Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
ஓடும் ரயிலில் இருந்து செல்பி இருவர் படுகாயம்
ஓடும் ரயிலில் இருந்து செல்பி இருவர் படுகாயம்
ஓடும் ரயிலில் இருந்து செல்பி இருவர் படுகாயம் ,ஓடும் ரயிலில் இருந்து செல்ஃபி எடுக்க முயன்ற கொரிய சுற்றுலா பயணி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
திங்கட்கிழமை (11) இரவு பதுளை நோக்கிச் செல்லும் உடரட்ட மெனிகே விரைவு ரயிலில் பயணித்த வெளிநாட்டவர் ஹப்புத்தளை புகையிரத
நிலையத்திற்கு அருகில் ரயில் வாயில் படியில் தொங்கியவாறு நின்று செல்ஃபி எடுக்க முற்பட்ட போது புகையிரத எல்லையில் உள்ள இரும்பு கம்பத்தில் மோதியுள்ளார்.
காயமடைந்த சுற்றுலா பயணி தியத்தலாவ வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு ஆபத்தான நிலையில் பதுளை போதனா வைத்தியசாலைக்கு
மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பாதிக்கப்பட்ட நபர் ஷோலி டோங் பே என்ற , 61 வயதான கொரிய சுற்றுலாப் பயணி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கொரிய சுற்றுலா பயணியின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக பதுளை போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவின் சிரேஷ்ட வைத்திய அதிகாரி வைத்தியர் பாலித ராஜபக்ஷ தெரிவித்தார்.
இதேவேளை, ரத்கம பிரதேசத்தைச் சேர்ந்த யுவதியொருவர் பதுளைக்கு இரவு நேர தபால் ரயிலில் எல்ல நோக்கி பயணிக்கையில், ஹப்புத்தளை புகையிரத
நிலையத்தில் செல்பி எடுத்துக்கொண்டு ஓடும் ரயிலில் ஏற முற்பட்ட போது, ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்துள்ளார்.
ஹப்புத்தளையில் நிறுத்தப்பட்ட ரயிலில் இருந்து இறங்கி, மேடையில் நின்று செல்ஃபி எடுத்துக்கொண்டு மீளப் புறப்பட்ட ரயிலில் ஏற முயன்றுள்ளார்.
அப்போது ரயிலில் இருந்து தவறி விழுந்து, கீழ் காலில் பலத்த காயம் அடைந்தார்.
குறித்த பெண் தற்போது பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சமீபத்தில் ஓடும் ரயிலில் இருந்து செல்ஃபி எடுக்க முயன்ற பல சுற்றுலாப் பயணிகள் படுகாயமடைந்துள்ளதாகவும், இது குறித்து ரயில்வே அதிகாரிகளின் கவனம் தேவை என்றும் அவர் கூறினார்.
சம்பவம் தொடர்பில் ஹப்புத்தளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சேபால ரத்நாயக்க மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்.
நேற்று மேடையில் நடந்தது என்ன | |நடந்தது இது தான் |மக்கள் இப்படி சொல்லுறாங்க
நேற்று மேடையில் நடந்தது என்ன | |நடந்தது இது தான் |மக்கள் இப்படி சொல்லுறாங்க
நேற்று மேடையில் நடந்தது என்ன | |நடந்தது இது தான் |மக்கள் இப்படி சொல்லுறாங்க .காணொளியில் முழு விபரம் ,பார்க்க தவறாதீர்கள் .
