அதிகரிக்க முடியாதென கூறிய கம்பனிகள், அரசாங்கம் 1700 சம்பள அதிகரிப்புக்கான வர்த்தமானி அறிவித்தலை விடுத்த பின்பு அடிப்படைச்

சம்ளத்தில் 200 ரூபாவை அதிகரிக்க முன்வந்துள்ளனர். அதனால் சம்பள அதிகரிப்பை செய்ய முடியும் என்று கம்பெனிகள் காண்பித்துள்ளன.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, கொட்டகலை மே தினக் கூட்டத்தில் பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு குறித்து அறிவித்தார்.

பெருந்தோட்ட மக்களுக்கு 1700 ரூபா சம்பளம்

ஏப்ரல் 30 ஆம் திகதி பெருந்தோட்ட மக்களுக்கு 1700 ரூபா சம்பள அதிகரிப்பை வழங்குவது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு தொழில் அமைச்சர் மனுஷ நாணாயக்காரவினால் வெளியிடப்பட்டது.

இது குறித்து சிலர் மக்கள் மத்தியில் சர்ச்சைகளை ஏற்படுத்தி வதந்திகள் பரப்பினர். ஜனாதிபதி இந்த அறிவிப்பை விடுத்த மறு தினமே அது நடக்காது என்றும் கூறினார்கள்.

இதே பெருந்தோட்ட நிறுவனங்கள் 1000 சம்பள அதிகரிப்பை வழங்க முடியாதென கூறினார்கள். அதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கிலும் இரண்டு தடவைகள் வெற்றி பெற்றிருக்கிறோம். தற்போது மேல்முறையீடு செய்துள்ளனர்.

குறித்த வழக்கு ஏற்கனவே உள்ள சம்பள நிர்ணய சபை மீதே தொடரப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் மேற்கொள்ளப்போகும் சம்பள விடயத்தில் நிர்ணயச் சபைக்கு தொடர்பில்லை.

1000 ரூபாவுக்கு மேலதிகமாக ஒரு ரூபாவும் கொடுக்க முடியாது என்று கூறிய பெருந்தோட்ட நிறுவனங்கள் 1700 சம்பள அதிகரிப்புக்கான வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்ட பின்பு 1200 ரூபாவாக அடிப்படை சம்பளத்தை உயர்த்த முன்வந்துள்ளனர்.

ஒரு ரூபா கூட அதிகரிக்க முடியாது

ஒரு ரூபா கூட அதிகரிக்க முடியாது என்று கூறியவர்கள் அடிப்படைச் சம்பளத்தில் 200 ரூபாவை அதிகரிக்க விருப்பம் தெரிவித்துள்ளனர்.

வழங்கு இடம்பெறுவதால் சம்பள உயர்வு வழங்க முடியாது என்று சட்டம் இல்லை. அது குறித்த எழுத்துமூல அறிவிப்பு சட்டமா அதிபரினால் தொழில் அமைச்சுக்கு அனுப்பட்டிருக்கிறது.

பெருந்தோட்ட நிறுவனங்கள் இந்த விடயத்தை இழுபரியாக்கவே பார்க்கின்றார்கள். இது குறித்து ஜனாதிபதியிடமும் பேசியிருக்கின்றோம்.

அதன்படி ஜனாதிபதியின் வழிகாட்டலின் கீழ் தொழில் அமைச்சரால் இது குறித் ஆவணமொன்று தயாரிக்கப்படுகிறது.

பெருந்தோட்ட நிறுவனங்கள் எந்தெந்த இடத்தில் எல்லாம் சட்டத்தை மீறியிருக்கின்றது? எந்தெந்த இடத்தில் எல்லாம் அவர்கள் இலக்கு இல்லாமல்

வேலை செய்திருக்கின்றார்கள்? மீள் நடுகை செய்யாமலிருப்பதற்கான காரணம் என்ன உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இதன்போது ஆராயப்படும்.

இவ்வாறிருக்க பெருந்தோட்ட கம்பனிகள் குத்தகை காலத்தை நீட்டித்து தாருமாறு கேட்கிறார்கள்.

