துப்பாக்கி பிரயோகத்தில் தம்பதி பலி

துப்பாக்கி பிரயோகத்தில் தம்பதி பலி
Spread the love

துப்பாக்கி பிரயோகத்தில் தம்பதி பலி

துப்பாக்கி பிரயோகத்தில் தம்பதி பலி ,காலி வீதி, அம்பலாங்கொடை – உரவத்த பிரதேசத்தில், இன்று (10) பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில், கணவன் மனைவி இருவரும் உயிரிழந்துள்ளதாக, அம்பலாங்கொடை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்த இருவரும் அம்பலாங்கொடை – மாதம்பே, தேவகொட பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும், பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவர்கள் இருவரும் அம்பலாங்கொடையில் இருந்து மோட்டார் சைக்கிளில் பயணித்தபோது, இனந்தெரியாத ஆயுததாரிகள் மோட்டார் சைக்கிளில் வந்து

அவர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக, பொலிஸார் தெரிவிக்கின்றனர்