- தென் கடற்கரையில் இரண்டாவது சரக்குக் கொள்கலன் கரை ஒதுங்கியது

- கெலியோய பேராதெனியாவிற்கு திடீர் வெள்ள எச்சரிக்கை

- ஜெயவர்தனபுர மருத்துவமனையில் தலைமை வெற்றிடத்தால் நோயாளிகளுக்கு ஆபத்து

- கண்டியின் சில பகுதிகளுக்கு நிலச்சரிவு காரணமாக வெளியேற்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

- யோஷித ராஜபக்ச மற்றும் கரன்னகோடா மீது குற்றப்பத்திரிகைகள் தாக்கல்

64000 பொலிஸ் அதிகாரிகள் பாதுகாப்புப் பணியில்
64000 பொலிஸ் அதிகாரிகள் பாதுகாப்புப் பணியில்
64000 பொலிஸ் அதிகாரிகள் பாதுகாப்புப் பணியில் ,பொதுத் தேர்தலை முன்னிட்டு இன்று (12) முதல் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து வாக்குச் சாவடிகளிலும் சுமார் 64,000 பொலிஸ் அதிகாரிகள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
நாடளாவிய ரீதியில் தேர்தல் நடைபெறும் நாளிலும், அதற்கு மறுநாளிலும், தேவைப்பட்டால், அதற்குப் பின்னரும் பொலிஸ் அதிகாரிகளை பணியில் ஈடுபடுத்தவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், சுமார் 64,000 பொலிஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், பொலிஸ் விசேட அதிரடிப்படையின் 3,200 உத்தியோகத்தர்கள் கடமைக்காக தயாராக உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, சுதந்திரமானதும் அமைதியானதுமான தேர்தலை நடாத்துவதற்கு தேவையான ஆதரவை வழங்குமாறு அனைவரையும் கேட்டுக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சுமந்திரனின் கூட்டத்தில் குழப்பம்
சுமந்திரனின் கூட்டத்தில் குழப்பம்
சுமந்திரனின் கூட்டத்தில் குழப்பம் ,வட்டுக்கோட்டை – சுழிபுரம் பகுதியில், திங்கட்கிழமை (12) நடைபெற்ற இலங்கை தமிழரசுக் கட்சியின் பிரசார கூட்டத்தில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த கூட்டத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் உரையாற்றிய பின்னர் கூட்டத்தில் இருந்த சிலர் கேள்விகள் கேட்க முற்பட்டனர்.
இதன்போது கூட்டத்தில் குழப்ப நிலை ஏற்பட்டது. அங்கு முறுகல் நிலை ஏற்பட்டவேளை அவ்விடத்திற்கு வருகை தந்த பொலிஸார் கேள்வி கேட்டவர்களை வெளியேற்றினர்.
அதன்பின்னர் சுமந்திரனை அழைத்துச் சென்ற ஆதரவாளர்கள் பாதுகாப்பாக அவரை அனுப்பி வைத்தனர்.
மசாஜ் நிலையம் சென்றவருக்கு நேர்ந்த சோகம்
மசாஜ் நிலையம் சென்றவருக்கு நேர்ந்த சோகம்
மசாஜ் நிலையம் சென்றவருக்கு நேர்ந்த சோகம் ,நபர் ஒருவரை பம்பலபிட்டியிலுள்ள மசாஜ் நிலையத்திற்கு அழைத்து அவரின் வங்கிக் கணக்கிலிருந்து ஒரு மில்லியன் ரூபாய் தொகையை பணப்பரிமாற்றம்
செய்யுமாறு வற்புறுத்திய தம்பதி உட்பட 6 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பம்பலப்பிட்டி பொலிஸாரின் கூற்றுப்படி, பாதிக்கப்பட்ட நபருக்கு உடல் மசாஜ் செய்வதற்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவர் வந்தவுடன் சேவை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளார்.
இருப்பினும், அவர் மசாஜ் நிலையத்தை அடைந்ததும், ஒன்லைன் மூலம் வங்கியிலிருந்து 1 மில்லியன் பணத்தை அனுப்புமாறு குறித்த தம்பதியினர் அவர் மீது தாக்குதல் நடாத்தியுள்ளனர்.
அத்துடன் சந்தேகநபர்கள் குறித்த நபரின் பணப்பையில் இருந்து 15,000 ரூபாய் பணத்தையும் திருடியுள்ளனர்.
குற்றத்திற்கு பயன்படுத்திய முச்சக்கர வண்டியுடன் பிலியந்தலை பிரதேசத்தை சேர்ந்த 44 மற்றும் 54 வயதுடைய தம்பதியினரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மேலதிக விசாரணைகளை அடுத்து, சம்பவம் தொடர்பில் இரத்மலானை மற்றும் கல்கிசை பிரதேசத்தைச் சேர்ந்த 19 மற்றும் 23 வயதுடைய மேலும் நான்கு சந்தேக நபர்களையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பிள்ளையானுக்கு CID அழைப்பு
பிள்ளையானுக்கு CID அழைப்பு
பிள்ளையானுக்கு CID அழைப்பு ,முன்னாள் இராஜாங்க அமைச்சரான பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார்.
ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் 6ஆம் திகதி ஒளிபரப்பான அந்த காணொளியில் முன்னாள் அரச புலனாய்வு பிரிவின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே மற்றும் ஏப்ரல் 21
குண்டுதாரிகளுக்கு இடையே இடம்பெற்றதாக கூறப்படும் சந்திப்பு மற்றும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தொடர்பில் தகவல் வெளிப்படுத்தப்பட்டிருந்ததது.
குறித்த காணொளிக்கு செனல் 4 தொலைகாட்சி ‘ஸ்ரீ லங்கா ஈஸ்டர்ஸ் பொம்பிங் டிஸ்பெஜர்ஸ்’ எனப் பெயரிட்டிருந்தது.