மீள் நடுகைச் செய்தால் இலாபமீட்ட 60 வருடங்கள் ஆகும் என்று கூறுகிறார்கள்.

53 வருடங்கள் குத்தகைக்கு காணிகளை பெற்றுக்கொண்டபோது அவர்களுக்கு அது விளங்கவில்லையா என்பது கேள்விக்குரியாகும். அதனால், தற்போது சம்பளத்தை அதிகரிக்க முடியாது என்று கூறுவது நியாயமற்றது. பராமரிப்பு இன்மையினாலேயே தோட்டங்கள் காடாக மாறியுள்ளன.

தோட்டத் தொழிலாளர்கள் தொழில் செய்யும் இடத்தில் கௌரவமாக நடத்தப்படுத்துவதில்லை.

அதுவே தொழிலாளர்கள் எண்ணிக்கை குறையக் காரணமாகும். அவர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதில்லை.

தேயிலைத் தோட்டத்தில் தேயிலை மாத்திரம் தான் இருக்கும் என்ற நிலை இன்று மாறிவிட்டது. பங்களாக்கள் சுற்றுலா இடங்களாக மாற்றப்பட்டுள்ளன.

அதிலும் நாளாந்தம் 1000 – 2000 டொலர் ஈட்டுகின்றனர். அங்கு தேநீர் நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு இரு முனைகளில் வருமானம் ஈட்டினாலும் கம்பனிகள் அரசாங்கத்திற்கு வெறும் 500 ரூபாவை மாத்திரமே வழங்குகின்றனர்.

தங்களாலேயே சுற்றுலாத்துறை ஊக்குவிக்கப்படுவதாக கூறிக்கொள்கிறார்கள். இது பெருந்தோட்ட நிறுவனங்களின் சூழ்ச்சியாகும். அதனாலேயே ஜனாதிபதியும் தொழில் அமைச்சரும் எமது கோரிக்கையை ஏற்றுக்கொண்டுள்ளனர்.

கடந்த 4 வருடங்களாக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கிவில்லை. கூட்டு ஒப்பந்தம் இருக்கும்போது இரண்டு வருடத்திற்கு ஒரு முறை சம்பள உயர்வு கிடைத்தது.

டொலரின் பெறுமதி வீழ்ச்சி கண்டதன் மூலம் பெருந்தோட்ட கம்பனிகள் அதிக இலாபம் ஈட்டியுள்ளன.

அதனால் நிச்சயமாக தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்க முடியும்.

மேலும், தற்போது யாழ். குடாநாட்டில் சுத்தமான குடிநீர் 11% ஆனோருக்கு மாத்திரமே கிடைக்கிறது.

தற்போது நிர்மாணிக்கப்பட்டு வரும் உப்புநீர் சுத்திகரிப்பு நிலையம் திறக்கப்பட்ட பின்னர் யாழ். குடாநாட்டில் 40% ஆனோருக்கு சுத்தமான குடிநீர் கிடைக்கும்’’ என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

முள்ளிவாய்க்கால் கஞ்சி தயாரிக்க தடை
Posted in இலங்கை செய்திகள்

முள்ளிவாய்க்கால் கஞ்சி தயாரிக்க தடை

முள்ளிவாய்க்கால் கஞ்சி தயாரிக்க தடை

முள்ளிவாய்க்கால் கஞ்சி தயாரிக்க தடை ,அம்பாறை – பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பாண்டிருப்பு பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி தயாரிக்க முற்பட்டவர்களை தடுப்பதற்கு நூற்றுக்கணக்கான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணி

குறித்த சம்பவம் இன்று (14) காலை 8.30 மணிக்கு இடம்பெற்றுள்ளதுடன் இச்சம்பவத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் மாவட்ட

அமைப்பாளர் புஸ்பராஜ் துஷானந்தன் அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்க தலைவி தம்பிராசா செல்வராணி ஆகியோருக்கு

பொலிஸாரினால் எச்சரிக்கை விடுக்கப்பட்டு குறித்த நிகழ்வு தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

இதன் போது கல்முனை பாண்டிருப்பு அரசடி அம்மன் ஆலய முன்றலில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி ஏற்பாட்டில் அம்பாறை மாவட்ட வலிந்து

காணாமல் ஆக்கப்பட்ட சங்கம்

காணாமல் ஆக்கப்பட்ட சங்கம் பொதுமக்களுடன் இணைந்து முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறும் நிகழ்வினை முன்னெடுத்திருந்தது.