2005 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை ராஜபக்ஷர்களின் அரசியல் எதிரிகளை இலக்கு வைத்துத் துணை இராணுவ கொலை குழுவின்
அங்கத்தவர்களை பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் இணைத்துக் கொண்டுள்ளதாக செனல் 4 தொலைக்காட்சி வெளிப்படுத்தியது.
இந்த காணொளியில் அடங்கும் சர்சைக்குரிய விடயங்கள் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகள் ஆரம்பித்துள்ளது.
இது தொடர்பிலான சமர்ப்பணங்களை நேற்றைய தினம் குற்றப்புலனாய்வு திணைக்களம் நீதிமன்றில் முன்வைத்துள்ள நிலையில், இன்றைய தினம் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்
காதல் முறிவால் உயிரை மாய்த்த யுவதி
காதல் முறிவால் உயிரை மாய்த்த யுவதி
காதல் முறிவால் உயிரை மாய்த்த யுவதி ,மொனராகலை நக்கல்லை யொவுன் கிராமத்தைச் சேர்ந்த முன்பள்ளி ஆசிரியை ஒருவர் தனது வீட்டில் வைத்து தன் உயிரை மாய்த்துக்கொண்டு உயிரிழந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (12) இடம்பெற்றுள்ளது.
மொனராகலை நக்கல்லை யொவுன் கிராமம், நக்கலவத்தை பாரதி முன்பள்ளியின் ஆசிரியராக பணிபுரிந்த 29 வயதுடைய ராமச்சந்திரன் இந்திராதேவி என்ற யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அவருடைய காதல் முறிவு காரணமாகவே உயிரை மாய்த்துக்கொண்டுள்ளதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
செவ்வாய் நள்ளிரவுடன் தேர்தல் பிரசாரம் நிறைவு
செவ்வாய் நள்ளிரவுடன் தேர்தல் பிரசாரம் நிறைவு
செவ்வாய் நள்ளிரவுடன் தேர்தல் பிரசாரம் நிறைவு ,நவம்பர் 14 ஆம் திகதியன்று நடைபெற இருக்கும் பாராளுமன்றத் தேர்தல் தொடர்பான அனைத்து பிரசார நடவடிக்கைகள் செவ்வாய்க்கிழமை (11) நள்ளிரவுடன் நிறைவடையும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இதனிடையே, தேர்தல் அலுவலகங்களை அகற்றுவதற்கு புதன்கிழமை (12) நள்ளிரவு வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், பொதுத் தேர்தல் காலத்தில் சமூக வலைத்தளங்களில் மேற்கொள்ளப்படும் பொய்ப் பிரசாரங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணைக்குழுவால் நியமிக்கப்பட்டுள்ள இக்குழுவில் 5 அதிகாரிகள் அங்கம் வகிக்கின்றனர்.
பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டிக் டாக் போன்ற சமூக ஊடகங்கள் ஊடாக ஒரு கட்சி அல்லது வேட்பாளருக்கு எதிராக பதிவிடப்படும் தவறான பிரச்சாரங்கள்
தொடர்பில் கண்காணிபடவுள்ளது. பொய்ப் பிரசாரங்களை சமூக வலைத்தளங்களில் இருந்து நீக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் வகையிலான பதிவுகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஆணைக்குழு எச்சரித்துள்ளது.
பொதுத் தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கையில் வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் 50 பேர் ஈடுபடவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பாளர்கள் ஏற்கனவே இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
ஆசிய தேர்தல் கண்காணிப்பு வலையமைப்பின் கண்காணிப்பாளர்களும் எதிர்வரும் நாட்களில் வருகைதரவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு கூறியுள்ளது.
தேர்தல் ஆணைக்குழுவின் அழைப்பிற்கிணங்க மேலும் 08 நாடுகளின் தேர்தல்
கண்காணிப்பாளர்களும் வருகை தரவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் குறிப்பிட்டார். சார்க் வலய நாடுகள் மற்றும் ரஷ்யாவை பிரதிநிதித்துவப்படுத்தி அவர்கள் இலங்கைக்கு வரவுள்ளனர்.
இதேவேளை, இம்முறை பொதுத் தேர்தலில் அரச சொத்துக்களை முறையற்ற விதத்தில் பயன்படுத்தப்படுகின்றமை மிகக் குறைந்த மட்டத்தில் காணப்படுவதாக தேர்தல் கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மதுபானசாலைகளுக்கு பூட்டு
மதுபானசாலைகளுக்கு பூட்டு
மதுபானசாலைகளுக்கு பூட்டு ,பொதுத்தேர்தல் காரணமாக நாட்டிலுள்ள அனைத்து மதுபானசாலைகளும் 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 14 ஆம் திகதி பொதுத்தேர்தல் காரணமாகவும், 15 ஆம் திகதி பௌர்னமி தினத்தை முன்னிட்டும் மதுபானசாலைகளை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குறித்த தினங்களில் அனுமதிச்சட்டத்தை மீறும் மதுபானசாலைகள் மற்றும் ஏனைய சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பில் சட்டத்தை கடுமையாக நடைமுறைபடுத்துமாறு மதுவரித்திணைக்கள ஆணையாளர் நாயகம் பணிப்புரை விடுத்துள்ளார்.
இதற்கிடையில், நிலுவையில் உள்ள மதுபான உரிமங்களை புதுப்பிப்பதற்கு வருமான வரியை செலுத்தாத நிறுவனங்களுக்கு இம்மாதம் 30ம் திகதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ள து.
இந்த நிறுவனங்களில் 04 நிறுவனங்கள் தொடர்பில் மதுவரித்திணைக்களம் அதிக கவனம் செலுத்தியுள்ளதுடன் அந்த நிறுவனங்களின் அனுமதிப்பத்திரங்கள் இடைநிறுத்தப்படவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விருப்பு வாக்குகளை வழங்க வேண்டும் என்பது இனவாதம் அல்ல
விருப்பு வாக்குகளை வழங்க வேண்டும் என்பது இனவாதம் அல்ல
விருப்பு வாக்குகளை வழங்க வேண்டும் என்பது இனவாதம் அல்ல ,அது இன பிரதிநிதித்துவத்தை உறுதி செய்யும் இன உரிமை ஆகும். உண்மையில், நடைமுறையில் உள்ள தேர்தல் முறையின் விருப்பு வாக்கு என்ற முறைமை அதைதான் வலியுறுத்துகிறது.
அதிலும் மிக குறிப்பாக தமிழர்கள் சிறுபான்மையாக வாழும் கொழும்பு, கேகாலை, இரத்தினபுரி,கண்டி, கம்பஹா, பதுளை ஆகிய மாவட்டங்களில் தமிழ் வாக்காளர்கள் தமது விருப்பு வாக்குகளை தமிழ் வேட்பாளர்களுக்கு மாத்திரம் வழங்குவது அத்தியாவசியமாகும். இதுவே எமது
பிரதிநிதித்துவத்தை பெற்று கொள்ள உள்ள ஒரே வழி. இதைதான் விகிதாசார தேர்தல் முறையும் வலியுறுத்துகிறது என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் அறிவித்துள்ளார்.
கொழும்பு கொச்சிக்கடை ஜம்பட்டா வீதியில் ஞாயிற்றுக்கிழமை (10) நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய அவர்:
தமிழர்கள் சிறுபான்மையாக வாழும் கொழும்பு, கேகாலை, இரத்தினபுரி, கண்டி,கம்பஹா, பதுளை ஆகிய மாவட்டங்களில் தமிழ் வாக்காளர்கள் கடை பிடிக்க வேண்டிய செயன்முறைமையை நான் எளிமையாக விவரிக்க
விரும்புகிறேன். முதலில் நமது வாக்காளர்கள், தமது மாவட்டங்ளில் போட்டி இடும் தமிழ் வேட்பாளர்களில் வெற்றி பெறக்கூடிய அணி எது, அதன் சின்ன்னம் எது என தீர்மானிக்க வேண்டும்.
இதன் பின்னர், அந்த அணிக்குள்ளே இருக்கும் தமிழ் வேட்பாளரின் அல்லது வேட்பாளர்களின் விருப்பு வாக்கு இலக்கங்களை கண்டறிய வேண்டும். இதன் பின்னர் தேர்தலின் போது வாக்கு சீட்டில், தாம் தெரிவு செய்துள்ள
சின்னத்துக்கு புள்ளடி இட வேண்டும். பின்னர் தமிழ் வேட்பாளர்களின் விருப்பு வாக்கு இலக்கங்களுக்கு புள்ளடி இட வேண்டும். இதோடு இந்த வாக்களிக்கும் கடமை முடிகிறது. என தெரிவித்தார்.
தமிழ் வேட்பாளர்களுக்கு விருப்பு வாக்குகளை அளித்த பின்னர் விருப்பு வாக்குகள் மீதமாக இருக்குமானால், அந்த விருப்பு வாக்கை அந்த அணியின்
தலைமை வேட்பாளருக்கு அளிக்கலாம். அளிக்காமலும் விடலாம். மூன்று விருப்பு வாக்குகளையும் பயன்படுத்த வேண்டும் என்பது கட்டாயமல்ல.