எனினும் சம்பவ இடத்திற்கு வருகை தந்த பெரியநீலாவணை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஜே.எஸ்.கே.வீரசிங்க தலைமையிலான பொலிஸார் கல்முனை நீதிவான் நீதிமன்ற தடை உத்தரவை

காண்பித்து தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் மாவட்ட அமைப்பாளர் புஸ்பராஜ் துஷானந்தன் என்பவருக்கு தடை உத்தரவு உள்ளதாகவும் எனவே முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களை

நினைவுகூரும் முகமாக ஏற்பாடு செய்துள்ள குறித்த நிகழ்வினை நிறுத்துமாறு கூறி தடை உத்தரவை வழங்கினர். அத்துடன் ஏனைய அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்க தலைவி தம்பிராசா செல்வராணி

ஆகியோருக்கு பொலிஸாரினால் எச்சரிக்கை விடுக்கப்பட்டு அவ்விடத்தில் இருந்து செல்லுமாறு எச்சரித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

இது தவிர கடந்த ஞாயிற்றுக்கிழமை (12) இரவு முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களை நினைவுகூரும் முகமாக செயற்பட்ட குற்றச்சாட்டில் திருகோணமலை சம்பூர் பொலிஸ் பிரிவுக்கு

உட்பட்ட சேனையூர் பகுதியில் மூன்று பேரும் பல்கலைக்கழக மாணவி ஒருவருமாக நால்வர் சம்பூர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

யாழ் சிறைச்சாலை பேருந்து விபத்து
Posted in இலங்கை செய்திகள்

யாழ் சிறைச்சாலை பேருந்து விபத்து

யாழ் சிறைச்சாலை பேருந்து விபத்து

யாழ் சிறைச்சாலை பேருந்து விபத்து ,யாழ்ப்பாண சிறைச்சாலைக்கு கைதிகளை ஏற்றி சென்ற , சிறைச்சாலைக்கு சொந்தமான பேருந்து, விபத்துக்கு உள்ளான சம்பவம் திங்கட்கிழமை (13) இடம்பெற்றுள்ளது .

ஊர்காவற்துறை நீதிமன்றில் வழக்கு விசாரணைகள் முடிவடைந்த பின்னர் கைதிகளை யாழ்ப்பாண சிறைச்சாலைக்கு ஏற்றி சென்ற போது , நாரந்தனை

பகுதியில் வைத்து முன்னால் பயணித்துக் கொண்டிருந்த ஹயஸ் ரக வாகனம் திடீரென நிறுத்தப்பட்டமையால் , பின்னால் பயணித்த சிறைச்சாலைக்கு சொந்தமான பேருந்து அதில் மோதி விபத்துக்கு உள்ளானது.

விபத்தில் ஹயஸ் ரக வாகனத்தில் பயணித்த நபர் ஒருவர் காயமடைந்த நிலையில் , ஊர்காவற்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது .

சிறைச்சாலை பேருந்து விபத்து

அதனையடுத்து, சிறைச்சாலை பேருந்தில் இருந்த கைதிகள் வேறு வாகனத்திற்கு மாற்றப்பட்டு , சிறைச்சாலைக்கு கொண்டு

செல்லப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஊர்காவற்துறை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர் .

யாழில் இவ்வாறான பேரூந்து விபத்து சம்பவங்கள் அதிகரித்து காணப்படுவது ,சாரதிகள் அலட்சிய போக்கின் வெளிப்பாடே என சமூக நல ஆர்வளர்கள் தெரிவித்து .

இந்த பேரூந்து விபத்துகளினால் நாள்தோறும் பல மக்கள் பலியாகி தக்கது .

போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்
Posted in இலங்கை செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்

மன்னார் மாவட்ட சிறுபோக நெற்செய்கை

போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள், மன்னார் மாவட்ட சிறு போக நெற்செய்கை க்கான புலவுகளை தெரிவு செய்வதில் அதிகாரிகளின்

தனிப்பட்ட பழி வாங்களை கண்டித்து இன்று (13) காலை 9.30 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் கண்டன ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டுக்கான சிறு போக செய்கைக்காக நெடுங் கண்டல் புலவை திறந்து தருமாறு கோரி மாந்தை மேற்கு விவசாயிகள் குறித்த போராட்டத்தை முன்னெடுத்தனர்.

போராட்டத்தில் விவசாயிகள்

போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மன்னார் மாவட்டச் செயலகத்தின் நுழைவாயிலை முற்றுகையிட்டு,பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் போது போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் அதிகாரிகளின் தனிப்பட்ட பழிவாங்கல்களுக்கு இடம் கொடுக்காதீர்கள்,திறந்து விடு திறந்து விடு நெடுங்

கண்டல் புலவை திறந்து விடு,கொல்லாதே கொல்லாதே விவசாயிகளை கொள்ளாதே உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் போது போராட்டத்தில் ஈடுபட்ட மாந்தை மேற்கு விவசாயிகள் கருத்து தெரிவிக்கையில்,

மன்னார் மாவட்டத்தில் சிறுபோக செய்கை மேற்கொள்ளப்பட்ட காலம் தொட்டு இன்று வரை ஒரு போதும் நெடுங்கண்டல் புலவு பூட்டப்படவில்லை.

1974 ஆம் ஆண்டு நீர் தட்டுப்பாடு வந்த போது காலபோகத்தில் செய்கை பண்ணப்படும் 40 ஏக்கருக்கு சிறுபோகத்தில் 1 ஏக்கர் என்ற தீர்மானத்தில் 40:1

என்ற விகிதத்தில் விவசாயம் செய்யப்பட்ட போது சின்ன உடைப்பு துலுசின் கீழ் உள்ள புலவுகள் மாத்திரம் திறக்கப்பட்டது.

இதில் நெடுங்கண்டல் புலவு முதன்மையானதாக தெரிவு செய்யப்பட்டுள்ளது. 2017 ஆம் ஆண்டு ஏற்பட்ட நீர் தட்டுப்பாடு காரணமாக அனைத்து புலவுகளும்

விதை நெல்

பூட்டப்பட்டு மன்னார் மாவட்ட விவசாயிகள் விதை நெல் தேவைக்காக நெடுங்கண்டல் புலவு மாத்திரம் திறந்து விவசாயம் செய்யப்பட்டது.

இம்முறை எமது நெடுங்கண்டல் புலவு இம்முறை பூட்டப் பட்டதற்கான காரணத்தை தனிப்பட்ட முறையில் எமது கமக்கார அமைப்புகளின் பிரதிநிதிகள் உரிய அதிகாரிகளை சந்தித்து வினவிய போது 2023 ஆம்

ஆண்டின் புலவு பங்கீட்டில் தனிப்பட்ட நபர் ஒருவருடனான முரண்பாட்டிற்கு பழி தீர்க்கும் வகையில் இம்முறை எமது புலவு பூட்டப்பட்டுள்ளது என்பதை நாம் தெளிவாக விளங்கிக் கொண்டுள்ளோம்.

குறித்த விஷயத்திற்காக நாம் சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் மன்னிப்புக் கோரினோம்.

உரிய அதிகாரிகளை நேரில் சந்தித்து மிகத் தெளிவாக விளக்கியிருந்தோம்.சாதக பாதக நிலையை தெளிவு படுத்தி எமது புலவை திறந்து தரும் படி பணிவாக வேண்டினோம்.

எனினும் ஏழை விவசாயிகளாகிய நாங்கள் வஞ்சிக்கப்பட்டோம்.இதன் அடிப்படையிலேயே எமது உரிமைகளை பெற்றுக் கொள்ள போராட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு இன்றைய தினம் காலை மாவட்டச் செயலகத்திற்கு முன் ஒன்று கூடி போராட்டத்தை முன்னெடுத்தோம்.

2024 ஆம் ஆண்டுக்கான சிறு போக செய்கைக்காக நெடுங்கண்டல் புலவை திறந்து தருமாறு விவசாயிகள் சார்பாக கோரிக்கை முன் வைக்கின்றோம் என போராட்டத்தில் ஈடுபட்ட மாந்தை மேற்கு விவசாயிகள் தெரிவித்தனர்.

கோரிக்கை அடங்கிய மகஜர்

தமது கோரிக்கை அடங்கிய மகஜர் மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்டது.

இதன் போது விவசாயிகள் சார்பாக பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்,ஈ.பி.ஆர்.எல்.எப்.கட்சியின் மாவட்ட அமைப்பாளர்

எஸ்.ஆர்.குமரேஸ்,ரெலோ கட்சியின் மாவட்ட அமைப்பாளர் லுஸ்ரின் மோகன் ராஜ்,மன்னார் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் முஜாகிர் உற்பட பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

விடுதலை வேண்டும் சிறீதரன் எம்பி
Posted in இலங்கை செய்திகள்

விடுதலை வேண்டும் சிறீதரன் எம்பி

விடுதலை வேண்டும் சிறீதரன் எம்பி

விடுதலை வேண்டும் சிறீதரன் எம்பி ,விடுதலை வேண்டிப் போராடும் இனமொன்றின் வேட்கைக்கு, அந்த இனம் எதிர்கொள்ள நேரிடும் .

இழப்புகள் ஒருபோதும் தடையாக அமையாது என்பதற்கு, ஈழத்தமிழினம்தான் சமகால சாட்சியம் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்

திருகோணமலை மாவட்டத்தின் வெருகல் ஈச்சிலம்பற்று (வெருகல்) பிரதேச மக்களுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களுக்கும்

இடையிலான சந்திப்பொன்று, இ வெருகல் – சீனன்வெளி பகுதியில், ஈச்சிலம்பற்று பிரதேச சபையின் மேனாள் தவிசாளர் சுந்தரலிங்கம் தலைமையில் நடைபெற்றது.

முள்ளிவாய்க்கால் வாரத்தை நினைவுகூரும் வகையில், முள்ளிவாய்க்கால் கஞ்சி பகிர்ந்தளிக்கப்பட்டதைத் தொடர்ந்து நடைபெற்ற இக்கலந்துரையாடலில், மக்கள் முன் கருத்துரைத்த நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் மேலும் தெரிவித்ததாவது,

சர்வதேசம் பார்த்திருக்க, எங்கள் இனத்தின் மீது வலிந்து புரியப்பட்ட இனப்படுகொலை தான் இந்த நூற்றாண்டின் ஆகப்பெரும் மனிதப்பேரவலம்.

அவலத்தின் விளிம்பில் எங்கள் இனம் சிறீதரன் எம்பி

அந்த அவலத்தின் விளிம்பில் எங்கள் இனத்தின் ஆயுதரீதியான ஆத்மபலத்தை இழந்தபோதும், விடுதலை குறித்த எங்கள் பயணத்தின் வீரியம் இன்னும் குறைந்துவிடவில்லை.

தமிழ்த்தேசிய அரசியல் பயணத்தை அடுத்தகட்டம் நோக்கி நகர்த்துவதற்கான உந்துதலை, இறந்த எம் உறவுகளின் ஆத்மாக்களே தருகின்றன – என்றார்.

குறித்த கலந்துரையாடலில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்ட க்கிளையின் தலைவர் சண்முகம் குகதாசன், ஈச்சிலம்பற்று பிரதேச சபையின் மேனாள் உபதவிசாளர் சங்கர், ஓய்வுநிலை அதிபர் இரத்தினசிங்கம்,

மற்றும் மாவட்டக் கிளை உறுப்பினர்கள், பிரதேச சபைகளின் மேனாள் உறுப்பினர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.