முதலில், நாம் போட்டி இடும் தொலைபேசி சின்னத்துக்கு புள்ளடி இடுவது கட்டாயம். பின்னர் தமிழ் வேட்பாளரின் விருப்பு வாக்கை அளியுங்கள். கொழும்பில் மனோ கணேசன்-11, லோஷன்-13, கேகாலையில் பரணி-5,
இரத்தினபுரியில் சந்திரகுமார்-6, கம்பஹாவில் சசிகுமார்-18,கண்டியில் பாரத்-4, பதுளையில் பகிதரன்-4 ஆகிய விருப்பு வாக்கு இலக்கங்களுக்கு மாத்திரம் வாக்களித்து விட்டு வாக்களிக்கும் பணியை முடிவு செய்யலாம்.
தமிழர்கள் சிறுபான்மையாக வாழும் கொழும்பு, கேகாலை, இரத்தினபுரி, கண்டி, கம்பஹா, பதுளை ஆகிய மாவட்டங்களில் இதுவே நமது பிரதிநிதித்துவத்தை உறுதி செய்ய எம் முன் உள்ள ஒரே ஜனநாயக வழியாகும்
உலக நாயகன் கமல்ஹாசன் திடீரென அறிவித்துள்ளார்
உலக நாயகன்’ உள்ளிட்ட அடமொழிகளைத் துறப்பதாக நடிகரும், மக்கள் நீதி மய்யத் தலைவருமான கமல்ஹாசன் திடீரென அறிவித்துள்ளார்.
மேலும், தன்னை இனி ‘கமல்ஹாசன்’ அல்லது ‘KH’ என்று அழைத்தாலே போதும் என்று சினிமாத் துறையினர், ஊடகவியலாளர்கள், கட்சியினர், அரசியல்வாதிகள், இந்திய மக்கள் என அனைவருக்கும் வேண்டுகோளும் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று (11) தனது எக்ஸ் சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: என் மீது கொண்ட அன்பினால் ‘உலக நாயகன்’ உட்பட பல பிரியம் ததும்பும் பட்டங்களால் என்னை அழைக்கிறீர்கள்.
மக்கள் கொடுத்து சக கலைஞர்களாலும், ரசிகர்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட இப்படிப்பட்ட பாராட்டுச் சொற்களால் மகிழ்ந்திருக்கிறேன். உங்கள் இந்த அன்பால் நெகிழ்ந்தும் இருக்கிறேன். உங்களின் பிரியத்தின் மீது எனக்கு மாறாத நன்றியுணர்வும் உண்டு.
சினிமாக் கலை, எந்தவொரு தனி மனிதனையும் விட பெரியது. அந்தக் கலையில் மேலும் மேலும் கற்றுக் கொண்டு பரிணாமம் அடைய விரும்பும் ஒரு மாணவன் தான் நான்.
பிறக் கலைகளைப் போலவே சினிமாவும் அனைவருக்குமானது; அனைவராலும் ஆனது. திறமையான கலைஞர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், நல்ல ரசிகர்கள் ஒன்றிணைந்துதான் சினிமா உருவாகிறது.
கலையை விட கலைஞன் பெரியவன் இல்லை என்பது என் ஆழமான நம்பிக்கை. கற்றது கைமண் அளவு என்பதை உணர்ந்தவனாகவும், தொடர்ச்சியான முன்னகர்வில் நம்பிக்கை கொண்டு உழைத்து உயர்பவனாகவும் இருப்பதே எனக்கு உவப்பானது.
அதனால்தான் நிறைய யோசனைக்குப் பிறகு ஒரு முடிவுக்கு வர நேர்ந்தது. மேலே குறிப்பிடதுபோன்ற பட்டங்களையும், அடைமொழிகளையும் வழங்கியவர்களுக்கு எந்த மரியாதைக்குறைவும் வந்துவிடாத வண்ணம், அவற்றைத் துறப்பது என்பதே அது.
எனவே என் மீது பிரியம் கொண்ட அனைவருக்கும் ஒரு வேண்டுகோளை முன்வைக்கிறேன். இனிவரும் காலத்தில் என் ரசிகர்களும், ஊடக நண்பர்களு, திரைத்துறையச் சார்ந்தவர்களும், மக்கள் நீதி மய்ய கட்சித் தொண்டர்களும்,
ச
க இந்தியர்களும் என் கமல்ஹாசன் என்றோ கமல் என்றோ KH என்றோ குறிப்பிட்டால் போதுமானது என்று
கேட்டுக் கொள்கிறேன். இத்தனை காலமாக நீங்கள் என்மேல் காட்டிவரும் அன்புக்கு மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவிக்கிறேன்.
சக மனிதன் என்கிற ஸ்தானத்தில் இருந்தும், சினிமாவை நேசிக்கிற நம் அனைவரிலும் ஒருவனாகவே நான் இருக்க வேண்டும் என்கிற என்
எண்ணத்தில் இருந்தும் இந்த வேண்டுகோள் வெளிப்படுகிறது என்பதைப்
புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல்
வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல்
வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல் சிறுவர்களுக்கு மத்தியில் காய்ச்சல் அதிகரித்து வருவதாக ரிட்ஜ்வே ஆர்யா சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் டொக்டர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
ஏறக்குறைய மூன்று நாட்களுக்கு காய்ச்சல் நீடித்தால் அது தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டுமென அவர் கூறியுள்ளார்.
“அண்மைய நாட்களாக குழந்தைகளுக்கு இடையில் வைரஸ் காய்ச்சல் அதிகரித்துள்ளது. இது இருமல் மற்றும் சளியுடன் கூடிய காய்ச்சலாகும். மேலும், டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
எனவே இருமல், சளி, காய்ச்சல், உடல்வலி, வாந்தி இருந்தால் வைரஸ் காய்ச்சலுக்கான அறிகுறியாகும்.
எனவே, மூன்று நாட்களுக்கு மேல் காய்ச்சல் இருந்தால், உரிய இரத்தப் பரிசோதனை செய்துகொள்ளுங்கள்.” என அவர் அறிவுறுத்தியுள்ளார்.
லேக்ஹவுஸ் கட்டிடத்தில் கார் மோதி விபத்து
லேக்ஹவுஸ் கட்டிடத்தில் கார் மோதி விபத்து
லேக்ஹவுஸ் கட்டிடத்தில் கார் மோதி விபத்து ,கொழும்பு லேக்ஹவுஸ் கட்டிடத்தின் நுழைவாயிலுக்கு அருகில் கார் ஒன்று விபத்துக்குள்ளானதில் சொத்துக்களுக்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது.
இன்று அதிகாலை கட்டிடத்தின் நுழைவாயிலுக்கு அருகில் உள்ள சீமெந்து சுவரில் கார் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சாரதி தூங்கியதால் கார் விபத்துக்குள்ளாகி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
சம்பவத்தில் சாரதி காயமின்றி உயிர்தப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் கொழும்பு – கோட்டை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இரண்டு ஜெனரல்களுக்கு ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் தடை
இரண்டு ஜெனரல்களுக்கு ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் தடை
இரண்டு ஜெனரல்களுக்கு ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் தடை ,சூடானின் துணை ராணுவப் படையைச் சேர்ந்த இரண்டு ஜெனரல்களுக்கு ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் தடை விதித்துள்ளது.
துணை ராணுவக் குழுவின் செயல்பாட்டுத் தலைவர் மற்றும் மேற்கு டார்ஃபர் தளபதி ஆகியோர் பயணத் தடை மற்றும் சொத்து முடக்கம் ஆகியவற்றால் அறைந்துள்ளனர்.
வன்முறை மற்றும் மனித உரிமை மீறல்கள் மூலம் நாட்டை சீர்குலைத்ததற்காக சூடானின் துணை ராணுவ விரைவு ஆதரவுப் படையின் (RSF) இரண்டு ஜெனரல்களை ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில் குழு அனுமதித்துள்ளது.
மொஹமட் ஹம்டன் “ஹெமெட்டி” டகாலோ மற்றும் சூடான் ஆயுதப் படைகளின் (SAF) தலைவர் அப்தெல் ஃபத்தா அல் ஆகியோருக்கு இடையேயான
அதிகாரப் போட்டியின் விளைவாக, ஏப்ரல் 15, 2023 அன்று வெடித்த சூடானில் தற்போதைய போரில் முதல் ஐ.நா. தடைகள் இவை. -புர்ஹான்
RSF இன் நடவடிக்கைகளின் தலைவரான ஒஸ்மான் மொஹமட் ஹமீத் மொஹமட் மற்றும் மேற்கு டார்ஃபர் கமாண்டர் அப்தெல் ரஹ்மான் ஜுமா பர்கல்லா மீது சர்வதேச பயணத் தடை மற்றும் சொத்து முடக்கம்
ஆகியவற்றை விதிக்க ஆகஸ்ட் மாத இறுதியில் செய்யப்பட்ட அமெரிக்காவின் முன்மொழிவுக்கு UNSC இன் சூடான் தடைகள் குழு வெள்ளிக்கிழமை ஒப்புக்கொண்டது.
ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின்படி, இந்த திட்டத்தை ஆய்வு செய்ய அதிக நேரம் தேவைப்படுவதால், இந்த நடவடிக்கை ரஷ்யாவால் தாமதமானது என்று இராஜதந்திரிகள் தெரிவித்தனர்.
குழு ஒருமித்த கருத்துடன் செயல்படுகிறது.
மே மாதம், அமெரிக்க கருவூலத் துறை முகமது மற்றும் குழுவின் மத்திய டார்ஃபர் தளபதி அலி யாகூப் ஜிப்ரில் மீது பொருளாதாரத் தடைகளை விதித்தது.
மன்னிப்பு கேட்ட அர்ச்சுனா |இணைந்த வன்னி மைந்தன் |மகிழ்ச்சியில் மக்கள்
மன்னிப்பு கேட்ட அர்ச்சுனா |இணைந்த வன்னி மைந்தன் |மகிழ்ச்சியில் மக்கள்
மன்னிப்பு கேட்ட அர்ச்சுனா |இணைந்த வன்னி மைந்தன் |மகிழ்ச்சியில் மக்கள் ,வன்னிமைந்தன் அர்ச்சுனா மோதல் முற்று பெற்றது .
காணொளியில் விபரம்
- தென் கடற்கரையில் இரண்டாவது சரக்குக் கொள்கலன் கரை ஒதுங்கியது

- கெலியோய பேராதெனியாவிற்கு திடீர் வெள்ள எச்சரிக்கை

- ஜெயவர்தனபுர மருத்துவமனையில் தலைமை வெற்றிடத்தால் நோயாளிகளுக்கு ஆபத்து

- கண்டியின் சில பகுதிகளுக்கு நிலச்சரிவு காரணமாக வெளியேற்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

- யோஷித ராஜபக்ச மற்றும் கரன்னகோடா மீது குற்றப்பத்திரிகைகள் தாக்கல்

பட்டாசு கொளுத்தியவர் கைது
பட்டாசு கொளுத்தியவர் கைது
பட்டாசு கொளுத்தியவர் கைது ,பட்டாசுகளை கொளுத்தினார் என்றக் குற்றச்சாட்டின் பேரில், ஒருவரை ஹட்டன் பொலிஸார்,சனிக்கிழமை (09)கைது செய்தனர்.
தேர்தல் விதிமுறைகளை மீறி பட்டாசு கொளுத்தி, பெருந்திரளான மக்களுடன் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்த ஜனநாயக ஆதரவு மக்கள் குரல் கட்சியின் வேட்பாளர் அனுஷா சந்திரசேகரன் மற்றும் பலருக்கும்
பொலிஸார் எச்சரித்தனர். சனிக்கிழமை (09) இடம்பெற்ற இந்த சம்பவத்தை அடுத்து பட்டாசை கொளுத்தினர் என்றக் குற்றச்சாட்டின் பேரில் ஒருவரை ஹட்டன் பொலிஸார் கைது செய்தனர்.
ஒன்லைன் பணமோசடி59 பேர்கைது
ஒன்லைன் பணமோசடி59 பேர்கைது
ஒன்லைன் பணமோசடி59 பேர்கைது ,வெளிநாட்டு பிரஜைகளைக் குறிவைத்து நடாத்தப்பட்டு வந்த பெரும் ஒன்லைன் நிதி மோசடி ஒன்றை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (சிஐடி) சைபர் கிரைம் பிரிவு
கண்டுபிடித்துள்ளதுடன் குறித்த மோசடிகளை நடாத்திய நிறுவனத்தின் இரண்டு தலைவர்கள் உட்பட 59 நபர்களையும் கைது செய்துள்ளது.
சந்தேகநபர்கள் கடந்த வெள்ளிக்கிழமை (08) கொழும்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதுடன் வெளிநாட்டு பிரஜைகளிடமிருந்து குறித்த குழு சுமார்
ரூ.300 மில்லியன் வரை மோசடி செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உறுதியளித்து உள்ளுர் நிறுவனம் ஒன்று கொரிய பிரஜை ஒருவரிடம் ரூ.300 மில்லியன் பணமோசடி செய்துள்ளதாக தென் கொரியத் தூதரகம்
முறைப்பாடொன்றைப் பதிவு செய்ததன் பின்னர் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன.
ஹெவ்லொக் வீதியிலுள்ள சொகுசு அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து இந்த மோசடி நடத்தப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளதுடன் அங்கு 23 பெண்கள் உட்பட 59 இலங்கையர்களை அதிகாரிகள் கைது செய்தனர்.
சந்தேக நபர்கள், அவர்களில் சிலர் பன்மொழி பேசுபவர்கள், தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் என்ற போர்வையில் முதலீட்டாளர்களை குறிவைக்க பணியமர்த்தப்பட்டதாக கூறப்படுகிறது. நிதி என்ன
செய்யப்பட்டது என்பது தெரியாமல் பணியமர்த்தப்பட்டதால், இந்த மோசடி குறித்து தங்களுக்குத் தெரியாது என்று அவர்கள் கூறியுள்ளனர்.
விசாரணையைத் தொடர்ந்து, நிறுவனத்தின் இயக்குநர் மற்றும் முகாமையாளர் கைது செய்யப்பட்டதில், கட்டிடம் 9 மில்லியன் ரூபாய்க்கு
வாடகைக்கு விடப்பட்டது தெரியவந்தது. முதலீடுகளை ஈர்ப்பதற்காகப் பயன்படுத்தப்பட்ட போலி ஆவணங்களையும் இருந்து கணினிகளில் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இயக்குனர் மற்றும் முகாமையாளரை எதிர்வரும் 12ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டதுடன், பிறர் தலா 1 மில்லியன் ரூபாய் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
மதிலை கவிழ்த்து வீட்டுக்குள் நுழைந்த பஸ்
மதிலை கவிழ்த்து வீட்டுக்குள் நுழைந்த பஸ்
மதிலை கவிழ்த்து வீட்டுக்குள் நுழைந்த பஸ் ,வீதியை விட்டு விலகிய தனியார் பஸ்ஸொன்று அருகில் உள்ள வீடொன்றின் மதிலை கவிழ்த்து விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த சம்பவம்,
பதுளை- மஹியங்கனை பிரதான வீதியில் படலபிட்டிய பிரதேசத்தில் பலகொல்ல எனுமிடத்தில் ஞாயிற்றுக்கிழமை (10) காலை இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் பஸ்ஸின் சாரதிக்கு சிறு காயம் ஏற்பட்டுள்ளதாகவும், எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
பஸ் விபத்துக்குள்ளான போது, வீட்டில் ஒரு சிறு குழந்தை மற்றும் ஒரு தம்பதி இருந்ததாகவும், ஆனால் அவர்கள் ஒரே அறையில் இருந்ததால்,
குடியிருப்பாளர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று பொலிஸார் தெரிவித்தனர்.
பஸ் விபத்துக்குள்ளான வேளையில் பஸ்ஸில் சுமார் 30 பேர் பயணித்ததாகவும், தினமும் பயணிக்கும் இந்த பேருந்தில் பாடசாலை ஆசிரியர்கள், அலுவலக
ஊழியர்கள் என பலரும் பயணித்ததாகவும், ஆனால் ஞாயிற்றுக்கிழமை (10) குறைந்த எண்ணிக்கையான பயணிகளே பயணித்தனர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கி பிரயோகத்தில் தம்பதி பலி
துப்பாக்கி பிரயோகத்தில் தம்பதி பலி
துப்பாக்கி பிரயோகத்தில் தம்பதி பலி ,காலி வீதி, அம்பலாங்கொடை – உரவத்த பிரதேசத்தில், இன்று (10) பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில், கணவன் மனைவி இருவரும் உயிரிழந்துள்ளதாக, அம்பலாங்கொடை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
உயிரிழந்த இருவரும் அம்பலாங்கொடை – மாதம்பே, தேவகொட பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும், பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவர்கள் இருவரும் அம்பலாங்கொடையில் இருந்து மோட்டார் சைக்கிளில் பயணித்தபோது, இனந்தெரியாத ஆயுததாரிகள் மோட்டார் சைக்கிளில் வந்து
அவர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக, பொலிஸார் தெரிவிக்கின்றனர்
தாமரை கோபுர வளாகத்தில் துப்பாக்கிச்சூடு
தாமரை கோபுர வளாகத்தில் துப்பாக்கிச்சூடு
தாமரை கோபுர வளாகத்தில் துப்பாக்கிச்சூடு ,தாமரை கோபுர வளாகத்தில் இடம்பெற்ற இசைக் கச்சேரியின் போது இனந்தெரியாத நபர் ஒருவரால்,
பாதுகாப்பு உத்தியோகத்தர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக மருதானை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த 29 வயதுடைய பாதுகாப்பு உத்தியோகத்தர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


























